செவ்வாய், 29 நவம்பர், 2016

மற்றவர்கள் தேவையில்லாமல்உ தவிசெய்வதாக எண்ணிக்கொண்டு உபத்திரவும் செய்வதை நிறுத்தினால் போதும்


நண்பர் ஒருவர் தினமும் மாலை அன்றைய பணிமுடிவடைந்ததும் அருகிலிருந்த பூங்காவிற்கு செல்வது வழக்கமான செயலாகும் அவ்வாறு சென்றுவரும்போது அன்று நாள்ஒரு செடியில்பட்டாம்பூச்சியின் முட்டை கூட்டினை பார்த்தார் அதில் சிறி ஓட்டை ஒன்று தெரிந்தது அதில் சிறு பட்டாம்பூச்சி அந்த முட்டை ஓட்டினை உடைத்து கொண்டு வருவதற்கு போராடி கொண்டிருந்தது சரி என்னதான் நடக்கின்றது என பார்த்திடலாம் என அவரும் நீண்டநேரம் பார்த்து கொண்டே இருந்தார் அந்த சிறு பட்டாம்பூச்சியும் தன்னுடைய சிறகினை அடித்து முட்டிமோதி பார்த்தும் அந்த முட்டை ஓட்டினை கிழித்துகொண்டு வரமுடியவில்லை அதனால் சே என்ன இந்த சின்னசிறு பட்டாம்பூச்சி வெளியில் வரமுடியாமல் தவிக்கின்றதே என அவருக்கு மிகமனவருத்தம் அதிகமாகி அருகிலிருந்த சிறுகுச்சியினால் அந்தபட்டாம்பூச்சியின் முட்டை ஓட்டினை குத்தி கிழித்து அந்த சிறு பட்டாம்பூச்சி வெளியேறுவதற்கு உதவினார் அதனைதொடர்ந்து அந்த சின்னஞ்சிறு பட்டாம்பூச்சி தன்னுடைய கூட்டிலிருந்து வெளியே வந்தவிட்டது ஆனால் அதனால் பறக்கமுடியாமல் அப்படியேசெடியிலிருந்து தரையில் வீழ்ந்து உயிரற்று போய்விட்டது அடடா ஐயோ பாவமே நான் முட்டை ஓட்டை உடைத்து கொண்டுவர உதவலாமே என உதவிசெய்தால் அதனுடைய உயிர்போக்கிவிட்டேனே என மிகவும்மனவருத்தபட்டார் இயற்கையானது அந்தந்த உயிரும் தனக்கு தேவையான வழியையும் வாய்ப்பையும் பயன்படுத்தி தன்னுடை இருப்பை உறுதி செய்து கொள்ள உதவுகின்றது அதில் மற்றவர்கள் தேவையில்லாமல்உ தவிசெய்வதாக எண்ணிக்கொண்டு உபத்திரவும் செய்கின்றோம் அதனை முதலில் நிறுத்தினால் போதும்

செவ்வாய், 22 நவம்பர், 2016

மற்றவர்களின் நிலையை சரியாக ஆராய்ந்தபின்னரே அவரை பற்றி விமர்சனம் செய்திடவேண்டும்


அலுவலகங்களில் பணிபுரியும் நபர்கள் தினமும் மதிய உணவு இடைவேளையின்போது ஒன்றாக அமர்ந்து உணவு அருந்துவது வழக்கமான செயலாகும் அவ்வாறே ஒரு அலுவலகத்தில் வாரத்தின் முதல்நாளான திங்கள் கிழமை அன்று அந்த அலுவலகத்தில் பணிபுரியும் நபர் ஒருவர் தன்னுடைய உணவு பெட்டியை திறந்து அதிலிருந்த தயிர் சோற்றினை உண்ண ஆரம்பித்தார் மற்ற அலுவலக நன்பர்கள் விதவிதமாக கொண்டு வந்த தங்களுடைய உணவுவகைகளை சாப்பிட்டனர் தினமும் இவர் ஒரேமாதிரியாக தயிர் சோற்றினை உண்டுவந்தார் இதனை கண்ணுற்ற மற்ற அலுவலக நண்பர்கள் ஏன் நண்பா உன்னுடைய மனைவியிடம் நாங்கள் கொண்டுவருவதை போன்று மதியம் நீ சாப்பிடுவதற்காக வகைவகையாக கொடுத்தனுப்பிட கோரலாமே என நக்கலாக கிண்டலடித்தனர் அதனால் அவர் உடன் ஐயா எனக்கு இன்னும் திருமனம் ஆகவில்லை அதனால் நான் தனியாக இருப்பதால் காலைஉணவையும் மதியஉணவையும்அவசர அவசரமாக தயார்செய்யவேண்டியிருப்பதால் சுலபமாக தயார்செய்திடும்இந்த தயிர்சோறினை தயார்செய்து எடுத்து கொண்டு வருகின்றேன் என பதில் கூறினார் உடன் அனைவரும் அமைதியாக விட்டனர் மற்றவர்களின் நிலையை சரியாக ஆராய்ந்தபின்னரே அவரை பற்றி விமர்சனம் செய்திடவேண்டும் என இதன்மூலம் அறிந்து கொள்க

புதன், 16 நவம்பர், 2016

முதலில் செயலில் இறங்கு அதன்பின்னர் அதனால் ஏற்படும் வசதிகளை அனுபவிப்பதற்கான கனவு காண்


தமிழகத்தின் கிராமப் புற மாணவன் ஒருவன் மருத்துவ படிப்பு படிப்பதற்கு இடம்கிடைக்கவில்லை சரிதான் என பொறியியல் படிக்கலாம் என்றால் புற்றீசல் போன்று ஏராளமான பொறியியல் கல்லூரிகள் உருவானதால் ஏராளமானவர்கள் பொறியியல் படிப்பு படித்து விட்டு பொறியியலிற்கு போதுமான பணிவாய்ப்பு கிடைக்காததால் சாதாரண எழுத்தர் பணியாவது கிடைத்தால் பரவாயில்லை என எங்கும் எதிலும் போட்டி அதிகமாகிவிட்டது இதனால் நண்பர்கள் ஆசிரியர்கள் கூறினார்கள் என்று பட்டயகணக்கர் அடக்கவிலை கணக்கர் நிறுமசெயலர் ஆகியவற்றில் ஒன்றை படித்தால் உடனடியாக பணிவாய்ப்பும் அதைவிட வெளிநாடுகளில் அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறியவுடன் இவற்றில் ஒன்றினை தெரிவுசெய்து படிக்க ஆரம்பித்தான் இந்தநிலையில் அவனுடைய தந்தை இந்த படிப்பினுடைய இறுதி தேர்வில் ஒரேமுயற்சியில் வெற்றிபெற்றால் அந்த மாணவனை சிங்கப்பூர் அல்லது மலேசியாவிற்கு சுற்றுலா செல்ல அனுமதிப்பதாக உறுதிகூறியவுடன் இந்திய விமானத்திலா அல்லது மலேசிய விமானத்திலா எதில்பயனம் செய்வதற்கான பயனசீட்டை பதிவுசெய்திடவேண்டும் , அங்கு சென்று இறங்கியவுடன் ஐந்துநட்சத்திர தகுதியுடைய எந்த தங்கும் விடுதியில் தங்குவது என்பன போன்ற கனவுகளில் மிதக்க ஆரம்பித்தான் உடன் அவனுடைய இந்த தேர்வுகளை எழுதுவதற்கான தயாரிப்புக்கு தேவையான புத்தகங்கள் வாங்கிவிட்டாயா என வினவியபோது இன்றுதான் நகரத்தின் புத்தககடைக்கு சென்ற தேவையான புத்தகங்களை வாங்கவேண்டும் எனக்கூறினான் உடன் அவனுடைய ஆசிரியர் தம்பி முதலில் இந்த தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி கொண்டுவந்து படித்து தயார்செய்து தேர்வுஎழுதி வெற்றிபெற முயற்சி செய் அதன்பின்னர் வெளிநாட்டு சுற்றலா செல்வது பற்றி கனவு காணலாம் என அறிவுரை கூறினார்

வெள்ளி, 11 நவம்பர், 2016

கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத வெற்றிக்கனி


கிராமபுற நபர் ஒருவருக்கு இரண்டடுக்கு எழுத்து தேர்வுகள் குழுவிவாதம் ஆகிய வற்றை நன்கு முடித்த பின்னர் இறுதியான நேர்முக தேர்விற்கு அழைப்பானை கிடைத்தது அதனால் அந்நபர் உடன் முடிதிருத்ததகத்திற்கு சென்று முகத்தையும் தலையையும் நன்றாக சரிசெய்து கொண்டு தேவையான உடைகளையும் நன்கு தேய்த்து அணிந்து கொண்டு தற்போதைய நாட்டு நடப்புகளைபற்றிய விவரங்களையும் நன்கு தயார்செய்து கொண்டு மறுநாள் நடைபெறவுள்ள நேர்முகத்திற்கு தயாரானார் அதனை தொடர்ந்து மறுநாள் காலையில் விழித்து எழுந்து புறப்படும்போது நன்றாக இருந்த வானம் மழைகொட்ட ஆரம்பித்தது இருந்தாலும் பேருந்தில் ஏறி உட்கார்ந்த போது பேருந்து முழுவதும் ஆங்காங்கு சொட்டுசொட்டாக மழைத்துளி உடையை ஈரமாக்க முடிவுசெய்தது அதனால் மிகுந்த சிரமத்துடன் மழைத்துளி் கொட்டாத பகுதியாக பார்த்து நின்று கொண்டார் பின்னர் நேர்முகதேர்வு நடத்தபோகும் அலுவலகத்திற்கு அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கி பொடிநடையாக நடந்து சென்றபோது வாடகை வண்டிகளும் சுமைவண்டிகளும் சாலையில் இருந்த சேரும் சகதியுமான தண்ணீரை அவன்மேல் வாரி இறைத்து கொண்டு சென்றதால் முழங்கால் அளவிற்கு அணிந்து வந்த துணி நனைந்து விட்டது ஒருவழியாக அந்த அலுவலகத்தை அடையும் நிலையில் அந்த அலுவலக வாயிலின் ஓரம் இருந்த மரத்தின் மீது மழைக்கு அடைக்கலம் பெற்றிருந்த பறவைஒன்று மிகச்சரியாக தலையில் எச்சமிட்டது உடன் அந்த அலுவலகத்திலி இருந்த குழாய் நீரை கைகளால் பிடித்து துடைத்து கொண்டு அந்த அலுவலகத்திற்கு நுழைந்தார் அங்கு நேர்முகத்தேர்வு நடைபெறுவதற்கான எந்த அறிகுறியும் கானோம் அதனால் வரவேற்பாளரை சந்தித்து நேர்முகத்தேர்வு பற்றிய விவரம் கோரியபோது அன்று மிகவும் மழையாக இருப்பதால் நேர்முகத்தேர்வினை நடத்தும் தலைவர் தன்னால் கலந்து கொள்ளமுடியாது என்றும் தேர்வினை 15 நாட்கள் தள்ளிவைப்பதாக தொலை நகல்செய்தி அனுப்பியுள்ளதாக தகவல் தெரிவித்தனர் வெற்றிக்கனி கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாமல் போய்விட்டதே என இந்த தகவலை தெரிந்து கொள்வதற்காகவா இவ்வளவு சிரமபட்டு வந்து சேர்ந்தேன் என வருத்ததுடன் தன்னுடைய வீட்டிற்கு திரும்பினார்

ஞாயிறு, 6 நவம்பர், 2016

ஒரு நல்ல ஆசிரியர்


முற்காலத்தில் மாணவர்கள் அனைவரும் ஆசிரியரின் இருப்பிடத்திற்கு சென்று அவருக்கு சேவைசெய்து அவருடனேயே வாழ்ந்து கல்வி கற்று வந்தனர் அந்த கல்விக்கூடமானது நகருக்கு வெளியே இயற்கை சூழ்ந்த இடமாக அமைந்திருக்கும் அவ்வாறான ஒரு குருகுலகல்விகூடத்தில் ஆசிரியர் தம்முடைய மாணவர்களை அழைத்து அவர்கள் தங்குவதற்கான விடுதி ஒன்று கட்டுவதற்கு தேவையான பொருட்களை அருகிலுள்ள நகரத்தில் கொண்டுவருமாறும் அவ்வாறு பொருட்கள் கொண்டுவருவது யாருக்கும் தெரியாமல் இருக்கவேண்டும் என்றும் உத்திரவிட்டார் உடன் மாணவர்கள் அனைவரும் பொருட்களை கொண்டுவருவதற்காக கலைய ஆரம்பித்தனர் ஒருமாணவன் மட்டும் ஐயா அதுஎப்படி சாத்தியமாகும் பொருட்களை திருடுவதே குற்றம் அவ்வாறு இருக்கையில் அந்த பொருட்களை யாரும் பார்க்காதவாறு கொண்டுவர கூறுகின்றீர்கள் இரவில் பொருளை கொண்டு வரும்போது யாரும் பார்க்கவில்லையென்றாலும் என்னுடைய இரண்டு கண்கள் நான் பொருளை திருடி எடுத்து வருவதை பார்த்துவிடுமே அதனால் என்னால் அவ்வாறு பொருட்களை நகரத்திலிருந்து கொண்டு வர முடியாது எனக்கூறினான் இதைத்தான் எதிர்பார்த்தேன் நான் என்னிடம் பயிலும் அனைவரும் நான் எதிர்பார்த்திடும் தகுதி இருக்கின்றதாவென பரிசோதித்த இந்த தேர்வில் நீமட்டுமே வென்றுள்ளாய் அதனால் எனக்கு பின் நீதான் இந்த குருகுலத்தின் ஆசிரியராக தேர்வுசெய்திட தகுதியுடையவன் என அவனை பாராட்டி தேர்வுசெய்தார்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...