வியாழன், 25 மே, 2017

வியாரஉலகில் வெற்றியாளர் எந்தசெயலை செய்து வெற்றிபெற்றார் எனநன்கு நுனுக்கமாக கவணித்து அதைபின்பற்றி நாமும் வெற்றிபெறுவோம்


அரசு மருத்துவ கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களின் வகுப்பு முடிந்து அறுவை சிகிச்சைக்கான நேரடி களப்பயிற்சிக்காக அதற்கான பேராசிரியருடன் பினவறைக்கு சென்றனர் அப்பிணைவறையில் இவர்களுக்கு முன்புறம் மேஜையின்மீது இறந்தபோன பிணம் ஒன்று அறுவைசிகிச்சைபயிற்சிக்காக வெள்ளைத்துனியால் மூடிதயாராகஇருந்தது அந்த அறுவைசிகிச்சை பேராசிரியர் "அன்பான மாணவர்களே நாம் இதுவரையில் புத்தகத்தில் படித்த கல்விவேறு இப்போது நாம் செய்யவேருக்கின்ற நேரடி களப்பயிற்சி வேறுஎன்பதை மனதில் கொள்ளுங்கள் தற்போது நாமெல்லோரும்அறுவைசிகச்சை செய்யதயாராகவிருக்கின்றோம் நம்மை போன்ற அறுவைசிகிச்சை மருத்துவர்களுக்கு முதலில் சகிப்புத்தன்மை இருக்கவேண்டும் என்ற செய்தியை நன்குமனதில் கொள்ளுங்கள் மேலும் அன்புமாணவர்களே நன்கு கவணியுங்கள் நான்செய்வதை போன்று அனைவரும் செய்க" எனக்கூறி அந்த அறுவைசிகிச்சை பேராசிரியர் பிணத்தின்முகம் இருந்தபக்கத்தில் மூடியிருந்த வெள்ளைதுணியை நீக்கினார் அந்த அந்த பிணத்தின் முகத்தில் புழுக்குள் நெளிந்தவாறு சிதைந்த நிலையில் பார்ப்பதற்கு மிகஅறுவறுப்பாக இருந்தது அவ்வாறு இருந்தபோதிலும் அந்த அறுவைசிகிச்சை பேராசிரியர் அந்த பிணைத்தின் சிதைந்த முகத்தில் தன்னுடைய கைவிரல்களால் தொட்டு தன்னுடைய வாயில் வைத்து சூப்பினார் பின்னர் அனைத்து மருத்துவமாணவர்களையும் அவ்வாறே செய்யுமாறு கோரினார் இது முதலாவது நிகழ்வு என்பதால் மருத்துவகல்லூரி மாணவர்கள் அனைவரும் அவ்வாறு செய்வதற்கு சிறிது தயங்கினர் இருந்தபோதிலும் அவர்களில் ஒவ்வொருமாணவராக தயங்கி மயங்கி அவ்வாறே அந்த பிணைத்தின் சிதைந்த முகத்தில் அவரவர்களின் கைவிரல்களால் தொட்டு தத்தமது வாயில் வைத்து சூப்பினார்கள் அவர்களுள் ஒருமாணவன் மட்டும் சிறந்த அறுவைசிகிச்சை மாணவன் என அந்த அறுவைசிகிச்சை பேராசிரியர் தேர்வுசெய்தார் மற்றஅனைவரும் உடன் மருத்தவகல்லூரி மாணவர்கள் அனைவரும் அந்தவொருமாணவரைமட்டும் அந்த மருத்துவ பேராசிரியர் எப்படி தெரிவுசெய்தார் என மிகஆச்சரியமாக அவரிடம் வினவினர் "மாணவர்களே நன்கு கவணியுங்கள் என நான் கூறி என்னுடைய பணியை செய்தபோதுவேறு எந்த மாணவனும் நான் செய்த செயலை பின்பற்றவில்லை அதாவது நான் அந்த பிணைத்தின் சிதைந்த முகத்தில் என்னுடைய ஆள்காட்டி விரலால் தொட்டு வாயில் என்னுடைய நடுவிரலை வைத்து சூப்பினேன் ஆனால் அந்த ஒருமாணவர்மட்டும் நான்செய்த செயலை மிகநுணுக்கமாக மிகச்சரியாக கவணித்து அப்படியே பின்பற்றினார் அதனால் அம்மாணவனே வெற்றியாளன் எனக்கூறினார் அதேபோன்று வியாரஉலகில் வெற்றியாளர் எந்தசெயலை செய்து வெற்றிபெற்றார் எனநன்கு நுனுக்கமாக கவணித்து அதைபின்பற்றி நாமும் வெற்றிபெறுவோம்

திங்கள், 22 மே, 2017

சிறந்த மகன் யார்


முன்னொரு காலத்தில் மிகவும் பணக்கார நபர் ஒருவர் வாழ்ந்துவந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். முதல் மகன் தந்தையின் சொல்லை தட்டாமல் மிககடினமாக பணிபுரிந்து மிகநல்லவனாகவும் வல்லவனாகவும் வாழ்ந்து வந்தாதான்.. ஆனால் இரண்டாவது மகன் முதல் மகனை காட்டிலும் மிகவும் முற்றிலும் வேறுபட்டவனாக சோம்பேறியாக தந்தையின் சொல்லை கேட்டு கீழ்ப்படியாமல் உல்லாசமான வாழ்க்கை யை பின்பற்றிவந்தான் அதிலும் அவ்வாறான உள்ளாச வாழ்க்கையை தந்தையின் குறுக்கீடுஇல்லாமல் தொடர்ந்து வாழ விரும்பியதால் ஒரு நாள் இளைய மகன் தன் தந்தையிடம் . "தந்தையே, உங்களுடைய சொத்தில் என்னுடைய பங்கினை பிரித்து எனக்குக் கொடுங்கள்" என்று கோரினான் அதனை தொடர்ந்து அந்த தந்தையும் சொத்துக்களைப் பிரித்து இரண்டாவது மகனுடைய பங்கை அவனிடம் கொடுத்தார் உடன் அந்த இரண்டாவது மகன் தன்னுடைய பங்கு சொத்துகளை விற்று பணமாக எடுத்துக் கொண்டு, வீட்டைவிட்டு வெளியேறி, தொலைதூர தேசத்திற்குச் சென்றான் , அங்கு கெடுதலான நண்பர்களுடனும் சேர்ந்து உணவுப் பழக்கங்களிலும், உல்லாச பொழுதுபோக்குகளிலும் தன்னுடைய பணத்தினை தண்ணீர் போன்ற கணக்கு வழக்கில்லாமல் பணத்தை செலவழித்தான் .அவனிடமிருந்த பணம் முழுவதும் வீணாகி காலியாகவிட்டதால் அவனோடு சேர்ந்திருந்த கெடுதலான நண்பர்கள் அனைவரும் அவனைவிட்டு விலகி சென்றுவிட்டனர் மேலும் அந்த பகுதியில் கொடிய பஞ்சம் வேறு வந்துவிட்டது அதனால் யாரும் அவனுக்கு உதவிசெய்திடாமல் தம்மிடம் அன்டவிடாமல் துரத்தினர் அன்றாட உணவிற்குஅல்லாட வேண்டிய நிலையில் அந்த நாட்டில்ஏற்பட்ட கொடிய பஞ்சத்தால்.அவனுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை.அவனுடைய நண்பர்கள் யாரும் அவனுக்கு உணவோ அல்லது அதனை பெறுவதற்கான பணத்தையோ அளிக்கவில்லை.அவன் ஏதாவது கூலிவேலையாவது செய்து தன்னுடைய உணவிற்கு தேவையானஅளவு சம்பாதிக்கமுடியாமல் தின்டாடினான் அதனால் தெருவில் சுற்றித்திரியும் பன்றிகளுக்கான உணவை மட்டும் எப்படியோபெற்று உண்டு உயிர்வாழும் நிலைக்கு தள்ளப்ப ட்டான் இந்நிலையில் அவன் தன்னுடைய தகப்பனாரையும் சகோதரனையும் குறித்து நினைத்து: ஏங்கினான் தன்னுடைய தகப்பன் வீட்டில் ஊழியஞ்செய்கிறவர்களுக்கு கிடைக்கும் உணவுக்கூட எனக்கு கிடைக்கவில்லையே என்றும் தகப்பனாரின் வீட்டின் வேலைக்காரர்கள் கூட எவ்வளவு சுகமாயிருப்பார்கள்; ஆனால், இங்கே நான் உணவு, தங்குமிடம் ஆகியவற்றிற்காகவே மிகவும் போராடி வருகிறேன், அதனால் நான் இன்றே என்னுடைய தந்தையின் இருப்பிடத்திற்கு திரும்பி சென்று அவருடைய வேலைக்காரனாக என்னைக் ஏற்று காப்பாற்றுமாறு என்னுடைய தந்தையிடம் கோருவேன். " என முடிவுசெய்து தன்தையின் வீட்டிற்கு திரும்பி சென்றான் இதற்கிடையில், அவரது தந்தை எப்போதும் தனது இரண்டாவது மகனை நினைத்து கொண்டிருந்தார். அவர் ஜன்னல்களுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு தன்னுடைய இரண்டாவது மகன் எப்போது மனம்திருந்தி தன்னுடைய வீட்டிற்கு திரும்பிவருவான் என எதிர்பார்த்து காத்திருந்தார். ஒரு நாள் சன்னல் வழியாக பார்த்திடும்போது தூரத்தில் தன்னுடைய இரண்டாவது மகன் வருவதைக் கண்டார். அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் வீட்டை விட்டு வெளியில் வந்து தன்னுடைய இரண்டாவது மகனை வரவேற்றார் இரண்டாவது மகன், "அப்பா, நான் உன்னுடைய மகனாக இருப்பதற்குக தகுதியற்றவன் நான் உங்களுடைய கட்டளைக்கு கீழ்படிந்து வாழாமல் தான்தோன்றிதனமாக வாழ்ந்த சொத்துக்கள் அனைத்தையும் அழித்துவிட்டேன் எனக்கு உணவிற்கு வழியெதுவும் இல்லை அதனால் என்னை உங்களுடைய வீட்டில் ஒரு வேலைக்காரணாக பணியமர்த்தி எனக்கு தேவையான உணவு.அளித்தால் மட்டும் போதும் " என அழுதுபுலம்பினான் தந்தையானவர் தன்னுடைய இரண்டாவது மகன் உயிருடன் திரும்பி தன்னிடம் வந்துசேர்ந்ததால் போதும் என தவித்துகொண்டிருந்தவர் உடன் அனைவருக்கும் நல்ல விருந்துடனும் இன்னிசையோடும் கொண்டாடிமாறு உத்திரவிட்டார் மூத்த மகன் தன்னுடைய வேலையில் இருந்து திரும்பி வந்தான். அவன் தன்னுடைய வீட்டில் இசை , நடனம் ,பாட்டொலி விருந்து என பரபரப்பாக இருந்ததால் என்னகாரணம் என தங்களுடைய வீட்டின் பணிபுரியும் வேலைக்காரன் ஒருவனை விசாரித்தபோது இரண்டாவது மகன் திரும்பி வந்த மகிழ்ச்சியை கொண்டாட தன்னுடைய தந்தையால் இவ்வாறு செய்யப்பட்டுள்ளதை அறிந்து கொண்டு அவன் நேராக தந்தையிடம் மிககோபமாக சென்று நான் எப்போதும் உங்களுடைய உத்திரவின்படி செயல்பட்டு உங்களுடனேயே இருந்தும் எந்தவித மகிழ்ச்சியான நிகழ்ச்சியையும் ஏற்பாடு செயதிடாமல் தற்போது இரண்டாவது மகன் தந்னுடைய பங்கு சொத்தினை அழித்ததோடு மட்டுமல்லாது கெட்டுபோய் திரும்பிவந்ததை இவ்வளவு மகிழ்ச்சியாக கொண்டாடுவதா என கேட்டான் அதற்த அவருடைய தந்தைானவர்து, "என் மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய், மிகுதியுள்ள சொத்து முழுவதும் உன்னுடையதுதான் , உன் னுடைய இளைய சகோதரன் இறந்துவிட்டான், இப்போது தான் அவன் உயிரோடு திரும்பிவந்திருக்கிறான், அதனால் நாம் இப்பொழுது அவன்மனம் திருந்தி வந்ததற்காக நாம் மகிழ்ச்சியடையவேண்டும் ?" கூறியதை தொடர்ந்து மூத்த மகன் தனது தந்தையின் வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள அன்பை புரிந்து கொண்டாருஇளைய சகோதரனைப் பற்றிய பழைய நிகழ்வுகளை எல்லாம் மறந்துவிட்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க முடிவு செய்தான்

திங்கள், 1 மே, 2017

குறுக்குவழியில் வெற்றியடைய திட்டமிடுபவர்களை கண்டு ஒதுங்கி செல்க


ஒருநாள் ஆமையும் யானையும் எதிரெதிரே சந்திக்கொண்டன அதனால் யானையானது எகத்தாளமாக, " நீ மிகச்சிறியவன் என் வழியில் நீ குறுக்கிட்டுவிட்டாய் அதனாள் என்னுடைய ஒரு காலடியினால் நான் உன்னை நசுங்கிவிடுவேன் ." என மிரட்டியது இருந்தபோதிலும் அந்த ஆமையானது பயப்படாமல் அப்படியே நின்றுகொண்டிருந்தது யானையானது ஆமையை நோக்கி வந்தாலும் மிதிக்காமல் தான்டிச்சென்றது ஆனாலும் ஆமையானது யானையை பார்த்து " ஐயா யானையாரே உங்களுடைய உருவத்தை வைத்து பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டாம், நானும் உன்னைப் போல வலுவாக இருக்கிறேன்!" என்று சொன்னது, அதனால் யானையானது ஆமையை பார்த்து " என்ன நீ என்னைபோன்ற பலசாலியாக இருக்கின்றாயா" என சிரித்தது. எனவே ஆமையானது யானையாரை பார்த்து அடுத்தநாள் தான் வாழும் மலைக்கு வந்தால் இருவரிலும் யார் வலுவானவர் என போட்டியிட்டு வெற்றிபெறுவதை வைத்து முடிவுசெய்யலாம் என சவால் விட்டது ஆமையின் அந்த சவாலை யானையாரும் ஏற்றுக்கொண்டது இதனிடையே அந்த ஆமையானது அந்த மலைக்கும் கீழ்பகுதியில் ஓடும் ஆற்றில் நீர் யானைவாழ்ந்துவந்தது அதனிடம் சென்று நான் உன்னை போல் வலுவானவனாக இருக்கிறேன் என்று! "ஆமை கூறி யது உடன் அந்த நீர்யானை அதனை கேட்டு சிரித்து உடன் நாம் இருவரில் யார்வலுவானவர் என நமக்குள் கயிறு இழுக்கும் போட்டியொன்றை வைப்போம் அதில் வெற்றி பெறுவது யார்என முடிவுசெய்திடுவோம் என ஆமையானது நீர்யாணையை போட்டிக்கு அழைத்தது அந்த போட்டியை நீர்யாணையும் ஏற்றுக்கொண்டது மறுநாள், சூரிய உதயத்திற்கு முன், அந்த ஆமை மலைக்கு கீழே ஆமை சென்றது பின்னரி ஒரு நீண்ட கயிறில் முடிச்சிட்டு இதனை உன்னுடைய வாயால் பிடித்துகொள் நான் மலையின் மேல்பகுதிக்கு சென்று தயார் எனக்கூறியவுடன் இந்த கயிற்றினை உன்வாயால் பிடித்து இழுத்து கொண்டிரு நான் விடுஎன கூறியவுடன் விட்டிடு என நீர்யானையை பார்த்து க்கூறி மலையின் மேல்பக்தியில் யானை நின்றுகொண்டிருந்த இடத்திற்கு வந்தது அங்கு அந்த யானையிடமும் மலையின் கீழ்பகுதியிலிருந்து இணைத்து கொண்டுவந்த கயிற்றின் மற்றொருமுனையை அதனிடம் கொடுத்து தான் மலையின் கீழ்பகுதிக்கு சென்று தயார் எனக்கூறியவுடன் இந்த கயிற்றினை உன்வாயால் பிடித்து இழுத்து கொண்டிரு நான் விடுஎன கூறியவுடன் விட்டிடு எனக்கூறிய பின் மலையின் கீழ்பகுதிக்கு ஓடிச்சென்றது பாதிதூரம் வந்தவுடன் தன்னை கீழேயிருந்து நீர்யானையும் மேலேயிருந்து யானையும் பார்க்கமுடியாதவாறு மறைந்து நின்று கொண்டு தயார் எனக்கூறியது உடன் யானையும் நீர்யானையும் அந்த கயிற்றின் இருமுனைகளையும் தங்களுடைய வலுவனைத்தும் சேர்த்தும் இழுத்துபார்த்தன ஆயினும் கயிற்றினை இழுத்து மற்றமுனையில் இருப்பவரை தோல்வியுற செய்யமுடியவில்லை இந்நிலையில் விடடிடு என ஆமைகூறியதும் அவையிரண்டும் இழுப்பதை அப்படியே விட்டிட்டன அதனை தொடர்ந்து அவை தங்களுடைய தோல்வியை ஒத்துகொண்டு ஆமையே தங்களைவிட வலுவானதுஎன ஒப்புக்கொண்டன இவ்வாறு குறுக்குவழியில் வெற்றியடைய திட்டமிடுபவர்கள் இந்த ஆமையை போன்றே தம்முடைய குறுக்குவழிபுத்தியினால் நம்முடைய சக்திகளை / முயற்சிகளைத் திருடுவார்கள் / பயன்படுத்துவார்கள். அவ்வாறானவர்களால் நாம் பாதிக்கபடாமல் சரியான வழியில் நம்முடைய திறமையையும் அதிகாரத்தையும் நிரூபிக்க கற்றுக்கொள்க

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...