ஞாயிறு, 25 அக்டோபர், 2015

இந்திய குடும்ப வாழ்க்கையின் நடைமுறை


இந்திய விமானப்படைத்தளத்திற்குள் விமானம் ஒன்று தவறுதலாக தரையிறங்கிவிட்டது உடன்அந்த தளத்தின் உயர்அதிகாரியிடம் அந்த விமானஓட்டியை அழைத்து சென்றனர்

அவரும் விமானப்படைத்தளத்திற்குள் அத்துமீறி அந்த விமானஓட்டி தான் ஒட்டிவந்த விமானத்தை தரையிறங்க செய்ததால் அவரை ஒருநாள்முழுக்க 24 மணிநேரத்திற்கு வேறுஎங்கும் தப்பிச்செல்லாமல் காவலில் வைத்திடுமாறு உத்திரவிட்டார் அவ்வாறு அவரை வீட்டுக்காவல் போன்று அவரை வைத்திருந்து 24 மணிநேரம் முடிந்ததும் அவரை மீண்டும் அந்த விமானப்படைத்தளத்திற்குள் அத்துமீறி விமானத்தை ஓட்டவேண்டாம் என எச்சரித்து அனுப்பினர்

.மறுநாள் அதே விமானம் அந்த விமான படைதளத்திற்குள் முன்பு போன்றே தரையிறங்கியது அதனை தொடர்ந்து அந்த விமான ஒட்டியுடன் ஒருபெண்ணும் இருந்ததை கண்டு இருவரையும் கைதுசெய்து தங்களுடைய தளத்தின் உயர்அதிகாரியிடம் அவ்விருவரையும் அழைத்து சென்றனர். அந்த விமானபடைதளத்தின் முதன்மை அதிகாரி மிகக்கோபமாக ஏற்கனவே எச்சரித்திருந்தும் மீண்டும் ஏன் அத்துமீறி விமானபடைதளத்தில் தரையிறங்க செய்தீர் என வினவியபோது

மன்னிக்கவேண்டும்ஐயா நான் நேற்று நாள்முழுக்க 24மணிநேரமும் இங்குதான் இருந்தேன் வேறு எங்கும் செல்லவில்லை வேறெஎந்த தவறும்செய்யவில்லை என என்னுடைய மனைவியிடம் என்னை பற்றிய உண்மைநிலையை நிரூபிப்பதற்காகவே இந்தமுறை விமான படைதளத்திற்குள் தரையிறங்கியதாகவும் அதனை என்னுடைய மனைவி நேரில் வந்து உறுதிபடுத்தவும் இவ்வாறு செய்ததாகவும் தன்னை இந்த ஒருமுறைமட்டும் போனமுறை செய்தவாறு கைதுசெய்து 24மணிநேரம் கழித்து விடுவித்தால் போதும் என்றும்அந்த விமானி கூறினார்

ஒரே நடைமுறையை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக புரிந்து பின்பற்றுகின்றனர்


ஐபிஎம் என்பது அமெரிக்க நாட்டின் கணினி உற்பத்தியில் மிகப்பெரிய மிகப்பிரபலமான நிறுவனமாகும் .அந்நிறுவனம் தங்களுடைய கணினி உற்பத்திக்கு தேவையான மிகமுக்கியமான உதிரிபாகங்களை வெளிநிறுவனங்களிடமிருந்து கொள்முதல்செய்வது வழக்கமான நடைமுறையாகும் .

அதன்படி அவ்வாறான கணினியின் உதிரி பாகங்களை கொள்முதல் செய்வதற்காக உலகமுழுவதும் உள்ள நிறுவனங்களிடமிருந்து விலைபுள்ளி கோரினர் .

அந்த விலைபுள்ளியில் பல்வேறு நிபந்தனைகளுடன் பொருளின் தரம்பற்றிய நிபந்தனைகளாக பத்தாயிரம் உதிரிபாகங்களில் மூன்று பழுதுடன் இருந்தால் ஏற்கப்படும் என்றும் அதற்குமேல்இருந்தால் பெறபட்ட உதிரிபாகங்கள் அனைத்தும் திருப்பிஅனுப்பிவிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது

. அதன்படி ஜப்பானை சேர்ந்த நிறுவனத்திற்கு இந்த கணினியின் உதிரிபாகங்களை வழங்குவதற்காக ஐபிஎம் நிறுவனம் கொள்முதல் ஆணையை வழங்கியது .

அதனை தொடர்ந்து ஜப்பான் நிறுவனத்திடமிருந்து ஐபிஎம் நிறுவனத்திற்கு அவர்கள் கோரியவாறு பத்தாயிரம் எண்ணிக்கை கொண்ட கணினியின் உதிரிபாகங்கள் தனியான கட்டுகளாகவும் பழுதடைந்த கணினியின் உதிரிபாகங்கள் மூன்றை மட்டும் தனிக்கட்டாகவும் கட்டப்பட்டு ஐபிஎம் நிறுவனத்திற்கு வந்துசேர்ந்தது

அவைகளுடன் தனியாக கடிதம் ஒன்றும் வந்துசேர்ந்தது

அந்த கடித்தத்தில் ஐபிஎம் நிறுவனம் உத்திரவு இட்டவாறு பத்தாயிரம் எண்ணிக்கை கொண்ட கணினியின் உதிரிபாகங்கள் தனியான கட்டுகளாகவும் பழுதடைந்த மூன்று கணினியின் உதிரிபாகங்கள் மட்டுிம் தனிகட்டாகவும் கட்டப்பட்டு அனுப்பப் பட்டுள்ளதாகவும் அந்த மூன்றுமட்டும் சரியாக செயல்படாது அதனால் அந்த மூன்ற உதிரிபாகங்களை மட்டும் கணினிஉற்பத்திக்கு பயன்படுத்தி கொள்ளமுடியாது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒரே நடைமுறையை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக புரிந்து பின்பற்றுகின்றனர்

ஞாயிறு, 18 அக்டோபர், 2015

நம்மில் பலரும் கண்முன்உள்ள முன்தோற்றத்தை மட்டும் வைத்து தவறாக முடிவுசெய்துவிடுகின்றோம். அதன் பின்புற நிகழ்வுகளைக் கவனிக்க த்தவறிவிடுகின்றோம்


என்னுடைய தந்தைக்கு ஒருகண்மட்டும் இருந்தது. மற்றொருகண் குழிவிழுந்து பள்ளமாகப் பார்ப்பதற்கு மிகக் கோரமாக இருக்கும். இந்நிலையில் சிறுவயதில் நான் படிக்கும் பள்ளிக்கு என்னைக் கொண்டுவந்துவிட்டு செல்வதும்; பின்னர் மாலை என்னை அழைத்துவருவதுமாக இருந்தார். அவருடைய முகதோற்றத்தைப் பார்த்த எங்களுடைய பள்ளி ஆசிரியர்களும் , உடன்பயிலும் மாணவர்களும் ,கிண்டலும் கேளியுமாகப் பேசுவதை கேட்பதற்குச் சகிக்காமல் என்னுடைய தந்தையிடம் அவ்வாறான நிகழ்வை கூறி அவரிடம் முகம்கொடுத்துப் பேசத் தயங்கிவனாக வெறுத்து தூரவிலகிச் செல்ல ஆரம்பித்தேன்.

அதனால், என்னுடைய தந்தை என்னைத் தூரத்து நகரித்திலிருந்த விடுதியுடன் கூடிய பள்ளியில் சேர்த்து படிக்கவைத்தார் . நானும் படித்து நல்ல பணியில் அமர்ந்தேன். எனக்குத் திருமனமும் ஆகிவிட்டது. தனியாகப் புதிய வீடுஒன்றினை அருகிலிருந்த நகரத்தில் வாங்கி அதில் என்னுடைய தந்தை தவிர்த்த குடும்பமாகப் பிள்ளைகளுடன் வாழ ஆரம்பித்தேன்.

நீண்டநாட்களுக்குப் பிறகு என்னுடைய தந்தை பேரப்பிள்ளைகளைக் காண நாங்கள் வாழும் எங்களுடைய வீட்டிற்குவந்தார் . எங்களுடைய பிள்ளைகள் அவருடைய முகதோற்றத்தைக் கண்டு பயந்து வெறுத்துத் தூரமாக விலகிஓடியதைக் கண்ணுற்ற நான் அவரிடம், “ நீயார்? யாரைக் கோட்டுகொண்டு எங்களுடைய வீட்டிற்குள் வந்தீர்? உடன் வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள்!” என கோபமாகத் தீட்டினேன்.

அதற்கு அவரும் “தவறான முகவரிக்கு வந்துசேர்ந்துவிட்டேன்போலிருக்கின்றது! சரி தம்பி! நான் சென்று வருகின்றேன்.” என விடைபெற்று சென்றார்.

சிறிதுநாள்கழித்துத் தற்செயலாக என்னுடைய சொந்த ஊருக்கு சென்றேன். அப்போது எங்கள்வீட்டிற்கு அருகிலிருந்த வீட்டுகாரர் என்னுடைய தந்தை இறந்து போய்விட்டதாகவும் நான் வந்தால் அவர் எழுதிய கடிதம் ஒன்றினை என்னிடம் கொடுத்திடுமாறு கூறியதாகவும் கூறி என்னிடம் ஒருகடிதத்தினைக் கொடுத்தார் .

அந்த கடிதத்தில் “அன்பு மகனுக்கு நீ சிறுவயதாக இருந்தபோது நடந்த விபத்து ஒன்றில் உன்னுடைய ஒருகண்ணில் அடிபட்டு பார்வை இழந்து போய்விட்டது. அப்போது, “வேறொருவரின் கண் தானமாகக் கிடைத்தால் அதில் பொருத்தி பழையநிலைக்குக் கொண்டுவரலாம்,” என மருத்துவர் அறிவுரைகூறியதைத் தொடர்ந்து; நான் வயதானவன் என்னுடைய கண் உனக்குப் பயன் படட்டும்;எனத் தானமாக வழங்கி, அந்தக் கண் உனக்குப் பொருத்தபட்டு உன்னுடைய கண்ணின் பார்வை பழையநிலையை அடையசெய்தேன். அதனால் மற்றவர்களின் கின்டலுக்கும்கேலிக்கு ஆளானாலும் பரவாயில்லை நம்முடைய மகனின் கண்பார்வையும் முகமும் பழைய நிலைக்கு ஆனதைக் கண்டு மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக்கொண்டேன். தொடர்ந்து தற்போது என்னுடைய பெயரில் இருக்கும் இந்த வீடு நிலபுலன்கள் அனைத்தும் உன்னுடைய பெயருக்கு பட்டா மாற்றிவிட்டேன் அதற்கான ஆவணங்களையும் பக்கத்துவீட்டுகாரரிடம் ஒப்படைத்துள்ளேன் ;அதனையும் பெற்று குடும்பத்துடன் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியுடனும் வாழ்வாங்கு வாழ்வாயாக!” எனமுடிந்திருந்தது.

“அய்யோ !இவ்வாறு தியாகம் செய்து என்னைக் காத்திட்ட என்னுடைய தந்தையை நான் இவ்வளவு கோபமாகld திட்டி வெறுத்து ஒதுக்கிவிட்டேனே!” என அப்படியே மிகமனவருத்த்துடன் சிறிதுநேரம் அமர்ந்துவிட்டேன்.

இதேபோன்றே நம்மில் பலர் கண்முன்உள்ள முன்தோற்றத்தை மட்டும் வைத்து தவறாக முடிவுசெய்துவிடுகின்றோம். அதன் பின்புற நிகழ்வுகளைக் கவனிக்க த்தவறிவிடுகின்றோம் என்பதே நடப்பு நிலையாகும்

உதவிதேவைபடுவர்களுக்குக் கண்டிப்பாக கிடைக்கச்செய்வதே இயற்கையின் செயல் அல்லது தற்செயல் நிகழ்வாகும்


பிரபலமான மருத்துவர் ஒருவர் தூரத்தில் இருந்த நகரத்திற்கு அவசரமாகப் போகவேண்டிய நிலையில் ஆகாயவிமானத்தில் பயனம் செய்யலாம் எனமுடிவுசெய்து தன்னுடைய பணியை முடித்து விமான நிலையத்திற்கு வந்தபோது அன்று கடுமையான சூறாவளியான புயல்காற்றுவீசி அதிகமழை பொழிய ஆரம்பித்ததால் விமானப் போக்குவரத்து சேவையை நிறுத்தம் செய்துவிட்டனர். அதனால் ,மிகவருத்ததுடன் எப்படி அந்த நகருக்கு சென்று சேருவது என அவர் தவித்தபோது வரவேற்பு பணியாளர் “வாடகை மகிழ்வுந்து ஒன்றினை மாற்று ஏற்பாடாக அமர்த்தியுள்ளதாகவும்,அந்த வண்டி நான்கு அல்லது ஐந்துமணிநேரத்தில் அந்த நகரத்திற்குச் சென்று சேரலாம்”, என்றும் கூறினார் . div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அதனை ஏற்று அவரும் வாடகை மகிழ்வுந்தில் பயனத்தைத் தொடர்ந்தார். இரவுநேரமாக இருந்ததாலும் கடுமையான சூறாவளி,புயல்காற்றுவீசி அதிகமழை பொழிவாக இருந்ததாலும், ஒரே இருட்டாகச் செல்லும் பாதையே தெரியாத அளவிற்கு ஆகியதால் வழியில் மனிதர்கள் வாழும் வீடுகள் ஏதேனும் இருக்கின்றதா அங்குச் சிறிது ஒய்வெடுத்து செல்லலாம் எனத் தேடியபோது, தனியான வீடு ஒன்று தூரத்தில் தெரிந்தது. div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அந்தவீட்டிற்குச் சென்று கதவைதட்டியபோது நடுவயது பெண் கதவைதிறந்து இந்த மருத்துவரை உள்ளே அழைத்து க்குடிப்பதற்கு தேவையான சூடான பாணமும்,பசியைபோக்குவதற்கு த்தேவையான அளவு உணவும் அளி்த்தார். பின்னர் வீட்டின் மையத்தில் அமர்ந்து துதிப்பாடல்களை மனமுருக பாடி வேண்டிகொண்டிருந்தார். div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அந்த பிரார்த்தனை முடிந்தபின்னர் மருத்துவர் அந்தப் பெண்ணிடம் “எதற்காகத் துதிபாடல் பாடி வேண்டுதல் செய்கின்றார்”, என வினவினார் உடன் அந்தத் தாயானவள் “தன்னுடைய மகன் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அதனை இந்த மருத்தவரின் பெயரை கூறி அவரால் மட்டுமே குணப்படுத்தமுடியும் என்றும் அந்தஅளவிற்குத் தனக்கு ப் பணவசதி இல்லாததால் தன்னுடைய மகனை நோயிலிருந்து மீண்டுஎழுவதற்காக பிரார்த்தனை செய்வதாகவும்”, கூறியதை கேட்டார். div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
‘இயற்கையானது அவர் செல்லும் விமானசேவையை இரத்துசெய்யவைத்து , வாடகைவண்டியில்அவரைப் பயனம்செய்வைத்து, அந்த பெண்மனியின் மகனை காப்பாற்றுவதற்கு ஏற்படுத்தியுள்ள தற்செயல் நிகழ்வுகளைகண்டு ‘ அந்த மருத்துவருக்கு மிக ஆச்சரியமாக ஆகிவிட்டது ! உடன் அந்தப் பெண்மனியின் மகன் எந்தஇடத்தில் படுக்கவைக்கபட்டுள்ளான் என அறிந்து அங்குச் சென்று அவனுக்குத் தேவையான மருத்துவசிகிச்சைசெய்து உயிரபிழைக்கசெய்தார்.

எப்போதும் இயற்கையின் செயலானது அல்லது தற்செயல் நிகழ்வானது உதவிதேவைபடுவர்களுக்குக் கண்டிப்பாக கிடைக்கச்செய்கின்றது என்பதே உண்மையான நிலையாகும்

செவ்வாய், 13 அக்டோபர், 2015

எப்போதும் எந்த நேரத்திலும் எந்த நிலையிலும் மற்றவர்களுக்கு உதவிசெய்வதற்கு தயாராக இருந்திடுக


ஒருஇருண்ட இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் இளைஞன் ஒருவன் தன்னுடைய தந்தையின் மகிழ்வுந்து வண்டியை தனியாக ஓட்டிவந்தான். அப்போது வழியில் நடுத்தர வயது கொண்ட பெண்ஒருவள் கையசைத்து கொண்டிருந்தாள். உடன் தன்னுடைய வண்டியை நிறுத்தி அப்பெண்மனியை வண்டியில் ஏற்றிகொண்டு சென்றான். அவர்விரும்பும் இடத்தில் கொண்டுசென்று விட்டுவிட்டு தன்னுடைய வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

ஒருவாரம் கழித்து ஒருபிரபலமானநிறுவனம் ஒன்றில் அவனுக்கு பணிபுரிவதற்கான நியமன கடிதமும் அதனோடு கூடவே ஒரு நன்றிகடிமும் அந்த இளைஞனுக்கு வந்தசேர்ந்தது. அதில் இருண்ட இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நிர்க்கதியாக நின்றிருந்தபோது தனக்கு உதவிசெய்து தன்னுடைய கணவனின் உயிர்போகவிருந்த ஆபத்தான நேரத்தில் அவரை காப்பாற்ற தனக்கு உதவிய அந்த இளைஞனுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அதற்கு கைமாறாக அந்த இளைஞன் தேடிடும் வேலைவாய்ப்பினை அவருடைய கணவனின் நிறுவனம் ஒன்றின் பணிசெய்வதற்கான நியமன உத்திரவை அனுப்பியுள்ளதாகவும் அதனை பெற்று உடன் பணியில் சேருமாறும் கோரியிருந்தது.

இதேபோன்று நாமும் நம்முடைய வாழ்வில் எப்போதும் எந்த நேரத்திலும் எந்த நிலையிலும் மற்றவர்களுக்கு உதவிசெய்வதற்கு தயாராக இருக்கவேண்டும்.

அதனை தொடர்ந்து அவ்வாறு உதவிசெய்வதற்கான நன்றியை தெரிவிப்பதோடு கைமாறு செய்வதற்கும் தயாராக இருக்கவேண்டும்என்ற அடிப்படை நியதியை பின்பற்றிடுக.

இந்தியாவில் இதுபோன்ற நீதிமன்றம் ஏழைக்கு உதவிடும் நிகழ்வு நடைபெறுமா


மார்சுகி எனும் பெயர் கொண்ட இந்தோனேசிய நீதிபதி ஒருவர் இருந்தார். அவர்பணிபுரிந்துவந்த நகரத்திலிருந்த ஒரு தோட்டத்திலிருந்து சில மரவள்ளிக்கிழங்குகளை வயதானகிழவி ஒருவர் திருடிவிட்டார் என்ற வழக்கு அவரிடம் வந்தது. அந்த வயதான கிழவியும் அந்த செயலை தன்னுடைய வறுமையான குடும்பு சூழலால் அதாவது அவருடைய பேத்தி பசியோடு இருந்ததாகவும் அவருடைய மகன் சுகவீனமுற்றிருந்த காரணத்தால் அவருடைய பேத்தியின் பசியினை போக்க அவ்வாறு திருடியாதாக ஒப்புக்கொண்டார்.

ஆனால் , தோட்ட மேலாளர் அந்த வயதான கிழவியினை போன்று மற்ற யாரும் அவருடைய தோட்டத்தில் திருடாமல் தடுப்பதற்காக அந்த வயதான கிழவியை மன்னித்தலுக்கு பதிலாக கண்டிப்பாக தண்டிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி வாதாடினார்.

நீதிபதியானவர் அந்த வயதான கிழவியை பார்த்து ஆவணங்கள் அனைத்தும் மிகச்சரியாக அந்த வயதான கிழவிக்கு ஏதிராகவே இருப்பதாகவும் தான் அந்த வயதான கிழவிக்காக இரக்கபடுவதை தவிர சட்டபடியும் ஆவணத்தின் படியும் தண்டிப்பதை தவிர வேறு வழியில்லை என கூறி அந்த வயதான கிழவியானவள் ஒரு மில்லியன் அமெரிக்கடாலர் அபராதம் செலுத்தவேண்டும் அல்லது 2 1/2 ஆண்டுகள் சிறையில் இருக்கவேண்டும் என சட்டம் கூறுவதால் ஒரு மில்லியன் அமெரிக்கடாலர் அபராதம் விதிப்பதாக தீர்பு கூறினார் .

உடன்அந்த வயதான கிழவி நான் எங்குசென்று அந்த பணத்தை கொண்டுவருவேன் அவ்வளவு தொகை இருந்தால் நான் ஏன் அந்த மரவள்ளிகிழங்கு தோட்டத்திற்கு திருடவந்தேன் என்னுடைய மகனை மருத்துவசிகிச்சை செய்து நன்றாக செயல்படும்படி செய்வேனே என அழுது புலம்பினாள்.

இதனை கண்ணுற்ற நீதிபதி உடன்தன்னுடைய தலையில்அணிந்திருந்த தொப்பியை கழற்றி தன்னுடைய பையிலிருந்து 1000 அமெரிக்க டாலரைஅதில் வைத்து தன்னுடைய உதவியாளரை அழைத்து அந்த நீதிமன்றத்திற்கு வந்துள்ள அனைவரிடமும் அந்த வயதானகிழவிநீதிமன்றத்திற்கு செலுத்தவேண்டிய அபராத தொகைக்கான நன்கொடையை வசூலிக்குமாறு கூறினார்.

உடன் அந்த நீதிபதியின் உதவியாளர் அந்த நீதிமன்றத்திற்கு வந்திருந்த அந்த தோட்டமேலாளரையும் சேர்த்து அனைவரிடமும் நன்கொடை வசூலித்தார். முடிவாக, அவர் அந்த வயதான கிழவி செலுத்தவேண்டிய அபராத தொகையான ஒருமில்லியன் அமெரிக்கடாலரை செலுத்தியபின் மிகுதி இரண்டரை மில்லியன் தொகை இருந்ததை அந்தவயதான கிழவியும் வழங்கி அவருடைய மகனின் மருத்துவசெலவிற்காக அதனை பயன்படுத்தி கொள்ளுமாறு அந்த நீதிபதி அறிவுரைகூறி அனுப்பிவைத்தார்.

நம்முடைய இந்தியாவில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறுமா என யோசித்துபாருங்கள் .

திங்கள், 5 அக்டோபர், 2015

நம்மால் முடிந்த அளவிற்கு மற்றவர்களை மகிழச்சியாக வைத்திட முயற்சி செய்திடுவோம்


ஒரு பத்துவயது சிறுவன் நகரத்தில் இருந்த சிறுவர்களுக்கான தின்பண்டங்கள விற்பணைசெய்திடும் கடை ஒன்றிற்குள் நுழைந்து அங்குவைக்கபட்டிருந்த தின்பண்டங்களுள் பெரியபொருள் ஒன்றின் விலையை விசாரித்தான்

இருபதுரூபாய் என கூறியதும் தன்னுடைய பையிலிருந்த பணத்தை எண்ணிக்கைசெய்தான் தன்னிடம் ரூபாய் இருபது மட்டும் இருப்பதை அறிந்துகொண்ட பின்னர் அதைவிட சிறிய தின்பண்ட பொருளின் விலையை விசாரித்தான்

அதனுடைய விலை பதினைந்து ரூபாய் எனக்கூறியதும் அந்த சிறிய பொருளையே தனக்கு வழங்குமாறு கூறினான் அதற்கான தொகையை வழங்கியபின் அந்த தின்பண்டபொருளை தின்று முடித்துவிட்டு தண்ணீர் குடித்துவிட்டு எழுந்தசென்றான்

உடன் அங்கு பணிசெய்யும் பணியாளர் ஒருவர் அந்த சிறுவன் அமர்ந்து சென்ற இருக்கையை சுத்தம் செய்திடும்போது அங்கு ஐந்துரூபாய் அன்பளிப்பாக வைத்திருப்பதை கண்டு பணியாளர் மிக மகிழ்ச்சியடைந்தார்

ஆம் நாமும் இந்த சிறுவனை போன்று நம்மால் முடிந்த அளவிற்கு மற்றவர்களை மகிழச்சியாக வைத்திட முயற்சி செய்திடுவோம்

நாம் எந்தவழியை பின்பற்றுகின்றோமோ அதற்கற்ப நம்முடைய வாழ்வு அமையும்


இருவேறு கிராமங்கள் அருகருகே இருந்துவந்தன அவற்றுள் கோபம்,பொறாமை , மற்றவர்களின் முதுகில் குத்துவது தந்திரமாக மற்றவர்களின் காலை வாரிவிடுவது , ஏதாவது சண்டை சச்சரவு அடிதடி நடத்துவது என எப்போதும் போர்க்களம் போன்றே முதலில் உள்ள கிராமத்து மக்களின் வாழ்க்கை சூழல் இருந்துவந்தது

அதற்குமாறாக இரண்டாவது கிராமத்தில் உண்மை,நேர்மை,அமைதி, மகிழ்ச்சி மற்றவர்களுக்கு உதவுவது ஒற்றுமையாக இருப்பது ஒருவருக்கொருவர்விட்டுகொடுத்து வாழ்வது என்றவாறான சூழலில் மக்கள் வாழ்ந்துவந்தனர் கால ஓட்டத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகுமுதலில் குறிப்பி்ட்ட கிராமமானது முழுவதும் அழிந்து மக்கள் இருந்ததற்கான அடிச்சுவடே இல்லாமல் போய்விட்டது ஆனால் இரண்டாவது கிராமமானது எப்போதும் போன்று வழக்கமாக சகோதர உணர்வுடன் நீண்டநாட்கள் இருந்து வந்தது

இந்த இருவேறு கிராம மக்களின் வாழ்க்கையின் தன்மைகளில் தனிமனிதனாகிய நாம் எந்தவகையான வாழ்வை தெரிவுசெய்து வாழுகின்றோமோ அதைபொருத்தே நம்முடைய வாழ்வின் இயக்கமும் முடிவும் அமையும் என்பதை மனதில் கொள்க.

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...