சனி, 29 மே, 2021

மதிப்பு இல்லாத செல்வம்

 

ஒரு பேராசைக்காரர் தான் சேகரித்துவைத்திருந்த தங்க நாணயங்களை பாதுகாப்பாக இருக்கவேண்டுமென தனது தோட்டத்தில் ஒரு இரகசிய இடத்தில் புதைத்து வைத்திருந்தார். ஒவ்வொரு நாளும் அவர் தன்னுடையதோட்டத்தில் அவைகளை புதைத்து வைத்திருந்த இடத்திற்குச் சென்று, தரையை தோண்டி வெளியிலெடுத்த பின்னர் அவற்றை, ஒவ்வொன்றாக எண்ணிக்கைசெய்து, அனைத்தும் சரியாக இருப்பதை உறுதிசெய்து கொண்டிருந்தார். பேராசைக்காரர் , இவ்வாறு தினமும் செய்வதை கவனித்துக் கொண்டிருந்த ஒரு திருடன், தோட்டத்தில் அப் பேராசைக்காரர் என்ன மறைத்து வைத்திருக்கின்றார் என யூகித்து அறிந்து கொண்டான், அதனை தொடர்ந்து ஒரு இரவு அந்த பேராசைக்காரரின் தோட்டத்திற்குள் வந்து அப் பேராசைக்காரர் புதைத்து வைத்திருந்த இடத்தினைத் தோண்டி தங்க நாணயங்கள் முழுவதையும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டான். பேராசைக்காரர் வழக்கம் போன்று மறுநாள் தன்னுடையதோட்டத்தில் தங்க நாணயங்களை புதைத்து வைத்திருந்த இடத்திற்குச் சென்று, தரையை தோண்டிபார்த்தபோது எதுவும் இல்லாததை கண்டவுடன் மிகவும் துக்கத்தோடும் விரக்தியோடும் . தன்னுடைய தலைமுடியைபிய்த்து கொண்டு கூக்குரலிட்டு அழுதார் . ஒரு வழிப்போக்கன் அவர் அழுகையைக் கேட்டு என்ன நடந்தது என்று அவரிடம் கேட்டபோது. “என்னுடைய தங்க நாணயங்கள்அனைத்தும் காணாமல் போய்விட்டது ! என்னுடைய தங்க நாணயங்கள் அனைத்தும் காணாமல் போய்விட்டது ! ” என அப் பேராசைக்காரர் அழுது புலம்பினார் மேலும் "யாரோ என்னுடைய தங்கநாணயங்கள் அனைத்தையும் கொள்ளையடித்துகொண்டு சென்றவிட்டனர்!" என அப் பேராசைக்காரர் அழுதுகொண்டே கூறினார் உடன் “உங்களுடைய தங்கநாணயங்கள்! இங்கு இருந்ததா? ஏன் அவற்றை இங்கே வைத்தீர்கள்? அதற்கு பதிலாக வேறு பொருட்களாக வாங்கி உங்கள் வீட்டிற்குள்ளாகவே ஏன் வைத்திருக்கவில்லை? ” என அவ்வழிபோக்கன் கேட்டபோது “பொருட்களை வாங்குவதா!” அப்பேராசைக்காரர் கோபமாக கத்தினார்.மேலும் “ நான் ஒருபோதும் தங்கநாணயங்களைத் பயன்படுத்த நினைக்கவில்லை. அதில் எதையும் செலவழிக்க வேண்டும் என என்னால் நினைத்துகூட பார்க்க முடியவில்லை. ” என அப் பேராசைக்காரர் பதில் கூறினார் அதனை தொடர்ந்து வழிபோக்கன். "அப்படியானால், வீட்டிற்கு சென்று அமைதியாக தூங்குங்கள் . தங்கநாணயங்களை விட சரியான பொருளாக சேமிப்பது மிகமுக்கியமாகும்! ”என அறிவுறுத்தல் செய்து தன்வழியே சென்றார்
நீதி: செல்வத்தை (பொருட்களை), புத்திசாலித்தனமாகவும் சரியான முறையிலும் சேமிப்பது மிக நன்று..

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...