வெள்ளி, 24 ஜூன், 2016

பெற்றோர்கள் அழியக்கூடிய பெருஞ்செல்வத்தை நமக்காக சேர்த்து வைக்கவில்லை என அவர்களை மதிக்காமல் அவர்களுடைய வழ்க்கைமுறைகளே நமக்கு வழிகாட்டி என உறுதி கொண்டு வாழந்திடுக


தமிழ்நாட்டில் புகழ்பெற்ற ஒருவர் தான் வாழ்வதாற்கான வீடுகூட மாடிவீடாக இல்லாமல் சாதாரன கூறைவீட்டில் தன்னுடைய இறுதிகாலத்தில் வாழ்ந்து வந்தார் தன்னுடை ய மகனுக்கு செல்வும் எதுவும் சம்பாதித்து வைத்திடாமல் நல்ல கல்வியைமட்டும் வழங்கிஇருந்தார் அவருடைய மகன் இன்னும் எந்தபணிக்கும் செல்லாமல் வேலைவெட்டியில்லாது இருந்தான்

அவர் தன்னுடைய வாழ்வின் கடைசி பயனத்தை துவங்கவிருந்தநிலையில் தன்னுடைய மகனை அருகில் அழைத்து தம்பி நீ உன்னுடைய வாழ்வில் என்னை போன்று நல்லவனாக வல்லவனாக நேர்மையானவனாக நான் வாழ்ந்தவாறு வாழ்ந்து வரவேண்டும்என அறிவுரைகூறினார்

உடன் அவருடைய மகன் போ அப்பா உங்களை மாதிரி வாழ்ந்தால் வாழ்க்கையை வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் அடுத்தவேளை உணவிற்கு என்னசெய்வது என்ற இக்கட்டான நிலையில் தான் வாழவேண்டியிருக்கும் என மறுத்து கூறினான்

சரி தம்பி உன்விருப்பம் எப்போதும் நான் கூறியதை மனதில் கொண்டு வாழ்ந்தால் போதும் எனக்கூறியபின்னர் அவருடைய உயிர் பிரிந்தது

அதன்பின்னர் அவருடைய மகன் மிக சிரமமபட்டு அவரை அடக்கம் செய்து இறுதிசடங்கெல்லாம் செய்து முடித்தான் பிறகு சிறிது நாள் கழித்து ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் கிளைமேலாளர் பணியில் சேருவதற்கான நேர்முக தேர்வு கடிதம் கிடைக்கபெற்று அதில் கலந்து கொண்டான் ஆனால் அந்த நிறுவனமோ வேறு ஒருநபரை கிளைமேலாளராக பணிநியமனம் செய்வதற்கு ஏற்கனவே முடிவுசெய்து விட்டு ஒரு வழக்கமான நடைமுறைக்காக அவனுக்கும் சேர்த்து நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள கடிதம் அனுப்பியிருந்தது

நேர்முகத்தேர்வின்போது அந்த நேர்முகத்தேர்வு குழுவின் தலைவர் இவனுடைய பெயரையும் இவனுடைய தந்தையின் பெயரையும் கேட்டார் இவன் தன்னுடைய பெயரையும் தன்னுடைய தகப்பனாரின் பெயரையும் கூறியவுடன் அவருக்கு மிக ஆச்சரியமாகவிட்டது அதனால் அவனுடைய தந்தையின் பெயரை கூறி அவருடையு மகனா பரவாயில்லையே நல்லவனாகத்தான் இருப்பாய் இந்த பணிக்கு பொருத்தமானவன்தான் நீ

நான் இந்த நிலைக்கு வருவதற்கு காரணமே அவனுடைய அப்பாதான் காரணம்என்றும் அதற்காக எந்தவொரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் செய்தார் என்றும் அவருடைய முகவரி போன்ற விவரம் எதுவும் தனக்குதெரியாது என்றும் அவர் தனக்கு செய்த உதவிக்கு கைமாறாக உடன் அவனை இப்போதே கிளைமேலாளராக நியமனம் செய்யவிருப்பதாகவும் தற்போது அவனுடைய அப்பா எவ்வாறு இருக்கின்றார் என வினவியபோது அவன் கண்களில் கண்ணீர் கசிய ஆரம்பித்தது தொடர்ந்து அவனுடைய அப்பா இறந்து விட்டார் என க்கூறினான்

உடன் தேர்வு குழு உறுப்பினர்கள் அனைவரும் அவருடைய தந்தை இறந்ததற்காக ஓரிரு நிமிடம் மவுனஅஞ்சலி செலுத்தினர் அதனைதொடர்ந்து அவனுக்கு கிளைமேலாளர் பதவிக்கான பணிஆணையை உடன் வழங்கி அன்றே பணியில் சேருமாறு அறிவுறுத்தினர்

அவன் அப்பா உங்களுடைய பேரும் புகழையும் மதிக்காமல் பணம் மட்டுமே பெரியதாக எண்ணி அதை சேர்த்து வைக்காமல் விட்டதை மிகமரியாதை குறைவாக உங்களிடம் இறக்கும் தறுவாயில் நடந்துகொண்டேனே என அழுது புலம்பினான்

பின்னர் பதவியேற்று புதிய வீடுகட்டி குடிபுகுமுன் தன்னுடைய விட்டின் நுழைவு வாயிலில் அவருடைய உருவப்படத்தையும் அவருடையமுக்கியமா னஅறிவுரைகளையும் வைத்து வாழ்ந்துவந்தான்

நீதி பெற்றோர்கள் அழியக்கூடிய பெருஞ்செல்வத்தை நமக்காக சேர்த்து வைக்கவில்லை என அவர்களை மதிக்காமல் துச்சமாக எடுத்தெறிந்து பேசாமல் அவர்களுடைய வழ்க்கைமுறைகளே நமக்கு வழிகாட்டி என உறுதி கொண்டு நாமும் வாழ்ந்திடுவோம்

திங்கள், 20 ஜூன், 2016

அனைவரையும் சமமாக மதித்து நடத்துவதே சரியான செயலாகும்


. என்னுடைய நண்பர் ஒரு நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராக இருந்தார் அவருடைய அலுவலகத்தில் வரவேற்பறையில் பணிபுரிபவர் அந்த நிறுவனத்தின் சாதாரன ஊழியர் ஆவார் ஒருசமயம் அந்த நண்பர் வரவேற்பு அறையை பார்வையிட்டு ஆய்வு செய்து கொண்டிருந்தார் அந்த ஊழியர் எழுந்து நின்று தேவையான ஆவணங்களை எடுத்து காண்பித்து கொண்டும் தேவையான விவரங்களையும் விளக்கங்களையும் கூறிக்கொண்டுமிருந்தார்

அப்போது வெளியிலிருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது அந்த அழைப்பை அந்த வரவேற்பறை ஊழியர் ஏற்று பேசஆரம்பித்தார் உடன் எதிர்முனையில் இருப்பவர் இந்த நிறுவனத்திடமிருந்த பெறப்பட்ட பொருட்களில் குறைபாடு ஏதோ இருந்தது அதனால் இவர் சாதாரண ஊழியர் என்பதால் அவர்களுடைய நிறுவனத்தை பற்றியும் அவர்கள் உற்பத்தி செய்திடும் பொருட்களை பற்றியும் மிகவும் தரக்குறைவாகவும் அந்த ஊழியரையும் தரக்குறைவான சொற்களால் திட்டிகொண்டிருந்தார்

அதனை தொடர்ந்து நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் அந்த தொலை பேசியை வாங்கி தான் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் என்றும் எதிர்முனையில் இருப்பவரின் குறை என்னவென கூறினால் உடன் அதனை சரிசெய்வதாகவும் கூறியவுடன் எதிர்முனையில் இதுவரை கோபமாக திட்டிகொண்டிருந்தவர் அமைதியாக அதெல்லாம் ஒன்றுமில்லை ஐயா உங்கள் நிறுவனத்தில் இருந்து அனுப்பட்ட பொருளில் சிறிய குறைபாடு உள்ள து அதனை சரிசெய்து கொடுத்தால் போதும் என கூறினார் உடன் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரும் சரிசெய்துவிடுவதாக பதில் கூறி தொலைபேசியை வைத்தார்

நீதி நம்முடைய சமூக அமைப்பில் நாம் கீழ்நிலையில் உள்ளவர்கள் எனில் அவர்களை தரக்குறைவாக பேசவும் நடத்தவும் செய்கின்றோம் அதே உயர்நிலையில் இருப்பவர்கள் எனில் தவறு அவர்மீது இருந்தாலும் அதனை அப்படியே தவறே இல்லை என்றவாறு விட்டுவிடுகின்றோம் இது தவறான முன்னுதாரணமாகும் இந்த உலகில் பிறந்த நாம் அனைவரும் சமமே அதனால் நாம் அனைவரையும் சமமாக மதித்து நடத்துவதே சரியான செயலாகும்

புதன், 15 ஜூன், 2016

உடைமையை பொருத்தே நம்முடைய மனம் அந்த பொருளிற்கான பதில் செயல்களை உருவாக்குகின்றது


ஒரு ஊரில் வாழும் மனிதன் ஒருவன் சிறிதுகாலம் வெளியூர் சென்று வந்தான் அவனுடைய ஊரை நெருங்கும்போது வீடு ஒன்று பயங்கரமாக தீபிடித்து எரிவதை பார்த்தான் அந்த ஊர் மக்கள் அனைவரும் கும்பலாக அங்குவந்து தூரத்திலிருந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்

அந்த மனிதன் எரியும் வீட்டின் அருகில் சென்று சேரும்போதுதான்அது தன்னுடைய வீடு என தெரியவந்தது. அதனால் பதைபதைப்புடன் அந்தவீட்டில் பிடித்திருந்த தீயை அணைக்கலாம் எனஓடினான் ஆயினும் யாரும் அருகிலேயே நெருங்கமுடியவில்லை அந்த அளவிற்கு தீயானது கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது அந்த வீட்டிலிருந்து ஒரு பொருள்கூட மீட்க முடியாத நிலையில் தீஎரிந்து கொண்டிருந்தது

அவனுடைய முன்னோர்கள் அந்த மனிதனுக்காக உருவாக்கிய அருமையான வீடாகும் அதனால் ஐயோ வீடு வீட்டில்உள்ள பொருள் அனைத்தும் வீணாகி போய்விட்டதே என அழுதுபுரண்டு தலையில் கைவைத்துகொண்டு தரையில் அப்படியே அமர்ந்து விட்டான்

அந்த நேரத்தில் அவனுடைய மகன்ஒருவன் ஒடிவந்து அப்பா கவலைபடாதீர்கள் நீங்கள் ஊருக்கு போனபோது உங்களை எதிர்பார்த்திடாமல் நாம் எதிர்பார்த்ததைவிட நான்கு மடங்கு விலைக்கு நம்முடைய வீட்டினை விற்றேன் என க்கூறினான் இந்த செய்தியை கேட்டவுடன் அந்த மனிதன் அழுது புலம்புவதை விட்டிட்டு யாருடைய வீடோ எரிகின்றது என சிரித்து கொண்டு வேடிக்கை பார்த்திட ஆரம்பித்தான்

சிறிதுநேரம் கழித்து அந்த மனிதனுடைய இரண்டாவது மகன் வந்து அப்பா அண்ணன் நம்முடைய வீட்டினை விற்பதற்கு ஒப்பந்தம் மட்டும் செய்துகொண்டு முன்பணம் பெற்று கொண்டிருந்தார் அதனை தொடர்ந்து நாம் விற்பனையை செய்தால் மட்டுமே வீடு பெறுபவருக்கு சொந்தமாகும் இந்த வீடு தற்போது நம்முடைய உடைமைதான் எனக்கூறினான்

இதைக்கேட்டவுடன் அந்த மனிதனுக்கு இதயவலி ஏற்பட்டுது அதனால் அப்படியே நின்றிருந்த வாரே கீழே சாய ஆரம்பித்தான் உடனிருந்தவர்களும் அந்த மனிதனுடைய மகன்களும் அவரை கைதாங்கலாக பிடித்து அமரவைத்து குடிப்பதற்கு சிறிது குடிநீர் அந்த மனிதனுக்கு கொடுத்து குடிக்கசெய்து சமநிலை படுத்திகொண்டிருந்தனர்

வீட்டின் தீ மிகவும் அதிகஅளவு கொழுந்து விட்டுதொடர்ந்து எரிந்து் கொண்டிருந்தது ஊர் பொதுமக்கள் யாருடைய வீடோ எரிகின்றது என தூரத்தில் இருந்தனர்

அதன்பின்னர் சிறிதுநேரம் கழித்து அந்த மனிதனுடைய மூன்றாவது மகன் வந்து அப்பா வீடு எரிந்த சாம்பல் ஆனாலும் பரவாயில்லை ஒப்பந்தம் செய்தவாறு முன்பணம் போக மிகுதி தொகையை கண்டிப்பாக வழங்குவதாக ஒப்பந்ததாரர் கூறுகின்றார் என க்கூறியதும் உடன் தெம்புடன் தரையில் அமர்ந்திருந்த நிலையிலிருந்து எழுந்து யாருடைய வீடோ யாருடைய பொருட்களோ முழுவதும் எரிந்து சாம்பலாகின்றன என சிரித்துகொண்டே பொதுமக்களோடு சேர்ந்து வீடு எரிந்து சாம்பலாவதை வேடிக்க பார்த்திட ஆரம்பித்தான்

நீதி.எந்த வொரு பொருளும் நம்முடைய உடைமை யெனில் அதனை நாம் மிகஅதிக அக்கறையோடு கவணிப்போம் மற்றர்களின் உடைமையெனில் அலட்சியமாக கவணிப்போம் ஆயினும் இரண்டு நிலையிலும் பொருளும் அதன் தன்மையும் மாறாதது ஆகும் அதன் உடைமையை பொருத்தே நம்முடைய மனம் அந்த பொருளிற்கான பதில் செயல்களை உருவாக்குகின்றது

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...