சனி, 28 மே, 2016

புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் வாழ்வின் ஒருநாளின் நிகழ்வு


ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒருமுறை தான் பணிபுரிந்த நகரத்திலிருந்து புறப்பட்ட தொடர்வண்டிஒன்றில் பயனம் செய்துகொண்டிருந்தார் அப்போது அந்த தொடர்வண்டியின் பயனச்சீட்டு பரிசோதகர் ஒருவர் வந்து அனைவரிடமும் உள்ள பயனச்சீட்டுகளை சரிபார்த்து கொண்டு வந்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் அவருடைய மேல்சட்டைப்பையில் கைவிட்டுபார்த்தார்அவருடைய பயனச்சீட்டு கிடைக்கவில்லை பின்னர் அவருடைய முழுக்கால் சட்டைபையில் கைவிட்டு துழாவிபார்த்தார் அங்கும் அவருடைய பயனச்சீட்டு கிடைக்கவில்லை அதன்பின்னர் தான் கையில் எடுத்துவந்த கைபெட்டியை திறந்து முழுவதும் தேடிபார்த்தார் அதிலும் அவருடைய பயனச்சீட்டு கிடைக்கவில்லை அதனால் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பரபரப்பாக மீண்டும் மீண்டும் தன்னுடைய பயனச்சீட்டை தேடிக்கொண்டேயிருந்தார் அதனை தொடர்ந்து அவரிடம் வந்த பயனச்சீட்டு பரிசோதகர் “ஐயா தாங்கள் யார் தாங்கள் எவ்வளவு புகழ்பெற்ற அறிவியல் மேதை தாங்கள் பயனச்சீட்டு இல்லாமல் பயனம் செய்யமாட்டீர்கள் என எனக்கு மட்டுமல்லாது இங்கு இருப்பவர்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும் அதனால் கவலைப்படாமல் வைத்த இடத்தில் பயனச்சீட்டு இல்லையே என பதட்டப்படாமல் பயனம் செய்யுங்கள் ஐயா” என கூறியபோது “அதற்காக நான் கவலைபடவில்லை தம்பி நான் எந்த ஊருக்கு பயனம் செய்கின்றேன் என்பதை அந்த பயனச்சீட்டை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம் என தேடுகின்றேன்” எனதேடிக்கொண்டிருந்தார்

பெரியோர்கள் கூறுகின்ற அனுபவங்களை பின்பற்றி பாதுகாப்பாக வாழ்க


ஒருகாட்டில் பல குட்டிகளைப் பெற்ற பெண்முயல் ஒன்று இருந்தது. அதுஒரு நல்ல தாயாக, நாள்முழுவதும் தன்னுடைய குட்டிகளிடம் எந்தெந்த மூலிகை செடிகளின் தழைகளை உண்ணவேண்டும் எந்தெந்த செடிகளின் தழைகளை தவிர்க்கவேண்டும் எவ்வெப்போது தங்களுடைய வாழும் வலையிலிருந்து வெளியில் செல்லவேண்டும் எவ்வெப்போது வெளியில் செல்லக்கூடாது அவைகளைவிட மிகமுக்கியமாக வேட்டைக்காரர்கள் நம்மை வேட்டையாட வரும் நாட்களில் கண்டிப்பாக அதனை அறிந்து நம்மை காத்துகொள்ளவேண்டும் என சிறந்த அறிவுரைகளை கூறிக்கொண்டே இருக்கும் அப்போது “மனிதர்கள்போன்று நமக்குத்தான் செய்திதாட்கள் எதுவும் கிடையாதே அதனால் வேட்டைக்காரர்கள் நம்மை வேட்டையாட வரும் நாட்கள் எவையென நமக்கு எப்போது தெரியவரும்” என அந்த தாயிடம் குட்டிஒன்று கேட்டது “ பொதுவாக வெடிச்சத்தம் கேட்கும் அதனை தொடர்ந்து வேட்டைநாய்கள் குரைத்து கொண்டு ஓடிவரும் சத்தம் கேட்கும் இவைகளை வெகுதூரத்தில் கேட்டவுடன் நம்முடைய வலைக்குள் நாம்பாதுகாப்பாக வந்து புகுந்து கொள்ளவேண்டும்” எனக்கூறியது தாய்முயல்.

இவ்வாறானஎச்சரிக்கை அறிவுரை கூறியதை கேட்டுகொண்டிருந்த குட்டிஒன்று ஒருநாள் வெளியில் இரைதேட சென்றது அப்போது வேட்டு சத்தம் டமால் டுமீல் எனக்கேட்டதும் பதறியடித்துகொண்டு ஓடிவந்து தங்களுடைய தாயிடம் “அம்மா வெகுதூரத்தில் வேட்டுசத்தம் கேட்கின்றது வேட்டைக்காரர்கள் நம்மை வேட்டையாட வருகின்றார்கள்” என மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குமாறு கூறியது

“அடடா குட்டிகளா அது வேட்டைக்காரர்களின் வேட்டைத்துப்பாக்கியின் சத்தமல்ல நம்முடைய காட்டிற்கு அருகில் வாழும் மக்கள் தங்களுடைய திருவிழாவிற்காக வெடித்துமகிழும் வெடிச்சத்தமாகும் அதனை தொடர்ந்து இனியப் பாடல்களின் இசைகளையும் இசைக்கருவிகளின் முழக்கத்தையும் கேட்கின்றது பாருங்கள்” என அமைதிபடுத்தியது

அதேபோன்று வேறொரு நாள் அந்த காட்டில் தாய்முயலும் அதனுடைய குட்டிகளும் சேர்ந்த குடும்ப உறப்பினர்கள் அனைவரும் இரை தேடிக் கொண்டிருந்தனர் அப்போது அருமையான இசைக்கருவிகளலான இனிய இசை முழக்கத்தை கேட்டன குட்டிகள் அதைபோன்ற இசையை நம்முடைய வாழ்நாளில் கேட்டதே இல்லை என மயங்கிகேட்டுக்கொண்டிருந்தன இருந்தபோதிலும் தாய்முயலானது “குட்டிகளே உடன் நாம் அனைவரும் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் நம்முடைய வலைக்கு செல்வதுதான் நமக்கு பாதுகாப்பு வாருங்கள்” என கூறி குட்டிகளை பாதுகாப்பாக தாய்முயல் அழைத்து சென்றது அப்போது குட்டிமுயல்ஒன்று “அம்மா அம்மா இந்த இசை நன்றாகத்தானே இருக்கின்றது இதனால் நமக்கு ஆபத்து எப்படி வரும்” என கேள்விகேட்டது உடன் தாய்முயல் “குட்டிகளே பாம்பாட்டி போன்று இந்த வேட்டைக்காரர்கள் தங்களுடைய இசைகருவிகளில் அருமையான இசையை இசைத்து கொண்டு வருவார்கள் நாமும் மயங்கி இவர்களிடம் மாட்டிகொள்வோம்” என கூறியது. மற்றொருநாளில் ஒருசிலர் கைகளில் துப்பாக்கி ஏந்தி காட்டில் சுற்றிவந்துகொண்டிருந்தனர் “அம்மா அம்மா துப்பாக்கி ஏந்திய நபர்கள் நம்மை வேட்டையாட சென்று கொண்டிருக் கின்றார்கள் அதனால் நாம் நம்முடைய வலைக்கு செல்வோம்” என்றது ஒருகுட்டி. அதனை தொடர்ந்து“குட்டிகளே அவர்கள் காட்டின் பாதுகாவலர்கள் யாரும் காட்டில் அனுமதியின்றி காட்டிலுள்ள இயற்கை பொருட்களை திருடிசெல்லாமல் அவர்கள் பாதுகாப்பதற்காக அவ்வாறு சுற்றிவந்து கொண்டிருக்கின்றனர் அவர்கள் நம்மை ஒன்றும் செய்யமாட்டார்கள்” எனத்தாய் முயல்கூறியது

ஆம் இதேபோன்றே நாமும் நம்முடைய வாழ்க்கையின் ஓட்டத்தில் பாதுகாப்பான நிகழ்வுகள் எவை பாதுகாப்பற்ற நிகழ்வுகள் எவையென நம்முடைய பெரியோர்கள் கூறுகின்ற அனுபவங்களை நாமும் பின்பற்றி பாதுகாப்பாக வாழமுயலுவோம்

ஞாயிறு, 15 மே, 2016

பெற்றோர்கள் மீது பிள்ளைகளுக்கு ஏற்படும் குருட்டுத்தனமான கோபம்


ஒருநாள்என்னுடைய பெற்றோர்களான தந்தையின் மீதும் தாயின்மீதும் எனக்கு அளவற்ற கோபம் வந்தது அதனால் இந்த வீட்டில் இனிமேல் அவர்களுடன் வாழ்வது இல்லை என முடிவுசெய்து வீட்டைவிட்டு வெளியில் கிளம்பலாம் என முடிவுசெய்தேன் ஏனெனில் நான் பொறியியாளர் கல்வியை பயின்று முடித்துவிட்டேன் ஒரு பொறியாளர் எனில் பல இடங்களுக்கு சென்று பார்வையிடவேண்டாமா அவ்வாறு பலஇடங்களுக்கு செல்வதற்கு ஒரு இருசக்கர வாகணம் கோரினால் அதனை இதுவரையில் வாங்கி கொடுக்காமல் இருக்கின்றனரே தங்களுடைய மகன் கோரிய சிறு கோரிக்கையை கூட நிறைவேற்றாத பெற்றொருடன் இனி இருப்பது சரியன்று வெளியே சென்று மிகப்பெரிய பணக்காரணாக மாறி அப்போது இந்த பெற்றொரை என்னிடம் ஓடிவர செய்கின்றேன் பார் என கருவிக்கொண்டு கிளம்ப ஆயத்தமானேன் ஆடைகளை எடுத்து உடுத்தி கொண்டு தந்தையுடைய இடுப்பு பட்டையை எடுத்து மாட்டிகொண்டு அவருடைய காலணியையைும் மாட்டிகொண்டு வெகுவேகமாக அருகிலிருந்த பேருந்த நிலையத்திற்கு சென்றேன் ஆனால் அன்று அங்கு பேருந்து ஒன்று கூட இல்லை கோபம் அவனுக்கு மேலும் அதிகமானது இந்த அரசு சரியாக பேருந்தை கூட இயக்கமாட்டேன் என்கின்றது சே இந்த நாட்டில் வாழ்ந்து என்ன புன்னியம் என சட்டை பையில் கைவைத்தபோது ஏதோவொருசில சீட்டுகள் தென்பட்டன அவைகளை எடுத்து பார்த்தபோது அதில் ஒன்று என்னுடைய தந்தை பணிபுரிந்த அலுவலகத்திலிருக்கும் கூட்டறவு கடன் சங்கத்தில் அவனுக்கு மடிக்கணினி வாங்குவதற்கான கடன்பெறும் சீட்டாகும் மற்றொரு சீட்டு தந்தையின் இருவசக்கர வாகணத்தை ஒப்படைப்பு செய்து அதற்கு பதிலாக அவனுக்கென புதிய இருசக்கர வாகணத்தை வாங்குவதற்கான அத்தாட்சியாகும் அதனை கண்ணுற்றவுடன் ‘அடடா நம்முடைய தந்தை நாம் கோரியவாறு புதிய இருசக்கர வண்டியை வாங்குவதற்கு போதிய பணம் இல்லாததால் தான் அலுவலகத்திற்கு செல்ல பயன்படுத்திடும் இருவசக்கர வாகணத்தை விற்றுவிட்டு அதற்கு பதிலாக கூடுதலாக செலவிட்டு எனக்கு புதிய இருசக்கர வாகணத்தை வாங்கிதர போகின்றாரா ஐயையோ அவரை தவறாக எண்ணிவிட்டேனே’ என கண்ணீருடன் அழுதுகொண்டு இந்த செயலை தடுக்கவேண்டும்எனவேகமாக வீடுவந்து சேர்ந்தேன் அங்கு அவனுடைய தந்தையையும் காணோம் அவருடைய இருசக்கர வாகணத்தையும் காணோம் அதனால் மிகவேமாக அவனுடைய தந்தை இருசக்கர வாகணத்தை மாற்றி வாங்க சென்றிருந்த கடைக்கு சென்ற “அப்பா என்னை மன்னித்துவிடுங்கள் நான் உங்களை தவறாக என்னிவிட்டேன் எனக்காகஎவ்வளவோ தியாகம் செய்துள்ளீர்கள் உங்களுடைய இருசக்கரவாகணத்தை விற்றுவிட்டு எனக்கு புதிய இருசக்கர வாகணத்தை வாங்கவேண்டாம்” என தடுத்து அவரை மெதுவாக வீட்டிற்கு அவருடைய இருசக்கரவாகணத்தில் வீடு கொண்டு வந்த சேர்த்தான் ஆம் பிள்ளைகள் தத்தமது பெற்றோர்களின் தியாகத்தை புரிந்துகொண்டு அதனை அங்கீகரித்து அவர்களை மதிப்புடன் நடத்தவேண்டியது ஒவ்வொரு பிள்ளையின் பொறுப்பாகும் என்ற செய்தியை தெரிந்துகொள்க

ஒரு வங்கியின் முதுநிலை மேலாளருக்கும் கிளைமேலாளருக்கும் இடையேயான அவ்வங்கியின் ஆய்வுகூட்டத்தினுடைய உரையாடல்


முமே: முடிந்த காலாண்டின் உங்களுடைய கிளையின் இலாபம் குறைந்துவிட்டது தெரியுமா வங்கிகிளையின் இலாப உயர்விற்கு பாடுபடாமல் என்னதான் வேலை பார்க்கின்றீர் கிமே: ஐயா நான் இந்த கிளையின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டுகொண்டுதான் இருக்கின்றேன் முமே: அப்படியா ஆனால் உங்களுடைய கிளைக்கு நிர்ணயக்கபட்ட இலக்கைதான் உன்னால் அடையமுடியவில்லை கிமே: ஐயா நான் இந்த காலாண்டின் ஆரம்பத்தில் எனக்கு கொடுத்த இலக்கை அடைவதற்காக கடுமையாக முயற்சி செய்துகொண்டிருந்தேன் முமே: ரொம்ப சரி அவ்வளவு கடுமையாக முயற்சிசெய்தும் ஏன் உனக்கு கொடுத்த இலக்கை உன்னால் அடையமுடியவில்லை கிமே: ஐயா வாடிக்கையாளர்களின் கடன்களுக்கான பரிந்துரை விண்ணப்பங்கள் வட்டார அலுவலகத்தினால் மறுத்தலிக்கபட்டது மேலும் வேறுசில வாடிக்கையாளர் கடன்விண்ணப்பங்களுக்கு தேவையான ஆதாரங்களை காண்பிக்குமாறு கேரி திருப்பிவிட்டேன் அதனால் அவர்கள் தங்களுடைய கடன்கோரிக்கையையே திரும்ப பெற்றுகொண்டார்கள். முமே:நீஉனக்கு கொடுத்த இலக்கை அடைவதற்காக கருத்தூன்றி பாடுபட்டிருந்தால் கண்டிப்பாக இலக்கை எட்டியிருப்பாய் கிமே: ஐயா அவ்வாறு அதனை சரிசெய்வதற்காக நான் முயன்று கொண்டிருந்தபோது வட்டார அலுவலகத்திலிருந்து சிறுவணிக கடன் வழங்கும் பணியின் இலக்கானது மற்ற வட்டார அலுவலகத்தைவிட கூடுதலாக அடையவேண்டும்என எனக்கு உத்திரவிட்டிருந்தார்கள் முமே: அதனால் நீ ஏராளமானஅளவில் சிறுவணிக கடன் வழங்கி கொடுத்த இலக்கை அடைந்துவிட்டாய் அல்லவா கிமே: இல்லை ஐயா நம்முடைய நாடுமுழுவதற்குமான ஆயுள்காப்பீட்டு திட்டத்தை மக்களுக்கு கொண்டுசேர்க்கவேண்டும் என்ற குறியீட்டை அடைவதற்கான பணியை செய்திடுமாறு அறிவுறுத்தினார்கள் முமே: மிகவும் சரியானது நீ ஆயுள்காப்பீட்டிற்காக உனக்கு கொடுத்த இலக்கை அடைந்துவிட்டாய் அல்லவா கிமே: இல்லை ஐயா இந்த சமயத்தில் வட்டார அலுவலகத்திலிருந்து மின்னஞ்சல் ஒன்று வந்தது அதில் கிளையில் வாடிக்கையாளராக இருக்கும் அனைவரை பற்றிய விவரங்களையும் தயார்செய்து நம்முடைய வாடிக்கையாளரை பற்றிய அனைத்து விவரங்களையும் நாங்கள் தெரிந்திருக்க வேண்டும்என கேட்டுக்கொள்ளபட்டேன் முமே: மிகவும் நன்று உன்னுடைய கிளையின் வாடிக்கையாளர் அனைவரை பற்றிய விவரமும் தொகுத்து தயாராக வைத்துள்ளாய் அல்லவா கிமே: இல்லை ஐயா இந்த சமயத்தில் வட்டார அலுவலகத்தில் இருந்து உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கான ஆரோக்கிய காப்பீடு செய்திடுமாறு அறிவிப்பு வந்தவிட்டது அதனால் வாடிக்கையாளரை சந்தித்து அனைவரையும் இந்த உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கான ஆரோக்கிய காப்பீடு செய்திடுமாறான பணியை செய்ய ஆரம்பித்தேன் . முமே: பரவாயில்லையே நீ வட்டார அலுவலகம் கோரியவாறு போதுமான உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கான ஆரோக்கிய காப்பீடு இலக்கை எய்திவிட்டாய் அல்லவா கிமே: இல்லை ஐயா அதன்பின்னர் வட்டார அலுவகத்தில் இருந்து வராக்க கடன் எவ்வளவு அவற்றுள் தள்ளுபடி செய்வது எவ்வளவு என சரிபார்த்து கடனை வசூலிக்குமாறு அறிவுறுத்தபட்டேன் முமே: மிகவும் சரி போதுமானஅளவு அனைத்து கடன்களையும் வசூல் செய்துவிட்டாய் அல்லவா கிமே: இல்லை ஐயா அதற்குள் இந்த காலாண்டு முடிந்தவிட்டது நீங்களும் எங்களுடைய கிளைஅலுவக செயல்பாட்டினை ஆய்வு செய்திட அழைத்துவிட்டீர்கள் தற்போது உங்கள்முன் வந்து இருக்கின்றேன் நிருவாக மானது தம்கீழ் பணிபுரிபவர்களின் பணிக்கான இலக்கை நிர்ணயத்தபின் அதனை அவ்வப்போது உடனுக்குடன் வெவ்வேறு பணிகளுக்கான இலக்காக மாற்றி கொண்டிருந்தால் அவர்கள் அனைவரும் ஒரு வேலையும்செய்யாது நிறுவனத்தின் பணி நடைபெறாமல் தடுமாறி கொண்டிருக்கும் என்பது திண்ணம் குறிப்பு இங்கு முமே= முதுநிலை மேலாளர் கிமே=கிளைமேலாளர்

திங்கள், 9 மே, 2016

எந்தவொரு நிகழ்வையும் தீர விசாரித்து அறிவதே நல்லது


ஆறு,ஓடை ,கினறு போன்றவைகளில் காணப்படும் தவளையை பிடித்து எடுத்துவந்து ஒரு பாத்திரத்தில் இட்டு தண்ணீர் ஊற்றி அந்த பாத்திரத்தினை சூடேற்றிடுக அதனை தொடர்ந்து பாத்திரத்தில் உள்ள தண்ணீரின் வெப்பநிலை உயர உயர அதற்கேற்றவாறு அதில் நாம் கொண்டு வந்த இட்ட தவளையும் தன்னுடைய உடல் வெப்பநிலையை சரிசெய்து கொண்டு சமாளித்து நீந்திகொண்டிருக்கும் பாத்திரத்தில் உள்ள தண்ணீரின் வெப்பநிலையானது கொதிநிலைய அடையும்போது அதற்குமேல் அந்த தவளையால் தன்னுடைய உடல் வெப்பநிலையை சரிசெய்து வாழமுடியாத நிலை ஏற்படும் அதனால் அந்த தவளையானது பாத்திரத்தில் சூடான தண்ணீரில் இருந்து தப்பிக்கலாம் என தாவிகுதிக்க முயற்சிசெய்திடும் ஆனால் அந்த தவளையால் தாவிகுதித்து தப்பிக்கமுடியாது ஏனெனில் தவளையானது தன்னுடைய சக்தி முழுவதையும் பாத்திரத்தில் இருந்த தண்ணீரின் வெப்பநிலைக்கு ஏற்ப தன்னுடைய உடலின் வெப்பநிலை சரிசெய்து கொள்வதற்காகவே செலவிட்டுவிட்டது அதனால் அந்த தவளையால் பாத்திரத்திலிருந்து வெளியே தாவி குதித்து செல்வதற்கான சக்தி அதனிடம் காலியாகி விட்டதால் அப்படியே அந்தவளையானது கொதிக்கும் நீரில் இறந்து மிதக்கும்

உடன் நம்மில் பெரும்பாலானோர் சூடாக கொதிக்கும் தண்ணீர்தான் அந்த தவளையை கொன்றுவிட்டது எனமுடிவுசெய்திடுவோம் உண்மை அதுவன்று அந்தவளையானது தான் இருக்கும் சூழல் மாறுகின்றதே உடனே இந்த சூழலிலிருந்து தப்பித்துவிடுவோம் என ஆரம்பத்திலேயே முயற்சிசெய்திருந்தால் தப்பித்திருக்கலாம் ஆனால் அதற்கு பதிலாக சூழலிற்கு தக்கவாறு தன்னுடைய உடல்நிலையை தகவமைத்து கொள்வதற்காகவே தன்னுடைய சக்திமுழுவதும் செலவிட்டபின் சக்தியே இல்லாதுபோது அதற்கு மேலும் உடலை தகவமைத்து கொள்ளமுடியாத நிலையில் வெளியே தப்பிசெல்லவேண்டும் எனஅதற்காக முயலும்போது அந்ததவளையால் இயலவில்லை என்பதே எதார்த்தமான உண்மைநிலையாகும்

இவ்வாறே நாம் வாழும் இந்த சமூக சூழலில் எந்தவொரு நிகழ்விற்கு ஏற்பவும் நம்மை சரிசெய்து தகவமைத்து கொண்டு வாழத்தலைப்படு-வதற்காக நம்முடைய சக்தி, அறிவாற்றல் ஆகிய அனைத்தையும் செலவிட்டு அவைமுழுவதையும இழந்துவிடுகின்றோம் குறிப்பிட்ட நிலைக்குமேல் நம்மால் தகவமைத்து வாழ இயலாத சூழலில் தப்பிக்கமுடியாமல் நாம் வாழும் இந்த சமூக சூழலை குறைகூறி நம்முடைய வாழ்வை முடித்து கொள்கின்றோம் ஆயினும் மிகச்சரியாக நன்றாக நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ நினைப்பவன் எந்தெந்த சூழலில் சரிசெய்து தகவமைத்து வாழ்வது எந்தெந்த சூழலை தவிர்த்து தப்பித்து செல்வது என முடிவுசெய்தால் நிம்மதியாக மகிழ்ச்சியுடன் வாழமுடியும் என்ற செய்தியை மனதில் கொள்க

குழுவான நபர்கள் ஏன் சிரித்து பேசிக்கொண்டிருப்பார்கள் தெரியுமா


நான் ஒரு நகர்புறத்தில் இயந்திரமயமான வாழ்க்கையில் இருந்து வருவதால் அதிலிருந்து சிறிது உடலிற்கும் மனதிற்கும் ஒய்வு கொடுப்பதற்காக ஒவ்வொருவார இறுதியாக வரும் விடுமுறை நாளில் அந்த நகரத்தின் ஒரு ஓரத்தில் இருந்த பூங்காவிற்கு சென்று இயற்கை காற்றில் யோகா நடை,பயிற்சி போன்றவைகளோடு பொழுது போக்குவது வழக்கமாகும் அப்போது குழுவான நான்கைந்து பென்களும் அதே பூங்காவில் இருந்த உட்காரும் மேடையில் அமர்ந்துகொண்டு சிரித்து பேசி கொண்டு இருப்பது வழக்கமாகும்

இவ்வாறான சூழலில் அன்றுஒருநாள் நான் வழக்கமாக செல்லும் அந்த பூங்காவிற்கு சென்று என்னுடைய பயிற்சியில் ஈடுபட்டுவந்தேன் அதே பூங்காவில் அதே உட்காரும் மேடையில் வழக்கம்போன்று அதே நான்கைந்து பெண்கள் அமர்ந்திருந்தனர் ஆனால் மகிழ்ச்சியுடன் சிரித்து பேசிடாமல் மெளனமாக இருந்ததை கண்ணுற்ற என்னுடைய மனம் பொறுக்கமுடியாமல் அவர்களிடம் சென்று மன்னிக்கவும் ஒவ்வொரு வார இறுதிநாட்களில் நான் இந்த பூங்காவிற்கு வந்து யோகா நடைபயிற்சி போன்றவைகளை செய்துவருகின்றேன் அப்போதெல்லாம் நீங்கள்அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் சிரித்து பேசுவதை கண்டு வருவேன் ஆனால் இன்று நீங்கள் அனைவரும் அவ்வாறு ஏன் மகிழ்ச்சியாக சிரித்து பேசிடாமல் மெளனமாக அமர்ந்திருக்கின்றீர்கள் என தெரிந்துகொள்ளலாமா என வினவியவுடன் யாரும் பதில் பேசவில்லை மீண்டும் வற்புறுல்த்தியபின் ஒருநபர் மட்டும் எழுந்து கொஞ்சதூரம் தள்ளிவந்து மிகமெதுவான குரலில் அதுவா வழக்கமாக நாங்கள் நால்வர்மட்டுமே ஒவ்வொரு வாரமும் வருவோம் அதனால் மிகுதி வராத நபரைபற்றி கேலியும் கிண்டலுமாக பேசி மகிழ்வோம் ஆனால் இன்று ஐந்து பேரும் வந்துவிட்டோம் அதனால் யாரைபற்றி கேலியும் கிண்டலுமாக பேசிமகிழமுடியும் அதனால் தான் அமைதியாக உட்கார்ந்திருக்கின்றோம் என கூறி சென்றார்

திங்கள், 2 மே, 2016

பால் பண்ணை விவசாயிக்கும் ரொட்டி கடைகாரருக்கும் இடையே எழுந்த தகராறு


ஒருகிராமத்தில் வாழ்ந்துவந்த விவசாயி ஒருவர் தன்னுடைய பண்ணையில் இருந்து தினமும் அருகிலிருந்த நகரத்து ரொட்டி கடைகாரர் ஒருவருக்கு பசும்பாலினை விற்று வந்தார்

ஒருசமயம் அவர் அளந்து கொடுத்த பால் குறைந்து விட்டது என நகரத்தில் இருந்த நீதி மன்றத்தில் அந்த விவசாயிக்கு எதிராக வழக்கு ஒன்றினை தொடுத்தார்

அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் அந்த விவசாயியை அழைத்து ஏன்குறைவாக பசும் பாலினை ரொட்டிகடைக்காரருக்கு அளந்து கொடுத்தீர்கள் என நீதிபதி வினவியபோது

ஐயா நான் தனியாக பால் அளப்பதற்கு என பாத்திரம் எதுவும் வைத்துகொள்வதில்லை அதனால் நான் தினமும் இந்த ரொட்டிகடைக்காரர் ரொட்டிகளை எடுத்துவருவார் அந்த ரொட்டிகளை ஒருஎடைதட்டிலும் எங்களுடைய பண்ணையில் கறந்த பாலினை மற்றொரு எடைதட்டிலும் வைத்து எடையிட்டு வழங்குவதுதான் வழக்கம்

அதேபோன்று அன்றும் ரொட்டிகடைக்காரர் கொண்டுவந்த ரொட்டிகளை எடைத்தட்டில் வைத்து எங்களுடைய பண்ணையில் கறந்த பாலினை மற்றொரு எடைதட்டிலும் வைத்து எடையிட்டு வழங்கினேன் இதில் என்னுடை தவறு எதுவுமில்லை ஐயா தவறு ரொட்டிக் கடைக்காரருடையதாகும் ஐயா அவர் கொண்டுவந்த ரொட்டி எடையின் அளவிற்கே படும் பாலினை வழங்கினேன் எனக்கூறியதை தொடர்ந்து நீதிபதி அந்த வழக்கினை தள்ளுபடிசெய்தார்

நாம் என்ன செய்கின்றோமோ அதற்கேற்ற பலன்தான் நமக்கு கிடைக்கும் என்ற செய்தியை அறிந்துகொள்க

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...