வியாழன், 30 நவம்பர், 2017

சிக்கலான பிரச்சினைகளுக்கு மிகவும் சிறிய தந்திரமான செயல்களுடனும் தீர்வுகாண வேண்டும்


அக்பரின் அரசவைக்கு வித்தியாசமான புகார் ஒன்று வந்தததது. ஒரு கிராமத்து உழவர்கள் இருவர் அருகருகே இரு கினறுகளுடன் கூடிய தோட்டங்களை வைத்தருந்தனர் ஒருவிவசாயினுடைய கினற்றில் அவருடைய தோட்டத்தில் விளைவிக்கும் காய்கறிசெடிகளுக்கு போதுமான தண்ணீர் இல்லை ஆனால் அருகிலிருந்த மற்றொரு தோட்டத்தின் இக்பால் எனும் விவசாயிக்கு சொந்தமான கிணற்றில் போதுமான தண்ணீர் இருந்தது. அதனால் பக்கத்து தோட்டத்து விவசாயி இக்பாலிடம் தன்னுடைய தோட்டத்தில் விளைவிக்கும் காய்கறிசெடிகளுக்கு போதுமான தண்ணீர் இல்லாதாதல் வாடிபோகின்றது அதனால் அவருடைய வாழ்க்கைக்கு தேவையான வருமானமும் கிடைக்காதநிலையாகிவிட்டது அதனால் அவரது கினற்றில் இருந்து தண்ணீர் வழங்கும்படி கோரினார் உடன் இக்பால் என்பவர் கினற்றையே உனக்கு விற்பணைசெய்கின்றேன் எனக்கூறியதை தொடர்ந்து அவ்விருவரும் இக்பால் என்பவரின் தோட்டத்தில் இருந்த கினற்றினை வாங்கு வதற்கான அவர்களுக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உறுதி செய்து கொண்டனர். அதன்பின் இக்பால் ஆனவர் தான் விற்பனைசெய்த கிணற்றிலிருந்து தொடர்ந்து தண்ணீர் எடுதது கொண்டிருந்தார் அந்த கினற்றினை வாங்கிய பக்கத்து தோட்டக்காரருக்கு போதுமான தண்ணீர் இல்லாமல் பழைய நிலையிலேயே இருந்துவந்தார் இந்த பிரசசினையை தீர்வுசெய்திடுமாறே அக்பரின் அவையில் முறையீடு செய்தார் பாதிக்கப்பட்ட தோட்டக்காரர் இக்பாலிடம் அக்பர் ஏன்அவ்வாறு செய்கின்றாய் என வினவியபோது ஐயா நான் பக்கத்து தோட்டக்காரருக்கு என்னுடைய கினற்றினை மட்டுமே விற்பனை செய்தேன் அதிலுள்ள தண்ணீரை விற்பனை செய்யவில்லை இந்த விற்பனை பத்திரத்தினை நீங்களே படித்து பாருங்கள் அதனால் நான் விற்பணை செய்யாத என்னுடைய தண்ணீரை தொடர்ந்து பயன்படுத்திவருகின்றேன் இதில் தவறு இருந்தால் கூறுங்கள் என பதிலளித்தார் உடன் அக்பர் அருகில் அமர்ந்திருந்த அமைச்சர் பீர்பாலிடம் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணுமாறு உத்திரவிட்டார் உடன் அமைச்சர் பீர்பாலானவர் இக்பாலிடம், 'இக்பால், நீங்கள் அருகிலிருந்த தோட்டக்காரருக்கு கினற்றினை மட்டுமே விற்றுவிட்டீர் ஆனால் தண்ணீரை மட்டும் அவருக்கு விற்பனை செய்யவில்லை எனக்கூறுகின்றீர் அதுதானேஉங்களுடைய வாதம் ஆம் ஐயா என இக்பால் கூறியதை தொடர்ந்து பீர்பால் எனும் அமைச்சரானவர் ஆனால் உங்களுடைய தண்ணீரை அவருடைய கினற்றில் வைத்திருப்பதற்காக வாடகை தரவேண்டாமா அதனால் அவருக்கு சேரவேண்டிய வாடகை யை வழங்கிவிட்டு நீங்கள் உங்களுடைய தண்ணீரை தொடர்ந்து அவருடைய கினறறிலிருந்து எடுத்து கொள்ளலாம் எனத்தீர்பளித்தார் அதன்பின்னர் இக்பால் என்பவர் விற்பணைசெய்த கினற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதை விட்டுவிட்டார் சில நேரங்களில், இவ்வாறு சிக்கலான பிரச்சினைகளுக்கு மிகவும் சிறிய தந்திரமான செயல்களுடனும் தீர்வுகாண வேண்டும் என்ற செய்தியை மனதில் கொள்க.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...