சனி, 29 டிசம்பர், 2018

தகவல் தொழில்நுட்ப காலகட்டமானஇந்த 21 ஆம் நூற்றான்டில் சிறிய அளவில் ஏராளமான வகையில்தொழிலை துவங்கலாம்


1.Online Tutorialsபொதுவாக தற்போது நம்மில் பெரும்பாலோர் இருந்த இடத்திலிருந்தவாறே எந்தவொரு புதிய தொழில்நுட்பத்தையும் கற்க விரும்புகின்றனர் அதனால் அவ்வாறான கற்றலை வழங்குகின்றஇணையவழிகல்வியாக தொழிலநுட்பம் இசை நாட்டியம் ஓவியம் சமையல்ஆகியவற்றிற்கான ஆன்லைன் டுட்டோரியல் கல்வி எனும் தொழிலை குறைந்தசெலவில் நடத்தலாம் 2. Animation தற்போதைய தகவல்தொழில்நுட்ப காலகட்டத்தில் அசைவூட்டு (Animation)படங்கள் மிகமுக்கிய இடத்தை வகிக்கின்றன அதிலும் நிறுவனங்கள் தங்கள் பொருட்களை சந்தைபடுத்திடுவதற்கு இந்த அசைவூட்டுபடங்கள்மிகமுக்கிய பங்களிக்கின்றன அதனால் சிறிய அளவில் அசைவூட்டு படங்களை உருவாக்கி டும் பணியைசெய்யலாம் 3. Advertisement Makingதற்போத எந்தவொரு உற்பத்தி பொருளும் விளம்பரமில்லாமல் சந்தையில் நிலைத்து இருக்கமுடியாத என்றநிலையில் பொருளிற்கான விளம்பரங்களை உருவாக்கிடும் பணியை செய்திடலாம் 4.Advertisement Agencyஇவ்வாறான விளம்பரதயாரிப்பாளர் தனியுலகமாகவும் பொருள்உற்பத்தி தனியுலகமாகவும் இருக்கின்றநிலையில் அவைகளுக்கு இடையேஇணைப்பு பாளமாக விளங்கிடும்விளம்பர முகவர் பணியை செய்யலாம் 5. Photographyஎந்தவொரு செய்தியையும் உரையாக வழங்குவதைவிட அவ்வுரையுடன் விளக்கப்படமும் இணைத்து வழங்கும்போது மக்களின் மனதில் அந்த செய்தி உடன் பதியும் அதற்காகபடப்பிடிப்பு மிகமுக்கிய இடத்தைவகிக்கின்றது இவ்வாறான படபிடிப்பு தொழில் குறைந்த முதலீட்டில் செய்திடமுடியும் 6. Freelance Writerசெய்திகளை உரையாக எழுதி உருவாக்குவது அதிலும் எந்தவொரு செய்தி நிறுவனத்தையும் சாராமல்சுதந்திரமாக எழுதுவது மிகச்சிறந்த தொழில் வாய்ப்பாகும் இவ்வாறான யாரையும் சார்ந்திராத சுதந்திர எழுத்தாளர் பணியை செய்திடுக 7.Translation servicesஅனைத்து தொழில்களும் உலகளாவிய இன்றையை நிலையில் நாடுகளுக்கு இடையேஅந்நாடுகளின் பேசப்படும் மொழிகளுக்கு இடையே பாளமாக விளங்குவது மொழிபெயர்ப்பு பணியாகும் அவ்வாறான மொழிபெயர்ப்பு பணியானது மிகமுக்கியஇடத்தினைவகிக்கின்றது அதனால் இந்த மொழிபெயர்ப்பு பணியைசெய்திடலாம் 8. Domain and Hostingதற்போது இணையமில்லாது எந்தவொரு செயலும் இல்லை அதிலும் வியாபரத்திற்குஇணை பக்க்கள்தான் அடிப்படையாக விளங்குகின்ற இன்றையை நிலையில் வியாபார நிறுவனங்கள் அனைத்தும் தத்தமக்கு என தனியாக இணையபக்கத்தை உருவாக்கிடவிரும்பிடுகின்றன அதனை எளிமையாக செயல்படுத்திபடுவதற்காக Domain and Hosting என்ற சேவைத்தொழிலை மேற்கொள்க 9.Search Engine Optimization (SEO)Consultantஇணையத்தில் கூகுள் யாகூ .பிங்க்போன்றவை தேடுபொறியில் முதன்மை இடத்தை வகிக்கின்றன அவ்வாறான தேடுபொறிகளில் நம்முடைய இணையபக்கத்தைமுதல் பத்து இடங்களில் கொண்டு வருமாறு செய்வதற்காக நம்முடைய இணையபக்கத்தின் உள்ளடக்கங்களை மாற்றியமைத்திடவேண்டியுள்ளது அவ்வாறு தேடுபொறியில் இணையபக்கத்தை முதலிடங்களை கொண்டுவருவதற்கானஆலோசகர் பணிமிகமுக்கிய இடத்தை வகிக்கின்றது அவ்வாறான தேடுபொறி ஆலோசகர் பணியை செய்திடுக

சனி, 22 டிசம்பர், 2018

இந்தியாவில் ஒரு புதிய நிறுவனத்தை பதிவு செய்வது எவ்வாறு


தற்போது இந்தியாவில் புதியதாக தொழில் துவங்கவிருப்பமுடையவர்கள் அப்புதிய நிறுவனத்தை மிகவிரைவாக ஏழேநாட்களில் பதிவுசெய்திடமுடியும் என்ற மிக எளிமையான நடைமுறையை நிறுவனங்களின் விவகாரத்துறை அமைச்சகம்(MCA) செயல்படுத்திடுகின்றது இதற்காக நாம்எந்தவொரு அரசு அலுவலகங்களுக்கும் நேரடியாக செல்லத்தேவையில்லை மேலும் நாம் இந்தியாவில் எந்தவொரு இடத்திலிருந்தும் அனைத்து ஆவணங்களையும் மின்னனு முறையில் பூர்த்திசெய்து பதிவேற்றம் செய்தால் மட்டும் போதுமானதாகும் இவ்வாறு புதிய நிறுவனங்களை பதிவுசெய்வதற்காகவே பல்வேறுநிறுவனங்களும் நிறுவனங்களின் விவகாரத்துறை அமைச்சக குழுக்களும் நமக்கு உதவதயாராக இருக்கின்றன இதற்காக முதலில் 1 தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமம் 2. பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுமம் 3.ஒருநபர் நிறுமம் 4.தனிநபர் உடைமை நிறுமம் 5.பொதுவான கூட்டாண்மை நிறுமம் ஆகிய ஐந்துவகைகளில் பதிவு செய்திட முடியும் இவை ஒவ்வொன்றும் வசதி வாய்ப்புகளில் பல்வேறு வகைகளில் வேறுபட்டவையாக இருப்பதால் இவற்றுள் ஒரு வகையை மட்டும் நாம் பதிவு செய்யவிரும்பும் நிறுவனத்தின் வகையாக முடிவுசெய்து தெரிவுசெய்து கொள்க அதற்கடுத்ததாக இந்தியாவில் ஒரு வியாபார நிறுவனத்தை பதிவு செய்வதற்கான நடைமுறையை எளியதாக ஆக்குவதற்காக நிறுவனங்களின் விவகார்த்துறை அமைச்சகம் (MCA)ஆனது INC-29 எனும் படிவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது அதாவது பதிவுசெய்திட விரும்பும் ஒரு நிறுவனத்திற்கான வணிக பெயர் ஒப்புதல் பெறுதல், இயக்குனரின் அடையாள எண் (DIN),நிறுவனத்தை பதிவுசெய்வதற்கான விண்ணப்பம் ஆகிய மூன்று செயல்களையும் இந்த (INC-29)படிவத்திலேயே செயற்படுத்திடுமாறு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது மூன்றாவதாக நிறுவனங்களின் விவகாரத்துறை அமைச்சகத்திலிருந்து (MCA) பதிவுசெய்யப்படும் நிறுவனத்தின் இயக்குனர்களுடைய DSC எனும் மின் கையொப்ப சான்றிதழ்களை பெறவேண்டும் இதற்காக தேவையான ஆவணங்களை இணையத்தின் வாயிலாக சமர்ப்பித்தால்போதும் அவைகள் சரியாக இருந்தால் இந்தமின்கையொப்ப சான்றிதழை இரண்டு நாட்களுக்குள் பெறமுடியும் தகவல் தொழில்நுட்ப சட்டம்200-இன் விதிகளின்படி, மின்னணு வடிவத்தில் சமர்ப்பிக்கப்படும் அனைத்து ஆவணங்களின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மைக்காக அவைகளுடன் இந்தமின் கையொப்பங்களைப் பயன்படுத்துவதை குறிப்பிடுகின்றன, அவைகளின்படி சமர்ப்பிக்கப்படும மின்னணு ஆவணம் பாதுகாப்பானது என்றும் உண்மையானது என்றும் அனுமதிக்கின்றது. எனவே, MCA21 எனும் மின் ஆளுமை திட்டத்தின் கீழ் நிறுவனங்கள் / வரையறுக்கப்பட்டகூட்டாண்மை நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் அனைத்து கோப்புகளும் கையொப்பமிட அனுமதிக்கப் பெற்ற நபர் தனக்கு அளிக்கபபட்ட மின் கையொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் இந்த INC-29படிவத்தை தயார் செய்யவேண்டும் அதற்காக இயக்குனரின் அடையாள எண் (DIN ),நிறுவனத்தின் பெயர் ஒப்புதல்சான்றிதழ் , MOA மற்றும் AOA ஆகிய அடிப்படை ஆவணங்களின் விவரம் ,பதிவுசெய்யப்பட்ட அலுவலக சரிபார்ப்புவிவரம் ,இயக்குநர்களின் நியமனக்கடிதங்கள் அறிவிப்புகள் ஆகிய விவரங்கள்இந்த INC-29 படிவத்தில் பூர்த்தி செய்யப்படவேண்டும் ஒரு நிறுவனத்தை பதிவு செய்ய இந்த INC-29 படிவத்துடன் சமர்ப்பிக்கத் தேவையான ஆவணங்கள் பின்வருமாறு மார்பளவு உருவப்படம் , நிரந்தரவருமானவரி எண்அட்டை(PAN card), சமீபத்திய வங்கி கணக்குஅறிவிக்கை,தொலைபேசிஅல்லதுசெல்லிடத்து பேசியின் பட்டியல் அல்லது எரிவாயு இணப்பு பட்டியல், ஒட்டுரிமைசான்றட்டை , பதிவு அலுவலகம் வாடகையாக இருந்தால் ஆங்கிலத்தில் வழக்குரைஞரின் சான்றளிக்கப்பட்ட வாடகை ஒப்பந்த பத்திரம் ,வாடகை பதிவு அலுவலகம் வழங்குவதற்கான மறுப்பின்மை சான்று, பதிவுஅலுவலகத்தின் முகவரிஅடையாள சான்று ஆகிய ஆவணங்களின் வருபட்ட நகல்கள் இந்த படிவத்துடன் இணைக்கப் படவேண்டும் அதாவது மேலே கூறிய அனைத்து ஆவணங்களின் வருடப்பட்ட நகல்களும் இந்த INC-29 படிவத்துடன் இணைக்கப் படவேண்டும் அதன்பின்னர் INC-29 படிவத்தில் தேவையானஅனைத்து விவரங்களும் பூர்த்தி செய்யப்பட்டு தயாராக உள்ளதெனில்இந்த INC-29 படிவத்தை இணையத்தின் வாயிலாக நிறுவன விவகாரத்துறை அமைச்சகத்தின் (MCA) இணைய வாயிலில் சமரப்பிக்கவேண்டும் பிறகு இந்த INC-29 படிவம் சரியான விவரங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் குறிப்பிட்ட நிறுமம் பதிவுசெய்யப்பட்டதாக அதற்கான பதிவுஎண்ணுடன் certificate of incorporation எனும் நிறுவன பதிவு சான்றிதழ்கிடைக்கும் அதனை தொடர்ந்து இந்த நிறுவனங்களின் பதிவெண் அடிப்படையில் நம்முடை ய நிறுவனத்திற்கான வருமான வரி அலுவலகத்தின் வாயிலாக நிரந்தர வருமான வரி கணக்குஎண் பெறமுடியும் மேலும் நம்முடைய நிறுவனத்திற்கென தனியாக வர்த்தக வங்கியில் வங்கி கணக்கு ஒன்றினை துவங்கமுடியும் அதற்குப் பிறகு நம்முடைய நிறுவனத்தின் வணிக வகை மற்றும் அளவை பொறுத்து பொதுசரக்குசேவைவரி (GST) பதவிற்காக விண்ணப்பிக்க வேண்டும். பொதுவாக நாம் துவங்கவிருப்பது தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம் எனில் குறைந்தபட்சம் 2 இயக்குநர்களும் அதிகபட்சம் 15 இயக்குநர்களும் அவ்வாறே குறைந்தபட்சம் 2 பங்குதாரர்களுடனும் அதிகபட்சம் 50 பங்குதாரர்களுடனும் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக பதிவுசெய்திடலாம் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுமமாக (LLP) கூட நாம் பதிவுசெய்திடமுடியும் ஆனால் சிறிது கூடுதலான நடைமுறையை நம்முடைய நிறுவனத்தை பதிவுசெய்வதற்கு பின்பற்றிடவேண்டும் ஒரேயொரு பங்குதாரரும் இயக்குநரையும் கொண்ட சிறிய ஒருநபர் நிறுமமாக கூடபதிவுசெய்திடமுடியும் என்ற செய்தியை மனதில் கொள்க

சனி, 15 டிசம்பர், 2018

தனியார்வரையறுக்கப்பட்ட நிறுமம் ,ஒருநபர் நிறுமம் வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுமம் ஆகியவை குறித்து ஒருஅறிமுகம்


வெளியிலுள்ள நபர்களிடமிருந்துமுதலீடு பெற்றுஒருநிறுமத்தை துவங்குவது தனியார்வரையறுக்கப்பட்ட நிறுமம்(Private Limiited)ஆகும் . தனிநபர் ஒருவர் தான்மட்டும் தன்னுடைய முதலீட்டுடன் ஒருநிறுமத்தை துவங்குவது ஒருநபர் நிறுமமாகும். நான்கைந்து நபர்கள் கூட்டாக சேர்ந்து தங்களுடைய முதலீட்டினை கொண்டு நிறுமத்தை துவங்குவது வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுமமாகும்(LLP) . வெளிப்புற நிதி உதவி எதுவுமில்லாமலேயே தங்களுடைய சொந்த நிதியை கொண்டு வியாபாரத்தை நடத்த விரும்பும் எவருக்கும், வணிகத்தின் எல்லா நடவடிக்கைகளிலும் திறமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க விரும்புகிறவர்களுக்கும் ஒருநபர் நிறுமமும் வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுமமும் சிறந்தவையாகும் பொதுவாக தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமத்தில் பங்குதாரர்களின் பொறுப்பு முதலீட்டின் தொகை வரை மட்டுமே என வரையறுக்கப்பட்டு விடுவதால் இந்த வகை நிறுமமானது அனைவராலும் விரும்பப்படுகின்றது தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமத்தை துவங்கவிரும்புவோர்கள் நிறுமங்களின் பதிவாளரின் இணையதள பக்கத்தில் (Ministry of CorporateAffairs(MCA)) நேரடியாக இணையத்தின் வாயிலாக எளிய ஒருபக்க படிவத்தில் சரியான விவரங்களை உள்ளீடுசெய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் மின்னணு வடிவத்தில் சமர்ப்பித்தால்போதும் உடன் அந்த தனியார் நிறுமத்தை பதிவுசெய்யப்பட்டதாக அதற்கென தனியானபதிவெண் ஒன்று ஒதுக்கப்பட்டு பதிவுசான்றிதழ் ஒன்று அந்நிறுமத்திற்கு வழங்கப்படும் அதனை தொடர்ந்து இவ்வாறு பதிவுசெய்யப்படும் அதனை தொடர்ந்து அந்த தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமத்தில் பலர் முதலீடு செய்வார்கள் வணிக வங்கிகளும் அந்த தனியார் நிறுமத்திற்கு தேவையான நீண்டகாலகடன், நடைமுறை மூலதனகடன் ஆகியவற்றை விரைவாக வழங்குவார்கள் வெளிப்புற நிதி தேவைப்படாத ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் கூட்டாக சேர்ந்து தங்களுடைய சொந்த முதலீட்டினை கொண்டு வரையறுக்கப்பட்டகூட்டாண்மை நிறுமத்தை துவங்கிடமுடியும் மேலும் மற்ற பங்காளிகளால் எழும் எதிர்மறை சிக்கல்களிலிருந்து மிகுதியுள்ள பங்குதாரர்களை பாதுகாப்பதற்கு ஒரு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுமம் அனுமதிக்கிறது. அதுமட்டுமல்லாது கூட்டாளிகள் தங்களுடைய பொறுப்பினை வரையறைக்குள் கொண்டுவருவதற்கு இது ஒரு நல்ல தேர்வாக அமைகின்றது அதைவிட தேவையெனில் பிந்நாட்களில் இதனை தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமமாக மாற்றியமைத்து கொள்ளமுடியும் தனிப்பட்ட நபர் தான் விரும்பும் தொழிலை தன்னுடைய பொறுப்பு வரையறுக்குட்-பட்டதாக துவங்குவதற்கு இந்த ஒருநபர் நிறுமம் சிறந்த தேர்வாகும் ஆயினும் இவ்வாறான ஒருநபர் நிறுமத்தின் கடந்த மூன்றாண்டுகளின் சராசரி வருவாய் இரண்டு கோடிக்கு மேல் உயரும்போதும் செலுத்தப்பட்ட பங்குமூதலீடுகள் ஐம்பது இலட்சத்தை விட உயரும்போதும் அந்த ஒருநபர் நிறுமத்தினை அவர் கண்டிப்பாக தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமமாக மாற்றி கொள்ளவேண்டும் இவ்வாறான ஒருநபர் நிறுமத்தை துவங்குவிரும்வோர் நிறுமங்களின் பதிவாளரின் இணையதளபக்கத்தில் (Corporate Affairs(MCA)) நேரடியாக இணையத்தின் வாயிலாக எளிய ஒருபக்க படிவத்தில் சரியான விவரங்களை உள்ளீடுசெய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் மின்னணு வடிவத்தில் சமர்ப்பித்தால்போதும் உடன் அந்த ஒருநபர் நிறுமத்தை பதிவுசெய்யப்பட்டதாக அதற்கென தனியாக பதிவெண் ஒன்று ஒதுக்கப்பட்டு பதிவுசான்றிதழ் அந்த ஒருநபர் நிறுமத்திற்கு வழங்கபடும் இந்த மூன்றில் தங்களுடைய தொழிலிற்கு பொருத்தமான ஒன்றினை தெரிவுசெய்து தாங்கள் துவங்கவிருக்கும் தொழிலிற்கு பயன்படுத்தி துவங்கிடுக என பரிந்துரைக்கப்படுகின்றது

சனி, 8 டிசம்பர், 2018

கெண்டகி ஃபிரைடு சிக்கன் (KFC)எனும் உணவினை உற்பத்தி செய்திடும்நிறுவனம்


கலோனல் சான்டர்ஸ் என்பவர் தன்னுடைய 65 ஆவது வயதில் தனது சமூக பாதுகாப்பிற்கான காசோலை 99 டாலர் ஓய்வூதியம் பெற்றுவந்தார் அப்போது அவரிடம் வாழ்வதற்காக மிகச்சிறிய வீடுஒன்றும் எங்காவது செல்வதற்காக பழைய மகிழுந்து ஒன்றும் மட்டுமே அவருடைய சொத்துகளாக உடைமையாக இருந்தன ஆனால் அவர் மிகசிறப்பாக அனைவரும் விரும்புமாறான கோழிவருவல் உணவை தயாரித்திடுவார் அதனால் அவருடைய நண்பர்கள் அனைவரும் இந்த கோழிவருவலுக்காகவே அவரை சுற்றிசுற்றி வந்து கொண்டிருப்பார்கள் அந்நிலையில்இதனை ஏன்ஒரு நல்ல தொழிலாக மாற்றியமைத்து செயற்படுத்தக்-கூடாது என அவர் சிந்தித்தார் அதனை தொடர்ந்த அதனை நடைமுறை படுத்திடுவதற்காக முனைந்தார் அதனால் நாடுமுழுவதும் சுற்றுலாவை செயற்படுத்திடும் முகவர்கள் நடத்திடும் உணவகங்களில் இந்த கோழிவருவல் உணவை இலவசமாக வழங்க தான் தயாராக இருப்பதாகவும் அதனை அனுமதிக்குமாறும் அவ்வுணவகங்களில் 1000 முறை கோரினார் ஆயிரமுறையும் அவ்வாறான சுற்றலா முகவர்களின் உணவகங்களில் கட்டணமில்லாமல் அவருடைய கோழிவருவல் உணவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குமாறான அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டன இருந்தபோதிலும் அவரும் இவ்வாறான நிராகரிப்பினால் சோர்வுற்றிடாமல் கடைசியாக இன்னும் ஒருமுறை முயன்றுதான் பார்ப்போமே என 1001 ஆவதுமுறை முயற்சிசெய்தார் அதாவது சுற்றுலா உணவகத்தில் இவருடைய கோழிவருவல் உணவை இலவசமாக வாடிக்கை-யாளர்களுக்கு வழங்குவது எனும் கோரிக்கை ஏற்கப்பட்டு செயற்படுத்தப்பட்டது அதனை தொடர்ந்து இவருடைய கோழிவருவல் உணவு வாடிக்கையாளர் அனைவரும் விரும்பும் உணவாக வாடிக்கையாளர்களின் உணவுப்பழக்கமே மாறிப்போனது அவ்வாறு வாடிக்கையாளர்களின் உணவு பழக்கம் மாறியதை தொடர்ந்த அவருடைய கோழிவருவல் உணவினை உற்பத்தி செய்திடும் ஆண்டொன்றிற்க 45 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் ஈட்டிடும் அவருடைய கெண்டகி ஃபிரைடு சிக்கன் (KFC)எனும் மிகவும் பிரபலமான உணவு நிறுவனமாகவும். 220 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் செயல்படும் ஒரு உலகளாவிய மாபெரும் நிறுவனமாகவும் பரந்து வளர்ந்து விட்டது. விடாமல்முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் என்ற பழமொழியை மனதில் கொள்க.

செவ்வாய், 4 டிசம்பர், 2018

மிகை ஊதிய பங்குகள் வெளியீடு (Bonus Shares Issue)


இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்றத்தால் 31.12.1600இல் உருவாக்கப்பட்ட கிழக்கிந்திய கம்பெனி என்பதுதான் நாம் வாழும் இந்த உலகில் முதன் முதலில் தோன்றிய நிறுமமாகும் இது தற்போது நாம் செயல்படுத்திவரும் நிறுமத்தின் அனைத்து செயல்களுக்கும் முன்னோடியாகவிளங்கி வருகின்றது அவற்றுள் மிகை ஊதிய பங்குகள் வெளியீடும் ஒன்றாகும் மிகை ஊதிய பங்குகள் என்பது ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்த பங்குதாரர்களனைவரையும் அதற்காக அவர்களை அந்நிறுமத்தால் கௌரவிக்கும் ஒரு வழிமுறையாகும் அதாவது ஒருநிறுமத்தின் பங்குதாரர்களை கௌரவிப்பதற்காக ரொக்கமாக அல்லது தொகையாக அவர்களுக்கு வழங்குவதற்கு பதிலாக பங்காதாயமாக அல்லது அவ்வாறு வழங்க இயலாத நிலையில்மிகைஊதிய பங்காக வெளியிடுவது போன்ற வழிகளில் ஒருநிறுமமானது செயல்படுத்திடும் இவவாறாக மிகை ஊதிய பங்கினை பெறும் பங்குதாரர்களுக்கு இதன்மூலம்பிற்காலத்தில்கூடுதலாக பங்காதாயம் கிடைப்பதற்கான வழி ஏற்படுகின்றது மேலும் தனக்கு உடனடியாக ரொக்கம் தேவையெனில் அப்பங்குதாரர் இந்த மிகை ஊதிய பங்குகளை விற்று ரொக்கமாக ஆக்கி கொள்ளமுடியும் இந்த கிழக்கிந்திய கம்பெனியானது முதன்முதலில் தன்னுடைய பங்குதாரர்களுக்கு1682 இல் இவ்வாறானமிகைஊதிய பங்கு களைவெளியிட்டது பொதுவாக இந்த மிகைஊதிய பஙகினை வெளியிடுவதன்மூலம் பின்வருமாறான வசதிகள் வாய்ப்புகள் ஏற்படுகின்றன 1.ஒரு நிறுமமானது இலாப பங்கீடாக பங்காதாயம் வழங்குவதற்கு பதிலாக மிகைஊதியபங்குகளை வெளியீடு செய்திடும்போது பங்காதாயத்திற்கான வரி செலுத்துவது தவிர்க்கப்படுகின்றது .பங்குதாரர்கள் பெறும் இந்த மிகை ஊதிய பங்கினை மற்றவர்களிடம் விற்பணை செய்வதால் கிடைக்கும் தொகைக்கு அல்லது நிறுமமே மீண்டும் பங்குகளை வாங்கிகொள்ளும்போது கிடைக்கும தொகைக்கு வரிசெலுத்த தேவையில்லை ஆனால் பங்காதாயமாக பெறும்போது குறிப்பிட்ட வரம்பிற்குமேல் பெறப்படும் பங்காதாய தொகைக்கு வரி செலுத்தவேண்டும் 2.நிறுமமானது நல்ல இலாபம் ஈட்டிகொண்டிருக்கும்போது தன்னுடைய இலாபத்தை தன்னுடைய நிறுவனத்திற்குள் நிலையான சொத்துகளுக்காகவும் நடைமுறை மூலதனத்திற்காகவும் மறுமுதலீடு செய்வதற்கான ஒரு சிறந்த வழிமுறையாக இது அமைகின்றது மேலும் பொதுமக்களிடம் பங்குவெளியீட்டின் வாயிலாக முதலீட்டினை திரட்டுவதற்கு பதிலாக தன்னிடம் உள்ள நிதிவளங்களையே மறுமுதலீடாக பங்குதாரர்களின் பெயர்களில் நிறுவனத்திற்கு தேவையான நிலையான சொத்துகளை கொள்முதல் செய்வதற்கும் நடைமுறை மூலதனத்திற்கும் பயன்படுத்தி கொள்ளலாம் 3.ஒரு நிறுவனத்தின் பங்குகள் பொதுமக்களால் வாங்கி விற்க முடியாத அளவு பங்குகளின் விலையானது ராக்கெட்போன்று உயரத்தில் செல்வதை குறைத்து வழக்கமாக பொதுமக்களனைவரும் அந்நிறுமத்தின் பங்குகளை வாங்கி விற்பதற்கு ஏதுவாக பங்குகளின் விலையை குறைவாக இருந்திடுமாறு பராமரிப்பதற்காக இந்த மிகைஊதிய பங்கு வெளியீடு உதவுகின்றது அதனால் பொதுமக்கள் பலரும் பங்குசந்தையில் ஆர்வத்துடன் கலந்துகொள்ளவழிவகுக்கின்றது 4 சில நிறுமங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் இவ்வாறு மிகை ஊதிய பங்குவெளியீடு செய்வதால் குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்தால் தங்களுடைய முதலீட்டின் மதிப்பானது தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும் என பொதுமக்களுக்கு குறிப்பிட்ட நிறுமத்தின்மீது ஒருநல்ல மதிப்பு தோன்ற வழிவகுக்கின்றது நிறுமச்சட்டம் 2013 இன் படி எந்தவொரு நிறுமமும் தன்னிடம்உள்ள மூலதன ஈவுத்தொகை கணக்கு ,மூலதனமீட்புஒதுக்கீடு,கட்டற்ற ஒதுக்கீடுகள்(Free Reserves) ஆகியவற்றினை கொண்டு இவ்வாறான மிகை ஊதிய பங்கினை தன்னுடைய பங்குதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்திடலாம்ஆனால் அந்நிறுமம் பங்காதாயத்திற்கு பதிலாக மிகை ஊதிய பங்கினை வெளியீடுசெய்திடக்கூடாது என வரையறை செய்துள்ளது மேலும் நிறுமமானது இவ்வறு மிகை ஊதிய பங்கினை வெளியீடு செய்வதாக இயக்குநர்களின் குழுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டால் அந்த முடிவிலிருந்து பின்வாங்க முடியாது ஆயினும் அந்நிறுமம் தான் பெற்ற கடனிற்கு வட்டிஅல்லது வட்டியும் அசலும் அல்லது அத்தியாவசியமாக செலுத்த வேண்டியசெலவுகள் ஆகியவை நிலுவையிலிருக்கும்போது இவ்வாறான மிகை ஊதிய பங்குகளை கண்டிப்பாக வெளியீடு செய்திடமுடியாது என்பதே மிகை ஊதிய பங்கு வெளியீட்டிற்கான இரண்டாவது முக்கிய நிபந்தனையாகும் சென்றஆண்டில் Biocon, BPCL, HPCL, ICICI Bank, L&T, Wipro போன்றநிறுமங்கள் இவ்வாறன மிகைஊதிய பங்குகளை வெளியீடு செய்துள்ள மிகமுக்கிய இந்திய நிறுமங்களாகும்

சனி, 1 டிசம்பர், 2018

பிரச்சினைக்கான தீர்வை செயல்படுத்திடுவதற்கு முன் அந்த பிரச்சினை என்னவெனமுதலில் சரியாக தெரிந்து கொள்க


பேருந்து நடத்துனர் ஒருவர் பயனிகளுக்கு பயனச்சீட்டினை வழங்கி அதற்கான கட்டணத்தினை வசூலிக்கும் தன்னுடைய வழக்கமான பணியை செய்து கொண்டிருந்தார் அப்போது ஒரு பேருந்து நிறுத்தத்தில் ஆறரைஅடிஉயரத்தில் பீமன்போன்ற உடலுரு கொண்ட வாட்டசாட்டமான நபர் ஒருவர் பேருந்தில் ஏறிய பின்னர் "பெரியண்ணன் பேருந்து கட்டணத்தை செலுத்தமாட்டார் "என கூறிகொண்டு இருக்கையில் அமர்ந்து கொண்டார் அவருடைய தோற்றத்தை பார்த்துபயந்து போன பேருந்தின் நடத்துனர் அவரிடம் மட்டும் பேருந்தில் பயனிப்பதற்கான கட்டணத்தை வாங்காமல் விட்டிட்டு தன்னுடைய சொந்த பணத்தினை செலுத்தி கணக்கினை நேர்செய்துகொண்டார் மறுநாளும் அதே நபர் அதே போன்று பேருந்தில் ஏறிய பின்னர் "பெரியண்ணன் பேருந்து கட்டணத்தை செலுத்தமாட்டார்" என கூறிக்-கொண்டு இருக்கையில் அமர்ந்து கொண்டார் அவருடைய தோற்றத்தை பார்த்துபயந்து போன பேருந்தின் நடத்துனர் மறுநாளும் அவரிடம் மட்டும் பேருந்தில் பயனிப்பதற்கான கட்டணத்தை வாங்காமல் விட்டிட்டார் இந்த நடைமுறை பலநாட்கள் தொடர்ந்தது அதனால் நடத்துனர். வாட்ட சாட்டமான அந்த பயனியுடன் நேருக்குநேர் மோதிபார்த்துவிடுவது என முடிவுசெய்தார் பின்னர் அதற்காகஒரு நல்ல உடல் பயிற்சி நிறுவனத்தின் பயிற்சிக்கு சென்று தன்னுடைய உடல்வலிமையை வலுவாக்கிய பின்னர் ஒருநாள் நடத்துனர் வழக்கமாக பேருந்தில் பயனிப்பதற்கான கட்டணத்தை செலுத்தாத அந்த பெரியண்ணனிடம் துனிச்சலாக சென்று "ஐயா! பேருந்தில் பயனிப்பதற்கான கட்டணத்தை நீங்கள் ஏன்செலுத்தமாட்டீர்?" என வினவினார் "அதுவா தம்பி! நான் இந்த பேருந்தில் பயனிப்பதற்காக மாதாந்திரம் கட்டணம் செலுத்தி அதற்கான அனுமதிசீட்டினை வைத்துள்ளேன் அதனால்தான் நான் பயனச்சீட்டு வாங்கமாட்டேன் "என க்கூறினார் அடடா இந்த தகவல் முன்னரே தெரிந்திருந்தால் என்னுடைய சொந்த பணத்தினை இழக்காமல் இருந்திருப்பேனே என வருத்தபட்டார் அந்த பேருந்தின் நடத்துனர் ஆம் எந்தவொரு பிரச்சினைக்கான தீர்வை செயல்படுத்திடுவதற்கு முன் அந்த பிரச்சினை என்னவெனமுதலில் சரியாக தெரிந்து கொள்க

வியாழன், 29 நவம்பர், 2018

நம்முடைய வியாபார இணையதளத்தின் உள்ளடக்கங்களை வாடிக்கையாளரை கவரும்வண்ணம் எவ்வாறுமேம்படுத்திடுவது


தற்போதை இருபத்தொன்றாம் நூற்றாண்டானது இணைய உலகமாக உள்ளது அனைவரும் அறிந்த செய்தியே அதனால் நம்முடைய நிறுவனம் வியாபாரத்தில் வெற்றிநடைபோடவேண்டுமெனில் கண்டிப்பாக நம்முடைய நிறுவனத்தின் இணையதளத்தினை வாடிக்கையாளர் அனைவரையும் கவரும்வண்ணம் மேம்படுத்திடவேண்டும் அதற்கான வழிமுறைகள் பின்வருமாறு 1. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தேடுபெறிகளின் வாயிலாகவே தாங்கள் விரும்பும் பொருட்களை தேடி அடைகின்றனர் அதனால் நம்முடைய இணையபக்கத்தில் பயன்படுத்திடும் சொற்கள் தேடுபொறிகளின் சொற்களுக்கு பொருத்தமானதாக இருக்குமாறு அமைத்து கொள்க 2. முகப்பு பக்கத்தில் நம்முடைய நிறுவனத்தை பற்றிய அறிமுகம் இரத்தினசுருக்கமாக இருக்கவேண்டும் மேலும் விவரங்களை தனியான இணைப்பு பக்கத்தில் அல்லது தாவியின் பக்கத்தில் வழங்குக 3. நம்முடைய இணையபக்கத்தை அடையவேண்டிய அவசியமான முடிவை முதலிலும் அதற்கடுத்தமுக்கியதகவல்களை அடுத்தும் அதற்கடுத்த தகவல்களை மூன்றாவதாகவும் பிரமிடு வழிமுறையில் நம்முடைய இணையத்தின் முக்கியத்துவத்தை விவரிக்கும் சொற்களை கட்டமைத்திடுக 4. நம்முடைய இணைய பக்கங்களில் அமைந்துள்ள உரையானது எவ்வாறுஎழுதியது என பார்வையாளர்கள் கவலைபடமாட்டார்கள் ஆனால் இவ்வாறான உரையை யார் எழுதியது என அறிந்துகொள்ளும் ஆவலைதூண்டிடுமாறு இந்த உரைஅமைந்திருக்குமாறு வடிவமைத்திடுக 5. நம்முடைய வியாபார நடவடிக்கைகக்கு ஏற்ப இந்த முகப்புபக்கத்தில் உருவப்படங்கள் கானொளிபடங்கள் இசைகள் வினாடிவினாக்கள் போன்றவைகளுள் பொருத்தமானதை கொண்டு வடிவமைத்திடுக 6. நாம் கூறவிழையும் கருத்துகளை சுருக்கமாகவும் தெளிவாகவும் சிறுசிறுபத்திகளாக பிரித்தும் தேவைப்பட்டால் கூடுதல் இணைப்புபக்கத்துடனும் முகப்பு உரையை வடிவமைத்திடுக 7. நம்முடைய முதன்மை குறிக்கோளே பார்வையாளர்களை வாடிக்கையாளர்களாக மாற்றுவதுதான் அதனால் பொருத்தமான தொழில்நுட்பங்களையும் இணைப்புகளையும் திறவுச்சொற்களையும் (Good Keywords) பார்வையாளர்களை கவரும் வண்ணம் கட்டமைத்திடுக

புதன், 28 நவம்பர், 2018

நமக்கு பாதிப்பு ஏற்படும் நிலையில் கெடுதல் செய்பவர்களுக்கு உதவிசெய்திடவேண்டாம்


ஒரு கிராமத்திற்குஅருகிலிருந்த காட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்துவந்தது அவ்வப்போது ஆட்களை கொன்று சாப்பிட்டுவந்து கொண்டிருந்தது அதனால் அந்தஊரில் வாழ்ந்துவந்தவர்கள் ஒன்று கூடி வலைவிரித்து அந்த சிங்கத்தை பிடித்து ஒரு கூண்டிற்குள் அடைத்து வைத்தனர் சிங்கத்திற்கு இரைஎதுவும் இல்லாததால்பசி அதிக மானது அந்த வழியாக சென்ற மிருகங்களை அழைத்து கூண்டினை திறந்துவிடுமாறு எவ்வளவோகெஞ்சி பார்த்தும் மற்றமிருகங்கள் இந்த சிங்கத்தை திறந்துவிட்டால் நம்மையை அடித்து சாப்பிட்டவிடும் என பயந்து சிங்கத்தை அடைத்துவைத்த கூண்டினை திறக்காமல் சென்றுவிட்டன இந்நிலையில் அப்பாவியான ஒரு மனிதன் அந்த வழியாக வந்தான் உடன் அவனிடம் ஐயா தயவுசெய்துஇந்த கூண்டைதிறந்து என்னை வெளியே விடுங்கள் என கெஞ்சியது அப்பாவியும் நான் திறந்துவிட்டால் என்னை அடித்து கொன்றுவிடுவாய் அதனால் நான் செய்யமாட்டேன் எனகூறினான் ஐயா நான் அவ்வாறே உன்னை அடித்து கொள்ளமாட்டேன் என உறுதிஅளிக்கின்றேன் என உறுதியளித்ததால் அப்பாவி மனிதனும் கூண்டினை திறந்து சிங்கத்தினை விடுவித்தான் இதுவரை உணவில்லாமல் பசியோடு இருந்த சிங்கமும் கூண்டினை விட்டு வெளியே வந்ததும் அப்பாவியை அடித்து கொன்று தின்னபாய்ந்தது உடன் சிங்கமே நீ கொடுத்தவாக்கினை காத்திடாமல் என்னை கொன்று தின்பது ஞாயமா எனவினவினான் அதெல்லாம் தெரியாது எனக்கு இப்போது பயங்கர பசி உன்னைதவிர இரையெதுவும் இங்கு இல்லை என மீண்டும் அந்த அப்பாவி மீது பாயத்துவங்கியது உடன் அப்பாவி இருஇரு யாரிடமாவது இதனை முறையிடுவோம் அதற்கு என்ன தீர்ப்பு கூறுகின்றார்களோ அதன்படி நடந்து கொள்வோம் என அப்பாவி கோரியதை சிங்கம் ஏற்றுகொண்டது அந்த சமயத்தில் நரிஒன்று அந்த வழியாக சென்றது அதனை அழைத்து நரியிடம் தங்களுடைய பிரச்சினைபற்றி அப்பாவி மனிதன் கூறியதைதொடர்ந்து நரியானது வாயால் கூறுவது எனக்கு சரியாக புரியவில்லை செயல்விளக்கமாக காண்பியுங்கள் என கோரியது உடன் சிங்கம் கூண்டிற்குள் சென்றது நரியானது அப்பாவியிடம் நீஎன்ன செய்தாய் எனக்கோரியபோது அந்த கூண்டின் கதவினை பூட்டியிருந்ததை காண்பித்தான் உடன் நரியானது அந்த சிங்கம் இருந்த கூண்டின் கதவினை நன்றாக பூட்டிவிட்டு சரி ஐயா நீங்கள் உங்கள் வழியே செல்லுங்கள் சிங்கம் கூண்டிற்குள்ளேய இருக்கட்டும் என அந்த அப்பாவியை வழிகூட்டி அனுப்பியது நமக்கு பாதிப்பு ஏற்படும் நிலையில் கெடுதல் செய்பவர்களுக்கு உதவிசெய்திடவேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது

வெள்ளி, 23 நவம்பர், 2018

சரக்கு சேவைவரியின் கீழான மின்வழிபட்டியல் எனும் வசதி


மின்வழிபட்டியல்( E-wayBill) என்பது சரக்கு சேவை வரியின் கீழ் பொருளின் மதிப்பு ரூ.50000/-இற்கு மேல் இருந்தால் கண்டிப்பாக பொருந்தும் அதற்கு குறைவாக இருந்தால் விருப்பபட்டால் மட்டும் பயன்படுத்தி கொள்க பொருள் வழங்குபவர் இருக்கும் இடத்திற்கும் பொருளினை பெறுபவரின் இடத்திற்கும் இடைபட்டதூரம் பத்துகிலோமீட்டர் வரையிலும் தேவையில்லை அவ்வாறே இருவரும் ஒருமாநிலமென்றாலும் தேவையில்லை விற்பணையாகும் அனைத்து பொருட்களும் இந்த மின்வழிபட்டியல் விற்பணைபட்டியல்அல்லது பொருள்வழங்கும் பட்டியலுடன் மட்டுமே எடுத்து செல்லவேண்டும் இந்த மின்வழிபட்டியலானது பகுதி அ (Part A) ,பகுதி ஆ (Part B) ஆகிய இருபகுதிகளைகொண்டது பகுதி அ (Part A) இல் பெறுபவரின் GSTIN எண், வழங்குவதற்காக கொண்டுசெல்லும் இடத்தின் பெயர்(Place of delivery), விற்பணை பட்டியலின் அல்லது பொருள் வழங்கும் பட்டியலின் எண் (Invoice/DC No), விற்பணை பட்டியலின் அல்லது பொருள் வழங்கும் பட்டியலின் நாள் (Invoice/DC date), பொருளின் மதிப்பு (Value of goods), அந்த பொருளிற்கான HSN குறியீட்டு எண் (Codeno) வாகணத்தின் ஆவணஎண் (Transporter Document No) ஆகிய விவரங்கள் உள்ளடங்கியிருக்கும் பகுதி ஆ (Part B) இல் இந்த பொருளை எடுத்துசெல்லும் வாகணத்தின் எண் (vehicle number) விவரம் குறிக்கப்பட்டிருக்கவேண்டும் இந்த மின்வழிபட்டியலானது தூரம் நூறு கிமீட்டர் எனில் ஒருநாள் செயலில் இருக்கும் அதற்குமேல் ஒவ்வொரு நூறு கிமீட்டருக்கும் ஒவ்வொருநாள் கூட்டியவாறு செயலில் இருக்கும் ஒவ்வொரு விற்பணைபட்டியலிற்கும் ஒவ்வொரு மின்வழிபட்டியல் இருக்கவேண்டும் அதாவது ஒரு வாகணத்தில் எத்தனை( பொருட்கள் அன்று) விற்பணை பட்டியலிற்கான பொருட்கள் இருக்கின்றதோ அத்தனை மின்வழிபட்டியல் இருக்கவேண்டும் மாநிலங்களுக்கு இடையேயான பொருட்களின் விற்பணைக்கு 1.02. 2018 முதல் கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும் மாநிலத்திற்குள் அல்லது மாநிலங்களுக்கு இடையே என அனைத்து பொருள் போக்குவரத்திற்கும் எனில் 1.06.2018முதல் கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும் இணையதளத்தில் GST INV-1 என்ற படிவத்திற்கான விவரங்களை வழங்கினால் EWB-01எனும் இந்தமின்வழிபட்டியல் தானாகவே உருவாக்கப்பட்டு நாம் அச்சிடுவதற்கு தயாராகி விடும் ஒருங்கிணைந்த பட்டியலே EWB-01ஆகும் இடையில் வாகணத்தினை நிறுத்தி ஆய்வுசெய்திடும்போது EWB-03என்ற பட்டியிலின்பகுதி அவில் பதிவாகும் அரைமணிநேரத்திற்குமேல் வாகணம் தடைபடுமானால் உடன் வாகணஉரிமையாளர் EWB-04 என்ற படிவத்தில் தங்களுடைய விவரங்களை சமர்ப்பிக்கவேண்டும்

சனி, 17 நவம்பர், 2018

எந்தவொரு பணியுடனும் கூடுதலாக நாம் செய்திடும் பணிஎன்றும் வீணாகாது


இருசக்கரவாகணம் பழுதுபார்ப்பு கடைவைத்திருந்தவரின் கடைக்கு ஒருவர் தன்னுடைய இருசக்கரவாகணத்தை பழுதுநீக்கம் செய்துதரும்படி கொண்டுவந்து விட்டிருந்தார் அந்த இருசக்கரவாகணத்தின் பழுதினை சரிசெய்ததோடு மட்டுமல்லாமல் அந்த இருசக்கர வாகணத்தினை கழுவி சுத்தம் செய்து புதிய இருசக்கரவாகணம் போன்று பளபளவென மின்னும்படி செய்தார் அந்த கடையின் சொந்தக்காரர் இதனை கண்ணுற்ற அருகிலிருந்த மற்ற கடைகாரர்கள்அவரைபார்த்து கோரிய பணியை மட்டும் செய்திடாமல்கோராத பணியையும் சேர்த்து செய்துள்ளாயேஅதனால் உனக்கு என்ன பயன் எனகிண்டல்செய்தனர் சரிபரவாயில்லை என்னுடைய மனதிருப்திக்காக நான்அவ்வாறுசெய்தேன் என பதிலிருத்தார் அந்த கடைகாரர் அதன்பின்னர் அந்தஇருசக்கரவாகணத்தின் சொந்தக்காரர் வந்து தன்னுடைய வண்டியை பார்த்தபோது அதனுடைய பழுதுமட்டும் நீக்கியதுமட்டுமல்லாது அவருடைய இருசக்கரவாகணத்தைய புதியதாக தோன்றிடுமாறு செய்துள்ளதை பார்த்து மிகவும் ஆச்சரியத்துடன் அவருடைய விசுவாசத்தை பராட்டி தன்னுடைய நிறுவனத்திற்கு தேவையான அனைத்து பணிகளையும் அந்த கடைகாரருக்கு வழங்கி கெளரவித்தார் எந்தவொரு பணியுடனும் கூடுதலாக நாம் செய்திடும் பணிஎன்றும் வீணாகாது என்ற கருத்தினை மனதில்கொள்க

சனி, 10 நவம்பர், 2018

சமூக வலைதளங்களிலும் சந்தைப்படுத்தலிலும் தற்போதைய போக்குகள்


நம்முடையநிறுவனத்தின் உற்பத்தி பொருட்களையும் சேவைகளையும் மிகச்சரியான பயனாளிகளுக்கு கொண்டுசேர்ப்பதற்காக சமூக ஊடகங்களை பயனுள்ள முறையில் பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய நிறுவனத்தினைமிக வெற்றிகரமான நிறுவனமாக கொண்டுசெல்லமுடியும்அது மிகப்பெரியபயனுடையதாக இருந்தாலும் நாம் விரும்பும் விதமாக துல்லியமாக இருந்திடுமாறு மாற்றியமைத்திடவேண்டும் இவற்றிற்கு அடிப்படையாக சமூக ஊடகங்கள், சந்தை போக்குகள் ஆகியவைமிகச் சிறந்தகாரணிளாக இருப்பதால் அவற்றுள் ஆதிக்கம் செலுத்தக்கூடியவற்றை மட்டும் தற்போது காண்போம் 1 இணையத்தில் சொந்த இடத்தில் விளம்பரம் செய்வதா வாடகை இடத்தில் விளம்பரம் செய்வதா என்பதேமுதல் காரணியாகும் முகநூல் போன்ற சமூகவலைதளங்களில் விளம்பரம் செய்வது வாடகைஇடமாகும் இவ்வாாறன அதிக வாடகை செலவுகொண்ட இந்த வாடகைஇடத்தின்வாயிலாக விளம்பரம் செய்வது எண்ணற்ற பயனாளர்களை கைகொள்ளும் உத்தியாக இருந்தாலும் இதற்கான செலவு மிகஅதிமாகும் நம்முடைய சொந்த இணையபக்கத்தில்அல்லது வலைதளத்தில் விளம்பரம் செய்வது சொந்த இடவிளம்பரமாகும் இதன் வாயிலாக மிககுறைந்த பயனாளர்களின் கவணத்தையே கவரமுடியும் என்றாலும் மிககுறைவான செலவாகும் அதனால் இரண்டையும் சீர்தூக்கி சமன்செய்து நமக்கு பொருத்தமானதை மிகச்சரியானதை தெரிவுசெய்து கொள்க 2. இரண்டாவதாக தற்போதைய டிஜிட்டல் சந்தைபடுத்துதலில் செய்திகள் தகவல்தொடர்புகள் அனைத்தும் காணாது கரைந்து தொலைந்து போவதே மிகப்பெரிய சிக்கலாக சவாலாக உள்ளது அவ்வாறு காணாமல் கரைந்து தொலைந்து போகாமல் சரியான நபருக்கு சரியான செய்தியைத் சரியான நேரத்தில் சென்றடையுமாறு செய்வதே இந்த பயனாளிகளிடம நேரடி விளம்பரம்திட்டமாகும் இதன்வாயிலாக சந்தைபடுத்துதலின் செலவு குறையவும் நம்முடைய நோக்கம் நிறைவேறவும் வழிவகுக்கின்றது. 3 மூன்றாவதாக quora and meet.com. என்பது போன்ற வாடிக்கையாளர்களின் இணைய வலைபின்னல் வாய்ப்புகளை நம்முடைய உற்பத்தி பொருட்களுக்கும் சேவைகளுக்கும் மிகச்சரியாக பயன்படுத்தி கொள்வது நம்முடைய நிறுவனத்தினை வெற்றிகரமாக செய்வதற்கு மிகப்பெரிய பங்காற்றுகின்றது 4 நான்காவதாக போட்களின் வாயிலான சந்தைபடுத்துதலாகும் போட் என்பது இணையத்தில் தானியங்கு பணிகளை இயக்க வடிவமைக்கப்பட்டமிகச்சிறந்த மென்பொருளாகும். இயல்பிலேயே மீண்டும் மீண்டும் இயங்கக்கூடிய மற்றும் எளிமையான பணிகளைச் செய்வதற்குத் தெரிவுசெய்யப்படுகின்றன. எனவே, நாம் நம்முடைய உற்பத்தி பொருட்களுக்கும் சேவைகளுக்கும் ஆன செய்திகளை பரப்புவதில் ஆர்வம் கொண்டால், பல சாத்தியமான வாடிக்கையாளர்களையும் வாசகர்களையும் முடிந்தவரை கவருவதற்கு, இந்த போட்களை பயன்படுத்தி கொள்வது மிகச்சிறந்த வழியாகும்

திங்கள், 5 நவம்பர், 2018

வாய்ப்பு நம்முடைய வீட்டின் கதவினை ஒரு முறை மட்டுமே தட்டும்


பத்தொன்பதாம் நூற்றாண்டில் மெழுகுவர்த்தி வியாபாரத்தில் சிறந்த விற்பனையாளராகவும் மிகப்பிரபலமான முன்னனி நிறுவனமாகவும் பிராக்டர் அண்ட் கேம்பிள் என்ற நிறுவனம் இருந்துவந்தது இந்நிலையில் கி பி1879 ஆம் ஆண்டில் தாமஸ் அல்வா எடிசன் எனும் அறிவியல் அறிஞர் மின்சாரத்தால் எரியும் மின்விளக்கை கண்டுபிடித்தார் அதன்பின்னர்பொதுமக்கள் அனைவரும் தங்களுடையை வீடுகளில் இரவில் வெளிச்சம் தருவதற்காக மெழுகுவர்த்தி பயன்படுத்திடும் வழக்கொழிந்து அதற்கு பதிலாக மின்விளக்குகளை வாங்கி பயன்படுத்த ஆரம்பித்தனர் அதனால் கிறிஸ்துமஸ் விழா போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு மட்டுமே இந்த மெழுகு வர்த்தியை வாங்குவது தவிர மற்றநாட்களில் பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய அனைத்து தேவைகளுக்கும் மெழுகுவர்த்திவாங்குவதை அறவே தவிர்த்ததால் மெழுகுவர்த்தி வியாபாரம் வீழ்ச்சியடைந்தது அதனால் சின்சினாட்டி என்ற நகரில் இருந்த இந்த பிராக்டர் அண்ட் கேம்பிள் என்ற நிறுவனம் போதுமான வருமானம் இல்லாமல் திவாலாகும் நிலையில் போராடிக் கொண்டிருந்தது அதனை தொடர்ந்து இந்நிறுவனமானது எப்படிஇந்த நிலையிலிருந்து மீண்டு எழுவது அல்லது இந்த நிறுவனத்தையே மூடிவிடலாமா என்ற மிகவும் சிக்கலான நிலையில் தத்தளித்து கொண்டிருந்தது இவ்வாறான நிலையில் ஒருநாள் அந்நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்ஒருவர் தாம் இயக்கிக் கொண்டிருந்த இயந்திரத்தினை உணவு இடைவேளையின்போது மறதியாக நிறுத்தம் செய்திடாமல் அப்படியே வி்ட்டுவிட்டுசென்றார் பின்னர் அவர்மதியஉணவு இடைவேளை முடிந்து திரும்பிவந்து பாரத்தபோது அவர் இயக்கிகொண்டிருந்த இயந்திரமும் பணிபுரிந்த இடமும் நொப்பும் நுரையுமாக காற்று குமிழிகள் நிரப்பப்பட்டவாறு முழுகிஇருந்தன உடன் அந்த தொழிலாளியுடன் பணிபுரிந்த மிகுதி அனைவரும் இத்தோடு அந்த தொழிலாளியின் கதைமுடிந்தது அவரை வேலையைவிட்டு நீக்கிவிடுவார் என அச்சத்துடன் பார்த்து கொண்டிருந்தவேளையில் நிறுவனத்தின் முதலாளி அங்குவந்து அந்த சூழலை பார்வையிட்டார் அதனை தொடர்ந்து இவ்வளவு நுறையடன் காற்றுக்குமிழிகள்ஏன் உருவாகியது நாம் குளிப்பதற்கு பயன்படுத்திடும் சோப்பினை இதிலிருந்து ஏன் தயார் செய்யக்கூடாதுஎன வித்தியாசமாக சிந்தித்தார் அதனடிப்படையில் ஐவரி எனும் குளியல் சோப்பு உருவானது அந்நகரத்திற்கு அருகில் ஓடிக்கொண்டிருந்த ஓகியோஎன்ற ஆற்றில் குளிக்கும்போது பயன்படுத்திடும் மிதக்கும் சோப்பு அதன்மூலம் கிடைத்தது அந்நகரம் மட்டுமல்லாது அந்நாடுமுழுவதும்பொதுமக்கள் பிராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனத்தின் ஐவரி எனும் இந்த புதிய குளியல் சோப்பினை பயன்படுத்திட துவங்கியதால் குளியல் சோப்பு வியாபாரத்தில் பிராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனம் ஒரு சிறந்தவிற்பனையாளராக உயர்ந்து முக்கிய தூணாக மாறியது இந்த பிராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனத்தில் தோன்றிய இவ்வாறான அசம்பாவிதங்கள் அல்லது வெளித்தோற்றத்தில் (unsurmountable) ஏதேனும் பிரச்சினைகள் எழும்போது அதனை அப்படியே தீர்வுசெய்து விட்டுவிடாதீர்கள் ஏனெனில் அந்த பிரச்சினைக்கான தீர்வினை படைப்பாற்றலாக மாறிடுமாறு வித்தியாசமாக சி்ந்தித்து ஒரு தங்க சுரங்கம்போன்ற புதிய வெற்றி வாய்ப்பாக இதனை மாற்றிக்கொள்ளமுடியும் . இதனைபோன்ற வாய்ப்பு நம்முடைய வீட்டின் கதவினை ஒரு முறை மட்டுமே தட்டும் . அதை கைகொள்ள நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்!என்ற செய்தியை மனதில் கொள்க

சனி, 3 நவம்பர், 2018

வெற்றிக்கதை - ஒரு சாதாரண மனிதனும் முயற்சிசெய்தால் வாழ்க்கையில் மிகசிறந்த வெற்றியாளராக மலரமுடியும்


மைக்கேல் ஜோர்டான்என்பவர் நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் எனும் நகரின் ஒதுக்குபுறத்திலுள்ள குடிசைகளாலான பகுதியில், 1963 ஆம் ஆண்டு பிறந்தார். அவருக்கு நான்கு உடன்பிறப்புகள் இருந்தனர் அதனால் அவரது தந்தையின் வருவாய் முழுவதும் குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை. அதனை தொடர்ந்து அவர் ஒரு சாதாரண ஏழை குடும்பஉறுப்பினராக மிகவும் நம்பிக்கையற்ற எதிர்காலத்தை நோக்கி வாழ்ந்துவந்தார். அவருடைய 13 ஆவது வயதில் அவரது தந்தையானவர் மைக்கேல் ஜோர்டனிடம் பயன்படுத்திய ஆடை ஒன்றை கொடுத்து: " இந்த ஆடையின் மதிப்பு எவ்வளவாக இருக்கும்?" எனவினவினார் அதற்கு ஜோர்டான் , " இது ஒரு டாலர் மதிப்பிருக்கும்." என பதில் கூறியதை தொடர்ந்து அவரது தந்தை, " இந்த பயன்படுத்திய ஆடையை இரண்டு டாலர்களுக்கு உன்னால் விற்க முடியுமா? அவ்வாறு இரண்டு டாலர்கள்விலைக்கு இதை விற்க முடியும் என்றால்,நம்முடைய குடும்பத்திற்கு தற்போது பேருதவியாகும்." எனகோரினார் உடன் ஜோர்டான், "அப்பா! நீங்கள் கோரியவாறு இதனை விர்பணை செய்வதற்கு நான் முயற்சி செய்கிறேன், ஆனால் என்னால் அதற்கு உத்தரவாதம் எதுவும் தரமுடியாது ." என்றுகூறி அந்த பயன்படுத்தி ஆடையை நன்கு துவைத்து காயவைத்து மடிப்பாக செய்து மடித்து.வைத்தார் அடுத்த நாள், அவர் அருகிலிருந்த கூட்டம் மிகுந்த சந்தைக்கு அதனை எடுத்துசென்று. ஆறு மணி நேரத்திற்கு மேல் அதனுடைய விலையை கூவிதிரிந்து கொண்டிருந்தார் இறுதியாகஅவருடைய தந்தை கூறிய 2 டாலர்விலைக்கு அதை விற்க முடிந்தது. அவர் அந்த இரண்டு டாலர் பணத்தினை எடுத்து கொண்டு வீட்டுக்கு ஓடிவந்து தன்னுடைய தந்தையிடம் மகிழ்ச்சியுடன் வழங்கினார். பின்னர், ஒருசில நாட்கள் கழித்து, அவரது தந்தை அவரிடம் மீண்டும் மற்றொரு பயன்படுத்திய ஆடையை, கொடுத்து "தற்போது இதனை நீ 20டாலருக்கு விற்க முடியுமா ? " என கோரினார் உடன் ப யத்தில், ஜோர்டான் "ஐயய்யோ!அது எப்படி சாத்தியம் இதனை நன்கு துவைத்து காயவைத்து மடிப்பாக செய்தாலே அதிகபட்சம் இரண்டு டாலர்கள் மட்டுமே கிடைக்கும்." என பதட்டத்துடன் பதிலிறுத்தார் அதனை தொடர்ந்து அவரது தந்தை, " நீ ஏன்புதியவழியில் முயற்சி செய்ய கூடாது? அவ்வாறாக இதனை 20டாலரில் விற்பணை செய்வதற்கு புதிய வழியில் முயற்சி செய்துதான் பாரேன் ." என அவரிடம் அந்த பழைய ஆடையை ஒப்படைத்தார் மைக்கேல் ஜோர்டான் அதிக பயத்தில் ஒரு சில மணி நேரம் அப்படியே உட்கார்ந்துவிடடார் பிறகு, இறுதியாக, அவருக்கு புதிய வித்தியாசமான யோசனை ஒன்று தோன்றியது அதனை செயல்படுத்தலாம் என முடிவுசெய்தார் அதாவது அந்த பழைய ஆடையை நன்கு துவைத்து காயவைத்து மடிப்பாக செய்துமடித்துவைத்த பின்னர் அருகிலிருந்த ஒரு ஓவியரிடம் மிக்கி மவுஸ் எனும் படத்தை அந்த ஆடையில் வரையச்செய்து அதற்காக அந்த ஓவியருக்கு 2 டாலர் வழங்குவதாக உறுதியளித்து சந்தைக்கு எடுத்து சென்றார் பணக்காரவீட்டு சிறுவன் ஒருவன் மிக்கிமவுஸின் ஓவியம் வரையப்பட்ட இந்த ஆடையைபார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சியுற்று தன்னுடைய பெற்றோரிடம் இந்த மிக்கிமவுஸ் வரையப்பெற்ற பழையஆடையை தனக்கு வாங்கிதருமாறு தொந்திரவு செய்ததை தொடர்ந்து இறுதியாக 25 டாலர்களுக்கு அதனை அந்த பணக்கார குடும்பத்திற்கு விற்பணைசெய்தார் இந்த தொகை ஜோர்டானுடைய தந்தையின் ஒரு மாத ஊதியத்திற்கு சமமாகும். அதனால் ஜொர்டானும் அவருடைய வீட்டில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் மிகவும் மகிழ்சியுற்றனர் அதன்பின்னர் அவரது தந்தை மீண்டும் மற்றொரு பயன்படுத்திய ஆடையை கொடுத்து, "நீ இதனை 200 டாலர்கள் என்ற விலையில் மறுவிற்பனை முடியுமா?" எனக்கோரினார் ஜோர்டான் மிகவும் மகிழ்ச்சியாக" ஏன்முடியாது" என சிறிதும் மிகவும் தைரியமாக சந்தேகம் எதுவும் இல்லாமல் ஏற்று கொண்டார். ஒருசில நாட்கள் கழித்து அவர்கள் வாழ்ந்துவந்த நகரத்திற்கு ஒரு பிரபல திரைப்பட நடிகை படப்பிடிப்பிற்காக வந்தார் பத்திரிகையாளர்களை தவிர யாரும் அந்த நடிகையின் அருகில் செல்லமுடியாதஅளவு பாதுகாப்பு இருந்தது இருந்தாலும் ஜோர்டான் பிரபல நடிகையின் அருகில் எப்படியோ போய்சேர்ந்து தான் வைத்திருக்கும்பழைய ஆடையில் . அவருடைய கையெழுத்தினை (ஆட்டோகிராப்பை)கோரினார் அப்பாவி தோற்றத்துடன் இருந்த ஜொர்டானை பார்த்து,மகிழ்ச்சியுடன் பழையபயன்படுத்திய ஆடையில் அந்த பிரபல நடிகையானவர் தன்னுடைய கையெழுத்தினை இட்டார் உடன் மிகவும் மகிழ்ச்சியாக கூட்டத்தைவிட்டு வெளியேவந்த ஜொர்டான் பின்னர் சந்தையில் சென்று பிரபலநடிகை கையெழுத்திட்ட அந்த ஆடையை ஏலத்தில் விற்பணைசெய்வதாகவும் குறைந்தபட்ச விற்பனை விலை 200 டாலர்கள் ஆகும்!" எனக்கூவினார் உடன் சந்தையில் இருந்தவர்கள் நான் நீ என போட்டிபோட்டு கொண்டு ஏலத்தின் விலையைஉயர்த்தி கொண்டேசென்று இறுதியில் 1,200 டாலர்கள் என்ற விலையில் ஒரு தொழிலதிபர், ஏலம் எடுத்தார்! விற்பனைத்தொகையான 1200 டாலர்களுடன் வீட்டிற்கு சென்றபோது குடும்ப உறுப்பினர் அனைவரும் மிகவும்மகிழ்ச்சியாக கொண்டாடினர் மிகமுக்கியமாக அவரது தந்தை கண்ணீர் மல்க , " மகனே நீ கண்டிப்பாக வாழ்க்கையின் உச்சத்திற்கு செல்வாய்"என அவரை வாழ்த்தினார் அவருடைய தந்தையின் இந்த வாழ்த்து செய்தியை அடிப்படையாக கொண்டு மைக்கேல் ஜோர்டான் என்பவர் தனக்கு பிடித்தமான கூடைபந்து விளையாட்டினை முழுநம்பிக்கையுடன் கற்று மிக பெரிய பிரபலமான கூடைப்பந்து வீரராக உயர்ந்தார் வாழ்க்கையில் வெற்றிபெறவேண்டும் என்ற மனமிருந்தால்போதும் நாம் முயற்சிசெய்து வாழ்க்கையில் மிகசிறந்த வெற்றியாளராக மலரமுடியும் என்பது திண்ணம்

வியாழன், 1 நவம்பர், 2018

இந்தியாவில் தொடக்கத் தொழில் திட்டம்(Startup Scheme)


இந்திய அரசாங்கம் கடந்த சில ஆண்டுகளில் 50இற்கும் மேற்பட்ட + தொடக்கத் தொழில் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு தொடக்கத் தொழில் திட்டமும் இந்திய தொழில் தொடக்க சூழலை மேம்படுத்தும் நோக்கம் கொண்டதாகும் . தற்போது இந்தியாவில் 4,400 மேற்பட்ட தொழில்நுட்பங்கள் இந்த தொடக்கத் தொழில் திட்டங்களின் பட்டியிலில் உள்ளன, மேலும் இந்த எண்ணிக்கை 2020 க்குள் 12,000 க்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறான தொடக்கத்தொழில் திட்ட திறனாளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அமெரிக்காவும் பிரிட்டனும் முதலிரண்டு இடங்களில் உள்ளன இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும், அதன் உலகளாவிய தொழில்சாம்ராஜ்ஜியங்களுக்கு ஏற்ப, இந்தியா பெருமையடைவதற்கு அதன் சொந்த பில்லியன் டாலர் கிளப் என்பது உள்ளது. இதில் ஃபிளிப்கார்ட், ஸ்நாப்சீல், ஓலா, இன்மொபி, பேடிம் போன்ற தொடக்கதொழில்களும் அடங்கும். தற்போது $ 100 மில்லியன் நிதி திரட்டல் மூலம், ஃபின் டெக்நிறுவனத்தின் மொபிகுவிக் என்ற தொடக்கத் தொழில் திட்டம் கூட இந்த யூனிகார்ன் கிளப்பில் சேர தயாராகவிருக்கின்றது அவ்வாறாயின் . இந்தியாவின் தற்போதைய தொடக்கத் தொழில் திட்டம் என்றால் என்ன என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழும் நிற்க இந்தியாவில் ஒரு நிறுவனம் ஆனது 1.பொதுவான தொழில் எனில் ஏழு ஆண்டுகளுக்குள், உயிரி தொழில்நுட்பம் எனில் பத்தாண்டுகளுக்குள், 2.முந்தைய நிதியாண்டின் ஏதேனும் ஒரு வருடத்தில் வருட வருமானம் ரூ 25 கோடிக்கு மிகாமல், 3புத்தாக்கங்கள் அல்லது செயல்முறைகள் அல்லது சேவைகளின் புதுமை, மேம்பாடு அல்லது முன்னேற்றம், அல்லது ஒரு உயர்ந்த தொழில் முனைவோர் அல்லது வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் அல்லது செல்வத்தை உருவாக்குதல் ஆகியவற்றை ஏற்படுத்துதல், ஆகிய நிபந்தனைக்களுக்குட்பட்டு துவக்கப்பட்ட அல்லது பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு நிறுவனமும் தொடக்கத் தொழில் நிறுவனம் ஆகும். இந்த வரையறைக்குட்பட்ட நிறுவனம் இந்த நோக்கத்திற்காக அமைக்கும் இடைநிலை மந்திரி சபைகுழுவிடமிருந்து சான்றிதழைப் பெற்றுக் கொண்டபின், இந்த தொடக்கதொழில்நிலைக்கான வரி சலுகைகள் பெற தகுதியுடையதாக இருக்கும் ஆயினும் இந்த நிபந்தனைகளை பூரத்தி செய்வதற்காக ஏற்கனவே உள்ள ஒரு வியாபாரநிறுவனத்தினை பிரிப்பது அல்லது புனரமைப்பு செய்வதன் மூலம் அத்தகைய தொடக்கதொழில் நிறுவனம் அமைக்கப்பட்டதாக இருக்ககூடாது மேலு்ம்முந்தைய நிதியாண்டிற்கான வருவாய் 25 கோடியைக் கடந்துவிட்டிருந்தாலும் இணைத்தல் அல்லது பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து பொதுவான தொழில் எனில் 7 வருடங்கள் நிறைவு செய்யப்பட்டிருந்தாலும் , உயிரி தொழில்நுட்பம் எனில் பத்து வருடங்கள் நிறைவு செய்யப்பட்டிருந்தாலும் தொடக்கதொழில் என்ற வரையறைக்குள் வராது.

புதன், 31 அக்டோபர், 2018

GeM என சுருக்கமாக அழைக்கப்படும் அரசுஇணைய சந்தை( அஇச)(Government E-Marketplace(GeM)) தொடர்


கடந்த 26.10.2018 அன்றைய தொடரில் இந்த அஇச வின் பொதுவான வசதி வாய்ப்புகளைபற்றி ஒரு அறிமுகத்தை மட்டும் கண்டோம் இந்த தொடரில் ஒரு சாதாரண உற்புத்தியாளர் அல்லது விற்பணையாளர் இந்த இணையசந்தையில் எவ்வாறு பதிவுசெய்து தங்களுடைய பொருளை விற்பணைசெய்வது என்றவிவரத்தை காண்போம் தற்போது நடைமுறையில் இதுவரை ஒரு உற்பத்தியாளர் அல்லது விற்பணையாளர் தன்னுடைய பொருளை அரசிற்கும் அரசுசார்ந்த நிறுவனங்களுக்கும் விற்பணைசெய்திடவிரும்பினால் அவர் ஒவ்வொரு துறையிலும் இதற்கென பராமரிக்கப்படும் விற்பணையாளர் பட்டியலில்(Vendor List) தன்னுடைய பெயரையும் சேர்த்திடுமாறு குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது விண்ணப்பிக்கவேண்டும் அதனடிப்படையில் இவ்வாறு பதிவுசெய்பவர்களுக்கு தொடர்புடைய துறையிலிருந்து விலைப்புள்ளி கோருவதற்கான வாய்ப்பு கிடைத்திடும் அவ்வாறான நடைமுறையை மாற்றி இந்த அரசுஇணைய சந்தை( அஇச)(Government E-Marketplace(GeM)) எனும் இணையசந்தையில் தங்களைபற்றிய விவரங்களை ஒருமுறை மட்டும் பதிவுசெய்துகொண்டால் போதும் இந்தியாமுழுவதுமுள்ள அனைத்து அரசுசார்ந்த நிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும் தேவையான அனைத்துப் பொருட்களையும் அல்லது சேவைகளையும் இந்த தளத்தின் வாயிலாக விற்பணைசெய்திடலாம் என்ற புதிய வசதியை தற்போது இந்த இணையதளம் அளிக்கின்றது பொதுவாக பொருளை உற்பத்தி செய்பவர்கள் அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் அல்லது மறுவிற்பணையாளர்கள் இந்த திறந்த சந்தையில் தங்களுடைய பொருளை எளிதாக விற்பணைசெய்திடலாம் இதில் பதிவு செய்துகொள்வதற்காக தங்களுடைய ஆதார் எண், மின்கையொப்பம் சரக்குசேவைவரி தளத்தில் பதிவுசெய்துகொண்ட விவரங்களுடன் தங்களைபற்றியும் தாம் விற்பணைசெய்யவுள்ள பொருளைபற்றிய முழுவிவரங்களையும் அதன் மாதிரி படங்களுடன் ஒருமுறைமட்டும் வழங்கப்படும் கடவுச்சொற்களின்(One Time Password(OTP)) வாயிலாக பதிவுசெய்து கொள்ளவேண்டும் மிகமுக்கியமாக பொருட்களை கொள்முதல் செய்பவர்கள் இவ்வாறான உற்பத்தியாளர் அல்லது விற்பணையாளரை பற்றியும் அவர்களுடைய பொருட்களை பற்றியும் ஆன விவரங்களை எளிதாக அறிந்து கொளளும் பொருட்டு அப்பொருட்களை பற்றிய அனைத்து விவரங்களையும் அந்த பொருட்களின் உருவப்படங்களையும்சேர்த்து பதிவேற்றம் செய்து இணையத்தில் பட்டியலிடுமாறு செய்திடவேண்டும் ஒரு உற்பத்தியாளர் அல்லது விற்பணையாளர் தாம் உற்பத்தி அல்லது விற்பணை செய்திட விரும்பும் எத்தனை பொருட்களையும் இவ்வாறு பட்டியலிடுமாறு செய்திடமுடியும் இவ்வாறு பதிவுசெய்துகொண்டபின்னர் இந்த தளத்தில் நேரடியாக எதிர்மறைஏலத்தில் பங்குகொள்ளலாம் பொதுவாக பொருட்களை ஏலத்தின் வாயிலாக விற்பணை செய்திடும்போது குறைந்தபட்ச விலையிலிருந்து ஏலம் ஆரம்பிக்கப்பட்டு அதிகபட்சம் விலைவரை உயர்ந்து கொண்டேவந்து கடைசியாக யார்அதிகபட்ச விற்பணைவிலை கோரினாரோ அவருக்கு விற்பணைசெய்வதே நடைமுறையாகும் அதற்குமறுதலையாக இந்த அஇச(Gem)எனும் தளத்தில் கொள்முதல் செய்பவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களின் அதிகபட்ச கொள்முதல் விலையை கோருவதை தொடர்ந்து குறிப்பிட்ட பொருளை உற்பத்தி செய்பவர்கள்அல்லது விற்பணையாளர்கள் எதிர்மறைஏலத்தில் பங்குகொண்டு அதாவது அதிகபட்சவிலையிலிருந்து ஏலம் துவங்கிகுறைந்த பட்சவிலைவரை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்து கடைசியாக யார்மிகவும் குறைந்தவிலை கோரினாரோ அவரிடமிருந்து குறிப்பிட்ட பொருளை கொள்முதல் செய்வதாக ஏலம் முடிவிற்கு வரும் இதனை பொருட்களை கொள்முதல் செய்வதில் எதிர்மறைஏலம் (Reverse Auction)என அழைக்கப்படும் இந்த எதிர்மறை ஏலத்தில் கோரப்படும் பொருளை வழங்க தயாராக இருக்கும் 7 நாட்களுக்கமுன் பதிவு செய்து கொண்ட உற்பத்தியாளர் அல்லது விற்பணையாளர் மட்டுமே இந்த எதிர்மறை ஏலத்தில் பங்குகொள்ளமுடியும் இந்த எதிரமறை ஏலத்தின் போக்கை நேரடியாக திரையில் உற்பத்தியாளர் அல்லதுவிற்பணையாளர் காணமுடியும் இவ்வாறான ஏலத்தில் விற்பணைஉத்திரவுகிடைத்ததை இந்த இணைய தளமானது தொடர்புடைய உற்பத்தியாளர்களுக்கு அல்லது விற்பணையாளர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக நினைவூட்டிடும் செய்தி ஒன்றை அனுப்படும் அதனை தொடர்ந்து அந்த உற்பத்தியாளர்கள் அல்லது விற்பணையாளர்கள் தங்களுக்கு கிடைத்த கொள்முதல் உத்திரவினடிப்-படையில் தாம் விற்பணைசெய்திடவிரும்பும் பொருட்களுக்கான விற்பணை பட்டியலை இணையத்தின் வாயிலாகவே தயார்செய்து கொள்முதல் செய்பவரின் மின்னஞ்சல்முகவரிக்கு அனுப்பிடலாம் அதன்பிறகு தங்களுடைய பொருட்களை வழங்கி கொள்முதல் செய்பவர் அப்பொருளை ஏற்று கொண்ட பத்துநாட்களுக்குள் இணையத்தின் வாயிலாகவே இதற்கான தொகையை பெற்றுக்கொள்ளலாம் மேலும் எந்தவொரு பயனாளரும் தங்களுக்க எழும்எந்தவொரு சந்தேகத்தையும் தீர்வுசெய்துகொள்வதற்கு அலுவலக நேரத்தில் இந்த தளத்தின் 1-800-102-3436 (1-800-102-E-GEM)என்ற உதவிபகுதியை அனுகலாம் மேலும் விவரங்களுக்கு https://gem.gov.in/ என்ற இணையமுகவரிக்கு சென்ற அறிந்து பயன்பெறுக

செவ்வாய், 30 அக்டோபர், 2018

யார் விவேகமுள்ள அதிகபுத்திசாலியான மகன்


ஒரு நாட்டில் அரசன் ஒருவன் அரசாட்சி செய்துவந்தான் அவனுக்கு இரு மகன்கள் இருந்தனர் அரசன் மிகநல்ல அரசாட்சியை மக்களுக்கு வழங்கிவந்தான் தன்னுடைய மகன்கள் இருவருக்கும் நல்ல குருவை அமர்த்தி நல்ல பயிற்சி அளித்துவந்தான் அரசன் நோய்வாய்பட்டு படுக்கையாகஇருந்தான் அதனால் தன்னுடைய இருமகன்களில் ஒருமகனுக்கு தனக்கு பிறகு அரசாளுவதற்கு முடிசூட்ட விரும்பினான் அரசன் அதனால் இருமகன்களையும் அழைத்து அரண்மனையிலிருந்த இரண்டு காலியான அறைகளை ஆளுக்கொன்று ஒதுக்கி அவர்கள் விரும்பிய பொருட்களை காலிஇடம் விடாமல் அந்த அறைமுழுவதும் நிரப்பும்படியும் அதற்காக யாரிடமும் ஆலோசனைகளை கேட்ககூடாது என்ற நிபந்தனையுடன் போட்டியொன்றினை நடத்தினான் மறுநாள் அரசன் மூத்தமகனுக்கு ஒதுக்கிய அறைக்குள் சென்ற பார்வையிட்டபோது அறைமுழுவதும் நெல் அறுவடை செய்தபின்மிகுதி கழிவாக இருக்கும் வைக்கோலை நிரப்பியிருந்ததை பார்வையிட்டான் சரி இரண்டாவது மகன் என்ன செய்துள்ளான் என இரண்டாவது அறைக்குசெல்லலாம் என முயலும்போது அந்த அறைபூட்டியிருந்தது கதவை தட்டி திறந்தபோது ஒரே இருட்டாக இருந்தது அரசன் உள்நுழைந்தவுடன் இளையமகன் மெழுகுவர்த்திஏற்றினான் உடன் இருள்நிறைந்த அறையானது முழுவதும் வெளிச்சம் பரவியது அதனை தொடர்ந்து இரண்டாவது மகனே பொருத்தமானவன் என இரண்டாவது மகனுக்கு முடிசூட்டி அரசனாக்கினான்

வெள்ளி, 26 அக்டோபர், 2018

அரசுஇணைய சந்தை( அஇச)(Government E-Marketplace(GeM))ஒரு அறிமுகம்


அரசின் அனைத்துபிரிவுகளும் அரசுநிறுவனங்களும் தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் கொள்முதல் செய்வதற்காக அரசுஇணைய சந்தை(Government E-Marketplace) சுருக்கமாக ( அஇச (GeM))எனும் இணையத்தை பராமரித்துவருகின்றது .இதில் மிககுறைந்த அளவு மனித தலையீடுடன் முழுவதும் காகித பயன்பாடு எதுவும் இல்லாத ரொக்க புழக்கமில்லாத பொதுவாக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களையம் சேவைகளையும் பெறுவதற்கு இது உறுதுனையாக இருக்கின்றது . அரசாங்கம் அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் வழக்கமாக தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தனித்தனியாக டென்டர் எதுவும் கோராமல் நேரடியாக இந்த ( அஇச (GeM))எனும் இணையதளசந்தையின் வாயிலாக கொள்முதல் செய்துகொள்ளலாம் இதன் வசதி வாய்ப்புகள் பின்வருமாறு 1.இதுவரை இந்த அரசுஇணைய சந்தையில்( அஇச) சுமார் 4000 பொருட்களின் விற்பணையாளர்கள் 31000 பொருட்களையும் 17 சேவைகளையும் பதிவுசெய்துள்ளனர் 2.இந்த இணையதளத்தின் வாயிலாக பொருட்களை கொள்முதல்செய்வது மட்டுமல்லாது இந்நடவடிக்கைக்கான தொகையையும் இணையத்தின் வாயிலாகவே பரிமாறிகொள்ளலாம் 3. இந்தஇணைய தளத்தில் தாம் விரும்பும் பொருட்களை கொள்முதல் செய்வதற்காக தங்களுடைய ஆதார் அட்டைஎண், கைவிரல்ரேகைபதிவேற்றம் செய்தல் பதிபெற்ற மின்னஞ்சல் முகவரி போன்றவைகளுடன் Electroning Data Interchange(EDI)இன்வாயிலாக பதிவு செய்து கொள்ளவேண்டும் 4. இதில் விற்பணையாளர்களும் சேவையவழங்குபவர்களும் தாங்கள் விற்பணைசெய்திட விரும்பும் பொருட்களின் அல்லது வழங்கவிரும்பும் சேவைகளின் விவரங்களை தங்களுடைய ஆதார் எண், வருமானவரி கணக்குஎண், நிறுவனங்களாக பதிவுசெய்த எண் ஆகியவற்றுடன் சுயசான்றிதழுடன் இந்த இணையதளத்தில் பதவிசெய்து கொள்ளவேண்டும் 5 அனைத்து அரசுதுறைகளும் பொதுத்துறை நிறுவனங்களும் தங்களுக்கு தேவையான பொருட்களை சேவைகளை பெறுவதற்காக டெண்டர் வழி-முறைகளையும் விதிமுறைகளையும் பின்பற்றி அதிக காலவிரையத்தையும் மனித உழைப்பையும் வீணாக்காமல் எப்போது வேண்டுமானாலும் மிகவிரைவாக தேவையானபோது உடனடியாக இந்த ( அஇச (GeM))எனும் இணையசந்தையின் வாயிலாக கொள்முதல் செய்துகொள்ளலாம் 6இதில் பதிவுசெய்வதற்காக நேரடியாக எங்கும் செல்லத்தவையில்லை அல்லது காகித ஆவணங்கள் எதுவும் அதிகம்பயன்படுத்திடத்தேவையில்லை 7 தங்களின் பொருட்களை சேவைகளை ஒரேமாதிரியானவகையில்தான் குறிப்பிடவேண்டும் என அதிக கட்டுபாடுகள் எதுவும் இல்லை அதற்குபதிலாக வேவ்வேறு பொருட்களுக்கும் சேவைகளுக்கும்ஏற்ப வெவ்வேறு வகையான குறைந்தபட்சதகுதிகள் இந்த இணையதளத்தில் பட்டியலிடபட்டுள்ளன அவைகளை பூர்த்தி செய்திடுமாறு மட்டும் தங்களுடைய பொருட்கள் சேவைகள் உள்ளதாவென சரிபார்த்து கொண்டால் போதும் 8.இந்த இணையதளம் நெகிழ்வு தன்மையுடன் விளங்குவதால் விற்பணையாளர்கள் தங்களுடைய பொருட்களின் மாதிரிகளில் அவ்வப்போது புதிய மாதிரிகளை அறிமுகபடுத்தி அதற்கேற்பதங்களுடைய பொருட்களின் விலைகளை இயக்கநேரத்தில் மாற்றியமைத்து கொள்ளலாம் 9. புதியவிற்பணையாளர்கூட எந்தவொருநேரத்திலும் அதாவது 24மணி-நேரமும் தங்களுடைய புதிய புதிய விற்பணைபொருட்களை அதன் விவரங்களுடனும் விலைகளுடனும் பதிவுசெய்து சந்தைபடுத்திடலாம் 10. இந்த இணையதளமானது விற்பணையாளர்களின் அனைத்துவகையான பொருட்களுடன் இயக்கநேரத்தில் நேரடி போட்டி இதில் இருப்பதால் கொள்முதல்செய்பவர்கள் தங்களுடைய தேவைக்கேற்ற பொருட்களை சேவைகளை தங்களுடைய பணவசதிக்கேற்ப பெற்றுகொள்ளலாம் இதில் வழக்கமான சந்தையைவிட 15 முதல் 20 சதவிகிதம் விலை குறைவாக பராமரிக்கபடுகின்றது நிறுவனங்கள் தங்களின் பேரம்பேசும் திறனை-கொண்டு அதைவிட குறைவான விலையில் தரமான பொருளை சேவையை இந்த இணையதளத்தின் வாயிலாக பெறமுடியும் 11 இந்த இணையதளமானது ஒளிவுமறைவற்ற தன்மையில் பராமரிக்கப்-படுவதால் பயனாளர்கள் தங்களுடைய தேவையை நேரடியாக இணையத்தில் பொருட்களைபற்றிய அனைத்துவிவரங்களையும் அறிந்து தெளிவு பெற்றஅல்லது திருப்தியுற்றபின்னர் கொள்முதல் செய்து கொள்ளமுடியும் 12 நிறுவனங்கள் தங்களின் எதிர்கால தேவையை கோரினால் அதற்கேற்ப பொருட்களின் சேவைகளின் வரையறை தரம் அளவு வழங்குபவரின் இருப்பிடமுகவரி எவ்வளவுநாட்களில் வழங்குவது என்பன போன்ற அனைத்தையும் இந்த இணையதளமானது திட்டமிட்டு அதற்கேற்ப அந்நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்கின்றது 13 பொதுவாக அனைவராலும் கொள்முதல் செய்யபடும் பொருட்களை தெரிவுசெய்தால் போதும் உடன் இந்த இணையதளமானது அது தொடர்பான விவரங்களையும் வழங்கதயாராக உள்ளவர்களின் விவரங்களையும் அவர்கள் அந்த பொருளுக்கு குறிப்பிட்டுள்ள விலை விவரங்களுடன் தானியங்கியாக இணையத்தில் நேரடியாகஒப்பீட்டு பட்டியல் ஒன்றினை தயார்செய்து திரையில் பிரதிபலிக்கசெய்கின்றது அந்த பட்டியலை பார்வையிட்டு தங்களுக்கு தேவையான அளவு பொருட்களை தேவையான வழங்குபவரிடம் பெற்றுகொள்ளமுடியும் 14. இவ்வாறு கொள்முதல் செய்திடமுடிவுசெய்தால் அதனை உடனடியாக இந்த இணையதளபக்கத்தின் வாயிலாக பொருட்களை பெறவும் அதற்கான தொகையை வழங்கவும் அதற்கான பொருட்களை பெற்றதற்கான , தொகையை பெற்றதற்கான அத்தாட்சியை நேரடியாக இந்த இணையதளத்தின் வாயிலாக பெற்றுகொள்ளமுடியும் 15. பொருட்கள் அல்லது சேவைகளுக்கான தொகை வழங்குவதற்காக Public Financial System(PFMS) உடன்இந்த இணையதளம் ஒருங்கிணைந்து செயல்படுமாறு கட்டமைக்கப்பட்டுள்ளதுஅதனால்தாம் கொள்முதல் செய்திடும் பொருட்களுக்குஅல்லது சேவைகளுக்குஎளிதாக இணையத்தின் வாயிலாக தொகையைவழங்கமுடியும் 16 இதில் பொருட்களை அல்லது சேவைகளை பெறுவதற்கும் வழங்குவதற்குமான பொதுவான நிபந்தனைகளை் சிறப்பு நிபந்தனைகளை போன்ற விவரங்களுடன்மேலும் அதிக விவரங்களை https://gem.gov.in/ என்ற இணையமுகவரிக்கு சென்ற அறிந்து பயன்பெறுக

வியாழன், 25 அக்டோபர், 2018

ஒருநபர் நிறுமம்(One person company(OPC))-2


நிறுமங்களின்சட்டம் 1956 ஆனது விடைபெற்று புதிய நிறுமங்களின் சட்டம் 2013 என்பதை நடைமுறை படுத்திடும்போது அதற்கான புதியதொரு பரிசாக ஒரு நபர் நிறுமம் (OPC) என்பதை இந்த புதிய நிறுமங்களின் சட்டம் 2013இல் அறிமுகப்படுத்தப்-பட்டுள்ளது . இந்த புதிய நிறுமங்களின் சட்டம் 2013 இன்படி எந்தவொரு தொழில் முனைவோரும் அதிக செலவில்லாமல் மிக குறைந்த முயற்சியில் எளிதாக புதியதான இந்த ஒரு நபர் நிறுமம் (OPC) ஒன்றை உருவாக்க முடியும் இந்த ஒரு நபர் நிறுமம் (OPC) என்பது ஒரு தனியுரிமையாளரின் உரிமைகளுடனும் கடமைகளுடனும் வணிகநிறுவனத்தின் பலண்களையும் ஒருங்கிணைத்து உருவாக்குவதாகும் இதில் ஒரேயொரு நபரே அந்நிறுவனத்தின் உறுப்பினர்ஆவார் அவரே அந்நிறுவனத்தின் இயக்குநராகவும் பங்குதாரராகவும் செயல்படும் உரிமையுடைவராகின்றார். இதன்வாயிலாக மிகச்சரியான ஒன்றிற்குமேற்பட்ட நபர்கள் ஒன்றாக சேர்ந்து வணிக நிறுவனத்தின் பலண்களுடன் புதிய தொழிலை துவங்கிடவேண்டும் எனும் பழைய கருத்தமைவுகள் மறைந்து எந்தவொரு தனிநபரான தொழில்முனைவோரும் தான்விரும்பிய புதிய தொழிலை செய்வதற்காக விரைவாகவும் மிக எளிதாகவும் ஒருநபர்நிறுமத்தை துவங்கி செயல்படுத்திடமுடியும் இந்த ஒருநபர் நிறுமத்தில் சட்டப்படியான பொறுப்புகளும் நிதிபொறுப்புகளும் அவ்வுறுப்பினருக்கு வரையறுக்கபட்டுள்ளது என்பதே இந்த ஒருநபர் நிறுமத்தினுடைய சிறந்த பயனாகும். அதனால் கூட்டான்மை நிறுவனத்தில் அல்லது தனிநபர் நிறுவனத்தில் அதன் உறுப்பினர்களுக்க சொந்த பொறுப்புகளும் உண்டு என்பது போன்றில்லாமல் இந்த ஒருநபர் நிறுமத்தின் அந்த தனிநபரின் பொறுப்புகள் வரையறுக்கப்பட்டு இருப்பதால் நிறுமத்தின் ஒரேயொரு உறுப்பினரான தனிநபர் அதிக கவலையின்றி தன்னுடைய தொழில் வளர்ச்சியில் மட்டும் கவணம்செலுத்தினால் போதுமானதாகும் என்ற சிறந்த வசதி கிடைக்கின்றது சட்டப்படியானவரையறை புதிய நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 2(62) இல் ஒரு நிறுமத்தில்ஒரேயொரு தனிநபர் மட்டுமே உறுப்பினாராவர் என இந்த ஒரு நபர் நிறுமத்தின் (OPC) சட்டப்படியானநிலையை வரையறுக்கின்றது இவ்வாறான ஒரு நபர் நிறுமத்தினை (OPC) நாம் எவ்வாறு துவக்குவது ஏறத்தாழ ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட(Private limited (Pvt)) நிறுமத்தை துவங்குவதைபோன்று ஆயினும் ஒருசில சிறியமாறுதல்களுடன் இந்த ஒரு நபர் நிறுமத்தினை(OPC) துவக்கிடும் செயல் அமைகின்றது ஒரு நபர் நிறுமம் (OPC) ஆனது தனிநபர் ஒருவர் ரூ.1,00,000/- முதலீட்டுடன் பதிவு செய்யப்படுகின்றது இதில் ஒரேயொரு தனிநபரே உறுப்பினராக பதிவுசெய்துகொள்ளவேண்டும் இந்த ஒருநபர் நிறுமத்தின்Memorandum of Association ஆனது அந்த தனிநபரின் பெயரில்மட்டுமேகண்டிப்பாக இருக்கவேண்டும் அதில் அந்த தனிநபர் இறந்துபோனால் அல்லது செயல்படமுடியாது போனால் அவருக்கு பதிலாக யார் செயல்பட-வேண்டும்என வேறொரு தனிநபரை நியமனதாரராக அல்லது வாரிசுதாரராக குறிப்பிட்டிருக்கவேண்டும் இவ்வாறாக குறிப்பிடப்படும் மற்றொரு தனிநபர் நியமனதாரரை அல்லது வாரிசுதாரரை இந்த உறுப்பினர் விருப்பபட்டால் எப்போது வேண்டுமானாலும் வேறொரு தனிநபர் நியமனதாரரை அல்லது வாரிசுதாரரை நிறுமங்களின்பதிவாளர் வாயிலாக மாற்றிகொள்ளமுடியும் இந்த ஒரு நபர் நிறுமத்தினை (OPC) துவங்கிடும்போது இந்நிறுமமானது 1.வரையறுக்கப்பட்ட பங்குமூலதனம் அல்லது 2.வரையறுக்கப்பட்ட உத்திரவாதம் அல்லது 3.வரையறுக்கப்படாத நிறுமம் ஆகிய மூன்றுவகைகளில் ஏதாவது ஒருவகையில் பதிவுசெய்து கொள்ளலாம் இந்த ஒரு நபர் நிறுமத்தின் (OPC) பெயரை குறிப்பிடும் பெயர்பலகையிலும் அல்லது பெயரினை அச்சிடும்போதும்அல்லது நிறுமத்தின் முத்திரையிலும் அல்லது எங்கெங்கு நிறுமத்தின் பெயரை குறிப்பிடபடுகின்றதோ அங்கெல்லாம் இந்நிறுமத்தின் பெயருடன் பிறையடைப்பிற்குள் தனியார் நிறுமத்தின் பெயருடன்Pvt எனக்குறிப்பிடுவதை போன்று ஒரு நபர் நிறுமம் (OPC)எனக்கண்டிப்பாக குறிப்பிடவேண்டும் தனிநபர் ஒருவர் ஒரேயொரு ஒரு நபர் நிறுமத்தினை (OPC)மட்டுமே துவங்கிட முடியும் மேலும்இந்தியாவில்வாழும்இந்திய குடிமகனாக இருப்பவர்மட்டுமேஇந்த ஒரு நபர் நிறுமத்தினை (OPC) துவங்கிடமுடியும் ஒரு நபர் நிறுமத்தினை (OPC) விதிவிலக்குகள் பின்வருமாறு நிறுமங்களின் சட்டம், விதி ஆகியவற்றின்படி ஒவ்வொரு ஆண்டும் கண்டிப்பாக ஆண்டுபொதுப்பேரவைகூட்டம் நடத்தப்படவேண்டும், சிறப்பு செயல்களுக்கான சிறப்பு பொதுப்பேரவைகூட்டம் நடத்தவேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகள் எதுவும் இந்த ஒரு நபர் நிறுமத்திற்கு (OPC) இல்லை இந்த ஒரு நபர் நிறுமத்தில் (OPC) குறைந்தபட்சம் ஒரு இயக்குநரும் அதிகபட்சம் 15 இயக்குநர்களும் நியமனம் செய்து செயல்படமுடியும் ஆயினும் ஒரேயொரு இயக்குநராக இருந்திடும்போது இயக்குநர்களின் குழுக்கூட்டம் நடத்திடும் விதிமுறையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது மிகமுக்கியமாக ஒரு காலண்டர் ஆண்டில் ஒவ்வொரு காலாண்டிற்கு ஒரு இயக்குநர்களின் குழுக்கூட்டம் என்பதற்கு பதிலாக ஒவ்வொரு அரையாண்டிற்கும் ஒரு இயக்குநர்களின் குழுக்கூட்டம் நடத்தப்படவேண்டும் அதனோடு அவ்வாறான இயக்குநர்களின் இரு குழுக்கூட்டங்களுக்கு இடையேயான காலஇடைவெளியானது 90 நாட்களுக்கு குறைவாக இருக்ககூடாது . இந்த ஒரு நபர் நிறுமத்தினை(OPC) பதிவுசெய்திடும்போது முதல் இயக்குநர்களின் குழு யார்யார் எனக்குறிப்பிடவேண்டிய அவசியமில்லை அதாவது நிறுமத்தின் ஒரேயொரு உறுப்பினரே இயக்குநராக கருதப்படுவார் ஒவ்வொரு நிதியாண்டு முடிவுற்றதும் அடுத்த நிதியாண்டின் செப்டம்பர் 30இற்குள் சமர்ப்பிக்கப்படும் ஆண்டறிக்கையுடன் ரொக்கஓட்ட அறிக்கை(Cashflowstatments) தயார்செய்து இணைக்க வேண்டிய தேவையில்லை மேலும்இவ்வாண்டறிக்கையில் நிறுமச்செயலர் கையொப்பமிட்டு சமர்ப்பிக்கத் தேவையில்லை அதற்குபதிலாக அவ்வுறுப்பினரான இயக்குநர்மட்டும் கையொப்பம்இட்டு சமர்ப்பித்தால் போதுமானதாகும் ஒரு நபர் நிறுமத்திற்கு (OPC) நிறுமங்கள்சட்டப் பிரிவு 101 கூட்டஅறிவிப்பு அனுப்புதல், பிரிவு 102 அக்கூட்டஅறிவிப்பில் அறிவிக்கைள் இணைத்து அனுப்புதல்,பிரிவு 103 கூட்டத்தின் குறைந்தபட்சஉறுப்பினர் கலந்துகொண்டிருக்கவேண்டும் எனும் நிபந்தனை, பிரிவு104 இன்படி அக்கூட்டத்தின் தலைவரை நியமித்தல்,பிரிவு105 கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பதிலாள் நியமித்தல் ,பிரிவு106 கூட்டத்தில் வாக்களிக்கும் உரிமையை கட்டுபடுத்துதல்,பிரிவு107 கைகளை உயர்த்துவதன் வாயிலாக அக்கூட்டத்தில் வாக்களித்தல், பிரிவு 108 மின்னனு வாக்களித்தல் , பிரிவு109 வாக்கிட்டுசீட்டின்வாயிலாக வாக்களிக்க கோருதல் ,பிரிவு 110 அஞ்சலக சீட்டு வாயிலாக கூட்டத்தில் வாக்களித்தல் , பிரிவு 111 கூட்டத்தீர்மாணங்கள் சுற்றுமுறையில் ஏற்புகை செய்தல் போன்றவை விலக்களிக்கப்படுகின்றன. ஒருநபர்நிறுமத்தின் முதலீடு ரூ.50 இலட்சத்தை விட உயர்ந்திடும்போதும் கடந்தமூன்றான்டுகளின் சராசரி ஆண்டு விற்பணை வருமானம் 2 கோடியைவிட உயர்ந்திடும்போதும் இந்த ஒருநபர்-நிறுமத்தினைதனியார் வரையறுக்கப்பட்ட (Pvt) நிறுமமாக மாற்றியமைத்து கொள்ளலாம் ஒரு நபர் நிறுமத்தில் (OPC) நிறுமம் வேறு அந்த நிறுமத்தின் உறுப்பினர் வேறு என உடைமை பிரித்தறியபடுகின்றது ஆனால்தனியுடைமைநிறுமத்தில் நிறுவனமும் தனிநபரும் ஒன்றாகவே கருதப்படுகின்றது அதாவது நிறுமத்தின் பொறுப்புகள் அந்த நிறுமத்திற்கு மட்டுமே அதாவது அதன் உறுப்பினரின் முதலீடு செய்த அளவிற்கு மட்டுமே சாரும் தனியுடைமைநிறுவனத்தில்பொறுப்புகளானது அந்த தனிநபரின் சொந்தபொறுப்பாக கருதப்படும் வரிவிதிப்பானது அந்த நிறுமத்தின் மீது மட்டுமே விதிக்கப்படும் தனியுடைமை நிறுவனத்தில் வரிவிதிப்பு அந்த தனிபரின்மீது விதிக்கப்படும் நிறுமங்களின் சட்டம் விதிகளின் படி பல்வேறு படிவங்களையும் அறிவிக்கைகளையும் நிறுமங்களின் பதிவாளரிடம் ஒருநபர்நிறுமம் கண்டிப்பாக குறிப்பிட்ட காலத்திற்குள் சமர்ப்பிக்கவேண்டும் தனியுடைமை நிறுவனத்தில் அவ்வாறான கட்டுப்பாடுகள்எதுவுமில்லை ஒன்றிற்குமேற்பட்டஅதாவது இருநபர்கள் இருந்தால்தான்கூட்டாளிகளின்நிறுவனமாக அல்லது கூட்டாண்மை நிறுவனமாக துவக்கமுடியும் தனிநபரொருவர் தனியுடைமை நிறுவனமாகத்தான் துவக்கமுடியும்என்ற சிக்கல்ஒழிந்து தனியொரு நபர்கூட தன்னுடைய தொழில்முனைவை இந்த ஒரு நபர் நிறுமத்தில் (OPC) வாயிலாக சிறப்பாக செயல்படமுடியும் என்பது திண்ணம்

புதன், 24 அக்டோபர், 2018

எந்தவொரு இக்கட்டான நிலையிலும் தளர்ந்துவிடாமல் விடாமுயற்சிசெய்தால் வெற்றிஎனும் இலக்கை அடையமுடியும்


சியிரோவோ ஹோண்டா என்பவர் வாகனங்களை பழுதுபார்த்திடும் மிகச்சிறியதொரு பணிமனையில் சாதாரணமான ஒரு பழுது பார்ப்பாளராக பணிபுரிந்துவந்தார்.அங்கு இவருடைய பணியானது அப்பணிமனைக்கு வரும்வாகணங்களைை பந்தயத்தில் கலந்துகொள்ளும் வகையில் மேம்படுத்துவது மட்டுமே ஆகும் அவ்வாறான நிலையில் இவர் 1937 ஆண்டு டோக்கியாய் சேக்கி என்ற நான்குசக்கரவாகனங்களில் இயங்கிடும் பிஸ்டன் வளையங்களை உற்பத்தி செய்திடும் நிறுவனத்தினை நிறுவுகைசெய்தார் இந்த நிறுவனமானது ஏற்கனவே செயலில் உள்ள டோயோட்டா எனும்நான்குசக்கரவாகண உற்பத்தி நிறுவனத்திற்கு தேவையான பிஸ்டன் வளையங்களை மட்டும் உற்பத்தி செய்து வழங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றினை பெற்று அதனை செயல்படுத்திவந்தது. ஆனால் இந்த நிறுவனத்தில் உற்பத்தி செய்து வழங்கப்பட்ட பிஸ்டன் வளையங்களில் தரம் குறைந்து இருந்ததால் அவ்வாறான டோயோட்டாவுடனான ஒப்பந்தத்தை இந்த நிறுவனம் இழந்தது அதனை தொடர்ந்து டோயோட்டா எனும் நான்குசக்கரவாகண உற்பத்தி நிறுவனத்திற்கு தேவையான பிஸ்டன் வளையங்களின் தரக்காட்டுப்-பாட்டினை நன்கு அறிந்து கொண்டு 1941 ஆம் ஆண்டளவில் டொயோட்டா நிறுவனத்திற்கு ஏற்ற தரக்கட்டுபாட்டில் ஏராளமான அளவில் பிஸ்டன் வளையங்களை உற்பத்தி செய்து வழங்கிடுமளவிற்கு வளர்ச்சி பெற முடிந்தது அதன்பின்னர் இந்த நிறுவனம் வளர்ந்து டோயோட்டா நிறுவனத்தின் 40 சதவிகித பங்குகளை வாங்கிடும் அளவிற்கு வெற்றிநடைபோட்டது

ஆனால் 1944 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் உலகப்போரின்போது போடப்பட்ட அணுகுண்டு தாக்குதலினால் இந்த நிறுவனத்தின் தொழிலகம் முற்றிலும் அழிந்துபோனது மிகுதியாக இருந்த கழிவுகள் அனைத்தும் டோயோட்டா நிறுவனத்திற்கு விற்கபட்டு அதில் கிடைத்த வருமானத்தினை கொண்டு அக்டோபர1946இல் ஹோண்டா தொழில்நுட்ப ஆய்வுநிறுவனம் என்பது துவங்கப்பட்டது அது 172 சதுரஅடி இடவசதியுடனும் 12 அலுவலர்களுடனும் செயல்பட்டுவந்தது இந்நிறுவனமானது மிதிவண்டி போன்ற இருசக்கர வண்டியில் டோஹாஸ்ட்சு எனும் நிறுவன இயந்திரத்தின் நகலை மேம்படுத்தி மிகச்சிறப்பாக இயங்கிடும் இயந்திரத்தினை கட்டமைவுசெய்து மிதிவண்டியுடன் அதனை இணைத்து தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு விற்பணை செய்து வந்தது மிகக்குறுகியகால இடைவெளியில்அதாவது 1964 ஆண்டில் இந்த ஹோண்டா மோட்டார் எனும் நிறுவனமானது உலகின் மிகப்பெரிய இருசக்கரவாகண உற்பத்தி செய்திடும் நிறுவனமாக வளர்ந்தது அதன்பின்னர் மினிபிக்அப் ட்ரக் உற்பத்தியிலும் நான்குசக்கரவாகண உற்பத்தியிலும் தன்னுடைய கிளையை பரப்பி டோயோட்டா நிறுவனத்திற்கு மிகப்பெரிய போட்டியாளராக திகழ்கின்றது

இவ்வாறு சாதாரண நிலையிலும் சிறந்த புத்தாக்கங்களை கொண்டு எந்தவொரு இக்கட்டான நிலையிலும் தளர்ந்துவிடாமல் விடாமுயற்சிசெய்தால் வெற்றிஎனும் இலக்கை அடையமுடியும் என்பதே இந்த ஹோண்டா நிறுவனத்தின் வளர்ச்சிபாதையாகும் என்பதை மனதில் கொள்க

செவ்வாய், 23 அக்டோபர், 2018

ஒருநபர் நிறுமம்(One person company(OPC))


ஒருநபர் நிறுமம்(One person company(OPC))என்ற கருத்தமைவு முதன்முதலில் இந்திய நிறுமங்களின் சட்டம்2013 இன் கீழ் விதி2014ல் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது தனிப்பட்ட நபர்ஒருவர் எந்தவொரு வியாபாரத்தையும் அதிலும் தற்போதைய மேம்பட்ட தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் சேவைத்துறையிலும் தனிநபர் நிறுவனம் என்பதற்கு பதிலாக பொறுப்பு வரையறுக்கப்பட்ட ஒருநபர்நிறுமாக துவங்குவது என்பது பல்வேறு வசதிகளையும் வாய்ப்புகளையும் வழங்குகின்றது அதாவது தனியொருநபர்எவ்வளவு முதலீடு செய்துள்ளாரோ அந்தஅளவிற்குமட்டுமே அந்தநிறுமத்தின் பொறுப்பாகும் எனஒருநபர் நிறுமம்(One person company(OPC)) என்பதை நிறுமங்களின் சட்டம் 2013 வரையறுக்கின்றது மேலும் நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 2(62) இன் படி இந்த ஒருநபர் நிறுமம்(One person company) என்பது ஒரு நிறுமமானது ஒரேயொரு உறுப்பினர் மட்டும் கொண்டது என வரையறுக்கின்றது நிறுமங்களின் சட்டம்2013 இன்படி ஒரு நபர் நிறுமம் (OPC) என்பது 1.பதிவுசெய்யப்பட்ட ஒரு நபர் நிறுமத்தின் (OPC) பங்குமூலதனம் ரூ. 50 லட்சத்திற்கு மேல் இருந்தால் அல்லதுகடந்த மூன்று வருடங்களின் சராசரியான வருடாந்திர வருவாயானது ரூ.2 கோடிக்கு மேல் இருந்தால் அது ஒரு நபர் நிறுமம் (OPC) என்ற தகுதியை இழக்கும் 2.ஒரு நபர் நிறுமத்தின் (OPC) உறுப்பினராக அல்லது நியமனஉறுப்பினராக அல்லது பயன்பெறும் பங்குஉரிமையாளராக18 வயது பூர்த்தியடையாத சிருவர்கள் ஆகமுடியாது 3. நிறுமங்களின் சட்டம்2013 பிரிவு 8 கீழ்அல்லாமல் பதிவுசெய்யப்பட்டு நடப்பில் இயங்கிகொண்டிருக்கும் தனியார் வரையறுக்கப்பட்டநிறுமத்தின் பங்கு மூலதனம் ரூ. 50 லட்சத்திற்குமிகாமலும் கடந்த மூன்று வருடங்களின் சராசரியான வருடாந்திர வருவாயானது ரூ.2 கோடிக்கு மிகாமலும் இருந்தால் அந்நிறுமத்தின் பொதுபேரவைக்கூட்டத்தில் சிறப்பு தீர்மாணத்தினை நிறைவேற்றுவதன் வாயிலாக அதனை ஒரு நபர் நிறுமமாக (OPC) மாற்றி-யமைத்து கொள்ளமுடியும் தனிநபர்நிறுவனம் என்பதற்கும் ஒருநபர் நிறுமம்(One person company(OPC)) என்பதற்கும் உள்ள வேறுபாடுகள் பின்வருமாறு 1தனிநபர்நிறுவனம் என்பதில் அதன் உரிமையாளர் அல்லது சொந்தக்காரர் என்பவரும் அந்த தனிநபரும் ஒருவரேயாவார்கள். ஆனால் ஒருநபர் நிறுமம் (OPC)என்பதில் சட்டப்படி அந்த நிறுமத்தின் உரிமையாளர் அல்லது சொந்தக்காரர் என்பவர் வேறு அந்த தனிநபர் என்பவர் வேறுஆவார் 2. தனிநபர்நிறுவனத்தின் பொறுப்புகள் வரையறுக்கப்படாதது ஆனால் ஒருநபர் நிறுமத்தின்(OPC) பொறுப்புகள் வரையறுக்கப்பட்டதாகும் 3. தனிநபர்நிறுவனத்தின் உரிமையாளர் இறந்துபோனால் அந்தநிறுவனத்தின் வாழ்வும் அதோடுமுடிவடைந்து மூடப்பட்டுவிடும் ஆனால் ஒருநபர் நிறுமம்(OPC) என்பதில் அதிலுள்ள ஒரே உறுப்பினர் இறந்தாலும் அந்த நிறுமம் சட்டப்படி கலைக்காத வரை தொடர்ந்து செயலில் இருக்கும் 4 தனிநபர்நிறுவனத்திற்கு வழங்கப்படும் கடன்கள் அந்த தனிப்பட்ட நபரின் சொந்த பொறுப்பாகும் ஆனால் ஒருநபர் நிறுமத்திற்கு(OPC) வழங்கப்படும் கடன்கள் அந்தநிறுமம் மட்டுமே பொறுப்பாகும் 5.எந்தவொரு தனிப்பட்ட நபரும் தான்விரும்பும் தொழிலை வியாபாரத்தை இந்த தனிநபர்நிறுவனமாக பதிவுஎதுவும் செய்திடாமல் துவங்கமுடியும் ஆனால் ஒருநபர் நிறுமம்(OPC) என்பதில் கண்டிப்பாக நிறுமங்களின் சட்டம் 2013 விதி 2014இன்படி பதிவுசெய்திடவேண்டும் 6.தனிநபர்நிறுவனத்தின் நிதிநிலை போன்ற அனைத்து ஆவணங்களும்அந்த தனிப்பட்ட நபருக்கு உரிமையுடையதாகும் ஆனால் ஒருநபர் நிறுமத்தின் நிதிநிலை போன்ற அனைத்து ஆவணங்களும் ஒருநபர் நிறுமத்திற்கு(OPC) சொந்தமானதாகும் இந்தOPC இன் வசதி வாய்ப்புகள் பின்வருமாறு 1. இந்த கருத்தமைவு தனிப்பட்ட நிபுணத்துவத்தை பயன்படுத்தி தான் விரும்பும் வணிகத்தை சுதந்திரமாக நடத்துவதற்கு அனுதிக்கின்றது. 2.தனிநபரின் ஆளுமை உந்துதலின் அடிப்படையிலான ஒரு வணிகத் திட்டத்தையும் செயல்படுத்திடஅனுமதிக்கின்றது. 3.ஒரு OPC நிறுமத்தினை ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமமாக துவங்கிடமுடியும் 4.இந்த OPC நிறுமத்தில் எந்தவொருநேரத்திலும் ஒரேயொரு உறுப்பினர் (Member) மட்டுமே இருப்பர் அவ்வாறே ஒரேயொரு இயக்குநரே (Director)இருப்பர் 5 இந்த OPC நிறுமத்தின் ஒரு உறுப்பினர் அல்லது அவருடைய நியமனதாரர் இந்திய குடிமகனாகவும் இந்தியாவில் குடியிருப்பவராகவும் இருக்கவேண்டும் 6. ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட OPC ஐ உருவாக்க முடியாது அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட OPC இல் நியமன உறுப்பினராக முடியாது. 7.இந்த OPC இன் உறுப்பினர் ஒருவர் மற்றொரு OPC இல் உறுப்பினராக இருந்தால் 180 நாட்களுக்குள் ஏதாவது ஒரு OPC இல் மட்டும் உறுப்பினர் என்ற தகுதியைப் பூர்த்தி செய்ய வேண்டும் இந்தOPC க்கான பல்வேறு சலுகைகள் பின்வருமாறு 1 தனிநபர் ஒருவர் தனக்கு தோன்றிடும் எந்தவொரு புதிய வியாபார கருத்துகளின் அடிப்படையில் புதிய தொழிலை துவங்குவதற்கு இந்தOPC என்பது மிகஅருமையானஎளிதான கருவியாக விளங்குகின்றது 2. புதிய தொழில் முனைவோர்க்கு இந்த OPC ஆனது ஒரு தூண்டுகோலாக அமைகின்றது 3.இதன் வரையறுக்கப்பட்ட பொறுப்பு என்ற கருத்தமைவே புதிய தொழில் துவங்குவதற்கான உத்வேகத்தை தனிநபருக்கு வழங்குகின்றது 4 ஒரு தனியார் வரையறுக்கப்பட்டநிறுமம் அல்லது (பட்டியலிடப்பட்ட அல்லது பட்டியலிடப்படாத)பொது வரையறுக்கப்பட்டநிறுமம் போன்று இந்தOPC ஆக பதிவுசெய்யப்பட்டநிறுமம் நிறுமங்களின் சட்டம் 2013 விதி போன்றவைகளில் கூறியவறான பல்வேறு படிவங்களை சமர்ப்பிக்கவேண்டு் என்ற கட்டுப்பாடு எதுவும் இல்லை அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. 5. தற்போது நடப்பில் உள்ள உரிமையாளர்நிறுவனத்தினை எந்தவித சிரமமுமின்றி மிகஎளிதாக இந்த OPCஆக மாற்றிக்கொள்ளமுடியும். 6 துவக்கத்தில் OPC ஆக குறைந்த மூலதனத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிறுமமாக துவங்கி படிப்படியாக வளர்ந்தபின்னர் பெரிய தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமமாக மாற்றியமைத்து கொள்ளலாம் 7 மூன்றாண்டிற்கு ஒருமுறை தணிக்கையாளரை மாற்றவேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவமில்லாமல்தொடர்ச்சியாக ஒரே தணிக்கையாளரையே அமர்த்தி கொள்ளலாம் 8 வருடாந்திர அறிக்கையை நிறுமச்செயலர் அல்லது இயக்குநர் கையொப்பமிட்டு சமர்ப்பித்தால் போதுமானதாகும் 9 நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 98 , பிரிவுகள் 100 முதல் 111 இன்படி ஒவ்வொரு ஆண்டும் அடுத்தாண்டு செப்டம்பர் 30 இற்குள் கண்டிப்பாக நிறுமத்தின் பொதுப்பேரவை கூட்டவேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை 10. நிறுமத்தின் இயக்குநர்களின் கூட்டத்தில் ஒரேயொரு நபர் மட்டுமே இருப்பதால் கூட்டம் துவங்குவதற்கு குறைந்தபட்ச இயக்குநர்கள் கலந்துகொள்ளவேண்டும் என்ற நிபந்தனை எதுவும் பொருந்தாது அவ்வாறே அந்த கூட்டத்தின் அறிக்கையிலும் நிதி அறிக்கையிலும் நிர்வாக இயக்குநர் அல்லதுகுறைந்தது இரு இயக்குநர்கள் கையொப்பிடவேண்டும்என்ற நிபந்தனையும் இந்த OPCக்கு பொருந்தாது இந்த OPCஇன் ஒரேயொரு இயக்குநர் மட்டும் கூட்டத்தில் கலந்து கொண்டால் போதும் அவ்வாறே கூட்டஅறிக்கையிலும் நிதிநிலை அறிக்கையிலும்அந்த ஒரேயொரு இயக்குநரே கையொப்பமிட்டால் போதுமானதாகும் OPC நிறுமத்தின் வகை பின்வருமாறு இந்த OPC ஆக நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 3(.2) இன்படி 1.வரையறுக்கப்பட்ட பங்குமூலதனம் அல்லது 2.வரையறுக்கப்பட்ட உத்திரவாதம் அல்லது 3.வரையறுக்கப்படாத நிறுமம் ஆகிய மூன்றவகையாக பதிவுசெய்து கொள்ளலாம்

ஞாயிறு, 21 அக்டோபர், 2018


வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டண்மை சட்டம்2008 இந்தியாவில் 2008 ஆம் ஆண்டிற்கு முன்புவரை இந்திய கூட்டாண்மைசட்டம்1932 என்பது நடைமுறையில் இருந்துவந்தது மனிதநாகரிகம் தோன்றியபின்னர் ஏராளமான அளவில் மிகவும் அதிகமாக வியாபார உலகம் மாறிவந் துள்ளது . அதிலும்உலகம் முழுவது ஒரேபொருளாதார கிராமமாக மாறியுள்ள தற்போதைய சூழலில் இந்த இந்திய கூட்டாண்மை சட்டமானது இவ்வாறான மாறிய உலகபொருளாதாரத்திற்கு பொறுத்தமானதாக அமையவில்லை. இந்த இந்திய கூட்டாண்மைசட்டம்1932 ஆல் பின்வரும் பாதகமான செயல்கள் ஏற்படுகின்றன 1.கூட்டாண்மை நிறுவனத்தின் ஒவ்வொரு கூட்டாளியின் பொறுப்புகளும் வரையறையற்றதாக உள்ளன 2.கூட்டாளிகள் கூட்டாகவும் தனித்தனியாகவும் கூட்டாண்மை நிறுமத்தின் பொறுப்பினை ஏற்கவேண்டியுள்ளதுஅதனால்கூட்டாளிகளுடைய தனிப்பட்ட சொந்த சொத்துகளும் இந்த கூட்டாண்மையின்பொறுப்பிற்காக சரிகட்டும் நிலை ஏற்படுகின்றது 3 ஒரு கூட்டாளி கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து ஓய்வுபெறாதவரையிலும் மற்ற கூட்டாளிகள் ஏற்று அனுமதிக்காதவரையிலும் அவர் அந்த கூட்டாண்மை நிறுமத்தில் தன்னுடைய பங்கினை மற்றவர்களுக்கு மாற்றிதர இயலாது 4 இந்த கூட்டாண்மை நிறுவனத்தில் குறிப்பிட்ட நபர்களுக்கு மேல் கூட்டாளிகளாக சேர்த்து கொள்ளமுடியாது அதனால் வியாபாரத்திற்குகூடுதலாக தேவைப்படும் முதலீட்டினை கூடுதலான கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டுதம்முடைய வியாபாரத்தை மேலும்விரிவாக்கம் செய்திடவும் மேம்படுத்திடவும் முடியாது மேலேகூறிய காரணங்களினால் குறைந்த அளவு நிபந்தனை யுடன் நிறுமச்சட்டத்தின் பயன்களுடனும்கூட்டாண்மை நிறுமத்தின் நெகிழ்வு தன்மையுடனும் சேர்ந்த புதியவகை கூட்டாண்மை நிறுமம் தோன்றிடவேண்டிய கட்டாயத்தேவை மிக நீண்ட நாட்களாக இருந்துவந்தது மேலும் உலகளாவிய பணச்சிக்கலும் பொருளாதார மந்த நிலையும் ஏற்பட்ட 1980ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில்அமெரிக்க ஐக்கியநாடுகளில் ஏராளமான கூட்டாண்மை நிறுமங்கள் நொடித்தநிறுமமாக அறிவிக்கப்ட்டன அதனால் பல நிறுமங்கள் பல்வேறு சட்டசிக்கல்களில் மாட்டிக்கொண்டு அதிலிருந்து வெளியேறமுடியாமல் தவித்துகொண்டிருந்தன அதனை தொடர்ந்து நிறுமத்தின் அனைத்து கூட்டாளிகளும் கூட்டாண்மை நிறுமத்தின் கடனாளிகளுக்கு தங்களுடைய சொந்த சொத்துகளை விற்றுகடனிற்கு ஈடுசெய்திடும் இக்கட்டான சூழலிற்கு தள்ளப்படடனர் அதனால் 1991 ஆம் ஆண்டு முதன்முதலில் கூட்டாண்மை நிறுமத்தில் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை என்ற கருத்துரு அமெரிக்க ஐக்கியநாடுகளின் டெக்ஸாஸ்மாநிலத்தில் அறிமுகபடுத்தப்பட்டது அதனை தொடர்ந்து அமெரிக்க ஐக்கியநாடுகளின் மிகுதி உள்ள மாநிலங்களிலும் இதற்கான சட்டத்தை வகுத்து நிறைவேற்றின அவ்வாறே இங்கிலாந்து ஆஸ்திரேலியா வளைகுடா நாடுகள் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இந்த பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது இந்தியாவில் இங்கிலாந்து பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை சட்டம்2000, சிங்கப்பூர் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை சட்டம்2005 ஆகிய இரண்டு சட்டங்களின் அடிப்படையில் சிறந்த வல்லுனர்களின் குழுவானதுபொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை என்பது தனியானதொரு நபராகவும் அதனுடைய கூட்டாளி உறுப்பினர்கள் தனியாக இருக்குமாறும் இந்தியநாட்டில் உருவாக்க அனுதிக்கின்றது இந்த பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மையின் அடிப்படை கருத்துரு பின்வருமாறு 1இதுநிறுமங்களின்சட்டத்தின்படி வரையறுக்கப்பட்ட பொறுப்பினையும் கூட்டாண்மை நிறுமத்தின் நெகிழ்வுதன்மையும் கொண்டது 2.நிறுமங்களின் சட்டத்தின் அடிப்படையில்உருவாக்கப்படும் நிறுமம் போன்றேஇந்த நிறுமமானது அதன்கூட்டாளிகள் விலகினாலும் புதியவர்கள் சேர்ந்தாலும் நிலையானதும் தனியானதுமான நிறுமமாக அதனுடைய செயல்அமைந்திருக்கும் 3.வரையறுக்கப்-பட்ட பொறுப்பு கூட்டாண்மை நிறுவனமானது அதனுடைய சொந்தபெயரில் சொத்துகளை வைத்திருக்கவும் ஒப்பந்தங்களை ஏற்படுத்திடவும் முடியும் .4 இது தனிப்பட்ட உருவமைப்பை கொண்டுள்ளதால் அதனுடைய சொத்துக்களின் அளவிற்கே அதனுடைய பொறுப்புகளும் இருக்கும் அதனால்அதன் கூட்டாளிகளின் பொறுப்புகள் அவர்கள் ஏற்றுக்கொண்ட பொறுப்பின்அளவிற்குமட்டுமே பொறுப்பேற்க முடியும் .எந்தவொரு கூட்டாளியும்மற்ற கூட்டாளிகளின் தன்னிச்சையான செயல்களுக்கும் அனுமதிக்கப்படாத செயலிற்கும பொறுப்பேற்கமுடியாது அதாவது தனிப்பட்ட கூட்டாளி நபர்ஒருவர் மற்ற கூட்டாளியின் தனிப்பட்டமுறையிலான கூட்டாண்மை நிறுவனத்தின் இழப்பிற்கும் பொறுப்பிற்கும் பொறுப்பாகாமல் இதன்மூலம் பாதுகாப்பு அளிக்கப்படுகின்றது கூட்டாளிக்களுக்கிடையே ஏற்படுத்தப்படும் ஒப்பந்தம் அல்லது கூட்டாளிகளுக்கும் கூட்டாண்மை நிறுமத்திற்குமிடையே ஏற்படுத்தப்படும் ஒப்பந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் கூட்டாளிகளின் கடமைகளும் பொறுப்புகளும்பொறுப்பு வரையறுக்கப்பட்டபு கூட்டாண்மை சட்டத்திற்குள் நிருவகிக்கப்படுகின்றது அதாவது இந்த பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை என்பது மிகமேம்பட்ட கூட்டாண்மை நிறுமம் வரையறுக்கப்பட்ட நிறுமம் ஆகிய இரண்டும் சேர்ந்த கலவையான புதிய நிறுமம் ஆகும் இந்த புதிய பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை சட்டமானது 2006இல் நாடாளுமன்றத்தில் அறிமுகபடுத்தப்பட்டு 2009 இல் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை சட்டம் 2009 ஆக நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு இந்தியாவில் கொண்டுவரப்பட்டது இதில் 14 பகுதிகளும் 81 பிரிவுகளும் நான்கு அட்டவணைகளையும் கொண்டுள்ளது ஒப்பந்தம் எதுவும் இல்லாத நிலையில் கூட்டாளிகளின் கடமைகளும் பொறுப்புகளும் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை சட்டத்திற்குள் அட்டவணை-1இன்வாயிலாக நிருவகிக்கப்படுகின்றது தற்போது உள்ள கூட்டாண்மை நிறுமமானது இந்த சட்டத்தின்படிபொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுமம் ஆக மாற்றியமைத்து கொள்ள அட்டவணை-2 அனுமதிக்கின்றது தனியார் நிறுவனங்கள் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுமம் ஆக மாற்றியமைத்து கொள்ள அட்டவணை-3 அனுமதிக்கின்றது பங்குச்சந்தையில்பட்டியலிடப்படாத நிறுவனங்கள் வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை நிறுமம் ஆக மாற்றியமைத்து கொள்ள அட்டவணை-4 அனுமதிக்கின்றது இந்த சட்டத்தின் நான்காவது அட்டவணைமட்டும் 31.05.2009 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது தேசிய நிறுமசட்டவாரியம் பற்றிய பிரிவுகள் தவிர இந்த சட்டத்தின் மற்றபிரிவுகள் 31.03.2009 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது இந்த சட்டத்தின் பிரிவு 2(1)(n) பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை என்பதை பற்றி வரையறை செய்கின்றது இந்த சட்டத்தின் பிரிவு 5 இன்படி எந்தவொரு தனிப்பட்டநபரும் அல்லது கூட்டுரு நிறுமமும் சேர்ந்து இந்த பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமத்தை உருவாக்கிடமுடியும் நிறுமச்சட்டம் பிரிவு3 இன்படி 1.பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமமாக பதிவுசெய்யப்பட்ட நிறுமம் 2. இந்திய நாட்டின் எல்லைக்கு அப்பால் உருவாக்கப்பட்ட பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமம்3 இந்திய எல்லைக்கப்பால் உருவாக்கப்பட்ட நிறுமம் ஆயினும் (1) அது கூட்டுருவாக (2) நடப்பில் உள்ள சட்டத்தின்படி ஒரு கூட்டுறவுசங்கமாக பதிவுசெய்யப்பட்டிருந்த (3) நிறுமமல்லாத வேறு வகையில் கூட்டுருவாக உருவாக்கப்பட்ட அல்லது பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமமாக மத்திய அரசு அரசிதழின் அறிவிக்கப்பட்டநிறுமம் ஆகியவைஒரு கூட்டுரு நிறுமம் ஆகும் என இந்த சட்டத்தின் பிரிவு 2(1)(d)இல் கூட்டுரு நிறுமத்தை பற்றி வரையறுக்கப்படுகின்றது பொதுவாக நீதிமன்றத்தால்அல்லது மற்றசட்டத்தின்படிதனிநபர் ஒருவர் புத்திசுவாதினம் இல்லாதவர் எனஅறிவிக்கப்படாத எந்தவொரு நபரும் திவாலானவராகஇல்லாத நபரும் அவ்வாறு திவாலாவதற்காக பதவுசெய்யாத தனிப்பட்ட எந்தவொரு நபரும் இந்த பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமத்தில் கூட்டாளியாக சேரமுடியும் இந்த பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமத்தில் குறைந்தபட்சம் இரண்டு நபர்கள் கூட்டாளியாக கண்டிப்பாகஇருக்கவேண்டும்

சனி, 20 அக்டோபர், 2018

ஒரு ஏழை சிறுவியாபாரி ஆனதெவ்வாறு


10 அல்லது 12 வயது உடைய அநாதை சிறுவன் ஒருவன் தொடர்வண்டி நிலையத்தின் மேடைமீது வந்து நின்ற விரைவு வண்டியின் சன்னல் ஓரம் தன்னுடைய வயிற்று பசிக்காக அனைவரிடமும் பொருளுதவி தருமாறு இறஞ்சி கேட்டுகொண்டிருந்தான் அந்த சிறுவனை அழைத்து அவனிடம் ரூ.200/- கொடுத்தவுடன் மிகஅதிர்ச்சியாகநின்று ஐயா இவ்வளவு தொகை தேவையில்லை ஐயா என கூவினான் தம்பி இவ்வாறு பிச்சை எடுக்கவேண்டாம் இந்த தொகையை கொண்டு மாத வாராந்திர இதழ்களை வாங்கி வந்து இதே தொடர்வண்டி பெட்டிக்குள் சென்று விற்றுவிட்டு வா என அறிவுறுத்திய வுடன் அந்த சிறுவனும் உடன் நான் வழங்கிய தொகைக்கு ஏற்ப மாத வாராந்திர இதழ்களை வாங்கி கொண்டு தொடர்வண்டி பெட்டிக்குள் புகுந்து அதனை ரூ.250/-விற்றுவந்தான் என்னிடம் கொண்டுவந்து அந்த பணம் ரூ.250/- முழுவதும் என்னிடம் கொடுத்தான் அதில் என்னுடைய ரூ.200/- ஐ மட்டும் நான் எடுத்துகொண்டு மிகுதி ரூ.50/-அவனிடம் வழங்கி இன்று இனி பிச்சை எடுக்கவேண்டாம்இதனை இன்றைய செலவிற்கு வைத்து கொள் இவ்வாறு பிச்சைஎடுக்கவேண்டாம் அதற்கு பதிலாக இந்த ரூ 1000/- வைத்துகொண்டு இதேபோன்று தினமும் மாத வாராந்திர இதழ்களை வாங்கி வந்து தொடர்வண்டி நிலையத்திற்குள் வந்து நிற்கும் தொடர்வண்டி பெட்டிக்குள் விற்று வரும் வருமானத்தை கொண்டு பிச்சை எடுக்காமல் உழைத்து பிழைத்துகொள் அடுத்தமாதம் இதே தொடர்வண்டியில் நான் வருவேன் அப்போது இந்த தொகை ரூ 1000/- எனக்கு திருப்பி கொடுத்தால் போதும் என அறிவுரை கூறி அனுப்பினேன் தொடர்வண்டியும் தன்னுடைய பயனத்தை துவங்கியது

வெள்ளி, 19 அக்டோபர், 2018

சரக்கு சேவைவரி அறிமுகம்


தற்போது உலகில் ஏறத்தாழ 150 நாடுகள் இந்த சரக்கு சேவைவரியை நடைமுறைபடுத்திவருகின்றன.அதாவது பல்வேறு உலகநாடுகளிலும் ஏற்கனவே நடைமுறையில் இருந்துவந்த மறைமுகவரிகளுக்கு மாற்றாகஅந்தந்த நாடுகளிலும் நாடுமுழுவதும் ஒரேயொரு வரியை செயல்படுத்துவதை போன்று இந்தியாவிலும் மத்திய அரசின் சென்வாட்வரி,மாநிலஅரசின் மதிப்புக்கூட்டுவரி (Value Added Tax (VAT))ஆகிய இரண்டையும் நடைமுறை படுத்தியதே இந்த சரக்கு சேவைவரியின் முதல்படி-முறையாகும் இதற்கடுத்து தற்போது அடுத்தபடிமுறையாக எந்தவொரு பொருளை அல்லது சேவையை வழங்கும்போதும் அதன்மீது மத்தியஅரசும் மாநில அரசுகளும் ஒன்றாக விதிக்க அதிகாரம் கொண்ட புதிய சரக்கு சேவைவரி எனும் புதிய வரிவிதிப்பு முறையை நடைமுறை படுத்தப்படவுள்ளது இந்த சரக்கு சேவைவரியானது வழங்கப்-படுகின்ற அனைத்து பொருட்களுக்கும் அலலது சேவைகளுக்கும் நாடு-முழுவதும் ஒரேமாதிரியான அளவில் வரியை விதிக்க வழிவகுக்கின்றன மேலும் இந்த சரக்கு சேவைவரியானது இறுதி நுகர்வேர் செலுத்தமாறு செய்யப்பட்டுள்ளது மேலும் தான் வழங்கும் பொருட்கள் அல்லது சேவைகளுக்கு செலுத்தவேண்டிய இந்த சரக்கு சேவைவரியில் தான் இதற்காக ஏற்கனவே பெற்ற பொருட்களுக்காக அல்லது சேவைகளுக்காக செலுத்திய வரியை கழித்துகொண்டு(input tax credit (ITC)) நிகரமாக மதிப்புக்கூட்டிய அளவிற்கு மட்டும் இந்த சரக்கு சேவைவரியை செலுத்திட அனுமதிக்கின்றது . நம்முடைய இந்திய நாட்டில் இந்த சரக்கு சேவைவரியை அறிமுகபடுத்துவதன் அடிப்படைநோக்கமே மறைமுகவரிசெலுத்துவதை எளிமைபடுத்துவதேயாகும் அதாவது தற்போது நடைமுறையில் உள்ள மறைமுகவரிகளானது வரியின்மீது வரியாக விதிக்கப்பட்டு இறுதியில் நுகர்வோருக்கு அதிக சுமை ஏற்படுகின்றது எடுத்துகாட்டாக உற்பத்தியாளர் பொருள் ஒன்றை உற்பத்தி செய்திடும்போது அவரால் மத்தியஅரசிற்கு செலுத்தப்படும் உற்பத்திவரியையும் சேர்த்து தற்போது விற்பணைவரி கணக்கிடப்பட்டு செலுத்தபடுகின்றது அதனை தவிர்த்து இந்த புதிய சரக்குசேவை வரியானது பொருளின் அல்லது சேவையின் அடிப்படைவிலையில் மட்டுமே கணக்கிடப்படுகின்றது பொருள் அல்லது சேவை வழங்குதலின் தொடர்சங்கிலியில் வரியின்மீது வரிஎன்றில்லால் மதிப்புகூட்டப்பட்ட அளவிற்கு மட்டும் வரியை கணக்கிட்டு செலுத்திடுமாறும் உண்மையில் இறுதி பயனாளர்மட்டும் இந்த வரியை செலுத்திடுமாறும் கட்டமைக்கப்-பட்டுள்ளது 1. இந்த சரக்கு சேவைவரியின் கீழ் துவக்க வரம்பாக பத்துஇலட்சம் வருடாந்திர வருமானம் உள்ளவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது 2. இதனால் அரசிற்கு அதிக வருமானஇழப்பு ஏற்படும் 3நடுத்தர நிறுவனங்களும் இந்த சரக்கு சேவைவரியின் கீழ் கொண்டுவரப்படுகின்றது 4 உற்பத்திவரி சேவைவரி விற்பணைவரி உள்நுவைவரி போன்ற பல்வேறு வரிகள் அனைத்திற்கும் சேர்ந்து அல்லது அவைகளுக்கு பதிலாக இந்த ஒரேயொருவரியின்கீழ் கொண்டுவரமுடியுமா 5. இந்த வரியை அறிமுக-படுத்துவதற்காக மத்தியஅரசு மத்தியசரக்குசேவைவரி(Central GST (CGST))எனும் சட்டத்தையும் ஒவ்வொரு மாநிலமும் மாநில சரக்குசேவைவரி(State GST (SGST)) எனும் சட்டத்தையும் அமோதித்து சட்டமாக இயற்றவேண்டும் 6. தற்போது அந்தந்த மாநிலங்களும் தத்தமது வருவாய் செலவினங்களுக்கு ஏற்ப போதுமான அளவு வரிவிகித்தை கூட்டவோ குறைக்கவோ செய்கின்றன இந்த புதிய சரக்கு சேவைவரியில் அவ்வாறான நடைமுறை சாத்தியமாகுமா 7.தற்போது உள்ள வரிவசூலித்தல் கட்டமைவினை இந்த புதிய சரக்குசேவைவரி யை நடைமுறைபடுத்துதற்கு போதுமானதாக இருக்குமா என்பனபோன்ற சவால்கள் இந்த சரக்கு சேவைவரியை அறிமுகபடுத்தில் எதிர்கொள்ள வேண்டியவைகளாக உள்ளன இந்த புதிய சரக்குசேவைவரி யை நடைமுறைபடுத்துதால் ஏற்படும் வசதிவாய்ப்புகள் பின்வருமாறு 1.தற்போது ஒருநிறுவனம் பல்வேறு நிலைகளிலும் பல்வேறு வகையான வரிகளை கணக்கிட்டு செலுத்தவேண்டியுள்ளது அதனால் இவ்வாறான வரிகளை கணக்கிட்டு செலுத்துவதே தம்முடைய முதன்மையான பணியாக செய்யவேண்டியுள்ளது இவை இந்த புதிய முறையில் தவிர்க்கபடுகின்றன 2.தற்போது உற்பத்தி வரிக்கென்றும் சேவைவரிக்கென்றும் விற்பணைவரிக்கென்றும் நுழைவுவரிக்கென்றும் தனித்தனியான கட்டமைப்பை நிறுவுகைசெய்து வரிகளை வசூலிப்பதற்கு அதிக செலவாகின்றது 3.ஒருசிலபொருட்கள்அல்லது சேவைகள் இந்த கட்டமைப்பின்கீழ் கொண்டு வரப்படாமலேயே உள்ளன இவையெல்லாவற்றி்கும் ஒரேதீர்வாக இந்த புதிய சரக்குசேவைவரியெனும் ஒரேயொரு கட்டமைப்பின் கீழ் அனைத்து வரிகளும் கொண்டுவரப்படுகின்றன 4. வரியின்மீது வரியை செலுத்தாமலும் பல்வேறுவகையான வரிகளை செலுத்தாமலும் ஒரேயொருவரியை செலுத்தினால் போதும் என்ற புதிய கொள்கை நடைமுறைபடுத்தபடுகின்றது இவ்வாறு வரியின்மீது வரிஎன்றில்லாமல் ஒரேயொரு வரியை அறிமுகபடுத்துவதால் நுகர்வோருக்கு வரிச்சுமை குறைந்து பொருட்களின் அல்லது சேவைகளின் பெறுவதற்கான செலவு குறைகின்றது 5.இந்த புதிய சரக்கு சேவைவரி விதிப்பு முறையால் மாநிலஅரசுகளும் சேவையின்மீது வரிவிதித்திடும் அதிகாரம் பெறுகின்றன இதுவரை இந்த சேவைவரியானது மத்தியஅரசிற்கானதாக உள்ளது 6.மேலும்CST எனும் மத்தியவிற்பணைவரி அறவே நீக்கம் செய்யப்படுகின்றது 7.பொருட்களை அல்லது சேவைகளை வழங்கும் தொடர்சங்கிலியில் தான் செலுத்தவேண்டிய வரியில் ஏற்கனவே செலுத்தியவரியை சரிசெய்துகொள்ளும் வசதி மதிப்புகூட்டு வரியை போன்று இதில் அறிமுகப்-படுத்தப்டபட்டுள்ளது மத்திய அரசும் மாநிலஅரசுகளுக்கும் ஒன்றாக சேர்ந்த ஒரேயொருவரியான இந்த சரக்குசேவைவரியெனும் ஒரேவரிவிதிப்பின்கீழ் கொண்டுவரப்படுகின்றது இந்த வரிவிதிப்பின்கீழ் விலக்கு அளிக்கப்பட்டவைதவிர மிகுதியுள்ள அனைத்து பொருட்களுக்கும் அல்லது சேவைகளுக்கும் இந்த சரக்குசேவைரி பொருந்தும் அதனோடு இந்த புதிய வரிவிதிப்பு முறையில் Central GST (CGST)வரியை மத்தியஅரசிற்கும் State GST (SGST)வரியை அந்தந்த மாநிலஅரசிற்கு செலுத்தபடவேண்டும் மேலும் இவ்வாறு செலுத்தப்படும் இவ்வாறான வரிகளனைத்தும் தனித்தனி வரியாக கருதப்படும் மேலும் பொருட்களின் அல்லது சேவைகளின் வழங்குவதன் தொடர்சங்கிலியில் ஒருவர் ஏற்கனவே செலுத்திய Central GST (CGST)வரியை தான் செலுத்தவேண்டிய Central GST (CGST)வரியை மட்டுமே கழித்து கொண்டு நிகவரியை செலுத்தவேண்டும் அவ்வாறே ஒருவர் ஏற்கனவே செலுத்திய அந்தந்த மாநிலத்தின் State GST (SGST)வரியை தான் செலுத்தவேண்டிய அந்தந்தமாநில State GST (SGST)வரியை மட்டுமே கழித்து கொண்டு நிகவரியை செலுத்தவேண்டும். மிகமுக்கியமாக தற்போது நடை-முறையில் பொருட்களுக்கான வரியில் பொருட்களுக்கான வரியிலும் சேவைக்கான வரியை சேவைகான வரியில்மட்டுமே கழித்து கொள்ள அனுமதிக்கப்படும் நடைமுறை உள்ளது மேலும் தற்போது மத்தியவிற்பனை வரிசெலுத்திடும்போதுஏற்கனவே செலுத்திய மத்திய விற்பணை வரியை கழித்து கொள்ளும் நடைமுறை அனுமதிக்கப்படுவதில்லை ஆனால் மத்தியஅரசின்Central GST (CGST) அல்லது மாநிலஅரசின் State GST (SGST)வரியை ஒன்றுகொன்று சரிசெய்து கொள்ளமுடியாது என்ற தகவலை மனதில் கொள்க. இந்த புதிய முறையில் ஒரேமாதிரியான வழிமுறைகள் நடைமுறைபடுத்தபடுவதால் அனைவருக்கும் இதனை பயன்படுத்தி செயல்படுத்துவது அல்லது பின்பற்றுவது மிக எளிதாக இருக்கும் அதைவிட இந்த வரிவிதிப்பிற்கான காலமுறைஅறிக்கைகளின் வடிவமைப்பானது குழப்பம் எதுவுமில்லால் ஒரேமாதிரியாக இருக்கும் ஒவ்வொரு வரிசெலுத்துவோருக்கும் வருமானவரி நிறுவனத்தால் வழங்கப்பட்ட பேன் எண்ணுடன் இணைந்த புதிய சுட்டிஎண் இந்த புதிய சரக்கு சேவைவரிக்காக வழங்கப்படும் ஒட்டுமொத்தமாக கூறுவதெனில் தற்போது நடைமுறையில் உள்ள பல்வேறு வகையான அனைத்து வரிகளும் அறவேநீக்கம் செய்யப்பட்டு புதிய சரக்குசேவைவரிஎன்ற ஒரேகுடையின் கீழ் கொண்டுவரபபடுகின்றது இந்தியா முழுவதும் ஒரேஅளவான வரிவிதிப்பு நடைமுறைபடுத்தப்படவுள்ளது இந்த சரக்கு சேவைவரி எனும் புதிய வரிவிதிப்புமுறையில் ஒட்டுமொத்தவரிச்சுமையானது நுகர்வோருக்கு குறைவாக இருப்பதால் பொருட்களுக்கு அல்லது சேவைகளுக்கு கூடுதலான தேவை ஏற்பட்டு இந்திய பொருளாதாரம் வளர்ச்சிபெறும் என்பது திண்ணம்

வியாழன், 18 அக்டோபர், 2018

சரக்கு சேவைவரி ( சசேவ)கணக்கீடு ஒரு எடுத்துகாட்டுடன்


ஜூலை2017 இலிருந்து நடைமுறைபடுத்தியுள்ள சரக்கு சேவைவரியானது ( சசேவ(GST)) ஏற்கனவே நடைமுறையில் இருந்த மத்தியஅரசின் உற்பத்திவரி சேவைவரி மாநிலஅரசின் மதிப்புக்கூட்டுவரி நுழைவரி போன்ற அனைத்த வரிகளையும் ஒன்றிணைந்த ஒருவரியாகும் இந்த புதிய சரக்குசேவரி( சசேவ) யானது உற்பத்தி செய்கின்ற இடத்திற்கு பதிலாக நுகர்வுசெய்கின்ற இடத்தில் விதிக்கபடுதே மிகமுக்கிய திருப்பமாகும் நுகர்வோர் அல்லாத நபர்ஒருவர் பெறும் பொருள் அல்லது சேவைக்கு செலுத்திடும் வரியை தாம் வேறொரு நபருக்கு வழங்கிடும்போது தான் ஏற்கனவே செலுத்திய வரியை கழித்து சரிசெய்து கொண்டு நிகரவரியைமட்டும் செலுத்தினால் போதும் அதாவது ஏற்கனவே நடைமுறையில் இருந்த மாநில அரசின் மதிப்புக்கூட்டு வரியை(VAT) போன்று விதிக்கப்படுவதே இந்த சரக்கு சேவைவரியின் முக்கியதன்மையாகும் பொதுவாக ஒரு பொருளை அல்லது சேவையை வழங்கிடும் தொடர் சங்கிலியில் உற்பத்தியாளர் ,மொத்தவிற்பணையாளர் சில்லறை விற்பனையாளர், நுகர்வோர் ஆகிய நான்கு நபர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் இதில் உற்பத்தியாளர் தன்னுடைய உற்பத்திக்கான மூலப்பொருளை அல்லது சேவையை பெறும்போது செலுத்திடும் உள்ளீட்டு வரியை தான் உற்பத்தி செய்திடும் பொருளை மொத்த விற்பணையாளருக்கு வழங்கும்-போது அவரிடமிருந்து வசூலிக்கும் வரியில் கழித்து சரிசெய்துகொண்டு நிகர வரியைமட்டும் செலுத்தினால் போதும் அவ்வாறே மொத்த விற்பணையாளர் தான் உற்பத்தியாளரிடமிருந்து பொருளை அல்லது சேவையை பெறும்போது செலுத்திய வரியை சில்லறை விற்பணையாளரிடம் வழங்கும்போது அவரிடமிருந்து வசூலிக்கும் வரியில் கழித்து கொண்டு நிகர வரியைமட்டும் செலுத்தினால் போதும் அதேபோன்று சில்லறை விற்பணையாளர் தான் மொத்த விற்பணை-யாளரிடமிருந்து பொருளை அல்லது சேவையை பெறும்போது செலுத்திய வரியை நுகர்வோரிடம் வழங்கும்போது அவரிடமிருந்து வசூலிக்கும் வரியில் கழித்துசரிசெய்து கொண்டு நிகர வரியைமட்டும் செலுத்தினால் போதும் இதனை விரிவாக பார்ப்பதற்குமுன் இந்த சரக்குசேவைவரியானது மாநிலத்திற்கான மாநிலசரக்குசேவைவரி(SGST)யென்றும் மத்தியஅரசிற்கான மத்திய சரக்குசேவைவரி(CGST)யென்றும் மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் நிகழ்விற்கு ஒருங்கிணைந்த சரக்குசேவைவரி(IGST)யென்றும் இந்தியஅரசின் நேரடிஆளுகைக்கு உட்பட்ட யூனியன் பிரதேசங்களில் யூனியன் சரக்குசேவைவரி(UGST)யென்றும் நான்குவகையான சட்டங்கள் நடைமுறைபடுத்தவிருக்கின்றன மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் நிகழ்விற்கான ஒருங்கிணைந்த சரக்குசேவைவரி(IGST)யின் உள்ளீட்டு வரியை மத்தியஅரசின் மத்திய சரக்குசேவைவரி(CGST)யிலும் ஒருங்கிணைந்த சரக்குசேவைவரி(IGST)யிலும் கழித்துசரிசெய்து கொண்டு நிகரவரிமட்டும் செலுத்திடலாம் அவ்வாறே மத்திய சரக்குசேவைவரி(CGST)யின் உள்ளீட்டு வரியை மத்தியஅரசின் மத்திய சரக்குசேவைவரி(CGST)யிலும் ஒருங்கிணைந்த சரக்குசேவைவரி(IGST)யிலும் கழித்துசரிசெய்து கொண்டு நிகரவரிமட்டும் செலுத்திடலாம் மேலும் மாநிலஅரசின் மாநிலசரக்குசேவைவரி(SGST)யின் உள்ளீட்டு வரியை ஒருங்கிணைந்த சரக்குசேவைவரி(IGST)யிலும் மாநிலசரக்குசேவைவரி(SGST) யிலும் கழித்துசரிசெய்து கொண்டு நிகரவரிமட்டும் செலுத்திடலாம்
இந்த நிகழ்வை ஒரு எடுத்துகாட்டுடன் காண்போம் ஒரு உற்பத்தியாளர் வழங்கிடும் பொருள் அல்லது சேவைக்கு CGST வரிவிகிதம் 10% என்றும் SGSTவரிவிகிதம் 5% என்றும் அவர் தன்னுடைய உற்பத்திபொருளிற்கு அல்லது சேவைக்கு தேவையான மூலப்பொருளை ரூபாய்.1000/- அடக்க விலையில் பெறுகின்றார் அப்போது அவர் மத்தியசசேவரியாக ரூபாய்.100/- உம் மாநிலசசேவரியாக ரூபாய்.50/- உம் ஏற்கனவே செலுத்தியிருக்கின்றார் எனக்கொள்வோம் இவர் அதனுடன் ரூபாய்.300/- இற்கு மதிப்புகூட்டி மொத்த-விற்பணையாளருக்கு ரூபாய்.1300/- இக்கு வழங்குகின்றார் எனில் இவர் மத்தியஅரசின் மசசேவரியாக ரூபாய்.130/-உம் மாநிலஅரசின் மாசசேவரியாக ரூபாய்.65/-உம் செலுத்திடவேண்டுமெனில் இந்த உற்பத்தியாளர் மத்திய அரசிற்கு செலுத்தவேண்டிய மசசேவரியான ரூபாய்.130/ இல் இவர் ஏற்கனவே மத்தியஅரசிற்கு செலுத்திய உள்ளீட்டு மசசேவரியான ரூபாய்.100/-ஐ கழித்து சரிசெய்து கொண்டு நிகரமாக ரூபாய்.30/-மட்டும் செலுத்தினால் போதும். அவ்வாறே இந்த உற்பத்தியாளர் மாநிலஅரசிற்கு செலுத்தவேண்டிய மாசசேவரியான ரூபாய்.65/- இல் இவர் ஏற்கனவே மாநில அரசிற்கு செலுத்திய உள்ளீட்டுமாசசேவரியானரூபாய்.50/-ஐ கழித்து சரிசெய்து கொண்டு நிகரமாக ரூபாய்.15/-மட்டும் செலுத்தினால் போதும் பின்னர் மொத்தவிற்பணையாளர் இதன்மீது ரூபாய்.200/- இக்கு மதிப்பினை கூட்டி மொத்தம் ரூபாய்.1500/- இக்குசில்லறை விற்பணையாளருக்கு வழங்குகின்றோர் எனக்கொள்வோம் இவர் மத்தியஅரசின் மசசேவரியாக ரூபாய்.150/-உம் மாநிலஅரசின் மாசசேவரியாக ரூபாய்.75/-உம் செலுத்திட-வேண்டு மெனில் இந்த உற்பத்தியாளர் மத்தியஅரசிற்கு செலுத்தவேண்டிய மசசேவரியான ரூபாய்.150/ இல் இவர் ஏற்கனவே மத்தியஅரசிற்கு செலுத்திய உள்ளீட்டு மசசேவரியானரூபாய்.130/-ஐ கழித்து சரிசெய்து கொண்டு நிகரமாக ரூபாய்.30/-மட்டும் செலுத்தினால் போதும். அவ்வாறே இந்த மொத்தவிற்பணையாளர் மாநிலஅரசிற்கு செலுத்தவேண்டிய மாசசேவரியான ரூபாய்.75/- இல் இவர் ஏற்கனவே மாநிலஅரசிற்கு செலுத்திய உள்ளீட்டுமாசசேவரியானரூபாய்.50/-ஐ கழித்து சரிசெய்து கொண்டு நிகரமாக ரூபாய்.15/-மட்டும் செலுத்தினால் போதும் இதன்பின்னர்சில்லரை விற்பணையாளர் இதன்மீது ரூபாய்.100/- இற்கு மதிப்புகூட்டி நுகர்வோருக்கு ரூபாய்.1600/- இக்கு வழங்குகின்றார் எனில் இவர் மத்தியஅரசின் மசசேவரியாக ரூபாய்.160/-உம் மாநிலஅரசின் மாசசேவரியாக ரூபாய்.80/-உம் செலுத்திடவேண்டுமெனில் இந்த சில்லறைவிற்பணையாளர் மத்தியஅரசிற்கு செலுத்தவேண்டிய மசசேவரியான ரூபாய்.160/ இல் இவர் ஏற்கனவே மத்தியஅரசிற்கு செலுத்திய உள்ளீட்டு மசசேவரியான ரூபாய்.150/-ஐ கழித்து சரிசெய்து கொண்டு நிகரமாக ரூபாய்.10/-மட்டும் செலுத்தினால் போதும். அவ்வாறே இந்த சில்லறைவிற்பணையாளர் மாநிலஅரசிற்கு செலுத்தவேண்டிய மாசசேவரியான ரூபாய்.80/- இல் இவர் ஏற்கனவே மாநில அரசிற்கு செலுத்திய உள்ளீட்டுமாசசேவரியானரூபாய்.75/-ஐ கழித்து சரிசெய்து கொண்டு நிகரமாக ரூபாய்.5/-மட்டும் செலுத்தினால் போதும் ஒட்டுமொத்தமாக உற்பத்தியாளர் மொத்தவிற்பணையளர் சில்லரை விற்பணையாளர் ஆகியோர் தாம் பொருளை அல்லது சேவையை வழங்கிடும்போது மத்தியஅரசிற்கு Rs. 60 (= Rs. 30+Rs. 20+Rs. 10) மட்டும் CGST ஆகவும் அவ்வாறே மாநில அரசிற்கு Rs. 80 (= Rs. 65+Rs. 10+Rs. 5) SGST ஆகவும் உற்பத்தியாளரிடமிருந்து நுகர்வோர் வரையிலான இந்த வழங்கலின் தொடர் சங்கிலியில் மதிப்பு-கூட்டப்பட்டஅளவிற்கு மட்டும் மொத்த வரியில் அவரவர்களும் தாம் ஏற்கனவே செலுத்திய உள்ளீட்டு வரியை கழித்து சரிசெய்துகொண்டு நிகரவரியை மட்டும் செலுத்துகின்றனர் இதனை பின்வரும் அட்டவணையின்வாயிலாக எளிதாக அறிந்து கொள்ளலாம்

புதன், 17 அக்டோபர், 2018

தொழிலாளர்களுக்கிடையான நம்பிக்கையை வளர்த்தல் அல்லது மேம்படுத்துதலுக்கான அடிப்படைசெயல்கள்


ஏதோஒருவர் மற்றொருவரிடமிருந்து ஏதனும் முழுமையான நிலையானதொரு தீர்வு தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்திருப்பதே நம்பிக்கையின் அடிப்படையாகும் அவ்வாறான எதிர்பார்ப்பு நிறைவடையாதபோது அதாவது அந்த நம்பிக்கை பொய்த்திடும்போது அவர்களுக்கிடையுள்ள உறவில் விரிசல் ஏற்படுகின்றது இந்நிலையில் இந்த நம்பிக்கையானது அவ்வருவர்களுக்கிடைய உறவை வலுபடுத்திடும் நிலையாக தொடர்ந்து பராமரித்திடும் ஒரு அத்திவாசியமானதொரு அடிப்படை கருவியாக அமைகின்றது இந்த உறவுகளானது கணவன் மனைவிக்கிடையேயான உறவு, முதலாளி தொழிளாளிக்கிடையேயான உறவு, மேலாளர் பணியாளருக்கிடையேயான உறவு ,பிள்ளைகள் பெற்றோருக்கிடையேயான உறவு ,அண்ணன் தம்பிக்கிடையேயான உறவு , அக்காதங்கைக்கிடையேயான உறவு ,வாடிக்கையாளர் வழங்கு நருக்கிடையேயான உறவு என ஏராளமான அளவில் தற்போதைய நம்முடைய சமூக சூழலில் விரிகின்றது இந்த உறவை தொடர்ந்து தக்கவைத்துகொள்ளவும் நீடித்து பராமரித்திடவும் பின்வரும் அடிப்படை வழிமுறைகளை பின்பற்றிடுக 1 நம்மை சார்ந்துள்ளவர்களுடைய அன்றாட செயல்களுக்கான நீண்டநாள் எதிர்பார்ப்புகளையும் குறுகிய எதிர்பார்ப்புகளையும் நம்மால் உறுதியாக பூர்த்திசெய்திடமுடியும் என்றபொறுப்பினை உறுதிபடுத்திடுக 2 கொஞ்சமாக பேசவும் அதிகமாக கவணிக்கவும் செய்யவேண்டும் என்ற அடிப்படையில் நமக்கு ஒரேஒரு நாக்கும் இரண்டு காதுகளும் இயற்கை வழங்கியிருக்கின்றது .அதனால் நாம் எப்போதும் நம்மை சுற்றியுள்ளமற்றவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்பதை முதலில் கவணிக்கவும்,பிறகு கொஞ்சமாக பேசுக. 3எப்போதும் உண்மையாகவும் நேர்மையாகவும் பிறரிடம் நடந்துகொள்க அதாவது நம்மைபற்றிய நம்பிக்கையானது ஒரேயொருநொடியில் கண்ணாடி மாளிகை உடைவதைபோன்று தூள்தூளாகிவிடும் ஆனால்அந்த நம்பிக்கையை நம்மீது வளர்த்திட நீண்ட நாட்களாகும் என்பதை மனதில் கொள்க 4 நாம்கூறிய வாக்குறுதியைஎந்தவிலைகொடுத்தாவது காத்திடவேண்டும் அவ்வாறு வாக்குறுதியை காத்திட இயலவில்லை யெனில் உடன் நேரடியாக உண்மையாகவும் நேர்மையாகவும் அதனை தன்னால் நிறைவேற்ற முடியாததை கூறி அதற்கான மாற்றுவழியை காண முயன்றிடுக 5 எப்போதும் மாறிகொண்டே இருக்கும் மனநிலையை விட்டிடுக. அதாவது நம்முடைய சொல்லும் செயலும் ஒரேமாதிரியாக மாறாத நிலையானதாக இருந்திடுமாறு பார்த்துகொள்க 6 ஆங்கிலத்தில் Sorry ,Thanks ஆகிய இரண்டும் பொன்னெழுத்துகளாகும் ஏனெனில் நம்மையறியாமல் நாம் ஏதேனும் தவறுசெய்திடும்போது உடனடியாக சம்பந்தபட்டவரிடம் அதற்காக மன்னிப்பு கோருவதும் அவ்வாறே எந்தவொரு செயல் அல்லது உரையாடல் முடியும்போதும் எதிரில் இருப்பவருக்கு நாம் நன்றி சொல்வதும் மற்றவர்களிடம் நம்மைபற்றிய நல்ல உயர்வான எண்ணத்தை நண்ணம்பிக்கையை உருவாக்கிடும் அடிப்படை செயலாகும்

செவ்வாய், 16 அக்டோபர், 2018

வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டண்மை சட்டம்2008


இந்தியாவில் 2008 ஆம் ஆண்டிற்கு முன்புவரை இந்திய கூட்டாண்மைசட்டம்1932 என்பது நடைமுறையில் இருந்துவந்தது மனிதநாகரிகம் தோன்றியபின்னர் ஏராளமான அளவில் மிகவும் அதிகமாக வியாபார உலகம் மாறிவந் துள்ளது . அதிலும்உலகம் முழுவது ஒரேபொருளாதார கிராமமாக மாறியுள்ள தற்போதைய சூழலில் இந்த இந்திய கூட்டாண்மை சட்டமானது இவ்வாறான மாறிய உலகபொருளாதாரத்திற்கு பொறுத்தமானதாக அமையவில்லை. இந்த இந்திய கூட்டாண்மைசட்டம்1932 ஆல் பின்வரும் பாதகமான செயல்கள் ஏற்படுகின்றன 1.கூட்டாண்மை நிறுவனத்தின் ஒவ்வொரு கூட்டாளியின் பொறுப்புகளும் வரையறையற்றதாக உள்ளன 2.கூட்டாளிகள் கூட்டாகவும் தனித்தனியாகவும் கூட்டாண்மை நிறுமத்தின் பொறுப்பினை ஏற்கவேண்டியுள்ளதுஅதனால்கூட்டாளிகளுடைய தனிப்பட்ட சொந்த சொத்துகளும் இந்த கூட்டாண்மையின்பொறுப்பிற்காக சரிகட்டும் நிலை ஏற்படுகின்றது 3 ஒரு கூட்டாளி கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து ஓய்வுபெறாதவரையிலும் மற்ற கூட்டாளிகள் ஏற்று அனுமதிக்காதவரையிலும் அவர் அந்த கூட்டாண்மை நிறுமத்தில் தன்னுடைய பங்கினை மற்றவர்களுக்கு மாற்றிதர இயலாது 4 இந்த கூட்டாண்மை நிறுவனத்தில் குறிப்பிட்ட நபர்களுக்கு மேல் கூட்டாளிகளாக சேர்த்து கொள்ளமுடியாது அதனால் வியாபாரத்திற்குகூடுதலாக தேவைப்படும் முதலீட்டினை கூடுதலான கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டுதம்முடைய வியாபாரத்தை மேலும்விரிவாக்கம் செய்திடவும் மேம்படுத்திடவும் முடியாது மேலேகூறிய காரணங்களினால் குறைந்த அளவு நிபந்தனை யுடன் நிறுமச்சட்டத்தின் பயன்களுடனும்கூட்டாண்மை நிறுமத்தின் நெகிழ்வு தன்மையுடனும் சேர்ந்த புதியவகை கூட்டாண்மை நிறுமம் தோன்றிடவேண்டிய கட்டாயத்தேவை மிக நீண்ட நாட்களாக இருந்துவந்தது மேலும் உலகளாவிய பணச்சிக்கலும் பொருளாதார மந்த நிலையும் ஏற்பட்ட 1980ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில்அமெரிக்க ஐக்கியநாடுகளில் ஏராளமான கூட்டாண்மை நிறுமங்கள் நொடித்தநிறுமமாக அறிவிக்கப்ட்டன அதனால் பல நிறுமங்கள் பல்வேறு சட்டசிக்கல்களில் மாட்டிக்கொண்டு அதிலிருந்து வெளியேறமுடியாமல் தவித்துகொண்டிருந்தன அதனை தொடர்ந்து நிறுமத்தின் அனைத்து கூட்டாளிகளும் கூட்டாண்மை நிறுமத்தின் கடனாளிகளுக்கு தங்களுடைய சொந்த சொத்துகளை விற்றுகடனிற்கு ஈடுசெய்திடும் இக்கட்டான சூழலிற்கு தள்ளப்படடனர் அதனால் 1991 ஆம் ஆண்டு முதன்முதலில் கூட்டாண்மை நிறுமத்தில் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை என்ற கருத்துரு அமெரிக்க ஐக்கியநாடுகளின் டெக்ஸாஸ்மாநிலத்தில் அறிமுகபடுத்தப்பட்டது அதனை தொடர்ந்து அமெரிக்க ஐக்கியநாடுகளின் மிகுதி உள்ள மாநிலங்களிலும் இதற்கான சட்டத்தை வகுத்து நிறைவேற்றின அவ்வாறே இங்கிலாந்து ஆஸ்திரேலியா வளைகுடா நாடுகள் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இந்த பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது இந்தியாவில் இங்கிலாந்து பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை சட்டம்2000, சிங்கப்பூர் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை சட்டம்2005 ஆகிய இரண்டு சட்டங்களின் அடிப்படையில் சிறந்த வல்லுனர்களின் குழுவானதுபொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை என்பது தனியானதொரு நபராகவும் அதனுடைய கூட்டாளி உறுப்பினர்கள் தனியாக இருக்குமாறும் இந்தியநாட்டில் உருவாக்க அனுதிக்கின்றது இந்த பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மையின் அடிப்படை கருத்துரு பின்வருமாறு 1இதுநிறுமங்களின்சட்டத்தின்படி வரையறுக்கப்பட்ட பொறுப்பினையும் கூட்டாண்மை நிறுமத்தின் நெகிழ்வுதன்மையும் கொண்டது 2.நிறுமங்களின் சட்டத்தின் அடிப்படையில்உருவாக்கப்படும் நிறுமம் போன்றேஇந்த நிறுமமானது அதன்கூட்டாளிகள் விலகினாலும் புதியவர்கள் சேர்ந்தாலும் நிலையானதும் தனியானதுமான நிறுமமாக அதனுடைய செயல்அமைந்திருக்கும் 3.வரையறுக்கப்-பட்ட பொறுப்பு கூட்டாண்மை நிறுவனமானது அதனுடைய சொந்தபெயரில் சொத்துகளை வைத்திருக்கவும் ஒப்பந்தங்களை ஏற்படுத்திடவும் முடியும் .4 இது தனிப்பட்ட உருவமைப்பை கொண்டுள்ளதால் அதனுடைய சொத்துக்களின் அளவிற்கே அதனுடைய பொறுப்புகளும் இருக்கும் அதனால்அதன் கூட்டாளிகளின் பொறுப்புகள் அவர்கள் ஏற்றுக்கொண்ட பொறுப்பின்அளவிற்குமட்டுமே பொறுப்பேற்க முடியும் .எந்தவொரு கூட்டாளியும்மற்ற கூட்டாளிகளின் தன்னிச்சையான செயல்களுக்கும் அனுமதிக்கப்படாத செயலிற்கும பொறுப்பேற்கமுடியாது அதாவது தனிப்பட்ட கூட்டாளி நபர்ஒருவர் மற்ற கூட்டாளியின் தனிப்பட்டமுறையிலான கூட்டாண்மை நிறுவனத்தின் இழப்பிற்கும் பொறுப்பிற்கும் பொறுப்பாகாமல் இதன்மூலம் பாதுகாப்பு அளிக்கப்படுகின்றது கூட்டாளிக்களுக்கிடையே ஏற்படுத்தப்படும் ஒப்பந்தம் அல்லது கூட்டாளிகளுக்கும் கூட்டாண்மை நிறுமத்திற்குமிடையே ஏற்படுத்தப்படும் ஒப்பந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் கூட்டாளிகளின் கடமைகளும் பொறுப்புகளும்பொறுப்பு வரையறுக்கப்பட்டபு கூட்டாண்மை சட்டத்திற்குள் நிருவகிக்கப்படுகின்றது அதாவது இந்த பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை என்பது மிகமேம்பட்ட கூட்டாண்மை நிறுமம் வரையறுக்கப்பட்ட நிறுமம் ஆகிய இரண்டும் சேர்ந்த கலவையான புதிய நிறுமம் ஆகும் இந்த புதிய பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை சட்டமானது 2006இல் நாடாளுமன்றத்தில் அறிமுகபடுத்தப்பட்டு 2009 இல் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை சட்டம் 2009 ஆக நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு இந்தியாவில் கொண்டுவரப்பட்டது இதில் 14 பகுதிகளும் 81 பிரிவுகளும் நான்கு அட்டவணைகளையும் கொண்டுள்ளது ஒப்பந்தம் எதுவும் இல்லாத நிலையில் கூட்டாளிகளின் கடமைகளும் பொறுப்புகளும் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை சட்டத்திற்குள் அட்டவணை-1இன்வாயிலாக நிருவகிக்கப்படுகின்றது தற்போது உள்ள கூட்டாண்மை நிறுமமானது இந்த சட்டத்தின்படிபொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுமம் ஆக மாற்றியமைத்து கொள்ள அட்டவணை-2 அனுமதிக்கின்றது தனியார் நிறுவனங்கள் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுமம் ஆக மாற்றியமைத்து கொள்ள அட்டவணை-3 அனுமதிக்கின்றது பங்குச்சந்தையில்பட்டியலிடப்படாத நிறுவனங்கள் வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை நிறுமம் ஆக மாற்றியமைத்து கொள்ள அட்டவணை-4 அனுமதிக்கின்றது இந்த சட்டத்தின் நான்காவது அட்டவணைமட்டும் 31.05.2009 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது தேசிய நிறுமசட்டவாரியம் பற்றிய பிரிவுகள் தவிர இந்த சட்டத்தின் மற்றபிரிவுகள் 31.03.2009 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது இந்த சட்டத்தின் பிரிவு 2(1)(n) பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை என்பதை பற்றி வரையறை செய்கின்றது இந்த சட்டத்தின் பிரிவு 5 இன்படி எந்தவொரு தனிப்பட்டநபரும் அல்லது கூட்டுரு நிறுமமும் சேர்ந்து இந்த பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமத்தை உருவாக்கிடமுடியும் நிறுமச்சட்டம் பிரிவு3 இன்படி 1.பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமமாக பதிவுசெய்யப்பட்ட நிறுமம் 2. இந்திய நாட்டின் எல்லைக்கு அப்பால் உருவாக்கப்பட்ட பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமம்3 இந்திய எல்லைக்கப்பால் உருவாக்கப்பட்ட நிறுமம் ஆயினும் (1) அது கூட்டுருவாக (2) நடப்பில் உள்ள சட்டத்தின்படி ஒரு கூட்டுறவுசங்கமாக பதிவுசெய்யப்பட்டிருந்த (3) நிறுமமல்லாத வேறு வகையில் கூட்டுருவாக உருவாக்கப்பட்ட அல்லது பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமமாக மத்திய அரசு அரசிதழின் அறிவிக்கப்பட்டநிறுமம் ஆகியவைஒரு கூட்டுரு நிறுமம் ஆகும் என இந்த சட்டத்தின் பிரிவு 2(1)(d)இல் கூட்டுரு நிறுமத்தை பற்றி வரையறுக்கப்படுகின்றது பொதுவாக நீதிமன்றத்தால்அல்லது மற்றசட்டத்தின்படிதனிநபர் ஒருவர் புத்திசுவாதினம் இல்லாதவர் எனஅறிவிக்கப்படாத எந்தவொரு நபரும் திவாலானவராகஇல்லாத நபரும் அவ்வாறு திவாலாவதற்காக பதவுசெய்யாத தனிப்பட்ட எந்தவொரு நபரும் இந்த பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமத்தில் கூட்டாளியாக சேரமுடியும் இந்த பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமத்தில் குறைந்தபட்சம் இரண்டு நபர்கள் கூட்டாளியாக கண்டிப்பாகஇருக்கவேண்டும்

திங்கள், 15 அக்டோபர், 2018

சிறந்த தலைவனுக்கு உரிய பண்பியல்புகளும் தகுதிகளும்


முன்பு ஒருகாலத்தில் நம்முடைய இந்தியாவில் இருந்த ஒரு சிறிய நாட்டில் மழைஇல்லாமல் பஞ்சத்தில் மிகசிரமமாக மக்கள் வாழ்ந்து வந்தனர் அதனால் அடுத்தவரும் மழைகாலத்திற்குள் ஆங்காங்கு புதிய ஏரிகளை உருவாக்குதல் ஏற்கனவே இருக்கின்ற ஏரிகளை தூர்வாருதல் செய்துவிட்டால் வரும் ஆண்டுகளிலாவாது மக்கள் தண்ணீர் பஞ்சமில்லாமல் வாழ்வார்கள் என அரசன் ஒருவன் தன்னுடைய இரு இளவரசர்களையும் அழைத்து இந்த பணியை ஓரிரு மாதத்திற்குள் முடிக்குமாறு உத்திரவிட்டார் உடன் ஒரு இளவரசன் நாட்டின் வடக்கு பகுதியிலும் மற்றொரு இளவரசன் நாட்டின் தெற்கு பகுதியிலும் தத்தமக்கு இட்ட பணியை முடிப்பது என நாடுமுழுவதுமான இந்த பணியை தமக்குள் பிரித்து செயல்படுத்துவது என முடிவுசெய்தனர் அதனை தொடர்ந்து முதல் இளவரசன் அரசனின் கருவூலத்தில் இருந்து ஏராளமான பணமும் பாதியளவு நாட்டின் படைவீரர்களையும் அழைத்து கொண்டு வடக்கு பகுதிக்கு சென்று அங்கு கிராமங்களில் வாழும் மக்களை அந்த பணியை ஈடுபடுத்தி அவர்களுக்கு போதுமான அளவு பொருட்களை அவர்கள் பணிபுரிவதற்காக வழங்கி புதிய ஏரிகுளங்களை அமைத்தல் ஏற்கனவே இருக்கும் ஏரிகுளங்களில் தூர்வாரி ஆழப்படுத்துதல் ஆகிய பணியை மிகசிறப்பாக தன்னுடைய பணியை முடித்து திரும்பி வந்தார் அப்போது அரண்மனையில் அவருடைய இளைய சகோதரனுக்கு அரசனாக முடிசூட்டுவதற்கான ஏற்பாடுநடந்து கொண்டிருந்ததை கண்ணுற்றுதும் நேராக தன்னுடைய தந்தையிடம் சென்று "நாங்கள் இருவருமே சமமாக பணிபுரிந்து தலைநகர் திரும்பியுள்ளபோது இளைய சகோதரனுக்கு மட்டும் அரசனாக பதவியேற்பு செய்வது சரியா முறையா இது தகுமா இது சரியான செயலா அண்ணன் இருக்கும் போது தம்பிக்கு அரசனாக முடிசூடுவது நீதிக்கு புறம்பான செயலன்றோ" என கோபத்துடன் பொரிந்து தள்ளினான் உடன் அரசனானவன் "மகனே அமைதியாக இரு உன்னுடைய தம்பி உன்னை போன்று அரசாங்க கருவூலத்திலிருந்து எடுத்து சென்ற பணத்தை செலவுஎதுவும் செய்யவில்லை அவ்வாறே அரசு படைவீரர்களையும் இந்த பணிக்காக பயன்படுத்தி கொள்ளவில்லை அதற்கு பதிலாக அந்தந்த கிராம மக்களையே இந்த பணிகளை முடிப்பதற்காக அவர்களாகவே முன்வந்து செய்திடுமாறு ஊக்குவித்து பயன்படுத்தி கொண்டது மட்டுமில்லாமல் அந்தந்த ஏரி குளங்களில் தேக்கிவைத்திடும் ஏரிகளில் நீரினை அனைவருக்கும் சமமாக பகிர்ந்து பயன்படுத்தி கொள்ளுமாறு பல்வேறு கால்வாய்களையும் உருவாக்கி அந்த பகுதியில் வாழும் அனைத்து மக்களிடமும் நன்மதிப்பை பெற்றுள்ளார் அதனால் உன்னுடைய தம்பிதான் சிறந்த தலைவனுக்கு உரிய பண்பியல்புகளை தகுதியையும் பெற்றுள்ளார் அதனால் அவரையே எனக்கு பிறகு அரசாளுவதற்காக அரசனாக முடிசூட்டுவதற்கு முடிவுசெய்தேன்" என பதில் கூறினான்

ஞாயிறு, 14 அக்டோபர், 2018

நிறுமங்களின் அனைத்து பொதுபங்குகளையும் டிமேட் (Demat)வடிவத்தில் மட்டுமே இனிமேல் கையாளப்படவேண்டும்


பொதுபங்குகளின் வெளியீடுகளின் மூலம் பொதுமக்களிடமிருந்து பங்குத்தொகை பெற்று பங்குசந்தையில் பட்டியலிடப்படாதஅனைத்து நிறுவனங்களும் 2.10.2018 முதல் மேலும் புதிய பங்குகளை வெளியிடுவதாக இருந்தாலும் அல்லது பங்குதாரர்களுக்கிடையே பங்குகளை பரிமாற்றம் செய்வதாக இருந்தாலும் டிமேட் எனும் புதிய வழிமுறையில் மட்டுமே செயற்படுத்திடவேண்டும் என நிறுமங்களின் விவகாரத்துறை அமைச்சகம் தனது சுற்றறிக்கையின் வாயிலாக உத்திரவிட்டுள்ளது அதாவது இதுவரையில் பங்குசந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே டிமேட் வடிவத்தில் இருந்து-வந்ததற்கு பதிலாக பங்கு சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்களும் சேர்த்து அனைத்து நிறுவனங்களும் மேலும்புதியதாக வெளியிடும் பங்களையும் பங்கு பரிமாற்றங்-களையும் டிமேட் வடிவத்தில் மட்டுமே 2.10.2018 முதல் செயற்படுத்தவேண்டும் என உத்திரவிட்டுள்ளது நிறுவனங்களில் பங்குபரிமாற்ற நடவடிக்கைகளில் மேலும் வெளிப்படைத்தன்மை,, முதலீட்டாளர்களின் பாதுகாப்பு நிறுமங்களின் நிருவாகத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மேலும் இதன்பொருட்டு நிறுமங்களின் விதிகளும் திருத்தப்பட்டிருக்கின்றன இதன்வாயிலாக கிடைக்கும் முக்கிய நன்மைகள் பின்வருமாறு 1பங்குசான்றிதழ்கள் காணாமல் போதல், திருட்டுபோதல், அழிந்துபோதல், மோசடியாக அபகரித்தல் என்பனபோன்ற அபாயங்களை அறவே அகற்றப்படும் 2. வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல், பினாமி பங்குதாரர் நடவடிக்கைகள் , நிறுமனங்கள் தம்முடைய பங்குதாரர்களுக்கு முன் தேதியிடப்பட்டு பங்குகளை வழங்குதல் என்பனபோன்ற பல்வேறு தவறான நடைமுறைகளை தடுக்கும் வகையில் நிறுவனங்களின் நிருவாக அமைப்புமுறை இதன்மூலம்மேம்படுத்தப்படும் 3.பங்குகளின் பரிமாற்றத்தின்போது முத்திரை வரி செலுத்துவதில் இருந்து விலக்கு. அளிக்கப்படும் 4. பங்குகளின் பரிமாற்றம்செய்தல் ,அடைமானம் செய்தல் போன்ற நடவடிக்கைகளை எளிமையாக்கபடும் ஆகியனவாகும் பொதுமக்களுக்காக பங்குகளை வெளியிடுவதற்கான விதிமுறைகள் 2014 விதிமுறை 9 க்குப் பின்,"9A. எனும் திருத்தம் செய்வதன் வாயிலாக இந்த புதிய நடைமுறை 2.10 .2018 நடைமுறைக்கு வருகின்றது அதனை தொடர்ந்து 2.10.108 முதல்எந்தவொரு பட்டியலிடப்படாத பொது நிறுவனமும் பொதுபங்குகளை இனி வெளியிடுவதாக இருந்தால் டிமேட் வடிவத்தில் மட்டுமே வெளியிடப்படவேண்டும் இதனை தொடர்ந்து பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்கள் அனைத்தும் வைப்புத்தொகைச் சட்டம், 1996 ன் விதிமுறைகளுக்கு இணங்க தாம் இதுவரை வெளியிடுதல் செய்து தற்போது நடப்பு பங்குகளை வைத்திருக்கும் அனைத்து பங்குதாரர்களின் பங்கு பத்திரங்களின் வகைக்கேற்ப உலகளாவிய பொதுப்பங்குகளின் சுட்டிஎண் (International security Identification Number (ISIN))ஒன்றினை ஒதுக்கீடு செய்து அந்த தகவலை பங்குதாரர்களுக்கு அறிவிப்பு செய்திடவேண்டும் மேலும் புதிய பங்குகளை வெளியிடுதல் அல்லது மிகைஊதிய பங்குகளை(Bonus Share) வழங்குதல் அல்லது உரிமை பங்குகள் (Right Share)வழங்குதல் ஆகியவற்றின் எந்தவொரு பங்குபத்திரமும் வழங்குவதற்கு, முன்னர், அதன் விளம்பரதாரர்கள், இயக்குநர்கள், முக்கிய மேலாளர்கள் ஆகியோரின் பங்குபத்திரங்கள் அனைத்தையும் நிறுமமானது டிமேட்வடிவத்திற்கு மாற்றிடவேண்டும் பத்திரங்கள் மற்றும் பங்கு பரிவர்த்தனை வாரிய (டெபாசிட்டரிகள் மற்றும் பங்கேற்பாளர்கள்) விதிமுறை 55Aஇன் கீழ் தணிக்கை அறிக்கையை ஒவ்வொரு ஆறுமாதத்திற்கு ஒருமுறை தங்களுக்கு அருகேயுள்ள நிறுமங்களின் பதிவாளருக்கு சமர்ப்பிக்கவேண்டும் பங்குசந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்களின் பங்குகளை வைத்திருக்கும் எந்தவொரு நபரும் தன்னுடைய பங்குகளை மற்றவர்களுக்கு பரிமாற்றம் செய்யவிரும்பினால் முதலில் தான் வைத்திருக்கும் பங்குகளுக்கான பத்திரத்தை டிமேட் வடிவத்தில் உருமாற்றம் செய்தபின்னரே மற்றவர்களுக்கு பங்குகளை பரிமாற்றம் செய்திடும் பணியை மேற்கொள்ளமுடியும் இத்தகையடிமேட் செய்வதால் எழும் எந்தவொரு குறைபாடுகளையும் அல்லது பங்குசந்தையில் பட்டியலிடப்படாத பொது நிறுவனங்களின் பங்குகளை வைத்திருக்கும் தனிநபர்களுக்கு குறைகள் ஏதேனும் இருந்தாலும் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதிய ஆணையத்தினை (The Investor Education and protection Fund Authority( IEPF)) அனுகிதீர்வு செய்து கொள்ளலாம்.

சனி, 13 அக்டோபர், 2018

நம்முடைய தனித்தன்மையே நம்மை பாதுகாத்திடும் என நம்பிக்கையுடன் வாழ்ந்திடுவோம்


ஒரு காட்டில் ஏராளமான மரங்கள் இருந்துவந்தன அனைத்தும் மகிழ்ச்சியுடன் இருந்துவந்தன அதில் ஒரேயொரு மரம் மட்டும் வளைந்தும் நெளிந்தும் பார்ப்பதற்கு அருவெறுப்பு அடையுமாறான தோற்றத்துடன் இருந்தது மற்றமரங்கள் அனைத்தும் இதனுடைய தோற்றத்தை பார்த்து ஏளனம் செய்து கின்டல் செய்து வந்தன அதனால் அந்த மரம் மட்டும் மிகவும் அவமான மனநிலையில் வாழ்ந்துவந்தது அதனோடு நம்முடைய வாழ்வே அவ்வளவுதான் என கூனிகுறுகி வாழ்ந்து வந்தது அந்த மரம் இந்நிலையி்ல் மரம் வெட்டுபவர்கள் குழுவாக அந்த காட்டிற்கு வந்துஅனைத்து மரங்களையும் வெட்டி எடுத்து சென்று கொண்டிருந்தனர் இந்த வளைந்து நெளிந்தும் அருவெறுப்பான தோற்றத்தை பார்த்துவிட்டு இந்த மரத்தினை மட்டும் வெட்டாமல் விட்டுவிட்டு சென்றனர் கிண்டலும் கேலியும் பேசிய மரங்கள் அனைத்தையும் மரம் வெட்டுபவர்கள் வெட்டியெடுத்து சென்றனர் ஆனால் கிண்டலுக்கு ஆளான மரத்தை மட்டும் வெட்டவில்லை நீண்டநாட்கள் உயிர்வாழ்ந்தது அதனால் நம்முடைய தனித்தன்மையே நம்மை பாதுகாத்திடும் என நம்பிக்கையுடன் வாழ்ந்திடுவோம்

வெள்ளி, 12 அக்டோபர், 2018

நிறுமங்களின் சட்டம் 2013 இன்படி நிறுமங்களுக்கான சுதந்திரமான இயக்குநர்


அறிமுகம் எந்தவொரு நிறுவனத்தின் ஆளுகையிலும் கொள்கைகளை வகுப்பது அந்த கொள்கைகளின் படி அந்நிறுவனம் சரியான வழியில் செல்லுமாறு வழிகாட்டி செயற்படுத்துவது அதனை தொடர்ந்து அந்நிறுவனம் நல்ல வெற்றிகரமான நிறுவனமாக வளரச்செய்வது ஆகிய அனைத்திற்கும் அடிப்படையான அந்நிறுவனத்தை கட்டுப்படுத்துவதும் வழிநடத்துவதும் அந்நிறுவனத்தின் இயக்குநர்களின் குழுக்களாகும் இந்தியாவில் முதன்முதலாக இவ்வாறான இயக்குநர்களின் குழுக்களில் கூடுதலான அதிகாரமும் பொறுப்புகளையும் கொண்ட முற்றிலும் புதுமையான வகையில் சுதந்திரமான இயக்குநர் எனும் புதிய வரையறை ஒன்றினை ஒரு நிறுவனத்தினை நன்கு வழிநடத்தி செல்வதற்காக அவர்களுக்கான அதிகாரங்கள் பொறுப்புகள் ஆகியவற்றை முழுமையாக விவரிக்கும் நிறுமங்களின் சட்டம் 2013 இல் பிரிவு 2(47) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ஏற்கனவே நடைமுறையில் இருந்த நிறுமங்களின் சட்டம் 1956 இன்படி இந்த வகையான சுதந்திரமான இயக்குநர் என்றஒரு வகைநபர்களை நேரடியாக நியமனம் செய்வதற்கான வெளிப்படையான விதிகள் எதுவும் இல்லை ஆனால் அதற்கு பதிலாக நிறுவனங்களின் பங்குகளை பங்குச்சந்தையில் விற்பணைக்காக பட்டியலிடும் ஒப்பந்தப் பிரிவு49 இல் மட்டும் பங்குகளை விற்பணைக்காக பட்டியலிடும் அனைத்து நிறுவனங்களும் சுதந்திரமான இயக்குநர்களை கண்டிப்பாக நியமிக்கவேண்டும் என தூண்டப்படும் செயல்வாயிலாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது அதன்பிறகு இந்திய அரசின் நிறுவன விவகாரங்களுக்கான அமைச்சகமானது நிறுவனங்களின் சட்டம் 1956இல் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு பங்குச்சந்தையில் விற்பணைக்காக தத்தமது பங்குகளை பட்டியலிடும் எந்தவொரு நிறுவனத்திலும் அந்நிறுவனத்தின் ஆளுகையை மேற்பார்வையிடுகின்ற சுதந்திரமான இயக்குநர்களையும் சேர்ந்தபுதிய இயக்குநர்களின் குழுவாக அமைந்திடுமாறு சுதந்திரமான இயக்குநர்களை அந்நிறுவனத்தில் நியமிப்பதற்கு தேவையான செயலை மேற்கொள்வதற்காக முயற்சி செய்து செயல்படுத்தியது எனினும் இந்த முயற்சியின் பலனாக நியமிக்கப்பட்ட சுதந்திரமான இயக்குநர்களுக்கான கடமைகள், பொறுப்புகள், அதிகாரங்கள் ஆகியவற்றை பற்றி எந்தவொரு விளக்கங்களும் அதில் இல்லாத நிலையில் இந்த சுதந்திரமான இயக்குநர்களை நியமிக்கும் பணியை அது தெளிவாக முழுமையாக செயல்டுத்த தவறிவிட்டது என்றும் இந்த செயல் பயனற்றது என்றும் நிரூபிக்கப்பட்டுவிட்டது அதனால் சிறந்த ஆளுகையுடைய ஒரு நிறுவனத்தின் நிருவாகத்தினை சுதந்திரமான இயக்குநர்களை கொண்டு மிகச்சரியாக செயல்படுத்திடுவது என்பது மிகவும் சிக்கலானதும் இக்கட்டானதும் ஆன நிலையாகி-விட்டது . அதனால் சுதந்திரமான இயக்குநர்கள் தொடர்பான ஒருங்கிணைந்த மிகவலுவான சட்டம் ஒன்று மிகஅத்தியாவசிமாக தேவையென்ற நிலையில் தற்போதைய புதிய நிறுமங்களின் சட்டம் 2013 இல் பிரிவு 2 (47) ஐ நடைமுறைபடுத்தவேண்டிய கட்டாய சூழல் உருவானது அவ்வாறான சுதந்திரமான இயக்குநர்கள் நியமனம் அவர்களின் அதிகாரங்கள் , கடமைகள் ,பொறுப்புகள் ஆகியவை பற்றிய முழுவிவரங்களை பற்றி இந்த தொடரில் காண்போம் சுதந்திரமான இயக்குநர்களின் நியமனம் இந்த சட்டமானது ஒருநிறுவனத்தில் உள்ள இயக்குனர்களின் மொத்த எண்ணிக்கையில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கையில் சுதந்திரமான இயக்குனர்களை நியமிக்கவேண்டுவது பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒரு குறிப்பிட்ட கடமையாகும் என விதிக்கின்றது மேலும் மத்திய அரசு இந்த தேவையின் எல்லைக்குள் நிறுவனங்களின் மற்ற சட்டவிதி / விதிகளை உள்ளடங்கிடுவதற்காக அனுமதிக்கின்றது. ஆகவே மேலே கூறிய நிபந்தனைகளானது நிறுவனத்தில் செலுத்தப்பட்ட மூலதனத்தில் இந்திய ரூபாய் 1 பில்லியன் (சுமார் அமெரிக்க டாலர்$ 16 மில்லியன் ) அல்லது விற்பணை வருமானம் இந்திய ரூபாய் 3 பில்லியன் (சுமார் அமெரிக்கடாலர் $ 48 மில்லியன்) அல்லது ஒட்டுமொத்த கடன் / கடன் பத்திரங்கள் / வாங்கிய கடன்கள் இந்திய ரூபாய் 2 பில்லியன் (சுமார் அமெரிக்க டாலர்$ 3225065) ஐவிட கூடுதலாக இருக்கும் எந்தவொரு பொதுத் துறை நிறுவனங்களுக்குப் பொருந்தும் இந்த சுதந்திரமான இயக்குநர்களை நியமிக்கும் பணியை எளியதாக ஆக்கும் பொருட்டு மத்தியஅரசும் மத்தியஅரசால் அங்கீரிக்கப்பட்ட நிறுவனங்களும் இணைந்து சுதந்திரமான இயக்குநர்களாக நியமிக்கதகுதியுள்ள தயார்நிலையிலுள்ள நபர்களின் விவரங்களடங்கிய பட்டியலான தரவுவங்கியை பராமரிக்கவேண்டும் இந்த தரவுவங்கியிலிருந்து மேற்கூறிய நிறுவனங்கள் தத்தமக்குத்தேவையான சுதந்திரமான இயக்குநர்களை தெரிவுசெய்து நியமித்து கொள்ளலாம் ஆனால், மேற்கூறிய சுதந்திரமான இயக்குநர்கள் நியமிக்கும் தேவையை பூர்த்தி செய்வதற்கு தகுதியான நபர்கள் போதுமான அளவில் இந்த தரவுவங்கியில் தற்போது உள்ளனரா என்பதே மிகமுக்கியமான பிரச்சினையாகும் .இவையே இந்நிறுமங்கள் சட்டம் 2013இன் தேவையை பூர்த்தி செய்வதற்கு கடினமான வாய்ப்புகளாக இருப்பதை காணலாம் இதனை நிறுவனங்கள் ஒருவருடத்திற்குள் செயல்படுத்திடவேண்டும் என இந்த நிறுமங்கள் சட்டம் 2013 ஆனது அனுமதித்தாலும் இந்தியாவில் போதுமான அளவு தகுதியுள்ள நபர்களை மேம்படுத்தி உருவாக்கிடும்வரை நிறுவனங்கள் மேற்கூறிய சுதந்திரமான இயக்குநர்களை கட்டாயமாக நியமித்திடவேண்டும் என கூறும் நிறுமங்கள் சட்டம் 2013ஐ நடைமுறை படுத்துவது மிகவும் கடினமான பணியாக இருக்கும் ஆகவே இயக்குநர்கள் குழுவின் பொறுப்புகளைச் நிருவகிக்கத் தேவையான திறனை உருவாக்க பொருத்தமான நபர்களை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் / அமைப்புகள் மூலமாக சுதந்திரமான இயக்குநர்களாக மேம்படுத்திடுவதற்கான பயிற்சி அமர்வுகளை ஏற்பாடு செய்வதே தற்போதைய முதன்மையான பணியாகும்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...