திங்கள், 30 ஜூலை, 2018

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரும் ஏதோவொரு காரணத்திற்காக வே உயிர்வாழ்கின்றன


ஒரு நகரத்தில் அரசனொருவன் அரசாட்சி செய்துவந்தான் அவன் இந்த உலகில் தன்னைத்தவிர அனைத்து உயிரினங்களும் வாழ்வது தேவையற்றது என்ற இறுமாப்புடன் இருந்துவந்தான் ஒருமுறை தன்னுடைய நாட்டினை சுற்றி பார்வையிட்டு கொண்டே வந்தபோது கொஞ்சம் புழுக்களை பறவை ஒன்று தனக்குமுன்புறம் கீழே தவற விட்டதை பார்த்தான் இந்த புழு எதற்காக உயிர்வாழவேண்டும் என அதனை காலால் மிதித்து கொண்டு சென்றான் சிறிதுநாளில் அவனுக்கு கண்பார்வை மங்கலாகிவிட்டது அதனால் அந்த நகரத்தில்உள்ள அனைத்து மருத்துவர்களையும் அழைத்து அவர்களுக்கு ஏராளமான பணத்தையும் பொருட்களையும் வழங்கி தன்னுடைய பார்வை குறைபாட்டினை சரிசெய்திடுமாறு கோரினான் ஆயினும் யாராலும் அந்த அரசனுடைய பார்வை குறைபாட்டினை சரிசெய்திடமுடியவில்லை கடைசியாக ஒரு மருத்தவன் வந்து மாவு போன்ற பொருளை அந்த அரசினிடம் கொடுத்து தினமும் மூன்று வேளையும் சாப்பிட்டபின் அந்த மாவினையும் தவறாமல் விழுங்கி வருமாறு கூறியதை தொடர்ந்து அந்த அரசன் அந்த மருத்தவன் கூறியவாறு பின்பற்றி வந்தபின்னர் சிறிதுநாட்களில் அவனுடைய பார்வை குறைபாடு சரியாகி வழக்கமான பார்வைத்திறன் திரும்பிவிட்டது அதனால் அந்த மருத்தவனுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் அந்த அரசன் வழங்கினான் அதனோடு தன்னுடைய பார்வை குறைபாட்டினை சரிசெய்வதற்காக வழங்கிய மாவுபோன்ற மருந்தினை எதிலிருந்து தயார்செய்தான் என அரசன் அந்த மருத்துவனிடம் வினவியபோது அந்த அரசன் அலட்சியாமாக இந்த புழு உயிர் வாழ்வதால் என்ன பயன் என தன்னுடைய கால்களால் மிதித்து நடந்து சென்றானே அந்த புழுவிலிருந்துதான் இவ்வாறான கண்பார்வை தெளிவாவதற்கான மருந்து தயார்செய்தேன் என மருத்துவன் பதில் கூறியதை தொடர்ந்த இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரும் ஏதோவொரு காரணத்திற்காக வே உயிர்வாழ்கின்றன என அறிந்து கொண்டதோடு தன்னுடைய இறுமாப்பினை கைவிட்டுவிட்டான்

வியாழன், 26 ஜூலை, 2018

நாம் மற்றவர்களிடம் எவ்வாறு அனுகுகின்றோமோ அதற்கேற்றவாறான உதவிதான் நமக்கு கிடைக்கும்


ஒருநகரத்தில் நல்ல தயாளகுணமுள்ள பெரிய பணக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான் ஒரு பிச்சைக்காரன் அந்த பணக்காரனை அனுகி "ஐயா தருமபிரபுவே இந்த ஏழைக்கு ஐந்து ரூபாய் கொடுத்தால் உங்களுக்க புன்னியமாக இருக்கும்" என இறைஞ்சினான் உட.ன் அந்த பணக்காரன் "உன்னிடம் நான் என்ன ஐந்துரூபாய் கடன்வாங்கிவிட்டுதிரும்பி தராமல் உள்ளேனா என்னிடம் வந்து மிகச்சரியாக ஐந்துரூபாய் கொடு என்று கேட்கின்றாயே போ போ தூர போ இந்தா இரண்டு ரூபாய் மட்டும் வாங்கி கொண்டு போய்சேர்" என இரண்டு ரூபாய் மட்டும் அந்த பிச்சைக்காரனுக்கு கொடுத்து விரட்டியடித்தான்

சிறிது நேரம் கழித்து இரண்டாவது பிச்சைக்காரன் அதே பணக்காரனிடம் வந்து "ஐயா நான் கடந்த ஒருவாரமாக சாப்பிடவே இல்லை அதனால் நான் பசி பட்டினியோடு இருக்கின்றேன் எனக்கு ஒருவேளை உணவு அளித்தால் போதும்"என கோரினான் உடன் பணக்காரன் அந்த பிச்சைகாரனிடம் "ஒருவேளை சாப்பிடுவதற்காக உனக்கு எவ்வளவு பணம் தேவை" என வினவியபோது "ஐயா நீங்கள் தருமபிரபு நீங்கள் மனமுவந்துஎன்ன கொடுக்கின்றீர்களோ அதுவேபோதுமானதாகும்" என இரண்டாவது பிச்சைகாரன் கூறியதை தொடர்ந்து "ஒருவேளை சாப்பிட பத்துரூபாய் போதும் இந்தா பத்துரூபாய்" என அந்த பணக்காரன் இரண்டாவது பிச்சைக்காரனுக்கு அவன்கேளாமளேயே பத்துரூபாய் கொடுத்தனுப்பினான்

அதன்பின்னர் மூன்றாவதாக ஒருபிச்சைக்காரன் அந்த பணக்காரனிடம் வந்து "ஐயா தருமபிரபுவே ஊரெல்லாம் உங்களுடைய தயாளகுணத்தை பற்றி பேசிக்கொண்டிருக்-கின்றார்கள் அதனால் உங்களை போன்றவர்களை கண்களால் பார்த்தாலே போதுமென இங்கு வந்துள்ளேன்" என கூறியதை தொடர்ந்து அந்த பணக்காரன் "உள்ளே வாருங்கள் வந்து இந்த இருக்கையில் அமருங்கள் " என அந்தமூன்றாவது பிச்சைக்காரனை அமரவைத்தான் தொடர்ந்து " உங்களுக்கு என்ன வேண்டும்" என பணக்காரன் அந்த மூன்றாவது பிச்சைகாரனிடம் வினவியபோது "ஐயா தருமபிரபுவே உங்களிடம் எதையும் கேட்டு பெறுவதற்காக நான் இங்கு வரவில்லை உங்களை போன்ற தயாள குணமுடை-யவர்களை ஒருமுறையாவது நேரில்சந்திக்கவேண்டியே இங்குவந்தேன் " எனமீண்டும் கூறினான். அதனைதொடர்ந்த அந்த பணக்காரன் தன்னுடைய பணியாளர்களின் மூலம் அந்தபணக்காரனுடைய வீட்டிற்கு அருகிலேயே வீடு ஒன்றினை கட்டி முடித்து அங்கேயே அந்தமூன்றாவது பிச்சைகாரனுடைய வாழ்நாள் முழுவதும் தங்கிவாழுமாறு தேவையான பொருட்களையும் வழங்கி பார்த்து கொண்டான்.

நாம் மற்றவர்களிடம் எவ்வாறு அனுகுகின்றோமோ அதற்கேற்றவாறான உதவிதான் நமக்கு கிடைக்கும்

புதன், 11 ஜூலை, 2018

நாம் என்ன கொடுக்கின்றோமோ அதுவே நமக்கு பன்மடங்காக திரும்ப கிடைக்கும்


நடுத்தர வயது மனிதனொருவன் ஒரு பாலைவனத்தில் வழிப்பயனம் செய்துகொண்டிருந்தான் அப்பயனத்தின்போது தன்னுடைய வீட்டிற்கு திரும்பி செல்லும் தன்னுடைய வழக்கமான பாதையை தவறவிட்டுவிட்டதால் சரியான பாதையை கண்டுபிடித்திடமுடியாமல் தவித்து கொண்டிருந்தான் இருந்தாலும் எப்படியும் கண்டுபிடித்துவிடலாம்என முழுநம்பிக்கையுடன் நடந்து கொண்டிருந்தான் ஆயினும் அவனிடம் கைவசம் இருந்த குடிநீர் இரண்டுநாட்களுக்கு முன்பே காலியாகவிட்டது அதனால் அவனால் நடக்ககூடமுடியாமல் மிகவும் சோர்வுற்று தள்ளாடி நடந்துகொண்டிருந்தான் இன்னும் சிறிதுநேரத்திற்குள் குடிப்பதற்கான தண்ணீர் கிடைக்கவில்லையெனில் தன்னுடைய வாழ்க்கை அதோடு முடிந்துவிட்டது என மிகஅவநம்பிக்கை அவனுக்கு மெல்ல ஏற்படலாயிற்றது அதனால் அந்தமனிதன் மெதுவாக ஊர்ந்துசெல்லஆரம்பித்தான் இந்நிலையில் எதிரில் குடிசையொன்று தென்பட ஆரம்பித்தது அதுஒருமாயைஅல்லது மாயைதோற்றமாககூட இருக்கலாம என அவநம்பிக்கையுடன் பார்வையிட்டான் ஆனால் என்ன ஆச்சரியம் உண்மையாகவே அங்கு ஒரு சிறுகுடிசை இருந்ததை கண்ணுற்றான் அதனை தொடர்ந்து தொய்வுற்ற அவனுடைய நம்பிக்கையை கைவிட்டு மிகமெதுவாக தன்னுடைய கடைசிதிறனைபயன்படுத்தி அந்த குடிசைஅருகில் நகர்ந்து சென்றான் தொடர்ந்து கண்டிப்பாக இந்த குடிசைக்குள் குடிப்பதற்கான தண்ணீர் இருக்கும் என அதிகநம்பிக்கையுடன் அந்த குடிசைக்குள் நுழைந்து தேடினான் அங்கு தரைக்கு அடியிலிருந்து கைகளால்இயக்கி தண்ணீரை பெறும் கைபம்ப் ஒன்று மட்டும் இருந்ததை பார்த்தவுடன் அவனுடைய இதயம் நம்பிக்கையுடன் மிகவேகமாக துடிக்கஆரம்பித்தது மிகவேகமாக அதிக நம்பிக்கையுடன் நகர்ந்து சென்று அந்த கைபம்ப்பினை இயக்கஆரம்பித்தான் ஆனால் அதனுடைய குழாயில் வெறும் காற்று வெளியேறும் சத்தம் மட்டுமே கேட்டதேயொழிய தண்ணீர் வரும்வழியை காணோம் அதனால் அடடா என்னவொரு ஏமாற்றம் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என அவனுடைய மனம் சோர்வுற்றது தொடர்ந்து மனதில் ஏமாற்றமும் அவநம்பிக்கையும் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்தது அதனால் அவனுடைய கடைசி நம்பிக்கையும் இழந்ததோடு மட்டுமல்லாமல் இதேடு நம்முடைய வாழ்க்கையும் முடிந்தது என விரக்தியுறஆரம்பித்தது இந்நிலையில் அவநம்பிக்கையுடன் அந்த குடிசையின் உட்பகுதியை சுற்றி பார்வையிட்டான் என்ன ஆச்சரியம் குடிசையின் ஓரத்தில் ஒருகுடுவையில் தண்ணீர் நிரப்பட்டு அதிலிருந்து தண்ணீர் ஆவியாகமல் இருப்பதற்காக நன்கு மூடப்பட்டிருந்தது உடன்அந்த தண்ணீரையாவது குடித்து உடல் சோர்வை போக்கிடலாம் என அதனை திறந்தபோது அதனோடு சிறுநூலால் கட்டப்பட்டதுண்டுதாள் ஒன்றிருந்ததை கண்ணுற்றான் சரிஅதில் என்னதான் இருக்கின்றது என பார்வையிட்டபோது "நண்பரேஇந்த குடுவையில் இருக்கும் தண்ணீரை இந்த கைபம்பில் ஊற்றி இயக்கினால் போதுமான தண்ணீர் கிடைக்கும் அதனை தொடர்ந்து உங்களுடைய தேவையை பூர்த்தி செய்பின்னர் மறக்காமல் இந்த குடுவையில் தண்ணீரை மீண்டும் நிரப்பி மூடிவைத்தால் உங்களைபோன்று வரும் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்" என்ற அறிவுரை இருந்ததை கண்ணுற்றவுடன் இந்த குடுவையில் இருக்கும் தண்ணீரை குடித்து தன்னுடைய உடல் சோர்வை போக்குவதா அல்லது அந்த தாளில் அறிவுறத்தியவாறு கைபம்பில் ஊற்றி கைபம்ப்பை இயக்குவதா அவ்வாறு கைபம்பை இயக்கிடும்போது தண்ணீர் வரவில்லையெனில் கைக்கு கிடைத்த கடைசி நம்பிக்கையான இந்த தண்ணீரும் இல்லாது தன்னுடைய உயிர்போய்விடுமே என அவனுடைய மனத்தில் ஊசலாட்டம் உருவானது இருந்தாலும் அந்த அறிவுரையை பின்பற்றிதான் பார்த்திடுவோமே எனஅவனுடைய கைகளிரண்டும் நடுங்கிட அந்த குடுவையிலிருந்த தண்ணீரை அந்த கைபம்பில் ஊற்றி நிரப்பியபின் மிகுதியிருந்த தன்னுடைய உடலின் கடைசி சக்தியை பயன்படுத்தி கைபம்ப்பை இயக்க ஆரம்பித்தான் உடன் தண்ணீர் மேலேறும் கடமுடவென்ற சத்தமும் அதனைதொடர்ந்து தண்ணீரானது அந்த குழாய்வழியாக தொபதொப வெனகொட்டவும் ஆரம்பித்தது உடன் தன்னுடை கைவசம் இருந்த பாத்திரத்தில் அந்தகுழாயிலிருந்து கொட்டிய தண்ணீரை பிடித்து தாகம் தீர குடித்தான் மேலும் தன்னுடைய பாத்திரத்தில்போதுமான தண்ணீரை நிரப்பினான் தொடர்ந்து அந்த குடுவையுடனிருந்த தாளில் அறிவுறுத்தியவாறு அந்த குடுவையையும் நிரப்பி நன்கு மூடியபின் அந்த தாளில் தொடர்ச்சியாக தன்னுடைய கைகளால் "இந்த கைபம்ப் நன்கு இயங்குகின்றது என்ற செய்தியையும் மனதில் கொள்ளுங்கள் அவநம்பிக்கை கொள்ளவேண்டாம்" என எழுதிவைத்துவிட்டு தன்னுடைய பயனத்தை தொடர்ந்தான் ஆம் நாம் என்ன கொடுக்கின்றோமோ அதுவே நமக்கு பன்மடங்காக திரும்ப கிடைக்கும் என்றசெய்தியை மனதில் கொள்க

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...