ஞாயிறு, 12 ஜனவரி, 2014

பெண்பிள்ளையை போற்றிகாப்போம் ஆண்பிள்ளையை அம்போவென விட்டுவிடுவோம்


திருமணம் முடிந்து இளந்தம்பதிகள் தனியாக குடியமர்த்தபட்டனர் முதன்முதலில் அவ்விருவரையும் பார்ப்பதற்கு மணமகனின் பெற்றோர் இளந்தம்பதிகளின் குடியிருப்பு வீட்டின் கதவினை தட்டி திறக்குமாறு கோரினார்.

முன்னதாக அவ்விளந்தம்பதிகள் தாமிருவரும் தற்போதுதான் தனியாக வாழுவதற்கு இந்த வீட்டில் குடியேறி இருப்பதால் இருவரும் தங்களுடைய வீட்டின் கதவை யார்வந்து திறக்குமாறு கோரினாலும் திறப்பதில்லை என ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டனர்

அதனால் மணமகனின் பெற்றோர் எவ்வளவு நேரம் கதவை தட்டியும் அவ்விருவரும் அவர்களின் குடியிருப்பு கதவை திறக்கவேயில்லை நீண்டநேரம் அம்மணமக்கள் கதவினை திறந்து தங்களை அழைப்பார்தள் என பார்த்து சோர்வுற்றனர்.

அதன்பின் மணமகளின் பெற்றோர் வந்து சேர்ந்தனர் அவர்கள் தங்களுடைய மகளின் பெயரை அழைத்து கதவினை திறந்திடுமாறு தட்டியபோது மனமகளானவள் கண்ணீல் நீர்மல்க என்னை மன்னித்துவிடுங்கள் எங்களுடைய பெற்றோரை மடடும் என்னால் நம்முடைய வீட்டிற்கு வெளியே காத்திருக்க செய்யமுடியாது என கூறிக்கொண்டு வாயில் கதவினை திறந்து மணமகளின் பெற்றோரை வரவேற்றாள்

பிறகு அவ்விளம் தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகளை பிறந்தன அவற்றுள் முதலிரு குழந்தைகளான ஆண்பிள்ளைகளுக்கும் ஒன்றும் செய்யாதிருந்து மூன்றாவதாக பெண்மகவு பிறந்தபோது மட்டும்மிகவும் பெரிய விழாவாக கொண்டாடிட ஏற்பாடு செய்து அவ்வாறே கொண்டாடபட்டது

அவனுடைய மனைவி தன்னுடைய கணவனிடம் "ஏன் முதலிரு ஆண்குழந்தைகளும் பிறந்தவுடன் கொண்டாட்டம் ஏதும் செய்யாதிருந்து மூன்றாவதாக பெண்பிள்ளை பிறந்தபோதுமட்டும் மிகவும் பெரிய விழாவாக கொண்டாட செய்தீர்கள்" என வினவினாள்

"ஆண்குழந்தை பெரியவனாக வளர்ந்து திருமணம் ஆனவுடன் தன்னுடைய மனைவியின் சொல்லை கேட்டு அதன்படி நடந்துகொண்டு வயதானபோது என்னை கவனிக்காமல் விட்டுவிடுவார்கள் ஆனால் பெண்பிள்ளையெனில் அப்பாவந்துவிட்டார் என என்னை வரவேற்பதோடுமட்டுமல்லாமல் வயதானபோது எனக்கு தேவையான உணவிட்டு என்னை நன்றாக பார்த்து கொள்வாள்" என பதில் கூறினான்

ஆம் தற்போது நாட்டு நடப்பும் அவ்வாறுதானே உள்ளது என்பது கண்கூடு அல்லவா?

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...