ஞாயிறு, 31 ஜூலை, 2016

ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வதே மனித தன்மையாகும்


ஒருமனிதன் வயதான கிழவி நடத்தும் பழக்கடையில் தினமும் ஒருகிலோ கொய்யா பழம் அல்லது ஆரஞ்சு பழம் வாங்குவது வழக்கமாகும் ஆனாலும் வாங்கியவுடன் ஒருபழத்தை எடுத்து கடித்துவிட்டு அந்த பழக்கடைகார கிழவியிடம் அம்மா உங்களிடம் வாங்கிய பழம் சுவையாக இல்லை வேண்டுமானால் இந்த பழத்தை தின்று பாருங்கள் என தான் அவர்களிடம் வாங்கிய பழங்களில் ஒன்றை எடுத்து கொடுத்து அந்த பழக்கடைகார கிழவியிடம் தின்று ருசி பார்க்குமாறு கூறுவார் உடன் அந்த பழக்கடைகார கிழவியும் அவரிடமிருந்து பழம் ஒன்றை வாங்கி கடித்து தின்று பார்த்து விட்டு இந்த பழம் சுவையாகத்தானே உள்ளது வீட்டிற்கு எடுத்து சென்று உங்களுடைய பிள்ளைகளுக்கும் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் கொடுங்கள் என பதிலளிப்பார் இவ்வாறான நிகழ்வு தினமும் நடந்துகொண்டிருந்தது அவருடன் வரும் அவருடைய குடும்ப உறுப்பினர் தங்களுடைய வீட்டிற்கு சென்றபின்னர் ஏன் தினமும் பழக்கடைகார கிழவியிடம் பழத்தை வாங்கியவுடன் ஒரு பழத்தை நீங்கள் கடித்து பார்த்துவிட்டு மற்றொன்றை அந்த பழக்கடைக்கார கிழவியிடம் கொடுத்து கடித்து தின்று பார்க்குமாறு கூறுகின்றீர்கள் என வினவினார் உடன் அவர் அந்த பழக்கடைகார கிழவி-யானவர் இவ்வளவு பழங்களை தன்னுடைய கடையில் விற்பணை செய்தாலும் ஒருபழம் கூட தனக்கு வேண்டுமென எடுத்து தின்று பசியாறுவதில்லை அதனால் நான் வாங்கு கின்ற பழத்திலாவது ஒன்றை அந்த அம்மா தின்று பசியாறட்டும் என்ற நல்ல எண்ணத்தில் அவ்வாறு செய்வதாக கூறினார் இதேபோன்று அந்த கிழவியின் பழக்கடைக்கு அருகிலுள்ள மற்றொரு கடைகாரன் அம்மா தினமும் அந்த மனிதர் உங்களிடம் ஒருகிலோ பழம் வாங்குகின்றார் வாங்கியவுடன் ஒருபழத்தை எடுத்து தின்றுவிட்டு சுவையாக இல்லை எனக்கூறி மற்றொன்றை உங்களிடம் கொடுத்து கடித்து தின்று பார்க்குமாறு கூறுகின்றார் ஏன் இவ்வாறான நிகழ்வு தினமும் நடைபெறுகின்றது என வினவினார்

உடன் அந்த பழக்கடை கிழவியும் நானும் பலநாட்களாக இந்த மனிதனில் செயலை பார்த்தேன் அந்த மனிதன் தன்னுடைய பழத்தில் இருந்து எனக்கு கொடுப்பதாக எண்ணி கொண்டு அந்த மனிதன் பழம் ஒன்றை எனக்கு கொடுத்து கொண்டு உள்ளார் உண்மையில் நான் அவருக்கு விற்பணை செய்திடும் பழங்களை எடை போடும்போது மட்டும் உண்மையான எடையைவிட எனக்கு கொடுக்கும் பழம் ஒன்றையும் கூடுதலாக சேர்த்து எடையிட்டு அவரிடம் கொடுத்து விடுகின்றேன் ஆனால் அவர் தன்னுடைய பழத்தை எனக்கு கொடுப்பதாக மனதி்ற்குள் எண்ணிக் கொள்கின்றார் அவ்வாறெல்லாம் இல்லை என பதில்கூறினார் அந்த பழக்கடைக்கார கிழவி

நீதி ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வதே மனித தன்மையாகும் என இதிலிருந்து அறிந்துகொள்க

ஞாயிறு, 24 ஜூலை, 2016

சிங்கப்பூரின் வாடகைமகிழ்வுந்தின் ஓட்டுநர்


வெளிநாட்டு பயனி ஒருவர் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றிருந்தார் அங்கு அவசரமாக குறிப்பிட்ட இடத்திற்கு போகவேண்டியிருந்ததால் வாடகைமகிழ்வுந்தில் சென்றார் அந்த வண்டியின் ஓட்டுநர் பயனம் துவங்கும்போது பயனதூரம் அதற்கான வாடகை தொகை ஆகியவற்றை காண்பிக்கும் கருவியை செயல்படசெய்தார்

பின்னர் குறிப்பிட்ட இடம் வந்தவுடன் அந்த கருவியில் 110 டாலர் என காண்பித்தது உடன் வெளிநாட்டு பயனியும் 110 டாலரை தன்னுடைய பையிலிருந்து எடுத்து ஓட்டுநரிடம் கொடுத்தார்

ஆனால் அந்த ஓட்டுநர் "வாடகை தொகையாக எனக்கு 100 டாலர் மட்டும் கொடுத்தால் போதும் ஐயா" என 100 டாலர் மட்டும் வாங்கி கொண்டார் "என்ன ஓட்டுநரே பயனதூரம் காண்பிக்கும் கருவியில் 110 டாலர்தானே கணக்கிட்டு காண்பிக்கின்றது" என வெளிநாட்டு பயனி வினவியபோது

"இல்லை ஐயா இந்த இடத்திற்கு நேர்வழியில் வந்தால் 100 டாலர் மட்டுமே அந்த கருவி கணக்கிட்டு காண்பிக்கும் . ஆனால் அந்த வழியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் விரைவில் உங்களை இங்கு கொண்டுவந்து சேர்க்கவேண்டும் என்ற அவசரத்தை கருதி போக்கு வரத்து நெரிசல் இல்லாத சுற்றுவழியில் இன்று கொண்டு வந்து சேர்த்தேன் அதனால் கணக்கிடும் கருவி அதிக தொகையை காண்பிக்கின்றது" என பதில் கூறியதை தொடர்ந்து ஓட்டுநரின் அந்த பதிலால் திருப்தியுற்று அந்த வெளிநாட்டு பயனியும் அடுத்தபணியை செய்வதற்குசென்றார்

அந்த ஓட்டுநருக்கு குறைந்த அளவே கல்வி அறிவு இருந்தபோதிலும் வெளிநாடுகளில் தம்முடைய நாட்டை பற்றிய தவறான எண்ணம் ஏற்படக்கூடாது என இந்த ஓட்டுநர் நடந்துகொண்டார் இதுதான் உண்மையான ஒரு நாட்டின் ஒவ்வொரு மனிதனின் மிகச்சரியான செயலாகும் தன்னுடைய வாழ்க்கைக்கு பணம் மட்டுமே முக்கியமன்று நாட்டின் கெளரவமே முக்கியம் என அந்த ஓட்டுநர் நடந்து கொண்டதே மிகச்சரியான செயலாகும்

வியாழன், 21 ஜூலை, 2016

மனிதன் முதலில் தத்தமது உடல்நலனை சரியாக பராமரித்துவந்தால்தான் மற்றவர்களுக்கு உதவமுடியும்


ஒருகிராமத்தில் நாம் காலில் அணியும் காலணிகளை உருவாக்கும் தொழிலாளி ஒருவர் இருந்தார் அவர்மட்டும் தான் அந்த ஊரிலுள்ளஅனைவருக்குமான காலணியை உருவாக்குபவர் அதனால் அந்த கிராமத்தில் இருந்த அனைவருக்குமான காலணியை அவர் மட்டுமே தைத்து வழங்குவதால் அந்த தொழிலாளியால் நாள்முழுக்க பணிசெய்தாலும் இந்த பணியை செய்துமுடிக்கஇயலாத நிலையில் இருந்தார் ஆனால் இவ்வாறான வேலைபளுவால் அந்த தொழிலாளி தனக்கு மட்டும் தேவையான காலணியை செய்து அணிந்து கொள்ள முடியாத நிலையில் இருந்தார் அதனை தொடர்ந்து அந்த கிராமத்தில் உடன் வாழும் மக்கள் அனைவரும் முதலில் உங்களுடைய காலிற்கான காலணியை செய்து அணிந்து பணிபுரிந்தால்தான் உங்களுடைய உடல்நிலை நலமாக இருக்கமுடியும் அதனடிப்படையில் மற்றவர்களுக்கு தேவையான காலணிகளை உங்களால் செய்து வழங்கமுடியும் என அறிவுரை கூறியும் அவர் அதனை ஒரு பொருட்டாக எடுத்துகொள்ளவில்லை அதனை தொடர்ந்து அவருடைய கால் பழுதாகி அவரால் நடக்கமுடியாத அளவிற்கு காலையே வெட்டி எடுத்துவிடும் நிலைக்கு வந்துவிட்டது அதனால் அந்த தொழிலாளியால் அந்த கிராமத்து மக்களுக்கு தேவையான காலணியை செய்து கொடுக்கமுடியாத நிலையில் இருந்தார் அதன்காரணமாக ஊர்மக்கள் அனைவருக்கும் தேவையான காலணி அவரால் உருவாக்கமுடியாததால் மக்கள்அனைவரும் தத்தமது கால்களில் காலணி அணிந்திடாமல் நடப்பதற்கு சிரமபட்டனர் இவ்வாறே பெற்றோர்கள் ,ஆசிரியர்கள், தலைவர்கள் ,அரசாள்பவர்கள் ஆகியோர் முதலில் தங்களுடைய உடல்நலனை சரியாக பராமரித்துவந்தால்தான் மற்றவர்களுக்கு உதவமுடியும் என்ற அடிப்படை செய்தியை தெரிந்து அதன்படி செயல்படுவது நல்லது என அறிவுறுத்தபடுகின்றது

சனி, 9 ஜூலை, 2016

உணவகத்தில் ஒரு வயதான தந்தையும் அவருடைய மகனும்


ஒரு வயதான தந்தையும் அவருடைய மகனும் நகரத்தில் இருந்த பிரபலமான உணவகத்திற்கு உணவு உண்பதற்காக சென்றமர்ந்தனர் அந்த வயதான தந்தை மிகவும் நலிவுற்று மெலிவுற்று இருந்தார் தொடர்ந்து அவ்விருவருக்கும் தேவையான உணவுவகைகள் பரிமாற பட்டு உண்ண ஆரம்பித்தனர் வயதான தந்தை உண்ணும்போது அவருடைய உடையிலும் இலையை சுற்றியும் இரைத்துகொண்டும் சிந்தி கொண்டும் உண்டார் அதனால் அந்த உணவகத்தில் உணவு உண்ண வந்தவர்கள் அனைவரும் இந்த வயதான தந்தை உணவு உண்ணுவதை மிக அருவருப்பாக பார்த்துகொண்டிருந்தனர் இது அவருடைய மகனுக்கு மிக இக்கட்டண நிலையாகிவிட்டது இருந்தபோதிலும் வாய்திறக்காமல் அமைதியாக தன்னுடைய தந்தை உணவு உண்ணுவதற்கு தேவையான உதவியை மட்டும்செய்து வந்தான் அதனை தொடர்ந்து அவ்விருவரும் உணவு உண்டபின்னர் அந்த மகன் தன்னுடைய தந்தையை கைகழுவுமிடத்திற்கு கைத்தாங்கலாக பிடித்து அழைத்து சென்று சிந்திய அனைத்தையும் கழுவி சுத்தம் செய்து திரும்பியபின் உணவிற்கான தொகையை வழங்கியபிறகு தன்னுடைய தந்தை கைபிடித்து அழைத்து கொண்டு உணவகத்தின் வாயிலை நெருங்கினான் அப்போது வயதான தந்தையானவர் தம்பி உணவகத்தில் ஏதாவது விட்டுவிட்டு வந்தாயா என வினவியபோது மகன் ஒன்றும் விட்டுவிடவில்லை அப்பா என்றான் இல்லை தம்பி ஏதோ உணவகத்தில் விட்டுவிட்டவந்தது போன்று தெரிகின்றது என மீண்டும் அந்த வயதான தந்தை கூறியவுடன் மகன் அவர்களிருவரும் உணவுஉண்டஇடத்தை மீண்டும் திரும்பி பார்த்து விட்டு ஒன்றும் இல்லை அப்பா என பதில் கூறினான் இல்லை தம்பி பல்வேறு மக்களும் நடமாடும் பொது இடங்களில் ஒவ்வொரு மகனும் தன்னுடைய வயதான தந்தைக்கு எவ்வாறு பணிவிடை செய்வது பராமரிப்பது அறிவுரையை இந்த உணவகத்தில் விட்டிட்டு வந்துள்ளாய் தம்பி எனக்கூறியவுடன் அந்த உணவகத்தில் இருந்த அனைவரும் தத்தமது செயலை அப்படியே பாதியில் விட்டிட்டு அமைதியாக அவ்விருவரையும் மிக ஆவலோடு பார்த்து விடைகொடுத்து அனுப்பினர்

நீதி வயதானவர்களுக்கு தேவையான உதவியை செய்வது இளையோர்களின் அடிப்படை கடமையாகும்

ஞாயிறு, 3 ஜூலை, 2016

பொறியாளர் மருத்துவர் போலி மருத்துவரா


தமிழ்நாட்டில் தற்போது ஒவ்வொரு வீட்டிலும் இரண்டுமூன்று BEபடித்த பொறியாளர்களாகவது கண்டிப்பாக இருப்பார்கள் அதாவது தடுக்கிவிழுந்தால் ஏதாவதொரு BEபடித்த பொறியாளர்மீதுதான் விழவேண்டும் என்றநிலையில் ஏராளமான பொறியியல் படித்துவேலைகிடைக்காமல் இருப்பது அனைவரும் அறிந்ததே

இவ்வாறான நிலையில் BEபடித்த பொறியாளர் ஒருவருக்கு எந்தவொரு பணியும் கிடைக்காததால் தீவிரமாக யோசித்து மருத்தவர்கள் போன்று மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகூறுவதற்கும் மருத்துவசிகிச்சை செய்வதற்குமான சிறிய அளவு மருத்துவமனை ஒன்றினை ஆரம்பித்தார் இந்த மருத்துவமனை வாயிலில் எந்தவொரு நபருக்கும் தேவையான மருத்துவ சிகிச்சை அல்லது மருத்துவ ஆலோசனை கட்டணமாக ரூபாய் 300/- மட்டும் செலுத்தினால் போதும் ஒருவேளை எங்களுடைய மருத்துவசிகிச்சையால் நோயாளிக்கு நோய் சரியாக வில்லை எனில் அந்தநோயாளிக்கு மட்டும் நட்டஈடாக ரூபாய் 1000/- திரும்ப வழங்கப்படும் என்ற அறிவிப்பு பலகை தொங்கவிடப்பட்டிருந்தது

இந்த அறிவிப்பினால் BEபடித்த பொறியாளர் ஆரம்பித்த சிறுமருத்துவமனையில் நோயாளிகளின் கூட்டம் எக்கச்சக்கமாக ஆகிவிட்டது அதனால் போக்குவரத்தினை கட்டுபடுத்துவதற்காக தனியான காவலர் ஒருவர் பணிபுரியுமாறு ஆகிவிட்டது

ஆனால் அதேஊரில் MBBSபடித்த மருத்துவரின் மருத்துவமனை ஒன்றும் இருந்தது. அங்கு நோயாளிகள் ஒருசிலர் மட்டும் மருத்துவம் செய்துகொள்வதற்கு வந்து சென்றதால் அந்த மருத்துவர் ஈ ஓட்டிக்கொண்டிருந்தார் அதனால் இந்த மருத்துவர் புதிய மருத்துவமனையின் பொறியியல் மருத்துவர் நம்மை போன்று MBBSபடித்து மருத்துவராக செயல்படவில்லை

அதனால் நாம் ஒரு புறநோயாளியாக சென்று சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என நிரூபித்து ரூபாய் 1000/ ஆவது இன்றைய வருமானமாக ஈட்டலாம் என முடிவுசெய்து அந்த புதிய மருத்துவமனைக்கு மருத்துவர் சென்று ஐயா என்னுடைய நாக்கு உணர்வில்லாமல் போய்விட்டதால் சாப்பாடே சரியாக சாப்பிடமுடியவில்லை எனக்கூறினார்

உடன் புதிய மருத்துவமனையின் பொறியாளர் மருத்துவர் தன்னுடைய உதவியாளரிடம் அம்மா பெட்டிஎண் 12 இல் உள்ள சொட்டு மருந்தினை கொண்டுவந்து இந்த நோயாளியின் நாக்கில் மூன்று சொட்டு விடுக என உத்திரவிட்டார்

உடன் அவருடைய பெண் உதவியாளரும் பெட்டிஎண் 12 இல் உள்ள சொட்டு மருந்தினை கொண்டுவந்து நோயாளியின் நாக்கில் மூன்று சொட்டு விட்டார் உடன் மருத்துவ நோயாளியானவர் ஐயா இது டீசல் ஆயிற்றே இதனை என்னுடைய நாக்கில் மூன்று சொட்டு விடக்கூறுகின்றீர்களே என விவாதம் செய்யஆரம்பித்ததும்

பொறியாளர் மருத்துவர் ரொம்ப நல்லது ஐயா உங்களுடைய நாக்கு சுவையறிய துவங்கிவிட்டது எங்களுடைய மருத்தவசிகிச்சையால் உங்களுடைய நோய் சரியாகிவிட்டது அதனால் நாங்கள் அறிவிப்பு செய்தவாறு மருத்துவ கட்டணமாகரூபாய் 300/- உடன் செலுத்துக எனக்கோரி பெற்றுகொண்டார்

இதனால் உண்மையான மருத்துவருக்கு மிக அவமானமாக போய்விட்டது மனதிற்குள் அப்படியா செய்தி நீ ஒரு போலியான மருத்துவர் எனஅடுத்தமுறை நிரூபிக்கின்றேன என க்கருவிக்கொண்டு தன்னுடைய மருத்துவமனைக்கு வந்துசேர்ந்தார்

மீண்டும் ஒருவாரம் கழித்து அதேபுதிய மருத்துவமனைக்கு ஏற்கனவே மருத்துவராக இருப்பவர் வந்து சேர்ந்து ஐயா எனக்கு ஞாபகமறதி அதிகமாகிவிட்டது அதனால் என்னால் எந்தவொரு செய்தியையும் நினைவுகொள்ள முடியவில்லை என கூறினார்

உடன் புதிய மருத்துவமனையின் பொறியாளர் மருத்துவர் தன்னுடைய உதவியாளரிடம் அம்மா பெட்டிஎண் 12 இல் உள்ள மருந்தினை கொண்டுவந்து இந்த நோயாளியின் நாக்கில் மூன்று சொட்டு விடுக என உத்திரவிட்டார்

உடன் அவருடைய பெண் உதவியாளர் பெட்டிஎண் 12 இல் உள்ள மருந்தினை கொண்டுவந்து நோயாளியின் நாக்கில் மூன்று சொட்டு விட்டார் உடன் மருத்துவ நோயாளியானவர் ஐயா இது நாக்கு சுவை அறிவதற்கான மருந்து ஆயிற்றே இதனை என்னுடைய நாக்கில் மூன்று சொட்டு விடக்கூறுகின்றீர்களே என விவாதம் செய்யஆரம்பித்தார்

பொறியாளர் மருத்துவர் ரொம்ப நல்லது ஐயா உங்களுடைய நினைவு திரும்பிவிட்டது எங்களுடைய மருத்துவசிகிச்சையால் உங்களுடைய நோய் சரியாகிவிட்டது அதனால் நாங்கள் அறிவிப்பு செய்தவாறு மருத்துவ கட்டணமாகரூபாய் 300/- உடன் செலுத்துக எனக்கோரி பெற்றுகொண்டார்

ஏற்கனவே மருத்துவராக இருப்பவர் சே என்னடாஇது இந்தமுறையும் இந்த பொறியாளர் மருத்துவரை போலியானமருத்துவர் என நிரூபிக்கவும் முடியவில்லை ரூபாய் 1000/- வருமான மாக பெறவும்முடியவில்லை இருக்கட்டும் அடுத்தமுறை கண்டிப்பாக நிரூபித்துவிடலாம் என கருவிக்கொண்டு சென்றார்

ஒருவாரம் கழித்து அதேபுதிய மருத்துவமனைக்கு ஏற்கனவே மருத்துவராக இருப்பவர் வந்து சேர்ந்து ஐயா என்னுடைய கண்பார்வை மங்கியவாறு இருக்கின்றது நல்ல கண்பார்வை எனக்கு வருவதற்கான சிகிச்சை அளித்திடுங்கள் எனக்கூறினார் உடன் பொறியாளர் மருத்துவர் என்னை மன்னித்துவிடுங்கள் உங்களுடைய நோயை என்னால் சரிசெய்யமுடியவில்லை இந்தாருங்கள் நாங்கள் அறிவிப்பு செய்தவாறு ரூபாய் 1000/- பெற்றுக்கொள்க என பணத்தை வழங்கினார் உடன் மருத்துவ நோயாளியானவர் என்ன ஐயா ரூபாய் 500/-க்கான ரூபாய் தாளினைஐ கொடுத்து விட்டு ரூபாய் 1000/- பெற்றுக்கொள்க எனக்கூறுகின்றீர் என வினவினார்

உடன் பொறியாளர் மருத்துவர் ரொம்பநல்லது ஐயா உங்களுடைய பார்வைகுறைபாடு எனும் நோயானது எங்களுடைய மருத்துவசிகிச்சையால் சரியாகிவிட்டது அதனால் நாங்கள் அறிவிப்பு செய்தவாறு மருத்துவ கட்டணமாகரூபாய் 300/- உடன் செலுத்துக எனக்கோரி பெற்றுகொண்டார்

சேஎன்னடாஇது பொறியாளர் மருத்துவரை போலியான மருத்துவர் என நீரூபித்து விடலாம் நமக்கும் வருமானமாக ரூபாய் 1000/- பெற்றுக்கொள்ளலாம் என எத்தனைமுறை முயற்சிசெய்தாலும் முடியவில்லையே என ஏற்கனவே மருத்துவமனை நடத்தும் மருத்துவர் புதிய பொறியாளரின் மருத்துவமனை பக்கமே திரும்பி பார்க்காமல் சென்றுவிட்டார்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...