திங்கள், 30 மார்ச், 2015

நாம் ஒருவருக்கு செய்திடும் உதவி பின்னாளில் நமக்கு தானாகவே வந்து உதவிடும்


இங்கிலாந்தின் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள ஒரு கிராமத்தின் விவசாயி ஒருவர் தன்னுடைய நிலைத்தில் விவசாய பணிசெய்து கொண்டிருந்தார் .அந்நிலையில் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கூக்குரலிட்டு சிறுவன் ஒருவன் கதறும் சத்தம் கேட்டவுடன் அவர் தன்னுடைய பணியை அப்படியே விட்டுவிட்டு ஓடிசென்று பார்த்தபோது சிறுவன் ஒருவன் நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த சகதியில் தவறிவிழுந்து வெளியிலெழுந்தவரமுடியாமல் உயிருக்கு போராடிகொண்டிருப்பதை கண்டார்

.உடன் கயிற்றின் ஒருமுனையை தான்பிடித்துகொண்டு மறுமுனையை அச்சிறுவன் பிடித்து கொள்வதற்காக வீசிஎறிந்து பிடித்துகொள்ளுமாறு செய்தார் தொடர்ந்து மரஏணி ஒன்றினை அச்சிறுவன் அருகில் செல்லுமாறு வைத்து அதில் அச்சிறுவனை ஏறிகொண்டும் கயிற்றை மற்றொருகையால் பிடித்துகொண்டும் வருமாறு செய்து ஒருவழியாக அச்சிறுவனை கரையேற்றி காப்பாற்றி பத்திரமாக ஊர்போய்சேருமாறு செய்தபின் தன்னுடைய விவசாய பணியை தெடர்ந்து செய்யஆரம்பித்தார்

. மறுநாள் விலையுயர்ந்த குதிரைவண்டியில் ஒருவர் அந்த விவசாயியின் வீட்டிற்கு வந்தார் அவர் அந்த விவசாயியிடம் தன்னுடைய மகனுடைய உயிரை காப்பாற்றியதற்காக தக்க பரிசுபொருளை பெற்றுகொள்ளுமாறு வேண்டி வழங்கியபோது அவ்விவசாயியானவர் அந்த பரிசு பொருளை வாங்க மறுத்ததுடன் ஒரு உயிரை காப்பது தன்னுடைய கடமை என்றும் அதற்காக தான் பரிசுபொருள் எதுவும் வாங்க விரும்பவில்லை என மறுத்து கூறினார்

அந்நிலையில் அவ்விவசாயியின் மகன் வீட்டிற்குள் நுழைவதை கண்டவிருந்தாளி காப்பாற்றபட்ட தன்னுடைய மகனின் வயதே அவனும் இருப்பதால் தன்னுடைய மகனுடன் சேர்ந்து அவனுக்கும் தான் கல்வி கற்க வேண்டிய உதவிசெய்வதாக கூறியதை தொடர்ந்து அவ்விவசாயியின் மகனும் நல்ல தரமானகல்வி நிறுவனத்தின் கல்வி பயின்று பெரிய மருத்துவ ஆராய்ச்சி விஞ்ஞானியாக வளர்ந்தார்

பின்னாளில் காப்பாற்றபட்ட சிறுவன் வளர்ந்து பெரியமனிதனாக ஆனார் அப்போது ஒருநாள் நிமோனியா காய்ச்சலினால் அவர் துயருற்றபோது அதே விவசாயியின் மகனான விஞ்ஞானி கண்டுபிடித்த பென்சிலின் மருந்து அவருடைய உயிரை காப்பாற்றியது

அந்தமனிதன் சிறிய வயதில் இருந்தபோது தந்தையும் வளர்ந்து பெரியவனாக உயர்ந்தபோது அவ்விவசாயியின் மகனும் அவருடைய உயிரை காப்பாற்றினர்

இவ்வாறு காப்பாற்றபட்ட சிறுவன்தான் சர்.வின்ஸ்டன் சர்ச்சில் காப்பாற்றிய விஞ்ஞானிதான் பெஞ்சமின் பிராங்களின்

நாம் ஒருவருக்கு செய்திடும் உதவி பின்னாளில் நமக்கு தானாகவே வந்து உதவிடும் என்பதே இயற்கையின் நியதியாகும்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...