சனி, 24 மார்ச், 2018

பெற்றோர்களுடன் ஒத்துவாழ முயன்றிடுவோம்


ஒரு நாள் என்னுடைய பெற்றோர் கேவலம் ஒரு இருசக்கர வாகணத்தை (bike)கூட எனக்கு வாங்கிதரக்கூடாது என்றும் நான் ஒரு மருத்துவராகவோ அல்லது ஒரு பொறியாள-ராகவோ ஆவதற்கு கனவு காணகூடாது எனக்கூறுவதற்கு ம் அவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது இவ்வாறான கட்டுபாடுகளுடன் இந்த வீட்டில் இனி ஒரு நிமிடம் கூட வாழமுடியாது அதனால் இப்போதே இந்த வீட்டை விட்டு வெளியேறுவதுதான் சரியான செயலாகும் என்றும் , நான் ஒரு பெரிய மனிதனாக ஆகாதவரை இந்த வீட்டிற்கே திரும்புவதில்லை என்றும் முடிவுசெய்து , மிகவும் கோபமாக எங்களுடைய வீட்டிலிருந்து வெளியேறினேன் கோபத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியாமல் வெளியேற முடிவுசெய்திடும்போது செலவிற்கு பணம் வேண்டுமே அதனால் என்னுடைய தந்தையின் பணப்பையை திருடி பாக்கெட்டில் வைத்து கொண்டுதான் வெளியேறினேன் அவ்வாறு கோபமாக நான் வீட்டைவிட்டு வெளியேறும்போது கவணிக்காமல்என்னுடைய தந்தையின் முழுக்காலணிகளை என்னுடைய கால்களில் அணிந்து கொண்டிருப்பதை உணரவில்லை. பேருந்து நிலையத்தை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தேன் வேகமாக நடக்கும்போது காலில் தரையிலிருந்த கற்கள் குத்தி வலி ஏற்படுத்தி கொண்டிருந்தன பேருந்துநிலையம் வந்து சேர்ந்தபோது பேருந்து எதுவும்அப்போது இல்லை அதனால் காலில் ஏன்கற்கள்குத்துகின்றன என குனிந்து பார்த்தபோது தந்தையின் முழுக்காலணி கிழிந்திருந்ததால் தரையிலிருந்த கற்கள் என்னுடைய காலை குத்தி பதம்பார்த்து வந்து கொண்டிருந்தன , என்ன செய்வது என்று தெரியாமல், நான் என் அப்பாவின் பணப்பையை பார்க்க ஆரம்பித்தேன். அதில் எனக்கு ஒரு மடிக்கணினி வாங்கியதற்கான பட்டியலும் அதனை வாங்குவதற்கான கடன் உறுதி ஆவணமும் இருந்தன அதிர்ச்சியுடன் அதனை பார்த்து கொண்டிருந்தேன் மேலும் அதனோடு மற்றொரு குறிப்புத்தாளும் இருந்தது அது என்னுடைய தந்தையின் அலுவலக மேலாளரிடமிருந்தான கடிதமாகும் அதில் எப்போதும் நல்லஆடையை அணிந்து அலுவலகத்திற்கு வருமாறும் காலில் கிழியாத நல்ல முழுக்காலணியை அணிந்து வருமாறும் கோரியிருந்தது அதனை கண்ணுற்றதும் எனக்கு மேலும் அதிர்ச்சியாகிவிட்டது அந்நிலையில் என்னுடைய தாயும் அவ்வப்போது என்னுடைய தந்தையிடம் புதிய ஆடைகளை வாங்கி அணியுமாறும் புதிய முழுக்காலணியை வாங்கி அணிந்து அலுவலகத்திற்கு செல்லுமாறும் நினைவூட்டி கொண்டேயிருப்பது என்னுடைய நினைவிற்கு வந்தது என்னுடைய தந்தையோ தற்போதைய தன்னுடைய மாதஊதியத்தில் வீட்டின் அன்றாட செலவிற்கே சமாளிக்கமுடியாமல் தத்தளித்து நம்முடைய மகனின் படிப்பிற்காக அவ்வப்போது கடன் வாங்கி சரிசெய்து வருகின்றோம் அதனால் இன்னும் ஆறுமாதம் கழித்து அவ்வாறு செய்கின்றேன் என தன்னுடைய ஆற்றாமையால் சமாளிப்பதும் என்னுடைய நினைவில் வந்து என்னை அலைக்கழித்தது அதுமட்டுமல்லாது அவருடைய ஸ்கூட்டரை கொடுத்து அதற்கு பதிலாக நான்கோரியவாறு பைக்காக மாற்றி கொள்வதற்கான கடிதம் ஒன்றும் இருந்ததை கண்டேன் அதனால் மனவருத்தம் அதிகமாகி மனம் திருந்தி என்னுடைய பெற்றோரை கண்டு மன்னிப்பு கோரிட வீட்டைவிட்டு வெளியேறிய வேகத்தைவிட வேகமாக வீட்டிற்கு திரும்பி ஓடிவந்தேன் , நான் வீட்டை விட்டு வெளியேறியபோது, என்னுடைய தந்தையின் ஸ்கூட்டர் வாயிலில் நின்று கொண்டிருந்தது ஆனால் தற்போது அது அங்கு இல்லை. அதனால் மிகவும் அதிர்ச்சியாகி எனது தந்தை தன்னுடைய ஸ்கூட்டரை கொடுத்துவிட்டு எனக்கு பைக் வாங்குவதற்கு சென்ற இடத்திற்கு வேகமாக ஓடிசென்றேன் எனக்கு துக்கம் கட்டுபடுத்தமுடியாமல் என் அப்பாவைப் பார்த்து, நான் அவரை இறுக்கமாக கட்டி அணைத்து, "அப்பா எனக்கு பைக் தேவையில்லை" என சத்தமாக அழுது கொண்டே கூறினேன் இனி உங்களை இவ்வாறு தொந்திரவுசெய்திடமாட்டேன் உங்களுடைய ஸ்கூட்டருடன் நாம் வீடடிற்கு திரும்பி செல்வோம் என வற்புறத்தி அழைத்து கொண்டு திரும்பினேன் ஆம் நம்முடைய பெற்றோர்கள் எந்தவொரு வலி, துன்பம் போன்ற எதுவும் நமக்கு ஏற்படாமல் நம்முடைய வளர்ச்சிக்காகவும் மகிழ்ச்சியான வாழ்விற்காகவும் தங்களுடைய தேவைகளை தியாகம் செய்து மெழுகு வர்த்தி போன்று தங்களை வருத்திகொண்டு வாழ்ந்துவருவதை உணர்ந்து அவர்களுடன் ஒத்து வாழ முடிவுசெய்திடுவோம் வாருங்கள்

செவ்வாய், 13 மார்ச், 2018

பதிலுக்குபதில்


விவசாயி ஒருவர் தன்னுடைய வயலில் தர்பூசணிகளை பயிரிட்டிருந்தார் . அவர் தன்னுடைய வயலில் பயிரிட்ட அந்த தர்பூசனியை நன்றாக பராமரித்து செய்துவந்தார், அதனால் அவருடைய வயல் முழுவதும் தர்பூசனி காய்த்து குலுங்கின ஆனால் சில உள்ளூர் சிறுவர்கள் அந்த தர்பூசனிகளை அவர் இல்லாதபோது அவருடைய வயலில் திருட்டுதனமாக தர்பூசணிகளை அறுவடைசெய்து தின்று காலிசெய்து வந்தனர் அதனால் அந்த விவசாயி மிகவும் அவதிப்பட்டார், அதனை தொடர்ந்த இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்வுசெய்து அல்லது இந்த செயலை தவிர்ப்பதற்கு என்ன மாற்றுவழி செய்வதுஎன தவித்து சோர்வுற்றார் கடைசியாக புத்திசாலிதனமான சிந்தனை ஒன்று அவருக்கு தோன்றியது உடன் அந்த திட்டத்தை செயல்படுத்திட முடிவுசெய்தார் அதாவது அவருடைய வயலில் , "எச்சரிக்கை! இந்த வயலில் உள்ள தர்பூசனிகளில் ஒன்றுமட்டும் சயனைடு என்ற விசம் உட்செலுத்தப்பட்டது" என்றஎச்சரிக்கை செய்தியை வைத்து சென்றார் அடுத்தநாள் அந்த தற்பூசனி விளைந்திருந்த வயலிற்கு வந்த சிறுவர்கள் இந்த எச்சரிக்கை செய்தியை படித்தவுடன் "ஐய்யய்யோ! நமக்குஇந்ததர்பூசனி பழமே வேண்டாம்"என ஓடிவிட்டனர் இருந்தாலும் மீண்டும் அந்த வயலிற்கு திரும்பிவந்து இந்த விவசாயியானவர் நாம் இந்த தற்பூசனி பழத்தை சாப்பிடக்கூடாது என நம்மை பயமுறுத்துவதற்கு இவ்வாறு செய்துள்ளார் அதனால் நாமும் அந்த விவசாயியால் இதனை பயன்படுத்தமுடியாதவாறு செய்திடுவோம் என முடிவுசெய்துஅதற்கு பதிலடியாக "எச்சரிக்கை! இந்த வயலில் உள்ள தர்பூசனிகளில் ஒன்றுமட்டுமன்று இரண்டுமட்டும் சயனைடு என்ற விசம் உட்செலுத்தப்பட்டது" என்ற எச்சரிக்கை செய்தியை எழுதிவிட்டு சென்றுவிட்டனர் அதற்கடுத்த நாள் விவசாயி தன்னுடைய வயலை வெகு தூரத்தில் இருந்து பார்த்த போது தன்னுடைய வயலில் அனைத்து தர்பூசனிகளும் பறிக்காமல் பத்திரமாக இருப்பதை கண்ணுற்று மனநிம்மதியுடன் வயலிற்கு வந்து சேர்ந்தார்ஆனால் அந்த சிறுவர்கள் வைத்த எச்சரிக்கை செய்தியை பார்த்தபோது திகைத்து மனசோர்வுற்ற தலையில் கைவைத்து கொண்டு வயலில்அமர்ந்து விட்டார்

புதன், 7 மார்ச், 2018

மற்றவர்களை எப்போதும் கண்ணியமாகவும் மற்றவர்களுடைய பார்வையில் இருந்து எந்தவொரு செயலை பார்க்கவும் கற்றுக்கொள்க


முன்னொரு காலத்தில், ஒரு சிறிய நகரத்தில் தன்னுடைய கண்களால் வெளிஉலகை காண முடியாத ஒரு மனிதன் வாழ்ந்து வாழ்ந்தார். அவர் கண் பார்வையற்ற குருடனாக இருந்தார். ஆனாலும், இரவில் அவர் வெளியே செல்லும் போதெல்லாம் தன்னுடைய கையில் ஒளிரும் விளக்கு ஒன்றை எடுத்துச் செல்வது வழக்கமாகும். அவ்வாறு ஒருநாள் இரவு அவர் வெளியே சென்று இரவு உணவு உண்ட பிறகு தன்னுடைய கையில் ஒளிரும் விளக்கு டன் தன்னுடைய வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, இளைஞர்கள் குழு ஒன்று சிரித்து பேசிகொண்டு எதிரில் வந்தது. இவர் கண்பார்வையில்லாத குருடனாயிருந்தாலும், பிரகாசிக்கிற விளக்கை கையில் ஏந்திக்கொண்டு வருவதை கண்ணுற்று அவரைப் பற்றி கிண்டலும் கேலியும் கருத்துத் தெரிவித்து கொண்டிருந்தனர் அவர்களுள் ஒருவன் , "ஐயா! நீங்கள் கண்பார்வையில்லாத குருடனாக இருக்கின்றீர்கள், உங்களால் எதையும் பார்க்க முடியாது! ஆயினும் ஏன் நீங்கள் கையில் ஒளிரும் விளக்கை ஏந்தி கொண்டு நடக்கின்றீர்கள்? " என அவரிடம் வினவினான் உடன் கண்பார்வையற்ற அம் மனிதர், "ஆமாம் தம்பி, துரதிர்ஷ்டவசமாக, நான் குருடனாக இருக்கிறேன், நான் எதையும் என்னுடைய கண்களால் பார்க்க முடியாது என்பது சரிதான் ஆனால் இந்த இரவுநேரத்தில் கண்பார்வையுடைய உங்களை போன்றவர்கள் இந்த ஒளி விளக்கு என்னுடைய கைகளில் இல்லையெனில் என்மீது வந்து மோதி கீழே நான்விழாமல் நடந்து செல்லவேண்டாமா அதனால் தான் "என்றார். உடன் அந்த இளைஞர்கள் குழுவானது வெட்கத்துடன் தங்களுடைய தவறினை உணர்ந்தது அவரிடம் தாங்கள் தவறாக அவரை பார்த்து கிண்டலும் கேலியமாக பேசியதை மன்னிக்குமாறு தங்களுடைய நடத்தைக்கு மன்னிப்பு கோரியுது. ஆம் மற்றவர்களை எப்போதும் கண்ணியமாகவும் மற்றவர்களுடைய பார்வையில் இருந்து எந்தவொரு செயலை பார்க்கவும் கற்றுக்கொள்க

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...