வியாழன், 30 நவம்பர், 2017

சிக்கலான பிரச்சினைகளுக்கு மிகவும் சிறிய தந்திரமான செயல்களுடனும் தீர்வுகாண வேண்டும்


அக்பரின் அரசவைக்கு வித்தியாசமான புகார் ஒன்று வந்தததது. ஒரு கிராமத்து உழவர்கள் இருவர் அருகருகே இரு கினறுகளுடன் கூடிய தோட்டங்களை வைத்தருந்தனர் ஒருவிவசாயினுடைய கினற்றில் அவருடைய தோட்டத்தில் விளைவிக்கும் காய்கறிசெடிகளுக்கு போதுமான தண்ணீர் இல்லை ஆனால் அருகிலிருந்த மற்றொரு தோட்டத்தின் இக்பால் எனும் விவசாயிக்கு சொந்தமான கிணற்றில் போதுமான தண்ணீர் இருந்தது. அதனால் பக்கத்து தோட்டத்து விவசாயி இக்பாலிடம் தன்னுடைய தோட்டத்தில் விளைவிக்கும் காய்கறிசெடிகளுக்கு போதுமான தண்ணீர் இல்லாதாதல் வாடிபோகின்றது அதனால் அவருடைய வாழ்க்கைக்கு தேவையான வருமானமும் கிடைக்காதநிலையாகிவிட்டது அதனால் அவரது கினற்றில் இருந்து தண்ணீர் வழங்கும்படி கோரினார் உடன் இக்பால் என்பவர் கினற்றையே உனக்கு விற்பணைசெய்கின்றேன் எனக்கூறியதை தொடர்ந்து அவ்விருவரும் இக்பால் என்பவரின் தோட்டத்தில் இருந்த கினற்றினை வாங்கு வதற்கான அவர்களுக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உறுதி செய்து கொண்டனர். அதன்பின் இக்பால் ஆனவர் தான் விற்பனைசெய்த கிணற்றிலிருந்து தொடர்ந்து தண்ணீர் எடுதது கொண்டிருந்தார் அந்த கினற்றினை வாங்கிய பக்கத்து தோட்டக்காரருக்கு போதுமான தண்ணீர் இல்லாமல் பழைய நிலையிலேயே இருந்துவந்தார் இந்த பிரசசினையை தீர்வுசெய்திடுமாறே அக்பரின் அவையில் முறையீடு செய்தார் பாதிக்கப்பட்ட தோட்டக்காரர் இக்பாலிடம் அக்பர் ஏன்அவ்வாறு செய்கின்றாய் என வினவியபோது ஐயா நான் பக்கத்து தோட்டக்காரருக்கு என்னுடைய கினற்றினை மட்டுமே விற்பனை செய்தேன் அதிலுள்ள தண்ணீரை விற்பனை செய்யவில்லை இந்த விற்பனை பத்திரத்தினை நீங்களே படித்து பாருங்கள் அதனால் நான் விற்பணை செய்யாத என்னுடைய தண்ணீரை தொடர்ந்து பயன்படுத்திவருகின்றேன் இதில் தவறு இருந்தால் கூறுங்கள் என பதிலளித்தார் உடன் அக்பர் அருகில் அமர்ந்திருந்த அமைச்சர் பீர்பாலிடம் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணுமாறு உத்திரவிட்டார் உடன் அமைச்சர் பீர்பாலானவர் இக்பாலிடம், 'இக்பால், நீங்கள் அருகிலிருந்த தோட்டக்காரருக்கு கினற்றினை மட்டுமே விற்றுவிட்டீர் ஆனால் தண்ணீரை மட்டும் அவருக்கு விற்பனை செய்யவில்லை எனக்கூறுகின்றீர் அதுதானேஉங்களுடைய வாதம் ஆம் ஐயா என இக்பால் கூறியதை தொடர்ந்து பீர்பால் எனும் அமைச்சரானவர் ஆனால் உங்களுடைய தண்ணீரை அவருடைய கினற்றில் வைத்திருப்பதற்காக வாடகை தரவேண்டாமா அதனால் அவருக்கு சேரவேண்டிய வாடகை யை வழங்கிவிட்டு நீங்கள் உங்களுடைய தண்ணீரை தொடர்ந்து அவருடைய கினறறிலிருந்து எடுத்து கொள்ளலாம் எனத்தீர்பளித்தார் அதன்பின்னர் இக்பால் என்பவர் விற்பணைசெய்த கினற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதை விட்டுவிட்டார் சில நேரங்களில், இவ்வாறு சிக்கலான பிரச்சினைகளுக்கு மிகவும் சிறிய தந்திரமான செயல்களுடனும் தீர்வுகாண வேண்டும் என்ற செய்தியை மனதில் கொள்க.

திங்கள், 20 நவம்பர், 2017

கர்வத்தை விட்டொழியங்கள்


​​அமிதாப் பச்சன்எனும் மிகப்பிரபலமான நடிகர் தன்னுடைய வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை இவ்வாறு கூறுகிறார் ... "என் வாழ்க்கையின் உச்சத்தில் வாழ்ந்துகொண்டிருந்த ஒருநாள் , விமானத்தின் மூலம் ஒருமுறை பயணம் செய்தேன், எனக்கு அருகில் பயனம் செய்த பயணி ஒரு சாதாரண சட்டையும் பேண்ட்டும் அணிந்த மிகவும் மூத்த முதியவராக தோன்றினார் அவர் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் போன்று இருந்தாலும் அவர் நன்கு படித்தவர்.போன்ற தோன்றினார் மற்ற பயணிகள் அனைவரும் என்னை யார் என்று தெரிந்து கொண்டு என்னுடன் அறிமுகம் செய்து கொண்டனர், ஆனால் இந்த மனிதர் மட்டும் என்னைபற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல் வழக்கமான பயனிபோன்று அலட்சியமாக திரும்பியபார்க்காமல் இருந்தார் மேலும் அவர் ஜன்னல் வழியே வெளியே பார்ப்பதும் கைகளில் இருந்த நாளிதழைபார்ப்பதுமாக இருந்தார், அதனை தொடர்ந்து பயனிகள் அனைவருக்கும் குடிப்பதற்கு தேநீர் வழங்கியபோது , அவர் அமைதியாக நாளிதழை மூடிவைத்துவிட்டு தன்னுடைய இருக்கையில் சாய்ந்து. வழங்கப்பட்ட தேநீரை குடித்துகொண்டிருந்தார் அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்திருப்பவர் நாம் எவ்வாளவு புகழ்பெற்ற நடிகர் ஆனாலும் நம்மை கவணிக்காமல் தன்னுடைய பணியை அவர் செய்துகொண்டிருக்கின்றாறே என "வணக்கம்!” என்று கூறி அவருடன் நான் உரையாட முயற்சித்தேன். அந்த மனிதரும் என்பக்கம் திரும்பி புன்னகைத்து, 'வணக்கம்' என்று பதிலுக்கு சொன்னார். பின்னர் நாங்கள் இருவரும் பொதுவான செய்திகளை பேசிக்கொண்டிருக்கிறோம், அப்போது எங்களுடைய உரையாடல் திரைப்படம் தொடர்பான செய்திகளுக்கு திரும்பியது , 'நீங்கள் திரைப்படங்களை பார்த்திருக்கின்றீர்களா?' எனவினவியதற்கு அந்த மனிதர், 'ஓ, பல ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்தேன். என பதிலளித்தார் அதனை தொடர்ந்து ' நான் திரைப்பட துறையில் பணிபுரிந்து வருகின்றேன் 'நான் ஒரு நடிகர்' எனக்கூறியதும் அந்த மனிதர் , 'ஓ, அது மிகவும் நல்ல அற்புதமான பணிதான்! ' எனக்கூறினார் … நாங்கள் இறங்கவேண்டிய இடம் வந்ததும் இருவரும் விமாணத்தில் இருந்து வெளியவந்தோம் தொடர்ந்து அவர் என்னுடன் கைகுலுக்கினார் அப்போது நான் , "உங்களுடன் பயணம் செய்தது மிகவும் நன்றாக உள்ளது, என் பெயர் அமிதாப் பச்சன்!" அந்த மனிதர் சிரித்துகொண்டே , "நன்றி ... நான் மிகப்பெரும் தொழில் அதிபர் ஜே ஆர் ​ஆர் டி டாடா!" எனக்கூறினார் அதனைதொடர்ந்து நான் இதுவரையில் சினிமா என்ற கவர்ச்சியினால் நான்தான்மிகஉயர்ந்தவன் என தலைகணத்துடன் அனைவரையும் மிகஅற்பமாக பார்த்துவந்தேன் ஆனால் என்னைவிட மிகச்சிறந்த பெரிய தொழில் அதிபர் என்னைபோன்ற கர்வம் எதுவும் இல்லாமல் மிகச்சாதரணமாக இருக்கின்றார் அதுமட்டுமலலாமல் மிகவும் சாதாரண தோற்றத்துடன் இருக்கின்றார் என தெரிந்து அறிந்து கொண்டு என்னுடைய கர்வத்தை அந்த பயனத்தோடு விட்டொழித்தேன்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...