வியாழன், 27 ஏப்ரல், 2017

மனிதகொல்லி புலியை கொல்லலாமா


இந்திய காடுகளில் சிங்கம் புலி போன்ற காட்டுவாழ்விளங்குகள் வாழ்ந்துவருவதே இயற்கையே அவ்வாறான விலங்குகள் மற்ற காட்டு விலங்குகளை அடித்து கொன்று தங்களுக்கு தேவையான இரையாக உட்கொள்வதும் இயற்கையே இவ்வாறான புலி ஒன்று வயதாகிவிட்டதால் காட்டில் ஓடும்விலங்குகளை பாய்ந்து சென்று பிடித்திடமுடியாமல் ஆன நிலையில் காடுகளில் தங்களுடைய தேவைக்கான காய்கணிகள் வேர்கள் விறகு போன்றவைகளை சேகரிக்க செல்லும் விலங்குகளை போன்று வேகமாகஓடமுடியாத மனிதர்களை அடித்து கொன்று உணவாக்கி கொண்டது இதனால் மனிதர்கள் அந்த காட்டிற்குள் செல்வதை தவிர்த்தனர் அதனால் அந்தபுலியானது காட்டைவிட்டு மனிதர்கள் வாழும் கிராமப்புறத்திற்குள் வந்து கிராமத்தில் வளர்க்கும் ஆடுமாடுகளையும் சிறுவர்களையும் அடித்துகொன்று சாப்பிட்டு செயலை வழக்கமாக கொண்டிருந்தது அதனால் பாதிப்புற்ற அந்த கிராமத்து மக்கள் தங்களையும் தங்களுடைய உடமையான விலங்குகளையும் காத்துகொள்வதற்காக மிகப்பிரபலமான வேட்டையாடி ஒருவரை இந்தமனிதனை கொல்லும் புலியை கொன்று தங்களுடைய கிராமத்தை காத்திடுமாறு வேண்டிகொண்டனர் அதனடிப்படையில் அந்த வேட்டைகாரர் அந்த புலியானது அந்த கிராமத்திற்கு வரும் வழி திரும்பசெல்லும் வழி ஆகியவிவரங்களை அறிந்துகொண்டபின்னர் அந்த புலிவழக்கமாக அந்த கிராமத்திற்கு வரும் வழியில்ஒரு மரத்தின் அடியில்நல்ல காளைகன்றினை கட்டிவைத்தவிட்டு மரத்தின் மேலே கையில் துப்பாக்கியுடன் காத்திருந்தார் அந்த மனிதகொல்லியான புலியானது வேட்டைக்காரன் மரத்தின் மீது தன்னை குறிவைத்து கொல்வதற்கு தயாராக இருப்பதையும் காளைகன்று மரத்தினடியில் கட்டப்பட்டிருப்பதையும் அறிந்து கொண்டு தூரத்திலேயே நின்றுவிட்டது வெகுநேரமாகியும் அந்த மனிதகொல்லியான புலியானது வராததால் வெறுப்புற்று சரி சாப்பிட்டுவரலாம் எனஅந்த வேட்டைக்காரன் மரத்திலிருந்து கீழே இறங்கி ஊருக்குள் சென்றார் தூரத்திலிருந்து இதனை பார்த்து கொண்டிருந்த மனிதகொல்லி புலியானது இன்று நமக்கு நல்ல இரைகிடைத்தது என மிகமெதுவாக வந்துஅந்த காளைக்கன்றை அடித்து காட்டிற்குள் இழுத்து சென்று தின்றது நல்ல உணவு கிடைத்ததால் ஒருபுதருக்கு அருகில் அப்படியே படுத்து உறங்கிவிட்டது இந்த செய்தியை கேட்டறிந்த வேட்டைக்காரன் உடன் அந்த புலி சென்றவழியை பின்பற்றி அருகே சென்றபோது அந்த புலியானது உண்டமயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்பதைபோன்று நன்றாக ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்தது . தூங்குகின்ற விலங்கினை கொல்லலாமா என மனதில் கேள்வி ஒன்று உறுத்தியது அதனால் அந்த வேட்டைக்காரன் சிறிது தயங்கினார் ஆனாலும் அது சாதாரன புலியாக இருந்தால் இவ்வாறு தூங்கிடும்போது கொல்லாமல் விட்டுவிடலாம் அது மனிதகொல்லி புலியாக இருப்பதால் தயங்ககூடாது என அதனை துப்பாக்கியால்சுட்டு கொன்றார் உடன் கிராமமக்கள் அனைவரும் வந்து பார்த்து அவரை தங்களுடைய உயிரை காத்த உத்தமர் எனவாழ்த்தி சென்றனர்

புதன், 19 ஏப்ரல், 2017

எதிரியின் உயிரை பாதுகாத்திடும் மனநிலை பெற்றிடுக


ஒருகாலத்தில் அரேபிய நாட்டில் தலைவர் யூசுப் என்பவர் வாழ்ந்துவந்தார் அவர் பாலைவணத்தில் தன்னுடைய கூடாரத்தில் தனியாக அமர்ந்திருந்தார் அதுஒரு இரவு நேரம் என்பதால் வானத்தில் ஜொலிக்கும் நட்சரத்தின் ஒளியை தவிர அந்த கூடாரத்தில் வேறு ஒளிவசதி எதுவும் இல்லை அவர் மிகவும் ஆழ்ந்த மனவருத்ததுடன் அமர்ந்திருந்தார் கடந்த பலநாட்களாக இரவும் பகலும் அழுதுகொண்டே இருந்ததால் அவருடைய கண்களிருந்து கண்ணீரானது ஆறுபோன்று தரையில் ஓடிக்கொண்டே இருந்தது ஏனெனில் அவருடைய ஒரேமகனான அவருக்குபிறகு அரசனாக வேண்டிய மகன் எதிரிகளால் கொல்லப்பட்டதால் அவருடைய மனதில் ஏற்பட்ட வருத்தம் வார்த்தைகளால் சொல்லமுடியாத அளவிற்கு மிகஅதிகமாக இருந்தது அதனால் அவர் வேறு எந்தவொரு பணியையும் செய்திடாமல் அப்படியே அமர்ந்தவிட்டார் அந்த சமயத்தில் புதியவன் ஒருவன் மிகவிரைவாக அந்த பாலைவணத்தில் தன்னுடைய உயிர்தப்பித்தால் போதுமென ஓடிவந்துகொண்டிருந்தான் . அப்புதியநபர் யூசுப் அமர்ந்திருந்த கூடாரத்திற்குள் உள்நுழைந்து அவருடையகாலடியில் வீழ்ந்துவணங்கி தலைவரே என்னை கொல்லுவதற்கு பல்வேறு எதிரிகள் துரத்திவருகின்றனர் அவர்களிடம் உயிர்தப்பித்தால் போதுமெனவ ஓடிவருகின்றேன் நீங்கள்தான் என்னுடைய உயிரை காப்பாற்றவேண்டும் என்னால் இந்த பாலைவணத்தில் இதற்கு மேல் ஓடமுடியாது நீங்கள் நல்ல தலைவர் என அனைவரும் கூறுகின்றனர் இன்று ஒரு இரவு மட்டும் நான் தங்குவதற்கு உங்களுடைய கூடாரத்தில் இடமளித்தால் போதும் நீங்கள் கோடிபுன்னியம் செய்தவராவீர் என பணிவாக கூறினான் ஐயா புதியவரே நீங்கள் என்னுடைய விருந்தாளி அதனால் எழுந்துவாருங்கள் இரவு உணவை உங்களுடைய வயிறார சாப்பிடுங்கள் பின்னர் இரவு நன்றாக ஓய்வெடுங்கள் எனக்கூறி அந்தநபுதிய நபருக்கு தேவையான இரவு உணவையும் ஓய்வெடுப்பதற்கான படுக்கையும் வழங்கினார் இரவு தூங்கியபின் விடியற்காலை யூசுப் ஆனவர் எழுந்து அந்த புதியநபரை எழுப்பி ஜயா எழுந்திருங்கள் சூரியன் உதித்து நல்ல வெளிச்சம் வருவதற்குமுன் இந்த இடத்தைவிட்டு சென்றுவிடுவது உங்களுக்கு நல்லது உங்களால் மேலும் நடக்கமுடியாது என்பதால் குதிரை ஒன்று உங்களுடைய பயனத்திற்கு தயாராக இருக்கின்றது இந்தாருங்கள் உங்களுடைய செலவிற்கு தேவையான பொற்காசுகள் என அந்த புதிய நபர் புறப்பட்டு செல்வதற்கு தேவையான ஏற்பாட்டுடன் அவரை புறப்பட துரிதபடுத்தினார் இந்நிலையில் அந்த புதியநபர் தலைவர் யூசுப்பை பார்த்தவுடன் இவருடைய மகனைத்தான் தான் கொன்றுவிட்டோம் ஆயினும் தன்னை பழிவாங்காமல் இரவு தங்கி ஓய்வெடுப்பதற்கு வசதிசெய்துகொடுத்ததுமட்டுமல்லாமல் மிகபாதுகாப்பாக செல்ல ஏற்பாடு வேறு செய்கின்றாரே என மிகவெட்கத்துடன் யூசுப்பின் கால்களில் மீண்டும் விழுந்து வணங்கி ஐயா நான்தான் உங்களுடைய மகனை கொன்றவன் இந்தாருங்கள் குறுவாள் என்னை இந்த குறுவாளால் குத்தி உங்களுடைய மகனை கொன்ற பழியை தீர்த்து கொள்ளுங்கள் என அழுது புரண்டான் யூசுப்பானவர் ஐயா புதியவரே நீங்கள் தற்போது என்னுடைய விருந்தாளி விருந்தாளியை சகமனிதன் கொல்வது நல்லதன்று மேலும் உங்களை பழிவாங்கவேண்டும் என்ற என்னமே எனக்கு துளிகூட இல்லை என்னுடைய மகன் இந்த பாலைவனத்தில் கடினமான வாழ்க்கையில் வருத்தப்படாமல் இருக்கும்பொருட்டு அவனை ஆழ்ந்த உறக்கத்தில் செல்வதற்கு உதவியுள்ளீர்கள் அதனால் இந்தாருங்கள் என கூடுதலாக மேலும் மூன்றுமடங்கு பொற்காசுகளை வழங்கி உங்களுடைய எதிரி யாரும் இங்கு வந்து சேருவதற்குள் நீங்கள் இங்கிருந்து தப்பித்து செல்லுங்கள் என்று கூறி யூசுப் ஆனவர்அந்த புதிய நபரை வழிகூட்டி பாதுகாப்பாக அனுப்பிவைத்தார்

புதன், 5 ஏப்ரல், 2017

வயதான மூதாட்டியும் வங்கிகிளையின் காசாளரும்


கடந்த நவம்பர் 8,2016 பிறகு ஒரு வயதான மூதாட்டி வாழ்க்கையின் அன்றாட செலவிற்காக தன்னுடைய வங்கி கணக்கில்இருந்து ரூபாய் 500 மட்டும் எடுத்திடுவதற்காக வங்கியின் கிளைஅலுவலகத்திற்கு சென்றார் அப்போது அந்த வங்கிகிளையின் பணம் வழங்கும் காசாளரிடம் தான் காசோலை வைத்திருப்பதாகவும் தன்னுடைய கணக்கில் இருந்து ரூபாய் 500 மட்டும் வழங்கும்படியும் கோரினார் உடன் அவ்வங்கிகிளையின் பணம் வழங்கும் காசாளர் ரூபாய் 500 ஐ தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தில் மட்டுமே எடுக்கவேண்டும் இங்கு அவ்வளவு குறைந்த தொகை வழங்கஇயலாது என மறுத்தார் உடன் ஐயா நான் மிகவும் வயதானவள் அவ்வாறான தானியங்கி இயந்திரத்திற்கு சென்று என்னால் பணம் எடுக்கமுடியாது என மன்றாடியபோது அதுதான் எங்களுடைய வங்கியின் விதி நீங்கள் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்திற்கு சென்று பணம் எடுப்பதுதான் நல்லது நகருங்கள் வரிசையாக உங்களுக்கு பின்புறம் நிற்பவர்களின் தேவையை நான் செயற்படுத்தவேண்டும் என அந்த பணம் வழங்கும் காசாளர் அந்த மூதாட்டியை விரட்டியடிப்பதிலேயே குறியாக இருந்தார் உடன் அந்த மூதாட்டி சரி ஐயா என்னுடைய கணக்கில் மிகுதி எவ்வளவுதான் தொகை இருக்கின்றது எனக்கோரியபோது அவருடைய கணக்கில் ரூபாய் முப்பது இலட்சம் இருப்பதாக அந்த பணம் வழங்கும் காசாளர் கூறினார் உடன் அந்த மூதாட்டியானவர் அப்படியா ஐயா ரொம்ப நல்லது என்னுடைய வங்கி கணக்கினை இன்றே முடித்துகொள்கின்றேன் அந்த தொகை முழுவதும் இப்போதே வழங்கிடுங்கள் என மூதாட்டி கோரியபோது அவ்வளவு அதிக தொகை எடுக்கவேண்டும் எனில் வங்கிகிளைமேலாளரைத்தான் நாளை நேரில் சந்தித்து எடுத்து செல்லமுடியும் அதனால் தயவுசெய்து இடத்தை காலி செய்து என்னுடைய மற்றைய பணியை செய்யவிடுங்கள் என மீண்டு்மஅந்த மூதாட்டியை விரட்டியடிப்பதிலேயே குறியாக இருந்தார் உடன் அந்த மூதாட்டி சரி ஐயா என்னுடைய கணக்கில் இருந்து நான் தற்போது அதிகபட்சம் எவ்வளவு தொகைதான் எடுக்கமுடியும் எனக்கோரினார் அதனை தொடர்ந்து பணம் வழங்கும் காசாளர் அதிகபட்சம் தற்போது நீங்கள் ரூபாய் மூன்றுஇலட்சம் எடுக்கலாம் எனபதில் கூறியவுடன் தன்னுடைய கையிலிருந்த காசோலையில் தொகை ரூபாய் 300000 என எழுதி தன்னுடைய கையொப்பமிட்டு இப்போது அந்த தொகையை உடன் தனக்கு வழங்கிடுமாறு அந்த மூதாட்டி கோரினார் அதன்பின்னர் அந்த பணம் வழங்கும் காசாளர் அந்த மூதாட்டி கோரியவாறு தொகை ரூபாய் 300000 வழங்கினார் பின்னர் அந்த மூதாட்டியானவர் அதில் ரூபாய் 500 ஐ மட்டும் தன்னுடைய பணப்பையில் எடுத்துவைத்துகொண்டு மிகுதி 299500ஐ அந்த காசாளரிடம் கொடுத்து இதனை என்னுடைய வங்கிகணக்கில் வரவு வைத்திடுக என கூறி கொடுத்தார் அதனை தொடர்ந்து அந்த வங்கிகிளையின் பணம் வழங்கும் காசாளர் பதிலேதும் பேசமுடியாமல் அப்படியே உட்கார்ந்து விட்டார்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...