ஞாயிறு, 30 நவம்பர், 2014

நம்முடைய பெற்றோர் உயிருடன் இருக்கும்போது அவர்களை மதித்து வனங்க உறுதி எடுப்போதோடு மட்டுமல்லாது நம்முடன் வைத்து அவர்களை காத்திட உறுதி பூனுவோம்


ஒரு மனிதன் ஒரு பூக்கடை வாயிலில் தன்னுடைய மகிழ்வுந்தை நிறுத்தி இருநூறு மைல்கள் தொலைவில் வாழ்ந்த தன்னுடைய அன்னைக்கு சில பூக்களை தபால் வாயிலாக கொண்டு சென்று சேர்த்திடுமாறு கோருவதற்காக அவர் தனது காரில் இருந்து இறங்கியபோது ஒரு இளம் பெண் தன்னுடைய அன்னைக்கு வழங்குவதற்காக ரோஜா பூவொன்று வாங்க முடியவில்லையே என புலம்பிகொண்டு அமர்ந்திருந்ததை கவனித்தார்.

அவர் உடன் அப்பெண்ணின் அருகில் சென்று உங்களுக்கு என்ன வேண்டும் என வினவினார் அதற்குஅந்த பெண் என்னுடைய அம்மாவிற்காக ஒரு சிவப்பு ரோஜாபூ வாங்க வேண்டும் என்றார் . என்னிடம் ஒரு ரூபாய்தான் உள்ளது ஆனால் அந்த சிவப்பு ரோஜாவை பூக்கடைக்காரர் இரண்டு ரூபாய் என கூறுகின்றார் நான் என்னசெய்வேன் இன்று எங்களுடைய அன்னையின் பிறந்த நாளாயிற்றே நான் என்ன செய்வேன் என கூறியதை தொடர்ந்து அம்மனிதன் இரண்டுரூபாய் கொடுத்து அந்த ரோஜாபூவை வாங்கி பெண்ணே வா உங்களுடைய அன்னையை நேரில் காணலாம் என அந்த பெண்ணை அவருடைய மகிழ்ந்தில் ஏற்றி கொண்டு சென்றார்

ஆனால் என்ன ஆச்சிரியம்அந்தஇளம்பெண் அவர்களுடைய வீட்டிற்கு செல்லாமல் தங்களுடைய அன்னையை அடக்கம் செய்த இடத்தில் புதியதாக கட்டப்பட்ட கல்லறையின் மீது அந்த ரோஜாபூவை வைத்து வணங்கினார்

அதை கண்ணுற்ற மனிதன் மனம்மிக நாம் நம்முடைய உயிரோடு இருக்கும் நம்முடைய அன்னையை மதிக்காமல் வெகுதூரத்தில் வாழ்ந்து வருகின்றோம் ஆனால் இந்த இளம்பெண் தன்னுடைய தாய் இறந்த பின்னர்கூட மறக்காமல் மரியாதை செலுத்துகின்றாரே என சங்கடப்பட்டது,

பின்னர் அந்த மனிதன் தன்னுடைய தாயின் பிறந்த நாளிற்காக தபால் வாயிலாக பூக்கள் அனுப்புவதை தவிர்த்து நேரடியாக அவரது அம்மா வாழும் வீட்டுக்கு இரு நூறு மைல்கள் மகிழ்வுந்தில் சென்று மலர்களை அவருடைய அன்னையின் காலில் வைத்து வணங்கினார்

ஆம் நாம் நம்முடைய பெற்றோர் உயிருடன் இருக்கும்போது அவர்களை மதித்து வனங்க உறுதி எடுப்போதோடு மட்டுமல்லாது நம்முடன் வைத்து அவர்களை காத்திட உறுதி பூனுவோம்

வெள்ளி, 28 நவம்பர், 2014

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு குழந்தையும் தத்தமது தாயின் முடிவில்லாத அன்பை எப்போதும் நினைவில் கொண்டுதத்தமது தாய்க்கு நன்றி செலுத்துவது நல்லது


ஜப்பானில் பூகம்பம் நிகழ்வு முடிந்து தணிந்த பிறகு இடிபாடுகளுக்கிடையே யாரேனும் உயிருக்கு போராடி கொண்டிருந்தால் அவர்களை மீட்பதற்கான பணிசெய்து கொண்டிருந்த ஒரு மீட்புகுழுவினர் இடிந்த வீடொன்றில், இடிபாட்டின் பிளவுகள் மூலம் ஒரு உயிரற்றநிலையில் இருந்த இளம் பெண்ணினுடைய உடலை பார்த்தனர்.

ஆனால் உயிரற்ற அந்த பெண்ணினுடைய உடலின் நிலையானது ஒரு நபர் குனிந்து வனங்குவதை போன்று உடல் மண்டியிட்டவாறு விசித்திரமாக இருந்தது; அதாவது அவருடைய உடல் முன்னோக்கி சாய்ந்தும் அவரது இரண்டு கைகளும் ஒரு பொருளை வளைந்து பாதுகாப்பதை போன்றும் இருந்தது மேலும் இடிபாடுகளுடைய அந்த வீடானது அவருடைய உடலையும் தலையையும் அழுத்தியபடி இருந்தது.

அதனால் அந்த பெண் உயிருடன் இருக்க முடியும் என்று நினைத்து, மீட்புகுழுவின் அணித் தலைவர் அந்த பெண்ணின் உடலை வெளியிலெடுப்பதற்காக இடிந்த சுவரின் ஒரு குறுகிய இடைவெளி வழியாக மிகசிரமபட்டு கையைஉள்நுழைத்து பார்த்தபோது குளிர்ந்தும் கடினமாகவும் அவ்வுடல் இருந்தை உணர்ந்து அவர் உறுதியாக காலமாகிவிட்டதாக முடிவுசெய்து அவரும் அவருடைய மீட்பு குழுவும் இடிந்த அந்த வீட்டை விட்டு அடுத்தடுத்துள்ள சரிந்துவிட்ட கட்டிடங்களில் வேறுயாரேனும் உயிரோடு இருக்கின்றனரா என தேடசென்றனர்.

ஆயினும் அந்த அணித்தலைவருக்கு முந்தை இடிபாடுகளுக்கிடையே இருந்த பெண்ணின் உடலின் நிலையை கண்டு சந்தேகம் கொண்டு அந்தஇளம் பெண்ணி இருந்த இடிந்த வீட்டிற்கு மீண்டும் வந்தார், குறுகிய பிளவுகள் மூலம் அவர் தன்னுடைய கையை மீண்டும் உள்ளே விட்டு தலைகுனிந்தநிலையில் உள்ள அப்பெண்ணினுடைய உடலின் கீழிருந்த சிறிய இடைவெளி வழியாக வேறு ஏதனும் உள்ளதாவென தேடிடமுனைந்தார்.

அந்நிலையில் திடீரென்று, அவர் மிக ஆச்சரியத்துடனும் மகிழ்ச்சியுடனும் "குழந்தையொன்று உயிருடன் இங்குள்ளது!" என கத்தினார்

உடன் மீட்பு குழுவினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து மிககவனமாக இறந்த அப்பெண்ணினி சுற்றியுள்ள சிதைந்த பொருட்களின் குவியலை அகற்றினர். குனிந்து வளைந்து மண்டியிட்ட நிலையிலிருந்த அந்த தாயின் உடலுக்கு கீழ் பூக்களை பாதுகாப்பது போன்று பழைய போர்வையால் மூடப்பட்டிருக்கும் ஒரு மூன்று மாதங்களே நிறைவடைந்த சிறுவன் அமைதியாக உறங்கி கொண்டிருந்ததை கண்டு வெளியில் பத்திரமாகமீட்டெடுத்தனர்.

அதாவது அந்த பெண் தன்னுடைய உயிரை தியாகம் செய்து தன்னுடைய மகனை காப்பாற்றியிருப்பது தெரியவந்தது

உடன் மருத்துவக்குழு அங்கு வந்து அந்த சிறுவனின் உடலில் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி பார்த்த போது அப்போதும் அந்த சிறுவன் உறங்கி கொண்டிருப்பதை கண்டனர்

அதனுடன் போர்வையின் உள்ளே ஒரு செல்லிடத்து பேசி இருப்பதை கண்டனர் அதன் திரையில் ஒரு உரை செய்தி "மகனே , வருங்காலத்தில் நீ உயிருடன் இருந்தால் அப்போது எப்போதும் உன்னிடம் நான் அன்புடன் இருப்பதை நினைவில் கொள்வாயாக ." என்றிருந்தது

இந்த செல்லிடத்து பேசியின் செய்தியை அனைவரும் படித்தறிந்தனர் " ஆம் இத்தகைய தியாக குணமுள்ள ஒரு தாயின் அன்புதான் அக்குழந்தையின் உயிரை காத்துள்ளது !! "

அதனால் இந்த உலகில் வாழும் ஒவ்வொரு குழந்தையும் தத்தமது தாயின் முடிவில்லாத அன்பை எப்போதும் நினைவில் கொண்டுதத்தமது தாய்க்கு நன்றி செலுத்துவது நல்லது

புதன், 26 நவம்பர், 2014

மற்றவர்களின் செயலை மதித்து முதலில் செய்திடுமாறு அனுமதித்திடுக


நாம் அனைவரும் எப்போதும் மகிழ்வாக நிறைவாக வாழ்வது எவ்வாறு என்ற ஒரு பயிற்சி வகுப்பு எங்களூரில் நடைபெற்றது அதில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்

அந்த பயிற்சியின்போது இடையில் பயிற்றுவிப்பாளர் பயிற்சியாளர் ஒவ்வொருவரையும் அழைத்து அவர்களுடைய பெயரை தன்னிடம் வைத்துள்ள பலூனில் எழுதி அருகேயிருந்த ஒரு அறையில் கும்பலாக வைத்தார்

அனைவருடைய பெயரையும் எழுதி கும்பலாக அருகிலிருந்த அறையில் வைத்தபின் அவர்கள் அனைவரையும் ஒரேநேரத்தில் அருகிலிருந்த அறைக்கு சென்று அவரவர்களுடை பெயர் எழுதிய பலூனை ஐந்துநிமிடகால அவகாசத்திற்குள் தேடிபிடித்து எடுத்துவரும்படி கோரினார்

உடன் அனைவரும் கும்பலாக சென்றதாலும் ஒருவருக்கொருவர் முட்டிமோதிக்கொண்டு தேடியதாலும் ஒரே கலவரமாக இருந்தது அதனால் அந்த கால அவகாசத்திற்குள் யாராலும் அந்த அறையிலிருந்துஅவரவர்களின் பெயர்எழுதிய பலூனை தேடிபிடித்து எடுத்து வரமுடியவில்லை

நல்லது கனவான்களே சிறிதுநேரம் அமருங்கள் என அவர்களை வேண்டி கேட்டுகொண்டு சிறிதுநேரம் கழித்து ஒவ்வொருவராக அந்த அறைக்கு சென்ற கைக்கு கிடைக்கும் பலூனை எடுத்துவருமாரு வேண்டிக்கொண்டார்

சிறிதுநேரம் கழித்து பின் அவரவர்களின் கைகளில் உள்ள பலூனில் உள்ள பெயரை பார்க்குமாறு கூறியபோது என்ன ஆச்சரியம் அனைவரின் கைகளிலும் அவரவர்களின் பெயர் எழுதிய பலூன் மிக்கச்சரியாக இருந்தது

ஆம் நண்பர்களே நாம் நம்முடைய வாழ்வில் அவசரத்தினாலும் ஆத்திரத்தினாலும் மற்றவற்களுடன் ஒத்துழைப்பு இல்லாததாலும் நாம் விரும்பியது நமக்கு கிடைக்கவில்லை

ஆனால் இரண்டாவது செயலில் பொறுமையாக மற்றவர்களின் செயலை மதித்து முதலில் செய்திடுமாறு அனுமதித்தால் அவரவர்கள் விருப்பபட்டது கிடைத்தது என அறிந்தகொள்க என அறிவுரைகூறினார்.

செவ்வாய், 18 நவம்பர், 2014

வீனாக ஆராவாரமிட்டு கூச்சலிட்டு நம்முடைய சமூக சூழலை உருக்குலைப்பதில் கவணமாக இருக்கின்றோம் ஆனால் அந்த நிகழ்விற்கான மிகச்சரியான தீர்வைமட்டும் காணதவறுகின்றோம்


ஒரு சிற்றுண்டி உணவகத்தில் குழுவான பெண்கள் சிற்றுண்டி அருந்த சென்று இருக்கைகளில் அமர்ந்து தங்களுக்கு தேவையான சிற்றுண்டி உணவுவகைகளுக்கு உத்தரவை இட்டுவிட்டு குழு விவாதங்களில் ஈடுபட்டனர்

இந்நிலையில் வெட்டுகிளியொன்று ஒரு பெண்ணின் தோளின்மீது வந்து அமர்ந்ததும் அந்த பெண் கூச்சிலிட்டவாறு அந்த வெட்டுகிளியை அடித்து விரட்டுவதற்காக தாண்டிகுதித்து பார்த்தது எகிறி குதித்து பார்த்தது ஆனாலும் அந்த வெட்டுகிளி இடம் மாறாமல் அமர்ந்திருந்து

இந்த பெண்ணின் அளவிற்கதிகமான அதிகமான உடல் அசைவினால் உடன் அந்த வெட்டுகிளி எழுந்து பறந்து சென்று அடுத்தமர்ந்திருந்த பெண்ணின் தோளின்மீது சென்றமர்ந்ததும் இதே நிகழ்வு அந்த பெண்ணிடமும் தொடர்ந்தது மூன்றாவதாக ஒரு பெண்ணின் மீது அந்த வெட்டுகிளி அமர்ந்தது அந்தபெண்ணிடமும் இதே நிகழ்வு தொடர்ந்தது

இதனால் இவ்விட்ததில் என்ன நிகழ்வு நடைபெறுகின்றது என தெரிந்துகொள்ளஅந்த சிற்றுண்டி உணவகத்தின் பரிமாறுபவர் உடன் இவர்களின் அருகில்வந்தார் உடன் அந்த வெட்டுகிளி அந்த பரிமாறுபவரின் தோளின்மீது சென்றமர்ந்தபின்னர் இந்த பெண்களின் குழு சிறிது அமைதியாக அமர்ந்தது

அந்த சிற்றுண்டி உணவகத்தின் பரிமாறுபவர் இந்த பெண்கள் செய்தவாறு கத்தி கூச்சலிட்டு குதித்தோடியவாறு செய்திடாமல் அந்த வெட்டுகிளியை மிகச்சரியாக பிடித்து கொண்டுசென்று வெளியில் கிடாசிவிட்டுவந்தார்

ஆம் நாம் அனைவரும் எந்தவொரு நிகழ்வையும் அதற்கான மிகச்சரியான தீர்வு என்ன என காணமுயலாமல் ஆராவாரமிட்டு கூச்சலிட்டு நம்முடைய சமூக சூழலை உருக்குலைப்பதில் கவணமாக இருக்கின்றோம் ஆனால் அந்த நிகழ்விற்கான மிகச்சரியான தீர்வைமட்டும் காணதவறுகின்றோம்

வெள்ளி, 14 நவம்பர், 2014

நமக்கு கிடைத்த இந்த வாழ்வை ஏற்று மிகமகிழ்ச்சியாக இருந்துவருவோம்


ஓருகாட்டில் காகம் ஒன்று அமைதியாகவும் மிகமகிழ்ச்சியுடனும் வாழ்ந்து வந்தது இந்நிலையில் அன்னப்பறவை ஒன்று அந்த வழியாக பறந்து சென்றதை பார்த்ததும் அந்த காகமானது 'அடடா! நாம் எவ்வளவு கருமையாக இருக்கின்றோம் ! இந்த அன்னப்பறவை எவ்வளவு வெண்மையாக இருக்கின்றது! மிக மகிழ்ச்சியாகவும் இருக்கின்றதே !' என வருத்தபட்டது.

அதனை தொடர்ந்து இந்த காகமானது அன்னப்பறவை வசிக்குமிடம் சென்று ''அன்னப்பறவையே ! நீ எவ்வளவு வெண்மையாகவும் அழகாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றாய் அதற்கான இரகசியசம் யாது?'' என வினவியது .உடன் ''அடபோ காகமே! நானும் என்னுடைய இரட்டை வண்ணத்தை கண்டு மிக கர்வமாக கொஞ்சகாலம் ஒரு பலவண்ண மயிலை பார்க்கும்வரை இருந்தேன்.

அதன்பின்னர் அடடா! நமக்கு அந்த மயிலை போன்று பல வண்ணங்கள் இல்லையே ? என வருத்தத்தில் இருந்துவருகின்றேன்' ,'' என மன வருத்தத்துடன் கூறியது. அதனை தொடர்ந்து காகமும் அடுத்ததாக அந்த மயிலை சென்றுபார்த்து ''மயிலே! நீ பலவண்ணங்களுடன் மிகஅழகாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றாய் அதற்கான இரகசியசம்தான் யாது ?'' என வினவியது

உடன் ,'' அடபோ காகமே ! நானும் என்னுடைய பலவண்ணத்தை கண்டு மிக கர்வமாக கொஞ்சகாலம் இந்த விலங்குகளின் பூங்காவிற்குள் என்னை கொண்டுவந்து அடைக்கும்வரை இருந்தேன் இப்போது என்னை பலர் பார்த்துதான் செல்கின்றனர் ஆனால் உன்னை போன்று சுதந்திரமாக பறந்து சென்று இரைதேடவும் ஆடிபாடவும் முடியவில்லையே என வருத்தத்தில் இருந்துவருகின்றேன் என மன வருத்தத்துடன் கூறியது

உடன் காகமானது அடடா நாம் எவ்வளவு சுதந்திரமாக எங்குவேண்டுமானாலும் பறந்துசென்று இரைதேடி உண்டு மகிழ்வுடன் இருந்துவருகின்றோம் என மகிழ்வுடன் தன்னுடைய கூட்டிற்கு திரும்பி வந்தது

ஆம் நன்பர்களே நாம் அனைவரும் நம்மைவிட மற்றவர்கள் மிக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருவதாக தவறாக எண்ணி நம்முடைய வாழ்வை நாமே கெடுத்துகொண்டு வருகின்றோம் அதனை தவிரத்து நமக்கு கிடைத்த இந்த வாழ்வை ஏற்று மிகமகிழ்ச்சியாக இருந்துவருவோம்

வியாழன், 13 நவம்பர், 2014

நேர்மறையாக பராமரித்து நமக்கு ஏற்படும் தீங்குகளையும் இன்னல்களையும் தவிர்த்திடுவோம்


ஒருஅரசன் தன்னுடைய அரசசபையில் உள்ளவர்களிடம் முந்தைய நாள் இரவு தன்னுடைய கனவில் தன்னுடைய பற்கள் முழுவதும் கொட்டிவிடுவதாக கண்டதாகவும் அதற்கான பொருள் என்னவென்றும் வினவினார்

உடன் அந்த அரசசபையில் அமர்ந்திருந்த்தில் ஒருவன் எழுந்து அரசே உங்களுடயை குடும்ப உறுப்பினர்கள் முழுவதும் விரைவில் இறந்துவிடுவார்கள் என்பதுதான் அந்த கனவின் பொருள் ஆகும் என கூறியதும்

உடன் அரசனுக்கு கோபம் அதிகமாகி தன்னுடைய காவல்வீரர்களை அழைத்து அம்மனிதனை தூக்கிலிடுமாறு உத்திரவிட்டார்

பின்னர் மற்றொருவனை அழைத்து தன்னுடைய கனவிற்கான உண்மையான பொருளை கூறுமாறு பணித்தார்

இரண்டமாவன் அரசே நீங்கள் உங்களுடைய குடும்பத்தாரை விட நீண்டநாட்கள் உயிர்வாழ்வீர்கள் என கூறியதை தொடர்ந்து அவ்வரசன் தன்னுடைய நிதி அமைச்சரை அழைத்து இரண்டாமவனுக்கு ஏராளமான தங்க காசுகளும் பொருளும் கொடுக்குமாறு உத்திரவிட்டார்

ஆம் இவ்விருவரும் ஒரே பதிலை எதிர்மறையாகவும் நேர்மறையாகவும் என இரண்டு வெவ்வேறு கோணத்தில் கூறி அதற்கேற்ற பலனை உடன் அனுபவித்தனர் நாமும் நம்முடைய செயல் சொல் போன்றவைகளை நேர்மறையாக பராமரித்து நமக்கு ஏற்படும் தீங்குகளையும் இன்னல்களையும் தவிர்த்திடுவோம்

புதன், 12 நவம்பர், 2014

வாழ்க்கையின் சிறந்த தருணம் எது?


அது ஒரு இளவேணிற்காலமாக இருந்தது, இன்னும் இரண்டு நாட்களில் என்னுடைய வயது முப்பது ஆக உயரபோகின்றது . நான் என்னுடைய வாழ்க்கையில் ஒரு புதிய தசாப்தத்தில் நுழைவதை பற்றி பாதுகாப்பற்று இருப்பதாக உணருகின்றேன் மேலும் என்னுடைய வாழ்வின் வசந்தகாலம் இதன் பின்னர் மட்டுமேஇருப்பதாகவும் அச்சபடுகின்றேன் இந்நிலையில் நான் என்னுடைய அன்றாட பணிக்கு செல்லுமுன் தினமும் பயிற்சிக்காக ஒரு உடற்பயிற்சி கூடத்துக்கு செல்கின்றேன். அவ்வாறு அந்த உடற்பயிற்சிகூடத்திற்கு செல்லும்போது அங்கு தினமும் காலையில் என்னுடைய நண்பர் ஒருவரை சந்திக்கின்றேன். அவருடைய வயது எழுபத்தொன்பதாக இருந்தாலும் கட்டுகுலையாத உடல் வடிவில் அவர் இருந்தார். அதனால் அன்று அந்த நண்பரை முகமன்கூறி வரவேற்று வணங்கியபோது , அவர் '' நீங்கள் இன்று வழக்கமான முழு உற்சாகத்துடன் இல்லையே ஏன் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினையா?'' என என்னிடம் வினவினார் . அதற்கு. நான் "எனக்கு வயதுமுப்பது ஆவது பற்றி மிகஆர்வத்துடன் இருக்கின்றேன் இருந்தாலும். நான் உங்களுடைய வயது அடையும்போது நான் என்னுடை வாழ்க்கையை திரும்பி பார்த்தால் எவ்வாறு இருக்கும் என ஆச்சரியப்படுகின்றேன் ", எனக்கூறியதுடன் தொடர்ந்து அவரிடம், " அதனால் உங்களுடைய வாழ்க்கையின் வசந்த காலமாக இருந்தது எது?" என கேட்டேன்.

உடன் அவரும் தயக்கம் இல்லாமல், " எல்லாம் சரிதான் தம்பி , உங்களுடைய இந்த தத்துவமான கேள்விக்கு என்னுடைய பின்வரும் தத்துவமான பதிலை கூறுகின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள் ", என்று கூறினார்:

",நான் முதன்முதலில் ஒரு குழந்தையாக இருந்தபோது எனக்கு தேவையான அனைத்தையும் வழங்கி என்னை என் பெற்றோர்கள் நன்றாக கவனித்து வளர்த்தனர் , அதுவே என்னுடைய வாழ்வின் வசந்தகாலமாக உணர்ந்தேன் ."

"அதன்பின்னர் நான் பள்ளிக்கு சென்று இன்று எனக்கு தெரிந்துள்ள அனைத்து செய்திகளையும் கற்று போது , என்னுடைய வாழ்வின் வசந்தகாலமாக அதனை உணர்ந்தேன் ."

"பின்னர் நான் வாழ்க்கையில் வாழ்வதற்கான என்னுடைய முதல் பணி எனக்கு கிடைத்தது அதனோடு பொறுப்புகளும் சேர்ந்திருந்தது அந்த பணியில் என்னுடைய முயற்சிகளுக்கேற்ற பொருள் ஈட்டியபோது , என்னுடைய வாழ்வின் வசந்தகாலமாக அதனை உணர்ந்தேன் ."

",அதன்பின்னர் நான் என்னுடைய வாழ்க்கை துனைவியான மனைவியை முதன்முதலில் சந்தித்து அன்பு செலுத்திய போது , என்னுடைய வாழ்வின் சிறந்த நேரமாக அது இருந்தது."

"பின்னர் இரண்டாம் உலகப் போர் தொடங்கியதும் நானும் என்னுடைய மனைவியும் சேர்ந்து எங்களுடை உயிர்களை காப்பாற்ற நம்முடைய நாட்டைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது. அதற்காக வெளிநாட்டிற்கு சென்ற ஒரு கப்பல் மீது ஒன்றாக பாதுகாப்பாக சென்றுகொண்டிருந்த போது , என்னுடைய வாழ்வின் சிறந்த நேரமாகஅது இருந்தது."

"அதன்பின்னர் போர்முடிந்து நாங்கள் நம்முடைய நாட்டிற்கு திரும்பிவந்து வழக்கமான எங்களுடைய குடும்ப வாழ்க்கையை தொடங்கிய போது , என்னுடைய வாழ்வின் சிறந்த நேரமாக அது இருந்தது."

"பின்னர் எங்களுடைய குழந்தைகள் எங்களுக்கு பிறந்து வளர்ந்தபோது அவர்களை நான் ஒரு இளம் தந்தையாக நாங்கள் சிறந்த பெற்றோர்களாக அவர்களை கவணித்து வளர்த்து வந்தபோது, என்னுடைய வாழ்வின் சிறந்த நேரமாக அது இருந்தது."

" நண்பரே, இப்போது எனக்கு எழுபத்தி ஒன்பது வயதாகிறது. நான், நல்ல உடல் நலத்துடன் இருக்கின்றேன் மேலும் என்னுடைய மனைவியை நான் முதன் முதலில் சந்தித்தபோது இருந்த அதே அன்புடன் இப்போதும் அவர்களை நேசிக்கின்றேன் . இதுவே என்னுடைய வாழ்க்கையில் சிறந்த நேரமாக உணருகின்றேன். "

"அதனால் நாம் எப்போதும் நமக்கு கிடைத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையே நம்முடைய இறுதி இலக்கு அன்று என்பதை நினைவில் கெள்க மேலும் நாம்முடைய வாழ்க்கையின் சிறந்த தருனம் மிகவிரைவில் நமக்கு வரவுள்ளது என எண்ணி எப்போதும் செயல்படுக" என எனக்கு அவர் அறிவுரை கூறினார்.

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...