ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

எந்தவொரு அவசரமாக இருந்தாலும் மிககவணமாக சரியான முடிவெடுத்து சரியானமருத்துவ சிகிச்சையை எடுப்பதே சிறந்தது


நன்பர் ஒருவர் குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உறவினர் வீடுகளுக்கு செல்வது வழக்கமான செயலாகும் அவ்வாறு சென்றிட்டபோது இரவில் நன்பருடைய கண்களில் வலி அதிகமாக இருந்ததால் வலிநிவாரன சொட்டுமருந்து கோரியபோது குளிர்வூட்டும் பெட்டியில் இருப்பதை அறிந்து கண்வலியின் தாங்கமுடியாத நிலையில் அவசரசத்தில் ஏதோவொரு சொட்டுமருந்தினை கண்களில் பயன்படுத்தி கொண்டார்

உடன் கண்வலிபோய்விட்டது ஆனால் கண்களின் பார்வையானது தீரைமூடியவாறான தோற்றம் ஏற்பட்டுவிட்டது அதனால் நன்பரின் உறவினரின் உதவியுடன் அருகிலிருந்த மருத்தவமனைக்கு சென்று பார்த்தபோது நல்ல கண்மருத்துவரை அனுகி சரிசெய்துகொள்ளுமாறு அவர் வழிகாட்டிவிட்டார் அதனால்உறவினரின் உதவியுடன் சிறப்பு கண்மருமருத்துவரை அனுகினார் அந்த கண்மருத்துவரும் உடனடியாக அவரை பரிசோதித்து மிகச்சிரியான மாற்றுமருந்தினை கண்ணிற்கு இட்டு சிறிதுநேரம் ஓய்வெடுக்க செய்தார் அதன்பின்னர் நன்பருடைய கண்பார்வை பழைய வழக்கமான நிலைக்கும திரும்பியது

ஆம் பொதுவாக நாம் அனைவருமே அவசரத்தில் தவறான மருத்துவ சிகிச்சை எடுத்து அல்லல் உறுகின்றோம் எந்தவொரு அவசரமாக இருந்தாலும் மிககவணமாக சரியான முடிவெடுத்து சரியானமருத்துவ சிகிச்சையை எடுப்பதே சிறந்தது என பரிந்துரைக்கபடுகின்றது

வாழ்க்கையை நேர்மறையாக சிந்தித்து நல்லதே நடக்கும் என செயல்படுக


நம்முடைய நாட்டில் தற்போது சுதந்திரமான பொருளாதார கொள்கைகளை பின்பற்றுவதை தொடர்ந்து நன்பர் ஒருவர் அவர் பணிபுரிந்து வந்த நிறுவனமானது அந்நிறுவனத்திலிருந்து அவரை பணிநீக்கம் செய்துவிட்டது. அதனால் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்முதல்செய்து வாழ்வதற்கே மிககசிரமமான நிலைக்கு அவருடை குடும்பம் தள்ளபபட்டது. மேலும் அவருடைய பிள்ளைகளை தரமான பள்ளிகளில் கல்விகற்பதற்காக சேர்க்கமுடியாமல் அல்லாடும் நிலைக்கு அவர் ஆளாக்கபட்டார் அதுமட்டுமல்லாது அவர்குடியிருந்த வாடகை வீட்டின் சொந்தக்காரரர் உடன் அவரை வீட்டினை காலிசெய்திடுமாறு நிர்பந்த படுத்தினார் இந்நிலையில் அவருடைய மாமனார் இறந்துவிட்டதால் மனைவி மிக துக்கத்தில் அழுதுகொண்டிருந்தாள் மேலும் நன்பர் சாலைவழியேநடந்து செல்லும்போது அந்தவழியே சென்றுகொண்டிருந்த சுமையுந்துவண்டி ஒன்று அவர்மீது மோதி அவருடைய உடலில் ஏராளமான காயங்களை ஏற்படுத்திவிட்டு சென்றதால் உடன் அந்நன்பரை அரசுமருத்துவமனையில் கொண்டுசென்று சேர்த்திருந்தனர் ஆம் துன்பம் வரும்போது நமக்கு நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் துன்பம் தருபவையாகவே வந்து சேருகின்றன என்னசெய்வது என திகைத்து அல்லாடும் நிலைக்கு தள்ளபடுவதே இயற்கையாக உள்ளது

இந்நிலையில் பொதுவாக நம்முன் இருவேறு மாற்று வழிகளே நாம் தெரிவுசெய்து பின்பற்றுவதற்காக தயாராக இருக்கின்றன ஒன்று இவ்வாறான துன்ப சூழலில் சிக்கிமூழ்கி தன்னுடைய வாழ்க்கையை முடிந்துபோனதாக முடிவுசெய்து குடும்பத்துடன் அல்லது தான்மட்டும் வாழ்வை முடித்துகொள்வது இரண்டாவது வழியாக வாழ்வில் எத்தனை துன்பம் வந்தாலும் அவைகளை வெற்றிகொள்வோம் என இந்த துன்பநிகழ்வுகளுக்கு சரியான தீர்வினை கண்டு வெற்றிகொள்வது

நன்பர் இரண்டாவது வழிமுறையை பின்பற்றினார் அதாவது அவர்மிகவும் பொறுமையாக இந்த துன்பநிகழ்வுகளை எதிர்கொண்டு சரியான காலம்வரும்வரை காத்திருந்தார் தொடர்ந்து விபத்தினால் ஏற்பட்ட காயங்களும் ஆறிவிட்டதால் உடல்நிலையும் சரியாகிவிட்டது அதன்பின்னர் நல்லநிறுவனம் ஒன்று இவருடைய பணிஅனுபவத்தையும் கல்வித்தகுதியை கருத்தில்கொண்டு மிகப்பெரிய பதவியை போதுமான சம்பளத்தில் குடியிருப்பதற்கென ஒருகுடியிருப்புவீட்டுடன் வழங்கியது மேலும் தங்களுடையபிள்ளைகளையும் நல்ல தரமான பள்ளியில் சேர்த்தார் அவருடைய குடும்ப வாழ்க்கையும் பொருளாதார சிக்கலில்இருந்து மீண்டுநல்லைநிலைக்கு வந்தேசேர்ந்தது ஆம் துன்பத்தில் மூழ்கிடாமல் நல்லதை நினைத்து நல்லதையே செய்தால் நல்லநிகழ்வுகளை தொடர்ந்து வருவது இயற்கையாகும்

பெரும்பாலானவர்கள் முதல்முடிவையே தெரிவுசெய்வார்கள் அவ்வாறான நிகழ்வுகளின் செய்திகளையே நாம் நாளிதழ்களில் தினமும் ஏராளமான அளவில் பார்த்து வருகின்றோம் அவ்வாறான வழிமுறையை தெரிவுசெய்வது தவறாகும் எப்போதும் வாழ்க்கையை நேர்மறையாக சிந்தித்து நல்லதே நடக்கும் என நன்பரை போன்று இரண்டாவது வழிமுறையை தெரிவுசெய்வதே சரியான முடிவாகும்

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

எந்தவொரு சூழலையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி தன்னுடைய பணியை தொய்வின்றி செய்பவனக்கு வெற்றி கண்டிப்பாக கிடைக்கும்


ஒருவிவசாயி தன்னுடைய நிலத்தில் விதைவிதைத்துவந்தார் அப்போது இருவிதைகள்மட்டும் தவறி அவருடைய நிலத்தை தாண்டி அருகிலுள்ள பயிரபடாத நிலத்தில் விழுந்தன அவையிரண்டில் ஒருவிதைமட்டும் பரவாயில்லை என மனதை தேற்றிகொண்டு இந்த நிலத்திலும் நன்கு வேர்ஊன்றி வளர்ந்து வழக்கமான செயலை செய்வேன் என கிடைத்த ஈரப்பதத்தை கொண்டு முளைக்க ஆரம்பித்தது மற்றொரு விதையோ கட்டாந்தரைபோன்ற இந்த நிலத்தில் எவ்வாறு முளைப்பது வேரைஊன்றி வளருவது இந்த செயலிற்கு போதுமான தண்ணீர் நம்க்கு கிடைக்குமோ கிடைக்காதோ என மன குழப்பத்தில் அப்படியே கிடந்தது ஒருவாரம் கழித்தபோது முதல்விதை நன்குமுளைத்து ஒருசில இலைகளுடன் தரைக்குமேலை விரித்து வளருவதற்கான அறிகுறியை காண்பித்தது ஆனால் இரண்டாவது விதை முளைவிடாமல் அப்படியே இருந்ததால் அங்குவந்த பறவை ஒன்று அந்த விதையை இரையாக உட்கொண்டு சென்றுவிட்டது

ஆம் எந்தவொரு சூழலையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி தன்னுடைய பணியை தொய்வின்றி செய்பவனக்கு வெற்றி கண்டிப்பாக கிடைக்கும் சூழலைகண்டு சோர்வடைபவன் தோல்வியுறுவான் என்பது நிச்சயமாகும்

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

நாமனைவரும் ஒருகாலத்தில் முதியோர் இல்லம் நோக்கி செல்ல இருப்பவர்களே


நகரத்தில் வாழ்ந்து வந்த மனிதன் ஒருவனுடைய வயதான தந்தையும் தாயும் கிராமத்தில் வாழ்ந்துவந்தனர் குறிப்பிட்ட காலமுடிவில் அவனுடைய தந்தை இறந்துவிட்டதால் தாயை தனியாக கிராமத்தில் விட்டுவிட விருப்பம் இல்லாமலும் தன்னுடன் அழைத்து சென்று வைத்துகொள்ளவழியில்லாமலும் தவித்தபோது முதியோர் இல்லம் ஒன்று கிராமத்திற்கு அருகிலிருந்த நகரத்தில் இருந்ததை அறிந்து அங்கு தன்னுடைய தாயை மட்டும் கொண்டு சென்று சேர்த்தான்

பின்னர் அவ்வப்போது அந்த முதியோர் இல்லத்திற்கு சென்று தன்னுடைய தாயை பார்த்து நலம் விசாரித்து வந்தான் இந்நிலையில் திடீரென அவனுடைய தாயினுடைய உடல்நிலை சரியாக இல்லாததால் உடன்வருமாறு அவனுக்கு அழைப்பு வந்தது அவனும் பதறியடித்துகொண்டு அந்த முதியோர் இல்லத்திற்கு சென்று தாயின் அருகே அமர்ந்து அவருடைய உடல்நலனை பற்றி பேசிக்கொண்டிருந்தான்

அப்போது அந்ததாய் தன்னுடைய மகனிடம் தம்பி உடனே இந்த முதியோர் இல்லத்திற்கு காற்றோட்டமாக இருப்பதற்கு போதுமான எண்ணிக்கையில் காற்றாடிகள் வாங்கி வழங்கு அதன்பின்னர் பச்சை காய்கறிகள் உணவுபொருட்கள் போன்றவை காய்ந்து கெட்டுபோகாமல் இருப்பதற்கான குளிர்பதனபெட்டி ஒன்று வாங்கி கொடுத்திடு என படுக்கையில் இருந்தவாறு கட்டளையிட்டதை தொடர்ந்து இவ்வளவு நாள் இருந்தபோது குறையேதும் கூறாமல் இருந்துவிட்டு இப்போதுமட்டும் இந்தகுறைகளெல்லாம் உள்ளன உடன் தீர்வுசெய்திடுமாறு கூறுகின்றாயே என வினவியபோது

நான் அந்த கால மனஷி தம்பி எப்படியோ நான் இதுவரையில் சமாளித்துவிட்டேன் வருங்காலத்தில் உன்னுடைய பிள்ளைகள் உன்னை இங்குதானே கொண்டுவந்து சேர்ப்பார்கள் அப்போது அவை உனக்கு உதவியாக இருக்கமல்லவா என பதிலிறுத்தாள் அந்த தாய்.

ஆம் நாமனைவரும் ஒருகாலத்தில் முதியோர் இல்லம் நோக்கி செல்ல இருப்பவர்களே என்ற உண்மைய உணர்ந்து செயல்படுக

அருஞ்சொற்பொருள் விளக்க கதைகள்


கடந்த வருடம் மழைசரியாக பொழியாததால் கிராமத்தின் வாழ்க்கை மிகசிரமமாக இருந்தது அதனால் அந்த கிராமக்கள் அனைவரும் கூடி அந்த கிராமத்தின் பிரபலமான கோவிலிற்கு மழைவேண்டி ஊருனிபொங்கல் வைக்கசென்றனர் அந்த விழாவிற்கு ஒரேயொருநபர் மட்டும் மழைவந்தால் நனையாமல் இருப்பதற்காக குடை ஒன்று எடுத்து சென்றார் அதுவே மழை கண்டிப்பாக வரும் என்ற உண்மையான நம்பிக்கை(FAITH )யாகும்

பெற்றோர்களில் சிலர் தங்களுடைய பிள்ளைகளை உயரேதூக்கி வீசி எறிந்து பிடித்திடுவார்கள் அந்த குழந்தைகளும் மகிழ்ச்சியுடன் சிரி்த்துகொண்டிருக்கும் அந்த பிள்ளைகளும் நாம் தவறி தரையில் விழமாட்டோம் அவ்வாறு விழாமல் நம்மை பெற்றோர்கள் பிடித்துகொள்வார்கள் என சிரித்தபடி இருக்கும் அதுவே பொறுப்புறுதி நம்பிக்கை(TRUST)யாகும்

ஒவ்வொருநாளும் மறுநாள்காலை நாம் எழுவது சந்தேகமே இருந்தாலும் நாமனைவரும் ஐந்துமணிக்கு எழுவதற்காக அலாரம் அடிக்குமாறு அமைத்துவிட்டு படுக்கசெல்வோம் அதுவே நம்முடைய வாழ்விற்கான நம்பிக்கை(HOPE)யாகும்

எதிர்காலத்தை பற்றி ஒன்றும் தெரியாமலேயே எதிர்காலத்தில் இந்திந்த செயலை சாதிக்கபோவதாக திட்டமிடுகின்றோம் இதுவே தன்னம்பிக்கை(CONFIDENCE )யாகும்

இவ்வுலகில் பலரும் நோய்நொடியால் அவதியுறுவதை பார்த்தபின்னரும் நாம் அனைவரும் திருமணம் செய்துகொண்டு மனைவி மக்கள் என வாழ எண்ணுகின்றோம் அதுவே மனித நேயம் அல்லதுஅன்பு (LOVE )ஆகும்

எண்பது வயது கிழவன் ஒருவன் அறுபத்திநான்கு வருடஅனுபவமுள்ள பதினாறு வயது வாலிபன் இவன் எனும் வாசகத்துடன் கூடிய ஒரு பதினாறு வயது வாலிபனினுடைய உடையை அணிந்துகொண்டு இருந்தான் அதுவே மனப்பாங்கு (ATTITUDE)ஆகும்

எந்தவொரு சூழ்நிலையிலும் எந்தவொரு பிரச்சினையையும் சாதுரியமாக கையாளதெரிந்திருந்தால் வாழ்வின் இயக்கம் தங்குதடையின்றி செல்லும்


ஆல்பர்ட ஐன்ஸ்டின் எனும் அறிவியல் அறிஞர் தன்னுடைய புகழ்பெற்ற சார்பியில் கொள்கை பற்றி பல்வேறு பல்கலைகழகங்களுக்கும் சென்று விளக்க சொற்பொழிவு ஆற்றிவருவது வழக்கமான செயலாகும்

அவ்வாறான சொற்பொழிவிற்கு சென்றுகொண்டிருக்கும்போது ஒருநாள் அவருடைய மகிழ்வுந்து வண்டியை ஒட்டும் செல்லும் ஓட்டுநர் ஐயா நான் உங்களுடைய புகழ்பெற்ற சார்பியில் கொள்கை பற்றிய விளக்க சொற்பொழிவை பலமுறை கண்டு கேட்டு வருவதால் எனக்கு மனப்பாடமாக ஆகிவிட்டது அதனால் நானே அதனை பற்றி விளக்க சொற்பொழிவு ஆற்றும் அளவிற்கு எனக்கு தன்னம்பிக்கை வந்துவிட்டது என கூறியவுடன் உனக்கு ஒருவாய்ப்பு தருகின்றேன் எனக்கு பதிலாக இன்று நீஅந்த விளக்க சொற்பொழிவு ஆற்றுக என ஆல்பர்ட ஐன்ஸ்டின் பதிலளித்ததும்

உடன் இருவரும் உருவத்தை மாற்றியமைத்துகொண்டு இடமாறி அமர்ந்து பல்கலைகழகத்திற்குள் சென்று மேடையில் அன்றைய சார்பியில் கொள்கை பற்றிய விளக்க சொற்பொழிவு பார்வையாளர்களிடம் அந்த மகிழ்வுந்து ஓட்டுநராலேயே வழங்கபட்டது

கூட்டமுடிவில் பார்வையாளர்களில் ஒருவர் தன்னுடைய சார்பியில் கொள்கை பற்றிய சிற சந்தேகத்தை நிவர்த்தி செய்திடுமாறு கோரியபோது அதுஎன்ன பிரமாதம் உங்களுடைய சந்தேகத்தை என்னுடை மகிழ்வுந்து ஓட்டுநரே நிவர்த்திசெய்வார் என ஐன்ஸ்டினை அழைத்து அவரிடம் அந்த சந்தேகத்தை கூறிடுமாறு திசைதிருப்பியபின்னர் ஐன்ஸ்டினும் பார்வையாளர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்தார்

ஆம் எந்தவொரு சூழ்நிலையிலும் எந்தவொரு பிரச்சினையையும் சாதுரியமாக கையாளதெரிந்திருந்தால் வாழ்வின் இயக்கம் தங்குதடையின்றி செல்லும் என அறிந்து கொள்க

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

நல்ல நிகழ்வையும் திரும்பு திரும்ப கேட்கும்போது நம்முடைய மனமும் உடலும் அதற்கேற்ப தகவமைத்து புணரமைத்து கொள்கின்றன


ஒருமருத்துவமனையில் இருநோயாளிகள் அருகருகே இரு படுக்கைகளில் சேர்க்கபட்டு ஒருவர் சாளரத்திற்கு அருகேயும் மற்றவர் உள்பகுதியில் இருந்த படுக்கையிலும் அனுமதிக்கபட்டு மருத்துவசிகிச்சை அளிக்கபட்டுவந்தனர்

இருவரும் தங்களுடைய குடும்பவிவரங்களை தங்களுக்கு பகிர்ந்துகொண்டு சிறந்த நண்பர்களாக மாறிவிட்டனர் சாளரத்தின் ஓரம் இருந்தவர் தான் சாளரத்தின் ஓரம் உள்ள படுக்கையில் இருப்பதால் அருகே இருந்த அழகிய நீர்நிலையை பற்றியும் அதில் உள்ள நீர்வாழ் மரங்களை பற்றியும் நீந்திதிரியும் பறவைகளை பற்றியும் இயற்கைகாட்சிகளை அழகாக விவரித்துகொண்டு இருப்பார் உள்பகுதியில் உள்ள மற்றொருவர் அந்த இயற்கை காட்சிகளை பார்க்கஇயலாது ஆனாலும் தன்னுடைய கண்ணை மூடிக்கொண்டு மனக்கண்ணில் அந்த இயற்கை காட்சிகளை கண்டு மகிழ்வார்

இவ்வாறான நிகழ்வு தொடர்ந்து இருந்துவந்ததால் உள்பகுதியில் இருந்தவர் விரைவில் நன்கு குணமடைந்துவந்தார் ஒருநாள் சாளரத்தின் ஓரம் இருந்தவர் படுக்கையிலிருந்து எழாமல் இருப்பதை பணியிலிருந்த செவிலியர் உடன் பார்த்து மருத்துவரை அழைத்து காண்பித்தபோது அவர் இறந்துவிட்டார் என அறிவித்து உடன் அவருடைய உடல் எடுத்துசெல்லபட்டு அந்த சாளரத்தின் ஓர படுக்கைக்கு உள்பகுதியில் நன்கு தெளிவடைந்துவருபவரை மாற்றினர்

அவரும் தன்னுடயை படுக்கையிலிருந்து சாளரத்தின் வழியாக வெளியில் பார்த்தபோது தனக்கு விவரிக்கபட்டவாறு காட்சி எதுவும் தெரியாததை கண்டு ஆச்சரியம் அடைந்து பணியிலிருந்த செவிலியரை அழைத்து தனக்கு தினமும்இல்லாத இயற்கை காட்சிகளை தான் காண்பதாக எவ்வாறு விவரித்து வந்தார் என வினவியபோது

முதலில் சாளரத்தின் ஓரம் அனுமதிக்கபட்டவருக்கு இருகண்களும் விபத்தில் பறிபோய்விட்டது என்றும் உயிரோடு இருப்பது சிறிது காலம்தான் என அறிந்துகொண்டதால் அருகிலிருக்கும் உங்களுடைய உயிரையாவது சிறிதுகாலம் பிழைக்கவைக்கலாம் என தான் ஏற்கனவே கண்ட காட்சிகளை தினமும் கூறி உங்களை உற்சாக படுத்தினார் என பதிலிறுத்தார்

ஆம் எந்தவொரு நல்ல நிகழ்வையும் திரும்பு திரும்ப கேட்கும்போது நம்முடைய மனமும் உடலும் அதற்கேற்ப தகவமைத்து புணரமைத்து கொள்கின்றன என்பதே இயற்கையான நிகழ்வாகும்

எந்தவொரு உயிரும் தன்னுடைய உயிரை காத்துகொள்ளும் நிர்பந்தத்தில் தன்னுடைய இயல்பான செயலை செய்யமுற்படுவது இயற்கையான செயலாகும்


ஒரு அரசனுக்கு பக்கத்து நாட்டு அரசனொருவன் சிறந்த இரு புறாக்களை பரிசாக அளித்தான் அவைகளுள் ஒன்று மிகநன்றாக பறந்து சென்று திரும்பி அரசனின் மடியை வந்ததடைந்தது மற்றொரு புறாவோ பறக்காமல் சன்டித்தனம் செய்துவந்தது

அதனால் அந்த அரசனின் ஆளுமையின் கீழுள்ள நாடுமுழுவதும் இருந்த சிறந்த பறவை வல்லுனர்கள் அனைவரையும் அழைத்துவந்த அந்தபறக்காத புறாவை பறக்கவைப்பதற்கு எல்லாவகையிலும் எவ்வளவுமுயன்றும் அந்தபுறாவை பறக்கவைக்கமுடியவில்லை

இந்நிலையில் ஒருகிராமத்து விவசாயி இதுபோன்ற பறாக்காத பறவைகளை பறக்கவைப்பதாக செய்திஅறிந்த அரசன் அந்த விவசாயியை அழைத்து அந்த பறக்காத புறாவை மறுநாளைக்குள் எப்படியாவது பறக்கவைத்திடுமாறு கோரினார் உடன் மறுநாள் கண்டிப்பாக அந்த அந்தபறக்காத புறாவை பறக்க வைத்திடுவதாக அந்த விவசாயி உறுதிஅளித்து சென்றார்

மறுநாள் அந்த விவசாயி உறுதியளித்தவாறு அந்தபுறாவும் பறந்துசென்று திரும்பி அரசனின் மடியை வந்ததடைந்தது கண்டு அந்த அரசனுக்கு அதிகஆச்சரியமாகிவிட்டது

" எவ்வாறு சிறந்த பறவை வல்லுனர்களாலேயே பறக்கவைத்திடமுடியாத ஒருபுறாவை அந்தவிவசாயியால் பறக்கவைக்கமுடிந்தது" என வினவியபோது

"அதுஒன்றும் பெரியதொழில்நுனுக்கமான செயல் இல்லை ஐயா எந்தவொருஉயிரும் இக்கட்டான நிலையில் மாட்டிகொண்டால் தானாகவே தன்னுடைய இயல்பான செயலை செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடும் அதனடிப்படையில் அந்தபுறாவை மரத்தின் நுனி கிளையில் அமர்ந்திடுமாறு செய்துவிட்டு அந்த கிளையின் அடிப்பாகத்தை வெட்டி கீழே சாய்த்தேன் கிளைஒடிந்துவிழுந்ததால் அந்தபுறாவானது கீழேவிழுவதிலிருந்து தப்பித்து தன்னுடைய உயிரை காத்து கொள்வதற்காக பறந்து சென்றது" என பதிலிறுத்தார்

ஆம் எந்தவொரு உயிரும் தன்னுடைய உயிரை காத்துகொள்ளும் நிர்பந்தத்தில் தன்னுடைய இயல்பான செயலை செய்யமுற்படுவது இயற்கையான செயலாகும்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...