சனி, 31 ஜூலை, 2021

தந்திரமான அதிகாரியும் அவரது உதவியாளரும்

 


 ஒருமுறை வாடிக்கையாளர் ஒருவர் தனது மேலதிகாரிக்கு பரிசாக வறுத்த கோழியையும் புதிய பழச்சாறு பாட்டில் ஒன்றையும் வழங்கினார். மேலதிகாரியானவர் இவ்விரண்டு பரிசுபொருட்களையும் தனது உதவியாளர் மூலம் தனது வீட்டிற்கு அனுப்ப விரும்பினார் அதனால் தனது உதவியாளரை அழைத்தார். மேலதிகாரியானவர் மிகவும் தந்திரமானவர், அவருடைய உதவியாளர் இந்த உணவைப் பற்றிய விவரம்  தெரிந்து கொள்ள வேண்டாம் என விரும்பினார், ஆகவே, அவ்வுதவியாளரிடம் அவற்றை கொடுக்கும்போது, ​​“இவற்றை என் வீட்டிற்கு எடுத்துச் செல்க, ஆனால் இந்த பொருட்களின் மீது மூடியுள்ள துணியை மட்டும் அகற்ற வேண்டாம் என்பதை நினைவில் கொள்க அவ்வாறு துனியை திறந்துவிட்டால் உடன் இதிலுள்ள  பறவையானது வெளியே  பறந்து சென்றுவிடும், அவ்வாறே இந்த பாட்டிலையும் திறக்க வேண்டாம் இந்த பாட்டிலில் விஷம் உள்ளது தப்பித்தவறி இந்த பாட்டிலை திறந்து அதிலுள்ளதை குடித்துவிட்டால் அதனுடைய விஷத்தால் நீ இறந்தாலும் இறந்துவிட நேரும். என்ன நான் கூறுவது புரிந்தா ?" என விவரமாக கூறி அனுப்பிவைத்தார். உதவியாளரும் ​​“சரி ஐயா நீங்கள் கூறியவாறு பத்திரமாக எடுத்து சென்று உங்களுடைய வீட்டு அம்மாவிடம் கொடுத்துவருகின்றேன் ஐயா "என தலையாட்டி ஆமோதித்தான். ஆயினும் அவ்வுதவியாளர் தனது மேலதிகாரியை பற்றி  நன்கு விவரமாக அறிந்தவனாவான், அதனால்" இந்த பொருட்களை பத்திரமாக தன்னுடைய வீட்டிற்கு கொண்டு சென்று சேர்" என்று கூறுகின்றாரே " இதில் ஏதோ மறைவாக பொருட்கள்உள்ளன"  என  சந்தேகப்பட்டான். எனவே அவ்வுதவியாளர் மேலதிகாரியின் வீட்டிற்கு அவைகளை எடுத்து செல்லும் வழியில், அவன் ஒரு இடத்தினை கண்டுபிடித்து நன்கு வசதியாக அமர்ந்து கொண்டு அவை என்னவென காண. துணியை அகற்றியபோது துனிமூடிய பாத்திரத்தில் வறுத்த கோழியும் பழச்சாறு பாட்டிலும் இருப்பதைக் கண்டான். உடன் வறுத்த கோழி முழுவதையும் சாப்பிட்டுமுடித்தான் மேலும் ,  பாட்டிலிலிருந்த பழச்சாறுமுழுவதையும் குடித்தபின்னர் தான் பணிபுரியும் இடத்திற்கு மெதுவாக திரும்பிவந்துசேர்ந்தான்., மேலதிகாரியானவர் மதிய உணவிற்காக தனது வீட்டை அடைந்து தனது மனைவியிடம் மதிய உணவினை பரிமாறும்படி கோரினார். அவரது மனைவி, ‘சிறிது நேரம் காத்திருங்கள். சாம்பார் இன்னும் தயாராக வில்லை. ” என பதில் கூறியவுடன் மேலதிகாரியானவர், “உதவியாளர் மூலம் நான் அனுப்பிய வறுத்தகோழி, பாட்டில் சாறு ஆகிய இரண்டையும் கொண்டுவா. அது போதும். ”என கூறினார் உடன் அவரது மனைவி ” நம்முடைய வீட்டிற்கு உங்களுடைய.  உதவியாளரும் இன்னும் வந்துசேரவில்லை நீங்கள் அனுப்பிய பொருட்களும் வந்து சேரவில்லை” என்று பதிலளித்தார். ணேலதிகாரிக்கு மிகவும் அதிககோபம் வந்தது அதனால் தன்னுடைய மனைவியிடம் எதுவும் சொல்லாமலும் மதிய உணவினை சாப்பிடாமலும்  தான் பணிபுரியும் இடத்திற்குச் திரும்பி சென்றுசேர்ந்தார் தனது உதவியாளரை அழைத்தபோது அவ்வுதவியாளர் நன்கு நிம்மதியாக தூங்குவதைக் கண்டார்.அதனால் மேலதிகாரியின் கோபம் மிகவும் அதிகமானது தூங்கி கொண்டிருந்த தன்னுடைய உதவியாளரை  எழுப்பி, ‘எங்களுடைய வீட்டிற்கு கொண்டுசெல்லுமாறு நான்  கொடுத்த பொருட்கள் எங்கே?’ என கேள்வி எழுப்பினார் அதற்கு அவ்வுதவியாளர், “ஐயா, நான் அந்த பொருட்களை உங்களுடைய வீட்டிற்கு எடுத்தச் செல்லும்போது,  காற்று அதிகமாக வீசி அடித்ததுஅதனால் அந்த பொருளின்மீது மூடியிருந்து துனி காற்றில் திறந்து கொண்டது. அவ்வாறு அந்த பாத்திரத்தில் மூடியிருந்த துனி திறந்து கொண்டதால் உடன் பறவை ஒன்று உயரே பறந்து போய்விட்டது  , துனியானது காற்றில் திறந்தவுடன் நீங்கள் சொன்னது போல, பறவையும் வானத்தில் பறந்து போய்விட்டதைப் பார்த்து நீங்கள் என்னை கண்டிப்பாக த் தண்டிப்பீர்கள் ஏதாவது தண்டனை கொடுப்பீர்கள் என்று பயந்தேன், அதனால் நான் அந்த பாட்டிலைத் திறந்து அதிலிருந்த விஷம் முழுவதுமாக குடித்தேன் இப்போது அந்த விஷத்தினால் எனக்கு எப்போது இறப்பு வரும் என நான் இங்கே  எனக்கு அந்த மரணம் வருவதற்காக  காத்திருக்கிறேன்.ஐயா " என மிகவும் அப்பாவித்தனமாக பதில் கூறினார் என்ன வாசகரே அந்த உதவியாளருக்கு நீங்களாவது சென்று ஆறுதல் கூறுங்களேன்.

சனி, 24 ஜூலை, 2021

விமானத்தில் ஒரு சிறுவன்

 


 ஒரு விடுமுறை நாளின் பிற்பகலில், ஒரு சிறிய தனியார் விமானத்தில் ஒரு மருத்துவர், ஒரு வழக்கறிஞர், ஒரு சிறுவன் , ஒரு சாமியார் ஆகிய நான்கு பேரும் பயன் செய்து கொண்டிருந்தனர். திடீரென்று அந்த விமானத்தில்  இயந்திர சிக்கல் ஒன்று உருவானது. அந்த விமானத்தின் விமானியானவர் கடுமையாக  முயற்சி செய்தபோதிலும், அவரால் அந்த விமானத்தினை சரியாக பறக்க செய்யமுடியவில்லை, எனவே அந்த விமானமானது வானத்தில் பறந்து செல்வதற்கு பதிலாக  கீழே தரையை நோக்கி விழத் தொடங்கியது விமானம் விபத்துக்குள்ளாகப் போகிறது என்பதை அறிந்த அவ்விமானி தான் தப்பிப்பதற்காக ஒரு பாராசூட்டை எடுத்து தோளில் மாட்டிகொண்டு மற்ற பயனிகளிடம் இப்போது இந்த விமானம் தரையில்விழுந்து விபத்துகுள்ளாக போகின்றது அதனால் பயனிகளில் உயிர் பிழைக்க விரும்புவோர் இந்த விமானத்தில் தயாராக இருக்கும்பாராசூட்களில்  ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை  எடுத்து தோளில் மாட்டிகொண்டு கீழே குதித்து  தப்பித்துவிடலாம் என சத்தமாக அறிவிப்பு செய்தார், உடன் மற்ற பயனிகள்  அனைவரும் விமானத்திலிருந்து குதித்து தங்களுடைய உயிரைக் காப்பாற்றும் முயற்சியை துவங்கினார்கள். . துரதிர்ஷ்டவசமாக அவ்விமானத்தில் விமானி எடுத்து கொண்டது போக மிகுதி மூன்று பாராசூட்டுகள் மட்டுமே எஞ்சியுள்ளன, ஆனால் அந்த விமானத்தில் இருந்தவர்கள் நான்கு பேராவார்கள். உடனடியாக மருத்துவர் ஒரு பாராசூட்டை எடுத்து தோளில் மாட்டிகொண்டு, "நான் மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றிடும் பணியை  செய்துவருகின்றேன், அதனால் நான் உயிர்தப்பிக்க போகின்றேன் " எனக்கூறி  விமானத்திலிருந்து குதித்தார். பின்னர் சாமியார், "நான் இந்த புவியில் வாழ்கின்ற மக்கள் அனைவரையும் திருத்தி நல்வழிக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளதால் , எத்தனையோ அப்பாவிகளை காப்பாற்றும் பொறுப்பு எனக்கு உள்ளது அதனால் நான் உயிர்தப்பிக்க போகின்றேன் ", என கூறிக்கொண்டு அவரும் ஒரு பாராசூட்டை எடுத்து தோளில் மாட்டிகொண்டு விமானத்திலிருந்து குதித்தார். இப்போது வழக்கறிஞர் சிறுவன் ஆகிய இருவர் மட்டுமே அந்த விமானத்தில் இருந்தனர் ஆனால் ஒரே ஒரு பாராசூட் மட்டுமே மீதமுள்ள நிலையில் விமானத்தில் அவர்கள் தனித்து விடப்பட்டனர். எனவே வழக்கறிஞர்  சிறுவனைப் பார்த்து, ”தம்பி, நீ சிறுவன் இன்னும் நீண்ட காலம்  , முழுமையாக வாழ்ந்து  வாழ்க்கையில் முன்னேற வேண்டியுள்ளது. அதனால் கடைசியாக உள்ள ஒரு  பாராசூட்டை நீ எடுத்து உன்னுடைய உயிரைக் காப்பாற்றி கொள்க "என அமைதியாக க்கூறினார் .ஆனால் அந்த சிறுவன் அந்த பாராசூட்டை வழக்கறிஞரிடம் ஒப்படைத்து, "ஐயா கவலைப்படாதீர்கள்  சாமியார்ஆனவர் நான் தினமும் வழக்கமாக  பள்ளிக்கு எடுத்து செல்லும் எனது  பையை பாராசூட் என தது முதுகில் மாட்டி கொண்டு குதித்துவிட்டார் அதனால் மிகுதி இரண்டு பாராசூட்கள் உள்ளன ஆளுக்கு ஒன்று முதுகில் மாட்டிகொண்டு நாம் இருவரும் குதித்து நம்மிருவருடைய உயிர்களையும் காத்து கொள்ளலாம்  வாருங்கள்" எனக்கூறி ஆளுக்கொரு பாராசூட்களை எடுத்து தோளில் மாட்டிகொண்டுவிமானத்திலிருந்து குதித்தனர்

ஞாயிறு, 18 ஜூலை, 2021

குதிரை திருடன் ..!

 


தற்போதைய பேருந்து,மகிழ்வுந்து .இருசக்கர வண்டி ஆகியவை இல்லாத முற்காலத்தில் ஒருநாள்  மனிதன் ஒருவன் தனது குதிரையில் மிகமுக்கியமான பணியை செய்து முடிப்பதற்காக அருகிலிருந்த கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தார். .இடையில்  மிகப்பெரியகாடு ஒன்று இருந்தது  அதனால் அந்த பெரிய காட்டை குதிரையின் மீது  கடக்கும்போது அம்மனிதனுக்கு மிகவும் சோர்வாகிவிட்டது . எனவே, அவர்  ஏதேனும் மரத்தின் நிழலில் சிறிது ஓய்வெடுத்து சென்றால் நன்றாக இருக்கும் என எண்ணி ஓய்வெடுப்பதற்காக தனது குதிரையி லிருந்து கீழிறங்கி ஒரு மரத்தின்  நிழலில்தனது குதிரையை  கட்டிய பின்னர் அதே நிழலில் அந்த குதிரைக்கு அருகில்அவரும் படுத்தார் அவ்வாறு  அவர்படுத்தவுடன் விரைவில் தூங்கிவிட்டார்.   சிறிது நேரம் கழித்து அவர் தூங்கி எழுந்தபோது,தனது குதிரையை யாரோ திருடி கொண்டு சென்றுவிட்டதை அறிந்து என்னசெய்வது என பதைபதைப்புடன் சுற்றிலும் தேடிபார்த்தார்    ஆனால் அவரது குதிரையை மட்டும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் தனது குதிரையின் காலடிச்சுவடுகளை வைத்து  எந்த பக்கம் தனது குதிரையானது திருடி கொண்டு செல்லப்பட்டுள்ளது  என அவர் தெரிந்துகொண்டார். அதனைதொடர்ந்து அவர் காட்டில் இருந்து ஒரு நீண்ட மரக் குச்சியை ஒடித்து தனது கையில் எடுத்து கொண்டு  குதிரைத் திருடனைத் தேடத் தொடங்கினார். அவ்வாறு  தேடிச்சென்றுகொண்டேயிருந்தபோது, கடைசியில் அவர் அருகிலிருந்த கிராமத்திற்கு  வந்து சேர்ந்தார். அங்கே, அவர் தனது கையிலிருந்த நீண்டகுச்சியை கம்பம் சுழற்றுவதை போன்று சுழற்றிக்கொண்டு, “என் குதிரையைத் திருடியது யார்? அவ்வாறு திருடிய யாராயிருந்தாலும் என்னுடைய குதிரையைத் திருப்பித் தரப்போகின்றீர் களா,இல்லையா? இல்லையெனில் கடைசியாக  எனது குதிரை திருடப்பட்டபோது நான் என்ன செய்தேனோ அதை இப்போது  செய்வேன். ” எனச் சத்தமாக அறிவிப்பு செய்து கொண்டிருந்தார் .அவர் மீண்டும் மீண்டும் இதே போன்று தனது கையிலிருந்த நீண்டகுச்சியை கம்பம் சுழற்றுவதை போன்று சுழற்றியவாறு சத்தமாக அறிவிப்பினை செய்து அந்த கிராமத்தாரை எச்சரித்து கொண்டிருந்தார். அவர் அவ்வாறு தொடர்ந்து சத்திமிட்டு அறிவிப்பு செய்வதை கண்ட அந்த கிராம மக்கள் அனைவரும் அவரை சுற்றி கூடிவேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர் , அவருடைய குதிரையை திருடிய  திருடனும் அதே கிராமத்தைச் சேர்ந்தவன். இவ்வாறு எச்சரிக்கை செய்வதைக் கேட்ட திருடன்  குதிரையின் சொந்தக்காரர் தன்னைஎன்ன செய்துவிடுவாரோ நமக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என பயந்து உடனே அந்த குதிரையை மறைத்து வைத்திருந்த இடத்திற்குச் சென்று அதை அவிழ்த்து விட்டிட்டான். அதனால் அந்த குதிரையும் விரைவாக, தன்னுடைய உரிமையாளரிடம் திரும்பி வந்து சேர்ந்ததுஇவ்வாறு நாள்முழுக்க குதிரையை தேடுவதிலேயே கழிந்துவிட்டதால் அன்று செய்து முடிப்பதற்காக எண்ணிய பணியை வேறொரு நாள் செய்து முடிப்போம் முதலில் நாம் நம்முடைய  கிராமத்திற்கு போய்ச்சேர்வோம் என அந்த குதிரையின் உரிமையாளர் தன்னுடைய குதிரையின் மீதுஏறி புறப்பட தயாரானபோது, ஏற்கனேவே குதிரை திருடு போன போது அவர் செய்த செயல் என்னவென தெரிந்து கொள்ள மிகவும்  ஆர்வமாக அந்த குதிரையை திருடியவன் அவரிடம் சென்று, “ஐயா  உங்களுடைய  குதிரை கிடைத்து விட்டது அதனால் உங்களுக்கு மிக்கமகிழ்ச்சிதான், ஆனால் நீங்கள் புறப்படுவதற்கு முன்பு கடைசியாக உங்களுடைய குதிரை திருடு போனபோது நீங்கள்  என்ன செய்தீர்கள்? என்ற தகவலை மட்டும்  சொல்லி விட்டு செல்லுங்களேன், நானும் தெரிந்து கொள்கின்றேன்என்று கேட்டான். அதனைதொடர்ந்து அந்த குதிரைக்காரன்  புன்முறுவலுடன் , “அது ஒன்றுமில்லை! ஐயா| அவ்வாறு குதிரை திருட போன்பின்னர்  உடன் நான் ஒரு புதிய குதிரை வாங்கி விட்டேன்.அவ்வளவுதான் " எனக்கூறி அவர் குதிரையுடன் புறப்பட்டு சென்றார்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...