ஞாயிறு, 23 அக்டோபர், 2016

நல்லத்தலைவனக்கு உரிய பண்பியல்புகள் எவை


முன்பு ஒருகாலத்தில் நம்முடைய இந்தியாவில் இருந்த ஒரு சிறிய நாட்டில் மழைஇல்லாமல் பஞ்சத்தில் மிகசிரமமாக மக்கள் வாழ்ந்து வநதனர் அதனால் அடுத்தவரும் மழைகாலத்திற்குள் ஆங்காங்கு புதிய ஏரிகளை உருவாக்குதல் ஏற்கனவே இருக்கின்ற ஏரிகளை தூர்வாருதல் செய்துவிட்டால் வரும் ஆண்டுகளிலாவாது மக்கள் பஞ்சமில்லாமல் வாழ்வார்கள் என அரசன் ஒருவன் தன்னுடைய இரு இளவரசர்களையும் அழைத்து இந்த பணியை இரு மாதத்திற்குள் முடிக்குமாறு உத்திரவிட்டார் உடன் மூத்த இளவரசன் நாட்டின் வடக்குபகுதியிலும் மற்றொரு இளவரசன் நாட்டின் தெற்கு பகுதியிலும் பணியை முடிப்பது என தமக்குள் பிரித்து செயல்படுத்துவது என முடிவுசெய்தனர் அதனை தொடர்ந்து மூத்த இளவரசன் அரசனின் கருவூலத்தில் இருந்து ஏராளமான பணமும் பாதியளவு நாட்டின் படைவீரர்களையும் அழைத்து கொண்டு வடக்கு பகுதிக்கு சென்று அங்கு கிராமங்களில் வாழும் மக்களையும் தன்னுடன் அழைத்து சென்றபடைவீரர்களையும் அந்த பணியில் ஈடுபடுத்தி பொதுமக்களுக்கு ஏராளமான அளவில் பொருட்களை அவர்கள் பணிபுரிவதற்காக வழங்கி புதிய ஏரிகுளங்களை அமைத்தல் ஏற்கனவே இருக்கும் ஏரிகுளங்களில் தூர்வாரி ஆழப்படுத்துதல் ஆகிய பணியை மிகசிறப்பாக தன்னுடைய பணியை முடித்து திரும்பி வந்தார் அப்போது அரண்மனையில் அவருடைய இளைய சகோதரனுக்கு அரசனாக முடிசூட்டுவதற்கான ஏற்பாடுநடந்து கொண்டிருந்ததை கண்ணுற்றுதும் நேராக தன்னுடைய தந்தையிடம் நாங்கள் இருவருமே சமமாக பணிபுரிந்து தலைநகர் திரும்பியுள்ளபோது இளைய சகோதரனுக்கு மட்டும் அரசனாக பதவியேற்பு செய்வது சரியான செயலா அண்ணன் இருக்கும் போது தம்பிக்கு அரசனாக முடிசூடலாமா என கோபத்துடன் பொரிந்து தள்ளினான் மகனே அமைதியாக இரு உன்னுடைய தம்பி உன்னை போன்று அரசாங்க கருவூலத்திலிருந்து எடுத்து சென்ற பணத்தை செலவுஎதுவும் செய்யவில்லை அவ்வாறே அரசு படைவீரர்களையும் இந்த பணிக்காக பயன்படுத்தி கொள்ளவில்லை அதற்கு பதிலாக அந்தந்த கிராம மக்களையை இந்த பணிகளை முடிப்பதற்காக அவர்களாகவே முன்வந்து செய்திடுமாறு பயன்படுத்தி கொண்டது மட்டுமில்லாமல் அந்தந்த ஏரி குளங்களில் தேக்கிவைத்திடும் ஏரிகளில் நீரினை அனைவருக்கும் பகிர்ந்து பயன்படுத்தி கொள்ளுமாறு பல்வேறு கால்வாய்களையும் உருவாக்கி அந்த பகுதியின் மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளார் அதனால் உன்னுடைய தம்பிதான் சிறந்த தலைவனுக்கு உரிய பண்பியல்புகளை யும் தகுதியையும் பெற்றுள்ளார் அதனால் அவரையே எனக்கு பிறகு அரசாளுவதற்காக அரசனாக முடிசூட்டுவதற்கு முடிவுசெய்தேன் என பதில் கூறினான்

வெள்ளி, 21 அக்டோபர், 2016

பெறுநர் முகவரி பகுதியில் 'கடவுள்' என்று மட்டும் குறிப்பிட்டதொரு கடிதம்


ஒருநாள் பல்வேறு சிறு சிறு தபால் அலுவலகங்களிலிருந்து வருகின்ற கடிதங்களையெல்லாம் பிரித்து அந்தந்த முகவரிக்கு அனுப்புகின்ற பிரிப்பகத்திற்கு பெறுநர் முகவரி பகுதியில் 'கடவுள்' என்று மட்டும் குறிப்பிட்டு வேறு முழுமுகவரி எதுவும் இல்லாமல் ஒரு கடிதம் வந்திருந்தது உடன் அதனை எந்த ஊருக்கு அனுப்புவதற்காக பிரிப்பது என சிறிதுநேரம் தடுமாறியபின் அதனை தனியே எடுத்து வைத்துவிட்டு மற்ற கடிதங்களையெல்லாம் பிரித்து முடித்து கட்டுகளாக கட்டி பணியமுடித்தபின்னர் இந்த கடிதத்தில் என்னதான் செய்தி உள்ளது என பார்த்திடலாம் என பிரித்து பார்த்தபோது அந்த கடிதத்தில் அன்புள்ள கடவுளே நான் ஒரு எண்பது வயதுடைய வயாதான யாருடைய உதவியுமில்லாமல் என்னுடைய இறந்த கணவரின் மிகக்குறைவான ஓய்வூதிய தொகையை கொண்டு வாழ்பவள் இந்நிலையில் என்னுடைய பணப்பையில் மிகுதி இருந்த ஒரு ஆயிரம் ரூபாயை யாரோ திருடி சென்றுவிட்டனர் அதனால் வரும் தீபாவளி பண்டிகையை என்னுடைய நண்பர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாட இயலாமல் மிகமனவருத்ததுடன் இருக்கின்றேன் நான் வயிறார சாப்பிடுவதற்கு தேவையான உணவு பொருட்களை வாங்குவதற்குகூட வழியில்லாமல்மிக சிரமப்படுகின்றேன் எனக்கென தனியாக வாரிசு யாரும் இல்லாததால் எனக்கு இருக்கின்ற ஒரே நம்பிக்கையாக இருப்பவர் கடவுளாகிய நீ மட்டுமே அதனால் கண்டிப்பாக நீ எனக்கு இந்த இக்கட்டில் உதவுவாய் என நம்புகின்றேன் என்றும் உன்னுடைய நம்பிக்கையில் வாழும் என முடிந்திருந்தது உடன்தன்னுடன் பணிபுரியும் அனைவரிடமும் இந்த கடித்தத்தினை காண்பித்து இறுதியாக அனைவரிடமும் அவரவர்களால் கொடுக்க முடிந்த தொகைய வசூலித்து போது ரூபாய் 990 மட்டும் சேர்ந்திருந்திருந்தது அதனை அப்படியே அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு பணஅஞ்சல் வாயிலாக அனுப்பி வைத்தார் அந்த தபால் அலுவலக பணியாளர் அதன்பின்னர் தீபாவளி பணிடிகை முடிந்து நான்கைந்து நாட்கள் கழித்து அதே முகவரியிலிருந்து மீண்டும் பெறுநர் முகவரியாக முன்புபோலவே 'கடவுள்' என்று மட்டும் குறிப்பிட்டு வேறு முழுமுகவரி எதுவும் இல்லாமல் ஒரு கடிதம் வந்திருந்தது தற்போது என்னதான் அந்த பாட்டி எழுதியிருப்பார் என அந்த கடிதத்தை பிரித்து பார்த்தபோது அன்புள்ள கடவுளே உன்னுடைய கருணையை குறிப்பிடுவதற்கு சொற்களே இல்லை உள்ளன்புடன் இந்த அபலையின் கோரி்க்கையைஏற்று செயற்படுத்திய உன்னுடைய உதவிக்கு மிகவும் நன்றிகூற கடமைபட்டுள்ளேன் மேலும் மிக மகிழ்ச்சியுடன் உன்னுடைய நினைவாக என்னுடைய நண்பர்களுடன் தீபாவளி பண்டிகையைமிகசிறப்பாக கொண்டாடிவிட்டேன் அதனோடு எனக்கு கண்டிப்பாக நீ ரூபாய் ஆயிரம் அனுப்பி இருப்பாய் என நம்புகின்றேன் ஆனால் இந்த தபால் அலுவலகத்தில் பணிபுரியும் யாரோ ஒரு சோம்பேறி பயல் அதில் பத்துரூபாயை மட்டும் திருடி கொண்டுவிட்டான் அவனை மன்னித்திவிடுக என்றும் உன்னுடைய நம்பிக்கையில் வாழும்

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

எளியவர்களுக்கும் உதவிடுக


ஒரு ஏழுவயது சிறுவனும் அவனுடன் அவனிடைய நான்கு வயது தங்கையும் கடற்கரையோரம் காற்றாட விளையாட சென்றார்கள் விளையாடி முடிந்தபின்னர் இருவரும் வீட்டிற்கு திரும்பினர் அப்போது அவனுடைய தங்கைமட்டும் தொடர்ந்து நடந்துவராமல் ஒரு பொம்மை கடையில் நின்றுவிட்டது அதனால் அந்த சிறுவன் அந்த பொம்மை கடைக்கு திரும்பிபார்த்தபோது அவனுடைய தங்கையானவள் குறிப்பிட்ட ஒரு பொம்மையையே பார்த்து கொண்டு நின்று கொண்டிருப்பது தெரியவந்தது உடன் இந்த பொம்மைதான் உனக்கு வேண்டுமா இந்தா எடுத்துகொள்க என தன்னுடைய தங்கைக்கு எடுத்து கொடுத்துவிட்டு அந்த கடைமுதலாளியிடம் அந்த விளையாட்டு பொம்மையை வாங்குவதற்கு என்ன தரவேண்டும் என அந்த சிறுவன் வினவினான் உடன் அந்த பொம்மைகடை முதலாளியானவர் தம்பி உன்னுடைய பையில் என்னஇருக்கின்றதோ அதனை கொடு என பதில் கூறினான் உடன்அந்த சிறுவன் தன்னுடைய கால்சட்டை பையில்கையைவிட்டு கடற்கரையோரம் விளையாடும் போது சேகரித்து சேர்த்து வைத்த கிளிஞ்சல்கள் முழுவதையும் எடுத்து அந்த பொம்மை கடைகாரரிடம் கொடுத்தான் உடன் அவர் அந்த கிளிஞ்சல்களை பணத்த போன்று எண்ணிக்கை செய்து கொண்டிருந்தார் ஐயா இந்த கிளிஞ்சல்கள் அந்த பொம்மைக்கு போதுமானதாக இல்லையா அப்படியாயின் மீண்டும் நான் கடற்கரைக்கு சென்று கிளிஞ்சல்களை சேகரித்து வருகின்றேன் எனக்கூறினான் இல்லைதம்பி போதுமானதாக உள்ளது என க்கூறி பத்து கிளிஞ்சல்களை எடுத்து கொண்டு மிகுதியை அந்த சிறுவனிடமே திருப்பி அளித்தார் அந்த சிறுவர்களும் மிகமகிழ்ச்சியாக பொம்மைகடையை விட்டு தாங்கள் வாங்கிய பொம்மையுடன் சென்றனர் உடன் அங்கு பணிசெய்திடும் பணியாளர் ஐயா அந்த பொம்மைக்கான விலையை பணமாக பெறாமல் சாதாரணமான கிளிஞ்சல்களை பெற்றுகொண்டு கொடுக்கின்றீர்களே ஐயா எனவினவியபோது அந்த பொம்மை கடை முதலாளி அந்த சிறுவன் உண்மையான அன்புடன் தன்னுடைய தங்கைக்கு விரும்பிய பொம்மையை வாங்கி கொடுக்கும் அக்கறையுடன் தான் ஆசையாக சேகரித்த கிளஞ்சல்களை அதற்கு ஈடாக வழங்க முன்வரும் போது அவர்களின் ஆசையை பூர்த்தி செய்தால் வளர்ந்து பெரியவனாகும் போது இந்த நிகழ்வை மனதில் கொண்டு நம்முடைய கடையின் பெருமையை உலகிற்கு கூறுவான் அதுவே இந்த கடைக்கான விளம்பரமாகும் என பதில் கூறினார்

வியாழன், 13 அக்டோபர், 2016

எப்போதும் எந்தவொரு ஆளின் தோற்றத்தை மட்டும் வைத்து தவறாக முடிவுசெய்யாதே அவருடைய திறமையை வைத்து முடிவுசெய்திடுக


ஹார்வேர்டு பல்கலைகழக தலைவரை பார்ப்பதற்காக தம்பதிகள் இருவர் அந்த பல்கலைகழக நிருவாக அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தனர் ஹார்வேர்டு பல்கலைகழக தலைவரின் செயலரிடம் பல்கலைகழக தலைவரை தாங்கள் பார்க்க விரும்புவதாக கூறினர் உடன் அந்த பல்கலைகழக தலைவரின் செயலர் தற்போது உடனடியாக சந்திக்க முடியாது சிறிது நேரம் காத்திருங்கள் என கூறி அவர்கள் இருவரையும் இருக்கையில் அமரச்செய்தார் நீண்ட நேரம் காத்திருந்தபின்னர் தம்பதிகள் அந்த செயலரிடம் நினைவுபடுத்தியபோது அப்போதுதான் ஞாபகம் வந்ததைபோன்று தலைவரின் அறைக்குள் சென்று அனுமதிபெற்று அவர்களை உள்ளே அழைத்து சென்றார் அவர் இவர்களை கவணிக்காது மிகத் தீவிரமாக ஏதோவொரு பணியை பணிசெய்து கொண்டிருந்தார் தம்பதிகள் இருவரும் மிக மெல்லிய குரலில் ஐயா என அழைத்தபோது என்ன அவசரம் என நிமிர்ந்து பார்த்து என்னவேண்டும் உங்களுக்கு உடன் விரைவாக கூறிஇடத்தை காலிசெய்யுங்கள் என கூறினார் ஒன்றுமில்லை ஐயா எங்களுடைய மகன் இந்த பல்கலை கழகத்தில் படித்து கொண்டிருந்தபோது கடந்தஆண்டு இறந்து விட்டார் அதனால் அவருடைய நினைவாக நினைவகம் ஒன்றினை இந்த பல்கலை கழகத்தில் அமைக்க விரும்புகின்றோம் என கோரினர் உடன் பல்கலைகழக தலைவர் நீங்கள் கோரியவாறு இந்த பல்கலைகழகத்தில் இறந்தவர்களுக்கு எல்லாம் நினைவகம் கட்டினால் இந்த பல்கலைகழகம் அமைந்துள்ள இடம்போதுமானதாக இருக்காது அதனால் அதை ஏற்கமுடியாத நீங்கள் கிளம்பலாம் என மீண்டும் கோபமாக கூறினார் எங்களுடைய மகனின் நினைவகமாக பல்கலைகழகத்திற்கான கட்டிடம் கட்டிதரவிரும்புகின்றோம் என மீண்டும் கோரியபோது ஒருகட்டிடம்கட்டுவதற்கு பத்துஇலட்சம் பணம் செலவாகும் அவ்வளவு தொகை உங்களிடம் உள்ளதா வந்துவிட்டார்கள் நினைவகம் கட்டிடம் கட்டிவழங்கு வதற்கு என அவர்களின் எளிய தோற்றத்தை பார்த்து எள்ளி நகைத்து தன்னுடைய உதவியாளரை அழைத்து அவர்களை வெளியே அழைத்து சென்றிடுமாறு விரட்டினார் அந்த தம்பதிகள் பல்கலைகழக தலைவரின் அறைக்கு வெளியே வந்து என்ன நம்முடைய மகனின் நினைவாக ஏதாவது செய்யலாம் என்றால் அதனை இந்த பல்கலைகழக தலைவர் ஏற்காமல் இப்படி நம்மை வெளியே விரட்டிவிட்டாரே என மனமுடைந்து நின்றனர் பின்னர் மனதினை தேற்றிகொண்டு கட்டிடம் கட்டுவதற்கு பத்துஇலட்சம் என்றால் நம்மிடம் கோடிகணக்கில் பணம் இருக்கின்றது அதனை கொண்டு இதேபோன்று புதிய பல்கலைகழகம் நம்முடைய மகனின் நினைவாக ஆரம்பித்துவிடலாம் என முடிவுசெய்தனர் அவ்வாறே அந்த தம்பதிகள் புகழ்பெற்ற ஸ்டேன்ட்வேர்டுஎனும் பல்கலைகழகத்தினை துவக்கினர் அப்பல்கலைகழகமானது பேரும்புகழுமாக திகழ்கின்றது எப்போதும் எந்தவொரு ஆளின் தோற்றத்தை மட்டும் வைத்து தவறாக முடிவுசெய்யாதே அவருடைய திறமையை வைத்து முடிவுசெய்திடுக

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...