முன்னொரு காலத்தில், அரசன்ஒருவன் தம்முடைய அண்டைநாட்டின் அரசனை மரியாதை நிமித்தமாக சந்திக்கசென்றார் அதனை தொடர்ந்து அந்த அண்டை நாட்டு அரசனும்அதனை கவுரவிக்கும் பொருட்டு இவருக்கு ஒரு ஜோடி புறாக்களை பரிசாக வழங்கினார் . அவை பார்ப்பதற்கு மிக அழகானதாக இருந்தன தன்னுடைய நாட்டிற்கு திரும்பியவுடன் அந்த பறவைகளை நன்கு பாதுகாத்து பயிற்றுவிப்பதற்காக ஒரு பயிற்சியாளரை நியமித்தார் .அப்பயிற்சியாளரும் அந்த பறவைகள் இரண்டிற்கும் பறப்பதற்காக ஒரேமாதிரியான பயிற்சி வழங்கினார் ஆயினும் அவ்விரண்டில் ஒன்றுமட்டும் மிகஅழகாக பறந்து சென்று திரும்பி வந்தது மற்றொன்று மட்டும் பயிற்சியாளர் எவ்வளவு முயன்றாலும் எவ்வளவுநேரம் முயன்றாலும் பறக்காமல் அப்படியே உட்கார்ந்து கொண்டிருந்தது அரசரும் வெவ்வேறு பயிற்சியாளர்களை கொண்டு முயன்று பார்த்தார் அப்போதும் அந்த மற்றொரு பறவைமட்டும் பறக்கவேயில்லை ஆனால் அதற்கு வழங்கப்பட்ட உணவுத்தானியங்களை மட்டும் இரண்டும் சமமாக உண்டன தண்ணீரை சமமாக அருந்தின அதனால் தன்னுடைய நாட்டின் கிராமத்திலுள்ள மக்களுள் யாராவது ஒருவர் வந்து அந்த பறவையை பறக்கசெய்யுமாறு கோரினார் அதனைதொடர்ந்து ஒரு கிராமத்து விவசாயிஒருவர் வந்துசேர்ந்தார் என்ன ஆச்சரியம் அந்த கிராமத்து விவசாயியின் பயிற்சி ஆரம்பித்தவுடன் அந்த மற்றொரு பறவை மட்டும் வானத்தில் பறந்து செல்வதை அந்த அரசன் பார்த்தாார் உடன் அந்த விவசாயியிடம் "மற்றவர்கள் அனைவரும் எவ்வளவுதான் முயன்றாலும் அந்த பறவையை பறக்கசெய்ய முடியாத செயலை அந்த விவசாயி வந்தவுடன் மட்டும் எவ்வாறு செய்யமுடிந்தது" என வினவினார் அதற்கு அவ்விவசாயி "மிகஎளிது ஐயா அந்த பறவை அமர்ந்திருந்த கிளையின் அடிப்பகுதியை வெட்ட ஆரம்பித்தேன் உடன் நான் வெட்டிய கிளைமுறிந்துபோனால் தன்னுடைய உயிருக்கே ஆபத்து ஏற்படும் என அந்த மற்றொரு பறவை பறக்க ஆரம்பித்துவிட்டது" என பதில்கூறினார்
நம்முடைய உயிருக்கு ஆபத்து எனஉணரும்போது மட்டுமே நம்முடைய அடிப்படையானசெயலை பயன்படுத்திடும் நம்முடைய மனப்பாண்மையை ஒழித்திட்டால் நாம் வாழ்வில் முன்னேற முடியும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக