ஞாயிறு, 25 டிசம்பர், 2016

உண்மையான அழகு நாம் கண்களால் காணும் உடல் தோற்றத்தில் இருக்காது உள்ளத்தில் மட்டுமே இருக்கும்


முன்னொரு காலத்தில் ஒரு பணக்கார வயதான மனிதன் மிகப் பெரிய வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்தார். அவருடைய உடல்நிலை நாளுக்கு நாள் தளர்ந்து பலவீனமாகிக்கொண்டே வந்ததால் அவரால் தன்னுடைய உடல்நிலையையும் தன்னுடைய பெரிய வீட்டையும் பார்த்து நன்கு பராமரித்துக்கொள்ள முடியவில்லை அதனால் அவர் தன்னுடைய பெரிய வீட்டின் சகல வேலைகளுக்கு உதவவும் தன்னை கவனித்து பராமரித்திடவும் பணியாளர் ஒருவரை பணியமர்த்திட எண்ணினார்.

அதனை தொடர்ந்து அந்த வயதான மனிதன் சங்கர் , அருணன் ஆகிய இருவர்களையும் தன்னுடைய பணியாளர்களாக நியமித்தார். அவர்களுள் சங்கர் ஒரு அழகானாகவும் ஆனால் அருணன் ஒரு அசிங்கமான தோற்றத்துடனும் இருந்தனர் அவர்கள் பணியில் சேர்ந்த அன்று அந்த வயதான மனிதன் தன்னுடைய பணியாளரில் ஒருவனாகிய சங்கரிடம் தன்னுடைய வீட்டின் சமையலறைக்கு சென்று தனக்கு ஒரு கோப்பை தேநீர் தயார்செய்து கொண்டுவருமாறு கேட்டுகொண்டார் .

அந்த வயதான மனிதன் கூறிய பணியை நிறைவேற்றுவதற்கு சங்கர் அவ்விடத்திலிருந்து சென்றபின் அகமது எனும் பணியாளர் இருக்கும் பக்கம் திரும்பி , " உன்னை பற்றி சங்கர் மிகவும் தவறாக கூறுகின்றார் அதாவது நீ ஒரு மோசமான ஆள் என்றும் நம்பிக்கைக்குரிய ஆள்அன்று என்றும் கூறுகின்றார் அது சரிதானா ?" என அந்த வயதான மனிதன் கூறினார்

இதனை தொடர்ந்து அருணன் ஒரு கணம் மட்டும் சிந்தித்த பின் "சங்கர் ஒரு மிக அழகான மனிதர் அவருடைய அகத்தில் இருப்பதே முகத்தில் வெளிப்படும் என்பதற்கேற்ப அவர் மிக அழகான தோற்றத்தை கொண்டுள்ளார் " எனக்கூறினார்

மேலும் ஒரு அழகான மனிதர் பொய் ஒன்றும் சொல்லமாட்டார் என்று அருணன் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார் அதனால் அவர் அந்த வயதான மனிதனிடம் "சங்கர் என்னைப் பற்றி தவறான கருத்தினை கொண்டுள்ளார் என்றால், கண்டிப்பாக என்னை அறியாமல் தவறு ஏதாவது என்னிடம் இருக்கும். என நினைக்கின்றேன் அதனால் அவர் கூறுவது சரியாகவும் இருக்ககூடும்"என்று கூறினார் இவ்வாறான கருத்தினை அருணன் கூறியதை தொடர்ந்து மிகவும் அசிங்கமான முகத்தோற்றத்துடன் இருந்த அருணன் எனும் பணியாளரின் உண்மையான மனித தன்மை அந்த வயதான மனிதனை கவர்ந்தது. இதற்கிடையில், சங்கர் தன்னுடைய முதலாளிக்கு ஒரு குவளை தேநீர் கொண்டு வந்தார்.

அதனை கண்ணுற்ற வயதான மனிதன் தனக்கு காலை உணவினை தயார் செய்யுமாறு அருணனிடம் கூறி அனுப்பிய பின்னர் சங்கர்இருக்கும் பக்கம் திரும்பி, "உன்னை பற்றி அருணன் மிகவும் தவறாக கூறுகின்றார் அது பற்றி நீ என்ன சொல்கிறாய்?" எனக்கூறினார் இதைக்கேள்விப்பட்ட சங்கர் கோபம் அதிகமாகி "அருணன் ஒரு பொய்யன்! ஒரு போக்கிரி!" என்றவாறு மிக மோசமான கருத்துக்களை அருணன் மீது சுமத்தி கோபமாக கூறத் தொடங்கினார்.

இதனை தொடர்ந்து அந்த வயதான மனிதன் "ஒரு அழகான தோற்றத்தைக் கொண்ட மனிதனின் உள்ளம் அழகற்று உள்ளது என்றும் ஆனால் அசிங்கமான வெளிப்புற தோற்றத்தை கொண்டவனின் உள்ளம் அழகானதாக உள்ளது அதனால் உருவத் தோற்றத்திற்கும் உள்ளத்திற்கும் தொடர்பு எதுவும் இல்லை " என்ற முடிவிற்கு வந்தார்.

.கதையின் கருத்து "உண்மையான அழகு நாம் கண்களால் காணும் உடல் தோற்றத்தில் இருக்காது உள்ளத்தில் மட்டுமே இருக்கும் நம்முடைய கண்களால் காணும் அழகான தோற்றம் என்றாவது ஒருநாள் மறைந்துவிடும் ஆனால் அகத்தின் அழகே முகத்தின் அழகாக நம்முடைய இதயத்தில் எப்போதும் தங்கிஇருக்கும்"

திங்கள், 19 டிசம்பர், 2016

ஒரு பெண் சுயதொழில் செய்து வெற்றிபெறமுடியுமா?


ஒரு இளம்பெண் தன்னுடைய கல்லூரிபடிப்பை முடித்தவுடன் அப்பெண்ணினுடைய பெற்றோர்கள் "பொதுவாக இதன்பின்னர்பெண்கள் பிஎட் எனும் இளங்கலை கல்வியியல் பயின்று பள்ளியில் ஆசிரியராக பணிபுரிவதுதான் நல்லது" என ஆலோசனை கூறினார்கள் ஆனால் அந்த பெண் கராத்தே கலையை கற்றிட விரும்பி அதற்கான பயிற்சியில் சேர்ந்து நன்கு கற்று அதில Black Belt பெற்றாள்.அதனை தொடர்ந்து அவளுடைய பெற்றோர்களின் வற்புறுத்தலினால் பள்ளிகளில் வேலை தேட ஆரம்பித்தாள் ஆனால் நாட்டில் வேலையின்மை பிரச்சினையாநது நாளுக்கு நாள் அதிகமாகி வேலைதான் குதிரை கொம்பாக இருந்தது.ஆயினும் இவ்வாறான நிலையில் தனியார் பள்ளிகளானது தம்முடைய பள்ளிகளில் படித்திடும்பிள்ளைகளின் பெற்றோர்களிடம் அதிகஅளவு கட்டணங்களை வசூல்செய்திடும் ஆனால் அந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்குதான் மிககுறைந்த சம்பளமே வழங்கும் நிலையில் என்னசெய்வது என அவள் தடுமாறி நின்றபோது சொந்தமாக கராத்தே கலையை மாணவர்களுக்கு கற்றுதரும் ஒரு கராத்தே பள்ளியை துவங்கிடலாம் என அந்த பெண் முடிவுசெய்தாள் உடன் அவளுடைய பெற்றோர்கள் பெண்கள் அவ்வாறான சுயதொழில் எதுவும் செய்யவும் கூடவும் கூடாது செய்யவும்முடியாது என மறுத்து தடுத்தனர்

ஆனாலும் அந்த பெண்ணானவள் அவளுடைய பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி சுயமாக தொழில் செய்யவேண்டும் என்ற பேரவாவினால் ஒரு வாடகை இடத்தில் தன்னுடைய நண்பர்களின் உதவியுடன் கராத்தே பயிற்சி பள்ளியொன்றை ஆரம்பித்தாள் அதனை தொடர்ந்து காலப்போக்கில், அவளுடைய கல்லூரி நண்பர்களின் வாயிலாக அந்த பகுதியில் அந்தகராத்தே பள்ளி நன்கு அறிமுகமாகி அப்பள்ளியானது மிகவேகமாக வளர்ந்து அதன்மூலம் போதுமான வருமானமும் அவளுக்கு கிடைத்தது அதனால் அவளுக்கென்று சொந்த வீடு இதர அத்தியாவசி பொருட்கள் என வந்து சேர்ந்தன இவ்வாறு வாழ்வில் வெற்றி பெற்ற அந்த பெண்ணானவள்

இவளுடைய இந்த சொந்த தொழில் துவங்கிடவேண்டும் என்ற முடிவு சரியா? இன்றைய போட்டிகள் நிறைந்த வாழ்வில் வேறு துறைகளிலும் சம்பளத்திற்கான பணிவாய்ப்பினை நாடாமல் அல்லது தேடாமல் இவ்வாறு ஒரு பெண் சுயதொழில் செய்வது சரியானதா? ஒரு பெண் இவ்வாறாக சுயதொழில் செய்து வெற்றிபெறமுடியுமா? ஆகிய கேள்விகளுக்கு பார்வையாளர்களாகிய நம்முடைய பதில் என்ன?

திங்கள், 12 டிசம்பர், 2016

முட்டாள்களிடம் நல்ல ஆலோசனைகளை கூறாதே


.ஒரு காட்டில் இருந்த மரமொன்றின் மீது பல்வோறு வகையான பறவைகள் தாங்கள் தங்குவதற்கேற்ற சிறிய கூடுகளை அமைத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன. மழைக்காலம் தொடங்குவதற்குமுன், அவையனைத்தும் தங்களுடைய குடியிருப்பான கூடுகளை சிறுசிறு குச்சிகளையும் இலைகளையும் கொண்டு பழுதுபார்த்ததோடுமல்லாமல். மேலும் தாங்களும் தங்களுடைய குஞ்சுகளும் பாதுகாப்பாக இருப்பதற்கான வழிவகைகளை செய்தன அதுமட்டுமல்லாது வரும் மழைகாலத்தில் வெளியில் சென்று தங்களுக்கு தேவையான இரையை தேடிடமுடியாது அதனால் நாம் இதற்காக போதுமான உணவுகளை தேடிபிடித்து கொண்டுவந்து சேமித்துவிடுவோம் என வயதுமுதிர்ந்த பறவை ஒன்று கூறியதை தொடர்ந்து அனைத்து பறவைகளும் காடு எங்கும் அலைந்து திரிந்து போதுமான உணவினை தேடிபிடித்து கொண்டுவந்து கூடுகளில் சேமித்து வைத்தன அதனால் இவைகள் எப்போதும் ஓய்வில்லாமல் உழைத்தவாறு இருந்துவந்தன விரைவாக மழைக்காலம் துவங்கி இடியுடன் கூடிய மழையும் வந்தது. அந்த மழையானது தொடர்ந்து கொட்டிகொண்டே இருந்ததால் குளிரும் நடுக்குமமாக இருந்ததால் அந்த மரத்தில் வாழ்ந்து வந்த பறவைகள் வெளியே எங்கும் செல்லாமல் பாதுகாப்பாக தத்தமது கூடுகளிலேயே தங்கியிருந்தன .

அந்த மழையானது பல நாட்கள் தொடர்ந்து பெய்துகொண்டேயிருந்தது அப்போது ஒருநாள் குரங்குஒன்று அந்த மரத்தின்கீழ் வந்துசேர்ந்தது அதுமழையில் நன்கு நனைந்து அதனுடைய உடலிலிருந்து மழைநீர் சொட்டுசொட்டாக சொட்டியவாறும் கடுங்குளிரில் பல்லெல்லாம் கிடுகிடுவென நடுங்கியவாறும் அமர்ந்து கொண்டிருந்தது மேலும் "ஸ்ஸ்ஸ்! மிகவும் கடுங்குளிர்! " என குரங்கு தனக்குத்தானே கூறிக்கொண்டது அதனை பார்த்துகொண்டிருந்த அந்த மரத்தின் வாழ்ந்துவந்த பறவைகள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தன தொடர்ந்து மிகவும் பரிதாபமான அதனுடைய நிலையை பார்த்த பறவை ஒன்று"அண்ணா! ' எங்கள் சிறிய கூடுகள் நீங்கள் குளிரிலிருந்து பாதுகாப்பாக தங்குவதற்கு போதுமானதாக இல்லை. ". எனக்கூறியாது அதனை தொடர்ந்து மற்றொரு பறவையானது " இந்த மழைக்காலம் துவங்குவதற்கு முன் நீங்களும் வாழ்வதற்கு கேற்ற நல்ல பாதுகாப்பான தங்குமிடத்தை அமைத்திருந்தால் இவ்வாறு குளிரில் நடுங்கிடாமல் எங்களைபோன்று பாதுகாப்பாக இருந்திருக்கலாமே “ என அறிவுரை கூறியாது

" நான் என்ன செய்ய வேண்டும்? என என்னிடம் சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம் உள்ளது! இதோபார் உங்களை என்ன செய்கிறேன்" என்று அந்த குரங்கு மிகுந்த கோபத்துடன், மரத்தின் கிளைகளில் தாவி ஏறி அம்மரத்திலிருந்த பறவைகளின் கூடுகளை பிய்த்து கிழித்து தரையில் வீசியெறிந்தது அதனால் அந்த பறவைகளும் அவைகளின் குஞ்சுகளும் மிகவும் பாதுகாப்பாற்ற ஆதரவற்ற நிலையில் அந்தமரத்தில் கீச்கீச்சென் கத்தி கொண்டு உயிர் தப்பி மழையில் நனைந்து அங்குமிங்கும் அடைக்கலம் தேடி சென்று கொண்டிருந்தன.

முட்டாள்களிடம் அவர்கள் வாழ்வதற்கான நல்ல ஆலோசனைகளை கூறினால் அதனை அவர்கள் ஒருபோதும் ஏற்கவும் மதிக்கவும் மாட்டார்கள் அதனால் அவர்களுக்கு அவ்வாறான ஆலோசனைகளை கூறாமல் இருப்பதே நமக்கு பாதுகாப்பானது என இந்த நிகழ்வின்மூலம் அறிந்து கொள்க

திங்கள், 5 டிசம்பர், 2016

மதிப்பு மிக்க பொருட்ளைகள் மதிப்புகுறைவான பொருட்கள்க ஏது பாதுகாப்பாக இருக்கும்?


ஜே.ஆர்.டி டாட்டாவிற்கு நண்பர் ஒருவர் இருந்தார் அவர் தான் பயன்படுத்திடும் பேனா அடிக்கடி காணாமல் போய்விடுகின்றது என்று எப்போதும் ஜே.ஆர்.டி டாட்டாவிடம் கூறிக்கொண்டே யிருப்பார் . அதனை தொடர்ந்து அன்று ஒருநாள் நீ எவ்வாறான போனாவை பயன்படுத்தி வருகின்றாய் எனஜே.ஆர்.டி டாட்டா தன்னுடைய நண்பரிடம் வினவியபோது தான் எப்போதும் மிகவும் விலை மலிவான பேனாக்களையே பயன்படுத்துவதாக அந்த நண்பர் கூறினார் உடன்ஜே.ஆர்.டி டாட்டாவும் தன்னுடைய நண்பரிடம் மிகவும் விலை மலிவான பேனாக்களை பயன்படுத்து-வதால்தான் அதனை பாதுகாப்பது பற்றி கவலைப்படாமல் கவணக்குறைவாக இருக்கின்றாய் அதனால் அவை காணாமல் போய்விடுகின்றன நான் கூறுவது போன்று செய்தால் உன்னுடைய பேனா காணாமல் போகாது எனக்கேட்டுகொண்டார் அதனால் நீ இன்றுமுதல் மதி்ப்புமிக்க அதிகவிலை உயர்ந்த பேனாவை வாங்கி பயன்படுத்து அதன்பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என பரிந்துரைத்தார் இந்த ஆலோசனையின் படி அந்த நண்பரும் மதி்ப்புமிக்க ஒரு 22 காரட் தங்கத்திலான அதிகவிலையுடைய பேனாவை வாங்கி பயன்படுத்திவந்தார் அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு ஜே.ஆர்.டிடாட்டா அந்த நண்பரை சந்தித்தபோது இப்போதும் அவர் தனது பேனாவை தவற-விட்டு-விடுகின்றாரா என வினவினார் உடன் அவரது நண்பர் விலையுயர்ந்த தன்னுடைய பேனா பற்றி மிகவும் கவனமாக இருப்பதாகவும் ஆனால் இப்போது மட்டும் தன்னுடைய பேனாவானது எவ்வாறு காணாமல் போகவில்லை! என்பதே தனக்கு மிக ஆச்சரியமாக உள்ளது என்றும் கூறினார் அதற்கு ஜே.ஆர்.டிடாட்டா எப்போதும் மனிதமனமானது மதிப்புமிக்க பொருள் எனில் மிகவும் கவணமாகவும் மதிப்புகுறைவான மலிவான பொருட்கள் எனில் கவணமில்லாமலும் இருக்கும் அதனால்தான் நீ முன்பு அடிக்கடி எழுதிடும் பேனாவை தவறவிட்டுவிட்டாய் ஆனால் தற்போது விலைஅதிகமுள்ள பேனாவை மட்டும் மிககவணமுடன் தவறவிடாமல் பாதுகாத்து வருகின்றாய் எனவிளக்கமாகக்கூறினார் இவ்வாறே நம்முடைய வாழ்க்கையின் அடிப்படையான பணத்தைமட்டும் நாம் அதிகமாக செலவழிக்காமலும் மற்றவர்கள் யாரும் அபகரித்திடாமலும் மிககவணமாக பாதுகாக்கின்றோம் அவ்வாறே நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் எனில் மிககவணமுடன் அவர்களுடைய தொடர்பை பராமரிக்கின்றோம்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...