சனி, 29 செப்டம்பர், 2018

பெற்றோர்களை பேணி காத்திடுவோம்


அன்பு என்பவனுடைய தந்தை சிறிய பொறியியில் பணிமனை யொன்றை நடத்தி வந்தார் அதில் தினமும் நாளொன்றுக்கு பன்னிரண்டு மணிநேரம் பணிசெய்து அதில் வரும் வருமானத்தை கொண்டு வாய்க்கு கைக்குமாக அன்புவினுடைய தந்தை குடும்பத்தை நடத்திவந்தார் அவர்களுடைய குடும்பம் குடியிருப்பதற்கு சொந்த வீடில்லை இருந்த போதிலும் கடன்வாங்காமல் சுயசார்பாக அன்புவினுடைய தந்தை வாழ்ந்துவந்தார் அன்புவாழ்ந்துவந்தது நடுத்தர குடும்பமானதால் அரசு பள்ளியில் மட்டுமே அன்பு படித்துவந்தான் இருந்தபோதிலும் பள்ளியிறுதிவகுப்பில் 70சதவிகிதம் மதிப்பெண் பெற்றதால் மருத்துவராகவோ அல்லது வேறு நல்ல தொழில் படிப்புகளிலோ அன்புவால் சேரமுடியவில்லை அதனால் அரசு கலைகல்லூரியில் சேர்ந்து படித்தான் படித்துமுடித்தவுடன் தனியார் நிறுவனத்தில் நல்ல பணியிலும் சேர்ந்தான் போதுமான வருமானம் அன்புவிற்கு வரத்துவங்கியதும் நல்ல பெண் ஒன்றுடன் அன்புவிற்கு திருமணம் செய்துவைத்தனர் அதனை தொடர்ந்து இரண்டு பிள்ளைகளும் அன்புவிற்கு பிறந்தனர் அன்பு பணிபுரிந்த நிறுவனத்தில் நடத்தப்பட்ட பதவிஉயர்விற்கான தேர்வில் வெற்றிபெற்றதை தொடர்ந்து அன்புவிற்கு நல்ல பதவிஉயர்வும் கனிசமான சம்பளஉயர்வும் கிடைத்தன அதனால் கிடைத்த சம்பளத்த தொகையை தான்தோன்றி தனமாக தேவையில்லாத செலவுகளையும் ஆடம்பர செலவுகளையும் செய்து கட்டுப்பாடு எதுவுமில்லாமல் வாழ்ந்துவந்தான் ஆடம்பர செலவிற்கு ஏற்ப வருமானம் இல்லாததால் அதனை ஈடுகட்டுவதற்காக அன்பு ஏராளமாக கடன் வாங்கினான் அதனை தொடர்ந்து வாங்கிய கடனிற்கு வட்டிகட்டு-வதற்கும் ஆடம்பர செலவுகளுக்கும் போதுமான வருமானம் இல்லாமல் அன்பு தன்னுடைய வாழ்க்கையில் போராடி கொண்டிருந்தான் இவ்வாறு ஆடம்பரமாக செலவிடுவதால் தன்னுடைய பெற்றொருக்கு தன்னுடைய சம்பளத்திலிருந்து எந்தசெலவும் செய்வதில்லை அன்புவினுடைய தந்தையும் தன்னுடைய பணிமனையில் கிடைத்த வருமானத்தை கொண்டு சுயசார்பாக எப்போதும் போல் வாழ்ந்து வந்தார் இந்நிலையில் அன்புவினுடைய தந்தையின் உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்று மருத்துவம்செய்யவும் சாப்பிடுவதற்கு ம் பணிமனை வருமானம் இல்லாததால் அன்புவிடம் வந்து தங்களுடைய மருத்துவசெலவிற்கும் குடும்ப செலவிற்கும் பணம் வழங்குமாறு அன்புவினுடைய பெற்றோர்கள் கோரியபோது உடன் கடன்சுமையால் தத்தளிக்கும் நிலையில் எழுந்த கோபத்தில் அன்பு "வீட்டைவிட்டு உடன் ஓடிபோங்கள் நல்ல தனியார் பள்ளியில் என்னை படிக்கவைத்தும் ட்யூஷன் வைத்தும் படிக்கவைத்திருந்தால் நான் நல்ல மதிப்பெண் பெற்று தொழில்துறைபடிப்பில் சேர்ந்து நல்ல பணி பெற்றிருப்பேன் அவ்வாறு செலவிடாமல் என்னை அரசுபள்ளியில் படிக்கவைத்து இவ்வாறு அரைகுறையாக வாழவைத்தீர்கள் உங்களுக்கு பணம் எல்லாம் கொடுக்கமுடியாது இந்த பக்கமே திரும்பி பார்க்காதீர்கள்" என பெற்றோர்களை விரட்டி அடித்தான் இதனால் மனம் நொந்து வெளியேறிய பெற்றோர்கள் அன்றாட செலவிற்கு போதிய வருமானம் இல்லாமல் வாடிவதங்க ஆரம்பித்தனர் இந்நிலையில் அன்புவின் நிறுவனத்தில் தொழில் தொடர்பாக அன்புவை வேறு மாநில சுற்றுலாவாக அனுப்பிவைத்தார்கள் சுற்றுலா சென்ற நகரத்தின் கடைத்தெருவில் ஏதாவது பிள்ளைகளுக்கு விளையாட்டு பொருட்களை வாங்கலாம் என அன்பு கடைத்தெரு பக்கம் சென்றான் அப்போது 10 வயது சிறுவன் ஒருவன் பிள்ளைகளுக்கான விளையாட்டு பொம்மைகளை விற்றுகொண்டிருந்தான் தன்னுடைய பிள்ளைகளுக்கு அந்த பொம்மைகளை அன்பு வாங்கியபோது அந்த சிறுவனிடம் "ஏன் தம்பி இந்த வயதில் பள்ளிக்கு செல்லாமல் இவ்வாறான பணியினை செய்கின்றாய்" என வினவியபோது "ஐயா விபத்தொன்றில் என்னுடைய தந்தையின் வலதுகை முறிந்து விட்டது அதனால் அவரால் பணிசெய்ய இயலவில்லை என்னுடைய தாய் நான்கைந்து வீடுகளில் வீட்டு வேலைசெய்து ஈட்டிடும் வருமானம் போதுமானதாக இல்லை அதனால் நான் இந்த பணியை செய்து ஏதோ கொஞ்சம் சம்பாதித்து எங்களுடைய குடும்பம் நடக்கின்றது" என பதிலிறுத்தான் அந்த சிறுவன் உடன் அன்பு "ஏன் தம்பி பள்ளிக்கு சென்று படிப்பதில்லையா?” என வினவியபோது "காலையில் பள்ளிக்கு செல்வதற்கு முன்பும் பள்ளிமுடிந்த பின்பும் மிகுதிநேரத்தில் இந்த பணியை செய்துவருகின்றேன்" எனக்கூறினான் ஒரு பத்துவயது பிள்ளைக்கு பெற்றோரின்மீது இருக்கும் இரக்கம் அக்கறைகூட நமக்கு இல்லையே என அன்புவிற்கு தான் பெற்றோரை திட்டி விரட்டிஅனுப்பிய செயல் நினைவில் வந்து சுருக்கெனமுள்குத்துவதை போன்ற தர்மசங்கடமாகிடவிட்டது அதனால் தன்னுடைய பெற்றோர்களின் நிலையை என்னி மனவருத்தமடைந்து எப்படியாவது உதவவேண்டும் என தீர்மானித்து தனக்கு ஏன்இவ்வளவு பணநெருக்கடி என சிந்தித்தபோது தேவையற்ற அனாவசிய ஆடம்பரசெலவுகள் ஏராளமாக செய்வதால் வருமானம் போதுமானதாக இல்லை என கண்டறிந்து உடனடியாக அவ்வாறான செலவுகளை தவிர்த்து உடன் பொற்றோர்களுக்கு தேவையான உதவியை செய்யதுவங்கினான் நம்முடைய பெற்றோர்கள் நாம் விரும்பிய வாறு படிக்கவைக்கவில்லை நாம் விரும்பிய வாழ்வை அமைத்து கொடுக்கவில்லை என வெறுத்திடாமல் அவர்களுடைய நிலைக்கேற்ப அரும்பாடுபட்டு நம்மை இந்த நிலைக்காவது உயர்த்தியதை எண்ணி பெற்றோர்களை காத்திடுவது நமது கடமை என உறுதி கொள்வோம்

புதன், 26 செப்டம்பர், 2018

மற்றொருவருக்கு ஆபத்தில் உதவிசெய்தால் அவ்வாறே ஆபத்தில்நமக்கு மற்றவரிடமிருந்து உதவிகிடைக்கும்


கோடைகாலத்தில் ஒருநாள் எறும்பு ஒன்றிற்கு அதிக தாகமாக இருந்ததால் அருகில் தண்ணீர் எங்கு கிடைக்கும் என தேடி அலைந்தது கடைசியாக ஒரு சிறிய ஓடையில் தண்ணீர் இருப்பதை அறிந்து கொண்டது அதனைதொடர்ந்து சிறிய புல்லின் மீது ஏறி ஓடைக்குள் சென்று தாகம் தீர தண்ணீர் குடித்துவிட்டு கரையை நோக்கி அதே புல்லின்மீது திரும்ப வந்துகொண்டிருந்தது இந்த சமயத்தில் அதிக அளவு சூறாவளி போன்று காற்று சுழன்று அடித்ததால் எறும்பு ஊர்ந்து வந்த புல்லும் மிகவேகமாக சுழன்று ஆடியது அதனால் அதன்மீது ஊர்ந்துவந்த எறும்பு தண்ணீரில்விழுந்துவிட்டது அதனை தொடர்ந்து கரைசேரமுடியாமல் அந்த எறும்பு தண்ணீருக்குள் தத்தளித்து கொண்டிருந்தது இந்த சமயத்தில் காற்று வீசுவுதும் நின்றதால் அந்த ஓடைக்கருகிலிருந்த மரக்கிளையில் வந்தமர்ந்த புறாஒன்று தண்ணீரில் எறும்பு கரைக்கு வரமுடியாமல் தத்தளிப்பதை பார்த்து அதற்கு உதவிசெய்திடும் பொருட்டு ஒரு இலையை பறித்து அந்த எறும்புக்கருகில் போட்டது உடன் எறும்பும் அந்த இலையின்மீது ஒரு வழியாக ஏறியது சீராக காற்று வீசியதால் அந்த இலையும் ஓடையின் கரையில்ஒதுங்கியது எறும்பும் கரையேறி உயிர்பிழைத்தது அதன்பின்னர் வேடன் ஒருவன் மரத்தின்மீது உட்கார்ந்திருந்த அந்த புறாவை பார்த்து அதனை அடித்து வீழ்த்துவதற்காக தன்னுடைய வில்லில் அம்புவைத்து புறாவை குறிபார்த்தான் இதனை கண்ணுற்ற எறும்பானது தன்னுடைய உயிரை காத்த புறாவின் உயிரை காத்திடவேண்டும் என விறுவிறென ஊர்ந்து சென்று வேடனின் காலில் நறுக்கென கடித்தது அதனால் வேடன் எய்திய அம்பு குறிதவறி சென்றுவிட்டது புறாவும் உடன் பறந்து சென்றுஉயிர் தப்பிவிட்டது நாம் மற்றொருவருக்கு ஆபத்தில் உதவிசெய்தால் அவ்வாறே ஆபத்தில்நமக்கு மற்றவரிடமிருந்து உதவிகிடைக்கும் என்பது திண்ணம்

சனி, 22 செப்டம்பர், 2018

மெய்நிகர் நாணயம்(BitCoin) என்பது என்ன


மெய்நிகர் நாணயம்(BitCoin) என்பது ஒரு புதிய, முழுவதும் எண்ம-நிலையிலான சமனுக்குசமமான (P2P) நாணயம்ஆகும் தற்போது பொருட்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் நம்மால் பயன்-படுத்திவரும் தங்க நாணயங்களுக்கும்,தொட்டுணரக்கூடிய பணத்தாட்களுக்கும் பதிலாக இணையசேவைகளின் வாயிலாக இதனை பயன்படுத்த முடியும், மேலும் தற்போது இணையத்தில் பணபரி-வர்த்தனைக்காக வங்கிகளில் சேமிப்பது வேறு நபர்களுக்கு அல்லது நிறுவனங்களுக்கு அந்த வங்கிகளின் வாயிலாக நம்முடைய பணத்தை பேபால் அல்லது பேடிஎம்போன்ற இடைத்தரகர்களின் சேவைகளை பயன்படுத்தி வழங்கும் செயல் போன்றில்லாமல் இந்த மெய்நிகர் நாணயத்தை(BitCoin)கொண்டு இருநபர்கள் அல்லது இருநிறுவனங்களுக்கு (பயனாளர்களுக்கு )இடையே தற்போது நாம் பயன்படுத்திவரும் பணபரிவர்த்தனை போன்றே இந்த எண்மநிலை நாணயத்தை பரிமாறிகொள்ளமுடியும் இணையத்தின் வாயிலாக பயன்படுத்திவரும் தற்போதைய பணநடவடிக்கைக்-களுக்கு பதிலாக மெய்நிகர் நாணய(BitCoin)த்தினை பயன்படுத்திட செய்தால் பின்வரும் ஒரு சில முக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கவுள்ளன. 1இந்த மெய்நிகர் நாணயம்(BitCoin) ஆனது ஒரு உலகளாவிய, பரவலாக்கப்பட்ட நாணயம் ஆகும் அதாவது உலகம் முழுவதும் பயன்படுத்த ஒரு சாத்தியமான இந்த மெய்நிகர் நாணய(BitCoin)த்தை தன்னுடைய நாட்டிற்கு மட்டுமே இது சொந்தமானது என எந்தவொரு நாடும் உரிமை கொண்டாடமுடியாது அதனால் உலகமுழுவதும் எங்கிருந்தும் எங்குவேண்டுமாணாலும் பணபரிவர்த்தனை செய்வது மிக எளிய செயலாகிவிடும் மேலும் பொருட்களை கொள்முதல் செய்பவர்களுக்கு இடையே கொள்முதல் செய்பவரின் நாட்டு நாணயமாக வழங்குவதா அல்லது பொருட்களை வழங்குபவரின் நாட்டு நாணயமாக வழங்குவதா என இந்த பணபரிமாற்ற நடவடிக்கைக்கு எந்த பரிமாற்ற அளவை எடுத்துகொள்வது என்ற குழப்பத்தை தீர்ப்பதற்காகவென நீண்ட விவாதம் எதுவும் தேவையில்லாததாகி-விடுகின்றது 2.இரண்டாவதாக இவ்வாறு பரவலாக்கப்பட்ட நாணயங்களின் பரிவர்த்தனைகளை கட்டுப்-படுத்திடுவதற்காகஅல்லது இந்த நாணயத்தின் மதிப்பை நிர்வகிக்க தற்போது ஒருநாட்டின் அனைத்து பணநடவடிக்கை-களையும் கட்டுபடுத்திடுகின்ற ரிசர்வு வங்கி அல்லது தேசிய வங்கி போன்று எந்தவொரு அமைப்பும் இதற்காகவென தனியாக தேவையில்லை . அதாவது இவ்வாறு நாடுகளின் நாணங்களை பொருட்படுத்தாமல் இந்தமெய்நிகர் நாணய(BitCoin) செலாவணியின் உலக பொருளாதார செயல்திறன் ஆனது அரிய உலோகங்கள், எண்ணெய் ஆகிய பொருட்களின் மதிப்பைபோன்றே அதன் மதிப்பு தக்க வைத்து கொள்ளும் அல்லது அமைந்திருக்கும் . மேலும் குறிப்பிட்ட பகுதியின் பணமதிப்பு வீழ்ச்சியினால் உலகபொருளாதாரமே வீழ்ந்துவிட்டது என்ற பாதிப்பு எதுவும் இதில் இல்லை ; ஆயினும் இணையஇணைப்பு செயல்படவில்லை யென்றால் அந்தகுறிப்பிட்ட இடம் தவிர மிகுதி உலகமுழுவதும் அதனால் பாதிப்பெதுவும் ஏற்படாது 3.மூன்றாவதாக , பணபரிமாற்றங்களானவை இருநபர்களுக்கு இடையே நேரடியாக எந்தவொரு இடைத்தரகரின் தலையீடு எதுவுமில்லாமல் செய்யப்படுகின்றன, அதனால் இந்த இடைத்தரகர்களுக்கான கட்டணம் எதுவும் செலுத்திடத் தேவையில்லாததாகி விடுகின்றது . ஆயினும் துவக்கத்தில் ஒரு சில ஆண்டுகளுக்கு மட்டும் இந்த நாணயத்தை நிர்வகிப்பதற்காக சிறிதளவு கட்டணம் இருக்கும், ஆனால் அது தற்போதைய செந்தர கட்டணத்தைவிட மிகவும் குறைவாகவே இருக்கும் ,4.நான்காவதாகு நாம் சொந்தமாக இந்த மெய்நிகர் நாணயங்களை(bitcoins) நம்முடைய கணினியில் ஒரு பணப்பையான (wallet) கோப்பில் சேமித்துக்-கொள்ளலாம் ஏனெனில், நம்முடைய இந்த மெய்நிகர் நாணய நிதியின் மீது நமக்கு முழு அதிகாரம் உண்டு. இந்த மெய்நிகர் நாணய(Bitcoins)lத்திற்கென தனியாகஒரு நிறுவனத்தில் "கணக்கு" ஒன்றினை துவக்கி வைத்திடவேண்டும் அதிலிருந்து நமக்குதேவையானபணத்தை எடுத்து செலவிடவேண்டும் போன்ற நடவடிக்கை எதுவும் தேவையில்லை மேலும், தற்போது ஒரு வங்கியின் நடவடிக்கையான "சிறிய அச்சிடப்பட்ட", பணத்தாட்களை பயன்படுத்துவதற்கான பரிவர்த்தனை வரம்புகள், படிவங்கள் அல்லது இதர வரம்பிற்குள் அல்லது எல்லைக்குள் செயல்படவேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடு எதுவும் இந்த நடைமுறையில் இல்லை. 5. இறுதியாக, இந்த மெய்நிகர் நாணயம்(BitCoin) ஆனது தற்போது நாம் பயன்படுத்திவரும் பணத்திற்கு ஈடாகவும் அதற்கு மாற்றாகவும் பரிமாறிக்கொள்ள பயன்படவிருக்கின்றது மேலும் இவ்வாறான பரிமாற்றத்திற்காக நாம் கூடுதலாக செலவேதும் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை அதுமட்டுமல்லாது இணையத்தின் வாயிலாக பொருட்களையும் சேவைகளையும் பெறுவதற்கு மிகப்பெரிய வழியில் பணப்பரிமாற்றத்திற்காக இது உதவ தயாராக இருக்கின்றது

புதன், 19 செப்டம்பர், 2018

தமிழ்நாட்டில் வாழும் நடுத்தரவர்க்கத்து மக்களின் தற்போதைய அவலநிலை


தமிழ்நாட்டில் தற்போது வாழ்ந்துவரும் மக்களுள் ஒரு இளவயது தந்தையானவர் தன்னுடைய இளம் மனைவி இருபிள்ளைகள் ஆகியோர்களுடன் சேர்ந்து ஒரு சிறியவீட்டில் வாழ்ந்துவந்தார். மேலும் தன்னுடைய கடுமையான உழைப்பினால் குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேர்களும் நன்றாக உண்பதற்கு மட்டும் பேதுமான அளவு சம்பாதித்துவந்தார் இந்நிலையில் அவருடைய இளம் மனைவியானவள் பக்கத்து வீட்டை பாருங்கள் எதிர்வீட்டை பாருங்கள் அவர்களெல்லாம் எப்படி சம்பாதித்து பிள்ளைகளுக்கு வகைவகையாக துனிமணி வாங்கி தருகின்றனர் என எப்போதும் பணம் பணம் என தொந்திரவு செய்துவந்தார் மேலும் அவருடைய பிள்ளைகள் தனியார் நடத்தும் ஆங்கில துவக்கபள்ளியில் மிக அதிக செலவழித்து சேர்த்து படிக்கவைத்திடுமாறு அவரை நிர்ப்பந்த படுத்தினார் இதையெல்லாம் எனக்காகவா கேட்கின்றேன் நம்முடைய குடும்பம் நன்றாக தலைநிமிர்ந்து இருந்தால்தானே நாலுபேர் நம்மை மதிப்பார்கள் என அதிக தொந்திரவுசெய்துவந்தார் அதனால் இந்த பிரச்சினையில் இருந்து தப்பிப்பது எப்படி என ஆராய்ந்துமுடிவாக பணிமுடிந்து உடன் வீட்டிற்கு வந்து சேராமல் மிகைநேர பணியை செய்து கூடுதலாக சம்பாதிக்க ஆரம்பித்தார் அதோடு மட்டுமல்லாமல் வீட்டிலிருந்தே தன்னுடைய பதவி உயர்விற்கான கல்வியையும் அதிகமான நேரத்தை செலவிட்டு படிக்கஆரம்பித்தார் ஆனால் அவருடைய குடும்பத்தாருடன் ஒருவேளை உணவை ஒன்றாக சேர்ந்து உண்ணவும் அவரது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடவும் ஏங்கினார்.இருந்த போதிலும் அவர் படிப்பு வேலை மிகைநேர வேலை என கடினமாக முயன்று தேர்வில் வெற்றி பெற்றார்

இதன்பயனாக போதுமான அளவிற்கு சம்பாதிக்கும் மேற்பார்வையாளராக அவருக்கு பதவி உயர்வு கிடைத்தது அதனை தொடர்ந்து அவருடைய மனைவியானவள் தற்போதுநாம் இருப்பது எலிப்பொறி போன்று மிகச்சிறியவீடாக இருக்கின்றது நாமும் நம்முடைய பிள்ளைகளும் புழங்குவதற்கு பெரியவீடாக வேண்டும் என தொந்திரவு செய்ததால் பெரிய வீட்டிற்கு குடியேறினர் இதனை தொடர்ந்து அவருடைய மனைவி இந்த வீடு பெரியதாக இருப்பதால் தம்மால் வீடுமுழுக்க பெருக்கவும் கழுவவும் முடியாது வீட்டு வேலைக்கு பணியாளை நியமிக்கவேண்டும் என கோரி பணியாள் ஒருவரை நியமித்து வீட்டு பணிமுழுவதும் பணிஆளே செய்யும் அளவிற்கு வசதியாக வாழஆரம்பித்தார். மேலும் பிள்ளைகளை தனியார் மேல்நிலை பள்ளியில் அதிக செலவழித்து படிக்கவைக்கும்படியும் அவர்கள் பள்ளிக்கு சென்றுவருவதற்கு தனித்தனியாக இருசக்கரவாகணங்களை வாங்கி வழங்கும்படியும் கோரிக்கைவைத்ததோடு மட்டுமல்லாமல் இதையெல்லாம் எனக்காகவா கேட்கின்றேன் நம்முடைய குடும்பம் நன்றாக தலைநிமிர்ந்து இருந்தால்தானே நாலுபேர் நம்மை மதிப்பார்கள் என அதிக தொந்திரவுசெய்துவந்தார் அதனால் அதற்கடுத்த பதவிஉயர்விற்கான கல்வியை அவர் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தார் இந்த நிலையில்கூட அவருடைய குடும்பத்தாருடன் ஒருவேளை உணவை ஒன்றாக சேர்ந்து உண்ணவும் அவரது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடவும் ஏங்கினார். இருந்தபோதிலும் வேலைமுடிந்தவுடன் படிப்பு படிப்புமுடிந்தவுடன் வேலை என கூடுதல் நேரம் ஒதுக்கி படிக்க ஆரம்பித்து கடினமாக முயன்று தேர்வில் வெற்றி பெற்றார்

அதனால் உடன் நல்ல கைநிறைய சம்பாதிக்கும் அளவிற்கு அதிகாரியாக பதவி உயர்வு அவருக்கு கிடைத்தது இதனை தொடர்ந்து அவருடைய மனைவியானவள் தற்போதுநாம் இருக்கின்ற வீடு நாமும் நம்முடைய பிள்ளைகளும் புழங்குவதற்கு போதுமானதாக இல்லை இதைவிட பெரியவீடாக வேண்டும் என தொந்திரவு செய்ததால் பெரிய அரண்மணை போன்ற வீட்டிற்கு குடியேறினர் அவருடைய மனைவி இந்த வீடு மிகபெரியதாக இருப்பதால் ஒரு பணியாளை வைத்து வீடுமுழுக்க பெருக்கவும் கழுவவும் முடியாது வீட்டு வேலைக்கு ஒருவர் என்றும் சமையள் செய்வதற்கு ஒருவர் என்றும் வீட்டைசுற்றியுள்ள தோட்டத்தை பராமரிக்க ஒருவர் என்றும் அம்மனைவியின் கால் கைகளை பிடிப்பதற்கு ஒரு பணியாள் என்றும் ஏராளமான பணியாட்களை நியமிக்கவேண்டும் என கோரி பணியாட்களை நியமித்து வீட்டு பணிமுழுவதும் பணிஆட்களே செய்யும் அளவிற்கு வசதியாக உடல் உழைக்காமல் சோம்பேறியாக மாறிவாழஆரம்பித்துவிட்டார் மேலும் பிள்ளைகளை தனியார் மருத்துவ கல்லூரியில் அதிக செலவழித்து படிக்கவைக்கும்படியும் அவர்கள் கல்லூரிக்கு சென்றுவருவதற்கு தனித்தனியாக இரண்டு மகிழ்வுந்து வாகணங்களை வாங்கி வழங்கும்படியும் கோரிக்கை அதிகமானதால் அதற்கடுத்த மேல்அதிகாரி பதவிஉயர்விற்கான கல்வியை அவர் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தார் இந்நிலையும் அவருடைய குடும்பத்தாருடன் ஒருவேளை உணவை ஒன்றாக சேர்ந்து உண்ணவும் அவரது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடவும் ஏங்கினார்.இருந்தபோதிலும் வேலைமுடிந்தவுடன் படிப்பு படிப்புமுடிந்தவுடன் வேலை என கூடுதல் நேரம் ஒதுக்கி படிக்க ஆரம்பித்து கடினமாக முயன்று தேர்வில் வெற்றி பெற்றார்

இவ்வாறான கல்வியை யாராலும் இவ்வளவு விரைந்து படித்துவெற்றிபெற முடியாது என்பதால் இவருக்கு உடன் மேல்அதிகாரியாக பதவி உயர்வு கிடைத்தது ஒருவழியாக மிகப்பெரிய அளவு கல்வியையும் அதனை தொடர்ந்து மிகப்பெரிய பதவியும் கிடைத்தது என நிம்மதியாக மறுநாள்முதல் அவருடைய குடும்பத்தாருடன் ஒன்றாக சேர்ந்து சாப்பிடலாம் மகிழ்வாக அதிகநேரம் ஒன்றாகக்கூடி இருக்கலாம் என திட்டமிட்டு உறங்க சென்றார் மறுநாள் காலையில் அவருடைய வீட்டின் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்தபோது அவர் மட்டும் எழமுடியாது நீண்ட தூக்கத்தில் இருந்தார் அப்போதுதான் அவருடைய மனைவியும் பிள்ளைகளும் அடடா குடும்ப உறுப்பினர் அனைவரும் ஒன்றாக உணவருந்தி மகிழ்வாக இருக்கலாம் என எப்போதும் கூறிக்கொண்டே இருந்தாரே அவ்வாறு முடியாமல் போய்விட்டதே இனி என்ன செய்வது என அழஆரம்பித்தனர். ஆம் நாம் எப்போதும் கையிலிருக்கும் கலாக்காயை உண்டு மகிழ்வோடு வாழாமல் மரத்தின் உயரத்தில் உள்ள பலாக்காய்தான் வேண்டும் என அடம்பிடித்திருப்பதை போன்று கையிலிருப்பதை விட்டிட்டு பறப்பதை பிடிப்பதற்காக முயன்று தோல்வியுறுகின்றோம்

நண்பர்களே!சகோததர்களே! எப்போது வேண்டுமானாலும் எவ்வளவு தேவையென்றாலும் பணத்தை நாம் சம்பாதிக்கலாம் ஆனால் அரிதான நமக்கு கிடைத்த இந்த வாழ்வைநம்முடைய குடும்பத்தாரோடு மகிழ்ச்சியோடு வாழ உறுதி கொள்வோம்

சனி, 15 செப்டம்பர், 2018

எந்தவொரு பிரச்சினையையும்மிகஎளிதாக திறம்பட தீர்க்க முடியும்.


முன்னொரு காலத்தில் ஒரு கால் ஒரு கை ஒரு கண் ஆகியவை மட்டும் கொண்ட ஆனாலும் மிகவும் புத்திசாலியாகவும் திறனுடனும் கூடிய அரசனொருவன் அரசாட்சி செய்துவந்தார் அதனால் . அவருடைய நாட்டில் மக்கள் அனைவரும் அனைத்து வசதிகளுடன் மிகவும் மகிழ்சியாக வாழ்ந்து வந்தனர் இந்நிலையில் அந்த அரசன். ஒரு நாள் தன்னுடைய அரண்மனை முழுவதையும் சுற்றி பார்த்துகொண்டுவரும்போது அரண்மனையின்சுவற்றில் அவருடைய மூதாதையர்களின் ஓவியங்களைக் கண்டார். அதை போன்று தன்னுடைய குழந்தைகள்அல்லது வருங்காலசந்ததிகள் இதே அரண்மனையில் எல்லா முன்னோர்களுடன் சேர்ந்து தன்னையும் நினைவு கூறுவதற்காக தனக்கென ஒரு ஓவியம் வரைந்தால் நல்லது என்று அந்தஅரசன் நினைத்தார். ஆனால், அவருடைய உருவப்படத்தினை வரைந்தால் அவரது உடல்குறைபாடுகளுடனேயே காட்சியளிக்கும் அது பார்வைக்கு நன்றாக இருக்காதே என்ன செய்வது என்ற சந்தேகம் எழுந்தது இருந்தபோதிலும் அவருடைய நாட்டிலும் பிற நாடுகளிலிலும் உள்ள புகழ்பெற்ற ஓவியர்களை நேரடியாக அழைத்து. அரண்மனையில் தன்னுடைய உருவப்படத்தை அவர்கள் வரையவேண்டும் எனதன்னுடைய விருப்பத்தினை மன்னர் அறிவித்தார். அந்த ஓவியமானது தன்னுடைய குறைபாடுகள் எதுவும் தெரியாமல் தன்னுடைய உருவப்படத்தை யாரொருவர் வரைகின்றாரோ அவருக்கு தகந்த வெகுமதி அளிக்கப்படும்.என அறிவித்தார் அதனைதொடர்ந்து வந்திருந்த ஓவியர்கள் அனைவரும் அரசனுடைய ஒரே ஒரு காலையும் ஒரே கண்ணையும் வைத்து அவ்வாறான குறையெதுவும் தெரியாத அந்த அரசனுடைய அழகான உருவப்படத்தினை எவ்வாறு வரைவது என யோசிக்க ஆரம்பித்தார்கள். மேலும் அது சாத்தியமற்றது, என அனைவரும் ஓவியும் வரையும் போட்டியில் பின்வாங்கி சென்றார்கள் ஆனால் அவர்களுள் ஒரு ஓவியர் மட்டும் தனது கையை உயர்த்தி, தான் அந்த பணியை செய்வதாக ஒப்புக்கொண்டார் "அரசே நீங்கள் விரும்பும் உங்களுடைய அழகிய உருவப்படத்தினை நிச்சயமாக நான் வரைவேன்" என்று ஆனித்தரமாக கூறினார். அதனால் அவ்வரசன் மிகமகிழ்ச்சியாக அந்த ஓவியருக்கு அனுமதியளித்தார், அந்த ஓவியரும் நீண்டகாலஅவகாசம் எடுத்து கொண்டு திரைச்சீலையில் அந்த அரசனின் அழகான ஓவியத்தை வரைந்து காண்பித்தார் அரசசபையில் இருந்த அனைவரும் ஆச்சரியத்துடன் அரசனின் அழகிய உருவப்படத்தை பார்த்து மகிழ்ச்சியடைந்தனர் அந்த ஓவியத்தில் அரசர் குதிரை மீது உட்கார்ந்திருந்தார், ஒரு கால் மட்டும் காட்சிக்குக தெரிந்தது, ஒருகையால் வில்லில் அம்பை வைத்து பிடித்து கொண்டு தன்னுடைய , ஒரு கண்ணால் மட்டும் அந்த அம்பில் குறிபார்த்திடுமாறு அவ்வுருவப்படம் அமையுமாறு வரைந்திருந்தார். அவ்வரசனின் குறைபாடுகளை மிகபுத்திசாலித்தனமாக மறைத்து அரசனின் அழகிய உருவப்படத்தை அந்த ஓவியர் உருவாக்கியிருப்பதைப் பார்த்த அரசன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அந்த ஓவியருக்கு தான்வாக்களித்தவாறு நல்லதொரு பெரிய பரிசினை வழங்கி கவுரவித்தார்

அதேபோன்று: நாம் எப்போதும் மற்றவர்களுடைய குறைபாடுகளை புறக்கணித்திட வேண்டும். மேலும் மற்றவர்களின் பலவீனங்களை மறைக்க முயற்சிப்பதற்கு பதிலாக, அவரகளிடமுள்ள திறமைகளை மட்டும் கவனிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதனடிப்படையில் நாம் எதிர்மறையான சூழ்நிலையைகூட நமக்கு சாதகமான முறையில் அணுகினால், நம்முன் எழும் எந்தவொரு பிரச்சினையையும்மிகஎளிதாக திறம்பட தீர்க்க முடியும்.

வியாழன், 6 செப்டம்பர், 2018

தொழில்நுட்பம் மட்டுமே நம்முடைய வாழ்க்கையன்று


அன்று நானும் என்னுடைய அப்பாவும் எங்களுடைய நகரத்திலுள்ள ஒரு வர்த்தக வங்கியில் பணபரிமாற்றத்திற்காக ஏறத்தாழ ஒரு மணிநேரத்தை செலவழித்தோம் அதனால் வெறுப்புற்ற நான், 'அப்பா, ஏன் உங்களுடைய வங்கி கணக்கினை இணைய வங்கிகணக்காக மாற்றி செயல்-படுத்தியிருக்கலாமே?' என வினவியபோது என்னுடையஅப்பா உடன் '' ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? '' என பதில் கேள்வி கேட்டார்.அதற்கு நான்'' அப்பா, நீங்கள் பணபரிமாற்றம் போன்ற செயல்களுக்கு நேரடியாக இங்கேவந்து ஒரு மணி நேரம் செலவிடுவதை தவிர்க்கலாமே, மேலும் நமக்கு தேவை.யான மளிகைபொருட்களை இணையத்தின் வாயிலாக மிகச்சுலபமாக கடைக்கு செல்லாமலேயே வாங்கிகொள்ளலாம்! '' என இணைய வங்கிகணக்காக மாற்றுவதால் கிடைக்கும் நன்மைகளை விவரித்தேன் அதனை தொடர்ந்து '' அவ்வாறு செய்தால், நான் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இல்லையா? என சந்தேக கேள்வி கேட்டார் அப்பா உடன் நான் ''ஆம் ஆம்''! நாம் எந்தவொரு செயலிற்கும் வீ்ட்டைவிட்டு வெளியில் எங்கும் செல்லாமல் நாம் இருந்த இடத்திலிருந்தவாறே நாம் விரும்பிய பணியை முடித்திடலாம். அதிலும் அமேசான் எனும் நிறுவனம் நம்முடைய வீட்டு வாயிலிற்கே நாம் விரும்பிய அனைத்தையும் கொண்டுவந்து சேர்த்துவிடுகின்றது" என அதனால் ஏற்படும் நன்மைகளை விளக்கினேன் உடன்என்னுடைய அப்பா: 'இன்று நான் இந்த வங்கியில் நுழைந்ததில் இருந்து இதுவரை, நான்கு நண்பர்களை சந்தித்தேன், என்னை நன்றாக அறிந்த இந்த வங்கி ஊழியர்களுடன் சிறிது நேரம் பேசினேன்.மேலும் வயதான காலத்தில் நானும் உன்னுடைய அம்மாவும் மட்டும் நம்முடைய வீட்டில் தனியாக இருக்கின்றோம் என்றும் உனக்குத் தெரியும். அதனால் இந்த வங்கியில் பணபரிமாற்றம் செய்திடவேண்டும் எனும் பணிக்காகவென்று வீட்டைவிட்டு வெளியில்வருவதால் நண்பர்களுடனும் வங்கி பணியாளர்களுடனும் நேரடியாக கலந்துரையாடுகின்றேன் அதன்வாயிலாக மனதிருப்தியுடன் இன்னும் சிறிது காலத்திற்கு நோய்நொடி இல்லாமல் நல்ல உடல்நிலையுடன் வாழமுடியும் அதைவிட கடந்த மாதம் எனக்கு உடல்நிலை சரியில்லாத போது, நான்அடிக்கடி மளிகை பொருள் வாங்கிடும் கடைக்காரர் நம்முடைய வீட்டிற்கு வந்து என்னிடம் என் படுக்கையில் உட்கார்ந்து கண்கலங்கியவாறு என்னுடைய நலன் விசாரித்து சென்றார் மேலும் நேற்று காலையில் நடந்து செல்லும் போது உன்னுடைய அம்மா விழுந்துவிட்டாள். உடன் உள்ளூர் மளிகைகடைகாரர் கைதூக்கி எழச்செய்து கைபிடித்து பத்திரமாக வீட்டிற்கு கொண்டுவந்து சேர்த்தார்.எல்லாம் இணையத்தின் வாயிலாக என செய்து கொண்டிருந்தால் இவ்வாறான மனிதநேய உதவி,நலம் விசாரித்தல் ஆகியவையும் அவ்வாறான மனிதாபிமான உறவுவும் அமோசானில்கிடைக்குமா?" என என்னுடைய தந்தை விவரமாக கூறியவுடன் அப்படியே நான் அமர்ந்து விட்டேன் ஆம் நண்பர்கள் மனிதாபிமான உறவுகள் ஆகியவை இணையவங்கி கணக்கின் வாயிலாகவோ அமோசான் போன்றவைகளின் வாயிலாகவே கண்டிப்பாக கிடைக்காது

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...