ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

எந்தவொரு சூழலையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி தன்னுடைய பணியை தொய்வின்றி செய்பவனக்கு வெற்றி கண்டிப்பாக கிடைக்கும்


ஒருவிவசாயி தன்னுடைய நிலத்தில் விதைவிதைத்துவந்தார் அப்போது இருவிதைகள்மட்டும் தவறி அவருடைய நிலத்தை தாண்டி அருகிலுள்ள பயிரபடாத நிலத்தில் விழுந்தன அவையிரண்டில் ஒருவிதைமட்டும் பரவாயில்லை என மனதை தேற்றிகொண்டு இந்த நிலத்திலும் நன்கு வேர்ஊன்றி வளர்ந்து வழக்கமான செயலை செய்வேன் என கிடைத்த ஈரப்பதத்தை கொண்டு முளைக்க ஆரம்பித்தது மற்றொரு விதையோ கட்டாந்தரைபோன்ற இந்த நிலத்தில் எவ்வாறு முளைப்பது வேரைஊன்றி வளருவது இந்த செயலிற்கு போதுமான தண்ணீர் நம்க்கு கிடைக்குமோ கிடைக்காதோ என மன குழப்பத்தில் அப்படியே கிடந்தது ஒருவாரம் கழித்தபோது முதல்விதை நன்குமுளைத்து ஒருசில இலைகளுடன் தரைக்குமேலை விரித்து வளருவதற்கான அறிகுறியை காண்பித்தது ஆனால் இரண்டாவது விதை முளைவிடாமல் அப்படியே இருந்ததால் அங்குவந்த பறவை ஒன்று அந்த விதையை இரையாக உட்கொண்டு சென்றுவிட்டது

ஆம் எந்தவொரு சூழலையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி தன்னுடைய பணியை தொய்வின்றி செய்பவனக்கு வெற்றி கண்டிப்பாக கிடைக்கும் சூழலைகண்டு சோர்வடைபவன் தோல்வியுறுவான் என்பது நிச்சயமாகும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...