திங்கள், 9 மே, 2016

குழுவான நபர்கள் ஏன் சிரித்து பேசிக்கொண்டிருப்பார்கள் தெரியுமா


நான் ஒரு நகர்புறத்தில் இயந்திரமயமான வாழ்க்கையில் இருந்து வருவதால் அதிலிருந்து சிறிது உடலிற்கும் மனதிற்கும் ஒய்வு கொடுப்பதற்காக ஒவ்வொருவார இறுதியாக வரும் விடுமுறை நாளில் அந்த நகரத்தின் ஒரு ஓரத்தில் இருந்த பூங்காவிற்கு சென்று இயற்கை காற்றில் யோகா நடை,பயிற்சி போன்றவைகளோடு பொழுது போக்குவது வழக்கமாகும் அப்போது குழுவான நான்கைந்து பென்களும் அதே பூங்காவில் இருந்த உட்காரும் மேடையில் அமர்ந்துகொண்டு சிரித்து பேசி கொண்டு இருப்பது வழக்கமாகும்

இவ்வாறான சூழலில் அன்றுஒருநாள் நான் வழக்கமாக செல்லும் அந்த பூங்காவிற்கு சென்று என்னுடைய பயிற்சியில் ஈடுபட்டுவந்தேன் அதே பூங்காவில் அதே உட்காரும் மேடையில் வழக்கம்போன்று அதே நான்கைந்து பெண்கள் அமர்ந்திருந்தனர் ஆனால் மகிழ்ச்சியுடன் சிரித்து பேசிடாமல் மெளனமாக இருந்ததை கண்ணுற்ற என்னுடைய மனம் பொறுக்கமுடியாமல் அவர்களிடம் சென்று மன்னிக்கவும் ஒவ்வொரு வார இறுதிநாட்களில் நான் இந்த பூங்காவிற்கு வந்து யோகா நடைபயிற்சி போன்றவைகளை செய்துவருகின்றேன் அப்போதெல்லாம் நீங்கள்அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் சிரித்து பேசுவதை கண்டு வருவேன் ஆனால் இன்று நீங்கள் அனைவரும் அவ்வாறு ஏன் மகிழ்ச்சியாக சிரித்து பேசிடாமல் மெளனமாக அமர்ந்திருக்கின்றீர்கள் என தெரிந்துகொள்ளலாமா என வினவியவுடன் யாரும் பதில் பேசவில்லை மீண்டும் வற்புறுல்த்தியபின் ஒருநபர் மட்டும் எழுந்து கொஞ்சதூரம் தள்ளிவந்து மிகமெதுவான குரலில் அதுவா வழக்கமாக நாங்கள் நால்வர்மட்டுமே ஒவ்வொரு வாரமும் வருவோம் அதனால் மிகுதி வராத நபரைபற்றி கேலியும் கிண்டலுமாக பேசி மகிழ்வோம் ஆனால் இன்று ஐந்து பேரும் வந்துவிட்டோம் அதனால் யாரைபற்றி கேலியும் கிண்டலுமாக பேசிமகிழமுடியும் அதனால் தான் அமைதியாக உட்கார்ந்திருக்கின்றோம் என கூறி சென்றார்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...