சனி, 26 மார்ச், 2016

தவறான நம்பிக்கையை விடுத்துமுயற்சி செய்தால் கண்டிப்பாக வெற்றிபெறலாம்


நெடுஞ்சாலையோரம் இருந்த கிராமப்பகுதியில் யானை ஒன்று சிறு கயிற்றினால் கட்டப்பட்டிருந்தது அந்த யானையும் நின்ற இடத்தில் இருந்தவாறு அசைந்து கொண்டேயிருந்தது அந்த வழியாக சென்ற வழிபோக்கன் ஒருவன் . இந்த யானையை பார்த்து மிக ஆச்சரியத்துடன் "என்னடா இது இவ்வளவு பெரிய யானையை மிகச்சிறிய கயிற்றினால் அதனுடைய ஒரேயொரு காலை மட்டும் கட்டியுள்ளனர் அந்த யானையும் அதனை கட்டிய சிறு கயிற்றினை அறுத்துகொண்டு செல்லாமல் அப்படியே நின்ற இடத்தில் இருந்தவாறு அசைந்து கொண்டேயிருக்கின்றது" என்ற சந்தேகம் வந்துவிட்டது. அதனை நிவர்த்தி செய்து கொள்வதற்காக அவ்விடத்தில் இருந்த யானைப்பாகனிடம் "ஐயா இவ்வளவு பெரிய யானையை மிகவும் சிறிய கயிற்றினால் ஒரேயொரு காலை மட்டும் கட்டியுள்ளீர் இந்த யானையும் அந்த சிறிய கயிற்றினை அறுத்து கொண்டு செல்லாமல் அப்படியே நின்றுஅசைந்துகொண்டுமட்டும் உள்ளதே ஏன்?” என வினவினார் . " ஐயா இந்த யானை சிறிய குட்டியாக இருக்கும் போது இந்த சிறிய கயிற்றால் கட்டி பிடித்து அழைத்து கொண்டு செல்வதும் பின்னர் இந்த கட்டுத்தறியில் கொண்டுவந்த கட்டிவிடுவதும் வழக்கம் குட்டியானையால் அந்த கயிற்றினை அறுத்து செல்லமுடியாது அதே பழக்கத்தில் தற்போது யானை பெரியதாக வளர்ந்துவிட்டாலும் தன்னால் இந்த கயிற்றினை அறுத்து கொண்டு செல்லமுடியாது என நம்பிகொண்டுஅப்படியே நின்றஇடத்தில் அசைந்து கொண்டுமட்டும் உள்ளது"

அதேபோன்றே நாமும் நம்முடைய வாழ்வில் நாம் செய்திடும் செயலில் ஏதேனும் தோல்வி ஏற்பட்டால் அதனை தொடர்ந்து நம்மால் அந்த குறிப்பிட்ட செயலை செய்யமுடியாது செய்து வெற்றி கொள்ள முடியாது என நம்முடைய மனத்தில் தவறான நம்பிக்கை ஆழபதிந்துவிடும் அதன்பின்னர் நாமும் அந்த தவறான நம்பிக்கையிலிருந்து விடுபட்டு குறிப்பிட்ட செயலை செய்து வெற்றி கொள்வதற்காக மீண்டும் முயற்சி செய்யாமல் நம்மால் வெற்றிபெறமுடியாது என தவறாக நம்பிக்கொண்டு செயலை செய்திடாமல் விட்டுவிடுவோம் .

புறச்சூழல் என்னவாக இருந்தாலும் நம்முடைய முயற்சியில்,நம்முடைய செயலில் மட்டும் மிககவணமாக கருத்தூன்றி வெற்றிபெற முயற்சி செய்க


யானை ஒன்று ஆறு ஒன்றில் கட்டப்பட்டிருந்த ஒருபாளத்தின் வழியாக ஆற்றின் அடுத்த கரைக்கு செல்லவிரும்பி அந்த பாளத்தின் முகப்பில் நடக்க ஆரம்பித்தது. கொசுஒன்று அவ்வாறே ஆற்றின் அடுத்த கரைக்கு செல்ல விரும்பியது. ஆனால் அந்த கொசுவினால் அவ்வளவு தூரம் பறந்த செல்ல இயலவில்லை. அதனால் இந்த யானையின் முதுகில் கொசுவானது உட்கார்ந்து கொண்டு "யானையாரே நாமிருவரும் மிக அதிக எடையுடையவர்கள் அதனால் நாம் நடந்து செல்லும் போது இந்த ஆற்றின் பாளம் உடைந்துவிடப்போகின்றது அதனால் கவணமாக பார்த்து மெதுவாக நடந்து போங்கள்" என உத்திரவு இட்டது. யானை ஒன்றும் கண்டு கொள்ளாமல் நடந்துகொண்டிருந்தது.

யானையானது அந்த ஆற்றப்பாளத்தி நடுவில் நடந்து கொண்டிருந்தது. "ஐயோ இந்த ஆற்றில் எவ்வளவு வேகமாக வெள்ளம் சுழன்றோடு கின்றது யானையாரே பார்த்து மெதுவாக செல்லுங்கள்" என அந்த கொசுவானது உயிர்பயத்துடன் கத்தி உத்திரவிட்டது. அப்போதும் யானை எதையும் சட்டை செய்யாமல் நடந்துகொண்டிருந்தது.

ஒருவழியாக ஆற்றின் அடுத்த கரையை யானை சென்றடடைந்தது. உடன் கொசுவானது "யானையாரே பார்த்தாயா இவ்வளவு வேகமாக வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கும் இந்த ஆற்றின் அந்த கரையிலிருந்து இந்த கரைக்கு பாளத்தின் வழியாக பத்திரமாக நாமிருவரும் வந்து சேருவதற்காக நான் மிகச்சரியாக வழிகாட்டிவந்ததால் பிரச்சினை ஏதுமில்லாமல் நாமும் பாதுகாப்பாக வந்த சேர்ந்தோம். என்னை உன்னுடைய முதுகில் ஏற்றி வந்ததற்கு மிக்க நன்றி" எனக்கூறி விடைபெற்றது. அப்போதும் அந்த யானையானது அந்த ஆற்றின் மறுகரையில் எதனையும் சட்டை செய்திடாமல் தன்னுடைய இரையை தேட சென்றுகொண்டிருந்தது .

இதே போன்று நம்முடைய வாழ்வில் நாம் வாழும் இந்த சமூகத்தில் நம்முடைய செயலைபற்றியும் நம்முடைய பணியை பற்றியும் பலரும் பல்வேறுவிதமாக அவர்வர்கள் மனதில் தோன்றியவாறு தவறாக மதிப்பீடு செய்து தாங்கள்தான் நம்மை மிகச்சரியாக வழிநடத்தி செல்வதாகவும் நம்முடைய வெற்றிக்கு தங்களுடைய அறிவுரையே காரணம் என்றும் வெட்டிபந்தா காட்டிகொள்வார்கள். இவ்வாறான நிலையில் நாமும் அவ்வாறான எதனையும் கவணத்தில் கொள்ளாமல் நம்முடைய முயற்சியில்,நம்முடைய செயலில் மட்டும் மிககவணமாக கருத்தூன்றி வெற்றிபெற முயற்சி செய்க.

சனி, 19 மார்ச், 2016

நாமும் தனியானதொரு தனிஅரசியல்கட்சியை ஆரம்பிக்கலாம்


.வெளிநாட்டினை சுற்றிபார்ப்பதற்காக சுற்றுலாவாக இந்தியாவிலிருந்து ஒருவன் சென்றான் அங்கு உள்ள கடைகளில் விதவிதமான சிலைகள் இருந்ததை கண்ணுற்று அவைகளில் வெங்கலத்தால் ஆன எலியின் உருவச்சிலை பார்வையாளர்களை கவரும் வண்ணம் மிக அழகாக இருந்தது அதனை தன்னுடைய வீடடிற்கு வாங்கி செல்லலாம் என அதனுடைய விலை என்னவென அந்த கடைமுதலாளியிடம் விசாரித்தபோது அந்த வெங்கலத்தால் ஆன எலியின் உருவச்சிலையின் விலையானது பத்து டாலர் என்றும் ஆனால் அந்த எலிஉருவச்சிலை உருவாக்குவதற்கான கதைக்கான விலை மட்டும் நூறு டாலர் என்றும் கூறினார் உடன் எலியின் உருவச்சிலைக்கு மட்டும் பத்து டாலரை வழங்குவதாகவும் எலிஉருவத்தை உருவாக்குவதற்கான கதையை கடைகாரரே வைத்துகொள்ளும்படி கூறி அந்த எலிஉருவசிலையைமட்டும் வாங்கிகொண்டு கடைத்தெருவில் இறங்கி நடக்கதுவங்கினார் உடன் அங்கொன்றும் இங்கொன்றுமாக அந்த நகரத்தின் வீடுகளில் வாழ்ந்துவந்த எலிகள் அவரை பின்தொடர ஆரம்பித்தன அந்த நகரை தாண்டும்போது நகரில் இருந்த இலட்சகணக்கில் ஏராளமான எலிகள் அவரை பின்தொடர ஆரம்பித்தன அவர் வேகமாக நடந்தால் அந்த எலிகளும் வேகமாக அவரை பின்தொடர்ந்தன அவர் விரைவாக ஓடஆரம்பித்தால் பின்தொடரும் எலிகளும் அவரோடு வேகமாக ஓடிவர ஆரம்பித்தன. என்னடா இது ஒரு வெங்கலச்சிலை அழகாக இருக்கின்றதே என அதனை நாம் வாங்கி எடுத்து செல்லமுடிவு செய்தால் அவ்வாறு எடுத்து செல்ல முடியவில்லையே யென தவித்தார் சரி இந்த சூழலிலிருந்து தப்பிப்பதற்காக என்னசெய்யலாம் என தவித்தபோது சிறந்ததொரு ஆலோசனை அவருடைய மனதில் தோன்றியது அதன்படி அந்த நகருக்கு அருகில் கடல் இருந்ததால் கடற்கரைக்கு வேகமாக ஓடிச்சென்று கரையிலிருந்து அந்த எலியின் வெங்கல உருவச்சிலையை கடலில் தூக்கி எறிந்தார் உடன் அவரை பின்தொடர்ந்து ஓடிவந்த அனைத்து எலிகளும் கடலிற்குள் பாய்ந்து குதித்தன அப்பாடா நிம்மதியாகிவிட்டது என அவர் மட்டும் கடற்கரையிலிருந்து அந்த நகரிலிருந்த அதே கடைக்கு திரும்பி வந்து சேர்ந்தார் ஹாஹா பார்த்தீர்களா அந்த எலிஉருவச்சிலை உருவாக்கியதற்கான கதையையும் எங்களுடைய கடையிலிருந்து வாங்க வந்துவிட்டீர்கள் அல்லவா என அந்த கடைகாரர் கூறினார் அதெல்லாம் எனக்கு தேவையில்லை ஐயா எலி உருவச்சிலையை வாங்கி நான் அவஸ்தை பட்டது போதும் அதற்கு பதிலாக இந்திய அரசியல் தலைவர்களின் உருவச்சிலை ஏதேனுமிருந்தால் வாங்கலாம் என வந்தேன் உங்களுடைய கடையின் வாங்கபடும் உருவச்சிலையினால் ஏராளமான மக்கள் பின்பற்றுவார்கள் அல்லவா அதனால்நான் தனிஅரசியல்கட்சி ஆரம்பிக்கலாம் அல்லவா என அரசியல் கட்சியினுடை தலைவர்களின் உருவச்சிலை இருக்கின்றதாவென அந்த கடையில் தேடஆரம்பித்தார்

உண்மையான அன்புமட்டும் இருந்தால் எந்த செயலும் நடைபெறும்


ஒரு ஊரில் ஒரு எட்டுவயது பெண் இருந்தாள் அவளுக்கு இளைய சகோதரன் ஒருவன் இருந்தான் அவன் அதிக நோய்வாய்பட்டு படுத்த படுக்கையாக இருந்தான் மிகப்பெரிய அறுவை சிகிச்சை செய்தால்தான் அவனுடைய உயரை காத்திடமுடியும் என்றும் அதற்காக பணம் அதிகம் செலவாகும்என்றும் தங்களிடம் அந்த அளவிற்கு பணம் இல்லையென்றும் ஏதாவது அதிசயம் நடந்தால் தான் அவனுடைய உயிரை காத்திடமுடியும் என்றும் அந்த பிள்ளைகளின் பெற்றோர்கள் கவலையுடன் விவாதித்துகொண்டிருந்தனர் இந்த செய்தியை அந்த பெண் கேட்டவுடன் அவர்கள் வாழ்ந்துவந்த வீட்டில் அவளுக்காக ஒதுக்கிய தன்னுடைய அறைக்கு சென்று அங்கிருந்த சிறுசிறு பெட்டிகளில் தன்னுடைய பெற்றோர்கள் அவ்வப்போது அவளுக்கு வழங்கும் தொகைகளை சேமித்து வைத்திருந்தை முழுவதையும் எண்ணிக்கை செய்து பார்த்தபோது நூற்று பத்துரூபாய்மட்டும் இருந்தது அந்த பெண் அந்த தொகைமுழுவதையும் எடுத்து கொண்டு நேராக அடுத்த தெருவில் இருந்த மருந்து விற்பணை செய்திடும் கடைக்கு சென் றாள் அங்கு ஏராளமான மக்கள் அந்த மருந்து கடைக்கு வந்து மருந்து களை வாங்கி சென்றுகொண்டிருந்தனர் அந்த கடையின் விற்பணையாளர் அந்த சிறு பெண்ணை திரும்பி கூட பார்க்கமுடியாத வாறு பரபரப்பாக தன்னுடைய பணியை செய்துகொண்டிருந்தார் அந்த பெண் அவருடைய கவணத்தை ஈர்ப்பதற்காக செருமினாள் உடன் அந்த விற்பணையாளர் என்னம்மா வேண்டும் என வினவியவுடன் ஐயா உங்களுடைய மருந்துகடையில் அதிசயம் இருக்கின்றதா என வினவினாள் உடன் அந்த மருந்து விற்பணையாள் தன்னுடைய மற்ற பணியை விட்டுவிட்டு அந்த பெண்ணை என்னவேண்டும் மீண்டும் சொல் என கோரினார் மருந்து வாங்கிட வந்தவர்களும் அந்த தெருவில் சென்ற நபர்களும் இதனை வேடிக்கை பார்க்கதுவங்கினர் ஐயா என்னுடைய தம்பி உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருக்கின்றான் அவனுக்கு பெரிய அறுவைசிகிச்சை செய்தால் தான் உயிர்பிழைப்பானாம் அல்லது அதிசயம் கிடைத்தால்தான் உயிர் பிழைப்பான் எனஎங்களுடைய பெற்றோர்கள் விவாதித்தனர் அதனால் அந்த அதிசயத்தை நான் உங்களுடைய கடையில் வாங்கி செல்லவந்தேன் என விவரமாக அந்த பெண் கூறினாள் உடன் அந்த மருந்த கடை விற்பணையாளர் உண்னிடம் எவ்வளவு பணம் உள்ளது என கோரியபோது உடன் இதோ என்னுடைய முழு சேமிப்பு தொகையான ரூபாய் நூற்று பத்து மட்டும் உள்ளது என கைகளில் காட்டினாள் அந்த சமயத்தில் அங்கு வந்த மருத்துவர் உடன் அந்த பெண்ணிடம் உங்களுடைய வீட்டினை காண்பி நான் வந்த உன்னுடைய தம்பியை பார்த்து அந்த அதிசயத்தை தருகின்றேன் எனக்கூறினார் உடன் அவர்களுடைய வீட்டிற்கு அந்த பெண் அந்த மருத்துவரை அழைத்து சென்றாள் அதன்பின்னர் அந்த மருத்துவர் அந்த பெண்ணின் உண்மையான அன்பிற்காக தொகை எதுவும் பெற்றுகொள்ளாமல் அவளுடைய தம்பிக்கு அறுவைசிகிச்சை செய்து அவளுடைய தம்பியின் உயிரை காத்தார் உண்மையான அன்புமட்டும் இருந்தால் எந்த செயலும் நடைபெறும் எனஇதன்மூலம் அறிந்துகொள்க

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...