திங்கள், 23 டிசம்பர், 2013

வீனான வரட்டு கவுரவத்திற்காகவும் போலியான படோடோபத்திற்காகவும் ஒருசில கொள்கைகளை விடாப்பிடியாக பிடித்துகொண்டு இருக்கவேண்டாம்


காடுகளில் உள்ள மரங்களையும் செடிகொடிகளையெல்லாம் மனிதர்கள் தங்களுடைய பேராசையினால் அழித்துவிட்டதால் தங்களின் உணவைதேடி காடுகளி ல் வாழும் குரங்கு கூட்டங்கள் மனிதர்கள் வாழும் நாட்டுபுறங்களைநோக்கி படைஎடுக்கதுவங்கிவிட்ட இக்காலத்தில் குரங்குஒன்று தன்னுடைய பசிக்காக வீடுகளின் கூரைமீது தாவிதாவிசென்று கொண்டிருக்கும்போது ஒருபணக்கார வீட்டின் வாசலில் அழகான ஆப்பில் பழங்கள் தட்டில் பரப்பி வைத்து முற்றத்தில் வைத்திருந்ததை பார்த்து

ஆஹா நமக்கு அருமையான உணவு கிடைத்தது என அகமகிழ்ந்த அந்த குரங்கு கைக்களில் கொள்ளமுடியாதவாறு இரண்டு மூன்று ஆப்பில்களை எடுத்தோடி சென்று அமர்ந்த கடித்து தின்னமுயன்றபோது ஐயோபாவம் பல்வலித்ததே தவிர ஆப்பில் பழத்தை தின்னமுடியவில்லை

அந்த வழியாக சென்ற குரங்குகளின் கூட்டத்தில் இருந்த வயதான குரங்கொன்று அடேய் அது மரத்தினால் செய்த பொம்மை ஆப்பில் அதனை தின்னமுடியாது அதனை கீழே போட்டுவிட்டு அதோ அருகில் உள்ள கொய்யாமரத்தில் ஏறி கொய்யாபழம் அல்லது காய்களை பறித்து தின்று உன்னுடைய பசியாற்றிக்கொள் எனக்கூறியது

நான் இந்த ஆப்பிலை கீழேவைத்துவிட்டு கொய்யாமரம் ஏறசென்றால் அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி ஆப்பிலை தான் எடுத்துகொள்ளலாம் என அந்த வயதானகுரங்கு திட்டமிடுவதாக எண்ணிக்கொண்டு கொய்யாபழம் தேவையில்லை என கூறி சும்மா இருந்தது

அந்த குரங்கு மாலைநேரம் வரை முயன்றும் அந்த ஆப்பிலை அந்த குரங்கால் கடித்து தின்னமுடியவில்லை கைகளில் தொடர்ந்து அதனை வைத்துகொண்டேஇருப்பதால் கைகளில் வலிஏற்பட்டதேயொழிய அந்த குரங்கினுடைய பசியாறவில்லை காதடைத்து கண்பூபூத்தமாதிரி ஆகிவிட்ட நிலையில் இதற்குமேல் பசி தாங்கமுடியாது என அந்த வயதான குரங்கு கூறிய அறிவுரையின்படி அருகிலிருந்த கொய்யாமரம் ஏறி ஒருசில பழங்களையும காய்களை பறித்து தின்றபசியாறியது

அடடா இதனை முன்பே செய்து பசியாறியிருக்கலாமே என வெட்கபட்டது

ஆம் அதேபோன்று நம்மில் பலரும் வீனான வரட்டு கவுரவத்திற்காகவும் போலியான படோடோபத்திற்காகவும் ஒருசில கொள்கைகளை விடாப்பிடியாக பிடித்துகொண்டு நமக்கும் பயன்இல்லாமல் மற்றவர்களுக்கும் பயன்படாதவாறு இருப்பதைவிட்டொழித்து பயனுள்ள செயல்களை தயக்கமின்றி ஏற்று செயல்படுக என அறிவுறுத்தபடுகின்றது

புதன், 20 நவம்பர், 2013

எந்தவொரு வெற்றிக்கும் காரணி எது


ஒருசமயம் இளம் வாலிபனொருவன் சாக்ரடீஸிடம் எந்தவொரு வெற்றிக்கும் காரணி எதுவென வினவியபோது நாளை காலை ஆற்றங்கரைக்கு வந்து என்னை பார் அப்போது உன்னுடைய வினாவிற்கு சரியான விடை கிடைக்கும் என கூறியதை தொடர்ந்து மறுநாள் காலை அந்த இளைஞனும் அவ்வாறே ஆற்றங்கரைக்கு சென்று சாக்ரடீஸை பார்த்தபோது அவ்விளைஞனை அழைத்துகொண்டு ஆற்றங்கரையோரமாக சாக்ரடீஸ் நடந்து சென்றார். அவ்வாறு சென்றுகொண்டிருக்கும் போது தண்ணீரானது ஆற்றில் அதிக ஆழமாக இருக்கும் இடத்தில் திடீரென சாக்ரடீஸ் அவ்விளைஞனை தண்ணீருக்குள் தள்ளிவிட்டார்

அவ்விளைஞனுக்கு நீச்சல் தெரியாததால் மூழ்கி எழுந்து முகம் நீலவண்ணமாக மாறும் அளவிற்கு தத்ளித்தபோது சாக்ரடீஸ் அவ்விளைஞனின் தலைமுடியை பிடித்து தண்ணீரைவிட்டு தூக்கினார் இப்போது உன்னுடைய முதல் தேவையென்னவென வினவினார் உடன் இப்போது எனக்கு காற்றுதான் முதல்தேவையாகும் என கூறி மிக ஆழ்ந்து சுவாசித்தான்

இதேபோன்று எந்தவொரு இக்கட்டிலும் சமாளித்து வெளியேறுவதற்கு முதலில் என்ன தேவையோ அதுதான் எந்தவொருவெற்றிக்கும் அடிப்படை காரணியாகும் என்ற செய்தியை தெரிந்து கொள் என சாக்ரடீஸ் கூறினார் .

புதன், 23 அக்டோபர், 2013

இயற்கை வளங்களை நம்முடைய சந்ததியர்களுக்கும்விட்டு செல்வோம்


பாலைவனம் ஒன்றில் சென்று கொண்ருந்த மனிதன் தன்னுடைய வழியை தவறவிட்டுவிட்டான் அதனால் தான் செல்லும்பாதையை அலைந்து திரிந்து இறுதியாக கண்டுபிடித்தபோது தண்ணீர் தாகம் ஏற்பட்டு அதிகநாவறட்சி யுடன் அவனுடைய நடை தள்ளாடும் நிலை உருவானது.

இந்நிலையில் அருகில் கைகளால் இயக்கும் மிகபழமையான தண்ணீர் குழாய் ஒன்று இருந்தது .அதனருகில் ஒருமூடிய பாத்திரத்தில் தண்ணீரும் “இந்த பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை கையால் இயக்கிடும் ஆம்துளை குழாயில் ஊற்றி குழாயை கைகளால் இயக்கி தேவையானவாறு தண்ணீரை மேலேற்றி குடித்து முடித்திடும்போது இதுபோன்று தாகத்தால் தவித்து வந்து சேரும் மற்ற பயனாளிகளுக்கு உதவுவதற்காக இதே பாத்திரத்தில் மீண்டும் தண்ணீரை நிரப்பி மூடிவைத்து செல்க” என்றவாறு அறிவிப்பு இருந்தது

.அந்த கைகளால் இயக்கும் குழாயை பார்த்தால் மிகஅரதல் பழையதாக இருந்தது .கிடைத்த இந்த சிறிதளவு தண்ணீரை குழாயில் ஊற்றி இயக்கினால் நமக்கு குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்குமா? என சந்தேகத்துடன் நாம் மட்டும் இந்த தண்ணீரை குடித்து நம்முடைய தாகத்தை தணித்து கொள்வோம். என முடிவுசெய்து முயலும்போது

அம்மனிதனின் உள்ளீருந்து ஒரு குரல் “டேய் இவ்வாறு முடிவுசெய்யாதே இந்த தண்ணீர் நமக்கு மட்டுமன்று நமக்கு பின்னால் நம்மை போன்று இவ்வாறு தவிப்பவர்களுக்கும் உதவுவதற்காவே ஏற்படுத்தபட்டுள்ளது அதனால் அறிவிப்பில் குறிப்பிட்டவாறு செய்” என கட்டளைஇட்டது

அதை பின்பற்றி பாத்திரத்தில் இருந்த தண்ணீரை குழாயில் ஊற்றி குழாயை இயக்கியபோது போதுமான தண்ணீர் வெளியில் வந்தது உடன் தனக்கு போதுமானதன்னுடைய தாகம் தீரும்வரை குடித்தபின் அந்த பாத்திரத்தை தண்ணீரால் நிரப்பி மூடியபின் தன்னுடைய பாதையில் செல்ல ஆரம்பித்தான்.

அதேபோன்று நமக்கு வழங்கபட்டுள்ள இயற்கை வளங்களை வருங்கால நம்முடைய சந்ததியரும் பயன்படுத்துவதற்கு ஏதுவாக அதனை வீணடித்து அழித்திடாமல் பாதுகாத்து விட்டுசெல்வோம்

திங்கள், 30 செப்டம்பர், 2013

பணியாளர்களின் நல்லசெயல்களை மட்டும் பாராட்டினால் நிறுவனத்தின் உறபத்தி திறன் உயரும்


ஒரு சமயம் ராக்பெல்லர் என்பவருடைய ஆயில் நிறுவனத்தின் பணிபுரிந்த மிகமூத்த அதிகாரி ஒருவர் செய்த சிறு தவறினால் அந் நிறுவனத்திற்கு ஏறத்தாழ 2 மில்லியன டாலர் இழப்பு ஏற்பட்டுவிட்டது இந்த நிகழ்வானது ஊரறிந்த ஒரு இரகசியமாகிவிட்டது அதனால் அவரோடு பணிபுரிந்த மற்ற மூத்த அதிகாரிகள் அனைவரும் முதலாளி ராக்பெல்லர் தவறிழைத்த அந்த அதிகாரியை உண்டு இல்லையென ஒருவழியாக ஆக்கிவிடுவார் அதற்கேற்ற தண்டனையை அந்த தவறிழைத்த அதிகாரிக்கு வழங்கிடுவார் என எதிர்பார்த்திருந்தனர்

ஆனால் அந்த ஆயில் நிறுவனத்தின் முதலாளி ராக்பெல்லர் என்பவர் தன்னுடைய அந்தரங்க செயலரை அழைத்து அவருடைய ஆயில் நிறுவனத்தில் 2 மில்லியன டாலர் இழப்பு ஏற்படும் அளவிற்கு தவறிழைத்த அதிகாரியின் தனித்திறன் என்னென்ன முன்பு அவருடைய திறனால் அந்நிறுவனத்திற்கு எவ்வளவு வருமானம் கூடுதலாக கிடைத்தது என்பன போன்ற விவரங்களை பட்டியலாக அச்சிட்டு வருமாறுகூறி அதனை மற்றொரு மூத்த அதிகாரியின் நிலையில் படித்து காண்பித்து இவ்வளவு நல்ல அதிகாரியை அவர் செய்த சிறு தவறிற்காக தண்டிக்கலாமா கூடாது அவர் செய்த நன்மைகளையும் நிறுவனம் முன்னேறுவதற்கு அவருடைய கடுமையான உழைப்பை மட்டுமே காணவேண்டுமே தவிர வேறுஅவர் செய்த சிறுசிரு தவறுகளை கண்டிப்பாக பெயரி பிரச்சினையாக ஆக்க்கூடாது என கூறி அந்த பிரச்சினையை அதோடு அனைவரும் விட்டுவிடும்படி அனைவருக்கும் ஆலோசனை கூறினார்

ஆம் நாமும் நாம் பணிபுரியம் நிறுவனத்தில் நம்மோடு நமக்கு கீழ் பணிபுரிபவர்கள் செய்த, செய்கின்ற சிறு சிறு தவறுகளை மறப்போம் மன்னிப்போம் என கைவிட்டு அவரவர்செய்த நல்ல செயல்களை அவரிடம் கூறி பாராட்டினால் அதற்கு பிறகு அதுபோன்ற தவறுகளை தன்னுடைய வாழ்வில் அவர்கள் கண்டிப்பாக செய்யமாட்டார்கள் என்பது திண்ணம்

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

பிரச்சினை என்னவென்று அதன் அடிப்படையை தெரிந்து கொள்ளாமலேயே தவறான முடிவை எடுத்துவிடுகின்றோம்



     புதியதாக கணினியின் மென்பொருள் அறிவியல் பட்டம் பெற்ற ஒரு மாணவன்  பிரபலமான கணினிமென்பொருள் மேம்படுத்தும் ஒரு நிறுவனத்தின் நிரல் தொடர்கட்டளை எழுதிடும் வல்லுநர் பணியில் சேருவதற்கான நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டபோது அந்நிறுவனத்தின் வயது முதிர்ந்த தேர்வாளர் தம்பி!  நீ கணினி மென்பொருளின் தருக்கமுறைமை பற்றி நல்ல அறிவு பெற்றிருக்கின்றாயா ? “ என வினவியபோது  அதிலென்ன சந்தேகம் ஐயா!” என பதிலிருத்தான் அப்படியானால் சரி! நான் புதிர்  ஒன்றை கூறுகின்றேன் அதற்கான விடையை மிகச்சரியாக கூறுகின்றாயா?  என பார்த்தபின்னரே உன்னை இந்த நிறுவனத்தில் பணிக்கு எடுப்பது பற்றி முடிவுசெய்யமுடியும் எனக்கூறினார்.
 1தொடர்ந்து  இரு தொழிலாளர்கள் ஒரு கொதிகலணின் புகைபோக்கியிலிருந்து இறங்கி வந்தார்கள் அவர்களில் ஒருவர் முகத்தில் கரியும் சாம்பலும் படிந்திருந்தது மற்றொருவர் முகம் அவ்வாறு  எதுவும் படியாமல் சுத்தமாக இருந்தது  இருவரில் யார் முகத்தினை கழுவி தூய்மை  செய்வார் என அந்த தேர்வாளர் வினவினார்.
 உடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட மாணவர் முகத்தில் கரியும் சாம்பலும் படிந்த தொழிலாளியேஎன பதிலிருத்தான்  தவறு!   முகத்தில்  கரியும் சாம்பலும் படியாத தொழிலாளியே, தன்னுடைய முகத்தினை  கழுவி தூய்மை  செய்வார் . ஏனெனில் முகத்தில்  கரியும் சாம்பலும் படிந்த தொழிலாளி எதிரில் உள்ள தொழிலாளியின் முகத்தை பார்க்கும்போது சுத்தமாக இருப்பதை அறிந்து நம்முடைய முகமும் சுத்தமாக இருக்கும் என எண்ணி விட்டுவிடுவார்.ஆனால், முகத்தில்  கரியும் சாம்பலும் படியாத தொழிலாளியானவர்  எதிரில்உள்ள தொழிலாளியின் முகத்தை பார்க்கும்போது அந்த  முகத்தில் கரியும் சாம்பலும் படிந்திருப்பதை கண்டு தன்னுடைய முகமும் அவ்வாறே இருக்கும் என எண்ணி தன்னுடைய முகத்தினை  கழுவி தூய்மை  செய்வார். எனக்கூறினார் அந்த தேர்வாளர். .  

   2ஐயா! வேறு ஒரு வாய்ப்பினை வழங்குங்கள் என அந்த மாணவன் கூறியபோது
 சரி! இரு தொழிலாளர்கள் ஒரு கொதிகலணின் புகைபோக்கியிலிருந்து இறங்கி வந்தார்கள் அவர்களில் ஒருவர் முகத்தில் கரியும் சாம்பலும் படிந்திருந்தது மற்றொருவர் முகம் அவ்வாறு  எதுவும் படியாமல் சுத்தமாக இருந்தது  இருவரில் யார் முகத்தினை கழுவி தூய்மை  செய்வார் என இரண்டாவது முறை அந்த தேர்வாளர் வினவினார்.
  உடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட மாணவர் முகத்தில் கரியும் சாம்பலும் படியாத தொழிலாளியேஎன பதிலிருத்தான்
தவறு!   இருவருமே தத்தமது முகத்தினை  கழுவி தூய்மை  செய்வார்கள்  ஏனெனில்  முகத்தில்  கரியும் சாம்பலும் படியாத தொழிலாளியானவர்  எதிரில்உள்ள தொழிலாளியின் முகத்தை பார்க்கும்போது அந்த  முகத்தில் கரியும் சாம்பலும் படிந்திருப்பதை கண்டு தன்னுடைய முகமும் அவ்வாறே இருக்கும் என எண்ணி தன்னுடைய முகத்தினை  கழுவி தூய்மை  செய்வார் .அதனை கண்டு முகத்தில் கரியும் சாம்பலும் படியாத தொழிலாளியே தன்னுடைய முகத்தை கழுவி சுத்தபடுத்திடும்போது ,ஏன் நாமும் நம்முடைய முகத்தை கழுவி சுத்தபடபடுத்திடக்கூடாது? என அவரும் தன்னுடைய முகத்தினை கழுவி சுத்தபடுத்திகொள்வார் எனக்கூறினார் அந்த தேர்வாளர்.
 3 ஐயா! மற்றொரு வாய்பிபினை வழங்குங்கள் என அம்மாணவன் வேண்டியபோது மீண்டும் மூன்றாவது முறையாக   
இரு தொழிலாளர்கள் ஒரு கொதிகலணின் புகைபோக்கியிலிருந்து இறங்கி வந்தார்கள் அவர்களில் ஒருவர் முகத்தில் கரியும் சாம்பலும் படிந்திருந்தது மற்றொருவர் முகம் அவ்வாறு  எதுவும் படியாமல் சுத்தமாக இருந்தது  இருவரில் யார் முகத்தினை கழுவி தூய்மை  செய்வார் என மூன்றாவது முறை அந்த தேர்வாளர் வினவினார்.
  உடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட மாணவர் இரண்டு தொழிலாளியுமே தங்களுடைய முகத்தினை கழுவி சுத்தபடுத்திகொள்வார்கள் என பதிலிறுத்தபோது
  தவறு!  இருவருமே தங்களுடைய முகத்தினை கழுவமாட்டார்கள். ஏனெனில்  முகத்தில் கரியும் சாம்பலும் படிந்திருக்கும் தொழிலாளி எதிரில் இருக்கும் தொழிலாளியின் முகம் தூய்மையாக  இருப்பதை பார்த்து தன்னுடைய முகமும் தூய்மையாக இருக்கும் என தன்னுடைய முகத்தை கழுவி சுத்தபடுத்திடமாட்டார்.   ஆனால் முகத்தில் கரியும் சாம்பலும் படியாத தொழிலாளி எதிரில் இருக்கும் முகத்தில் கரியும் சாம்பலும் படிந்த தொழிலாளியே தன்னுடைய முகத்தினை கழுவி சுத்தபடுத்தாதபோது நாம் மட்டும் ஏன் கழுவவேண்டும் என விட்டுவிடுவார் எனகூறினார். அன்த தேர்வாளர்.
4சரி! ஐயா! இறுதிவாய்ப்பாக  ஒரு கேள்வியை கேளுங்கள் ஐயா!” என அந்த மாணவன் வேண்டியபோது
  இரு தொழிலாளர்கள் ஒரு கொதிகலணின் புகைபோக்கியிலிருந்து இறங்கி வந்தார்கள் அவர்களில் ஒருவர் முகத்தில் கரியும் சாம்பலும் படிந்திருந்தது மற்றொருவர் முகம் அவ்வாறு  எதுவும் படியாமல் சுத்தமாக இருந்தது  இருவரில் யார் முகத்தினை கழுவி தூய்மை  செய்வார் என இறுதியாக நான்காவதுமுறை அந்த தேர்வாளர் வினவியபோது
  என்னடாஇது ?எப்படி பதில் கூறினாலும் தருக்க முறையில் தவறு என வேறு பதிலையே இந்த தேர்வாளர் கூறுகின்றாரே எனத்தடுமாறி ஐயா இந்த கேள்விக்கான பதிலை என்னால் கூறஇயலவில்லை  நான் தருக்கஇயலில் கரைகண்டவன் அன்று ஒருமாணவன் மட்டுமே என மிகபணிவுடன்கூறியபோது
  அதனாலெனென்ன தம்பி!பரவாயில்லை ! ஒரு கொதிகலணின் புகை போக்கியில்இருந்து இருவர் இறங்கி வரும்போது எவ்வாறு ஒருவர்முகத்தில் மட்டும் கரியும் சாம்பலும் படிந்திருக்கும்? இருவர் முகத்திலுமே கரியும் சாம்பலும் படிந்திருக்கும்.என்ற அடிப்படை உண்மையை தெரிந்துகொள் . அதனால் முதலில் பிரச்சினை என்ன அதனுடைய அடிப்படையான இயல்பு, குணநலன் என்னவென தெரிந்து கொள் அதன்பின் தருக்கவியலை அதில்புகுத்தி அந்த பிரச்சினைக்கான விடையை கண்டுபடிக்க முயற்சிசெய் என விடை கொடுத்து அனுப்பினார் அந்த தேர்வாளர்.
   ஆம்,ஆம். நம்மில் பலரும்இதேபோன்றே எந்தவொரு நிகழ்வையும முழுவதுமாக அதனுடைய இயற்கை அமைவை பற்றியும் அந்நிகழ்வு ஏற்படுவதற்கான அடிப்படை  உண்மைகளை பற்றியும்  முழுவதும் தெரிந்து கொள்ளாமல் அரைகுறையாக அறிந்துகொண்டு தவறான முடிவெடுத்து நம்முடைய வாழ்வில் அல்லல்படுகின்றோம். என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

எந்த நிகழ்வு நடந்தாலும் அதனை ஆராய்ந்து பார்க்க தவறிவிடுகின்றோம்


ஒருநாள் இரண்டாவது தளத்தில் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த கொத்தனாரை மூன்றாவது தளத்திலிருந்து மேற்பார்வையாளர் உடனடியாக அவரை நேரில் அழைத்து ஒருசில ஆலோசனைகளை செயற்படுத்துமாறு கூறுவதற்காக அந்த கொத்தனாரின் பெயரிட்டுஅழைத்தபோது அந்த கொத்தனார் திரும்பி பார்க்காததால் அந்த கொத்தனாரின் கவனத்தை ஈர்க்கும்பொருட்டு ஒரு பத்து ரூபாய் தாளை வீசி ஏறிந்தார் உடன் கொத்தனாரும் ஏதோ காற்றில் ரூபாய் தாள் தவறி வந்துவிட்டது போலும் நம்முடைய அதிருஷ்டம்தான் என எண்ணி அந்த பத்து ரூபாய் தாளை எடுத்து சட்டைபயில் வைத்து கொண்டு தன்னுடைய பணியை தொடர்ந்து செய்துகொண்டிருந்தார்

பின்னர் மேற்பார்வையாளர் நூறு ரூபாய் தாளையும் அதன்பின்னர் ஐந்நூறு ரூபாய் தாளையும் வீசி எறிந்தபோதும் அதே நிலைமை தொடர்ந்தது

அதனால் எரிச்சலுற்ற மேற்பார்வையாளர் சிறு கல் ஒன்றை எடுத்து கொத்தனாரை நோக்கி வீசிஎறிந்தபோது மிகச்சரியாக அந்த சிறு கல்லானது கொத்தனாரின் தலையில் விழுந்தவுடனே வலிபொறுக்கமுடியாமல் தலையை தடவிகொண்டே மேல்தளத்தை நோக்கி திரும்பினார் அங்கு அவருடைய மேற்பார்வையாளர் அவரை மேலே வருமாறு அழைத்ததை தொடர்ந்து அங்கு சென்றார்

இவ்வாறே நாமும் நம்முடைய வாழ்வில் ஏதேனும் சிறு நல்ல நிகழ்வு நடந்தால் அதனை நம்முடைய அதிருஷ்டம் என எண்ணி மகிழ்கின்றோம் அது ஏன் நடந்தது என ஆராய்ந்து பார்க்க தவறிவிடுகின்றோம் ஆனால் துன்ப நிகழ்வு ஏற்படும்போது மட்டும் நாம் உடனே எனக்குமட்டும் ஏன் இவ்வாறான துன்பம் ஏற்படுகின்றதுஎன அதை தீர்வு செய்வதற்கான நடவடிக்கை எதுவும் செய்திடாமல் மனச்சோர்வு அடைந்துவிடுகின்றோம்

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

யாரையும் ஆளின் தோற்றத்தை வைத்து தவறாக முடிவுசெய்திட வேண்டாம்


மனநல மனைக்கு தேவையான பொருட்களை வழக்கமாக ஏற்றிவரும் சுமைஉந்துவண்டியின் ஓட்டுநர் பொருட்களை இறக்கியபின் தன்னுடைய வண்டியின் அனைத்து சக்கரங்களின் டயர்களும் நல்லநிலையில் உள்ளதாவென சரிபார்த்தபோது ஒருசக்கரத்தில் காற்றில்லாமல் மிகமேசமாக இருப்பதை கண்டு உடனடியாக அதனை கழற்றி தயார்நிலையில் உள்ள மாற்று சக்கரத்தை மாற்றியமைக்கலாம் என முனையும்போது அந்த சக்கர்த்தை பொருத்துவதற்கான திருகாணிகள் அனைத்தும் தவறி அருகில் ஓடிக்கொண்டிருந்த சாக்கடைநீரில் விழுந்துவிட்டன

அய்யோ திருகாணிகள் இல்லாமல் எவ்வாறு அந்த பழுதடைந்த சக்கரத்திற்குபதிலாக மாற்று சக்கரத்தை பொருத்துவது என தவித்து நின்றபோது அந்தவ்வழியாக ஒருநமனநலன் பாதித்த ஒருநபர் கடந்து செல்லும்போது இந்த ஓட்டுநருடைய நிலையை பார்த்து என்ன நடந்து என வினவியபோது நடந்த நிகழ்வை ஓட்டுநர் அந்த மனநிலை பாதித்தநபரிடம் கூறினார்

இந்த நிகழ்விற்காகவா கலங்கியபோய் இருக்கின்றீர்கள் பயப்படவேண்டாம் மிகுதி சக்கரங்களில் இருந்து ஒவ்வொரு திருகாணிகளை கழற்றி இதில் பொருத்தி அருகில் இருக்கும் பணிமனைவரை பத்திரமாக மெதுவாக ஓட்டிசென்றுவிட்டு அங்கு உங்களுக்கு தேவையான திருகாணிகளை வாங்கி பொருத்தி வழக்கம்போன்று ஓட்டி செல்லலாமே என பதிலிருத்ததை கண்டு அடடா அருமையான ஆலோசனையாயிற்றே இவ்வளவு புத்திசாலியாக இருக்கும் நீங்கள் எப்படி இந்த மனநல மருத்தவமனைக்கு வந்து சேர்ந்தீர்கள் என இந்த ஓட்டுநர் ஆச்சரியம்க கேட்டபோது நான் மனநலன் பாதித்தவனேயன்றி முட்டாள் அன்று என கூறிசென்றார்

அதாவது யாரையும் ஆளின் தோற்றத்தை வைத்து இப்படித்தான் இருப்பார் என தவறாக முடிவுசெய்திட வேண்டாம் அவரவருடைய உண்மையான குணநலன்களையும் செயல்களையும் தெரிந்து அதன்பின் முடிவுசெய்க என்பதேயாகும்

புதன், 24 ஜூலை, 2013

ஒருநிறுவனத்தின் மேலாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் இடையேயான உறவை சுமுகமானதாக வளர்த்துகொள்ள

பொதுவாக தலைமையாளர்களுடன் கீழ்நிலை பணியாளர்களின் உறவு மிக்கடினமானதாகவே இருந்து வருகின்றன இரகசியம் பாதுகாப்பதாக கூறிக்கொண்டு எந்தவொரு செயலையும் பிரச்சினைக்கான தீர்வினையினையும் சுமூகமாக பின்பற்றபடுவதேயில்லை

ஆயினும் இந்த உறவு சுமுகமாக இருந்தால் நம்பிக்கை மிக்கதான கருவியாக இருக்கும் அதற்காக பின்வரும் படிமுறைகளை பின்பற்றி பணியாளர்களுக்கும் தலைமைக்கும் உள்ள உறவை சுமுகமானதாக ஆக்கமுடியும்

1.நடைமுறையில் வீடுஎன ஒன்றிருந்தால் அதற்கு வாயில்,சன்னல் என்பன போன்றஉறுப்புகள் இருக்கவேண்டும் அதுபோன்றே எந்தவொரு தொழிலிலும் ஒரு சில பிரச்சினைகள் அவ்வப்போது குறுக்கே வந்துகொண்டுதான் இருக்கும் பிரச்சினையே இல்லாத தொழில் எதுவுமேயில்லை இருந்தாலும் அந்தபிரச்சினையால் எழும் பொதுவான பாதிப்பு பிரச்சினைக்கேவிற்கு உரிய பாதிப்பு அதனால் நம்முடைய பணிஎவ்வாறு பாதிக்கும் அதனைதொடர்ந்து நிறுவனத்தின் குறிக்கோள் எவ்வாறு பாதிக்கும் என்பன போன்ற விவரங்களை மிக விரிவாகவும் விவரமாகவும்தலைமையாளரிடம் பணியாளர்கள் உடனடியாக தகவல் தெரிவித்திடுவது நன்று

2. சரி பிரச்சினையைமட்டும் தலைமையாளரிடம் விவரமாக கூறிவிட்டால் போதுமா அந்த பிரச்சினைக்குரிய தீர்வை நாம் எவ்வாறு முயன்று கண்டோம் அந்த முயற்சியினால் நாம் என்னென்ன தெரிந்துகொண்டோம் எத்தனைவகையான மாற்று தீர்வுகள் அந்த பிரச்சினைக்காக உள்ளன அதில் நம்முடைய பரிந்துரை என்ன என்பதே இரண்டாவது படிமுறையாகும்

3 அந்த பிரச்சினையை நாம் கூறும் வழியில் தீர்வுசெய்து வெற்றிகொண்டால் என்னென்ன பயன் உண்டாகும் சிறிய அளவில் அந்த தீர்வினை சரிபார்த்தபின்னர் மற்றவர்களுடன்அதனை எவ்வாறுபகிர்ந்துகொண்டோம் என்பதே மூன்றாவது படிமுறையாகும்

4.இறுதியாக இதனை செயல்படுத்துவதற்கான பொறுப்பான நபர் யார் அதனைதொடர்ந்து செயல்படுத்துவதன் இறுதி விளைவு என்ன என்பதே இறுதி படிமுறையாகும் இந்த ஒளிவுமறைவற்ற படிமுறையை பின்பற்றி ஒருநிறுவனத்தின் மேலாளர்களுக்கும்பணியாளர்களுக்கும் இடையேயான உறவைசுமுகமானதாக வளர்த்துகொள்ளமுடியும்

சனி, 22 ஜூன், 2013

நம்முன் பரந்து கிடக்கும்வாய்ப்புகளையும், வசதிகளையும் மிகச்சரியாகபயன்படுத்தி முன்னேறசெய்யாமல் சோம்பேறியாக நமக்கு கிடைத்தது அவ்வளவுதான் என முடங்கிபோய்விடுகினறோம்.


முன்னொரு காலத்தில் ஒரு மரத்தின்மீது இருந்த பறவையின் கூட்டில் நிறைய மூட்டைகள் இருந்தன திடீரன ஒருநாள் வீசிய பயங்கர சூறாவளி காற்றினால்அந்த மூட்டைகள் காற்றில் அடித்துசெல்லபட்டு தரையில் வீசியெறியபட்டது அவற்றில்ஒருமுட்டைமட்டும் விழுந்த இடம் கோழிகள் வாழும் இடமாக இருந்ததால் கோழிமுட்டையுடன் இந்த பறவையின் முட்டையும் கலந்துவிட்டது

ஒரு வயதானபெட்டைகோழி தன்னுடைய முட்டைகளுடன் இந்த பறவையின் முட்டையும் சேர்த்து அடைகாத்தது. இறுதியாக மற்ற முட்டைகளிலிருந்து கோழிகுஞ்சுகள் முட்டை ஓட்டை உடைத்து கொண்டு பிறந்ததை போன்று இந்த பறவையின் குஞ்சும் அதனுடைய ஓட்டை உடைத்து கொண்டு அழகிய பறவை குஞ்சாக பிறந்தது

இது மற்ற கோழிகுஞ்சுகள்போன்றே இரைதேடவும் தரையை சீய்த்து புழுபூச்சிகளை தேடிபிடித்து உண்ணவும் அதிகபட்சம் ஓரடி உயரம் மட்டும் தாவி பறக்கவும் பயிற்றுவிக்கபட்டு அந்த செயல்களைமட்டும் செய்ய பழகி அவைகளை மட்டும் பின்பற்றி வந்தது

ஒருநாள் ஒருஅழகியபறவைஒன்று வானத்தில் வட்டுமிட்டு பறப்பதை பார்த்த இந்த பறவையின் குஞ்சானது வயதான பெட்டைக்கோழியை பார்த்து அம்மாஅதோ உயரத்தில் பறக்கின்றதே அதுஎன்னஅம்மா அதுஎவ்வாறு வானத்தில் பறக்கின்றது என வினவியபோது அது ஒரு பறவை வனத்தில் பறப்பதற்காகவே பிறந்திருக்கின்றது நாமெல்லோரும் கோழிகள் நாம் தரையில் மட்டுமே நடக்கமுடியும் அந்த பறவை போன்று நம்மால் பறக்க முடியாது பறந்து சென்று இரைதேடிட முடியாது அதனால் நாம்நடந்து சென்று குப்பைமேடுகளில் சிந்தி சிதறிகிடக்கும் தானியங்களையும் புழுபூச்சிகளையும் இரையாக உட்கொள்ளமுடியும் என அறிவரைகூறியது

அதைஅப்படியேநம்பி தானும் ஒரு கோழிமட்டுமே தன்னால் அவ்வாறு வானத்தில் பறக்கமுடியாது மேலும் பலஇடங்களுக்கு பறந்து சென்று இரைதேடமுடியாது என எண்ணி வாழ்ந்து மடிந்தது.

அதுபோன்றே நம்மில் பலர் நம்முன் பரந்து கிடக்கும்வாய்ப்புகளையும், வசதிகளையும் மிகச்சரியாகபயன்படுத்தி முன்னேறசெய்யாமல் சோம்பேறியாக நமக்கு கிடைத்தது அவ்வளவுதான் என முடங்கிபோய்விடுகினறோம்.

ஞாயிறு, 16 ஜூன், 2013

நாம் கூறும் சொல் ஒவ்வொன்றும் மற்றவர்களுக்கு பாதிப்பெதுவும் ஏற்படாமல்இருக்குமாறு பார்த்து கொள்க


ஒரு வயதான மனிதன் தன்னுடைய வீட்டிற்கு அருகில் வசிக்கும் இளைஞன்தான் அவ்வூரில் நடைபெறும் அனைத்து திருட்டிற்கும் காரணம் என்று பார்ப்பவர்கள் அனைவரிடமும் பொய்யான வதந்தி செய்தியை பரப்பிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்

அதனால் உண்மையாகவே அந்த இளைஞன் திருடியிருப்பானோ என்றும் அவ்வூரில் நடைபெறும் திருட்டிற்கும் அந்த இளைஞனுக்கும் என்றும் அந்த ஊரின் காவல்துறையானது சந்தேகபட்டுஅந்த இளைஞனை கைதுசெய்து சிறையில் அடைத்தது சிறிது காலம் கழித்தபின் அந்த இளைஞனுக்கும் அவ்வூரில் நடைபெறும் திருட்டிற்கும் தொடர்பே இல்லை என்றும் அவன் நிரபராதி என்றும் தீர்ப்பு கிடைக்கபெற்று அந்த இளைஞன் விடுவிக்கப்பட்டான்

பிறகுஅந்த இளைஞன் வீடுவந்து சேர்ந்ததும் பக்கத்து வீட்டு வயாதனவன் மீது இதுகுறித்து நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடுத்தான் அதற்கான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற போது அவ்வழக்கினை விசாரித்துவரும் நீதிபதியானவர் அந்த வயதான பெரியவரிடம் "ஏன் ? இவ்வாறு பொய்யான வதந்தியை பரப்பிவிட்டீர்கள்" என வினவியபோது "சும்மாபொழுது போக்காக இருக்குமாறுதான் நான் கூறினேனே தவிர உண்மையில் அவ்விளைஞன் பாதிக்குமாறு நான் ஏதும் செய்யவில்லை" என சாதித்தார் உடன் நீதிபதியானவர் அன்றைய தினமனி செய்திதாளை அந்த வயதான பெரியவரிடம் கொடுத்து "இந்த செய்திதாளை உங்களுடைய வீடுபோய்சேரும்வரை சிறுசிறு துண்டாக கிழித்தெரிந்துகொண்டே செல்க நாளை காலையில் நீதிமன்றத்திற்கு வந்து சேருக" என கூறிஅனுப்பினார்

அன்று அந்த வயதான பெரியவர் தன்னுடைய வீட்டிற்கு போய்ச்சேரும் வரை நீதிபதி கூறியவாறு செய்திதாளை சிறுசிறு துண்டுகளாக கிழித்து எறிந்துகொண்டே சென்று மறுநாள் நீதிமன்றத்திற்கு வந்து சேர்ந்தார்

மறுநாள் நீதிபதிவந்ததும் அந்த வயதான மனிதனை பார்த்து "நேற்று உங்களிடம் கொடுத்த செய்திதாளை முழுமையாக சேகரித்து ஒட்டிஎடுத்துவருக " எனக்கூறியவுடன் வயதானவர் "அதுஎப்படி முடியும் நான்தான் அந்த செய்திதாள் முழமையும் சிறுசிறு துண்டுகளாக கிழித்து தரையில் எறிந்துவிட்டேனே அவைகள் எல்லாம் காற்றில் பறந்து போய்விட்டிருக்குமே" என பதில் கூறியபோது "அவ்வாறே நீங்கள் அந்த இளைஞனை பற்றிய அவதூறாக செய்தியை மற்றவர்களிடம் கூறியவுடன் அவை செய்திதாள்துண்டுகள் காற்றில் பரந்து சென்றவாறு இந்த தவறான அக்கப்போரான செய்தியும் உடன் பரவி அனைவரும் அவ்விளைஞனை பற்றிய தவறான நோக்கத்தில் பார்த்திடுமாறு அந்த இளைஞனுக்கு மனஉளைச்சலும் மனவருத்தமும் ஏற்பட்டுவிட்டது

அதனால் இனி அவ்வாறு நடந்துகொள்ளாதீர் மீறினால் உங்களுக்கு தக்க அபராதம் இந்த நீதிமன்றம் விதிக்கும்" என எச்சரித்து அனுப்பினார் அதை போன்றே நாம் கூறும் சொல் ஒவ்வொன்றும் மற்றவர்களுக்கு பாதிப்பெதுவும் ஏற்படாமல்இருக்குமாறு பார்த்து கொள்க

புதன், 12 ஜூன், 2013

தகவல் தொடர்பு என்பது மிகமுக்கியமான கருவியாகும்


பெரும்பாலான நிறுவனங்களில் பணிபுரியும் பேரளவு தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் தற்போது என்ன நிகழ்வு நடந்துகொண்டிருக்கின்றது என்றே தெரியாமலும் அறிந்து கொள்ளாமலும் இருந்துவருவார்கள் ஏனெனில் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் நடைபறும் நிகழ்வுகளை பற்றிய போதுமான தகவல்கள் அவர்களுக்கு போய்ச்சேருவதில்லை

பொதுவாக எந்தவொரு நிருவாகிக்கும் தகவல் தொடர்பு என்பது மிகமுக்கியமான கருவியாகும் அதனால் மிகத்திறனுடன் அந்த தவல் தொடர்பை கையாளதெரிந்த ஒரு நிருவாகி பணிபுரியும் ஒருநிறுவனத்தில் அந்நிருவாகியில்லை யெனில் குறிப்பிட்ட நிறுவனத்தின் செயல் எதுவுமே நடைபெறாது என அந்த நிருவாகியினுடைய பணி அந்நிறுவனத்திற்கு அதிமுக்கியத்துவம் பெறுகின்றது

வேறுசில நிருவாகிகள் அதிக கூச்ச சுபாவமுடையவர்கள் அதனால் தம்முடைய பணியாளர்களுடன் தகவல் தொடர்பு கொள்வதையே தவிர்த்துவிடுவார்கள் அதாவது அந்த செயலால் தமக்கு எதிர்மறையான நிகழ்வு ஏற்பட்டவிடுமோ என்ற பயத்தில் பணியாளர்களுடன் தகவல்தொடர்பு கொள்ளவே பயப்படுவார்கள்

மற்றும் சிலர் தங்களுக்கு கீழ் பணியாளர்கள் பணிபுரிவதையே மறந்துவிடுவார்கள் அதனால் தகவல் தொடர்பு என்பதேஅவருடைய நிறுவனத்தில் இல்லாத நிலையேற்படும்

பொதுவாக ஒருநிறுவனத்தில் நடைபெறும் எந்தவொரு நிகழ்வும் உடனுக்குடன் அந்த நிகழ்வை பற்றிய தகவல் அந்நிறுவனம் முழுவதும் பரவிடவேண்டும் அப்போதுதான் அந்நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரும் தம்முடைய கடமைஎன்ன தாம் எதில் தவறவிட்டோம், மிகச்சரியான முடிவு என்ன? அதனால் நிறுவனத்திற்கு என்ன வகையான பாதிப்பு ஏற்படும்? மிக்குறைந்த வாய்ப்புகளில், மிகவிரைவாக, மேலதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு செயலையும் எவ்வாறு செய்திடமுடியும் என்பன போன்ற அனைத்து நிகழ்தகவுகளையும் அலசிஆறாய்ந்து சரியாக செயல்படஏதுவாகும்

ஒருசில பணியாளர்கள் நம்முடைய நிறுவனத்தின் வளங்களாகும். அதனால் அந்நிறுவனம் அவர்களை சார்ந்திருக்கவேண்டிய நிலைஏற்படும் வேறுசிலர் நாம் அவர்களை நமக்கு ஏற்றவாறு உருவாக்க வேண்டியிருக்கும் மற்றும் சிலருக்கு அவ்வப்போது நம்முடைய வழிகாட்டுதல்களும் கண்காணிப்பும் அவசியம் இருந்துகொண்டே இருக்கவேண்டும்

அதுபோன்றே ஒருசில பணியாளர்கள் அதிக பணிஅனுபவம் இருப்பதால் அவர்களை சிறிதளவிற்கு மட்டும் மேற்பார்வை செய்தால் போதும் மற்றும் சிலருக்கு மேலாளரின் மேற்பார்வை தொடர்ந்து இருந்தால் மட்டுமே அவர்களினுடைய பணிசரியாக நடைபெறும் வேறுசிலர் அவர்கள் கூறும் செய்தியை ஆலோசனைகளை நிருவாகி காதுகொடுத்து கேட்க வேண்டும் என விரும்புவார்கள் அவ்வாறானவர்கள் தம்மை சந்திக்க வரும்போது தன்னுடைய அனைத்து செயல்களையும் தற்காலிகமாக நிறுத்தம் செய்து அவ்வாறான பணியாளர்களின் செய்தியையும் ஆலோசனைகளையும் ஒருமுகபடுத்தி கேட்டிடும்போது நிருவாகி நம்முடைய கருத்துகளை கவணிக்கின்றார் என மகிழ்வுற்று தம்முடைய பணியை திறம்பட செய்யமுயல்வார்கள்

இவ்வாறான மேலே காணும் அனைத்தையும் மனதில் கொண்டு சிறந்த தகவல்தொடர்பை பணியாளர்களுடன் ஏற்படுத்திகொள்ளும் நிருவாகியின் செயலால் அந்நிறுவனத்தை நல்ல வெற்றிபாதைக்கு அழைத்து செல்லமுடியும் என்பது திண்ணம்

ஞாயிறு, 9 ஜூன், 2013

தொழிலாளர்களுக்கிடையான நம்பிக்கையை வளர்த்தல் அல்லது மேம்படுத்துதலுக்கான அடிப்படைசெயல்கள்


ஏதோஒருவர் மற்றொருவரிடமிருந்து ஏதனும் முழுமையான நிலையானதொரு தீர்வு தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்திருப்பதே நம்பிக்கையின் அடிப்படையாகும் அவ்வாறான எதிர்பார்ப்பு நிறைவடையாதபோது அதாவது அந்த நம்பிக்கை பொய்த்திடும்போது அவர்களுக்கிடையுள்ள உறவில் விரிசல் ஏற்படுகின்றது இந்நிலையில் இந்த நம்பிக்கையானது அவ்வருவர்களுக்கிடைய உறவை வலுபடுத்திடும் நிலையாக தொடர்ந்து பராமரித்திடும் ஒரு அத்திவாசியமானதொரு அடிப்படை கருவியாக அமைகின்றது

இந்த உறவுகளானது கணவன் மனைவிக்கிடையேயான உறவு, முதலாளி தொழிளாளிக்கிடையேயான உறவு, மேலாளர் பணியாளருக்கிடையேயான உறவு ,பிள்ளைகள் பெற்றோருக்கிடையேயான உறவு ,அண்ணன் தம்பிக்கிடையேயான உறவு ,அக்காதங்கைக்கிடையேயான உறவு ,வாடிக்கையாளர் வழங்குநருக்கிடையேயான உறவு என ஏராளமான அளவில் தற்போதை நம்முடைய சமூக சூழலில் விரிகின்றது

இந்த உறவை தொடர்ந்து தக்கவைத்துகொள்ளவும் நீடித்து பராமரித்திடவும் பின்வரும் அடிப்படை வழிமுறைகளை பின்பற்றிடுக

1 நம்மை சார்ந்துள்ளவர்களுடைய அன்றாட செயல்களுக்கான நீண்டநாள் எதிர்பார்ப்புகளையும் குறுகிய எதிர்பார்ப்புகளையும் நம்மால் உறுதியாக பூர்த்திசெய்திடமுடியும் என்றபொறுப்பினை உறுதிபடுத்திடுக

2 கொஞ்சமாக பேசவும் அதிகமாக கவணிக்கவும் செய்யவேண்டும் என்ற அடிப்படையில் நமக்கு ஒரேஒரு நாக்கும் இரண்டு காதுகளும் இயற்கை வழங்கியிருக்கின்றது .அதனால் நாம் எப்போதும் நம்மை சுறறியுள்ளமற்றவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்பதை முதலில் கவணிக்கவும்,பிறகு கொஞ்சமாக பேசுக.

3எப்போதும் உண்மையாகவும் நேர்மையாகவும் பிறரிடம் நடந்துகொள்க அதாவது நம்மைபற்றிய நம்பிக்கையானது ஒரேயொருநொடியில் கண்ணாடி மாளிகை உடைவதைபோன்று தூள்தூளாகிவிடும் ஆனால்அந்த நம்பிக்கையை நம்மீது வளர்த்திட நீண்ட நாட்களாகும் என்பதை மனதில் கொள்க

4 நாம்கூறிய வாக்குறுதியைஎந்தவிலைகொடுத்தாவது காத்திடவேண்டும் அவ்வாறு வாக்குறுதியை காத்திட இயலவில்லை யெனில் உடன் நேரடியாக உண்மையாகவும் நேர்மையாகவும் அதனை தன்னால் நிறைவேற்ற முடியாததை கூறி அதற்கான மாற்றுவழியை காண முயன்றிடுக

5 எப்போதும் மாறிகொண்டே இருக்கும் மனநிலையை விட்டிடுக. அதாவது நம்முடைய சொல்லும் செயலும் ஒரேமாதிரியாக மாறாத நிலையானதாக இருந்திடுமாறு பார்த்துகொள்க

6 ஆங்கிலத்தில் Sorry ,Thanks ஆகிய இரண்டும் பொன்னெழுத்துகளாகும் ஏனெனில் நம்மையறியாமல் நாம் ஏதேனும் தவறுசெய்திடும்போது உடனடியாக சம்பந்தபட்டவரிடம் அதற்காக மன்னிப்பு கோருவதும் அவ்வாறே எந்தவொரு செயல் அல்லது உரையாடல் முடியும்போதும் எதிரில் இருப்பவருக்கு நாம் நன்றி சொல்வதும் மற்றவர்களிடம் நம்மைபற்றிய நல்ல உயர்வான எண்ணத்தை நண்ணம்பிக்கையை உருவாக்கிடும் அடிப்படை செயலாகும் .

வியாழன், 6 ஜூன், 2013

ஏழைகளை சீண்டி விளையாட வேண்டாம் அதற்கு பதிலாக அவர்களுக்க உதவிடுக


ஒரு பல்கலைகழக பேராசிரியரும் அவருடை மாணாக்கர்களும் ஒருநாள் மாலைநேரத்தில் சிறிது நேரம் காலாற அந்த ஊரின் எல்லைவரை நடந்து உலாவரலாம் என முடிவுசெய்தனர் .

அவ்வாறே ஊரின் எல்லைவரை அவர்களனைவரும் பல்வேறு செய்திகளை பற்றி விவாதித்து கொண்டு சென்றனர் அப்போது இருமுழுகாலணிகள் பாதையோரம் இருப்பதையும் அருகிலுள்ள விவசாய நிலத்தில் கூலித்தொழிலாளி பணிசெய்வதையும் கண்ணுற்றனர்

உடன் மாணவன் ஒருவன் ஐயா இந்த முழுகாலணிகளை நாம் மறைத்து வைத்து விட்டு அந்த மரத்தின் அருகில் நாமல்லோரும் மறைந்து இருந்த பார்ப்போம் என்ன நடைபெறுகின்றது என அறிந்து கொள்வோம் என கூறினான் உடன் பேராசிரியர் நண்பரே நம்மைவிட கீழ்நிலையிலுள்ள ஒருஏழை கூலித்தொழிலாளியை அவ்வாறு சீண்டி ஏமாற்றவேண்டாம் மற்றவர்களை துன்புறுத்தி அதிலிருந்து மகிழ்ச்சி பெறவேண்டாம் அதற்கு பதிலாக காலணி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நூறு ரூபாய் என இரு நூறுரூபாய் தாட்களை உள்ளே வைத்துவிட்டு நாமல்லோரும் மறைந்து இருந்த பார்ப்போம் என்ன நடைபெறுகின்றது என அறிந்து கொள்வோம் என கூறினார்

அதனை தெடர்ந்து அம்மாணவனும் அவ்வாறே ஒவ்வொரு காலணியிலும் ஒரு நூறு ரூபாய் வீதம் இரு தாட்களை வைத்த பின் அனைவரும் அருகிலிருந்த மரத்திற்கு பின்புறம் சென்று என்ன நடைபெறபோகின்றது என மறைந்திருந்து பார்த்தனர்

சிறிது நேரம் கழித்து அவ்விவசாய கூலித்தொழிலாளி பணிமுடிவுற்றதால் குளித்துவிட்டு வந்து தன்னுடைய கால்களில் அந்த முழுகாலணிகளை அணிய முயற்சித்தபோது இருகால்களிலும் ஏதோவருடுவதை உணர்ந்து என்னவென்று காலனிகளிலிருந்து தன்னுடையகால்களை வெளியில் எடுத்துவிட்டு பார்த்தபோது ஒவேவொரு காலணியிலும் ஒவ்வொரு நூறு ரூபாய் வீதம் இருநூறுரூபாய் இருப்பதை கண்ணுற்று சுற்றும் முற்றும் யாராவது தென்படுகின்றார்களா அல்லது இருக்கின்றார்களா என தேடிபார்த்து போதுயாரும் அவருடைய கண்ணிற்கு தென்(புலப்)படவில்லை

அதனால் உடன் அவர் தரையில் மண்டியிட்டு வணங்கி ஆண்டவரே இன்று இரவு எங்களுடைய பிள்ளைகளுடைய உணவிற்கு என்னசெய்வது என நான் தவித்து திகைத்து இருந்த வேலையில் இந்த ரூபாய் தாட்களை எனக்கு வழங்கினாய் இதனால் இன்று இரவு சமையல் செய்து பிள்ளைகளும் நானும் வயிறாற பசியாற சாப்பிடுவதற்கான வழிகாட்டிவிட்டாய் உன்னுடைய கருணையை என்னவென்று சொல்வது என மீண்டும் தரையில் விழுந்து வணங்கி அந்த ரூபாய்தாட்களை தன்னுடைய பையில் வைத்துகொண்டு வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்

இதனை கண்ணுற்ற மாணவன் ஐயா உங்களுடைய வழிகாட்டுதலினால் அந்த ஏழையை சீண்டி விளையாடவிருந்த என்னை தடுத்து அவருக்கு உதவுமாறு செய்து நல்வழி காட்டினீர்கள் ஐயா என நாத்தழுதழுக்க கூறினான்

ஞாயிறு, 2 ஜூன், 2013

சக மனிதர்களை மனிதாபமானத்தோடு நடத்திடவேண்டும்


முன்னொரு காலத்தில் அரசன் ஒருவனுக்கு வாரிசு இல்லாததால் தனக்கு பிறகு அந்த நாட்டை ஆளுவதற்கான ஒருநபரைஅரசனாக நியமிக்கவேண்டிய கட்டாய சூழ்நிலை உருவானது உடன் அவ்வரசன் தன்னுடைய நாடு முழுவதும் உள்ள இளைஞர்களில்" நமக்கு மேல் சக்தியுள்ள கடவுளை நேசிக்கவேண்டும் ","சக மனிதர்களை மனிதாபமானத்தோடு நடத்திடவேண்டும்!" ஆகிய நிபந்தனைகளுடன் கூடிய நேர்முகத்தேர்வை விருப்பபடும் இளைஞர்கள் கலந்து கொண்டு வெற்றிபெறுபவர்கள் அந்த அரசனுக்கு பின் அரசனாக பதவிஏற்கமுடியும் என அறிவிப்பு செய்தான் .

உடன் ஏராளமான இளைஞர்கள் இந்த தேர்வில் கலந்துகொள்ள தலைநகருக்கு வந்து சேர்ந்தார்கள் மிகவும் வறுமையில் வாடும் ஏழைஇளைஞன் ஒருவனும் அதே நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள விரும்பினான் ஆனால் அவனுக்கு அணிந்து கொள்ள போதுமான நல்ல உடையோ தலைநகருக்கு செல்வதற்கு தேவையான பொருளாதார வசதியோ இல்லை இருப்பினும்அக்கம் பக்கத்தில் கெஞ்சி கூத்தாடி கடன்பெற்று நல்ல தரமான உடைகளை தயார்செய்து அனிந்து கொண்டு நெடுஞ்சாலை வழியாக சென்றுகொண்டிருந்தான்

அந்நிலையில் பிச்சைக்காரன் ஒருவன் "ஐயா! தரும பிரபு உண்ணுவதற்கு போதுமான உணவில்லை ஐயா! உடுத்துவதற்கும் தரமான உடையில்லை ஐயா!" என யாசித்தபோது உடன் தன்னுடைய கையலிருந்த பணம் முழுவதையும் அந்த பிச்சைகாரனிடம் கொடுத்தது மட்டுமில்லாமல் தான் அணிந்திரிந்திருந்த புதிய உடையையும் கழற்றி அந்த பிச்சைக்காரணிடம் அணிந்து கொள்ளுமாறு வழங்கிவிட்டு வழக்கமான தன்னுடைய பழைய ஆடையை அணிந்து கொண்டு ஆங்காங்கு உள்ள அன்ன சத்திரத்தில் பசியாறி கொள்ளலாம் என்று மனதை தேற்றிகொண்டு தலைநகரை நோக்கி நடந்து செல்ல ஆரம்பித்தான்

ஒருவழியாக தலைநகரை வந்த சேர்ந்த பின் நேர்முக தேர்விற்கு வந்துள்ள இளைஞர்களின் கூட்டத்தில் இவனும் வரிசையில் நின்று இவனுடைய முறைவரும்போது அரச சபைக்குள் நுழைந்தான்

முதலில் அரசனுக்கு தலைகுனிந்து வணக்கம் செய்தபின் நிமிர்ந்து பார்த்தபோது ஆச்சரியமாகிவிட்டது "சாலை யோரத்தில் என்னிடம் என்னுடைய புதிய உடையையும் பொருளையும் பெற்றுக்கொண்ட பிச்சைகாரனா, நீங்கள்! "என வினவியபோது "ஆம் !அதே பிச்சைகாரன்தான் நான் என்னுடைய நிபந்தனைகளை யார் மிகச்சரியாக பூர்த்தி செய்வார்கள் என அறிந்துகொள்ள நான் அரசனுடைய உடையில் வந்தால் நான் கேட்பதை மக்கள் அனைவரும் கொடுக்கு தயாராக இருப்பார்கள் ஆனால் உண்மையாக மனமாற யார் சகமனிதர்களுக்கு உதவிடுவார்கள் என கண்டுபிடிக்கமுடியாது"

" அதனால் பிச்சைகாரனாக மாறுவேடமிட்டு நாட்டிற்குள் உலாவந்தேன் "அந்த அரசன் பதில் கூறியதோடு மட்டுமல்லாது "நீஒருவன் மட்டுமே என்னுடைய நிபந்தனையை பூர்த்தி செய்துள்ளாய் அதனால் நீதான் எனக்குபிறகு இந்த நாட்டிற்கு அரசன் "என அந்த அரச சபையில் அறிவிப்பு செய்தான்.

வெள்ளி, 31 மே, 2013

எதிர்மறை எண்ணங்களை அவ்வப்போது நீக்கி நல்ல எண்ணங்களை கொண்டு நம்முடைய வாழ்வை வளப்படுத்த முயற்சி செய்க


புறநகரில் வசிக்கும் ஒருவர் தன்னுடைய வீட்டை சுற்றி காலியிடம் ஏராளமாக இருந்ததால் அதனை வீணாக புறம்போக்கு நிலம்போன்று விட்டுவிடாமல் காய்கறி செடிகளையும் பூஞ்செடிகளையும் நட்டு நல்ல அருமையான தோட்டமாக பராமரித்து வந்தார்

அந்நிலையில் அவருடைய தோட்டத்தில் நாம் வெளிநாட்டில் இருந்து அரசுபள்ளிகளில் ஏழைக்குழந்தைகளின் மதிய உணவிற்காக இறக்குமதிசெய்த மக்காச்சோளத்தோடு கூடவே இலவசஇணைப்பாக தாணாகவே வந்து சேர்ந்த பர்தீனியம் எனும் விசமுள்ள களைச்செடி முளைத்திருப்பதை பார்த்து அதனால் நம்முடைய தோட்டத்திற்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது என அலட்சியமாக விட்டுவிட்டார்

ஏதோவொரு அவசரவேலையாக குடும்பத்துடன் அருகிலிருந்த உறவினரின் ஊருக்கு சென்று ஓரிருவாரம் கழித்து வீடு திரும்பி வந்தார்

நம்முடைய வீட்டுத் தோட்டம் எவ்வாறு உள்ளது என சுற்றிபார்த்தபோது அவருடைய தோட்டத்தில் இருந்த காய்கறி பூஞ்செடிகள் அனைத்தையும் அந்த பர்தீனியம் எனும் களைச்செடி பரவி அழித்து விட்டதை கண்டு அதிர்ச்சியுற்றார்

அடடா ஒற்றையாக சிறியதாக இருந்தபோது அந்த பர்தீனிய களைச்செடியை பிடுங்கி விட்டிருந்தால் அரும்பாடுபட்டு உருவாக்கிய நம்முடைய தோட்டம் இவ்வாறு அழிந்திருக்காதே மேலும் நம்முடைய தோட்டத்தை திரும்பவும் அனைத்து செடிகளுக்குமான புதியதாக நாற்று வாங்கி நட்டு உருவாக்கவேண்டுமே என வருத்தபட்டு அந்த பர்தீனிய களைச்செடியை அழித்து ஒழிப்பதற்கு மிகசிரமபட்டு பிடுங்கி கொண்டிருந்தார்

அதேபோன்றே நாமும் நம்முடைய வாழ்வில் எதிர்ப்படும் தீங்கான எதிர்மறை எண்ணங்களை அவ்வப்போது நீக்கி நல்ல எண்ணங்களை கொண்டு நம்முடைய வாழ்வை வளப்படுத்த முயற்சிக்காமல் பெரியதாக முற்றவிட்டு நம்முடைய மனத்தையும் வாழ்வையும் வீணாக்கி கொண்டிருக்கின்றோம்

திங்கள், 27 மே, 2013

தேவையற்ற செய்திகளை நம்முடைய நினைவில் நீண்ட நாட்களுக்கு வைத்துகொள்ளவேண்டாம்


ஒரு அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர் தன்னுடைய வகுப்பு மாணவர்களிடம் மறுநாள் அனைத்து மாணவர்களும் அவர்கள் வெறுக்கும் நபர்கள் ஒவ்வொருவருக்கும் ஒருஉருளை கிழங்கு வீதம் எத்தனை நபர்களை வெறுக்கின்றார்களோ அத்தனை உருளை கிழங்குகளை ஒரு பிளாஷ்டிக் பையிலிட்டு எடுத்துவரும் படி கூறினார் .

மறுநாள் அவ்வாறே அனைத்து மாணவர்களும் ஒன்று இரண்டு என அவரவர்கள் வெறுக்கும் நபர்களுக்கு ஏற்ற எண்ணிக்கையில் உருளைகிழங்குகளை தத்தமது பையிகளிலிட்டு பள்ளிக்கு எடுத்து வந்தனர் .

உடன் அவ்வாசிரியர்”இந்த பையை சாப்பிடும் போதும் தூங்கும் போதும் எந்தவேலை செய்தாலும் எங்கு சென்றாலும் எப்போதும் உங்கள் கையிலேயே இருக்கவேண்டும் “ எனக்கூறினார்

ஓரிரு நாட்கள் அவ்வாறே அம்மாணவர்களும் நடந்துகொண்டனர் ஆனால் மூன்றாவது நாட்களுக்கு மேல் அனைவரும் அவ்வாசிரியரிடம் “ஐயா! நீங்கள் கூறியவாறு உருளைகிழங்குகள் உள்ள இந்த பையை எப்போதும் எங்களிடம் வைத்திருந்தால் அழுகிய நாற்றம் வீசஆரம்பித்துவிட்டது. இதற்குமேல் இந்த பையை எங்களால் வைத்து கொண்டு வேறு பணிகளை செய்யமுடியாது” என புகாரிட ஆரம்பித்தனர்.

“நல்லது. மாணவர்களே! சாதாரண உருளைகிழங்குகளையே உங்களால் இரண்டு அல்லது மூன்ற நாட்களுக்குமேல் வைத்திருக்கமுடியவில்லை அழுகிய நாற்றம் வீசஆரம்பித்துவிட்டது என கூறுகின்றீர்கள். ஆனால் நீங்கள் வெறுக்கும் நபரை மட்டும் உங்களின் நினைவில் நீண்ட நாட்களுக்கு வைத்துள்ளீர்களே! அது ஏன் ? அவ்வாறு அந்நபர்களை பற்றிய செய்தியை மிக நீண்ட நாட்களுக்கு உங்களுடைய நினைவில் வைத்திருந்தால் உங்களால் உங்களுடைய வேறுமுன்னேற்ற செயல்கள் எதையும் செய்யமுடியாது அதனால் இன்றோடு அவைகளை நினைவில் இருந்து அழித்துவிட்டு உங்களின் முன்னேற்றம் வளர்ச்சி ஆகியவைபற்றி மட்டும் சிந்தித்து செயல்பட உங்கள் நினைவை பயன்படுத்துக” என அறிவுரைகூறினார் .

சனி, 25 மே, 2013

அவரவர் பணியை விருப்பு வெறுப்பின்றி முழுமையாக செய்திடுக


நல்ல திறமையான கொத்தானார் ஒருவர் தான் பணிபுரியும் முதலாளியிடும் தன்னுடைய வயது முதிர்வினால் தன்னால் இனி அவரிடம் பணிசெய்ய இயலாத நிலையில் உள்ளதால் தனக்கு விருப்ப ஓய்வு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்

உடன் முதலாளியானர் நீங்கள் நல்ல திறமையான பணியாளராக இருக்கின்றீர் உங்களை பணியில் இருந்து ஓய்வளிக்க எனக்க மனம் இடந்தரவில்லை இருந்த போதிலும் உங்களுடைய விருப்படி நீங்கள் பணியிலிருந்து ஓய்வெடுத்து கொள்ள அனுமதிக்கின்றேன் அதற்குமுன் இந்த வீட்டைமட்டும் கடைசியாக உங்களுடைய திறமையை பயன்படுத்தி விரைவில் கட்டிமுடித்துவிட்டு பணிஓய்வெடுக்க செல்லுங்கள் என கேட்டு கொண்டதற்கினங்க வேண்டா வெறுப்பாக அரைகுறையாகவும் ஏனோதானோவென்றும் தரம் குறைந்த பொருட்களை கொண்டு அந்த வீட்டை கட்டிமுடித்தார்

ஒருவழியாக அந்த வீட்டின் அனைத்து பணிகளும் முடிந்த அன்று தன்னுடைய முதலாளியிடம் விடைபெறசென்றபோது முதலாளியானவர் அந்த கொத்தனார் கடைசியாக கட்டிமுடித்த வீட்டின் சாவியை அந்த கொத்தானாரிடமே கொடுத்து அதனுடன் கொத்தனாரின் பெயருக்கு மாற்றம் செய்த அந்த வீட்டிற்கான உரிமை பத்திரத்தையும் வழங்கி இதுநாள் வரையில் செய்த அவருடைய பணிக்கான பரிசாக இந்த வீட்டினை வைத்து கொள்ளுமாறு வேண்டிக்கொண்டார்

அந்த கொத்தனாருக்கு நெருப்பை விழுங்கிய கோழிபோன்று மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தத்தளிக்கும் நிலையாகிவிட்டது

அவரால் கடைசியாக கட்டபட்டஇந்தவீடானது தனக்கு பரிசாக கிடைக்கபோகின்றது என தெரிந்திருந்தால் மிகசிறப்பாக தரமான பொருளை கொண்டு கட்டியிருக்கலாமே என வருத்தபடமட்டுமே அந்நிலையில் அவரால் முடிந்தது .

புதன், 22 மே, 2013

மிககுறுகிய நம்முடைய இந்த வாழ்வை மகிழ்வோடு உடல்நலனையும் மனநலனையும் பெற்று ஆரோக்கியமாக வாழ்ந்திடுவோம்


பேராசிரியர் ஒருவர் பொதுமக்களுக்கான ஆலோசனை கூட்டம் ஒன்றில் அவர்களுடைய வாழ்வில் ஏற்படும் இடர்களை தவிர்த்து நிம்மதியாக எவ்வாறு தத்தமது வாழ்வை வெற்றிகொள்வது என அறிவுரை வழங்கிகொண்டிருந்தபோது அவர் தம்முடைய கைகளால் நீர்நிறைந்த சிறுடம்ளர் ஒன்றை தூக்கி வைத்து கொண்டு “இது எவ்வளவு எடைஇருக்கும்” என தன்னுடைய அறிவுரையை கேட்பதற்காக குழுமியருந்தவர்களிடம் கேட்டார்

உடன் “கால்கிலோ இருக்கும்” என ஒருவரும் “200 கிராம் இருக்கும் “ என மற்றொருவரும் என்றவாறு அனைவரும் ஆளாளுக்கு மனதில் யூகித்த எடையை கூறினர். அந்த பேராசியர் .”அமைதி! அமைதி! இங்கு இந்த டம்ளரில் இருக்கும் உண்மையான தண்ணீரின் எடை ஒரு பொருட்டன்று. இதனை நாம் எவ்வளவு நேரம் நம்முடைய கைகளால் தாங்கி கொண்டுள்ளோம் என்பதற்கேற்ப நம்முடைய கைகள் அதனுடைய எடை எவ்வளவு என உணரச்செய்கின்றது. உதாரணமாக ஒருசில நிமிடங்கள் எனில் டம்ளரின் தண்ணீருடன் கூடிய எடை ஒரு பொருட்டாக தெரியாது. அதையே ஒருமணிநேரம் கைகளில் வைத்திருந்தால் கைகளில் வலி ஏற்பட்டு அதிக எடையை தாங்குவதாக உணருவோம். அதையே நாள்முழுவதும் எனில் உடனடியாக நம்மை மருத்துவமனைக்கு ஏழைத்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.. அதாவது நீர்நிறைந்த சிறுடம்ளரை கைகளால் வைத்திருப்பதற்கே இவ்வாறான நிலை எனில்? நாம் தினமும் அலுவலகத்தில் அல்லது வாழ்வில் எதிர் கொள்ளும் எந்தவொரு பிரச்சினையையும் அவ்வப்போது மனதில் இருந்து அப்புறபடுத்திவிடவேண்டும் அதாவது அன்றன்று நாம் வீடு திரும்பும்போது அலுவலகத்தோடு அவைகளை விட்டிட்டு வீட்டின் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக இருந்தபின் மறுநாள் அலுவலகம் சென்று அதனை எதிர்கொணடால் அதற்கான தீர்வை மிகசுலபமாக எளிதாக காணமுடியும் அதனைவிடுத்து எப்போதும் அவைகளை நம்மோடு கொண்டு சென்றால் நம்மை அவை படுக்கையில் நோயாளியாக வீழ்த்திவிடும்” என அறிவுரை கூறினார் .

ஆம் நாமும் இந்த அறிவுரையை பின்பற்றி மிககுறுகிய நம்முடைய இந்த வாழ்வை மகிழ்வோடு உடல்நலனையும் மனநலனையும் பெற்று ஆரோக்கியமாக வாழ்ந்திடுவோம்.

திங்கள், 13 மே, 2013

தேவையற்ற செய்திகளையும் நிகழ்வுகளையும் நம்முடைய மனதில் குப்பை போன்று தேக்கிவைத்திட வேண்டாம்


ஒரு முதிய துறவியும்(சாமியாரும்) அவருடைய உதவியாளரான இளைய துறவியும்(சாமியாரும்) அங்காங்கு கோவில்,மடம் என நாடுநகரங்கள் அனைத்தும் சுற்றி திரிந்து தங்களின் காலத்தை கழித்து வந்தனர்

இந்நிலையில் அவ்விருவரும் ஒரு ஆற்றை கடக்கவேண்டிய நிலையில் ஒருஇளம்பெண்ணும் அதே ஆற்றை கடப்பதற்காக எவ்வாறு கடந்து செல்வது என தயங்கி கொண்டிருந்ததை கவணித்த முதியதுறவியார் தான் அந்த இளம்பெண்ணிற்கு உதவுவதாக கூறி அப்படியே இருகைகளாலும் ஏந்திகொண்டு அந்த கரைக்கு ஆற்றில் கழுத்தளவு தண்ணீரில் கடந்து சென்றார்

அவருடன் கூடவே வந்த அவருடைய உதவியாளரான இளைய துறவிக்கு இந்த நிகழ்வை கண்டு மிக அதிக அதிர்ச்சி ஆகிவிட்டது ‘துறவி என்றால் முற்றும் துறந்தவராயிற்றே பெரியவர் எப்படி அந்த இளம்பெண்ணைதன்னுடைய கைகளால் தொடலாம் தொட்டதுமட்டுமல்லாமல் இருகைகளாலும் தூக்கிகொண்டுவேறு செல்கின்றாறே’ என மனதிற்குள் பொருமி கொண்டே சென்றார்

அடுத்த கரை சென்றவுடன் முதியதுறவியானவர் அந்த இளம்பெண்ணை தரையில் இறக்கி விட்டு “பத்திரமாக வீடு போய் சேரு தாயே!” என அறிவுரைகூறிவிட்டு அவர் அடுத்தஊருக்கு செல்லும் பாதையில் தம்முடைய பயனத்தை தொடர்ந்தார். இளையதுறவியும் மனதிற்குள் பொருமிக்கொண்டே அவரை பின்பற்றி சென்றார்

அன்று சாயுங்காலம் அருகிலிருந்த ஊருக்க அவ்விரு துறவிகளும் சென்று சேர்ந்தனர் அவ்வூரில் உள்ள தருமசத்திரத்தில் இரவு உணவை இருவரும் அருந்திய பின் ஓய்வுகொள்ள முனைந்திடும்பேது இளந்துறவி தன்னுடைய மனதில் குடைந்து கொண்டிருந்த கேள்வியை வாயை திறந்து கேட்டுவிட்டார்” ஐயா! நீங்களோ முற்றும் துறந்த துறவியார் ஆவீர்! அதனால் எந்த ஒரு பெண்ணையும் உங்கள் கைகளால் தொடக்கூடாது. அப்படியான நிலையில் இன்று ஆற்றை கடக்கும்போது எவ்வாறு ஒரு இளம்பெண்ணை இருகைகளால் ஏந்தி தூக்கி கொண்டு வரலாம்? அது உங்களுடையை துறவிற்கு பங்கம் இல்லையா? “என வினவினார்

“தம்பி! நான் அந்த இளம் பெண்ணை ஆற்றங்கரையிலேயே இறக்கிவிட்டுவிட்டேனே! ஆனால், நீ இன்னும் உன்னுடைய மனதில் இருந்து இறக்கிவிடவில்லையா?” என பதிலுக்கு வினவிய போதுதான் அந்த இளந்துறவிக்கு தான் இன்னும் அந்த முதியதுறவிபோன்று மனபக்குவம் அடையவில்லையென தெரிந்துகொண்டு அந்த முதிய துறவியிடம் தன்னை மன்னித்துவிடும்படி கோரினார்

நாம் பல்வேறு தேவையற்ற செய்திகளையும் நிகழ்வுகளையும் நம்முடைய மனதில் குப்பை போன்று தேக்கிவைத்து ஆக்க சிந்தனை எதுவுமின்றி நம்முடைய பொழுதினை வீணடிப்பது மட்டுமல்லாமல் மற்றவர்களின் மனதையும் புண்படுத்திவிடுகின்றோம் இதனை தவிர்த்திடுக

வெள்ளி, 10 மே, 2013

அதிபயங்கரமான தலைமையாளர்கள்


நம்முடை ய பணியில் நாம் எவ்வாறு பணிபுரிந்தோம் என்பது பெரிய செய்தியன்று நம் சகபணியாளருடன் நம்முடைய பணியானது எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுத்தபட்டது என்பதும் நம்முடைய பணியின் தலைவர்களான மேற்பார்வையாளர் அல்லது மேலாளர் நமக்கு எவ்வாறு வழிகாட்டி நம்முடைய பணியின் நிலையை நல்லதொரு இனிய அனுபவமாக எவ்வாறு கொண்டு சென்றார்கள் என்பதே மிகமுக்கியமான செய்தியாகும் ஆயினும் நம்முடைய பணியை மேற்பார்வையிடும் தலைவர்களும் நம்மைபோன்ற மனிதர்களே அவர்களுக்கும் மற்ற மனிதர்கள் போன்ற அனைத்து குணநலன்களும் விருப்பு வெறுப்புகளும் குறைபாடுகளும் உண்டு என்பதை மனதில் கொள்க இருந்தாலும் அவர்கள் நம்மைவிட சிறந்தவர்களாக திறன்வாய்ந்தவர்களாக வழிகாட்டிகளாக இருக்கவேண்டும் அதனால் அந்த தலைமையாளர்களில் எத்தனை வகைஉண்டுஎன இப்போது காண்போம்

1.பாதுகாப்பற்ற (நிலையற்ற) தலைமையாளர் மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என பயந்து பயந்து தற்போது நடப்பில் இருப்பதை மாற்றாமல் அப்படியே பராமரித்து கொண்டு செயல்படும் தலைமையாளர்கள் இந்தவகையை சேர்ந்தவர்கள்

2 சித்தபிரமையுடைய தலைமையாளர் இந்த வகை தலைமையாளர் இவருடைய பணித்திறனே கேள்விக்குறியாக இருந்திடும்போது தன்னுடைய தவற்றை மறைப்பதற்காக தன்கீழ்பணிபுரியும் ஊழியர்களை அல்லது பணியாளர்களை மேலதிகாரிகளிடம் போட்டுகொடுத்து தன்னை மட்டும் பாதுகாத்து கொள்வார்

3. சுயநலதலைமையாளர் இந்த வகை தலைமையாளர் தான் பணிபுரியம் இடத்தி எந்தவொரு அநீதி நடந்தாலும் கண்டு கொள்ளமாட்டார் தம்கீழ் பணிபுரிபவர்களை அவர்களின் தவறாக செய்திடும் சிறிய பணிகளைகூட கண்டித்து பணியை சரியாக முடிக்கசெய்ய மாட்டார் ஆனால் தன்னுடைய சொந்தவாழ்வின் சுகதுக்கங்களை மட்டும் மூட்டைகட்டிகொண்டு வந்து அலுவலகத்தில் மற்றவர்களிடம் அதனை கூறிதன்மீது இறக்கம் கொள்ளுமாறு நடந்துகொள்வார்

4 பொறுப்பை மற்றவர்களுக்கு மாற்றிவிடும் தலைமையாளர் நல்ல மனநிலையில் இவர் இருக்கும்போது ஊழியர்களுக்கு நல்ல மரியாதை கொடுத்து பணிவாங்குவார் அந்த பணியை தானே செய்யமுயற்சிப்பதாகவும் நன்றாக நடிப்பார் ஆனால் அனைத்து பணிகளையும் ஏன் அந்த தலைமையாளர் முடிக்கவேண்டிய பணிகளையும் தன்கீழ்பணிபுரியம் பணியாளர்களை நைசாக பேசி அவர்களை கொண்டு முடித்து கொள்வார் அனைத்த பொறுப்புகளை ஊழியர்களிடம் பகிர்ந்து அளிப்பதிலேயே குறியாக இருப்பார் தான்மட்டும் எந்த பொறுப்பையும் ஏற்றுகொள்ளமாட்டார்

4 நம்மைவிட நன்றாக செயல்படக்கூடிய தலைமையாளர்கள் ஒரு சில தலைமையாளர்கள் மனிதர்களை நிருவகிப்பதில் திறமைசாலியாகஇருப்பார்கள் ஆனால் பணியாளர்களை வழிநடத்திசெல்வதிலும் , தலைமைபண்பிலும் , செயலை வெற்றி நோக்கி கொண்டு செல்வதிலும் திறமையற்றவர்களாக இருப்பார்கள். அவர்களின் தலைமை பண்பை பற்றி நாம் தவறாக எண்ணத்தேவையில்லை ஆனால் அவர்கள் எப்படியும் தங்களுடைய இலக்குகளை அடைந்துவிடுவார்கள்

புதன், 8 மே, 2013

எந்த வொரு சிக்கலுக்கும் மறுபுறம் என்ற ஒன்று உள்ளது


தந்தையும் மகனும் ஒருவீட்டில் இருந்தனர் தந்தை மிகதீவிரமாக ஏதோவொரு முக்கியமான பணியை செய்துவரும்போது அவருடைய மகன் அவருடைய பணியின் இடையிடையே தொந்தரவு செய்து கொணடிருந்தான் அதனால் முழுமையாக அவருடைய பணியை முடிக்கமுடியாமல் அவர் மிகதிணறி கொண்டிருந்தார்

இந்த நேரத்தில் அவருடைய மேஜையிலிருந்த புத்தகத்தின் இந்திய வரைபடத்தை அம்மகன் தாறுமாறாக கீழித்துகொண்டிருந்தான் உடன் அந்த தந்தையானவர் அம்மகனை இதற்குமேல் விட்டால் நம்மால் முழுமையாக பணியை முடிக்கமுடியாது

அதனால் மகனே முதலில் நீகிழித்துவிட்ட இந்த இந்திய வரைபடத்தை மிகச்சரியாக ஒட்டிகொண்டு வா அதன்பின் உனக்கு அதற்காக ஒரு பரிசு தருகின்றேன் என அவனுடைய தொந்தரவு இதனாலாவது குறையும் நாமும் நம்முடைய பணியை விரைவாக முடிக்கலாம் என திட்டமிட்டார்

ஆனால் என்ன ஆச்சரியம் எப்போதும் துறுதுறுவென இருக்கும் அவருடைய மகன் ஓரிரு நிமிடங்களில் இந்தியவரை படத்தை மிகச்சரியாக பொருத்தமாக ஒட்டி கொண்டுவந்து தன்னுடைய தந்தையிடம் எங்கே பரிசுபொருள் உடன் தருக என வந்து சேர்ந்தான் இது எவ்வாறு ஓரிரு நிமிடங்களில் சாத்தியமானது என அம்மகனிடம் வினவியபோது அந்த வரைபடத்திற்கு பின்புறம் ஒருமனிதனின் முகம் இருந்தது அதனை மிகச்சரியாக பொருத்தியவுடன் முன்புறம் இந்திய வரைபடம் சரியாக பொருந்தி அமைந்தவிட்டது அவ்வளவுதான் என பதிலிறுத்தான்

ஆம் எந்த வொரு சிக்கலுக்கும் மறுபுறம் என்ற ஒன்று உள்ளது அதனை சரியாக கண்டுபிடித்து தீர்வுசெய்தால் நடப்பு சிக்கலுக்குஎளிதில் தீர்வு கிடைத்துவிடும்.

ஞாயிறு, 5 மே, 2013

நடைபெறும் செயல் ஒன்றுதான் அதன் பலன் அவரவருடைய மனதிற்கு மட்டுமே தெரியும்


ஒரு அரசனிடம் ஆலோசனை கூறுவதற்காக மதியூக மந்திரியும் ஊரின் பாதுகாப்பிற்காக ஊர்காவல் தளபதியும் பணிபுரிந்து வந்தனர் மந்திரிக்கு ஒரு மகன் இருந்தான்

அவனிடம் தினமும் ஊர்காவல் தளபதி தன்னுடைய ஒரு கைநிறைய தங்ககாசுகளையும் மற்றொரு கைநிறைய வெள்ளிக்காசுகளையும் வைத்துகொண்டு "இவைகளில் மதிப்புமிக்க பொருள் எவையோ அவற்றுள் ஒரு காசு எடுத்துகொள்" என கோரிய போதெல்லாம் "வெள்ளிக்காசுகளே மதிப்பு மிக்கவை" என கூறி வெள்ளிக்காசுகளை வைத்துள்ள கையிலிருந்து ஒரு வெள்ளி காசைமட்டும் எடுத்து சட்டைபையில் வைத்துகொண்டு படிப்பதற்கான பள்ளிக்கு செல்வது வழக்கமாகும்

உடன் அருகிலிருப்போரெல்லாம் "ஹா ஹா பார்த்தீர்களா மதியூக மந்திரியின் பிள்ளை எவ்வளவு முட்டாள்" என ஏளனம் செய்து கைகொட்டி சிரித்தனர்

அதனால் ஒருநாள் அந்த ஊர்காவல் தளபதியும் மதியூக மந்திரியிடம் "என்ன மந்திரியாரே நீங்கள் சிறந்த அறிவாளியாக இருக்கின்றீர் நம்முடைய நாட்டு அரசனுக்கே ஆலோசனை கூறுகின்ற அளவு புத்தி சாதுரியமாக உள்ளீர் ஆனால் உங்களுடைய மகன் சாதாரணமாக வெள்ளி காசிற்கும் தங்ககாசிற்கும் மதிப்பு வித்தியாசம் தெரியாதவனாக வளர்த்து வருகின்றீரே" என நக்கலோடு கூறினார்

அன்று இரவு மந்திரி தன்னுடைய வீட்டிற்கு திரும்பியவுடன் தன்னுடைய மகனை அழைத்து "வெள்ளி காசு தங்ககாசு ஆகிய இரண்டிலும் எது மதிப்பு மிக்கது" என வினவியபோது "தங்ககாசு தான் மதிப்புமிக்கது" என உடனே பதிலிருத்தான் "சரிமகனே ஆனால் நம்முடைய ஊர்க்காவல் படைத்தளபதியிடம் மட்டும் ஏன் வெள்ளிக்காசுதான மதிப்புமிக்கது என கூறுகின்றாய்" என தொடர்ந்து வினவியபோது அம்மந்திரியின் மகன் தான் தங்கியுள்ள அறைக்கு மந்திரியை அழைத்து சென்ற அங்குள்ள பெட்டியில் சுமார் நூறு வெள்ளி காசுகள் இருப்பதை காண்பித்து "நான் தங்ககாசுதான் மதிப்பு மிக்கது என கூறியிருந்தால் ஒரே ஒரு தங்ககாசோடு அந்த விளையாட்டு முடிந்துவிட்டிருக்கும் ஆனால் நான் வெள்ளிக்காசுதான் மதிப்புமிக்கதுஎனக்கூறியதால் தினமும் இந்த விளையாட்டு நடக்கின்றது என்னிடமும் சுமார் நூறுகாசுகள் சேர்ந்துள்ளன " என கூறினான்

ஆம் நடைபெறும் செயல் ஒன்றுதான் ஆனால் அந்த செயலானது அவரவருடைய நோக்கில் ஒருவருக்கு சரியாகவும் மற்றொருவருக்கு தவறாகவும் மாறுபட்டு தோன்றிடும் ஆனால் இதில் யார்வெற்றி பெறுகின்றார்கள் யார் தோல்வியுற்றார்கள் என்பது அவரவருடைய மனதிற்கு மட்டுமே தெரியும்.

வியாழன், 2 மே, 2013

உலகை மாற்றியமைப்பதற்கு முன்பு நம்மை மாற்றிகொள்


முன்னொரு காலத்தில் அரசன் ஒருவன் தன்னுடைய நாடு நகரங்கள் அனைத்தையும் சுற்றிபார்க்க விரும்பினார். ஆனால் தற்போது இருப்பது போன்று அந்த காலத்தில் போக்குவரத்து வசதி இல்லை. அதனால் கால்நடையாக தன்னுடைய அமைச்சர்கள் படைத்தலைவர்களுடன் மிக நீண்ட சுற்றுபயனம் செய்து பார்வையிட்டு திரும்பினார்.

அப்போது நாட்டில்இருந்த சாலைகள் அனைத்தும் கரடுமுரடாக கல்லும் முல்லும் கலந்து இருந்ததால் அவருடைய கால்களில் சிறுசிறு காயம் ஏற்பட்டு வலி மிகஅதிகஇருந்தது .என்ன இது நம்முடைய நாட்டின் சாலைகள் அனைத்தும் கரடுமுரடாக நடப்பவரின் கால்களை காயம் ஏற்படுத்தகின்றன அதனால் நம்முடைய நாட்டில் உள்ள சாலைகளின் மீது மாடுகளின் தோலை பரப்பிமூடி மிருதுவாக்குங்கள் அதற்காக எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என உத்தரவிட்டார்

இதனால் ஆயிரகணக்கான மாடுகளை கொல்லவேண்டியநிலை ஏற்படும் அதனால் விவசாயிகளுக்கு விவசாயத்தில் உதவிபுரிவதற்கான மாடுகளும் நாம் அனைவரும் குடிப்பதற்கான பாலும் கிடைக்காது அதுமட்டுமல்லாமல் இதனால் ஏராளமான செலவாகும் அதற்கு பதிலாக மிகச்சிறிய துண்டு மாட்டின் தோலைகொண்டு அரசனுக்கு தேவையான காலணிகளை செய்து நாட்டினை சுற்றிபார்க்க செல்லும்போது கால்களில் அணிந்துகொண்டு சென்றால் கால்களில் சிறு சிறு காயமும் ஏற்படாது கால்வலியும் வராது என அவருடைய அமைச்சர் ஆலோசனை கூறினார் அப்படியா உடனடியாக அவ்வாறே செய்என மாற்றிஉத்திரவிட்டார்

ஆம் இந்த உலகை மகிழ்வோடு இருப்பதற்காக மாற்றியமைக்க முயற்சிக்குமுன் நாம் மகிழ்வோடு இருப்பதற்கு முயற்சியினை செய் அதாவது உலகை மாற்றியமைப்பதற்கு முன்பு நம்மை மாற்றிகொள் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்க

புதன், 1 மே, 2013

குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதுதான் நன்று


ஒரு நகரத்தில் புதியதாக திருமணம் ஆன இளம் தம்பதியர் மிகஅமைதியாகவும் மகிழ்வாகவும் வாழ்ந்து வந்தனர் இதனை கண்ணுற்ற அக்கம் பக்கம் இருந்தவர்களில் ஒருவர் இந்த தம்பதியரில் இளம்மணைவிக்கு மட்டும் சிறந்த ஆலோசனை ஒன்றை கூறுவதாகவும் அதனை பின்பற்றினால் அவர்களின் மனவாழ்க்கை மேலும் சிறப்பாக அமையும் எனவும் கூறினார்

அந்த இளமனைவியும் உடன் அந்த ஆலோசனையை நடைமுறைபடுத்த விழைந்தார் அதனால் ஒருநாள் தம்பதியர்கள் இருவரும் மனமகிழ்வோடு உரையாடிக் கொண்டிருக்கும் போது பக்கத்து வீட்டு தோழி கூறிய ஆலோசனைபடி ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ்க்கை துனையினுடைய நடவடிக்கைகளில் மற்றவரின் மனம் புன்படுத்துமாறு உள்ள செயல்களை மட்டும் பட்டியலிட்டு அதனை மற்றவருக்கு படித்து காண்பத்தபின் அதனை திருத்தி சரியாக மாற்றியமைத்து கொண்டால் இன்னும் மனமகிழ்வோடு பிரச்சினையே இல்லாமல் அமையும் என முடிவுசெய்து அந்த இளம் தம்பதியர்கள் இருவரும் தனித்தனி அறைக்கு சென்று மற்றவர் நடவடிக்கையில் தமக்கு பிடிக்காதவை எவையெவையென பட்டியலிட முனைந்தனர்

ஓரிரு மணிநரம் கழித்து இருவரும் சந்தித்து கொண்டனர் முதலில் இளம் மனைவி தன்னுடைய இளம் கணவரின் நடவடிக்கையில் தனக்கு பிடிக்காதவைகள் என மூன்று பக்கம் எழுதியருந்ததை ஒவ்வொன்றாக படிக்க படிக்க அடடா நம்முடைய நடவடிக்கைகளில் இவ்வளவு நடவடிக்கைகள் தம்முடைய இளம் மனைவிக்கு மனவருத்தை தருமாறு உள்ளனவா என கண்ணீர்விட்டு அழுத பின் சரிசரி இனிமேல் அவைகளை தவிர்த்து சரியாக கவணமாக உனக்கு மனவருத்தம் இல்லாமல் என்னுடைய நடவடிக்கையை பார்த்து கொள்கிறேன் என உறுதிகூறினார்

உடன் இளம் மனைவியும் நிரம்ப சரி இனி நீங்கள் எழுதிய பட்டியலை படியுங்கள் என கோரியபோது இளம் தம்பதியரில் கணவனானவர் எனக்கு மனவருத்தம் தருமாறான செயல்கள் எதுவுமே உன்னிடம் இல்லை அனைத்துமே எனக்கு பிடித்தமான நடவடிக்கை களைத்தான் நீ செய்கின்றாய் அதனால் பட்டியல் தயார் செய்யவேண்டிய தேவை எதுவுமே இல்லை என கூறினார்

குடும்ப தம்பதியரில் ஒருவருக்கொருவர் மற்றவரின் குற்றம் குறைகளை பூதாகரமாக பெரிதுபடுத்தமால் விட்டுகொடுத்து பெருந்தன்மையாக மகிழ்வோடு ஏற்று அனுசரித்து போவதுதான் நல்லமகிழ்வான குடும்பவாழ்விற்கு அடிப்படையாகும் என தன்னுடைய கணவனின் இந்த செயலில் இருந்து அறிந்த கொண்ட அந்த இளம் மனைவி தன்னுடைய கணவனின் பெருந்தன்மையை கண்ணுற்று தேம்பிதேம்பி அழ ஆரம்பித்தார் .

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

நம்கீழ் பணிபுரியும் பணியாளர்கள்எந்தவகையை சேர்ந்தவர்கள்


ஒருவர் புதிய நவீன அரிசிஆலை ஒன்றை நிறுவலாம் என முயற்சித்தபோது அவர் திட்டமிட்டபடி வங்கிகள் கடன்வழங்க தயங்கியதால் கையிலிருந்த முதலீட்டை மட்டும் கொண்டு சாதாரண அரிசி ஆலையாக நிறுவினார் அந்த புதிய அரிசி ஆலையை இயக்குவதற்காக பணியாளர்களை நியமனம் செய்யவிழைந்தார்

முதல்நாள் பணிபுரிய வந்த அன்பு என்ற பணியாளரிடம் தரையில் இருக்கும் நெல்மூட்டைகளை மேலே மாடிக்கு கொண்டு சென்று சேர்த்திடுமாறு உத்திரவிட்டார் உடன் அந்த அன்பு என்ற பணியாளரும் மிக்கடினமாக முயன்று நெல்மூட்டைகளை மேலே மாடிக்கு கொண்டு சென்று சேர்த்தார்

மறுநாள் பணிபுரிய வந்த ஆராவமுது என்ற பணியாளரிடம் தரையில் இருக்கும் நெல்மூட்டைகளை மேலே மாடிக்கு கொண்டு சென்று சேர்த்திடுமாறு உத்திரவிட்டார் உடன் அந்த ஆராவமுது என்ற பணியாளரும் மிக்கடினமாக முயன்று நெல்மூட்டைகளை மேலே மாடிக்கு கொண்டு சென்று சேர்த்தார் அதனோடு மற்றோரு இளவரசன் என்ற பணியாளரும் அதே பணியை செய்வதற்கு தடுமாறி கொண்டிருந்த்தை கண்ணுற்று இளவரசனுடைய பங்கு நெல்மூட்டைகளை மேலே மாடிக்கு கொண்டு சென்று சேர்த்திட உதவிசெய்தார்

மூன்றாம் நாள் பணிபுரிய வந்த அறிவு என்ற பணியாளரிடம் தரையில் இருக்கும் நெல்மூட்டைகளை மேலே மாடிக்கு கொண்டு சென்று சேர்த்திடுமாறு உத்திரவிட்டார் உடன் அந்த அறிவு என்ற பணியாளரும் முந்தைய அன்பு, ஆராவமுது ஆகிய இருவரும் என்னென்ன சிரமங்களை அடைந்தனர் என குறிப்புபெழுதி அதனை எவ்வாறு சுலபமாக்குவது என அறிந்து அதனையும் குறிப்பெழுதி பணியை முடித்து அந்த குறிப்பையும் கொண்டு சென்று முதலாளியிடம் சமர்ப்பித்தார்

நான்காம் நாள் பணிபுரிய வந்த உலகநாதன் என்ற பணியாளரிடம் தரையில் இருக்கும் நெல்மூட்டைகளை மேலே மாடிக்கு கொண்டு சென்று சேர்த்திடுமாறு உத்திரவிட்டார் உடன் அந்த உலகநாதன் என்ற பணியாளரும் முந்தைய அன்பு, ஆராவமுது, அறிவு ஆகிய மூவரும் என்னென்ன சிரமங்களை அடைந்தனர் அந்த சிரமங்களை தவிர்த்து சுலபமாக்க அறிவு என்ன வழிமுறையை பின்பற்றினார் என அறிவுனுடைய குறிப்பினை படித்தறிந்த மேலும் சுலபமாக்கிடும் பொருட்டு கையில் தயாராக இருக்கும் பொருட்களை கொண்டு நெல்மூட்டைகளை மேலே சுலபமாக கொண்டு சேர்ப்பதற்கான இயந்திர அமைப்பான மின்தூக்கி(Elevator) என்ற அமைப்பை நிறுவி அதன்மூலம் நிரந்தரமாக நெல்மூட்டைகளை மேலே சுலபமாக கொண்டு சேர்ப்பதற்கான வழிமுறையை அமைத்து தனக்கிட்ட பணியையும் முடித்தார் இந்த செய்தியை தன்னுடைய முதலாளியிடம் சென்று அறிவித்தார்

இந்த ஐந்து பணியாளர்களில் நாம் எந்த வகையை சேர்ந்தவர் என இந்த நிகழ்வுகளிலிருந்து நாம் பணிபுரியும் தன்மையை வைத்து முடிவுசெய்து கொள்க அவ்வாறே நம்கீழ் பணிபுரியும் பணியாளர்கள்எந்தவகையை சேர்ந்தவர்கள் என்றும் முடிவுசெய்து அதற்கேற்ற பணியை அவரவர்களுக்கு வழங்கி நம்முடைய தொழிலகம் சுணக்கமின்றி செயல்பட முயன்றிடுக

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...