சனி, 30 ஆகஸ்ட், 2014

எதையும் தவறாக யூகித்து மற்றவர்களின் மனத்தை துன்பறுத்த கூடாது


மிககர்வமுள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் ஒருவர் தன்னுடைய மாவட்டத்தின் ஏதாவதொரு கிராமத்தை சுற்றி பார்வையிட்டு வர விரும்பினார்

அதனால் வெகுதூரத்தில் உள்ள குக்கிராமம் ஒன்றிற்கு பாதுகாப்பிற்கு உதவியாளர், பாதுகாவலர் ஆகிய எவரும் இல்லாமல் நான் இந்த மாவட்டத்திற்கே படிஅளக்கும் அரசு அதிகாரி என்னை யாரும் எதிர்த்து கேள்வி யொன்றும் கேட்கவும் வாதிடவும் முடியாது என்னை யாரும் ஏமாற்றவும் முடியாது என இறுமாப்புடன் தனியாக அரசு வாகணத்தில் சென்று அந்த கிராமத்தின் எல்லையிலிருந்த ஒரு விவசாயியின் விட்டிற்கருகில் வண்டியை நிறுத்தி இறங்கியவுடன் அந்த விவசாயியை அழைத்தார் .

"உன்னுடைய நிலத்தில் கஞ்சாசெடி வளர்ப்பதாக தகவல் வந்துள்ளது அதனால் உன்னுடைய நிலத்தினை சுற்றி பார்க்கவேண்டும்" எனகூறியபோது "நல்லது! ஐயா !நிலமெல்லாம் சுற்றிபாருங்கள் நான் தடுக்கவில்லை. ஆனால் ,அந்த கூறை கொட்டகை பக்கம் மட்டும் போகாதீர்கள்!" என கூறியவுடனேயே "நான் இந்த மாவட்டத்தின் ஆட்சிதலைவர் தெரியுமா?" என தன்னுடைய சட்டைபையில்ஒட்டி வைத்திருந்த மாவட்ட ஆட்சி தலைவர் என்ற பட்டியை தூக்கிபெருமையுடன் காண்பித்து "என்னை யாரும் எங்கு சென்றாலும் தடுக்கவோ வழிமறிக்கவோ முடியாது! நீ முக்கியமாக கஞ்சாவியாபாரத்தை அந்த கூறை கொட்டகையில் தான் செய்கிறாய் போலும் அதனால் என்னை தடுக்க நினைக்கின்றாய் நான் அங்கு சென்று பார்வையிடுவதை நீ தடுக்கவே முடியாது "என கோபமாக கூறியதை தொடர்ந்து அந்த விவசாயியும் வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டார் ..

மாவட்ட ஆட்சிதலைவரும் அந்த விவசாயியின் நிலமெல்லாம் சுற்றி பார்வையிட்டு ஒன்றும் கஞ்சா செடியில்லாததை உறுதிபடுத்திகொண்டாலும அந்த கூறை கொட்டகையில் கண்டிப்பாக அந்த விவசாயி கஞ்சா செடியை காயவைத்து மறைத்துவைத்திருப்பார் நாம் போய் கையும் களவுமாக பிடித்துவிடலாமென அந்த கூறை கொட்டகையை திறந்து உள்ளே போக முனைந்து கூறை கொட்டகையின் வாயில் கதவை திறந்து உள்நுழைந்த வுடனேயே அங்கிருந்த மிகவலுவான கொம்பேறிமூர்க்கன் காளையொன்று அந்நிய நபர் அந்த கொட்டகையினுள் நுழைந்ததால் கோபமுற்று கட்டியிருந்த தாம்புக் கயிற்றினை அறுத்துகொண்டு அந்த மாவட்ட ஆட்சி தலைவரை முட்டித்தள்ளுவதற்கு மிக ஆக்ரோசமாக அவரை நோக்கி ஓடிவந்தது.

அதனை கண்ணுற்றதும் துண்டை காணோம் துனியை காணோம் என தன்னுடைய உயிரை காப்பற்றிகொள்ளவேண்டிய சூழலில் அந்த மாவட்ட ஆட்சி தலைவர் மிகவேகமாக ஒடிவந்தார்

அதனை கண்ணுற்ற அந்த விவசாயி உடன் அநத மாவட்ட ஆட்சிதலைவரை காக்கவேண்டும் என்ற உத்வேகத்தில் தன்னுடைய கையிலிருந்த கொம்பை தூக்கி ஓடிவரும் கொம்போறிமூர்க்கன் காளையின் முன்புறம் வீசியெறிந்தார்

உடன் அந்த மூர்க்கமாக ஓடிவந்த காளையும் சத்தியத்திற்கு கட்டுபட்டவாறு அப்படியே நின்று விட்டது

உடன் அந்த விவசாயி" நான் அவ்வாறெல்லாம் கஞ்சாவை பயிரிடவில்லை ஐயா! உங்களுக்கு தவறான தகவல் யாரோ கொடுத்துள்ளனர் இருந்தாலும் பத்திரமாக சென்றுவாருங்கள்" என மாவட்ட ஆட்சிதலைவரை அவருடை வண்டியில் ஏற்றி பத்திரமாக செல்லுமாறு பாதுகாத்து அனுப்பி வைத்தார் . ஆம் எதையும் நாம் தவறாக யூகித்து மற்றவர்களின் மனத்தை துன்பறுத்த கூடாது!

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...