சனி, 29 டிசம்பர், 2018

தகவல் தொழில்நுட்ப காலகட்டமானஇந்த 21 ஆம் நூற்றான்டில் சிறிய அளவில் ஏராளமான வகையில்தொழிலை துவங்கலாம்


1.Online Tutorialsபொதுவாக தற்போது நம்மில் பெரும்பாலோர் இருந்த இடத்திலிருந்தவாறே எந்தவொரு புதிய தொழில்நுட்பத்தையும் கற்க விரும்புகின்றனர் அதனால் அவ்வாறான கற்றலை வழங்குகின்றஇணையவழிகல்வியாக தொழிலநுட்பம் இசை நாட்டியம் ஓவியம் சமையல்ஆகியவற்றிற்கான ஆன்லைன் டுட்டோரியல் கல்வி எனும் தொழிலை குறைந்தசெலவில் நடத்தலாம் 2. Animation தற்போதைய தகவல்தொழில்நுட்ப காலகட்டத்தில் அசைவூட்டு (Animation)படங்கள் மிகமுக்கிய இடத்தை வகிக்கின்றன அதிலும் நிறுவனங்கள் தங்கள் பொருட்களை சந்தைபடுத்திடுவதற்கு இந்த அசைவூட்டுபடங்கள்மிகமுக்கிய பங்களிக்கின்றன அதனால் சிறிய அளவில் அசைவூட்டு படங்களை உருவாக்கி டும் பணியைசெய்யலாம் 3. Advertisement Makingதற்போத எந்தவொரு உற்பத்தி பொருளும் விளம்பரமில்லாமல் சந்தையில் நிலைத்து இருக்கமுடியாத என்றநிலையில் பொருளிற்கான விளம்பரங்களை உருவாக்கிடும் பணியை செய்திடலாம் 4.Advertisement Agencyஇவ்வாறான விளம்பரதயாரிப்பாளர் தனியுலகமாகவும் பொருள்உற்பத்தி தனியுலகமாகவும் இருக்கின்றநிலையில் அவைகளுக்கு இடையேஇணைப்பு பாளமாக விளங்கிடும்விளம்பர முகவர் பணியை செய்யலாம் 5. Photographyஎந்தவொரு செய்தியையும் உரையாக வழங்குவதைவிட அவ்வுரையுடன் விளக்கப்படமும் இணைத்து வழங்கும்போது மக்களின் மனதில் அந்த செய்தி உடன் பதியும் அதற்காகபடப்பிடிப்பு மிகமுக்கிய இடத்தைவகிக்கின்றது இவ்வாறான படபிடிப்பு தொழில் குறைந்த முதலீட்டில் செய்திடமுடியும் 6. Freelance Writerசெய்திகளை உரையாக எழுதி உருவாக்குவது அதிலும் எந்தவொரு செய்தி நிறுவனத்தையும் சாராமல்சுதந்திரமாக எழுதுவது மிகச்சிறந்த தொழில் வாய்ப்பாகும் இவ்வாறான யாரையும் சார்ந்திராத சுதந்திர எழுத்தாளர் பணியை செய்திடுக 7.Translation servicesஅனைத்து தொழில்களும் உலகளாவிய இன்றையை நிலையில் நாடுகளுக்கு இடையேஅந்நாடுகளின் பேசப்படும் மொழிகளுக்கு இடையே பாளமாக விளங்குவது மொழிபெயர்ப்பு பணியாகும் அவ்வாறான மொழிபெயர்ப்பு பணியானது மிகமுக்கியஇடத்தினைவகிக்கின்றது அதனால் இந்த மொழிபெயர்ப்பு பணியைசெய்திடலாம் 8. Domain and Hostingதற்போது இணையமில்லாது எந்தவொரு செயலும் இல்லை அதிலும் வியாபரத்திற்குஇணை பக்க்கள்தான் அடிப்படையாக விளங்குகின்ற இன்றையை நிலையில் வியாபார நிறுவனங்கள் அனைத்தும் தத்தமக்கு என தனியாக இணையபக்கத்தை உருவாக்கிடவிரும்பிடுகின்றன அதனை எளிமையாக செயல்படுத்திபடுவதற்காக Domain and Hosting என்ற சேவைத்தொழிலை மேற்கொள்க 9.Search Engine Optimization (SEO)Consultantஇணையத்தில் கூகுள் யாகூ .பிங்க்போன்றவை தேடுபொறியில் முதன்மை இடத்தை வகிக்கின்றன அவ்வாறான தேடுபொறிகளில் நம்முடைய இணையபக்கத்தைமுதல் பத்து இடங்களில் கொண்டு வருமாறு செய்வதற்காக நம்முடைய இணையபக்கத்தின் உள்ளடக்கங்களை மாற்றியமைத்திடவேண்டியுள்ளது அவ்வாறு தேடுபொறியில் இணையபக்கத்தை முதலிடங்களை கொண்டுவருவதற்கானஆலோசகர் பணிமிகமுக்கிய இடத்தை வகிக்கின்றது அவ்வாறான தேடுபொறி ஆலோசகர் பணியை செய்திடுக

சனி, 22 டிசம்பர், 2018

இந்தியாவில் ஒரு புதிய நிறுவனத்தை பதிவு செய்வது எவ்வாறு


தற்போது இந்தியாவில் புதியதாக தொழில் துவங்கவிருப்பமுடையவர்கள் அப்புதிய நிறுவனத்தை மிகவிரைவாக ஏழேநாட்களில் பதிவுசெய்திடமுடியும் என்ற மிக எளிமையான நடைமுறையை நிறுவனங்களின் விவகாரத்துறை அமைச்சகம்(MCA) செயல்படுத்திடுகின்றது இதற்காக நாம்எந்தவொரு அரசு அலுவலகங்களுக்கும் நேரடியாக செல்லத்தேவையில்லை மேலும் நாம் இந்தியாவில் எந்தவொரு இடத்திலிருந்தும் அனைத்து ஆவணங்களையும் மின்னனு முறையில் பூர்த்திசெய்து பதிவேற்றம் செய்தால் மட்டும் போதுமானதாகும் இவ்வாறு புதிய நிறுவனங்களை பதிவுசெய்வதற்காகவே பல்வேறுநிறுவனங்களும் நிறுவனங்களின் விவகாரத்துறை அமைச்சக குழுக்களும் நமக்கு உதவதயாராக இருக்கின்றன இதற்காக முதலில் 1 தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமம் 2. பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுமம் 3.ஒருநபர் நிறுமம் 4.தனிநபர் உடைமை நிறுமம் 5.பொதுவான கூட்டாண்மை நிறுமம் ஆகிய ஐந்துவகைகளில் பதிவு செய்திட முடியும் இவை ஒவ்வொன்றும் வசதி வாய்ப்புகளில் பல்வேறு வகைகளில் வேறுபட்டவையாக இருப்பதால் இவற்றுள் ஒரு வகையை மட்டும் நாம் பதிவு செய்யவிரும்பும் நிறுவனத்தின் வகையாக முடிவுசெய்து தெரிவுசெய்து கொள்க அதற்கடுத்ததாக இந்தியாவில் ஒரு வியாபார நிறுவனத்தை பதிவு செய்வதற்கான நடைமுறையை எளியதாக ஆக்குவதற்காக நிறுவனங்களின் விவகார்த்துறை அமைச்சகம் (MCA)ஆனது INC-29 எனும் படிவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது அதாவது பதிவுசெய்திட விரும்பும் ஒரு நிறுவனத்திற்கான வணிக பெயர் ஒப்புதல் பெறுதல், இயக்குனரின் அடையாள எண் (DIN),நிறுவனத்தை பதிவுசெய்வதற்கான விண்ணப்பம் ஆகிய மூன்று செயல்களையும் இந்த (INC-29)படிவத்திலேயே செயற்படுத்திடுமாறு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது மூன்றாவதாக நிறுவனங்களின் விவகாரத்துறை அமைச்சகத்திலிருந்து (MCA) பதிவுசெய்யப்படும் நிறுவனத்தின் இயக்குனர்களுடைய DSC எனும் மின் கையொப்ப சான்றிதழ்களை பெறவேண்டும் இதற்காக தேவையான ஆவணங்களை இணையத்தின் வாயிலாக சமர்ப்பித்தால்போதும் அவைகள் சரியாக இருந்தால் இந்தமின்கையொப்ப சான்றிதழை இரண்டு நாட்களுக்குள் பெறமுடியும் தகவல் தொழில்நுட்ப சட்டம்200-இன் விதிகளின்படி, மின்னணு வடிவத்தில் சமர்ப்பிக்கப்படும் அனைத்து ஆவணங்களின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மைக்காக அவைகளுடன் இந்தமின் கையொப்பங்களைப் பயன்படுத்துவதை குறிப்பிடுகின்றன, அவைகளின்படி சமர்ப்பிக்கப்படும மின்னணு ஆவணம் பாதுகாப்பானது என்றும் உண்மையானது என்றும் அனுமதிக்கின்றது. எனவே, MCA21 எனும் மின் ஆளுமை திட்டத்தின் கீழ் நிறுவனங்கள் / வரையறுக்கப்பட்டகூட்டாண்மை நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் அனைத்து கோப்புகளும் கையொப்பமிட அனுமதிக்கப் பெற்ற நபர் தனக்கு அளிக்கபபட்ட மின் கையொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் இந்த INC-29படிவத்தை தயார் செய்யவேண்டும் அதற்காக இயக்குனரின் அடையாள எண் (DIN ),நிறுவனத்தின் பெயர் ஒப்புதல்சான்றிதழ் , MOA மற்றும் AOA ஆகிய அடிப்படை ஆவணங்களின் விவரம் ,பதிவுசெய்யப்பட்ட அலுவலக சரிபார்ப்புவிவரம் ,இயக்குநர்களின் நியமனக்கடிதங்கள் அறிவிப்புகள் ஆகிய விவரங்கள்இந்த INC-29 படிவத்தில் பூர்த்தி செய்யப்படவேண்டும் ஒரு நிறுவனத்தை பதிவு செய்ய இந்த INC-29 படிவத்துடன் சமர்ப்பிக்கத் தேவையான ஆவணங்கள் பின்வருமாறு மார்பளவு உருவப்படம் , நிரந்தரவருமானவரி எண்அட்டை(PAN card), சமீபத்திய வங்கி கணக்குஅறிவிக்கை,தொலைபேசிஅல்லதுசெல்லிடத்து பேசியின் பட்டியல் அல்லது எரிவாயு இணப்பு பட்டியல், ஒட்டுரிமைசான்றட்டை , பதிவு அலுவலகம் வாடகையாக இருந்தால் ஆங்கிலத்தில் வழக்குரைஞரின் சான்றளிக்கப்பட்ட வாடகை ஒப்பந்த பத்திரம் ,வாடகை பதிவு அலுவலகம் வழங்குவதற்கான மறுப்பின்மை சான்று, பதிவுஅலுவலகத்தின் முகவரிஅடையாள சான்று ஆகிய ஆவணங்களின் வருபட்ட நகல்கள் இந்த படிவத்துடன் இணைக்கப் படவேண்டும் அதாவது மேலே கூறிய அனைத்து ஆவணங்களின் வருடப்பட்ட நகல்களும் இந்த INC-29 படிவத்துடன் இணைக்கப் படவேண்டும் அதன்பின்னர் INC-29 படிவத்தில் தேவையானஅனைத்து விவரங்களும் பூர்த்தி செய்யப்பட்டு தயாராக உள்ளதெனில்இந்த INC-29 படிவத்தை இணையத்தின் வாயிலாக நிறுவன விவகாரத்துறை அமைச்சகத்தின் (MCA) இணைய வாயிலில் சமரப்பிக்கவேண்டும் பிறகு இந்த INC-29 படிவம் சரியான விவரங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் குறிப்பிட்ட நிறுமம் பதிவுசெய்யப்பட்டதாக அதற்கான பதிவுஎண்ணுடன் certificate of incorporation எனும் நிறுவன பதிவு சான்றிதழ்கிடைக்கும் அதனை தொடர்ந்து இந்த நிறுவனங்களின் பதிவெண் அடிப்படையில் நம்முடை ய நிறுவனத்திற்கான வருமான வரி அலுவலகத்தின் வாயிலாக நிரந்தர வருமான வரி கணக்குஎண் பெறமுடியும் மேலும் நம்முடைய நிறுவனத்திற்கென தனியாக வர்த்தக வங்கியில் வங்கி கணக்கு ஒன்றினை துவங்கமுடியும் அதற்குப் பிறகு நம்முடைய நிறுவனத்தின் வணிக வகை மற்றும் அளவை பொறுத்து பொதுசரக்குசேவைவரி (GST) பதவிற்காக விண்ணப்பிக்க வேண்டும். பொதுவாக நாம் துவங்கவிருப்பது தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம் எனில் குறைந்தபட்சம் 2 இயக்குநர்களும் அதிகபட்சம் 15 இயக்குநர்களும் அவ்வாறே குறைந்தபட்சம் 2 பங்குதாரர்களுடனும் அதிகபட்சம் 50 பங்குதாரர்களுடனும் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக பதிவுசெய்திடலாம் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுமமாக (LLP) கூட நாம் பதிவுசெய்திடமுடியும் ஆனால் சிறிது கூடுதலான நடைமுறையை நம்முடைய நிறுவனத்தை பதிவுசெய்வதற்கு பின்பற்றிடவேண்டும் ஒரேயொரு பங்குதாரரும் இயக்குநரையும் கொண்ட சிறிய ஒருநபர் நிறுமமாக கூடபதிவுசெய்திடமுடியும் என்ற செய்தியை மனதில் கொள்க

சனி, 15 டிசம்பர், 2018

தனியார்வரையறுக்கப்பட்ட நிறுமம் ,ஒருநபர் நிறுமம் வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுமம் ஆகியவை குறித்து ஒருஅறிமுகம்


வெளியிலுள்ள நபர்களிடமிருந்துமுதலீடு பெற்றுஒருநிறுமத்தை துவங்குவது தனியார்வரையறுக்கப்பட்ட நிறுமம்(Private Limiited)ஆகும் . தனிநபர் ஒருவர் தான்மட்டும் தன்னுடைய முதலீட்டுடன் ஒருநிறுமத்தை துவங்குவது ஒருநபர் நிறுமமாகும். நான்கைந்து நபர்கள் கூட்டாக சேர்ந்து தங்களுடைய முதலீட்டினை கொண்டு நிறுமத்தை துவங்குவது வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுமமாகும்(LLP) . வெளிப்புற நிதி உதவி எதுவுமில்லாமலேயே தங்களுடைய சொந்த நிதியை கொண்டு வியாபாரத்தை நடத்த விரும்பும் எவருக்கும், வணிகத்தின் எல்லா நடவடிக்கைகளிலும் திறமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க விரும்புகிறவர்களுக்கும் ஒருநபர் நிறுமமும் வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுமமும் சிறந்தவையாகும் பொதுவாக தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமத்தில் பங்குதாரர்களின் பொறுப்பு முதலீட்டின் தொகை வரை மட்டுமே என வரையறுக்கப்பட்டு விடுவதால் இந்த வகை நிறுமமானது அனைவராலும் விரும்பப்படுகின்றது தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமத்தை துவங்கவிரும்புவோர்கள் நிறுமங்களின் பதிவாளரின் இணையதள பக்கத்தில் (Ministry of CorporateAffairs(MCA)) நேரடியாக இணையத்தின் வாயிலாக எளிய ஒருபக்க படிவத்தில் சரியான விவரங்களை உள்ளீடுசெய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் மின்னணு வடிவத்தில் சமர்ப்பித்தால்போதும் உடன் அந்த தனியார் நிறுமத்தை பதிவுசெய்யப்பட்டதாக அதற்கென தனியானபதிவெண் ஒன்று ஒதுக்கப்பட்டு பதிவுசான்றிதழ் ஒன்று அந்நிறுமத்திற்கு வழங்கப்படும் அதனை தொடர்ந்து இவ்வாறு பதிவுசெய்யப்படும் அதனை தொடர்ந்து அந்த தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமத்தில் பலர் முதலீடு செய்வார்கள் வணிக வங்கிகளும் அந்த தனியார் நிறுமத்திற்கு தேவையான நீண்டகாலகடன், நடைமுறை மூலதனகடன் ஆகியவற்றை விரைவாக வழங்குவார்கள் வெளிப்புற நிதி தேவைப்படாத ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் கூட்டாக சேர்ந்து தங்களுடைய சொந்த முதலீட்டினை கொண்டு வரையறுக்கப்பட்டகூட்டாண்மை நிறுமத்தை துவங்கிடமுடியும் மேலும் மற்ற பங்காளிகளால் எழும் எதிர்மறை சிக்கல்களிலிருந்து மிகுதியுள்ள பங்குதாரர்களை பாதுகாப்பதற்கு ஒரு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுமம் அனுமதிக்கிறது. அதுமட்டுமல்லாது கூட்டாளிகள் தங்களுடைய பொறுப்பினை வரையறைக்குள் கொண்டுவருவதற்கு இது ஒரு நல்ல தேர்வாக அமைகின்றது அதைவிட தேவையெனில் பிந்நாட்களில் இதனை தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமமாக மாற்றியமைத்து கொள்ளமுடியும் தனிப்பட்ட நபர் தான் விரும்பும் தொழிலை தன்னுடைய பொறுப்பு வரையறுக்குட்-பட்டதாக துவங்குவதற்கு இந்த ஒருநபர் நிறுமம் சிறந்த தேர்வாகும் ஆயினும் இவ்வாறான ஒருநபர் நிறுமத்தின் கடந்த மூன்றாண்டுகளின் சராசரி வருவாய் இரண்டு கோடிக்கு மேல் உயரும்போதும் செலுத்தப்பட்ட பங்குமூதலீடுகள் ஐம்பது இலட்சத்தை விட உயரும்போதும் அந்த ஒருநபர் நிறுமத்தினை அவர் கண்டிப்பாக தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமமாக மாற்றி கொள்ளவேண்டும் இவ்வாறான ஒருநபர் நிறுமத்தை துவங்குவிரும்வோர் நிறுமங்களின் பதிவாளரின் இணையதளபக்கத்தில் (Corporate Affairs(MCA)) நேரடியாக இணையத்தின் வாயிலாக எளிய ஒருபக்க படிவத்தில் சரியான விவரங்களை உள்ளீடுசெய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் மின்னணு வடிவத்தில் சமர்ப்பித்தால்போதும் உடன் அந்த ஒருநபர் நிறுமத்தை பதிவுசெய்யப்பட்டதாக அதற்கென தனியாக பதிவெண் ஒன்று ஒதுக்கப்பட்டு பதிவுசான்றிதழ் அந்த ஒருநபர் நிறுமத்திற்கு வழங்கபடும் இந்த மூன்றில் தங்களுடைய தொழிலிற்கு பொருத்தமான ஒன்றினை தெரிவுசெய்து தாங்கள் துவங்கவிருக்கும் தொழிலிற்கு பயன்படுத்தி துவங்கிடுக என பரிந்துரைக்கப்படுகின்றது

சனி, 8 டிசம்பர், 2018

கெண்டகி ஃபிரைடு சிக்கன் (KFC)எனும் உணவினை உற்பத்தி செய்திடும்நிறுவனம்


கலோனல் சான்டர்ஸ் என்பவர் தன்னுடைய 65 ஆவது வயதில் தனது சமூக பாதுகாப்பிற்கான காசோலை 99 டாலர் ஓய்வூதியம் பெற்றுவந்தார் அப்போது அவரிடம் வாழ்வதற்காக மிகச்சிறிய வீடுஒன்றும் எங்காவது செல்வதற்காக பழைய மகிழுந்து ஒன்றும் மட்டுமே அவருடைய சொத்துகளாக உடைமையாக இருந்தன ஆனால் அவர் மிகசிறப்பாக அனைவரும் விரும்புமாறான கோழிவருவல் உணவை தயாரித்திடுவார் அதனால் அவருடைய நண்பர்கள் அனைவரும் இந்த கோழிவருவலுக்காகவே அவரை சுற்றிசுற்றி வந்து கொண்டிருப்பார்கள் அந்நிலையில்இதனை ஏன்ஒரு நல்ல தொழிலாக மாற்றியமைத்து செயற்படுத்தக்-கூடாது என அவர் சிந்தித்தார் அதனை தொடர்ந்த அதனை நடைமுறை படுத்திடுவதற்காக முனைந்தார் அதனால் நாடுமுழுவதும் சுற்றுலாவை செயற்படுத்திடும் முகவர்கள் நடத்திடும் உணவகங்களில் இந்த கோழிவருவல் உணவை இலவசமாக வழங்க தான் தயாராக இருப்பதாகவும் அதனை அனுமதிக்குமாறும் அவ்வுணவகங்களில் 1000 முறை கோரினார் ஆயிரமுறையும் அவ்வாறான சுற்றலா முகவர்களின் உணவகங்களில் கட்டணமில்லாமல் அவருடைய கோழிவருவல் உணவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குமாறான அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டன இருந்தபோதிலும் அவரும் இவ்வாறான நிராகரிப்பினால் சோர்வுற்றிடாமல் கடைசியாக இன்னும் ஒருமுறை முயன்றுதான் பார்ப்போமே என 1001 ஆவதுமுறை முயற்சிசெய்தார் அதாவது சுற்றுலா உணவகத்தில் இவருடைய கோழிவருவல் உணவை இலவசமாக வாடிக்கை-யாளர்களுக்கு வழங்குவது எனும் கோரிக்கை ஏற்கப்பட்டு செயற்படுத்தப்பட்டது அதனை தொடர்ந்து இவருடைய கோழிவருவல் உணவு வாடிக்கையாளர் அனைவரும் விரும்பும் உணவாக வாடிக்கையாளர்களின் உணவுப்பழக்கமே மாறிப்போனது அவ்வாறு வாடிக்கையாளர்களின் உணவு பழக்கம் மாறியதை தொடர்ந்த அவருடைய கோழிவருவல் உணவினை உற்பத்தி செய்திடும் ஆண்டொன்றிற்க 45 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் ஈட்டிடும் அவருடைய கெண்டகி ஃபிரைடு சிக்கன் (KFC)எனும் மிகவும் பிரபலமான உணவு நிறுவனமாகவும். 220 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் செயல்படும் ஒரு உலகளாவிய மாபெரும் நிறுவனமாகவும் பரந்து வளர்ந்து விட்டது. விடாமல்முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் என்ற பழமொழியை மனதில் கொள்க.

செவ்வாய், 4 டிசம்பர், 2018

மிகை ஊதிய பங்குகள் வெளியீடு (Bonus Shares Issue)


இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்றத்தால் 31.12.1600இல் உருவாக்கப்பட்ட கிழக்கிந்திய கம்பெனி என்பதுதான் நாம் வாழும் இந்த உலகில் முதன் முதலில் தோன்றிய நிறுமமாகும் இது தற்போது நாம் செயல்படுத்திவரும் நிறுமத்தின் அனைத்து செயல்களுக்கும் முன்னோடியாகவிளங்கி வருகின்றது அவற்றுள் மிகை ஊதிய பங்குகள் வெளியீடும் ஒன்றாகும் மிகை ஊதிய பங்குகள் என்பது ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்த பங்குதாரர்களனைவரையும் அதற்காக அவர்களை அந்நிறுமத்தால் கௌரவிக்கும் ஒரு வழிமுறையாகும் அதாவது ஒருநிறுமத்தின் பங்குதாரர்களை கௌரவிப்பதற்காக ரொக்கமாக அல்லது தொகையாக அவர்களுக்கு வழங்குவதற்கு பதிலாக பங்காதாயமாக அல்லது அவ்வாறு வழங்க இயலாத நிலையில்மிகைஊதிய பங்காக வெளியிடுவது போன்ற வழிகளில் ஒருநிறுமமானது செயல்படுத்திடும் இவவாறாக மிகை ஊதிய பங்கினை பெறும் பங்குதாரர்களுக்கு இதன்மூலம்பிற்காலத்தில்கூடுதலாக பங்காதாயம் கிடைப்பதற்கான வழி ஏற்படுகின்றது மேலும் தனக்கு உடனடியாக ரொக்கம் தேவையெனில் அப்பங்குதாரர் இந்த மிகை ஊதிய பங்குகளை விற்று ரொக்கமாக ஆக்கி கொள்ளமுடியும் இந்த கிழக்கிந்திய கம்பெனியானது முதன்முதலில் தன்னுடைய பங்குதாரர்களுக்கு1682 இல் இவ்வாறானமிகைஊதிய பங்கு களைவெளியிட்டது பொதுவாக இந்த மிகைஊதிய பஙகினை வெளியிடுவதன்மூலம் பின்வருமாறான வசதிகள் வாய்ப்புகள் ஏற்படுகின்றன 1.ஒரு நிறுமமானது இலாப பங்கீடாக பங்காதாயம் வழங்குவதற்கு பதிலாக மிகைஊதியபங்குகளை வெளியீடு செய்திடும்போது பங்காதாயத்திற்கான வரி செலுத்துவது தவிர்க்கப்படுகின்றது .பங்குதாரர்கள் பெறும் இந்த மிகை ஊதிய பங்கினை மற்றவர்களிடம் விற்பணை செய்வதால் கிடைக்கும் தொகைக்கு அல்லது நிறுமமே மீண்டும் பங்குகளை வாங்கிகொள்ளும்போது கிடைக்கும தொகைக்கு வரிசெலுத்த தேவையில்லை ஆனால் பங்காதாயமாக பெறும்போது குறிப்பிட்ட வரம்பிற்குமேல் பெறப்படும் பங்காதாய தொகைக்கு வரி செலுத்தவேண்டும் 2.நிறுமமானது நல்ல இலாபம் ஈட்டிகொண்டிருக்கும்போது தன்னுடைய இலாபத்தை தன்னுடைய நிறுவனத்திற்குள் நிலையான சொத்துகளுக்காகவும் நடைமுறை மூலதனத்திற்காகவும் மறுமுதலீடு செய்வதற்கான ஒரு சிறந்த வழிமுறையாக இது அமைகின்றது மேலும் பொதுமக்களிடம் பங்குவெளியீட்டின் வாயிலாக முதலீட்டினை திரட்டுவதற்கு பதிலாக தன்னிடம் உள்ள நிதிவளங்களையே மறுமுதலீடாக பங்குதாரர்களின் பெயர்களில் நிறுவனத்திற்கு தேவையான நிலையான சொத்துகளை கொள்முதல் செய்வதற்கும் நடைமுறை மூலதனத்திற்கும் பயன்படுத்தி கொள்ளலாம் 3.ஒரு நிறுவனத்தின் பங்குகள் பொதுமக்களால் வாங்கி விற்க முடியாத அளவு பங்குகளின் விலையானது ராக்கெட்போன்று உயரத்தில் செல்வதை குறைத்து வழக்கமாக பொதுமக்களனைவரும் அந்நிறுமத்தின் பங்குகளை வாங்கி விற்பதற்கு ஏதுவாக பங்குகளின் விலையை குறைவாக இருந்திடுமாறு பராமரிப்பதற்காக இந்த மிகைஊதிய பங்கு வெளியீடு உதவுகின்றது அதனால் பொதுமக்கள் பலரும் பங்குசந்தையில் ஆர்வத்துடன் கலந்துகொள்ளவழிவகுக்கின்றது 4 சில நிறுமங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் இவ்வாறு மிகை ஊதிய பங்குவெளியீடு செய்வதால் குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்தால் தங்களுடைய முதலீட்டின் மதிப்பானது தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும் என பொதுமக்களுக்கு குறிப்பிட்ட நிறுமத்தின்மீது ஒருநல்ல மதிப்பு தோன்ற வழிவகுக்கின்றது நிறுமச்சட்டம் 2013 இன் படி எந்தவொரு நிறுமமும் தன்னிடம்உள்ள மூலதன ஈவுத்தொகை கணக்கு ,மூலதனமீட்புஒதுக்கீடு,கட்டற்ற ஒதுக்கீடுகள்(Free Reserves) ஆகியவற்றினை கொண்டு இவ்வாறான மிகை ஊதிய பங்கினை தன்னுடைய பங்குதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்திடலாம்ஆனால் அந்நிறுமம் பங்காதாயத்திற்கு பதிலாக மிகை ஊதிய பங்கினை வெளியீடுசெய்திடக்கூடாது என வரையறை செய்துள்ளது மேலும் நிறுமமானது இவ்வறு மிகை ஊதிய பங்கினை வெளியீடு செய்வதாக இயக்குநர்களின் குழுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டால் அந்த முடிவிலிருந்து பின்வாங்க முடியாது ஆயினும் அந்நிறுமம் தான் பெற்ற கடனிற்கு வட்டிஅல்லது வட்டியும் அசலும் அல்லது அத்தியாவசியமாக செலுத்த வேண்டியசெலவுகள் ஆகியவை நிலுவையிலிருக்கும்போது இவ்வாறான மிகை ஊதிய பங்குகளை கண்டிப்பாக வெளியீடு செய்திடமுடியாது என்பதே மிகை ஊதிய பங்கு வெளியீட்டிற்கான இரண்டாவது முக்கிய நிபந்தனையாகும் சென்றஆண்டில் Biocon, BPCL, HPCL, ICICI Bank, L&T, Wipro போன்றநிறுமங்கள் இவ்வாறன மிகைஊதிய பங்குகளை வெளியீடு செய்துள்ள மிகமுக்கிய இந்திய நிறுமங்களாகும்

சனி, 1 டிசம்பர், 2018

பிரச்சினைக்கான தீர்வை செயல்படுத்திடுவதற்கு முன் அந்த பிரச்சினை என்னவெனமுதலில் சரியாக தெரிந்து கொள்க


பேருந்து நடத்துனர் ஒருவர் பயனிகளுக்கு பயனச்சீட்டினை வழங்கி அதற்கான கட்டணத்தினை வசூலிக்கும் தன்னுடைய வழக்கமான பணியை செய்து கொண்டிருந்தார் அப்போது ஒரு பேருந்து நிறுத்தத்தில் ஆறரைஅடிஉயரத்தில் பீமன்போன்ற உடலுரு கொண்ட வாட்டசாட்டமான நபர் ஒருவர் பேருந்தில் ஏறிய பின்னர் "பெரியண்ணன் பேருந்து கட்டணத்தை செலுத்தமாட்டார் "என கூறிகொண்டு இருக்கையில் அமர்ந்து கொண்டார் அவருடைய தோற்றத்தை பார்த்துபயந்து போன பேருந்தின் நடத்துனர் அவரிடம் மட்டும் பேருந்தில் பயனிப்பதற்கான கட்டணத்தை வாங்காமல் விட்டிட்டு தன்னுடைய சொந்த பணத்தினை செலுத்தி கணக்கினை நேர்செய்துகொண்டார் மறுநாளும் அதே நபர் அதே போன்று பேருந்தில் ஏறிய பின்னர் "பெரியண்ணன் பேருந்து கட்டணத்தை செலுத்தமாட்டார்" என கூறிக்-கொண்டு இருக்கையில் அமர்ந்து கொண்டார் அவருடைய தோற்றத்தை பார்த்துபயந்து போன பேருந்தின் நடத்துனர் மறுநாளும் அவரிடம் மட்டும் பேருந்தில் பயனிப்பதற்கான கட்டணத்தை வாங்காமல் விட்டிட்டார் இந்த நடைமுறை பலநாட்கள் தொடர்ந்தது அதனால் நடத்துனர். வாட்ட சாட்டமான அந்த பயனியுடன் நேருக்குநேர் மோதிபார்த்துவிடுவது என முடிவுசெய்தார் பின்னர் அதற்காகஒரு நல்ல உடல் பயிற்சி நிறுவனத்தின் பயிற்சிக்கு சென்று தன்னுடைய உடல்வலிமையை வலுவாக்கிய பின்னர் ஒருநாள் நடத்துனர் வழக்கமாக பேருந்தில் பயனிப்பதற்கான கட்டணத்தை செலுத்தாத அந்த பெரியண்ணனிடம் துனிச்சலாக சென்று "ஐயா! பேருந்தில் பயனிப்பதற்கான கட்டணத்தை நீங்கள் ஏன்செலுத்தமாட்டீர்?" என வினவினார் "அதுவா தம்பி! நான் இந்த பேருந்தில் பயனிப்பதற்காக மாதாந்திரம் கட்டணம் செலுத்தி அதற்கான அனுமதிசீட்டினை வைத்துள்ளேன் அதனால்தான் நான் பயனச்சீட்டு வாங்கமாட்டேன் "என க்கூறினார் அடடா இந்த தகவல் முன்னரே தெரிந்திருந்தால் என்னுடைய சொந்த பணத்தினை இழக்காமல் இருந்திருப்பேனே என வருத்தபட்டார் அந்த பேருந்தின் நடத்துனர் ஆம் எந்தவொரு பிரச்சினைக்கான தீர்வை செயல்படுத்திடுவதற்கு முன் அந்த பிரச்சினை என்னவெனமுதலில் சரியாக தெரிந்து கொள்க

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...