செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

விலைமதிப்பற்ற நம்முடைய வாழ்நாளை வீணாக்கிடவேண்டாம்


இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில் கிராமத்து விவசாயி ஒருவர் தன்னுடைய குடும்பத்திற்கு தேவையான பயிரிடும் நிலமாக மேம்படுத்தி கொள்வதற்காகஅருகிலிருந்த காட்டினை அழித்து தயார்செய்து கொண்டிருந்தார் கடைசியாக நிலத்தை திருத்திடும் பணிமுடியும் நேரத்தில் அவர் பயன்படுத்திகொண்டிருந்த கருவியானது நிலத்தில் சிக்கிக்கொண்டு எவ்வளவு முயற்சிசெய்தும் வெளியில் எடுக்க முடியாமல் தடுமாறி கொண்டிருந்தார் இருப்பினும் கடைசிமுயற்சியாக அந்த கருவியை எடுப்பதற்கு அவ்விடத்தை சுற்றி ஆழமாக பள்ளம் வெட்டியபோது ஒரு பெட்டி ஒன்று கிடைத்தது அதனை கடும் முயற்சிசெய்து திறந்து பார்த்தபோது அந்த பெட்டிநிறைய பளபளவென மின்னிடும்கருமைநிறகற்கள் இருந்தன சே இதனை சாப்பிடவா முடியும் கடுமையாக பள்ளம் வெட்டி இந்த பெட்டியை எடுத்தது வீண் வேலை இதனை வேறு என்னசெய்வது என அவ்விடத்திலேயே வைத்து சென்றார்

பின்னர் அந்த நிலத்தினை உழுது பயிரிட்டார் விவசாய பயிர்களும் நன்கு முளைத்து விளைந்தன அந்நிலையில் ஏராளமாக காட்டுப்பறவைகள் அவருடைய நிலத்தில் விளைந்த தானியங்களை திண்பதற்கு வந்து சேர்ந்தன உடன் அந்த விவசாயி அவைகளை விரட்டுவதற்காக கருவி ஒன்றினை செய்து அதில் நிலத்தை திருத்தும் போது கிடைத்த பெட்டியிலிருந்த கற்களில் ஒவ்வொன்றாக வைத்து வீசி எறிந்து பறவைகளிடமிருந்து பயிர்களை பாதுகாத்தார்

இவ்வாறாக அவர் கண்டெடுத்த பெட்டியின் கற்களை காலிசெய்து கடைசியாக ஓரிரு கற்கள் மட்டுமே இருந்த நிலையில் அருகிலிருந்த நகரத்தில் இருந்த வந்தஒருவர் ஐயா அந்த கற்களை இவ்வாறு விணாக்கவேண்டாம் அதனை நான் விலைக்கு வாங்கி கொள்கின்றேன் ஒவ்வொன்றிற்கும் 100 டாலர் கொடுக்கின்றேன் எனக்கூறியபோது அந்த விவசாயி மறுத்தார் மீண்டும் மேலும் நூறு டாலர் சேர்த்து 200 டாலர் கொடுக்கின்றேன் எனக்கூறியபோது அந்த விவசாயி மீண்டும்மறுத்தார். இவ்வாறே அந்த கற்களுக்கான விலையாக நூறு நூறு டாலராக உயர்த்தி கொண்டே சென்று கடைசியாக 1000 டாலர் கொடுப்பதாக கூறியபோது அந்த விவசாயி சரிஎன ஏற்றுகொண்டார்

உடன் எத்தனை கற்கள் இருக்கின்றன சரிபார்த்திடுங்கள் இந்த கற்கள் மதிப்புமிக்க வைரகற்களாகும் இந்த கற்களுக்கான தொகை நாளை எடுத்துவருகின்றேன் தொகையை வாங்கி கொண்டு என்னிடம் அந்த கற்களை கொடுத்தால் போதும் என உறுதியளித்து சென்றார்

அந்த விவசாயி மிக அதிக வருத்தத்துடன் ஐய்யய்யோ நான் என்னசெய்வேன் கடைசியாக இந்த ஒன்று மட்டுமே மிஞ்சியுள்ளதே ஐய்யய்யோ இந்த பெட்டிநிறைய கற்களாக இருந்ததே அவ்வளவும் இருந்தால் பெரிய கோடீசுவரணாகியிருப்பேனே என அழுது புலம்பினார் அழுது புலம்பி என்ன செய்வது வீசியெறிந்த கற்கள் கிடைக்கவா போகின்றன

அதேபோன்ற நாம் கூட நம்முடைய வாழ்க்கையில் நமக்களிக்கபபட்ட அருமையான விலைமதிப்பற்ற நம்முடைய வாழ்நாளின் பலநாட்களை வீணாக்கி வருகின்றோம் அதனை தவிர்க்க இன்றுமுதல் நம்முடைய வாழ்நாளில் மிகுதி இருக்கின்ற நாட்க ளையாவது பயனுள்ளதாக ஆக்கி மகிழ்ச்சியுடன் வாழ உறுதிகொள்வோம்

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

ஒரு வித்தியாசமான தேர்வு


ஒருநாள் கல்லூரி பேராசிரியர் ஒருவர் தன்னுடைய வகுப்பு மாணவர்களிடம் தான் இன்று ஒருவித்தியாசமான தேர்வு நடத்தவிருப்பதாகவும் உடன் அனைவரும் தயாராக இருக்குமாறு கூறி ஒவ்வொரு மாணவரிடமும் ஒரு வினாத்தாளையும் விடை எழுதுவதற்கான வெள்ளைத்-தாளையும் வழங்கி அனைவரையும் தேர்வினை எழுதுமாறு கூறினார்

அதனை தொடர்ந்து அனைத்து மாணவர்களும் வினாத்தாளை பிரித்து பார்த்தபோது அது காலியாக இருந்தது ஆனால் அதன் நடுவில் மட்டும் சிறிய கரும்புள்ளி ஒன்று இருந்தது அதனை கண்ணுற்ற அனைத்து மாணவர்களும் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று பேராசிரியரிடம் "ஐயா இந்த வினாத்தாட்களில் கேள்வி எதுவுமே இல்லையே அதனால் நாங்கள் என்ன விடையை எழுதுவது" என கோரினர். உடன் பேராசிரியர் "என்ன கேள்வி எதுவுமே அந்த கேள்வித்தாளில் இல்லையா இருக்கின்றது சரியாக பாருங்கள்" என பதில் கூறியதும் "ஐயா கேள்வித்தாளின் நடுவில் கரும்புள்ளி மட்டுமே உள்ளது" என அனைத்து மாணவர்களும் பதில் கூறியதும் "அப்படியா ரொம்ப சரி அந்த கரும்புள்ளியை பற்றி உங்களுடைய மனதில் தோன்றியதை எழுதுக" என கேட்டுகொண்டார்

உடன் மாணவர்கள் அனைவரும் அந்த கரும்புள்ளியை பற்றி தங்களுக்கு தோன்றிய கருத்தினைஎழுதி பேராசிரியரிடம் தங்களுடைய விடைத்தாள்களை கொண்டுவந்து கொடுத்தனர். பேராசிரியர் அந்த விடைத்தாள் அனைத்தையும் திருத்தினார் ஆனால் அவையனைத்தும் ஒரேமாதிரியான அந்த கரும்புள்ளியை பற்றிய வர்ணனையாகவே இருந்தன. அதனால் யாருக்கும் மதிப்பெண் எதுவும் வழங்காமல் வெறும் பூஜ்ஜியத்தை மட்டும் அனைவரின் விடைத்தாளிலும் வழங்கி விடைத்தாட்களை அவரவரிடம் திருப்பினார்

அதன்பின்னர் "மாணவர்களே இந்த கேள்வித்தாளில்இருந்த வெள்ளையான பகுதியை பற்றி யாருமே எழுதவில்லை ஆனால் நீங்கள் அனைவரும் கேள்வித்தாளில் இருந்த அந்த சிறிய கரும்புள்ளியை பற்றி மட்டுமே எழுதியுள்ளீர்கள் உங்களுடைய மனமானது அந்த கேள்வித்தாளில் இருந்த மற்ற வெள்ளையான பகுதிகளை பார்க்கதவறிவிட்டது அதேபோன்றே நாம் வாழும் இந்த சமுதாயத்தில் நிகழும் சிறிய தவறான நிகழ்வுகளை மட்டுமே ஒட்டுமொத்த மக்களும் தங்களுடைய கவணத்தை கொண்டுசெல்கின்றார்களே தவிர மிகுதிஉள்ள எத்தனையோ நல்ல செயல்களை எதனையும் கவணித்து அதனை பின்பற்றி வாழ்க்கையை வளமாகவும் நலமாகவும் வாழத்தலைப்படுவதில்லை என்பதே உண்மை நிலவரமாகும் அதனால் மாணவர்களே நீங்களாவது இந்த சமுதாயத்தில் நிகழும் மிகுதியுள்ள அனைத்து நல்ல செயல்களையும் அறிந்து அதனை பின்பற்றி உங்களுடைய கல்வியை மட்டுமன்று உங்களுடைய வாழ்வை மகிழ்ச்சியாகவும் சிறந்ததாகவும் அமைந்திடுமாறு செய்து கொள்க " என அறிவுரை கூறினார்

சனி, 20 ஆகஸ்ட், 2016

அமைதியாக இருந்தால் மனதும் குழப்பம்எதுவுமின்றி தெளிவாகிவிடும்


ஒரு ஆசிரியர் தம்முடைய மாணாக்கர்களுடன் வெகுதூரத்திலிருந்த நகரத்திற்கு நடைபயனமாக சென்று கொண்டிருந்தார் மதிய நேரமானதால் அருகில் இருந்த மரத்தடியில் இளைப்பாற சென்றார் அதனை தொடர்ந்து அந்த ஆசிரியருக்கு அதிக நாவறட்சி ஏறபட்டது அதனால் தம்முடைய மாணாக்கர்களில் ஒருவனை அழைத்து "தம்பி அருகில் ஓடும் ஆற்றில் குடிப்பதற்கு நீர் கொண்டுவா" என கேட்டுக்கொண்டார் அந்த மாணவரும் தன்னுடைய ஆசிரியரின் உத்திரவை பின்பற்றி ஆற்றிற்கு சென்றார் அங்கு ஆற்றில் விலங்குகளின் நடமாட்டமும் மக்களின் நடமாட்டமும் இருந்ததால் ஆற்றில் ஓடும் நீர் சேரும் சகதியுமாக கலங்களாக இருந்தது அதனால் இந்த கலங்களாக இருக்கும் ஆற்று நீரை ஆசிரியருக்கு குடிப்பதற்கு எப்படி எடுத்து சென்று கொடுப்பது என மனம் தடுமாறி வெறுங்டுகையுடன் திரும்பி வந்து "ஐயா ஆற்றுநீர் சேறு சகதியுமாக கலங்கியிருப்பதால் அதனை குடிக்கவே முடியாது அதனால் ஆற்றுநீரை நீங்கள் குடிப்பதற்காக எடுத்து வரவில்லை" எனக்கூறினான் உடன் "சரிசரி போய் ஓய்வு எடு" என அதனை ஆமோதித்தார்

சிறிது நேரம் கழித்து அதே மாணவனை அழைத்து மீண்டும் தன்னுடைய தாகத்திற்கு தண்ணீர் கொண்டுவருமாறு உத்திரவிட்டார் மீண்டும் அதே மாணவன் ஆசிரியரின் உத்திரவினை செயல்படுத்திடுவதற்காக ஆற்றிற்கு சென்றார் தற்போது ஆற்றில் தண்ணீர் தெளிவாக ஓடிக்கொண்டிருந்தது உடன் ஆசிரியரின் தாகம் தீர்க்கும் அளவிற்கு தண்ணீரை கொண்டு வந்து கொடுத்தார் ஆசிரியரும் தாகம் தீர தண்ணீரை அருந்தியபின் அந்த மாணவனிடம் "தம்பி ஆற்றில் எப்போதும் ஒரேமாதிரியாகத்தான் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கின்றது அதில் மக்களும் விலங்களும் நடமாடுவதால் முன்பு கலங்கியவாறும் பின்னர் அவ்வாறு நடமாடாததால் தெளிவாகவும் ஓடுகின்றதல்லவா அதேபோன்று நம்முடைய மனதில் பல்வேறு எண்ணங்களையும் நினைவிற்கு கொண்டுவந்தால் ஒரே குழப்பமாக கலங்கி நிற்கும் அமைதியாக இருந்தால் மனதும் குழப்பம்எதுவுமின்றி தெளிவாகிவிடும் அதற்காக தனியான முயற்சி எதுவும் எடுக்கத்தேவையில்லை மனதில் பல்வேறு எண்ணங்களை கொண்டுவராமல் அமைதியாக இருந்தால் மட்டும் போதுமானதாகும்" என அறிவுரை கூறினார்

புதன், 17 ஆகஸ்ட், 2016

என் வாழ்க்கையில் நடந்த சிறுசம்பவத்தால் என்வாழ்க்கை மட்டுமல்ல வாழ்க்கையை நோக்கிய என்னுடைய கருத்துகூட மாறிவிட்டது .


தற்போதுதான் என்னுடைய வாழ்க்கையை துவக்கும் இளைஞனான நான் என் சொந்த ஊருக்கு அருகிலுள்ள நகரத்தில் கடந்த நான்கு மாதங்களாக ஒரு நிறுவனத்தில் புதியதாக பணியில் சேர்ந்து பணிபுரிந்து வருகின்றேன். இந்த என்னுடைய வாழ்க்கையானது புத்துணர்ச்சி ஏதுமின்றி ஒரு சலிப்பானதாக இருக்கின்றது .இந்நிலையில் ஒரு நாள் நான் பணிமுடிந்து வீட்டிற்கு திரும்பி வரும்போது ஒரு சாலையோர மாலைநேர உணவகத்தில் சிற்றுண்டி சாப்பிடுவதற்காக சென்றேன். அந்த சாலையோர மாலைநேர உணவகத்தில் இரண்டு சகோதரர்கள் மட்டுமே வேலை செய்து வந்தனர். மூத்தசகோதரர் உணவகத்திற்கு தேவையான சிற்றுண்டிகளை தயார் செய்து கொண்டிருந்தார் , மற்றொரு இளைய சகோதரர் அந்த உணவகத்திற்குள் வருபவர்களுக்கு அதனை பரிமாறும் பணியை செய்துகொண்டிருந்தார். அதுஒரு மாலை 6 மணி ஆனதால் , அவ்விருவரும் வாடிக்கையாளர்களின் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர் அன்று நான்தான் முதல்ஆளாக அந்த உணவகத்திற்கு வந்து எனக்கான சிற்றுண்டியை கொண்டுவருமாறு உத்தர விட்டேன் உடன் எனக்குத் தேவையான சிற்றுண்டியை இளைய சகோதரர் கொண்டுவந்து பரிமாறி கொண்டிருந்தார் இதற்கிடையில் நான் உணவு பரிமாறுவதற்காக வந்திருந்த ஒரு நல்ல தடகள வீரர் போன்று உடல் கொண்ட அந்த இளைய சகோதரரிடம் பேச ஆரம்பித்து முதலில் “தம்பி நீ படிக்கின்றாயா?” என்ற ஒரு எளிய கேள்வியை கேட்டேன் ; உடன் அந்த இளைய சகோதரர் “அதை ஏன் ஐயா கேட்கின்றீர்? தற்போது நான் அருகிலுள்ள கல்லூரியில் இளங்களை வேதியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகின்றேன் நாளை காலை என்னுடைய வேதியில் கல்வியின் செயல்முறை பயிற்சி தேர்வு நடக்கவிருக்கின்றது அந்த வேதியில் கல்வியின் செயல்முறை பயிற்சி தேர்வு நான் செய்திடவேண்டும் அது முடிந்து மாலை கால்பந்து போட்டி நடக்க விருக்கின்றது அதில் நான் கலந்து கொண்டு விளையாட வேண்டும் அதுமுடிந்ததும் மாலை இந்த உணவகத்தில் இரவு 11 மணிவரை பணியாற்றவேண்டும் அவ்வாறு பணியாற்றியபின்னர் இரவு 11 மணிக்குமேல் வீட்டிற்கு செல்வேன் விடியற் காலையில் 4 மணிக்கு எழுந்து அன்றன்றைய பாடத்தை படித்து தயார் கொள்வேன்” என தன்னுடைய இயந்திரமயமான வாழ்க்கையை பற்றி கூறினார். உடன் “சரிதம்பி பொழுது போக்கிற்கான தொலைக்காட்சி பெட்டியின் நிகழ்ச்சியை எப்போது காண்பாய்? கால்பந்தாட்ட பயிற்சியை எப்போது செய்கின்றாய்?” என நான் வினவியபோது “எங்களுடைய வீட்டில் தொலைக்காட்சி பெட்டியே கிடையாது ஒன்று மாற்றி ஒன்றாக பணியை முடிக்கவே நேரம் சரியாக இருக்கின்றபோது பொழுது போக்கெல்லாம் என்னுடைய வாழ்வில் இல்லை கால்பந்தாட்ட பயிற்சியைகூட செய்வதற்கு நேரம் எங்கே கிடைக்கின்றது அதற்கு பதிலாக நண்பர்கள் கால்பந்தாட்டம் பற்றிய கானொளி காட்சி படத்தினை இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொடுப்பார்கள் அதனை என்னுடைய கைபேசியில் செயல்படுத்தி பார்த்து அதன் நுனுக்கங்களை தெரிந்து கொண்டு நானாக முயற்சிசெய்து கால்பந்து விளையாடி வருகின்றேன்”. என இளைய சகோதரர் தன்னை பற்றி கூறினார்.இடையே மூத்தசகோதரர் “என்னுடைய தம்பி அவர் பயிலும் கல்லூரியில் சிறந்த கால்பந்து வீரராக பிரபலமாகிவிட்டதால் அவருடைய கல்லூரி நண்பர்கள் அனைவரும் அவரை ரொனால்டோ என்றே சிறப்பு பெயரிட்டு அழைக்கின்றனர்” என கூறினார் தொடர்ந்து நான் “கால்பந்து விளையாட்டில் எந்த வீரரையாவது முன்னுதாரணமாக கொள்கின்றாயா?” என வினவியபோது உடன் அந்த இளைய சகோதர்ர் “நான் எந்த கால்பந்து விளையாட்டு வீரரையும் பின்பற்ற எனக்கு நேரம் ஏதும் இல்லை என்னுடைய கைபேசியில் மட்டும் கால்பந்தாட்டம் பற்றிய கானொளி காட்சி படத்தினை பார்த்து நானாக பயிற்சி செய்து கால்பந்தாட்ட விளையாட்டில் கலந்து விளையாடி வருகின்றேன்” என க்கூறினார் அதனை தொடர்ந்து நான் “கல்லூரி படிப்பு ,கால்பந்து விளையாட்டு ,இந்த சிற்றுண்டி உணவகத்தில் வேலைஎன ஒரே குழப்பமாக இருக்காதா உனக்கு” என வினவினேன் “இதில் குழப்பம் ஏன்? வருகின்றது ஐயா! எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான கல்வியை கல்லூரியில் பயின்றுவருகின்றேன்; நீங்கள் கூறிய பொழுதுபோக்கிற்காக கால்பந்துவிளையாட்டினை பயிற்சிசெய்து சிறந்த கால்பந்து விளையாட்டு வீரனாக விளையாடி வருகின்றேன் ; வாழ்க்கையின் அடிப்படைத் தேவையான உணவு போன்ற அனைத்து பொருட்களையும் பெறுவதற்காக மாலையில் இந்த சிற்றுண்டியகத்தில் பணிபுரிந்து வருகின்றேன்; இந்த பணிகளில் அந்தந்த நேரத்தில் அந்தந்த பணியை மட்டும் மனநிறைவோடும் மகிழ்ச்சியாகவும் செய்து வருகின்றேன் . மேலும் என்னுடைய மூத்த சகோதரர் என்னுடைய கால்பந்து விளையாட்டு போட்டிக்காக முழுக்காலணியை இங்கு பணிபுரிவதற்கான பரிசாக எனக்கு வழங்கியுள்ளார்” என பதில் கூறியதும். என்னுடைய மனதில் ‘இதேபோன்று அனைவரும் இருந்தால் இந்த உலகில் வாழும் அனைவரும் மிகமகிழ்ச்சியோடு வாழமுடியுமே!’ என்ற இந்த சம்பவம் உண்மையில் என்னை போன்றவர்களின் வாழ்க்கையின் கண்ணோட்டத்தையே மாற்றியுள்ளது

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

மலையின் அடிப்படை கொள்கையே நாம் வாழும் சமுதாயத்திற்கும் பொருந்தும்


ஒரு சிறுவனும் அவனுடைய தந்தையும் வானாளாவ உயர்ந்த மலைகளுக்கிடையே காலாற நடை பயற்சி மேற்கொண்டிருந்தனர் திடீரென அந்த சிறுவன் கால்சருக்கி கீழேவிழுந்தான் அதனால் அந்த சிறுவன் "ஆஆஆஆ " என தன்னுடைய உடலில் ஏற்பட்ட வலியால் கத்தினான் என்ன ஆச்சரியம் அந்த மலையும் "ஆஆஆஆ " என அதே வலியை எதிரொலித்தது உடன் ஆர்வத்தினால் "நீ யார்?" எனசத்தமாக கேள்விகேட்டான் உடன் அந்த மலையும் "நீ யார்?"என பதில் கேள்வியை அவனிடமே கேட்டது .

பின்னர் அந்த சிறுவன் "நான் உன்னை பாராட்டுகிறேன்!" என புகழ்ந்தான் உடன் அந்த மலையும் "நான் உன்னை பாராட்டுகிறேன்!" என பதிலுக்கு அவனை புகழ்ந்தது அதன் பின்னர் அந்த சிறுவன் என்ன இந்த மலையானது நாம் கூறியதையே திரும்புதிரும்ப நமக்கு கூறுகின்றது என மிகவும் கோபமுற்று "கோழையே!" என கத்தினான் என்ன ஆச்சிரியம் பதிலுக்கு அந்த மலையும் "கோழையே!" என அவனிடம் கத்தியது அதனை தொடர்ந்து இந்த நிகழ்வை அவனால் புரிந்து கொள்ள இயலவில்லை அதனால் தன்னுடைய தந்தையிடம் "அப்பா இங்கு என்னதான் நடக்கின்றது எனக்கு ஒன்றுமே புரியவில்லையே" என வினவினான்

அவனுடைய தந்தை புன்முறுவலுடன் மகனே இப்போது நடைபெறபோவதை கவணி எனக்கூறியபின்னர் "நீ ஒரு வெற்றியாளன் !" என சத்தமாக கத்தினார் உடன் அந்த மலையும் "நீ ஒரு வெற்றியாளன் !" என கத்தியது அவருடைய மகனுக்கு மேலும் கூடுதலாக ஆச்சரியமாகிவிட்டது நாம் கத்தியதை போன்று நம்முடைய அப்பாவும் கத்தினார் ஆனால் அந்த மலை அதற்கும் அதேபோன்று கத்துகின்றதே இதனை ஒன்றும் புரிந்து கொள்ளமுடியவில்லையே என மனம் தடுமாறினான்

அதனை தொடர்ந்து அவனுடைய தந்தை அவனிடம் "மகனே இவ்வாறு இந்த மலையும் நாம் கூறுவதையே திரும்ப கூறுவதை பொதுவாக மனிதர்கள் எதிரொலி எனக்கூறுவார்கள் ஆனால் நம்முடைய வாழ்விலும் இதேபோன்று நாம் என்ன செய்கின்றோமோ அதுவே நமக்கு பதிலாக கிடைக்கின்றது அதாவது நாம் என்ன செயல் செய்கின்றோமோ அதுவே திரும்பநமக்கு கிடைக்கின்றது அதனடிப்படையில் நாம் இந்த உலகில் உள்ள மற்றவர்களுடன் இதயபூர்வமாக அதிக அளவு அன்புடன் பழகினால் பதிலுக்கு அனைவரும் நம்முடன் இதய பூர்வ அன்புடன் பழகுவார்கள் இந்த உறவும் பதில் செயலும் நம்முடைய வாழ்வின் அனைத்து செயல்களிலும் தொடர்கின்றது அதனால் நாம் மற்றவர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கின்றோமோ அதனை முதலில் நாம் மற்றவர்களுக்கு வழங்கினால் உடன் அது நமக்கு தானாகவே கிடைக்கும் என்ற அடிப்படையை இந்த மலையின் எதிரொலியில் இருந்து தெரிந்து கொள்" என அறிவுரை கூறினார்

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

ஏழைஎளியவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்களையாவது வழங்கி உதவி செய்திடுக


அருகிலிருந்த நகரத்தின் ஒரு பிரபலமான தேநீர்கடையில் நண்பருடன் அமர்ந்து தேநீர் அருந்திகொண்டிருக்கும்போது அந்த நகரத்தின் நபர் ஒருவர்வந்தார் வந்தவுடன் இரண்டு குவளை தேநீர் ஒன்றுஎனக்கு மற்றொன்று அந்த சுவருக்கு என உத்திரவிட்டார் உடன் பரிமாறுபவர் ஒருகுவளை தேநீரை அவரிடம் கொண்டுவந்து கொடுத்துவிட்டு சுவற்றில் ஒருகுவளை தேநீர் என தாள் ஒன்றினை ஒட்டி சென்றார் வந்தவரும் தேநீர் அருந்தி முடித்தவுடன் இரு குவளை தேநீருக்கான தொகையை வழங்கி சென்றார் அதன்பின்னர் வேறு இரு நபர்கள் வந்தனர் அவர்களும் மூன்று குவளை தேநீர் இரண்டு எங்களுக்கு மூன்றாவது அந்த சுவற்றுக்கு என உத்திரவிட்டனர் உடன் பரிமாறுபவர் இரண்டு குவளை தேநீரை அவர்களிடம் கொண்டுவந்து கொடுத்துவிட்டு சுவற்றில் ஒருகுவளை தேநீர் என தாள் ஒன்றினை ஒட்டி சென்றார் வந்தவர்களும் தேநீர் அருந்தி முடித்தவுடன் மூன்று குவளை தேநீருக்கான தொகையை வழங்கி சென்றார்கள் அந்த நகரத்தின் அந்த பிரபலமான தேநீர் கடையில் நடைபெற்றுவரும் இந்த நிகழ்வை கண்டு எனக்கு மிக ஆச்சரியமாகிவிட்டது இருந்தாலும் தொடர்ந்து என்னதான் நடக்கின்றது என பார்க்கலாம் என பார்வையிட்டு கொண்டிருந்தேன் அதன்பின்னர் எளிய தோற்றமுள்ள ஏழையொருவர் அந்த தேநீர் கடைக்கு வந்து அந்த சுவற்றை பார்த்து ஒருகுவளை தேநீர் வழங்குக எனஅந்த உத்திரவிட்டார் உடன் பரிமாறுபவர் ஒருகுவளை தேநீரை அவரிடம் கொண்டுவந்து கொடுத்துவிட்டு சுவற்றில் ஒருகுவளை தேநீர் என்றிருந்த தாள் ஒன்றினை கிழித்து எடுத்து சென்றார் வந்தஎளிய தோற்ற-முடையவரும் தேநீர் அருந்தி முடித்தவுடன் ஒரு குவளை தேநீருக்கான தொகையை வழங்காமல் சென்றார்அதன்பின்னர் அந்த கடையின் பரிமாறுபவரிடம் விசாரித்தபோது அந்த நகரத்தில் வாழும் மக்கள் அந்த தேநீர்கடைக்கு தேநீர் அருந்தவரும்போது கூடுதலாக ஒரு குவளை தேநீருக்கான தொகையை வழங்கி செல்வார்கள் என்றும் அவ்வாறு கூடுதலாக பெற்ற தொகையை வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளியவரகளுக்கு தேநீர் வழங்கு வது வழக்கம்என்றும் கூறினார் ஏழைஎளியவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை வழங்குமாறு செய்தும் உதவிசெய்திடலாம்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...