ஞாயிறு, 27 டிசம்பர், 2015

எந்தவொரு செயலையும் செய்துமுடிப்பதற்கு முன் நம்முடைய மனதை ஒருமுகபடுத்தி அந்த குறிப்பிட்ட செயலை செய்துமுடிப்பதையை முதன்மையானதாக வைத்து செயல்படுவோம்


முந்தைய காலத்தில் இராணுவத்தில் போர்பயிற்சி என்பது வில்வித்தையே முதண்மையானதாகும் அதிலும் முதன்முதல் வில்வித்தை கற்க விரும்பும் போர்விரன் தன்னுடைய கையால் வில்லையும் அம்பையும் சேர்த்து பிடித்துதயாரானவுடன் எதிரே உள்ள ஒரு பொருளை அவனுக்கு காண்பித்து அவனுடைய குருவானவர் அவனிடம் கேட்கும் முதல் கேள்வி் நீ கண்களால் என்ன காண்கிறாய் என்பதுதான் உடன் அந்த போர்வீரண் அந்த பொருளிற்கு அருகேயுள்ள மரத்தை பார்க்கின்றேன் மேலே சூரியனை பார்க்கின்றேன் தூரத்தில் ஒடும் விளங்குகள் பார்க்கின்றேன் அவைகளின் கீழே உள்ள பசுமையான நிலங்களை பார்க்கின்றேன் என விவரி்க்க ஆரம்பித்தால் ரொம்ப சரிதம்பி நீசென்று நாளைவா என அனுப்பி விட்டு அடுத்தவனிடம் இதே போன்ற கேள்வியை கேட்க ஆரம்பித்துவிடுவார்

சரியான போர்விரன் இந்த கேள்விக்கு பதிலாக அவர்குறிப்பிடும் பொருள் மட்டும் தன்கண்களுக்க புலப்படுவதாகவும் மற்றவை எதுவும் கண்ணிற்கு தோன்றவில்லை எதுவும் தோன்றவில்லை என கூறுவான் உடன் குருவும் இவனே சரியான போர்வீரண் என தெரிவுசெய்வார்

இது அந்த காலத்திற்கு மட்டுமல்ல எந்த காலத்திற்கும் பொருந்தகூடிய கருத்தாகும் போர்விரணுக்கு மட்டுமல்லாது எந்த வொரு பணியைசெய்திடும் நம் அனைவருக்குமே இந்த கருத்து பொருந்துகின்றது எவ்வாறு எனில் நாம் எந்தவொரு செயலை செய்வதற்கு முடிவெடுத்தோமெனில் அதிலிருந்து நம்முடைய கவணத்தை திசை திருப்ப ஏராளமான நிகழ்வுகள் நம்மை சுற்றி நடந்துகொண்டே இருக்கின்றன நம்முடைய மனமும் நிலையற்ற தன்மைமையால் அலைபாய்ந்து மாறக்கூடியதாக இருப்பதால் நாமும் நம்முடைய செயலில் கவணத்தை செலுத்திடாமல் புறக்காரணிகளால் மற்ற நிகழ்வுகளை கவணிக்க ஆரம்பித்துவிடுவோம் அதனால் நம்முடைய செயல் துவங்கபடாமலே அப்படியே இருந்துவிடும் அதனை தொடர்ந்து நாமும் நம்முடைய செயலில் வெற்றிபெறமுடியாது நின்றுவிடுவோம்

அதனால்தான் நாம் அனைவரும் நாம் எடுத்துகொண்ட நம்முடைய எந்தவொரு செயலையும் செய்துமுடிப்பதற்கு நம்முடைய மனதை ஒருமுகபடுத்தி அந்த குறிப்பிட்ட செயலை செய்துமுடிப்பதையை முதன்மையானதாக வைத்து செயல்படுவோம் என உறுதி செய்துகொள்க என கோரப்படகின்றது அப்போதுதான் நாம் எடுத்துகொண்ட எந்தவொரு பணியும் முழுமையாக வெற்றிகரமாக முடிவடையும் நாம் எதிர்பார்த்த விளைவும் நமக்கு கிடைக்கும் என்ற செய்தியை எப்போதும் மனதில் கொள்க

சனி, 12 டிசம்பர், 2015

இதில் யார் பணக்காரன்? யார் ஏழை?


நடுத்தர குடும்பத்தாய் ஒருத்தி வியாபார பணித்தொடர்பாக சென்னைக்கு தன்னுடைய மகிழ்வுந்தில் வந்து ஐந்துநட்சத்திர தங்கும் விடுதியில் தங்கியிருந்தார்

தங்கும் விடுதிக்குள் நுழையும்போதே அவருடைய கைக்குழந்தை வயிற்றுப்பசியினால் அழஆரம்பித்தது உடன் தற்போதைய. நாகரிகத்தின்படி தாய்ப்பாலை அந்த கைக்குழந்தைக்கு புகட்டாமல் புட்டிபால் புகட்டுவதற்காக அந்தஐந்துநட்சத்திர தங்குவிடுதியில் பசும்பால் கோரினால் உடன் கால்லிட்டர் பால் ரூபாய் 50.00 என்ற விலையில் வழங்கியதை தன்னுடைய கைக்குழந்தைக்கு புகட்டினார்

அன்ற சாயுங்காலம் அந்தாய் பணி முடிவடைந்தபின் தன்னுடைய சொந்தஊருக்கு நெடுஞ்சாலைவழியாக மகிழ்வந்தில் திரும்பி சென்று கின்றிருந்தபோது மீண்டும் அந்தக் கைக்குழந்தை வயிற்றுப்பசியினால் அழஆரம்பித்தது

உடன் சாலையோர இருந்த தேநீர் கடை ஒன்றில் வண்டியை நிறுத்தம் செய்து அந்த கைக்குழந்தைக்கான கால்லிட்டர் பால் வழங்குமாறு கோரினார் அந்த தேநீர் கடையின் வயதான சொந்தக்காரர் உடன் தேவையான பாலை அந்த தாய்க்கு வழங்கியது மட்டுமல்லாது மேலும் கால்லிட்டர் பாலை வழியில் மீண்டும் அந்தக்கைக்குழந்தை அழுதால் புகட்டிடுமாறு வழங்கினார்

இந்த பாலிற்கான விலைஎவ்வளவுஎன அந்த தாய் வினவியபோது குழந்தைகளுக்கான பாலை விலையில்லாமல் தங்களுடைய தேநீர்கடையில் வழங்குவது வழக்கமென க்கூறி அந்த தாய் கொடுத்த பணத்தை ஏற்றுக்கொள்ளமறுத்துவிட்டார் அந்த கிராமத்து வயதான தேநீர்கடை முதலாளி.

இதில்யார் பணக்காரன் யார் ஏழை என நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள் மற்றவர்களுக்கு எதிர்பார்ப்பு இல்லாது உதவிசெய்வதே மனித்தன்மையாகும் என்ற நியதியை மனதில் கொள்க.

போதுமென்ற மனமே பொன்செயும் மருந்தாகும்


பெண்கள் தங்களுக்கு தேவையான கணவனை தேர்வுசெய்து கொள்முதல் செய்வதற்கான பெரிய கடைஒன்றை நியூயார்க் நகரில் துவங்கியிருந்தனர் அவ்வாறான கடையை தம்முடைய வாழ்நாளிலேயே கண்டதில்லையென பெண்களின் கூட்டம் அந்த கடையில் அலைகடலென குவிந்தனர் என்னதான் அந்த கடையில் இருக்கின்றதென காணலாமே என அந்த கடைக்கு ஒருபெண் சென்றார்

அந்தக்கடையின் ஒவ்வொரு மாடிக்கும் ஒருமுறை மட்டமே போகமுடியும் திருப்தியாக இல்லையெனில் அடுத்தமாடிக்கத்தான் செல்லவேண்டுமே தவிர மீண்டும் முந்தை தளத்திற்கு செல்லமுடியாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது

பரவாயில்லையே ஐந்துமாடி இருக்கின்றது எதிலாவது நமக்கு பொருத்தமான மாப்பிள்ளை கிடைக்காமலா போய்விடுவார் பார்க்கலாம் என முதல்மாடியில் முகப்பில் இந்த தளத்தில் இருக்கும் மாப்பிள்ளைகள் அனைவரும் வேலைவெட்டியில்லாதவர்கள் என அறிவிப்பு பலகையிருந்ததை கண்டு சீச்சீ இந்த தளம் வேண்டாம் என இரண்டாவது தளத்திற்கு சென்றார்

இரண்டாவதுதளத்தில் இங்கு உள்ள மாப்பிள்ளைகள் நல்லசம்பளத்துடன் கூடிய பணியில் உள்ளனர் என அறிவிப்பு பலகையிருந்ததை கண்டு பரவாயில்லை மேலும் கூடுதலான தகுதியிருந்தால் நன்றாகஇருக்கும் என எண்ணிக்கொண்டு அதற்கடுத்த தளத்தில் என்னஇருக்கின்றது என காண்போமென மூன்றாவது தளத்திற்கு சென்றார்

மூன்றாவது தளத்தில் இங்கு இருக்கும் மாப்பிள்ளைகள் அனைவரும் நல்லசம்பளத்துடன் கூடிய பணியோடு நல்ல அன்பாக பழகக்கூடியவர்கள் என்ற அறிவிப்பு பலகையிருந்ததை கண்டு அதைவிட இந்த தளத்தில் பரவாயில்லை சரி நான்காவது தளத்தில் என்னதான் இருக்கின்றது என காண்போம் என நான்காவதுதளத்திற்கு சென்றார்

அங்கு நான்காவது தளத்தில் இங்கு உள்ள மாப்பிள்ளைகள் நல்லசம்பளத்துடன் கூடிய பணியோடு நல்ல அன்பாக பழகுவதுடன் வீட்டுவேலைகள் அனைத்தையும் செய்பவர்கள் என அறிவிப்பு பலகையிருந்ததை கண்டு மிகமிக பரவாயில்லை இதைவிட கூடுதல் தகுதியிருந்தால் நன்றாக இருக்குமே என ஐந்தாவது தளத்திற்கு சென்றார்

அங்கு மிக்க நன்றி நான்கு தளத்திலும் உங்களுக்கு பிடித்தமானமாப்பிள்ளை இருந்தபோதிலும் உங்களுக்கு பொருத்தமான மாப்பிள்ளை கண்டிப்பாக கிடைப்பார் மின்தூக்கி வழியாக சென்றுவாருங்கள் என வெளியே அனுப்பிவிட்டனர் .

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...