சனி, 27 ஜூன், 2015

நம்கீழ் பணிபுரியும் ஊழியர்களின் சிறுதவறுகளை மன்னித்து தவற்றினை திருத்தி இனிஇவ்வாறான தவறுவராமல் கவணமாக செயல்படுமாறு எச்சரிக்கை செய்துவிடுக


முன்னொரு காலத்தில் அரசனொருவன் இருந்தான் அவனிடம் வெவ்வேறுதுறைகளுக்கும் என தனித்தனியான ஏராளமான அளவில் அமைச்சர்கள் இருந்தனர் அவர்கள் அனைவரையும் கட்டுபடுத்துவதற்காக ஒற்றர்களை வைத்து அவரவர்களுடைய அன்றாட நடவடிக்கைகளை அந்தந்த அமைச்சர்களுக்கு தெரியாலேயே கண்கானித்து வந்தார் யாராவது ஒருவர் தவறுஇழைத்து விட்டால் உடன் அந்த அமைச்சருக்கு தண்டனையாக அவர் வளர்த்துவந்த மிககொடூரமான நாய்களுக்கு உணவாக நாய்களுடைய கூண்டில் தள்ளிவிடஉத்திரவிட்டுவிடுவார் அதனால் அமைச்சர்களும் மிகச்சரியாக நேர்மையாக நடந்துகொண்டனர் சிறிய தவறுகளுக்குகூட இதைபோன்ற கொடுமையான தண்டனையை அந்த அரசன் வழங்கிவந்ததால் அமைச்சர்கள் அனைவரும் பயந்து நடுங்கி கொண்டு வாழ்ந்துவந்தனர்

இந்நிலையில் ஒரு அமைச்சர் தவறு இழைத்துவிட்டதாக அந்த அரசனுக்கு தகவல்வந்ததும் உடன் அந்த அமைச்சரை நேரில் அழைத்து விசாரித்து இறுதிதீர்ப்பாக வழக்கமான நடைமுறையான நாய்களுக்கு அந்த அமைச்சரை உணவாகதள்ளிவிடுமாறு உத்திரவிட்டார்

உடன் அந்த அமைச்சர் அந்த அரசனின் கால்களில் விழுந்து வணங்கி நான் ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கமேல் தங்களின்கீழ் பணிபுரிந்துவந்தேன் ஏதோ என்னை அறியாமல் என்னையுமீறி இந்த தவறு நடவிட்டது அதனால் தண்டவழங்குவதில் ஒரு பத்துநாட்கள் மட்டும் அவகாசம் வழங்குங்கள் என கெஞ்சியபோது சரி பத்துநாட்கள்கழித்து அந்த அமைச்சருக்கான தண்டனை வழங்கினால் போதுமென அவகாசம் வழங்கினான்

அதன்பின்னர் அந்த தண்டனைக்குள்ளாகவேண்டிய அமைச்சர் அரசன் வளர்த்திடும் அந்த நாய்களைபராமரிக்கும் பணியாளரிடம் தான் அந்தநாய்களை அந்த பணியாளரிடம் கோரியபோது அவருக்கு அந்தபணியை செய்திடுமாறு அனுமதிவழங்கபட்டது

அதனை தொடர்ந்த அந்த அமைச்சன் அந்த நாய்கள் தண்ணீரல் நன்கு குளிப்பாட்டி அவைகளுக்கு ஒவ்வொரு வேளைக்கும் தேவையான உணவை அந்த அமைச்சரே பரிமாறுதல் செய்து அவைகளை காலாற நடைபயிற்சிக்காக அழைத்து சென்று நன்கு கவணித்துவந்தார்

பத்தநாள் அவகாசம் முடிந்தவுடன் அரசன் அந்த அமைச்சரை தண்டனை வழங்குவதற்காக நேரில் அழைத்து நாய்களின்முன்பு அந்த அமைச்சரை உணவாக வழங்கவதற்கா நாய்களை அந்த அமைச்சர்மீது ஏவினார்

ஆனால் என்ன ஆச்சரியம் நாய்களானது அந்த அமைச்சரை கடித்துகுதறுவதற்கு பதிலாக அந்த அமைச்சரின் காலடியில் வந்து அமர்ந்துகொண்டு அவரை பாசமுடன் வாலைகுழைத்துகொண்டு முகர்ந்து பார்த்தது

உடன் அமைச்சரும் அரசரிடம் ஐயா பத்துநாட்கள்மட்டும் இந்தநாய்களுக்காக பணிசெய்ததும் அவைகள் நன்றியுடன் எனக்குவழங்கிய தண்டனையை நிறைவேற்ற தயங்குகின்றது

ஆனால் தாங்கள் தங்களின் கீழ் பத்தாண்டுகளுக்குமேல் பணிபுரிந்திருந்தும் சிறுதவறுகளை மன்னித்து தவற்றினை திருத்தி இனிஇவ்வாறான தவறுவராமல் கவணமாக செயல்படுமாறு எச்சரிக்கை செய்துவிடமறுக்கின்றீர் என கூறியதை தொடர்ந்து அந்தஅரசன் அந்த அமைச்சர் செய்த சிறு தவறினை மன்னித்து விட்டுவிட்டார்

வித்தியாசமான நேர்முகதேர்விற்கான கேள்வியும்அதற்கான பதிலும்


நேர்முகத்தேர்விற்கான கேள்வி 1.ஒரு ஆளரவமற்ற காட்டில் அதிக மழைபொழிந்து கொண்டிருக்கின்ற இருண்ட இரவுவேளையில் தன்னந்தனியாக நெடுஞ்சாலை ஒன்றில் மகிழ்வுந்தை ஓட்டிசெல்கின்றீர் அப்போது பேருந்து நிறுத்தம் ஒன்றில் இப்போதே இறக்கபோகின்ற தோற்றத்தில் உள்ள ஒருவயதான பாட்டி, முன்பு ஒருநாள் ஆபத்தில் உங்களின் உயிர்காத்த நன்பன்ஒருவன் , உங்களுடைய வருங்கால மனைவி ஆகிய மூன்றுநபர்களும் பேருந்து ஏதேனும் அந்தவழியாக வருமாவென காத்திருப்பதை பார்க்கின்றீர் ஒரேயொருநபரை மட்டுமே உங்களுடைய மகிழ்வுந்தில் ஏற்றிசெல்லமுடியும் என்றநிலையில் இந்த மூவரில யாரை உங்களுடைய மகிழ்வுந்தில் ஏற்றிசெல்ல முடிவு செய்வீர்?

எனநீங்கள் கலந்துகொண்ட நேர்முக தேர்வில் உங்களிடம் கேள்வியை தேர்வாளர் எழுப்பினால் என்னமாதிரியான பதிலை இந்த கேள்விக்கு அளிப்பது பதில்1. உடன் இப்போதே இறக்கபோகின்ற தோற்றத்தில் உள்ள வயதான பாட்டியையே முதலில் என்னுடைய மகிழ்வுந்தில் ஏற்றிசெல்வேன்

பதில்2.ஆபத்தில் உங்களின் உயிர்காத்த நன்பனை என்னுடைய மகிழ்வுந்தில் ஏற்றிசெல்வேன் ஏனெனில் ஆபத்தான நேரத்தில் என்னை காத்ததை போன்று கைமாறு செய்வதே நம்முடைய முதல் கடமையாகும்

பதில3.இதுபோன்ற பெண்ஒருத்தி வருங்காலத்தில் எனக்கு மீண்டும் கிடைப்பது அரிது என்பதால் வருங்கால மணைவியையே முதலில் என்னுடைய மகிழ்வுந்தில் ஏற்றிசெல்வேன்

ஆகிய மூன்று பதில்களில் ஒன்றினை நாமனைவரும் அளித்திடுவோம் ஆனால் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டநபர் நேர்முகத்தேர்வாளரிடம் பின்வரும் வித்தியாசமான பதிலை அளித்தார்

மகிழ்வுந்திலிருந்து கீழே இறங்கி அதனை இயக்குவதற்கான சாவியை உயிர்காத்த நண்பனிடம் வழங்கி உடன் அந்த நண்பனையே மகிழ்வுந்தை ஓட்டிசெல்லும்படியும் கூடவே இப்போதே இறக்கபோகின்ற தோற்றத்தில் உள்ள வயதான பாட்டியை மகிழ்வுந்தில் ஏற்றி செல்லுமாறும் கூறுவேண் மேலும் நான் என்னுடைய வருங்கால மனைவியுடன் அடுத்த பேருந்து ஏதும் வருமா என மகிழ்ச்சியாக காத்திருப்பேன் .

அடுத்ததாக கேள்வி2 நேர்முகதேர்வில் கலந்து கொண்டநபர்முன்பு குடிப்பதற்கான காஃபி டம்ளர் ஒன்று வைக்கபட்டது பின்னர் அந்த நபரிடம் உங்கள்முன்பு உள்ளதுஎன்னவென ஆங்கிலத்தில் what is before you?என்றவாறு நேர்முகத்தேர்வாளர் கேள்வியொன்றை எழுப்பினார்

உடன் நேர்முகத்தேர்வில் கலந்து கலந்துகொண்ட நபர் Tea என பதிலிறுத்தார் உடன் அவர்கூறிய பதில் சரியென நேர்முக்ததேர்வாளரால் ஏற்றுகொள்ளபட்டது ஏனெனில் ஆங்கில அகரவரிசை எழுத்துகளில் u எனும் எழுத்திற்கு முன்பாக வருவது T எனும் எழுத்து ஆகும் அதற்கடுத்ததாக நேர்முக்ததேர்வின் கடைசி கேள்வியாகதேர்வாளர்

கேள்வி3.நம்முன் உள்ள இந்த மேஜையின் சரியான மையபகுதிஎதுவென What is the exact position of the center of this table ? என்றவாறு ஆங்கிலத்தில் வினவினார் அதற்கு தேர்வில் கலந்து கொண்டவர் 'b' என பதிலிறுத்தார் உடன் நேர்முகத்தேர்வாளர் நீங்கள் இந்த பணிக்காக தெரிவுசெய்யபட்டுவிட்டீர் வாழ்த்துகள் என பராட்டினார் ஏனெனில் table எனும் சொல்லில் மையத்தில் 'b' எனும் எழுத்தே உள்ளது .

ஞாயிறு, 21 ஜூன், 2015

எந்தவொரு செயல் நடைபெற்றாலும் அதில் உள்ள நல்லதை மட்டும் பார்க்கும் மனப்பான்மை நமக்கு வரவேண்டும்


ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகளில் அரசன் ஒருவன் இருந்தான் அந்த அந்த அரசனுக்கு மிகநெருங்கிய நண்பன் ஒருவன் இருந்தான் அந்த நண்பன் எந்தவொரு நிகழ்வு ஏற்பட்டாலும் எல்லாம் நன்மைக்கே என நேர்மறையாகவே சிந்தித்து அவ்வாறே செயல்படுவார் ,சொற்களையும் கூறுவார் .

ஒருநாள் அந்த அரசன் தன்னுடைய நண்பனுடன் நாட்டிற்கு அருகிலுள்ள காட்டிற்கு வேட்டையாட சென்றார் அப்போது துப்பாக்கியானது தவறுதலாக அழுத்தியதால் அவருடைய இடதுகையின் கட்டைவிரல் துண்டித்துவிட்டது அந்நிலையில் அவருடைய நண்பன் எல்லாம் நன்மைக்கே பரவாயில்லை கட்டைவிரல் மட்டும்தான் துண்டிக்கபட்டது என கூறினார் உடன் அந்த அரசனுக்கு அதிபயங்கர கோபம் வந்து நான் என்னுடைய கையிலுள்ள கட்டைவிரல் போய்விட்டது என வலியால் துடித்து கொண்டிருக்கின்றேன் நீ அதை பொருட்படுத்தாமல் எல்லாம் நன்மைக்கே என்று கூறுகின்றாயா என கூறி அந்த நண்பரை சிறையில் அடைக்க செய்தார்

அதன்பின்னர் ஓராண்டு கழித்து அந்த அரசன்தூரத்திலிருந்த வேறொரு காட்டிற்கு தனியாக வேட்டையாட சென்றார் அப்போது அந்த காட்டில் வாழும் பழங்குடியின மக்கள் தங்கள் குலதெய்வத்திற்கு பலியிடுவதற்காக நாட்டில் வாழும் மனிதன் ஒருவனை தேடிக்கொண்டிருந்தனர் இந்த அரசன் கிடைத்ததும் அனைவரும் ஒன்றுகூடி இந்தஅசசனை பிடித்து வலுவான கயிற்றால் கட்டி இழுத்து சென்றனர் பின்னர் தங்களுடைய குலதெய்வத்தை கும்பிடுவதற்கான பூஜைகள் செய்யஆரம்பித்தனர்

அதன்பின்னர் இந்த அரசனை பலியிடுவதற்காக பிடித்து இழுத்துசென்று தண்ணீரை கொட்டி குளிப்பாட்டினர் இறுதியாக அவரை பலியிடுவதற்காக கத்தியை ஓங்கி வெட்டமுனையும் போது பூசாரி இவருடைய இடதுபுற கையில் கட்டைவிரல் இல்லாமல் இருப்பதை பார்த்து நிறுத்துங்கள் நாம் நம்முடைய குலதெய்வத்திற்கு முழுமையான மனிதனையே பலியிடவேண்டும் இவன் கைவிரல் துண்டிக்கபட்டு குறையுள்ள மனிதனாக இருக்கின்றான் அதனால் இவனை பலியிடகூடாது ஆகையினால் இவனுடைய கட்டினை அவிழ்த்து இவனை காட்டின் ஓரம் கொண்டுசென்றுவிட்டிடுங்கள் என கூறியதை தொடர்ந்து அவ்வாறே இந்த அரசனை உயிருடன் காட்டின் ஓரம் விட்டுசென்றனர்.

உயிர்தப்பித்தால் போதுமென ஓடோடி வந்த அந்த அரசன் அன்று வேட்டையாடும்போது நம்முடைய இடதுகை கட்டைவிரல் தவறுதலாக துண்டித்ததை நம்முடைய நன்பன் எல்லாம் நன்மைக்கே என கூறியதை தவறுதலாக எண்ணி சிறையில் அடைத்துவிட்டோமே என மனம் வருந்தி உடன் நேரடியாக சிறைக்கு சென்று நன்பனை விடுதலை செய்து நன்பா என்னை மன்னித்துவிடு உன்னை தவறாக நினைத்துவிட்டேன் என கூறினார்

இப்போது ம் அந்த நன்பன் எல்லாம் நன்மைக்கே என கூறினான் இப்போதும் ஏன் அவ்வாறு கூறுகின்றாய் என வினவியபோது அவ்வாறு நான் சிறையில் அடைக்கபடாமல் இருந்திருந்தால் உனக்கு பதிலாக என்னை அந்த பழங்குடியின மக்கள் பலியிட்டிருப்பார்கள் அல்லவா அதிலிருந்து நான் உன்னுடைய சிறை தண்டனையால் தப்பினேன் என கூறினான்

ஆம் எந்தவொரு செயல் நடைபெற்றாலும் அதில் உள்ள நல்லதை மட்டும் பார்க்கும் மனப்பான்மை நமக்கு வரவேண்டும்

பொருட்களை கட்டிடும் கட்டுகளின் மீது உள்ள பார்கோடு எவ்வாறு உருவாக்கபட்டது?


தற்போது பெரும்பாலான கடைகளில் பொருட்களை வாங்க சென்றால் இறுதியில் அந்த பொருட்களை கட்டபட்ட கட்டின்மீது கோடுகள் நிரைந்த பகுதியை வருடி இயந்திரத்தால் வருடபட்டு உடன் அந்த பொருளின் பெயர் விலைஆகியவை பட்டியலாக இடுமாறு செய்யபடுகின்றன பொருட்களை கட்டபட்ட கட்டின்மீது உள்ள கோடுகளை பார்கோடு என அழைக்கின்றனர் இந்த பார்கோடு எவ்வாறு உருவானது என உங்களுக்கு தெரியுமா?

பெரிய நிறுவனம் ஒன்று தங்களின் கடைகளில் விற்கப்படும் ஆயிரக்கணக்கான பொருட்களை வாங்கி செல்ல வருபவர்கள் ஒவ்வொருவருக்கும் பட்டியல் எழுதி பணத்தை பெற்றுகொண்டு அவர்கள் எடுத்துசெல்லும் பொருட்கள் சரியாக உள்ளதாவென சரிபார்ப்பது மிகசிரமமான பணியாக இருந்ததை தீர்வுசெய்வதற்கான கருவியொன்று கண்டுபிடித்திடுமாறு பொறியியலார்களை கேட்டுகொண்டனர்

பொறியியலார்களும் குழுவாக ஆற்றின் மனலில் உட்கார்ந்து இதுகுறித்து விவாதித்து கொண்டிருந்தபோது ஒருவர் தன்னுடைய கையை மணலில் ஊண்றி எழ ஆரம்பித்தார் அப்போது அவருடைய கைவிரல்கள் ஐந்தும் வெவ்வேறு அளவான கோடுகளாக உருவானதை தொடர்ந்து அவர் மற்ற நண்பர்களிடம் பார்த்தீர்களா நண்பர்களே நம்முடைய கையில் உள்ள ஐந்துவிரல்களும் ஒவ்வொரு அளவான கோடுகளை உருவாக்குகின்றன ஒவ்வொரு கோடும் ஒவ்வொன்றை குறிப்பிடுமாறு செய்து நாம் விற்பணைசெய்திடும் பொருட்களைில் ஒரு கோடு பொருளின் பெயரையும் மற்றொரு கோடு பொருளிற்கான விலையையும் பிரிதொருகோடு பொருளின் வேறு விவரங்களையும் அறிந்துகொள்ளுமாறு செய்திடலாம் என கூறியதை தொடர்ந்து அனைவரும் விவாதித்து அவ்வாறே செய்வது எனவும் அந்த கோடுகளை உருவாக்குவதற்கான இயந்திரத்தையும் அந்தகோடுகளை படித்தறிவதற்கான இயந்திரத்தையும் கண்டுபிடித்தனர் இவ்வாறே பொருட்களை கட்டபட்ட கட்டின்மீது பார்கோடு உருவாக்கபட்டது

சனி, 13 ஜூன், 2015

அனைவரும் முன்பின் யோசிக்காமல் மற்ற அனைவரையும் நம்முடைய போட்டியாளராக தவறாக எண்ணிக்கொண்டு நம்முடைய வாழ்வை வீணாக்கி கொள்கின்றோம்


தற்போது நம்மில் பெரும்பாலானவர்கள் தினமும் வேகநடை பயிற்சி செய்து வருகின்றனர் அவ்வாறு வேகநடை பயிற்சியை செய்துவரும் நான் ஒருநாள் எனக்கு முன்பு சிறிது தூரத்தில் ஒருவர் என்னை போன்றே வேகநடைபயிற்சி செல்வதை கண்ணுற்றதும் அவரை எப்படியாவது முந்தி செல்லவேண்டும் என கூடுதலான வேகத்தில்சென்றேன்

அவருடைய அருகில் செல்ல செல்ல என்னுடைய நடையின் வேகத்தையும் கூட்டிகொண்டே சென்று ஒருசமயத்தில் ஓட்டபந்தயவீரன்போன்று ஓடிக்கொண்டிருந்தான் அவரை தாண்டும் சமயத்தில் மின்னல் போன்று தலைதெறிக்கும் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தேன் அவரை கடந்து கொஞ்சதூரம் சென்றபோது திரும்பி அவரை பார்த்தேன் அவர் வெகுதூரத்தில் வருவது தெரிந்தது

இனி அவரால் என்னை தாண்டி செல்லமுடியாது என இறுமாப்புடன் பழையபடி தலைமுன்புறம் திருப்பிடும்போது பாதையில் இருந்த சிறுகல் ஒன்று என்னுடைய காலை தடுத்து தலைகுப்புற விழ செய்தது வேகமாக ஓடிவந்ததால் சமாளித்து நிற்கவும் முடியவில்லை எழுந்திடவும் முடியவில்லை அந்த போட்டியாளராக என்னிய அந்த நபர் நான் விழுந்திருக்கும் இடத்திற்கு வந்து அண்ணே ஏன் இவ்வாறு தலைதெறிக்க ஓடிவந்தீர் என கூறி என்னை கைதூக்கி எழுந்துநிற்க உதவிசெய்தது மட்டுமல்லாது உடன் எங்களுடைய வீடுவரை என்னை கொண்டுவந்த விட்டு சென்றார் அதன்பின்னர் பலநாட்கள் நடைபயிற்சிக்கே செல்லமுடியாத நிலைஏற்பட்டது

ஆம் நாம் அனைவரும் முன்பின் யோசிக்காமல் கல்வி வேலைவாய்ப்பு தொழில் ஆகிய அனைத்திலும் மற்ற அனைவரையும் நம்முடைய போட்டியாளராக தவறாக எண்ணிக்கொண்டு நம்முடைய திறனைவிடஅதிகமுயற்சிசெய்து நம்முடைய அமைதியாக சென்றது கொண்டிருக்கும் நம்முடைய வாழ்வை வீணாக்கி கொள்கின்றோம்

நாம் அனைவரும் மனிதாபிமானஅடிப்படையில் மற்றவர்களுக்கு உதவிசெய்திடகூட முடியாத அவசரஉலகில் நாம் வாழ்ந்துவருகின்றோம்


இளம்வயதுபுதிய தொழில் அதிபர் ஒருவர் மிகமுக்கியமான பணியை உடனடியாக முடிப்பதற்காக தன்னுடைய மகிழ்வுந்தில் மிகவேகமாக சென்றுகொண்டிருந்தார் அந்த மகிழ்வுந்தை அவருடைய நிறுவனத்தின் ஓட்டுனர் ஓட்டிகொண்டிருந்தார் இந்நிலையில் திடீரென மகிழ்வுந்தின் பக்கவாட்டில் டப் எனும் மோதிடும் சப்தம் ஏற்பட்டது உடன் மகிழ்வுந்து ஓட்டுனர் வண்டியை நிறுத்தி பார்த்தபோது சிறுகல்ஒன்று வண்டியில் சிறியஅளவிற்கு கீரல் ஒன்று விழுமாறு வந்து மோதியுள்ளது தெரியவந்தது.

அருகில் சிறுவன்ஒருவன் இருந்ததை பார்த்ததும் மகிழ்வுந்து ஓட்டுனருக்கு அளவிற்கு அதிகமான கோபம் வந்து “அடேய் எப்படியடா எங்களுடைய புதிய மகிழ்வுந்தை கல்லால் அடித்திடமுடியும் இந்த மகிழ்வுந்தின் விலையென்ன தெரியுமா அடிபட்டதை சரிசெய்வதற்கான பணத்தை உன்னால் கொடுக்கமுடியுமா?” என திட்டஆரம்பித்தார்

அப்போது அந்த சிறுவன் “ஐயா அவ்வாறு சிறுகல்லால் உங்களுடைய மகிழ்வுந்தினை அடித்ததை மன்னித்திடுங்கள் ஐயா நடமாடமுடியாத என்னுடைய சகோதரன் அமர்ந்திருந்த சக்கர நாற்காலியில் இருந்து வீழ்ந்துவிட்டான் அவனை என்னால் தூக்கி நிமிர்த்தி பழையபடி அந்த சக்கர நாற்காலியில் உட்காரவைக்கமுடியவில்லை துனைக்கு ஆட்கள் யாரும் இல்லை இந்த வழியே போகின்றவர்கள் அனைவரும் தலைதெறிக்கும் வேகத்தில் செல்கின்றனரேயொழிய எங்களின் நிலையை பார்த்து எங்களுக்கு உதவமுன்வரவில்லை அதனால்தான் யாருடைய கவணத்தையாவது கவரவேண்டுமென்பதற்காக அவ்வாறு சிறு கல்லை தூக்கிஎறிந்தேன்” என கெஞ்சி அழுதபோது

நான்மனமிறங்கி “ஒட்டுனரே அந்த சிறுவன் கோரும் உதவியை உடன் செய்திடுங்கள்” என கூறியதும் மகிழ்வுந்து ஓட்டுனரும் உடன் அந்த சிறுவன் கூறிய உதவியை செய்தபின எங்களுடைய பயனத்தை தொடர்ந்தோம்

ஆம் தற்போது நாம் அனைவரும் மனிதாபிமானஅடிப்படையில் மற்றவர்களுக்கு உதவிசெய்திடகூட முடியாத அவசரஉலகில் நாம் வாழ்ந்துவருகின்றோம்

ஞாயிறு, 7 ஜூன், 2015

எந்தவொரு நிகழ்வையும் நமக்கு சாதகமாக மாற்றி பயனுள்ளதாக ஆக்கிகொள்வதே சிறந்த வழிமுறையாகும்


இந்திய கிராமம் ஒன்றில் ஒரு பணக்கார வீட்டில் வேலைசெய்திடும் வேலைக்காரன் தன்னுடைய முதலாளியின் வீட்டில் பயன்படுத்துவதற்கான தண்ணீரை தூரத்திலிருந்த ஒரு ஓடையிலிருந்து இரண்டு மண்பாணைகளில் நிரப்பி அவைகளை ஒரு நீண்ட தடியின் இருபுறமும் கட்டிதொங்கவிட்டு தோளில் தூக்கி கொண்டு வந்து சேர்ப்பது வழக்கமாகும்.

அவ்வாறு இரு பாணைகளில் தண்ணீரை தோளில் சுமந்துவரும்போது ஒரு பக்கத்திலிருந்த பாணையில் ஏதோவொரு காரணத்தால் கீரல்ஆகிவிட்டது அதனால் அந்த கீரலின்வழியாக பாணையிலிருந்த தண்ணீரானது வழிநெடுக தரையில் ஒழுகி வீணாகி கொண்டே வந்து கடைசியில் முதலாளியின் வீட்டிற்கு வரும்போது அரை பாணை அளவிற்கு மட்டுமே மிஞ்சியிருக்கும்.

மற்றொரு பாணையின் தண்ணீர் வீணாகமல் முழுவதுமாக கொண்டுசென்று சேர்ந்துவிடும் இவ்வாறான வழக்கமான நடைமுறையால் ஓட்டையாகத பாணையானது ஓட்டையான பாணையை பார்த்து “நான் உண்மையாக இந்த முதலாளிக்காக உழைத்து முழுமையாக தண்ணீரை கொண்டுவந்துசேர்க்கின்றேன். நீயோ கீரல்விழுந்து பாதிதண்ணீரை கொண்டுவரும் வழியிலேயே காலிசெய்துவிடுகின்றாய் பார்த்தாயா” என நக்கலாக கேலிசெய்து பேசியது அவ்வாறான கேலியான பேச்சினை கேட்டதும் கீரல் விழந்த பாணைக்கு மிகவும் வெட்கமாக போய்விட்டது. அதனால் அந்த கீரல் விழந்த பாணையாநது பணியாளரிடம் “ஐயா! என்னுடைய உடலில் கீரல் ஆகிவிட்டது அதனால்

நீங்கள் சுமந்து செல்லும் தண்ணீரில் பாதியை வழிநெடுக கீழே வீணாக சிந்திகொண்டேவந்து வீணாக்கிவிடுகின்றேன் அதனை தொடர்ந்து நம்முடைய முதலாளியிடம் என்னுடைய திறமை யின்மையால் உங்களுக்கு கெட்டபெயர் வாங்குமாறு ஆகிவிட்டது அதனால் முதலில் என்னை மன்னித்து கொள்ளுங்கள் ஐயா!” என கூறியது

உடன் “அடடா ஏன் நீ என்னிடம் மன்னிப்பு கோருகின்ராய் நீ வழிநெடுக தண்ணீரை சிந்துவதை பார்த்து அந்த பக்கத்தில் அழகிய பூவிதைகளை தூவி தற்போது அழகழகான பூக்கள் பூத்து குலுங்குகின்றன அந்த பூக்களை பறித்து நம்முடைய முதலாளி வீட்டம்மா தலையில் வைத்துகொள்ளவும் படங்களில் மாலை கட்டி அணிவிக்கவும் பயன்படுத்திகொள்ளபடுகின்றது தெரியுமா? எந்தவொரு நிகழ்வையும் நமக்கு சாதகமாக மாற்றி பயனுள்ளதாக ஆக்கிகொள்வதே சிறந்த வழிமுறையாகும். இதற்காக வருத்தபடாதே!” என ஆறுதல் கூறினான் அந்த வேலைக்காரன்

ஆம் நாமும் நம்முடைய வாழ்வில் நடைபெறும் எந்தவொரு நிகழ்வையும் நமக்கு பயனுள்ளதாக மாற்றியமைத்து பயன்பெறுவோம் என உறுதிகூறுவோம்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...