திங்கள், 16 நவம்பர், 2015

உண்மையான அன்பிற்கு எந்தவொரு எல்லையுமில்லை


பரபரப்பான காலைநேரத்தில் 8.30 மணிக்கு ஒருமருத்துவமனையின் ஒருஇளைஞன் அவசரமாக வந்துதன்னுடைய கட்டைவிரலில் அடிபட்டதற்கு தேவையான கட்டினை கட்டுமாறு கோரியதை தொடர்ந்து மருத்துவரும் காயத்திற்கு போதுமான கட்டினையும் மருந்து மாத்திரைகளையும் வழங்கி அவைகளை எவ்வாறு எவ்வெப்போது விழங்கவேண்டும் என ஆலோசனை கூறி அந்த இளைஞன் ஏன் பரபரப்பாக இருக்கின்றான் என்றும் உடனடியாக எங்கு செல்லவிரும்புகின்றான்என்றும் வினவினார்

அதற்கு அந்த இளைஞன் சரியாக 9 மணிக்கு கொஞ்ச தூரத்திலுள்ள மருத்துவமனையில் உள்நோயாளியாக இருக்கும் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து காலை சிற்றுண்டி அருந்துவதை வழக்கமாக செய்துவருவதாகவும் அதனால்தான் என பதிலிருத்தான் தொடர்ந்து மருத்துவர் அந்த இளைஞனின் மனைவிக்கு என்ன நோய் என வினவியபோது பயங்கர எனும் நோயால் பாதிக்கப்பட்டு உள்நோயாளியாக கடந்த ஒருவருடமாக அந்த மருத்தவமனையில் இருப்பதாகவும் தனக்கு எந்தபணி இருந்தாலும் காலையிலும் இரவிலும் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்த உணவு அருந்துவது வழக்கமான செயலாகும் என்றும் கூறினான் தொடர்ந்து உங்களுடைய மனைவிக்குதான் உங்களை அடையாளம் தெரியாதே என க்கூறியதை தொடர்ந்து

அவர் என்னுடைய மனைவி என்று எனக்கு தெரியுமல்லவா அதனால் தான் அவ்வாறு கடைபிடித்து வருகின்றேன் உண்மையான அன்பிற்கு எந்தவொரு எல்லையுமில்லையல்லவா எனக்கூறி விடைபெற்று அவசரமாக சென்றார் அந்த இளைஞன்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...