வியாழன், 29 நவம்பர், 2018

நம்முடைய வியாபார இணையதளத்தின் உள்ளடக்கங்களை வாடிக்கையாளரை கவரும்வண்ணம் எவ்வாறுமேம்படுத்திடுவது


தற்போதை இருபத்தொன்றாம் நூற்றாண்டானது இணைய உலகமாக உள்ளது அனைவரும் அறிந்த செய்தியே அதனால் நம்முடைய நிறுவனம் வியாபாரத்தில் வெற்றிநடைபோடவேண்டுமெனில் கண்டிப்பாக நம்முடைய நிறுவனத்தின் இணையதளத்தினை வாடிக்கையாளர் அனைவரையும் கவரும்வண்ணம் மேம்படுத்திடவேண்டும் அதற்கான வழிமுறைகள் பின்வருமாறு 1. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தேடுபெறிகளின் வாயிலாகவே தாங்கள் விரும்பும் பொருட்களை தேடி அடைகின்றனர் அதனால் நம்முடைய இணையபக்கத்தில் பயன்படுத்திடும் சொற்கள் தேடுபொறிகளின் சொற்களுக்கு பொருத்தமானதாக இருக்குமாறு அமைத்து கொள்க 2. முகப்பு பக்கத்தில் நம்முடைய நிறுவனத்தை பற்றிய அறிமுகம் இரத்தினசுருக்கமாக இருக்கவேண்டும் மேலும் விவரங்களை தனியான இணைப்பு பக்கத்தில் அல்லது தாவியின் பக்கத்தில் வழங்குக 3. நம்முடைய இணையபக்கத்தை அடையவேண்டிய அவசியமான முடிவை முதலிலும் அதற்கடுத்தமுக்கியதகவல்களை அடுத்தும் அதற்கடுத்த தகவல்களை மூன்றாவதாகவும் பிரமிடு வழிமுறையில் நம்முடைய இணையத்தின் முக்கியத்துவத்தை விவரிக்கும் சொற்களை கட்டமைத்திடுக 4. நம்முடைய இணைய பக்கங்களில் அமைந்துள்ள உரையானது எவ்வாறுஎழுதியது என பார்வையாளர்கள் கவலைபடமாட்டார்கள் ஆனால் இவ்வாறான உரையை யார் எழுதியது என அறிந்துகொள்ளும் ஆவலைதூண்டிடுமாறு இந்த உரைஅமைந்திருக்குமாறு வடிவமைத்திடுக 5. நம்முடைய வியாபார நடவடிக்கைகக்கு ஏற்ப இந்த முகப்புபக்கத்தில் உருவப்படங்கள் கானொளிபடங்கள் இசைகள் வினாடிவினாக்கள் போன்றவைகளுள் பொருத்தமானதை கொண்டு வடிவமைத்திடுக 6. நாம் கூறவிழையும் கருத்துகளை சுருக்கமாகவும் தெளிவாகவும் சிறுசிறுபத்திகளாக பிரித்தும் தேவைப்பட்டால் கூடுதல் இணைப்புபக்கத்துடனும் முகப்பு உரையை வடிவமைத்திடுக 7. நம்முடைய முதன்மை குறிக்கோளே பார்வையாளர்களை வாடிக்கையாளர்களாக மாற்றுவதுதான் அதனால் பொருத்தமான தொழில்நுட்பங்களையும் இணைப்புகளையும் திறவுச்சொற்களையும் (Good Keywords) பார்வையாளர்களை கவரும் வண்ணம் கட்டமைத்திடுக

புதன், 28 நவம்பர், 2018

நமக்கு பாதிப்பு ஏற்படும் நிலையில் கெடுதல் செய்பவர்களுக்கு உதவிசெய்திடவேண்டாம்


ஒரு கிராமத்திற்குஅருகிலிருந்த காட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்துவந்தது அவ்வப்போது ஆட்களை கொன்று சாப்பிட்டுவந்து கொண்டிருந்தது அதனால் அந்தஊரில் வாழ்ந்துவந்தவர்கள் ஒன்று கூடி வலைவிரித்து அந்த சிங்கத்தை பிடித்து ஒரு கூண்டிற்குள் அடைத்து வைத்தனர் சிங்கத்திற்கு இரைஎதுவும் இல்லாததால்பசி அதிக மானது அந்த வழியாக சென்ற மிருகங்களை அழைத்து கூண்டினை திறந்துவிடுமாறு எவ்வளவோகெஞ்சி பார்த்தும் மற்றமிருகங்கள் இந்த சிங்கத்தை திறந்துவிட்டால் நம்மையை அடித்து சாப்பிட்டவிடும் என பயந்து சிங்கத்தை அடைத்துவைத்த கூண்டினை திறக்காமல் சென்றுவிட்டன இந்நிலையில் அப்பாவியான ஒரு மனிதன் அந்த வழியாக வந்தான் உடன் அவனிடம் ஐயா தயவுசெய்துஇந்த கூண்டைதிறந்து என்னை வெளியே விடுங்கள் என கெஞ்சியது அப்பாவியும் நான் திறந்துவிட்டால் என்னை அடித்து கொன்றுவிடுவாய் அதனால் நான் செய்யமாட்டேன் எனகூறினான் ஐயா நான் அவ்வாறே உன்னை அடித்து கொள்ளமாட்டேன் என உறுதிஅளிக்கின்றேன் என உறுதியளித்ததால் அப்பாவி மனிதனும் கூண்டினை திறந்து சிங்கத்தினை விடுவித்தான் இதுவரை உணவில்லாமல் பசியோடு இருந்த சிங்கமும் கூண்டினை விட்டு வெளியே வந்ததும் அப்பாவியை அடித்து கொன்று தின்னபாய்ந்தது உடன் சிங்கமே நீ கொடுத்தவாக்கினை காத்திடாமல் என்னை கொன்று தின்பது ஞாயமா எனவினவினான் அதெல்லாம் தெரியாது எனக்கு இப்போது பயங்கர பசி உன்னைதவிர இரையெதுவும் இங்கு இல்லை என மீண்டும் அந்த அப்பாவி மீது பாயத்துவங்கியது உடன் அப்பாவி இருஇரு யாரிடமாவது இதனை முறையிடுவோம் அதற்கு என்ன தீர்ப்பு கூறுகின்றார்களோ அதன்படி நடந்து கொள்வோம் என அப்பாவி கோரியதை சிங்கம் ஏற்றுகொண்டது அந்த சமயத்தில் நரிஒன்று அந்த வழியாக சென்றது அதனை அழைத்து நரியிடம் தங்களுடைய பிரச்சினைபற்றி அப்பாவி மனிதன் கூறியதைதொடர்ந்து நரியானது வாயால் கூறுவது எனக்கு சரியாக புரியவில்லை செயல்விளக்கமாக காண்பியுங்கள் என கோரியது உடன் சிங்கம் கூண்டிற்குள் சென்றது நரியானது அப்பாவியிடம் நீஎன்ன செய்தாய் எனக்கோரியபோது அந்த கூண்டின் கதவினை பூட்டியிருந்ததை காண்பித்தான் உடன் நரியானது அந்த சிங்கம் இருந்த கூண்டின் கதவினை நன்றாக பூட்டிவிட்டு சரி ஐயா நீங்கள் உங்கள் வழியே செல்லுங்கள் சிங்கம் கூண்டிற்குள்ளேய இருக்கட்டும் என அந்த அப்பாவியை வழிகூட்டி அனுப்பியது நமக்கு பாதிப்பு ஏற்படும் நிலையில் கெடுதல் செய்பவர்களுக்கு உதவிசெய்திடவேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது

வெள்ளி, 23 நவம்பர், 2018

சரக்கு சேவைவரியின் கீழான மின்வழிபட்டியல் எனும் வசதி


மின்வழிபட்டியல்( E-wayBill) என்பது சரக்கு சேவை வரியின் கீழ் பொருளின் மதிப்பு ரூ.50000/-இற்கு மேல் இருந்தால் கண்டிப்பாக பொருந்தும் அதற்கு குறைவாக இருந்தால் விருப்பபட்டால் மட்டும் பயன்படுத்தி கொள்க பொருள் வழங்குபவர் இருக்கும் இடத்திற்கும் பொருளினை பெறுபவரின் இடத்திற்கும் இடைபட்டதூரம் பத்துகிலோமீட்டர் வரையிலும் தேவையில்லை அவ்வாறே இருவரும் ஒருமாநிலமென்றாலும் தேவையில்லை விற்பணையாகும் அனைத்து பொருட்களும் இந்த மின்வழிபட்டியல் விற்பணைபட்டியல்அல்லது பொருள்வழங்கும் பட்டியலுடன் மட்டுமே எடுத்து செல்லவேண்டும் இந்த மின்வழிபட்டியலானது பகுதி அ (Part A) ,பகுதி ஆ (Part B) ஆகிய இருபகுதிகளைகொண்டது பகுதி அ (Part A) இல் பெறுபவரின் GSTIN எண், வழங்குவதற்காக கொண்டுசெல்லும் இடத்தின் பெயர்(Place of delivery), விற்பணை பட்டியலின் அல்லது பொருள் வழங்கும் பட்டியலின் எண் (Invoice/DC No), விற்பணை பட்டியலின் அல்லது பொருள் வழங்கும் பட்டியலின் நாள் (Invoice/DC date), பொருளின் மதிப்பு (Value of goods), அந்த பொருளிற்கான HSN குறியீட்டு எண் (Codeno) வாகணத்தின் ஆவணஎண் (Transporter Document No) ஆகிய விவரங்கள் உள்ளடங்கியிருக்கும் பகுதி ஆ (Part B) இல் இந்த பொருளை எடுத்துசெல்லும் வாகணத்தின் எண் (vehicle number) விவரம் குறிக்கப்பட்டிருக்கவேண்டும் இந்த மின்வழிபட்டியலானது தூரம் நூறு கிமீட்டர் எனில் ஒருநாள் செயலில் இருக்கும் அதற்குமேல் ஒவ்வொரு நூறு கிமீட்டருக்கும் ஒவ்வொருநாள் கூட்டியவாறு செயலில் இருக்கும் ஒவ்வொரு விற்பணைபட்டியலிற்கும் ஒவ்வொரு மின்வழிபட்டியல் இருக்கவேண்டும் அதாவது ஒரு வாகணத்தில் எத்தனை( பொருட்கள் அன்று) விற்பணை பட்டியலிற்கான பொருட்கள் இருக்கின்றதோ அத்தனை மின்வழிபட்டியல் இருக்கவேண்டும் மாநிலங்களுக்கு இடையேயான பொருட்களின் விற்பணைக்கு 1.02. 2018 முதல் கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும் மாநிலத்திற்குள் அல்லது மாநிலங்களுக்கு இடையே என அனைத்து பொருள் போக்குவரத்திற்கும் எனில் 1.06.2018முதல் கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும் இணையதளத்தில் GST INV-1 என்ற படிவத்திற்கான விவரங்களை வழங்கினால் EWB-01எனும் இந்தமின்வழிபட்டியல் தானாகவே உருவாக்கப்பட்டு நாம் அச்சிடுவதற்கு தயாராகி விடும் ஒருங்கிணைந்த பட்டியலே EWB-01ஆகும் இடையில் வாகணத்தினை நிறுத்தி ஆய்வுசெய்திடும்போது EWB-03என்ற பட்டியிலின்பகுதி அவில் பதிவாகும் அரைமணிநேரத்திற்குமேல் வாகணம் தடைபடுமானால் உடன் வாகணஉரிமையாளர் EWB-04 என்ற படிவத்தில் தங்களுடைய விவரங்களை சமர்ப்பிக்கவேண்டும்

சனி, 17 நவம்பர், 2018

எந்தவொரு பணியுடனும் கூடுதலாக நாம் செய்திடும் பணிஎன்றும் வீணாகாது


இருசக்கரவாகணம் பழுதுபார்ப்பு கடைவைத்திருந்தவரின் கடைக்கு ஒருவர் தன்னுடைய இருசக்கரவாகணத்தை பழுதுநீக்கம் செய்துதரும்படி கொண்டுவந்து விட்டிருந்தார் அந்த இருசக்கரவாகணத்தின் பழுதினை சரிசெய்ததோடு மட்டுமல்லாமல் அந்த இருசக்கர வாகணத்தினை கழுவி சுத்தம் செய்து புதிய இருசக்கரவாகணம் போன்று பளபளவென மின்னும்படி செய்தார் அந்த கடையின் சொந்தக்காரர் இதனை கண்ணுற்ற அருகிலிருந்த மற்ற கடைகாரர்கள்அவரைபார்த்து கோரிய பணியை மட்டும் செய்திடாமல்கோராத பணியையும் சேர்த்து செய்துள்ளாயேஅதனால் உனக்கு என்ன பயன் எனகிண்டல்செய்தனர் சரிபரவாயில்லை என்னுடைய மனதிருப்திக்காக நான்அவ்வாறுசெய்தேன் என பதிலிருத்தார் அந்த கடைகாரர் அதன்பின்னர் அந்தஇருசக்கரவாகணத்தின் சொந்தக்காரர் வந்து தன்னுடைய வண்டியை பார்த்தபோது அதனுடைய பழுதுமட்டும் நீக்கியதுமட்டுமல்லாது அவருடைய இருசக்கரவாகணத்தைய புதியதாக தோன்றிடுமாறு செய்துள்ளதை பார்த்து மிகவும் ஆச்சரியத்துடன் அவருடைய விசுவாசத்தை பராட்டி தன்னுடைய நிறுவனத்திற்கு தேவையான அனைத்து பணிகளையும் அந்த கடைகாரருக்கு வழங்கி கெளரவித்தார் எந்தவொரு பணியுடனும் கூடுதலாக நாம் செய்திடும் பணிஎன்றும் வீணாகாது என்ற கருத்தினை மனதில்கொள்க

சனி, 10 நவம்பர், 2018

சமூக வலைதளங்களிலும் சந்தைப்படுத்தலிலும் தற்போதைய போக்குகள்


நம்முடையநிறுவனத்தின் உற்பத்தி பொருட்களையும் சேவைகளையும் மிகச்சரியான பயனாளிகளுக்கு கொண்டுசேர்ப்பதற்காக சமூக ஊடகங்களை பயனுள்ள முறையில் பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய நிறுவனத்தினைமிக வெற்றிகரமான நிறுவனமாக கொண்டுசெல்லமுடியும்அது மிகப்பெரியபயனுடையதாக இருந்தாலும் நாம் விரும்பும் விதமாக துல்லியமாக இருந்திடுமாறு மாற்றியமைத்திடவேண்டும் இவற்றிற்கு அடிப்படையாக சமூக ஊடகங்கள், சந்தை போக்குகள் ஆகியவைமிகச் சிறந்தகாரணிளாக இருப்பதால் அவற்றுள் ஆதிக்கம் செலுத்தக்கூடியவற்றை மட்டும் தற்போது காண்போம் 1 இணையத்தில் சொந்த இடத்தில் விளம்பரம் செய்வதா வாடகை இடத்தில் விளம்பரம் செய்வதா என்பதேமுதல் காரணியாகும் முகநூல் போன்ற சமூகவலைதளங்களில் விளம்பரம் செய்வது வாடகைஇடமாகும் இவ்வாாறன அதிக வாடகை செலவுகொண்ட இந்த வாடகைஇடத்தின்வாயிலாக விளம்பரம் செய்வது எண்ணற்ற பயனாளர்களை கைகொள்ளும் உத்தியாக இருந்தாலும் இதற்கான செலவு மிகஅதிமாகும் நம்முடைய சொந்த இணையபக்கத்தில்அல்லது வலைதளத்தில் விளம்பரம் செய்வது சொந்த இடவிளம்பரமாகும் இதன் வாயிலாக மிககுறைந்த பயனாளர்களின் கவணத்தையே கவரமுடியும் என்றாலும் மிககுறைவான செலவாகும் அதனால் இரண்டையும் சீர்தூக்கி சமன்செய்து நமக்கு பொருத்தமானதை மிகச்சரியானதை தெரிவுசெய்து கொள்க 2. இரண்டாவதாக தற்போதைய டிஜிட்டல் சந்தைபடுத்துதலில் செய்திகள் தகவல்தொடர்புகள் அனைத்தும் காணாது கரைந்து தொலைந்து போவதே மிகப்பெரிய சிக்கலாக சவாலாக உள்ளது அவ்வாறு காணாமல் கரைந்து தொலைந்து போகாமல் சரியான நபருக்கு சரியான செய்தியைத் சரியான நேரத்தில் சென்றடையுமாறு செய்வதே இந்த பயனாளிகளிடம நேரடி விளம்பரம்திட்டமாகும் இதன்வாயிலாக சந்தைபடுத்துதலின் செலவு குறையவும் நம்முடைய நோக்கம் நிறைவேறவும் வழிவகுக்கின்றது. 3 மூன்றாவதாக quora and meet.com. என்பது போன்ற வாடிக்கையாளர்களின் இணைய வலைபின்னல் வாய்ப்புகளை நம்முடைய உற்பத்தி பொருட்களுக்கும் சேவைகளுக்கும் மிகச்சரியாக பயன்படுத்தி கொள்வது நம்முடைய நிறுவனத்தினை வெற்றிகரமாக செய்வதற்கு மிகப்பெரிய பங்காற்றுகின்றது 4 நான்காவதாக போட்களின் வாயிலான சந்தைபடுத்துதலாகும் போட் என்பது இணையத்தில் தானியங்கு பணிகளை இயக்க வடிவமைக்கப்பட்டமிகச்சிறந்த மென்பொருளாகும். இயல்பிலேயே மீண்டும் மீண்டும் இயங்கக்கூடிய மற்றும் எளிமையான பணிகளைச் செய்வதற்குத் தெரிவுசெய்யப்படுகின்றன. எனவே, நாம் நம்முடைய உற்பத்தி பொருட்களுக்கும் சேவைகளுக்கும் ஆன செய்திகளை பரப்புவதில் ஆர்வம் கொண்டால், பல சாத்தியமான வாடிக்கையாளர்களையும் வாசகர்களையும் முடிந்தவரை கவருவதற்கு, இந்த போட்களை பயன்படுத்தி கொள்வது மிகச்சிறந்த வழியாகும்

திங்கள், 5 நவம்பர், 2018

வாய்ப்பு நம்முடைய வீட்டின் கதவினை ஒரு முறை மட்டுமே தட்டும்


பத்தொன்பதாம் நூற்றாண்டில் மெழுகுவர்த்தி வியாபாரத்தில் சிறந்த விற்பனையாளராகவும் மிகப்பிரபலமான முன்னனி நிறுவனமாகவும் பிராக்டர் அண்ட் கேம்பிள் என்ற நிறுவனம் இருந்துவந்தது இந்நிலையில் கி பி1879 ஆம் ஆண்டில் தாமஸ் அல்வா எடிசன் எனும் அறிவியல் அறிஞர் மின்சாரத்தால் எரியும் மின்விளக்கை கண்டுபிடித்தார் அதன்பின்னர்பொதுமக்கள் அனைவரும் தங்களுடையை வீடுகளில் இரவில் வெளிச்சம் தருவதற்காக மெழுகுவர்த்தி பயன்படுத்திடும் வழக்கொழிந்து அதற்கு பதிலாக மின்விளக்குகளை வாங்கி பயன்படுத்த ஆரம்பித்தனர் அதனால் கிறிஸ்துமஸ் விழா போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு மட்டுமே இந்த மெழுகு வர்த்தியை வாங்குவது தவிர மற்றநாட்களில் பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய அனைத்து தேவைகளுக்கும் மெழுகுவர்த்திவாங்குவதை அறவே தவிர்த்ததால் மெழுகுவர்த்தி வியாபாரம் வீழ்ச்சியடைந்தது அதனால் சின்சினாட்டி என்ற நகரில் இருந்த இந்த பிராக்டர் அண்ட் கேம்பிள் என்ற நிறுவனம் போதுமான வருமானம் இல்லாமல் திவாலாகும் நிலையில் போராடிக் கொண்டிருந்தது அதனை தொடர்ந்து இந்நிறுவனமானது எப்படிஇந்த நிலையிலிருந்து மீண்டு எழுவது அல்லது இந்த நிறுவனத்தையே மூடிவிடலாமா என்ற மிகவும் சிக்கலான நிலையில் தத்தளித்து கொண்டிருந்தது இவ்வாறான நிலையில் ஒருநாள் அந்நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்ஒருவர் தாம் இயக்கிக் கொண்டிருந்த இயந்திரத்தினை உணவு இடைவேளையின்போது மறதியாக நிறுத்தம் செய்திடாமல் அப்படியே வி்ட்டுவிட்டுசென்றார் பின்னர் அவர்மதியஉணவு இடைவேளை முடிந்து திரும்பிவந்து பாரத்தபோது அவர் இயக்கிகொண்டிருந்த இயந்திரமும் பணிபுரிந்த இடமும் நொப்பும் நுரையுமாக காற்று குமிழிகள் நிரப்பப்பட்டவாறு முழுகிஇருந்தன உடன் அந்த தொழிலாளியுடன் பணிபுரிந்த மிகுதி அனைவரும் இத்தோடு அந்த தொழிலாளியின் கதைமுடிந்தது அவரை வேலையைவிட்டு நீக்கிவிடுவார் என அச்சத்துடன் பார்த்து கொண்டிருந்தவேளையில் நிறுவனத்தின் முதலாளி அங்குவந்து அந்த சூழலை பார்வையிட்டார் அதனை தொடர்ந்து இவ்வளவு நுறையடன் காற்றுக்குமிழிகள்ஏன் உருவாகியது நாம் குளிப்பதற்கு பயன்படுத்திடும் சோப்பினை இதிலிருந்து ஏன் தயார் செய்யக்கூடாதுஎன வித்தியாசமாக சிந்தித்தார் அதனடிப்படையில் ஐவரி எனும் குளியல் சோப்பு உருவானது அந்நகரத்திற்கு அருகில் ஓடிக்கொண்டிருந்த ஓகியோஎன்ற ஆற்றில் குளிக்கும்போது பயன்படுத்திடும் மிதக்கும் சோப்பு அதன்மூலம் கிடைத்தது அந்நகரம் மட்டுமல்லாது அந்நாடுமுழுவதும்பொதுமக்கள் பிராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனத்தின் ஐவரி எனும் இந்த புதிய குளியல் சோப்பினை பயன்படுத்திட துவங்கியதால் குளியல் சோப்பு வியாபாரத்தில் பிராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனம் ஒரு சிறந்தவிற்பனையாளராக உயர்ந்து முக்கிய தூணாக மாறியது இந்த பிராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனத்தில் தோன்றிய இவ்வாறான அசம்பாவிதங்கள் அல்லது வெளித்தோற்றத்தில் (unsurmountable) ஏதேனும் பிரச்சினைகள் எழும்போது அதனை அப்படியே தீர்வுசெய்து விட்டுவிடாதீர்கள் ஏனெனில் அந்த பிரச்சினைக்கான தீர்வினை படைப்பாற்றலாக மாறிடுமாறு வித்தியாசமாக சி்ந்தித்து ஒரு தங்க சுரங்கம்போன்ற புதிய வெற்றி வாய்ப்பாக இதனை மாற்றிக்கொள்ளமுடியும் . இதனைபோன்ற வாய்ப்பு நம்முடைய வீட்டின் கதவினை ஒரு முறை மட்டுமே தட்டும் . அதை கைகொள்ள நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்!என்ற செய்தியை மனதில் கொள்க

சனி, 3 நவம்பர், 2018

வெற்றிக்கதை - ஒரு சாதாரண மனிதனும் முயற்சிசெய்தால் வாழ்க்கையில் மிகசிறந்த வெற்றியாளராக மலரமுடியும்


மைக்கேல் ஜோர்டான்என்பவர் நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் எனும் நகரின் ஒதுக்குபுறத்திலுள்ள குடிசைகளாலான பகுதியில், 1963 ஆம் ஆண்டு பிறந்தார். அவருக்கு நான்கு உடன்பிறப்புகள் இருந்தனர் அதனால் அவரது தந்தையின் வருவாய் முழுவதும் குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை. அதனை தொடர்ந்து அவர் ஒரு சாதாரண ஏழை குடும்பஉறுப்பினராக மிகவும் நம்பிக்கையற்ற எதிர்காலத்தை நோக்கி வாழ்ந்துவந்தார். அவருடைய 13 ஆவது வயதில் அவரது தந்தையானவர் மைக்கேல் ஜோர்டனிடம் பயன்படுத்திய ஆடை ஒன்றை கொடுத்து: " இந்த ஆடையின் மதிப்பு எவ்வளவாக இருக்கும்?" எனவினவினார் அதற்கு ஜோர்டான் , " இது ஒரு டாலர் மதிப்பிருக்கும்." என பதில் கூறியதை தொடர்ந்து அவரது தந்தை, " இந்த பயன்படுத்திய ஆடையை இரண்டு டாலர்களுக்கு உன்னால் விற்க முடியுமா? அவ்வாறு இரண்டு டாலர்கள்விலைக்கு இதை விற்க முடியும் என்றால்,நம்முடைய குடும்பத்திற்கு தற்போது பேருதவியாகும்." எனகோரினார் உடன் ஜோர்டான், "அப்பா! நீங்கள் கோரியவாறு இதனை விர்பணை செய்வதற்கு நான் முயற்சி செய்கிறேன், ஆனால் என்னால் அதற்கு உத்தரவாதம் எதுவும் தரமுடியாது ." என்றுகூறி அந்த பயன்படுத்தி ஆடையை நன்கு துவைத்து காயவைத்து மடிப்பாக செய்து மடித்து.வைத்தார் அடுத்த நாள், அவர் அருகிலிருந்த கூட்டம் மிகுந்த சந்தைக்கு அதனை எடுத்துசென்று. ஆறு மணி நேரத்திற்கு மேல் அதனுடைய விலையை கூவிதிரிந்து கொண்டிருந்தார் இறுதியாகஅவருடைய தந்தை கூறிய 2 டாலர்விலைக்கு அதை விற்க முடிந்தது. அவர் அந்த இரண்டு டாலர் பணத்தினை எடுத்து கொண்டு வீட்டுக்கு ஓடிவந்து தன்னுடைய தந்தையிடம் மகிழ்ச்சியுடன் வழங்கினார். பின்னர், ஒருசில நாட்கள் கழித்து, அவரது தந்தை அவரிடம் மீண்டும் மற்றொரு பயன்படுத்திய ஆடையை, கொடுத்து "தற்போது இதனை நீ 20டாலருக்கு விற்க முடியுமா ? " என கோரினார் உடன் ப யத்தில், ஜோர்டான் "ஐயய்யோ!அது எப்படி சாத்தியம் இதனை நன்கு துவைத்து காயவைத்து மடிப்பாக செய்தாலே அதிகபட்சம் இரண்டு டாலர்கள் மட்டுமே கிடைக்கும்." என பதட்டத்துடன் பதிலிறுத்தார் அதனை தொடர்ந்து அவரது தந்தை, " நீ ஏன்புதியவழியில் முயற்சி செய்ய கூடாது? அவ்வாறாக இதனை 20டாலரில் விற்பணை செய்வதற்கு புதிய வழியில் முயற்சி செய்துதான் பாரேன் ." என அவரிடம் அந்த பழைய ஆடையை ஒப்படைத்தார் மைக்கேல் ஜோர்டான் அதிக பயத்தில் ஒரு சில மணி நேரம் அப்படியே உட்கார்ந்துவிடடார் பிறகு, இறுதியாக, அவருக்கு புதிய வித்தியாசமான யோசனை ஒன்று தோன்றியது அதனை செயல்படுத்தலாம் என முடிவுசெய்தார் அதாவது அந்த பழைய ஆடையை நன்கு துவைத்து காயவைத்து மடிப்பாக செய்துமடித்துவைத்த பின்னர் அருகிலிருந்த ஒரு ஓவியரிடம் மிக்கி மவுஸ் எனும் படத்தை அந்த ஆடையில் வரையச்செய்து அதற்காக அந்த ஓவியருக்கு 2 டாலர் வழங்குவதாக உறுதியளித்து சந்தைக்கு எடுத்து சென்றார் பணக்காரவீட்டு சிறுவன் ஒருவன் மிக்கிமவுஸின் ஓவியம் வரையப்பட்ட இந்த ஆடையைபார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சியுற்று தன்னுடைய பெற்றோரிடம் இந்த மிக்கிமவுஸ் வரையப்பெற்ற பழையஆடையை தனக்கு வாங்கிதருமாறு தொந்திரவு செய்ததை தொடர்ந்து இறுதியாக 25 டாலர்களுக்கு அதனை அந்த பணக்கார குடும்பத்திற்கு விற்பணைசெய்தார் இந்த தொகை ஜோர்டானுடைய தந்தையின் ஒரு மாத ஊதியத்திற்கு சமமாகும். அதனால் ஜொர்டானும் அவருடைய வீட்டில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் மிகவும் மகிழ்சியுற்றனர் அதன்பின்னர் அவரது தந்தை மீண்டும் மற்றொரு பயன்படுத்திய ஆடையை கொடுத்து, "நீ இதனை 200 டாலர்கள் என்ற விலையில் மறுவிற்பனை முடியுமா?" எனக்கோரினார் ஜோர்டான் மிகவும் மகிழ்ச்சியாக" ஏன்முடியாது" என சிறிதும் மிகவும் தைரியமாக சந்தேகம் எதுவும் இல்லாமல் ஏற்று கொண்டார். ஒருசில நாட்கள் கழித்து அவர்கள் வாழ்ந்துவந்த நகரத்திற்கு ஒரு பிரபல திரைப்பட நடிகை படப்பிடிப்பிற்காக வந்தார் பத்திரிகையாளர்களை தவிர யாரும் அந்த நடிகையின் அருகில் செல்லமுடியாதஅளவு பாதுகாப்பு இருந்தது இருந்தாலும் ஜோர்டான் பிரபல நடிகையின் அருகில் எப்படியோ போய்சேர்ந்து தான் வைத்திருக்கும்பழைய ஆடையில் . அவருடைய கையெழுத்தினை (ஆட்டோகிராப்பை)கோரினார் அப்பாவி தோற்றத்துடன் இருந்த ஜொர்டானை பார்த்து,மகிழ்ச்சியுடன் பழையபயன்படுத்திய ஆடையில் அந்த பிரபல நடிகையானவர் தன்னுடைய கையெழுத்தினை இட்டார் உடன் மிகவும் மகிழ்ச்சியாக கூட்டத்தைவிட்டு வெளியேவந்த ஜொர்டான் பின்னர் சந்தையில் சென்று பிரபலநடிகை கையெழுத்திட்ட அந்த ஆடையை ஏலத்தில் விற்பணைசெய்வதாகவும் குறைந்தபட்ச விற்பனை விலை 200 டாலர்கள் ஆகும்!" எனக்கூவினார் உடன் சந்தையில் இருந்தவர்கள் நான் நீ என போட்டிபோட்டு கொண்டு ஏலத்தின் விலையைஉயர்த்தி கொண்டேசென்று இறுதியில் 1,200 டாலர்கள் என்ற விலையில் ஒரு தொழிலதிபர், ஏலம் எடுத்தார்! விற்பனைத்தொகையான 1200 டாலர்களுடன் வீட்டிற்கு சென்றபோது குடும்ப உறுப்பினர் அனைவரும் மிகவும்மகிழ்ச்சியாக கொண்டாடினர் மிகமுக்கியமாக அவரது தந்தை கண்ணீர் மல்க , " மகனே நீ கண்டிப்பாக வாழ்க்கையின் உச்சத்திற்கு செல்வாய்"என அவரை வாழ்த்தினார் அவருடைய தந்தையின் இந்த வாழ்த்து செய்தியை அடிப்படையாக கொண்டு மைக்கேல் ஜோர்டான் என்பவர் தனக்கு பிடித்தமான கூடைபந்து விளையாட்டினை முழுநம்பிக்கையுடன் கற்று மிக பெரிய பிரபலமான கூடைப்பந்து வீரராக உயர்ந்தார் வாழ்க்கையில் வெற்றிபெறவேண்டும் என்ற மனமிருந்தால்போதும் நாம் முயற்சிசெய்து வாழ்க்கையில் மிகசிறந்த வெற்றியாளராக மலரமுடியும் என்பது திண்ணம்

வியாழன், 1 நவம்பர், 2018

இந்தியாவில் தொடக்கத் தொழில் திட்டம்(Startup Scheme)


இந்திய அரசாங்கம் கடந்த சில ஆண்டுகளில் 50இற்கும் மேற்பட்ட + தொடக்கத் தொழில் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு தொடக்கத் தொழில் திட்டமும் இந்திய தொழில் தொடக்க சூழலை மேம்படுத்தும் நோக்கம் கொண்டதாகும் . தற்போது இந்தியாவில் 4,400 மேற்பட்ட தொழில்நுட்பங்கள் இந்த தொடக்கத் தொழில் திட்டங்களின் பட்டியிலில் உள்ளன, மேலும் இந்த எண்ணிக்கை 2020 க்குள் 12,000 க்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறான தொடக்கத்தொழில் திட்ட திறனாளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அமெரிக்காவும் பிரிட்டனும் முதலிரண்டு இடங்களில் உள்ளன இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும், அதன் உலகளாவிய தொழில்சாம்ராஜ்ஜியங்களுக்கு ஏற்ப, இந்தியா பெருமையடைவதற்கு அதன் சொந்த பில்லியன் டாலர் கிளப் என்பது உள்ளது. இதில் ஃபிளிப்கார்ட், ஸ்நாப்சீல், ஓலா, இன்மொபி, பேடிம் போன்ற தொடக்கதொழில்களும் அடங்கும். தற்போது $ 100 மில்லியன் நிதி திரட்டல் மூலம், ஃபின் டெக்நிறுவனத்தின் மொபிகுவிக் என்ற தொடக்கத் தொழில் திட்டம் கூட இந்த யூனிகார்ன் கிளப்பில் சேர தயாராகவிருக்கின்றது அவ்வாறாயின் . இந்தியாவின் தற்போதைய தொடக்கத் தொழில் திட்டம் என்றால் என்ன என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழும் நிற்க இந்தியாவில் ஒரு நிறுவனம் ஆனது 1.பொதுவான தொழில் எனில் ஏழு ஆண்டுகளுக்குள், உயிரி தொழில்நுட்பம் எனில் பத்தாண்டுகளுக்குள், 2.முந்தைய நிதியாண்டின் ஏதேனும் ஒரு வருடத்தில் வருட வருமானம் ரூ 25 கோடிக்கு மிகாமல், 3புத்தாக்கங்கள் அல்லது செயல்முறைகள் அல்லது சேவைகளின் புதுமை, மேம்பாடு அல்லது முன்னேற்றம், அல்லது ஒரு உயர்ந்த தொழில் முனைவோர் அல்லது வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் அல்லது செல்வத்தை உருவாக்குதல் ஆகியவற்றை ஏற்படுத்துதல், ஆகிய நிபந்தனைக்களுக்குட்பட்டு துவக்கப்பட்ட அல்லது பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு நிறுவனமும் தொடக்கத் தொழில் நிறுவனம் ஆகும். இந்த வரையறைக்குட்பட்ட நிறுவனம் இந்த நோக்கத்திற்காக அமைக்கும் இடைநிலை மந்திரி சபைகுழுவிடமிருந்து சான்றிதழைப் பெற்றுக் கொண்டபின், இந்த தொடக்கதொழில்நிலைக்கான வரி சலுகைகள் பெற தகுதியுடையதாக இருக்கும் ஆயினும் இந்த நிபந்தனைகளை பூரத்தி செய்வதற்காக ஏற்கனவே உள்ள ஒரு வியாபாரநிறுவனத்தினை பிரிப்பது அல்லது புனரமைப்பு செய்வதன் மூலம் அத்தகைய தொடக்கதொழில் நிறுவனம் அமைக்கப்பட்டதாக இருக்ககூடாது மேலு்ம்முந்தைய நிதியாண்டிற்கான வருவாய் 25 கோடியைக் கடந்துவிட்டிருந்தாலும் இணைத்தல் அல்லது பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து பொதுவான தொழில் எனில் 7 வருடங்கள் நிறைவு செய்யப்பட்டிருந்தாலும் , உயிரி தொழில்நுட்பம் எனில் பத்து வருடங்கள் நிறைவு செய்யப்பட்டிருந்தாலும் தொடக்கதொழில் என்ற வரையறைக்குள் வராது.

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...