வியாழன், 20 செப்டம்பர், 2012

வருகின்ற எந்தவொரு வாய்ப்பையும் தக்கவைத்து கொள்க


இளைஞன் ஒருவன் ஒரு விவசாயின் வீட்டிற்கு சென்று அவருடைய மகளை தான் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறினான் உடன் அந்த விவசாயி ஆனவர்

“நல்லது தம்பி என்னுடைய மாட்டு கொட்டிலில் இருந்து மூன்று காளைமாடுகளை இந்த திறந்த வெளியில் அவிழ்த்து விடுகின்றேன் நீ அவைகளில் ஏதாவதுஒன்றினுடைய வாலைமட்டும் பிடித்தால் நான் கண்டிப்பாக என்னுடைய மகளை உனக்கு திருமணம் செய்ய சம்மதிக்கிறேன்” என கூறினார்

அதற்கு அவ்விளைஞனும் சம்மதம் தெரிவித்தவுடன் மறுநாள் காலையில் அவ்விவசாயினுடைய மாட்டுகொட்டிலில் இருந்து காளை மாடுஒன்றை திறந்து விட்டார்

வெளியேறிய மாடானது நீண்ட கொம்புடனும் உயரமான திமிளுடனும் ராஜநடையாக வந்தது உடன் அவ்விளைஞன் இதனை நம்மால் பிடிக்கமுடியாது நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்டது அதனால் இதற்கடுத்ததாக வரும் காளையின் வாலை பிடித்துவிடுவோம் எனமுடிவுசெய்து ஓரமாக ஒதுங்கி அந்த காளை செல்வதற்கு வழிவிட்டான்

அதற்கடுத்ததாக அவ்விவசாயினுடைய மாட்டுகொட்டிலில் இருந்து இதற்கு முன் பார்த்தயிராத மிகவலுவான மிகமுரட்டு காளையொன்று சிங்கம் போன்று பாய்ந்து வெளிவந்தது இதனையும் நம்மால் பிடிக்கமுடியாது இதுவும் நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்டது அதனால் இதற்கடுத்து மூன்றாவதாக வரும் காளையின் வாலை எப்படியாவது பிடித்துவிடுவோம் எனமுடிவுசெய்து ஓரமாக ஒதுங்கி அந்த காளை செல்வதற்கு வழிவிட்டான்

மூன்றாவதாக அவ்விவசாயினுடைய மாட்டுகொட்டிலில் இருந்து இதற்கு முன் பார்த்தயிராத மிகநோஞ்சான்போன்ற காளை வெளியில் வந்தது ஆகா இதற்காகத்தான் இதுவரையிலும் நாம் காத்திருந்தோம் இதனுடைய வாலை மிகஎளிதாக பிடித்து வெற்றிகொள்வோம் என முடிவுசெய்து அந்த நோஞ்சான் காளை தனக்கு அருகில் வரும்வரை காத்திருந்து அருகில் வந்தவுடன் அந்த காளையின் அருகில் சாதாரணமாக சென்று அதனுடைய வாலை பிடிக்கலாம் என முயற்சி செய்தபோது என்ன ஆச்சரியம் அந்த நோஞ்சான் காளைக்கு வாலே இல்லை

அவ்விளைஞன் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டு போட்டியிலிருந்து வெளியேறிவிட்டான்

அதாவது நம்முடைய வாழ்க்கையில் எதிர்வரும் எந்தவொரு முதல் வாய்ப்பையும் பின்னர் வருவது இதைவிட நல்லவாய்ப்பாக இருக்கும் என நழுவவிடாமல் அந்தவொரு வாய்ப்பு மட்டுமே நாம் முன்நோக்கி செல்ல கிடைத்த ஒரேவாய்ப்பு வேறு வாய்ப்பே இல்லையென முயற்சி செய்து அதில் வெற்றிபெற பாடுபடவேண்டும் இல்லையெனில் எந்தவொரு வாய்ப்பும் நமக்கு கிடைக்காது போய்விடும் என்பதை மனதில் கொள்க

திங்கள், 10 செப்டம்பர், 2012

பணியாளர்களின் உற்பத்தி திறனை மேம்படுத்துதல்


மடிக்கணினிகளின் திரையில் கீழ்பகுதியில் உள்ள பட்டியின் வலதுபுறம் சிறு உருவபொத்தான் ஒன்று அம்மடிக்கணினிக்கான மின்கலனின் மின் திறன் அளவை குறிப்பிட்டு பிரதிபலிக்கும் அதில் அம்மின்கலனுடைய மின் திறன் அளவு 25% வரை வெண்மையாக இருந்த உருவபொத்தானின் வண்ணமானது 25% ஐ விட குறையும்போது ஆரஞ்சு வண்ணமாக மாறிவிடும், மேலும் 10% ஆக குறையும் போது சிவப்பு வண்ணமாக மாறி இன்னும் 10 நிமிடம் மட்டுமே மின்கலனில் இருக்கும் மின்திறன் போதுமானதாக இருக்கும் என நம்மை எச்சரிக்கும் உடன் அம்மின்கலனிற்கான மின்வழங்கிடும் இணைப்பை ஏற்படுத்திடவில்லையெனில் மடிக்கணினியின் இயக்கம் தானாகவே நின்றுவிடும்

அவ்வாறே ஒவ்வொரு நிறுவனத்தின் மேலாளரும் தம்கீழ்பணிபுரியும் பணியாளர்களின் திறனை மேம்படுத்துவதற்கு தக்கநடவடிக்கையை மேற்கொண்டு செயற்படுத்தினால் மட்டுமே அப்பணியாளர்களிடமிருந்து எதிர்பார்க்கும் பணித்திறன் தொடர்ந்து வெளிப்படும் அதனை தொடர்ந்து அந்நிறுவனத்தின் செயல்திறனும் மேம்படும். அதனால் ஒவ்வொரு மேலாளரும் தம்கீழ்பணிபுரியும் பணியாளர்களின் திறனை மேம்படுத்துவதற்கு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கபடுகின்றது

1. ஒருநிறுவனம் வெற்றிபெறுவதற்கு பணியாளர்களுக்கு போதுமான பயிற்சியை அவ்வப்போது அளித்தல் என்பது மிக முக்கியமான அடிப்படை நடவடிக்கையாகும் நீண்டகாலம் பணிபுரியும் தொழிலாளர்கள் அந்நிறுவனத்தின் பணியில் சேர்ந்தபேது அவர்களுக்கு இருக்கும் தகுதிகளை தற்போதைய நிலைக்கு ஏற்றவாறு மேம்படுத்திடவேண்டியது அவசியமாகும் அதனால் வகுப்பறை பயிற்சியாகவோ நேரடிபயிற்சியாகவோ இணையத்தின்மூலமான பயிற்சியாகவோ அவ்வப்போது அவர்களுக்கு அளித்து பணியாளர்களின் திறனை புத்தாக்கம் செய்துகொள்வது நல்லது

2 ஒரு மேலாளர் தம்கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் ஏதாவது ஒரு தொழில்நுட்ப சம்மேளனங்களில் உறுப்பினராக சேரும்படியான சூழலை ஏற்படுத்தி அதற்கு ஆண்டு சந்தாவை தம்முடைய நிறுவனமே செலுத்திடுமாறு செய்திடும்போது அந்த தொழிலாளர்கள் திருப்தியுற்று தம்முடைய தொழில்நுட்ப சம்மேளனங்களின் மூலம் தமக்கு கிடைக்கும் புதிய புதிய தொழில்நுட்பங்களையும் ஆலோசனைகளையும் தம்முடைய நிறுவனத்தில் செயல்படுத்திடும் நிலைஏற்படும் அதன்மூலம் அந்நிறுவனத்தின் வளர்ச்சி உறுதியாக இருக்கும்

3. பணியாளர்கள் அனைவரையும் ஒருங்கிணையச்செய்து செய்து கல்விசுற்றுலா செல்லுமாறு செய்தல், விளையாட்டு போட்டி நடத்துதல், நாடகம்,பாட்டுபோட்டி, பேச்சுபோட்டி நடத்துதல் என்பன போன்ற நடவடிக்கைகளை ஒரு நிறுவனத்தில் செயற்படுத்திடவேண்டும் மேலும் இந்த நிகழ்வுகளில் பணியாளர்கள் மட்டுமல்லாது அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் கலந்து கொள்ளுமாறு செய்தல் மறைமுகமாக அந்நிறுவனத்தின் உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்கான வழிமுறையாகும்

4. பணியாளர்கள் அனைவருக்கும் அவரவர்கள் அடையவேண்டிய இலக்கை குறிப்பிட்டு செயல்படுமாறு அதற்கான சூழலை அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்தபின் அவர்களுள் அந்த இலக்கை அடைபவர்களுக்கு மட்டும் அவர்களின் செயலை அங்கீகரித்து ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்கு உற்பத்தி சார்ந்த போனஸ் வழங்குவது போன்ற நடவடிக்கைகள் மற்ற பணியாளர்களும் அவ்வாறு செயற்படுவதற்கான தூண்டுதல் ஏற்பட்டு அந்நிறுவனத்தின் உற்பத்தி திறன் மேம்படுத்துவதற்கான சூழல் ஏற்படுகின்றது

5.தற்போதைய புதிய தொழில்நுட்பம் ,புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை சார்ந்த புத்தாக்க வகுப்புகளை வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை பணியாளர்களுக்கு நடத்துவது, பணியாளர்களுள் சிறந்த புத்தாக்கம் நிறைந்த பணியாளர்களை இந்த வகுப்புகளில் தம்முடைய கருத்துகளை மற்ற பணியாளர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறான வாய்ப்பை உருவாக்குதல் போன்ற நடவடிக்கையின்மூலம் ஒருநிறுவனத்தின் உற்பத்தி திறனை மேம்படுத்தமுடியும்

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

எந்தவொரு நிகழ்வு ஏற்பட்டாலும் அதன்மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நமக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது


சுன்டெலி ஒன்று ஒருகிராமத்தில் உள்ள ஒரு குடியானவன் வீட்டில் அதிக தொல்லை கொடுத்துவந்தது அதனால் அக் குடியானவன் இந்த சுன்டெலியை ஒழித்து கட்டவேண்டுமென புதிய எலிப்பொறியை கடையில் வாங்கிவந்து பையிலிருந்து அதனை அவிழ்த்து தன்னுடைய மனைவியிடம் காட்டினார்

முதலில் இதனை கண்ட சுன்டெலியானது “இதுஏதோ புதிய வகையான உணவுப்பொருள் போலும் இன்று இரவு நமக்கு நல்ல வேட்டைதான் “என எண்ணியது ஆனால் அதனை முழுவதுமாக பார்த்தபிறகுதான் “அய்யய்யோ ! இது நம்மை வேட்டையாடுவதற்காக வந்துள்ள எலிப்பொறி ஆயிற்றே” என பயந்து அலறியடித்து கொண்டு “குடியானவன் வீட்டில் புதிய எலிப்பொறி வந்து விட்டது, எச்சரிக்கையாக இருங்கள்!”, “குடியானவன் வீட்டில் புதிய எலிப்பொறி வந்து விட்டது, எச்சரிக்கையாக இருங்கள்!” எனக்கூவிக்கொண்டே ஓட்டம் பிடித்தது

இவ்வாறு இந்த சுன்டெலியானது பயந்து நடுங்கி கூவிக்கொண்டு ஓடுவதை கண்ணுற்ற அக்குடியானவன் வீட்டில் வளர்ந்து வரும் கோழியானது “ஏய்! சுன்டெலியே! அது உன்னை பிடித்து ஒழிப்பதற்காக வந்துள்ள எலிப்பொறி தானே தவிர, எங்கள் இனத்திற்கு அதனால் பாதிப்பெதுவும் ஏற்படாது, அதனால் வாயை மூடிக்கொண்டு தூரப்போ” என அந்த சுண்டெலியை விரட்டியடித்தது

அந்த சுன்டெலி மீண்டும் “குடியானவன் வீட்டில் புதிய எலிப்பொறி வந்து விட்டது, எச்சரிக்கையாக இருங்கள்!”, “குடியானவன் வீட்டில் புதிய எலிப்பொறி வந்து விட்டது, எச்சரிக்கையாக இருங்கள்!” எனக் கூவிக் கொண்டே வேறு இடத்திற்கு சென்றது

அந்த குடியானவன் வீட்டில் வளரந்து வந்த வெள்ளாடு ஆனது “டேய் சுன்டெலியே! அந்த எலிப்பொறியை குடியானவன் வாங்கி வந்துள்ளதால் உனக்கு மட்டும் தான் பாதிப்பு வருமேயொழிய எங்களுடைய இனத்திற்கு பாதிப்பு ஏதுவும் ஏற்படாது ,அதனால் முதலில் இவ்விடத்தை விட்டு நகர்ந்து செல்” என்று விரட்டியடித்தது

இதற்கு மேல் நமக்கு ஆதரவாக யாருமே இல்லையே என்ன செய்வது என பரிதவித்து அந்த சுன்டெலியானது மிக எச்சரிக்கையாக அந்த குடியானவன் வீட்டிற்குள் நுழைந்து வீட்டின் மேல்பகுதியிலுள்ள பரன்மீது ஏறி ஒருமூலையாக சென்றமர்ந்து கொண்டது

அன்று நள்ளிரவில் எலிப்பொறிக்குள் ஏதோ மாட்டிக்கொண்ட சத்தம் கேட்டது உடன் அக்குடியானவனுடைய மனைவியானவள் “எலிப்பொறியில் சுண்டெலி மாட்டிகொண்டது இனி அந்த சுண்டெலியனுடையை தொல்லை ஒழிந்தது” என இருட்டில் இது சுன்டெலியின் வாலாகத்தான இருக்கும் என கைவைத்து பிடிக்க ஆரம்பிக்கும்போது அதில் மாட்டியிருந்த பாம்பானது அக்குடியானவனின் மனைவியை கடித்து விட்டது

உடன் குடியானவன் கடித்தது பாம்பென தெரிந்துகொண்டு உடன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவருடைய மனைவியை அழைத்து சென்றார் அங்கிருந்த மருத்துவர் உடனடியாக தேவையான மருத்துவ உதவியை செய்து “வீட்டிற்கு சென்று கோழியை சூப்பாக செய்து அருந்த செய்தால் பாதிப்பு குறையும்” என அறிவுரைக்கூறினார்

அவ்வாறே அக்குடியானவன் அவருடைய வீட்டில் வளர்ந்துவந்த கோழியை கொன்று சூப்செய்து தன்னுடைய மனைவி அருந்திடுமாறு செய்தார் ஆனாலும் பாதிப்பு குறையவில்லை

அதனை கண்ட அருகிலிருந்த உற்றார் உறவினர் “வெள்ளாட்டு சூப் செய்து கொடுத்தால் குணமாகிவிடும்” என அறிவுறுத்தியதால் அவ்வாறே அவருடைய வீட்டில் வளர்ந்து வந்த வெள்ளாட்டினை கொன்று சூப் செய்து கொடுத்தார்

இவையனைத்தையும் கண்ணுற்ற அந்த சுன்டெலியானது தப்பித்தோம் பிழைத்தோம் என அடுத்தகுடியானவன் வீட்டிற்கு சென்றுவிட்டது

இந்த கதையிலிருந்து நமக்கு தெரியவருவது என்னவென்றால் “எந்தவொரு நிகழ்வு ஏற்பட்டாலும் அதனால் மற்றவர்கள் தானே பாதிப்படைகின்றனர் நமக்கு அதனால் நேரடியாக பாதிப்பெதுவும் ஏற்படாது என அலட்சியமாக இருந்திட வேண்டாம் எந்தவொரு நிகழ்வு ஏற்பட்டாலும் அதன்மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நமக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது அதனால் நாமும் எச்சரிக்கையாக இருந்திடவேண்டியது அவசியமாகும்” என்பதே

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...