நிருவாகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிருவாகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 30 ஜூலை, 2020

சசேவ (GST)இல்லாமல நிறுவன இயக்குநர்களுக்கு சம்பளம் வழங்குதல்

ஒரு சில முரண்பாடான தீர்ப்புகளுக்குப் பிறகு, சசேவ இல்லாமல் நிறுவன இயக்குநர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதாக CBIC தெளிவுபடுத்துகிறது M/s Alcon Consulting Engineers (India) Pvt. Ltd. (Karnataka AAR) dt. 15-2-2019 எனும் வழக்கில் , நிறுவனத்திற்கு பனியாளரிகள் போன்று இயக்குநர்கள் வழங்கும் சேவைகளானவை எதுவும் மசசேவ சட்டம், 2017 இன் அட்டவணை III இன் பிரிவு (1) இன் கீழ் இல்லை எனதெளிவுபடுத்தப்பட்டுள்ளது, அதாவது “ஒரு பணியாளரால் முதலாளிக்கு அல்லது அவரது வேலைவாய்ப்பு தொடர்பாக வழங்கப்படும் சேவைகள்”போன்று இயக்குனர் அந்நிறுவனத்தின் ஊழியர் அன்று. இயக்குநருக்கு வழங்கப்படும் தொகை, இயக்குநரால் நிறுவனத்திற்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்பானது மற்றும் அத்தகைய சேவையைப் பெறுபவர் மசசேவ சட்டத்தின் பிரிவு 2 இன் பிரிவு (93) இன் படி நிறுவனமாகும் மற்றும் அத்தகைய சேவையை வழங்குபவர் இயக்குனர் ஆவார். மேலும், இந்த சேவைகளின்அறிவிப்பு எண் 113/2017- CTR dt 28-6-2017. இன் நுழைவு எண் 6 இன் கீழ் தலைகீழ் கட்டண பொறிமுறைக்கு (RCM)பொறுப்பாகும் என்று AAR கூறியது. M/s Clay Craft India Pvt. Ltd. (Rajasthan AAR) dt. 5-2-2020. எனும்வழக்கிதிலும் இதே போன்ற கருத்துக்கள் உறுதி செய்யப்பட்டன. M/s Anil Kumar Agrawal (Karnataka AAR) dt 4-5-2020,எனும் வழக்கில் மாறுபட்ட கருத்துக்கள் எடுக்கப்பட்டன, அங்கு இயக்குனர் ஒரு நிர்வாக இயக்குனர் என்பதால், அவர் வழங்கிய சேவைகள் உட்பிரிவின் கீழ் வரும் என்று வாதிடப்பட்டது. (1)மசசேவ சட்டம், 2017 இன் அட்டவணை III இன். இப்போது, CBIC இன் சுற்றறிக்கை எண் 140/10/2020-சசேவ நாள் 10-6-2020 ஐ வெளியிட்டுள்ளது, இது இயக்குநர் ஊதியத்தில் சசேவ விதிக்கப்படுமா இல்லையா என்பதை தீர்மானிக்க பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது - படி முறை1: இயக்குனர் நிறுவனத்தின் ஊழியரா இல்லையா என்பதை நாம் சரிபார்க்க வேண்டும். இயக்குனர் ஒரு பணியாளராக இருந்தால் - அது மசசேவ சட்டம், 2017 இன் அட்டவணை III இன் பிரிவு (1) இன் கீழ் வரும், மேலும் எந்த சசேவயும் விதிக்கப்படாது. இயக்குனர் ஒரு ஊழியர் இல்லையென்றால் - அவர் வழங்கிய சேவைகள் சசேவக்கு ஏற்றதாக இருக்கும், மேலும் நிறுவனம் அறிவிப்பு எண் 13/2017 இன் நுழைவு எண் 6 இன் கீழ் தலைகீழ் கட்டண பொறிமுறைக்கு (RCM) மீது வரி செலுத்த வேண்டும்- சி.டி.ஆர் டி.டி 28-6-2017. படிமுறை 2: ஒரு இயக்குனர் நிறுவனத்தின் ஊழியர் என்பதை சரிபார்க்க, இயக்குனர் ஒரு சுதந்திர இயக்குநரா அல்லது முழுநேர இயக்குநரா என்பதை மேலும் சரிபார்த்திடுக. இயக்குனர் ஒரு சுதந்திர இயக்குநராக இருந்தால் - நிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 149 (6) இன் கீழ் “சுதந்திர இயக்குநர்கள்” என்பதன் வரையறை, நிறுவனங்களின் 12 வது விதி (பங்கு மூலதனம் மற்றும் கடன் பத்திரங்கள்) விதிகள், 2014 உடன் படியுங்கள், அத்தகைய இயக்குனர் இருக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது அவர் அந்த நிறுவனத்தில் நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிதியாண்டுக்கு முந்தைய மூன்று நிதி ஆண்டுகளில் ஏதேனும் ஒரு ஊழியர் அல்லது உரிமையாளர் அல்லது அந்த நிறுவனத்தின் பங்குதாரராக இருக்கவில்லை.என்பதை உறுதி படுத்திடவேண்டும் எனவே, சுதந்திர இயக்குநர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் தலைகீழ் கட்டணம் அடிப்படையில் நிறுவனத்தின் கைகளில் வரி விதிக்கப்படுகிறது. இயக்குனர் முழு நேர இயக்குநராக இருந்தால் - நிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 2 (94) இன் கீழ் முழு நேர இயக்குநரின் வரையறை ஒரு உள்ளடக்கிய வரையறையாகும், இதனால் அவர் நிறுவனத்தின் ஊழியராக இல்லாத ஒரு நபராக இருக்கலாம். முடிவு - முழு நேர இயக்குனர் நிறுவனத்தின் ஊழியராக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். படி 3: ஒரு முழுநேர இயக்குனர் நிறுவனத்தின் ஊழியரா என்பதைச் சரிபார்க்க, நிறுவனம் டி.டி.எஸ்ஸை நொடி 192 இன் கீழ் கழிக்கிறதா அல்லது வருமானவரி சட்டத்தின் 194 ஜெ. வருமானவரி சட்டத்தின் சம்பளத்தின் 192 வது பிரிவின் கீழ் இயக்குநருக்கு வழங்கப்படும் சம்பளம் டி.டி.எஸ்-க்கு உட்பட்டது என்றால் - அத்தகைய ஊதியங்கள் ஒரு பணியாளரால் முதலாளிக்கு வழங்கப்படும் சேவைகளை கருத்தில் கொள்ளும்போது வரிவிதிப்பு அல்ல. சிஜிஎஸ்டி சட்டம், 2017. இயக்குநருக்கு வழங்கப்படும் சம்பளம் வருமானவரி சட்டத்தின் பிரிவு 194 ஜே இன் கீழ் தொழில்முறை அல்லது தொழில்நுட்ப சேவைகளுக்கான கட்டணமாக டி.டி.எஸ்-க்கு உட்பட்டால்- இத்தகைய ஊதியங்கள் சி.ஜி.எஸ்.டி சட்டத்தின் மூன்றாம் அட்டவணை வரம்பிற்கு அப்பாற்பட்ட சேவைகளை வழங்குவதற்கான கருத்தாக கருதப்படும், எனவே. வரி விதிக்கப்படக்கூடியது. மேலும், அறிவிப்பு எண் 13/2017 - 28.06.2017 தேதியிட்ட மத்திய வரி (விகிதம்), அந்த சேவைகளைப் பெறுபவர் அதாவது நிறுவனம், பொருந்தக்கூடிய ஜிஎஸ்டியை தலைகீழ் கட்டண அடிப்படையில் வெளியேற்றுவதற்கு பொறுப்பாகும்.

செவ்வாய், 21 ஜூலை, 2020

எந்தவொரு நிறுவனத்திலும் கூடுதல் இயக்குனர்களையும் முக்கிய நிர்வாக பணியாளர்களையும் நியமிப்பதற்கான செயல்முறை


கூடுதல் இயக்குனர் (பிரிவு 161 மற்றும் அத்தியாயம் XI இன் படி நிறுவனங்கள் (இயக்குநர்களின் நியமனம் மற்றும் தகுதிகள்) விதிகள், 2014] கூடுதல் இயக்குநர் என்பவர் இயக்குநர் குழுவால் எந்த நேரத்திலும் நியமிக்கப்படக்கூடியவர், அவர் அடுத்த ஆண்டு பொதுப்பேரவைக் கூட்டம் நடைபெறும் நாள் வரை அல்லது வருடாந்திர பொதுப்பேரவைக் கூட்டம் நடத்தப்பட வேண்டிய கடைசி நாள்வரை, இவற்றுள் எது முந்தையதோ அந்த நாள்வரையில் கூடுதல் இயக்குநராக இருப்பார். இவ்வாறான கூடுதல் இயக்குநரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் பின்வருமாறு- 1. கூடுதல் இயக்குநரை நியமிப்பதற்கான இயக்குநர்குழுத் தீர்மானம் ஒன்றினை இயக்குநர் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றவேண்டும் 2. படிவம் DIR 2 இன் வாயிலாக தொடர்புடைய நபரின் ஒப்புதல் கடிதம் பெறவேண்டும் 3. தொடர்புடைய நபர் பிற நிறுவனங்களில் ஆர்வம் காட்டுபவராக இருந்தால் MBP 1 , DIR 8 ஆகிய இரு படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்திடவேண்டும் 4. ஆதார் அட்டை வருமானவரி அட்டை ஆகிய இரண்டையும் சுய சான்றளிக்கப்பட்டு விருப்ப இணைப்பாக இணைத்திடவேண்டும் 5. DIR 12 எனும் படிவத்தினை மேலே கூறிய ஆவணங்களுடன் நிறுமங்களின் பதிவாளரிடம் சமர்ப்பித்திடவேண்டும் எந்தவொரு நிறுவனமும்,தங்களுடைய இயக்குநர் குழுவில் எந்தவொரு இயக்குநரையும் நியமித்த முப்பது நாட்களுக்குள், நிறுவனங்கள் (பதிவு அலுவலகங்கள் மற்றும் கட்டணங்கள்) விதிகள், 2014 இல் வழங்கப்பட்ட கட்டணத்துடன், படிவம் DIR-12 இல் பதிவாளரிடம் தொடர்புடைய நபரின் ஒப்புதல் படிவும்DIR 2 இணைத்து சமர்ப்பித்திட வேண்டும். முக்கிய நிர்வாக பணியாளர்களின் நியமனம் (பிரிவு 196, 203 மற்றும் அத்தியாயம் XIII இன் படி நிறுவனங்கள் (நிர்வாக பணியாளர்களின் நியமனம் மற்றும் ஊதியம்) விதிகள், 2014] முக்கிய நிர்வாக பணியாளர் என்றால் யார் நிறுவனங்களின் சட்டம் பிரிவு 2 (50) இன் படி, "முக்கிய நிர்வாக பணியாளர்கள்", என்பவர் ஒரு நிறுவனம் தொடர்பாக, (i) தலைமை நிர்வாக அதிகாரி அல்லது நிர்வாக இயக்குநர் அல்லது மேலாளர்; (ii) நிறுவனத்தின் செயலாளர்; (iii) முழுநேர இயக்குனர்; (iv) தலைமை நிதி அதிகாரி அத்தியாயம் XIII இன் பிரிவு 203 மற்றும் விதி 8 இன் படி நிறுவனங்கள் (நிர்வாக பணியாளர்களின் நியமனம் மற்றும் ஊதியம்) விதிகள், 2014 இன்படி பட்டியலிடப்பட்ட ஒவ்வொரு நிறுவனமும் பத்து கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் செலுத்தப் பட்ட பங்கு மூலதனத்தைக் கொண்ட ஒவ்வொரு பொது நிறுவனமும் முழுநேர முக்கிய நிர்வாக பணியாளர்களை கொண்டிருக்கவேண்டும். எனவே தனியார் நிறுவனங்கள் முக்கிய நிர்வாக பணியாளர்களை நியமிக்க தேவையில்லை என்று முடிவு செய்யலாம். ஆனால் இதற்கு விதிவிலக்கு உள்ளது XIII அத்தியாயத்தின் விதி 8A இன் படி (நிர்வாக பணியாளர்களின் நியமனம் மற்றும் ஊதியம்) விதிகள், 2014 பத்து கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் செலுத்தப் பட்ட பங்கு மூலதனத்தைக் கொண்ட ஒவ்வொரு தனியார் நிறுவனத்திற்கும் முழுநேர நிறுவன செயலாளர் கண்டிப்பாக இருக்க வேண்டும் முக்கிய நிர்வாக பணியாளர்களை நியமிக்கும் நடைமுறை 1 ஊதியம் உள்ளிட்ட நியமனத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைக் கொண்ட தீர்மாணத்தினை இயக்குநர்களின் குழுக்கூட்டத்தில் நிறைவேற்றவேண்டும். 2. MBP-1 , DIR 8 ஆகிய இரண்டு படிவங்களையும் மிகச்சரியாக பூர்த்தி செய்து பெறவேண்டும் 3. DIR 12 எனும் படிவத்தினை மேலே கூறிய ஆவணங்களுடன் நிறுமங்களின் பதிவாளரிடம் சமர்ப்பித்திடவேண்டும் 4. சிறப்புத் தீர்மானத்தை நிறைவேற்றிடுக (நிர்வாக இயக்குனர், முழுநேர இயக்குநர் அல்லது மேலாளரை நியமித்தல் தொடர்பாக) 4. MGT-14 எனும் படிவத்தினை நிறுமங்களின் பதிவாளரிடம் சமர்ப்பித்திடவேண்டும்(பொது நிறுவனமாக இருந்தால் மட்டும்) 5. MR 1 எனும் படிவத்தினை நிறுமங்களின் பதிவாளரிடம் சமர்ப்பித்திடவேண்டும்பொது நிறுவனமாக இருந்தால் மட்டும்) கவனிக்க வேண்டிய முக்கிய செய்திகள் 1. ஒரு முழுநேர முக்கிய நிர்வாக பணியாளர்கள் ஒரே நேரத்தில் அதன் துணை நிறுவனத்தை தவிர ஒரு நிறுவனத்திற்கு மேல் பணியில் இருக்க முடியாது: 2. முழுநேர முக்கிய நிர்வாக பணியாளர்கள் பணிவிலகளினால் உருவாகும் காலிபணியிடமானது அத்தகைய காலியிடம் உருவாகி ஆறு மாத காலத்திற்குள் இயக்குநர்களின் குழுக் கூட்டத்தால் நிரப்பப்படும், . 3. எந்தவொரு நிறுவனமும் ஒரே நேரத்தில் ஒரு நிர்வாக இயக்குனரையும் மேலாளரையும் (நிருவாகியை) நியமிக்கவோ அல்லது பணியமர்த்தவோ கூடாது. 4. எந்தவொரு நிறுவனமும் ஒரு நபரை அதன் நிருவாக இயக்குனராக, முழுநேர இயக்குனராக அல்லது மேலாளராக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஒரேசமயத்திற்கு நியமிக்கவோ அல்லது மீண்டும் நியமிக்கவோ கூடாது:

ஞாயிறு, 17 மே, 2020

சிறு நடுத்தர நிறுவனங்குளுக்கு உதவிடும் பணம் இல்லாமல் காசோலை வருவதற்கான திருத்தங்கள்


தற்போது நிலையில் இவ்வாறு காசோலை ஒன்றின் வாயிலாக தொகை கிடைக்கபெற்றால் அந்த காசோலையில் குறிப்பிட்டுள்ள நாளிலிருந்து மூன்று மாதத்திற்குள் நாம் கணக்கு வைத்திருக்கும் வர்த்தக வங்கியில் சமர்ப்பித்து பணம் கோரலாம் அதனை தொடர்ந்து வர்த்தக வங்கியானது குறிப்பிட்ட காசோலைக்கு பணம் இல்லையென திருப்பி அனுப்பிய நிலையில் தொடர்புடைய அந்த காசோலையில் கையொப்பமிட்ட நபருக்கு உடன் பணம் வழங்க கோரி ய கடிதம் ஒன்றின்வாயிலாக முப்பது நாட்களுக்கள் அறிவிப்பு ஒன்றினை அனுப்பிடவேண்டும் அவ்வாறான அறிவிப்பிற்கு பதினைந்து நாட்களுக்குள் காசோலை எழுதியவர் பணம் வழங்கியிருக்கவேண்டும் அவ்வாறு வழங்கவில்லையெனில் பாதிக்கப்பட்டவர் இதற்கான நீதிமன்றத்தில் காசோலைக்கான பணம் கிடைக்கப்பெறாமல்காசோலையே திரும்ப வந்தது (Cheque Bounce ) குறித்து வழக்கு தொடுக்கலாம் இவ்வாறான வழக்கானது செலாவணி முறிச்சட்டம் (Negotiable Instruments Act) 1881 இன் கீழ் வழக்காக பதிவுசெய்யப்பட்ட ஆறுமாத்தத்திற்குள் நீதிமன்றம் உத்திரவிடவேண்டும் என மிக நீண்ட நடைமுறையில் பாதிக்கப்பட்ட நபர் தன்னுடைய வியாபார நடவடிக்கைகளுக்கு போதுமான நடைமுறை மூலதனம் இல்லாமல் அல்லலுறவேண்டிய அவலநிலைக்கு தள்ளப்படுகின்றார் அதாவது MSME என சுருக்கமாக அழைக்கப்படும் மிகச்சிறிய சிறிய நடுத்தர நிறுவனங்கள் , சிறிய வியாபாரிகள் ஆகியோர்கள் தங்களுக்கு வழங்கப்படும் காசோலைகள் அவைகளுக்கான தொகை தமக்கு வழங்கப்பட்ட காசோலையில் குறிப்பிட்ட வர்த்தக வங்கியின் கணக்கில் இல்லாத தால் திரும்பிவிடும் நிலையில் அதற்கான நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அந்ததொகை பெறுவதற்குள் போதும் போதும் என அதிக காலவிரையம் ஆவது மட்டுமல்லாமல் தங்களுடைய வியாபார நடவடிக்கைகளக்கு தேவையான போதுமான நடைமுறை மூலதனம் இல்லாமல் நிறுவனத்தின் இயக்கத்தையே நிறுத்திவிடும் நிலைக்கு தள்ளப்படும் தற்போதை ய அவலநிலையில் இவ்வாறான சிக்கலை தீர்வு செய்வதற்காக உதவிடும் பொருட்டு செலாவணிமுறிச்சட்டம் 1881 இல் பிரிவு 143A ,148 ஆகிய இரண்டிலும் திருத்தம் செய்து கடந்த செப்டம்பர் 1., 2018 இலிருந்து நடைமுறை படுத்தப்பட்டுள்ளது என்ற ஒரு நல்லசெய்தியானது அவ்வாறு அல்லல்படும் பவர்களுக்கு வயிற்றில் பால்வார்த்தது போன்றதாகும் . பணமில்லாமல் காசோலை திரும்ப வந்ததற்காக தொடர்புடையவர்மீது வழக்கு தொடுத்தபின்னர் இடைக்கால நிவாரணமாக 20% இற்கு மிகாமல் 60 நாட்களுக்குள் இந்த தொகையுடன் வங்கியின் வட்டிவிகிதத்தின் அடிப்படையில் வட்டியும் சேர்த்து வழங்கிடுமாறு நீதிமன்றம் உத்திரவிடலாம் இந்த உத்திரவின்படி தொடர்புடையநபர் தொகை வழங்கத்தவறினால் தொடர்புடைய நபருக்கு சொந்தமான நிலையான சொத்துகளை மாவட்ட ஆட்சியர் வாயிலாக பொது ஏலத்தில் விற்பணைசெய்து பாதிக்கப்பட்டவருக்கு தொகை வழங்குமாறு நீதிமன்றம் உத்திரவிடலாம் பிரிவு 148 இன் படி பாதிக்கப்பட்டவர் இவ்வாறான வழக்கு தொடுத்தவுடன் காசோலையில் கையொப்பமிட்டு கொடுத்த நபர் தொடர்புடைய நீதிமன்றத்ததில் 20% தொகையை வைப்புதொகையாக செலுத்திடவேண்டும் வழக்கு காசோலை வழங்கிய நபருக்குசார்பாக தீர்ப்பானால் அந்த தொகையும் அதற்கான வட்டியும் சேர்த்து அவருக்கு திருப்பிவழங்கப்பெறும்

சனி, 16 மே, 2020

சிக்கலை அடையாளம் காண விமர்சன சிந்தனையும் ஆனால் அதற்கான தீர்வுகளுக்கு மட்டும் மிகவும் ஆக்கபூர்வமான சிந்தனையும் தேவையாகும்


ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா ஸ்டீல் எனும் நிறுவனத்தின் தலைவர், அந்நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுடன் ஒவ்வொரு வாரமும் வாராந்திர சந்திப்பிற்கான கூட்டத்தை நடத்தி அதில் தம்முடையபணியாளர்கள் கூறும் குறைகளை உடனுக்குடன் தீர்வுசெய்து வந்தார். அவ்வாறான ஒரு வாராந்திர சந்திப்பு கூட்டத்தில் பணியாளர் ஒருவர் பிரச்சினை ஒன்றினை கொண்டுவந்தார். அதாவது பணியாளர்கள் பயன்படுத்திவருகின்ற கழிப்பறைகளின் தரமும் சுகாதாரமும் மிகவும் மோசமாக இருக்கின்றது என்றும் . அதேசமயம், தலைமை நிர்வாகிகள் பயன்படுத்திடும் கழிப்பறைகளில் தூய்மையும் சுகாதாரமும் எப்போதும் மிகச் சிறந்தவையாக உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார். அதனைதொடர்ந்து" அதை சரிசெய்ய எவ்வளவு காலஅவகாசம் தேவைப்படும்?" என தலைவர் தனது உயர் நிர்வாகிகளிடம் வினவினார். "அதை சரிசெய்ய குறைந்த பட்சம் ஒரு மாதம் ஆகும்." என அதற்கான பொறுப்பான நிருவாகி பதில் கூறினார். உடன் தலைவர் "நான் அதை ஓரிரு நாளில் செய்வேன், அதற்காக ஒரு தச்சு பணியாளரை மட்டும் என்னிடம் அனுப்பிவையுங்கள்" என்றார். அடுத்த நாள், ஒரு தச்சுப்பணியாளர் தலைவரிடம் வந்தபோது, உடன் அந்த தச்சுப்பணியாளரிடம் கழிப்பறையின் முகப்பில் அதனை சுட்டிகாட்டிடும் பெயர் பலகைகளை மட்டும் இடம்மாற்றி வைத்திடுமாறு கட்டளையிட்டார் . அதாவது பணியாளர்கள் பயன்படுத்தி கொள்ளும் கழிப்பறையின் முகப்பில் சுட்டி காட்டிடும் பெயர் பலகையை "நிர்வாகிகள் கழிவறை " என்றும் நிர்வாகிகள் பயன்படுத்தி கொள்ளும் கழிப்பறையின் முகப்பில் சுட்டிகாட்டிடும் பெயர் பலகையை "தொழிலாளர்கள் கழிவறை" என்றும் மாற்றி வைத்திடுமாறு கட்டளையிட்டார் அதன்படி அவ்விரு பெயர்பலகைகளும் இடம் மாற்றி வைக்கப்பட்டன . என்ன ஆச்சரியம் பெயர்பலகைகள் இடம் மாறியபின்னர் இரண்டு கழிப்பறைகளின் தரமும் அடுத்த ஓரிரு நாட்களில் சமமான அளவில் மிகவும் சுத்தமாகமாகவும் சுகாதாரமாகவும் மாறிவிட்டன அதன் பின்னர் ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறே பெயர்பலகைகளை மட்டும் இடம் மாற்றி வைத்திடுமாறு தலைவர் அறிவுறுத்தினார். அதன்பிறகு நடைபெற்ற வாராந்திர கூட்டத்தில் அந்த பிரச்சினை குறித்துஎந்தவொரு பணியாளரும் எழப்பவேயில்லை. நிறுவனத்தின் தலைவராக இருப்பது என்பது அந்நிறுவனத்தின் நிருவாகியாக இருப்பதை விட மிக உயர்ந்தநிலையானதாகும் இருந்தபோதிலும் பொதுவாக எந்தவொரு தொழில் நிறுவனத்தின்தலைமை பதவியில் இருப்பவர்களும் தங்களின் கட்டுபாட்டின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் கூறும் குறைகளை பொறுமையாக காது கொடுத்து கேட்டு அவ்வாறான குறைகளுக்கான மிகச்சரியான தீர்வுகளை அதிக காலஅவகாசம் எடுத்து கொள்ளாமல் உடனுக்குடன் செயற்படுத்தி பணியாளர்கள் திருப்தியடையுமாறு செய்திடவேண்டும் அவ்வாறான சிக்கலை அடையாளம் காண விமர்சன சிந்தனை தேவையாகும் . ஆனால் அதற்கான தீர்வுகளுக்கு மட்டும் மிகவும் ஆக்கபூர்வமான சிந்தனை தேவையாகும் என்ற செய்தியை மனதில் கொள்க

வெள்ளி, 15 மே, 2020

சசேவ சட்டத்தின் கீழ் GSTR 2A எனும் சரிகட்டிடும் எக்செல்லின் வசதி


தற்போது சசேவ இன்கீழ் வரிசெலுத்தவோர் அனைவரும் GSTR 9 எனும் படிவத்தில் சமர்ப்பித்திடும் ஆண்டு அறிக்கையானது ஏற்கனவே சமர்ப்பித்திருக்கும் GSTR 2A எனும் படிவத்தில் குறிப்பிடும் தொகையுடன் சரிகட்டுதல் என்பது மிகப்பெரிய போராட்டமாக உள்ளது இவ்வாறான சிக்கலை தவிர்த்து GSTR 9 எனும் படிவத்தினை சரியாக சமர்பித்துவிட்டோம் என நிம்மதியாக திருப்தியாக இருப்பதற்காக இதுவரை இவ்வாறான நிலையில் JSON எனும் வடிவத்தில் வழங்கப்பட்டு வந்ததற்கு பதிலாக எக்செல்லில் உள்ளீட்டு வரிகளை சரிகட்டிடும் புதிய GSTR 2A படிவம் உருவாகிடுமாறு செய்யப்பட்டுள்ளது அதாவது புதிய GSTR 2A Reconciliation Excel எனும் வடிவமைப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது இந்த வசதியை பயன்படுத்தி கொள்வதற்காக GST portal எனும் தளத்திற்குள் உள்நுழைவுசெய்திடுக அதில் Return Dashboard > Month > Auto Drafted GSTR2A > என்றவாறு வாய்ப்புகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக பின்னர் விரியும் திரையின் Download எனும் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விரியும் புதிய வாய்ப்புகளின் திரையில் Generate Excel File எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இது உருவாவதற்காக 20நிமிடம் எடுத்துகொள்ளலாம் அதன்பின்னர் Click Here to Download Excel என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நம்முடைய GSTR 2A Reconciliation Excel வடிவமைப்பு கோப்பானது பதிவிறக்கம் ஆகிவிடும் இதனுடைய பணித்தாட்களை நகலெடுத்து நாம் தயார் செய்துள்ள GSTR (Input) எனும் பணித்தாளில் ஒட்டிடுக உடன் GSTR எனும் படிவத்தை சமர்ப்பிக்காதவர்களின் பட்டியல் ,சசேவ மதிப்புடன் GSTR எனும் படிவத்தை சமர்ப்பித்த ஆனால் உள்ளீட்டு வரிவரவு எடுக்காதவர்களின் பட்டியல், GSTஇல் குறைவாக சசேவரி செலுத்திய GSTR எனும் படிவத்தை சமர்ப்பித்த வர்களின்பட்டியல், GSTஇல் கூடுதலாக சசேவரி செலுத்திய GSTR எனும் படிவத்தை சமர்ப்பித்த வர்களின் பட்டியல் , ஒட்டுமொத்த சாராம்ச பட்டியல் அதில் நாம் உள்ளீட்டு வரிவரவுஎடுத்ததற்கும் இணையத்தின் வாயிலாக நாம் GSTR 2A தரவினை சரிகட்டஎடுத்த நடவடிக்கைஆகயவை பட்டியல்களாக விரியும் இவைகளை கொண்டு ஒப்பீடுசெய்து GSTR 9 எனும் படிவத்தில் தேவையானவாறு சரிசெய்து சமர்ப்பித்திடலாம்

செவ்வாய், 12 மே, 2020

ஊதிய சாதாரணபங்குகள்(Sweat equity shares )ஒரு அறிமுகம்


ஒரு நிறுமத்தின் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் அயராது பாடுபடும் , ஊழியர்கள் நிறுவனத்தை நன்றாக வழிநடத்தி செல்லும் இயக்குநர்கள் ஆகியோர் அந்நிறுமம் வெற்றிபெறுவதற்காக தங்களின் அறிவையும் ஆற்றலையும் வழங்கியது அல்லது தங்களுடைய அறிவுசார் சொத்துரிமைகளின் தன்மையில் கிடைக்கக்கூடிய விளைவுகளின் உரிமைகளை அந்நிறுமத்திற்கு வழங்கியது அல்லது அந்நிறுமத்தின் மதிப்பினை கூட்டியது ஆகிய அவர்களின் பல்வேறு சேவைகளுக்கு வெகுமதி அளிப்பதன் மூலம் அவர்களை அந்த நிறுமத்திலேயே இருக்குமாறு தக்க வைத்துக் கொள்ளவும் அவர்களை கௌரவிக்கும் பொருட்டும் இவ்வாறான ஈடு செய்யமுடியாத பணிகளுக்கு இணைையாக ரொக்கமாக வழங்காமல் அதற்கு பதிலாக நிறுமத்தின் சாதாரண பங்குகளை தள்ளுபடி விலையில் வழங்குவதையே ஊதிய சாதாரணபங்குகள்(Sweat equity shares ) என அழைக்கப்பெறும் அதாவது அவர்கள் அளித்த பங்களிப்புக்கு பதிலாக சலுகைவிலையில் அந்நிறுமத்தின் சாதாரணபங்குகளை வழங்குவதன் மூலம் அவர்களின் உழைப்பிற்கான பரிசாக அல்லது வெகுமதியாக ஊதிய சாதாரணபங்குகள் அளிக்கிப்படுகின்றன. இவ்வாறான பங்குகளை வழங்குவதற்காக முதலில் அந்நிறுமத்தின் இதற்காக சிறப்பு தீர்மாணம் நிறைவேற்றியிருக்கவேண்டும் .அடுத்து பங்கு பரிவர்த்தனை ஆணையத்தின்(SEBI)வழிகாட்டுதல்களின் படி இருக்கவேண்டும். இந்த பங்குகளின் மதிப்பானது மேலாண்மை அலுவலர்களுக்கு வழங்கபெறும் ஊதிய உச்சவரம்பிற்குமிகாமல் இருக்கவேண்டும். இவ்வாறான சலுகைவிலையில் வழங்கபெறும் பங்குகளின் மொத்த மதிப்பானது ஒவ்வொருமுறையும் 15 சதவிகித பங்குதொகைக்கு மிகாமல் இருக்கவேண்டும் ஆயினும் ஒட்டுமொத்தமாக சாதாரணபங்குகளின் 25சதவிகிதத்திற்கு மேல் மிகாமல் இருக்கவேண்டும் இந்த பங்குவெளியிட்டில் பங்குகளின் விலையானது பதிவுபெற்ற மதிப்பீட்டாளரின் பரிந்துரைக்கின்ற தள்ளுபடிக்கு மிகாமல் இருக்கவேண்டும் இவ்வாறு வழங்கபெறும் சாதாரண பங்குகளை இவர்கள் மூன்றுஆண்டுகாலத்திற்கு பங்குசந்தையில் விற்பணை செய்திடக்கூடாது .இவ்வாறு பங்குகளை வெளியிடுவதற்காக சிறப்பு தீர்மாணம் நிறைவேற்றப்பட்டு ஒருவருடத்திற்குள் இந்தபங்குகள் வழங்கப்பட்டுவிடவேண்டும் அதற்குமேல் எனில் வேறு தீர்மாணம் நிறைவேற்றிதான் செயல்படுத்தவேண்டும் புதியதாக துவங்கிடும் நிறுவனங்கள் முதல் ஐந்துஆண்டுகளுக்கு இவ்வாறான பங்குகளை வெளியிடவேக்கூடாது இந்த வகையான பங்குகளை வெளியிடும் நிறுவனமானது இந்த வகையானபங்கு வெளியீட்டினை படிவம் எண் SH.3 இல் பதிவுசெய்து ஆவணத்தை பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும் என்பனபோன்ற பல்வேறு சட்டதிட்டங்களை நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 54 இல் குறிப்பிட்டவாறு பின்பற்றி இந்த ஊதிய சாதாரணபங்குகளை(Sweat equity shares ) வெளிடலாம்

வியாழன், 30 ஏப்ரல், 2020

புதிய தலைமை செயல்இயக்குநரை தேர்வுசெய்தல்


வெற்றிகரமாக செயல்படும் ஒரு நிறுவனத்தின் தலைமை செயல்இயக்குநர் வயதாகிவிட்டதால் தனக்கு பின்னர் அந்நிறுவனத்தை தொடர்ந்து வெற்றிபாதையில் கொண்டுசெல்வதற்கான புதிய தலை மை செயல்இயக்குநரை தனக்கு கீழ் பணிபுரியும் செயல்திறனுடைய இளைஞர் களிலிருந்த ஒருவரை தேர்வு செய்யவிரும்பினார் அதற்காக புதிய வித்தியாசமான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார் அதாவது தனக்கு கீழ் பணிபுரியும் துடிப்புள்ள இளைஞர்கள் அனைவரையும் ஒரு கூட்டரங்கில் ஒன்று சேர்த்து அவர்களிடம் "இளைஞர்களே உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு மரத்திற்கான விதை யும் அதனை முளைக்கவைத்து வளரச்செய்வதற்கான மண் தொட்டியும் வழங்கப்படும் நீங்கள் அனைவரும் இவ்விரண்டினையும் கொண்டு சென்று தத்தமது வீடுகளில் மண்தொட்டியை வைத்து அதில்அந்த மரக்கன்றின் விதையை ஊன்றி தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்திடவேண்டும் ஒருவருடம் கழித்து அனைவரும் அவரவர்களுக்கு வழங்கிய மண்தொட்டியை அதில் வளர்ந்துள்ள மரச்செடிகளுடன் இதே கூட்டரங்கிற்கு எடுத்துகொண்டுவந்து சேரவேண்டும் அப்போது நான் அவைகளை பார்வையிட்டு அதனடிப்படையில் உங்களுள் ஒருவரை எனக்கு அடுத்த இந்த நிறுவனத்தின் செயல்இயக்குநராக தெரிவுசெய்து நியமனம் செய்தபின் நான் பணிஓய்வு பெற்றவிடுவேன் சென்றுவாருங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்" என வாழ்த்தி அனுப்பிவைத்தார் அவர்களுள் அன்பு எனும் இளைஞனும் மிகவும் ஆர்வமாக தன்னுடைய வீட்டிற்கு சென்று தன்னுடைய துனைவியாரிடம் விவரங்களை கூறி இருவரும் ஆர்வமாக அந்த விதையை அந்த பூந்தொட்டியில் போதுமான எருக்களை இட்டு தண்ணீர் ஊற்றி சூரிய ஒளி படும் இடத்தில் வைத்து பராமரிப்பு செய்துவந்தனர் அந்த இளைஞனுடன் பணிபுரிந்த மற்ற நண்பர்களும் விதையானது முளைத்துவந்ததையும் செடியாக வளர்ந்து வருவதையும் பற்றி தினந்தோறும் தேநீர் இடைவேளையின்போது விவாதித்து வந்தனர் ஆனால் அன்பு என்பவரின் வீட்டின் மண்தொட்டியில் மட்டும் மரக்கன்று எதுவும் முளைக்கவும் இல்லை செடியாக வளரவும் இல்லை ஆயினும் தினமும் அந்த மண்தொட்டிக்கு தண்ணீர் ஊற்றுவது வேறு புல்பூண்டுகள் எதுவும் முளைக்காமல் பார்த்து கொள்வது சூரிய ஒளி படும்படி மிகச்சரியாக அந்த மண்தொட்டி உள்ளதாவெனதினமும் சோம்பலில்லாமல் பார்த்து பராமரித்து வந்தார் ஆறுமாதமானது அனைத்து அலுவலக நண்பர்களும் தத்தமது மரக்கன்றுகல் மண்தொட்டிகளில்பெரிய செடிகளாக வளர்ந்து விட்டதாக அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர் ஆனால் அ ன்புஎன்பவரின்மண்தொட்டியில் மட்டும் விதை முளைக்காமலேயே இருந்துவந்தது அதனால் அதுபற்றி நண்பர்கள் யாரிடமும் தகவல் எதுவும் தெரிவிக்காமல் மிகவும் மனவருத்ததுடன் ஆனால் தினமும் பார்வையிடுதல் தினசரி பராமரிப்பு பணிகளைசெய்தல் ஆகியன தவறாமல் மிகவும்பொறுப்புணர்வுடன் செய்துவந்தார் ஒருவருடம்முடிந்து அனைவரும் குறிப்பிட்டநாளில் அதே கூட்டரங்கிற்கு தாம் வளர்த்துவந்த மரச்செடிகளுடனான மண்தொட்டிகளுடன் வந்துசேர்ந்தனர் ஆனால் அன்பு எனும் இளைஞன் காலியான மரச்செடி ஏதும் முளைக்காத மண்தொட்டியை கூட்டரங்கிற்கு எடுத்துவந்தபோது அனைவரும் அன்புஎனும் இளைஞனையும் அவருடைய காலியான மண்தொட்டியையும் பார்த்து கிண்டலும் கேலியுமாகபேசி எள்ளிநகையாடினர் அதனால் அ ன்பு எனும் இளைஞன் மிக அதிக மனவருத்ததுடன் கூட்டரங்கில் கடைசி வரைசையில் தன்னுடைய காலியான மண்தொட்டியுடன் நின்று கொண்டிருந்தார் இந்நிலையில் நிறுவனத்தலைவர் கூட்டரங்கிற்கு வந்துசேர்ந்தார் "நண்பர்களே! இன்று உங்களுள் ஒருவரைஎனக்கு பதிலான செயல்இயக்குநராக நியமனம் செய்யவிருக்கின்றேன் அனைவரும் தயாராக இருக்கின்றீர்களா? நான் பார்வையிடவரலாமா ?"என அனுமதி கோரினார் .அனைவரும் கோரஸாக "வாருங்கள் ஐயா !"என அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் கூச்சலிட்டனர் ஆனால் அ ன்புஎன்பவர்மட்டும் மிகவும் அமைதியாக இன்றோடு நம்முடைய கதை முடிந்தது நம்மை நம்முடைய பணியிலிருந்து வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள் என பயந்து கொண்டு கடைசி வரிசையில் யாருடைய பார்வையும் தன்மீது படாதவாறு நின்றுகொண்டிருந்தார் அந்த நிறுவனத்தலைவர் அருகிலிருந்த தன்னுடைய நேர்முகஉதவியாளரை அழைத்து கூட்டரங்கில் கடைசியாக பதுங்கி நின்றுகொண்டிருந்த அன்பு என்பவரை மரச்செடிஎதுவும்முளைக்காத அவருடைய காலியான மண்தொட்டியுடன் மேடைக்கு வருமாறு கேட்டுகொண்டார் அன்பு என்பவரும் தன்னுடைய மண்தொட்டியில் மரச்செடி முளையாததால் பயந்து கொண்டு கடைசியில் நின்றிருந்தை கண்டுபிடித்து நம்மை மட்டும் மேடைக்கு அழைக்கின்றாரே என்ன செய்யப்போகின்றாரோ என மனதிற்குள் மிகுந்தபயத்துடன் ஆனால் தனக்கிட்ட கட்டளையை தான் சரியாக பின்பற்றி வந்துள்ளேன் என்ன ஆனாலும் பார்த்து கொள்ளலாம் என மேடைக்கு வந்துசேர்ந்தார் உடன் அந்த நிறுவனத்தின் செயல்இயக்குநர் "வாருங்கள் அன்பு அவர்களே ! இந்த நிறுவனத்தின் வருங்கால் செயல்இயக்குநரே வாருங்கள் எனக்கு அருகில் உள்ள இந்த இருக்கையில் அமருங்கள் அப்படியே புதிய செயல்இயக்கநர் என்ற பதவியையும் ஏற்றுகொள்ளுங்கள் !"என வரவேற்புஉரையை அறிவிப்பு செய்ததும் இதுவரையில் அன்பு எனும் இளைஞனை கிண்டலும் கேலியும் செய்த அனைவரும் மிகவும் ஆச்சரியத்துடன் எவ்வாறு அன்புஎன்பவர் புதிய செயல்இயக்குநராக தேர்வுசெய்யப்பட்டார் என மிகவும் அமைதியாக அமர்ந்துவிட்டனர் "நண்பர்களே! நான் கடந்த ஆண்டு உங்கள் அனைவருக்கும் இதேநாளில் இதே கூட்டரங்கில் நன்கு வ ருத்தெடுக்கப்பட்ட முளைக்காத விதைகளைத்தான் அனைவருக்கும் மண்தொட்டியுடன் கொடுத்தேன் மற்ற அனைவரும் அந்த முளைக்காதவிதைக்கு பதிலாக அவரவர் விருப்பபடியான வேறு மரச்செடிகளின் விதையை அந்த மண்தொட்டியில் ஊன்றி மரச்செடியாக கொண்டுவந்துள்ளீர்கள் ஆனால் இந்த இளைஞன் அன்புஎன்பவர் மட்டும் நான் கொடுத்த முளைக்காத விதையை நன்றாக பராமரித்து அப்படியே அந்த விதையை நான் கொடுத்த நிலையில் என்னிடம் கொண்டுவந்து ஒப்படைத்துள்ளார் அதனால் இவர்தான் எனக்கு பின்னர் நான் இதுவரை இந்த நிறுவனத்தினை வெற்றிபாதையில் கொண்டுவந்தவாறு காப்பாற்றி மீண்டும் நான் விரும்பியபோது என்னிடம் திரும்ப ஒப்படைப்பார் அதனால் அவரையே நான் எனக்கு பின்னரான இந்த நிறுவனத்தின் செயல்இயக்குநராக தெரிவுசெய்தேன்" என அன்பு எனும் இளைஞனை தான் தெரிவுசெய்தஉண்மையை போட்டுடைத்தார் .

சனி, 25 ஏப்ரல், 2020

Bagisto எனும் ஒரே மின்வணிககடை பலவிற்பணையாளர் ஒருஅறிமுகம்


Bagisto என்பது நம்முடைய ஒற்றையான மின்வணிக கடையை முழுமையான சந்தையாக மாற்றிடுகின்றது அதன்வாயிலாக நம்முடைய மின்வணிக கடைக்குள் பல்வேறு விற்பணையாளர்களும் தங்களுடைய வெவ்வேறு வகையான பொருட்-களை விற்பணைசெய்திடும் ஒரு சந்தைபோன்ற வசதியை இது வழங்குகின்றது. மேலும் நம்முடைய மின்வணிககடைக்கு வந்துசேரும் அனைத்து வாடிக்கையாளர்-களுக்கும் கொள்முதல் செய்திடுவதற்கான ஏராளமான வாய்ப்புகளை வெவ்வேறு வகையில் பல்வேறு விற்பணை யாளர்களிடமிருந்து பெறுகின்றவாறான வசதியை ஏற்பாடு செய்கின்றது. மேலும் ஒரே பொருளானது பல்வேறு விற்பனையாளர்-களால் வெவ்வேறு விலைகளில் விற்பணை செய்யப்படுவதால் வாடிக்கையாளர் ஒருவர் அவைகளின் விலைகளை ஒப்பிட்டுபார்த்து தான் விரும்பியவாறான பொருட்களை சரியான விலையில் கொள்முதல் செய்திடும் முடிவை எடுத்திடுமாறு ஊக்கவிக்கின்றது. ஒவ்வொரு விற்பணையாளரிடமும் கைவசமுள்ள பொருட்களின் அளவை அவ்வப்போது கணக்கிட்டு தேவைக்கேற்ப பொருட்களின் அளவை உயர்த்தி கொள்ளவும் நம்முடைய மின்வணிககடையில் எந்தபொருளும் இல்லையென்ற நிலையே நிகழாமல் பராமரித்திடவும் இது உதவுகின்றது. மேலும் விற்பணையாளர்களிடமிருந்து நமக்கு சேரவேண்டிய கழிவுத்தொகையை மிகச்-சரியாக கணக்கிட்டு வசூலித்திடவும் உதவுகின்றது. ஒருசில விற்பணையாளர்களின் புதிய பொருட்களை கொண்டுவந்து விற்பணைசெய்வதற்கான அனுமதியை தானாகவே வழங்கிடுமாறு செய்கின்றது ஒவ்வொரு விற்பணையாளரும் என்னென்ன பொருட்களை விற்கின்றனர் என இது பட்டியலிடுவதால் இதில் வாடிக்கையாளர் தமக்கு தேவையான பொருட்களை மிகச்சரியான விற்பணையாளரிடமிருந்து பெறுவதற்கும் விலைகளையும் பொருளின் தரத்தையும் ஒப்பீடுசெய்வதற்கும் ஆன வசதியை வழங்கின்றது. இந்த Bagisto எனும் பலவிற்பணையாளர் சந்தையானது தேடுவதற்கு எளிய இணைய முகவரியின் செயலை கொண்டிருப்பதால் விற்பணையாளர்கள் தங்களுடைய தன்விவர பக்கங்களின் விவரங்களையும் உற்பத்தி பொருட்களின் விவரங்களையும் அதற்கான இணைய முகவரிகளையும் தேவையானபோது மாற்றி கொள்வதற்காக இது அனுமதிக்கின்றது கூகுள் போன்ற தேடிபொறிக்கு எளிதில் புரிந்து கொள்ளுமாறு இதனுடைய விதிஅமைந்துள்ளது. இதில் நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களை கவர்ந்திடுமாறு அல்லது விற்பணையாளர்களை ஊக்கு வித்திடுமாறு கூடுதலான வசதிவாய்ப்புகளை கூடுதலிணைப்பாக இதில் சேர்த்துகொள்ளமுடியும் என்ற செய்தியையும் மனதில் கொள்க.

புதன், 22 ஏப்ரல், 2020

சிறிய வியாபார நிறுவனத்தை முன்னேற்றி வளர்ச்சிபாதையில் கொண்டுசெல்வதற்கான வழிமுறைகள்


பொதுவாக சிறுவியாபார நிறுவனங்கள் தங்களுடைய அன்றாட பணிகளை முடிப்பதற்கே சிரமமப்படும்போது தம்முடைய வியாபாரத்தின் வெற்றிக்கான வளர்ச்சிபாதையில் கொண்டுசெல்வதற்காக புதியவழிமுறைகளை செயல்படுத்திடுவதை பற்றி சிந்திக்கவேமுடியாத சூழலில்இவைகளை அறவே தவிர்த்திடுவார்கள் அவ்வாறானவர்கள் இவ்வாறான சூழலில்கூட பின்வரும் படிமுறைகளை பின்பற்றி தங்களுடைய வியாபாரத்தை வெற்றிகரமாக வளர்ச்சிபாதைக்கு கொண்டுசெல்லமுடியும் படிமுறை.1. நம்முடைய நிறுவனத்தில் உற்பத்தியாகும் பொருளைபற்றிஅல்லது வழங்கிடும் சேவையை பற்றி கானொளி காட்சிகளை மிகச்சரியாக போதுமானஅளவு தயார்செய்து அதனை ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூதாய பல்லூடக வலைபின்னலில் வெளியிடச்செய்திடுக அதனோடுகூடவே நம்முடைய நிறுவனத்தைபற்றியும் வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடிஎழும் சந்தேகங்களையும் அதை தீர்வுசெய்வதற்கான வழிமுறைகளைபற்றியும் அதற்கான பதிலும் FAQ வாயிலாக தயார்செய்து அதனையும் வெளியிடச்செய்திடுக அதைவிட உள்ளூர் நிகழ்வுகளில் நம்முடைய நிறுவனமும் LinkedInமூலம் பங்கெடுத்து கொள்ளுமாறு செயல்படச்செய்திடுக மிக முக்கிய மாக ஒருசிலசிறப்பு அறிவிப்புகளை சமூதாயபல்லூடக வலைபின்னலின் வாயிலாக அவ்வப்போது வெளியிடச்செய்திடுக படிமுறை.2. நம்முடைய நிறுவனத்திற்கென தனியாக இணையதளபக்கத்தை உருவாக்கி பராமரித்திடுக தொடர்ந்து மேலே படிமுறை1.இல் கூறியவாறு சமூதாயபல்லூடக வலைபின்னலில் கானொளி காட்சிகளாக வெளியீடு செய்தவைகளை நம்முடைய இணையதளபக்கங்களிலும் வெளிடச்செய்திடுக மிகமுக்கியமாக நிறுவனத்தைபற்றியும் வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடிஎழும் சந்தேகங்களையும் அதை தீர்வுசெய்வதற்கான வழிமுறைகளைபற்றியும் அதற்கான பதிலும் FAQ வாயிலாக தயார்செய்து வெளியிடசெய்திடுக படிமுறை.3. மேலேகூறிய கானொளி காட்சிகளை பொழுதுபோக்குபோன்றோ வழக்கமான பத்தோடு பதினொன்று என்றவாறோ பார்வையாளர் தாண்டிசென்றிடாமல் call-to-action (CTA) எனும் அடுத்த செயலிற்கு அதாவது மேலும்நம்முடைய நிறுவனத்தைபற்றிய விவரங்களை முழுவதுமாக அறிந் தெரிந்து கொள்வதற்காகவென தனியாக மின்புத்தகங்களை பதிவிறக்கம் செய்து படித்தறியுமாறு கொண்டுசெல்க இந்நிலையில் உடனடியாக நம்முடைய உற்பத்தி பொருளை அல்லது சேவையை வாங்கிடுமாறு பார்வையாளர்களிடம் வலியுறுத்தி தொந்திரவுசெய்து அவர்களை வெறுப்படையச் செய்திடக்கூடாது அதற்கு பதிலாக எவ்வாறான வழிமுறையில் இவற்றை எளிதாக கொள்முதல் செய்திடமுடியும் என்ற விவர கானொளி காட்சியை மட்டும் CTA எனும் செயலில் கொண்டுவருவது நன்று படிமுறை.4. அடுத்து என்னதான் இணையதளபக்கத்தை பராமரித்தாலும் பொதுமக்கள் அனைவரும் நம்முடைய இணையபக்கத்தை பார்வையிட வருவார்கள் என்ற உத்திரவாதம்எதுவும் அளிக்கமுடியாது அதனால்அதற்கான தீர்வாக பொதுமக்கள் கைகளில் வைத்துள்ள அனைத்துவகையான செல்லிடத்து பேசிகளிலும் மேலேகூறிய கானொளி காட்சிகளை தகவல்களை காணமுடியுமாறு செய்திடுக மிகமுக்கியமாக இவையனைத்தும் சமூதாய பல்லூடகங்களின் வாயிலாக பொதுமக்களின் கைபேசி களிலும் அல்லது திறன்பேசிகளிலும் சென்றடையுமாறு செய்திடுக படிமுறை.5. இறுதியாக மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களுடனும் நடப்பிலுள்ள வாடிக்கையாளர்களுடனும் நேரடியான கேள்விபதில் ,குழுவிவாதம் ஆகியவற்றின் வாயிலாக தொடர்பு இருந்து கொண்டே இருக்குமாறு பார்த்து கொள்க .

திங்கள், 20 ஏப்ரல், 2020

நிறுமத்தின் அனைத்து இயக்குநர்களும்தகுதிஇழப்பு ஏற்படும் சூழலில் புதியதாகவொரு இயக்குநரை எவ்வாறு நியமிப்பது


எந்தவொரு நிறுமத்திலும் இயக்குநர்களின் குழுவால்மட்டுமே புதியதாக இயக்குநர் ஒருவரை நியமித்திடமுடியும் அதன்பின்னர்அந்நியமனத்தினை பொதுப்பேரவை கூட்டத்தில் பின்னேற்பு செய்து கொள்ளப்படும் என்ற தற்போதையநடைமுறை பின்பற்றப்படுகின்றது இவ்வாறான நிலையில் நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 167 (1) இன்படி பின்வரும்சூழ்நிலைகளில் ஒருநிறுமத்தின் அனைத்து இயக்குநர்களும்தகுதிஇழப்பு ஏற்பட்டு இயக்குநர்களின் குழுவே செயல்படமுடியாதநிலைஏற்படும் அ. நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 164 இல்குறிப்பிடப்பட்டுள்ள சூழ்நிலையில் ஆ.ஒரு ஆண்டில் நடைபெற்ற இயக்குநர்களின் குழுக்கூட்டங்கள்அனைத்திலும் கலந்துகொள்ளாததற்கான அனுமதிபெறாமலும் தொடர்ந்து கலந்துகொள்ளாமலும் இருத்தல் இ. நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 184இன்படி ஆதாயம் தரும் பணிகளை அல்லது ஒப்பந்தங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அந்நிறுவனத்துடன் மேற்கொண்டிருத்தல் ஈ. நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 184இன்படி ஆதாயம் தரும் பணிகள் ஒப்பந்தங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அந்நிறுவனத்துடன் மேற்கொண்டிருப்பதை வெளியிடாது மறைத்துவிடுதல் உ.இயக்குநர்களின் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தால் ஆறுமாதம் அல்லது அதற்கு மேலான சிறைதண்டனை பெற்றிருத்தல் ஊ. நிறுமத்திலோ அல்லது முதன்மைநிறுமத்திலோ அல்லது துனைநிறுமத்திலோ பணியாளராக பணியமர்த்தப்பட்டிருத்தல் இவ்வாறு தகுதியிழப்பு ஏற்படும் இயக்குநர்களின் DINஎனும் பதிவுஎண் ஐந்து ஆண்டுகளுக்கு முடக்கப்பட்டுவிடும் அதனால் அடுத்தஐந்தாண்டிற்கு அவர்எந்தவொரு நிறுமத்திலும் இயக்குநராக செயல்படமுடியாது பொதுவாக எந்தவொரு பதிவுபெற்றதனியார் நிறுமம் எனில் குறைந்தபட்சம் இரண்டு இயக்குநர்கள் பதிவுபெற்ற பொதுநிறுமம் எனில்குறைந்தபட்சம் மூன்றுஇயக்குநர்கள் கண்டிப்பாக இயக்குநர்களின் குழுவில் இருக்கவேண்டும் அவ்வாறுகுறைந்தபட்ச இயக்குநர்கள் இருந்தால் மட்டுமே நிறுமங்கள் தங்களுடைய வியாபார நடவடிக்கையை எளிதாக தொடரமுடியும் தேவையான படிவங்களையும் ஆவணங்களையும் நிறுமங்களின் விவகாரத்துறைஅமைச்சகத்தின்இணையதளவாயில்(MCA Portal) சமர்ப்பிக்கமுடியும் என்ற இக்கட்டான நிலையில் அதாவது அனைத்து இயக்குநர்களும் தகுதியிழப்பின் காரணமாக செயல்படமுடியாத சூழ்நிலைநிலையில் அவ்வாறான நிறுமம் புதியதாக இயக்குநர்களை எவ்வாறு நியமிக்கமுடியும் என்றநிர்கதியானசூழலில் குறைந்தபட்சம் ஒரு இயக்குநரை மட்டும் வழக்கமான வழிமுறையில்லாது பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி நியமனம் செய்து கொள்ள நிறுமங்களின் விவகாரத்துறை (MCA)யானது அனுமதித்துள்ளது நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 167(3)இன்கீழ் நிறுமமானது அனைத்து இயக்குநர்களும் தகுதியிழப்பு ஏற்பட்டு செயல்பட முடியாத நிலைஉருவாகி விட்டதால் தங்களுடைய நிறுவனம் பரிந்துரைக்கும் நபரை ஒரு இயக்குநராக நியமித்திட அனுமதிக்குமாறு குறிப்பிட்டு கோரிக்கை கடிதம் ஒன்றினை அந்நிறுமத்தின் உருவாக்குநர்களின் அல்லது உறுப்பினர்களின் கையொப்பத்துடன்அனுப்பிடவேண்டும் குறிப்பு நபர்ஒருவர் நிறுமத்தின் இயக்குநராக செயல்படுவதற்கு தகுதியிழந்தநிலையில் அவர்அந்நிறுமத்தின் உறுப்பினர் என்ற அடிப்படையில் இந்த கோரிக்கை கடிதத்தில் கையொப்பமிடலாம் நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 167(3)இன்கீழ் நிறுமத்தை உருவாக்குநர்அல்லது உறுப்பினர் ஒப்புகை கையொப்பமிடவேண்டும் தகுதியிழப்பு ஏற்பட்ட அனைத்து இயக்குநர்களும் இவ்வாறு ஒரு இயக்குநரை நியமிப்பதில் தங்களுக்கு ஆட்சேபணை எதுவும் இல்லையெனும்  சான்றிதழ்( NOC) வழங்கவேண்டும் இருமகையொப்பத்துடனும்தேவையான கட்டணம் செலுத்திய சலானுடனும் படிவம் எண்DIR-12 ஐ இணைத்திடவேண்டும் இந்த படிவத்ததுடன் புதிய இயக்குநர் எனில் அவருடைய ஒப்புதல் படிவம் எண் DIR – 2,இந்த புதிய இயக்குநரின் சுட்டிஎண் (DIN) முகவரி சான்று,படிவம் எண் MBP-1 எனும் அறிவிப்பு ஒரே நபர் எத்தனை நிறுமங்களில் இயக்குநராக இருக்கலாம் என்றவிவரங்களை குறிப்பிடும் படிவம் எண் DIR-8,புதிய இயக்கு நருக்கான DIN பதிவுவிவரம் ,புதிய இயக்குநர் ஏற்கனவே இயக்குநராக இருக்கும் நிறுமங்களின் பெயர் பதிவுஎண் (CIN)போன்ற விவரங்கள் இந்த படிவம் எண்DIR-12 உடன் இணைத்திடவேண்டும் நிறுமத்தை உருவாக்குநர்அல்லது உறுப்பினர் என்பதற்கான ஆதாரமாக அவருடைய பங்குசான்றிதழின் நகல் இவ்விவரங்களை சரிபார்த்ததற்கான நிறுமச்செயலரின் சான்றிதழ், இவ்வாறு புதிய இயக்குநரை நியமனம் செய்வதற்காக கூட்டப்பட்ட அசாதாரணபொதுப்பேரவை கூட்டம் அதில்புதிய இயக்குநரை நியமனம் செய்வதற்காக நிறைவேற்றப்பட்ட தீர்மாணம் , கூட்டஅழைப்பு நகல் ,ஆகிய ஆவணங்களுடன் நிறுமங்களின் பதிவாளரிடம் கோரிக்கை கடிதத்தை அனுப்பிவைத்திடவேண்டும். மேலேகூறிய ஆவணங்களின் அச்சிடப்பட்டநகல் அதனோடு இவைகளின் சாப்ட் காப்பியை பதிவுசெய்ய்பட்ட பென்ட்ரைவ் ஆகியவற்றினை மும்பையில் இருக்கும் நிறுமங்களின் பதிவாளரிடம் சமர்ப்பித்திடவேண்டும் சிடி அல்லது டிவிடியை கண்டிப்பாக சமர்ப்பிக்ககூடாது குறிப்பு இந்த நடைமுறையானது தற்போது செயல்பட்டுகொண்டிருக்கும் நிறுமங்களில் நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 164(2)(a)இன்கீழ் தகுதியிழப்பு ஏற்பட்ட இயக்குநர்களை கொண்ட நிறுமங்களுக்குமட்டுமே பொருந்தும் என்ற செய்தியை மனதில் கொள்க

சனி, 11 ஏப்ரல், 2020

விற்பனை அலுவலர்கள் தம்கண்ணோட்டத்தை வித்தியாசமாக பதிவுசெய்திடுக


தங்களுடைய தொழிலகங்களின் உருவாக்கப்பட்ட பொருட்களைஉலகமுழுவதும் உள்ள நாடுகளில் விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளை கண்டறிந்து விற்பனையை பெருக்கி உலகமெல்லாம் ஒரேகுடையின் ஆண்டு வந்த இங்கிலாந்து நாட்டின் முழுகாலணி உற்பத்தி செய்திடும் நிறுவனம் ஒன்று தன்னுடைய விற்பனை அலுவலர்கள் இருவரை ஆப்பிரிக்க நாட்டிற்கு அனுப்பி அங்கு விற்பனை வாய்ப்புகளை ஆராய்ந்து வருமாறு பணித்தது அதனை தொடர்ந்து அவ்விருவரும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்று திரும்பி வந்து இருவரும் தங்களுடைய நிறுவனத்தின் முழுகாலணி விற்னைணை செய்வதற்கான வாய்ப்பிற்கான தங்களுடைய கண்ணோட்டங்களை பின்வருமாறான அறிக்கைகளாக சமர்ப்பித்தனர் முதலாவது அலுவலர் ஆப்பிரிக்கநாடுகளில் வசிக்கும் நபர்கள் யாரும் காலணியே அணிவதில்லை அதனால் அங்கு நம்முடைய நிறுவனத்தின் முழுக்காலணி விற்பனை செய்வதற்கான வாய்ப்பே இல்லை என எதிர்மறையாக அறிக்கை சமர்ப்பித்திருந்தார் இரண்டாவது அலுவலர் ஆப்பிரிக்கநாடுகளில் வசிக்கும் நபர்கள் அனைவரும் காலணிஅணியாமல் வெறுங்கால்களால் நடக்கின்றனர் அதனால்அம் மக்களிடம் தம்முடைய கால்களில் நம்முடைய நிறுவனத்தின் முழுக்காலணிகளை அணிந்து மிகப் பாதுகாப்பாக இருக்குமாறு செய்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் வாயிலாக அங்கு நமது நிறுவனத்தின் முழுக்காலணியை விற்பனை செய்வதற்கான வாய்ப்பு மிகப்பிரகாசமாக இருக்கின்றது என அறிக்கை சமர்ப்பித்திருந்தார் கண்ணால் காணும் காட்சி ஒன்றுதான் ஒருவர் அதை தம்முடைய நிறுவனத்திற்கு சாதகமாகமாற்றி வெற்றிபெறலாம் என்றும் மற்றொருவர் அதையே நிறுவனத்திற்கான வாய்ப்பே இல்லை யென எதிர்மறையாகவும்சமர்ப்பித்தனர் விற்பனை அலுவலர்கள்தாம்கண்டு கொண்ட நிலையில்தம்முடைய கண்ணோட்டத்தை வித்தியாசமாக பதிவுசெய்வதில் நேர்மறையாக கைகொண்டு ஒவ்வொருவரும் தத்தமது நிறுவனத்தை வெற்றிபாதையில் கொண்டு செல்லமுடியும்

சனி, 4 ஏப்ரல், 2020

வி்யாபார வெற்றிக்கதை


பிரட் ஸ்மித்என்பவர் அமெரிக்காவிலுள்ள யேல் பல்கலைக்கழகத்தில் 1965 ஆம் ஆண்டில் இளங்கலை பட்டம் பெற்றார். அவ்வாறான இளங்கலை பட்டப்படிப்பின்போது ஒரு பகுதியாக, அவர் அமெரிக்கநாட்டில் பொருட்களின் போக்குவரத்து வழிவகைகளை ஆய்வு செய்து பொருளியல் கட்டுரைஒன்றினைசமர்ப்பித்தார். அதில் பெருமளவிளான பொருட்களனைத்தும் தரைவழி போக்குவரத்தில் கொண்டுசெல்வதையும் பயனிகள் வான்வழியில் செல்வதையும் கண்டறிந்தார் அதனை தொடர்ந்து பயனிகள் போக்குவரத்திற்கு பயன்படும் விமானம் மூலம் சிறிய, அத்தியாவசிய பொருட்களையும் கொண்டு செல்வதுஒரு சிறந்தசெயலாக இருக்கும் என அவருடைய மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. அதற்காக கடைசி நிமிட ஆவணமாக அதனை சேர்த்துசமர்ப்பித்தார். இருப்பினும், அத்தகைய நிறுவனத்தை எவ்வாறு உண்மையில் நடத்துவது என்பது குறித்த விவரங்களை அதில்அவர் செல்லவில்லை. அதனால் அவருடைய கட்டுரையானது "சி" என்று வரிசைப்படுத்தப்பட்டது. ஆனால் ஸ்மித் அந்த யோசனையை கைவிட்டுவிடாமல் 1971 ஆம் ஆண்டில் அதனை செயற்படுத்திடுவதற்கான ஃபெடரல் எக்ஸ்பிரஸ்என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். ஆனால்அந் நிறுவனம் நிறுவப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள், நலிவுறும் விளிம்பிற்குள் தள்ளப்பட்டிருந்தது. ஏனெனில் உயரும் எரிபொருள் செலவுகளின் காரணமாக மாதமொன்றிற்கு ஒரு மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து நிறுவனத்தின் கையிருப்பில் $ 5000 மட்டுமே இருந்தது.அதாவது அன்றாடம் தேவைப்படும் விமானஎரிபொருளை கொள்முதல் செய்வதற்குகூட போதுமான நிதியில்லாமல் அல்லாடவேண்டிய சூழ்நிலை உருவானது அதனால் ஸ்மித் தன்னுடைய நிறுவனத்திற்காக உள்ளூரில் பல்வேறு நிதிநிறுவனங்களிடமிருந்து நிதியுதவி கோரினார் ஆனால் அவருடைய . கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பொதுவாக இவ்வாறான நிலையில் பெரும்பாலானவர்கள்தம்முடைய நிறுவனத்தை மூடிவிட்டு இந்ததொழிலே நமக்கு வேண்டாம் என விலகிஓடிவிடுவார்கள், . ஆனால் பிரெட் ஸ்மித் அவ்வாறான முடிவெதும் எடுத்திடாமல்.அருகிலிருந்த லாஸ் வேகாஸ் எனும்நகரத்திற்கு பறந்து சென்று அங்கு அறிமுகமானஒருசில நண்பர்களின் நிதிநிறுவனங்களிடமிருந்து சொந்த தனிப்பட்ட நபரின் உத்திரவாதத்தின் அடிப்படையில் தன்னுடைய நிறுவனத்தின் நடைமுறை மூலதனத்திற்கு தேவையான நிதியினை பெறமுயற்சி செய்து வெற்றி பெற்றார் அதனால் மறுநாள் அவருடைய ஃபெடரல் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் ஆச்சரியமாக 32,000 டாலர்களாக உயர்ந்திருந்தது இது ஒரு சில நாட்களுக்கு விமானங்களின் எரிபொருளை கொள்முதல் செய்து விமான இயக்கம் தடைபெறாமல் இருப்பதற்கு போதிய நடைமுறைமூலதன அளவாகும் அதனை தொடர்ந்து . அவருடைய ஃபெடரல் எக்ஸ்பிரஸ் நிறுவனம் குறிப்பிடத்தக்க அளவு வருமானமும் ஈட்டத்தொடங்கியது நாளுக்கு நாள் மென்மேலும் வளர்ந்துகொண்டேவந்துஇன்று 220 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் செயல்படும் ஒரு உலகளாவிய மாபெரும் நிறுவனமாக ஃபெடரல் எக்ஸ்பிரஸானது 45 பில்லியன் அமெரிக்கடாலர் வருடாந்திர வருவாய் ஈட்டிடும் நிறுவனமாக ஆலமரம்போன்று தழைத்தோங்கி வளர்ந்துள்ளது. எந்தவொரு இக்கட்டான நிலையிலும் மனந்தளர்ந்துவிடாமல் முயன்றால் வெற்றி நிச்சயம்

புதன், 1 ஏப்ரல், 2020

தேவைக்கேற்ப அலுவலர்களை நியமித்தல் (Flexi-staffing)


ஓரு நிறுவனத்தில் தணிக்கை பணியை முடிப்பதற்கு பட்டய கணக்கரை நியமிக்கின்றனர். அந்நிறுவனத்தின் தணிக்கை பணி முடிந்து அதற்கான கட்டணத்தை அவருக்கு வழங்கியவுடன் அத்துடன் அவருக்கும் அந்நிறுவனத்திற்கும் உள்ள உறவு முடிந்துவிடுகிறது. அவ்வாறே ஒரு நிறுவனத்தின் சட்டப்பிரச்சனைகளை சமாளிக்க முழுநேர ஊழியரை நியமிப்பதை விட தேவைப்படும்போது மட்டும் சட்ட வல்லுநா¢களின் ஆலோசனையை அதற்கான கட்டணத்தை வழங்கி பயன்படுத்திகொள்வது அந்நிறுவனத்திற்கு செலவை குறைக்க கூடிய ஒரு சிறந்த வழிமுறையாகும். பெரிய மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவா¢களை முழு நேர பணியாளராக நியமிப்பதற்கு பதிலாக தேவைக்கேற்ப இவர்களை நியமனம் செய்து அந்நிறுவனத்தின்¢ நிரந்தர செலவை குறைத்துகொள்கின்றன. இதனால் இவ்வாறான சிறப்பு மருத்துவா¢கள்¢¢ சுதந்திரமாக தம்முடைய பணியை முடித்து அதற்கான கட்டணத்தை பெற்றுக் கொண்டு அடுத்தவேறு பல பணிகளை செய்ய முடிகிறது. ஒரு மருந்து உற்பத்தி நிறுவனம் குறிப்பிட்ட ஆய்வு பணிக்காக நிரந்தர பணியாளர்களை நியமித்துள்ளது அந்த ஆய்வுப்பணி முடிவடைந்தவுடன் ஆய்வில் ஈடுபட்ட அலுவலர்களை வேறு பணிக்கு மாறுதல் செய்யும்போது அந் நிறுவனம் நிறைய சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. இ¢வ்வாறு அந்நிறுவனம் ஆராய்ச்சி வளா¢ச்சி பிரிவு என்று தனியாக ஏற்படுத்துவதை விட இதற்காக ஏற்கனவே செயல்படும் நிறுவனத்திடமிருந்து தம்முடைய தேவைக்காக அதற்கான கட்டணத்தை மட்டும் வழங்கி சேவையை பெற்று கொள்வது சாலச் சிறந்தது. இவ்வாறான செயல்களைத்தான் தேவைக்கேற்ப அலுவலா¢களை நியமித்தல் Flexi-staffing என்று கூறுகிறோம். இது கடந்த பத்தாண்டுகளாக மிக அதிக அளவில் எல்லாத்துறையிலும் பரவி வருகிறது. இப்போது ஒரு லட்சம் அளவான இந்த பணி வரும் நான்கைந்து ஆண்டுகளில் பத்து லட்சம் அளவிற்கு உயர வாய்ப்புள்ளது. இந்த தேவைக்கேற்ப அலுவலா¢களை நியமித்தலி Flexi staffingனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன? 1. குறிப்பிட்ட ஒரு தொழில்நுட்ப பணிக்காக ஒருவரை நியமிக்கும்போது அந்த பணி முடிந்து அதற்கான கட்டணத்தை வழங்கியவுடன் அவருடன் உள்ள உறவு அத்தோடு முடிந்துவிடுகிறது. இவருக்கான சம்பளம் மற்றும் இதர செலவுகள் வாழ்நாள் முழுவதும் தொடராது அதனால் நிறுவனத்திற்கான நிதிச்சுமை பெருமளவு குறைக்கப்படுகிறது. 2. குறிப்பிட்ட வகை தொழில்நுட்ப வல்லுனா¢ தம்முடைய துறையின் பணியில் மட்டும் ஈடுபடுவதால் தம்துறையில் மேலும் பல புதிய புதிய உத்திகளை நடைமுறைப்படுத்தி மிக சிறப்பாக பணியாற்ற முடிகிறது. 3. இந்த தனிச்சிறப்பு தொழில்நுட்ப வல்லுனா¢ தன்னுடைய பணியில் யாருடைய தலையீடும்/இடையூறுமின்றி சுதந்திரமாக பணியாற்ற முடிகின்றது. 4. இந்தவகை சிறப்பு தொழில்நுட்ப வல்லுனரின் புதிய புதிய உத்திகளும், வழிமுறைகளும் குறைந்த செலவில் விரைவில் முடித்திடும் வகையிலான வசதிகளும், வாய்ப்புகளும் சிறிய நிறுவனங்களுக்கு கூட எளிதில் கிடைக்கின்றன. 5. இந்த வழிமுறையில் ஒரு நிறுவனத்தின் பணிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல வேண்டும். குறிப்பிட்ட நேரம் வரையில் பணியாற்ற வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. பணியின் தன்மையை மட்டும் அறிந்து கொண்டு எப்போது விருப்பமோ அப்போது நிறுவனத்தின் பணியைசெய்து முடித்து இதற்கான கட்டணத்தை பெற்றுக் கொள்ளலாம். உதாரணமாக பண்டிகை நாட்களின் அதிக தேவையை முன்னிட்டு நிறுவனங்கள்¢¢ தங்களின் பொருளை அதிக அளவு உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அப்போது நிரந்தர தொழிலாளா¢களுக்கு மிகை ஊதியம் வழங்கி இரண்டு அல்லது மூன்று காலப்பகுதியாக பணியினைசெய்யும்போதும் முடியாத சமயத்தில் தேவைக்கேற்ப அலுவலா¢களை நியமித்தல் அடிப்படையில் கூடுதலான தொழிலாளா¢களை பயன்படுத்தி தம்முடைய பணியை முடித்து கொளகின்றன. இது ஒரு கூடுதலான தேவையை நிறைவு செய்வதற்கேற்ப நிறுவனத்தின் உற்பத்தியை உயா¢த்தும் வழிமுறையாகும். மேலும் அந்நிறுவனத்தின் உற்பத்தி செலவையும் இதன் மூலம் குறைக்கவும் முடிகிறது. இவ்வாறே Business processing outsourcing என்பது மிக முக்கியமாக தகவல் தொழில்நுட்ப துறையில் உள்ள ஒரு கருத்தமைவாகும். வெளிநாட்டு நிறுவனங்கள் தமக்கு தேவையான அனைத்து பணிகளையும் முழுநேர அலுவலா¢களின் நியமனத்திற்கு பதிலாக இந்த Flexi staffing அடிப்படையில் குறைந்த செலவில் வெளிநாடுகளில்¢ உறையும் மக்களின் மூலம் தம்முடைய பணியை முடித்து கொள்கின்றன. ஒரு நிறுவனத்தில் முழுநேர ஊழியரை நியமிப்பதா? தேவைக்கேற்ப வெளியில் உள்ள அலுவலா¢களின் மூலம் பணியை முடிப்பதா? எது பயனுள்ளது? சிறு நிறுவனமாக இருந்தால் தம்முடைய நிறுவனத்திற்கு தேவையான மென்பொருட்களை கட்டணத்துடன் வெளியிலிருந்து பெற்று பயன்படுத்துவது நல்லது. மிகப்பெரிய நிறுவனமெனில்¢ அதையே முழுநேர ஊழியரின் துணையுடன் அந்த பணியை முடித்து கொள்வதுதான் செலவு குறைந்த செயலாகும்., அதனால் இதற்கான இறுதி முடிவு என்பது அந்தந்த நிறுவனத்தின் நிலை, தேவை ஆகியவைபொறுத்து மாறுபடும், இந்த Flexi-staffing ஆனது சிறப்பு வகை செயல்திறமையை மக்களிடம்ஊக்குவிக்கிறது, வளா¢க்கிறது. மிக முக்கியமாக மக்களை கிராமப்புறத்திலிருந்து நகரத்தை நோக்கி நகருவதை தடுப்பதற்கு பயன்படு¢கின்றது. எப்படி? கிராமப்பகுதிகளில் விவசாயம் சார்ந்த தொழில்களான விதைவிதைத்தல்,நாற்று நடுதல் ,களை பறித்தல், அறுவடை செய்தல் போன்ற பல்வேறு பணிகளும் இந்த தேவைக்கேற்ப பணியாளா¢களை தற்காலிகமாக நியமனம் செய்தல் அடிப்படையில் தான் செயல்படுத்தப்படுகிறது, இவ்வாறே தொழில்துறையிலுள்ள நுகா¢வோ£¢ பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று தம்முடைய பொருட்களை நாடு முழுவதும் விற்பனை செய்வதற்காக முழு நேர விற்பனையாளா¢களை நியமனம் செய்வதற்கு பதிலாக அந்தந்த ஊ£¢களிலும் குறிப்பாக கிராம பகுதியில் தகுதியும் திறமையும் உள்ளவா¢களை தனித்திறன்கிளை (Franchise) அமைத்திடும் அடிப்படையில் நியமித்து எந்த அளவிற்கு விற்பனை செய்கிறார்களோ அந்த அளவிற்கு கழிவுத்தொகை ஈட்டலாம் என ஊக்கப்படுத்தியது. இதனடிப்படையில்¢ கிராமவாசி ஒருவரால்¢ தம்முடைய குடும்ப உறுப்பினா¢களின் அனைவரின் உதவியுடன் தம்முடைய ஊரிலேயே இந்த பொருளை விற்று அதற்கேற்ற வருவாயை ஈட்ட முடியும். நிறுவனங்களின் விற்பனை பணிக்கு மட்டுமன்று உற்பத்தி பணிக்கு கூட இவ்வாறு Flexi-staffing வழிமுறையை பின்பற்றலாம். ஒரு நிறுவனம் கிராம பகுதிக்கு தேவையான பொருட்களை குறிப்பிட்ட ஓரே இடத்திலேயே உற்பத்தி செய்யாமல் நாடுமுழுவதும் உள்ள அந்தந்த கிராமங்களில் வாழும் இளைஞா¢களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் பயிற்சி அளித்து உற்பத்தி செய்வதற்கு தேவையான மூலப்பொருட்களை வழங்கி உற்பத்தி செய்ய தூண்டும்படிச்செய்கிறது எனக் கொள்வோம். இவர்கள் பிழைப்பைத்தேடி நகரத்திற்கு செல்லாமல் தம்முடைய கிராமத்தி¢லேயே இந்தப் பொருட்களை உற்பத்தி செய்து தாம் வாழ்வதற்கு தேவையான வருவாயை ஈட்ட முடியும். அதனால் அந்நிறுவனத்திற்கும்¢ பொருள் உற்பத்தியின் செலவு குறையும்¢. இதே அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப பணிகளையும் கிராமப்புறத்திற்கு கொண்டு சென்றால் கிராமமக்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.இந்த Flexi-staffing என்பதன் மூலம் மக்கள் மற்றும் நிறுவனம் இணைந்த கிராமபொருளாதாரத்தை உயா¢த்த கூடிய ஒரு வெற்றி கூட்டணியாக சிறந்து மேலோங்¢க முடியும். அரசு இதற்கு தேவையான அடிப்படை கட்டமைவான சாலை, மின்சாரம், தொலைத்தொடா¢பு போன்றவசதிகளை மட்டும் செய்து கொடுத்தால் போதும். கிராமமக்களுக்கும் அதிக அளவு வேலை வாய்ப்பை வழங்க கூடிய வாழ்வை மேம்படுத்த கூடிய செயலாக இந்த தேவைக்கேற்ப அலுவலா¢களை நியமித்தல் (Flexi-staffing) அமையும்¢.

செவ்வாய், 31 மார்ச், 2020

இயக்குநர்களிடமிருந்து நிறுமம் கடன்பெறுவது


பதிவுபெற்ற பெரும்பாலான இந்திய நிறுமங்கள் தம்முடைய இயக்குனர்களுக்குக் கொடுக்கப்பட்ட கடன்களைப் பற்றி மட்டுமே இதுவரையில் ஏராளமான வகையில் சச்சரவுகளும் வாத விவாதங்களும் கலந்துரையாடல்களும் இருந்துவந்துள்ளன, ஆனால் தாம்பதவி வகிக்கும் நிறுமங்களுக்கே கடன்களை வழங்கும் இயக்குநர்களைப் பற்றிய செய்திகள் இப்போதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாக வந்துகொண்டுள்ளன , ஆயினும் இவ்வாறு நிறுமங்களுக்கு இயக்குநர்கள் கடன்வழங்குவதுகுறித்த சட்டப்பூர்வ இணக்கங்கள் மிகுதியாக உள்ளன. அதனால் அதன்வாயிலாக எழும் குழப்பத்தைத் தவிர்ப்பதற்கு, சமீபத்திய திருத்தப்பட்ட நிறுமங்களின் சட்டம்2013 இன் படி இவ்வாறான சிக்கலை தீர்வு செய்வது பற்றி தற்போது விவாதிப்போம். இயக்குனர்களிடமிருந்து நிறுமங்களானவை இட்டுவைப்புத்தொகை , கடன் தொகை ஆகிய இருவழிகளில் ஏதேனும் ஒருவகையில் தமக்குதேவையான தொகையை பெறலாம் அதனால் இவைகளின் வாயிலாக பெறப்பட்ட தொகையை அதாவது இயக்குநர்களிடமிருந்து இவ்வாறு பெறப்பட்ட தொகையானது கடன்தொகையா அல்லது இட்டுவைப்பு தொகையா என எவ்வாறு வகைப்படுத்துவது என்பதுதான் தற்போதைய சிக்கலாகும் .இங்கு நாம் இயக்குநர்களிட- மிருந்து பெறப்படும் கடன்பற்றிமட்டும் இப்போது காண்போம் இயக்குநர்களிடமிருந்து பெறப்படும் இட்டுவைப்புத்தொகைபற்றி பின்னர் வேறொரு சமயத்தில் காண்போம் பொதுவாக அவ்வாறு இயக்குந்களிடமிருந்து பெறப்பட்ட தொகையானது ஒரு இட்டுவைப்பு தொகையென எனக் கருதப்பட்டால், அது நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 73 (2) அல்லது பிரிவு 76 இன் விதிமுறைகளுடன் இணங்குவதோடு, படிக்கப்பட்ட நிறுமங்களின் (வைப்புத்தொகைகளை ஏற்றுக்கொள்ளும்) விதிமுறைகள் 2014 உடன் ஒத்ததாக இருக்கவேண்டும் . அ்துதவிர இயக்குனர்களிடமிருந்து பெறப்படும் கடன்களை பொதுவாக இயக்குனரின் சொந்த நிதியிலிருந்து பெறப்பட்ட தொகை என்றும் , இயக்குநர்கள் தாம் பெற்ற கடன் நிதியிலிலிருந்து பெறப்பட்ட தொகைஎன்றும் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தலாம் இயக்குனர்கள் தம்முடையசொந்த நிதிகளிலிருந்து பெறப்பட்ட தொகை, நிறுமங்களுக்கு அவ்வாறு வழங்குபவர் ஒரு பங்குதாரரா இல்லையா என்பதன்அடிப்படையில் அவை கடன்களாகக் கருதப்படுகிறது ஆயினும் இந்நிலையில் நிறுமங்களின் சட்டம் பிரிவு 73 (2) அல்லது பிரிவு 76 உடன் இணக்கமாக இருக்கத் தேவையில்லை. எனினும், இந்த நிவாரணத்தைப் பெற இயக்குனர்கள் பணம் கொடுக்கும் நேரத்தில் அந்நிறுமமானது, மற்றவர்களிடமிருந்து கடன்கள் அல்லது வைப்புத்தொகைகளை பெறுதல் அல்லது ஏற்றுக் கொள்வதற்காக அறிவிப்புஏதனும் செய்து அதன் மூலம் சேகரிக்கப்பட்ட நிதிகளில் அடிப்படையில் இந்த தொகை பெறப்படவில்லை என உறுதிபடுத்தி கொள்ளவேண்டும் .ஆயினும், நிறுமமானது நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 180 (கீழே விவாதிக்கப்படுகின்றது)இன்கீழ் பொருந்துமாறு கடன் பெறுவது பற்றிய தகவல்கள் இயக்குனரின் அறிக்கை மற்றும் நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கைகள் ஆகியவற்றில் தக்க குறிப்புகளுடன் வெளிப்படுத்தப்பட வேண்டும்.. இயக்குனர் கடன் வாங்கிய தொகைகளில் பெறப்பட்ட தொகை இதன்கீழ்இயக்குனர் ஒரு பங்குதாரர் அல்லாத சூழ்நிலை, இயக்குநர் ஒரு பங்குதாரராக உள்ள சூழ்நிலை ஆகிய இருவகைகளில் விவாதிப்போம் இயக்குனர் ஒரு பங்குதாரர் அல்லாத சூழ்நிலையில், அவர்களிடமிருந்து பெறப்பட்ட தொகையானது நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 76 ன் விதிமுறைகளுடனும், படிக்கப்பட்ட நிறுமங்களின் (வைப்புகளை ஏற்றுக்கொள்ளும்) விதிமுறைகள் 2014 உடனும்கவருகின்றன. அத்தகைய ஒருநிலையில் நிகர சொத்துமதிப்பு ரூ. 100 கோடி அல்லது அந்நிறுமத்தின் விற்பனைவருமானம் ரூ. 500 கோடி ஆக உள்ள ஒரு பொது நிறுமத்தால் மட்டுமே அவ்வாறான இட்டுவைப்புத்தொகையை பெறமுடியும் (அதாவது, தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமங்கள் மற்றும் தகுதியற்ற பொது நிறுமங்கள் ஆகியவற்றின் இயக்குநர்கள் தாம் கடன்வாங்கிய நிதியிலிருந்து அவர்கள் பதவிவகிக்கும் நிறுமங்களானவை இவ்வாறான கடன்களை / இட்டுவைப்புகளைப் பெற முடியாது). நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 76 இன்படி ஒவ்வொரு வருடமும் கடன் வழங்குவதற்கான தகுதி மதிப்பீட்டை(credit rating ) பெறவும், வைப்புத் தொகையாளர்களுக்கு ஆதரவாக வைப்புத் தொகைக்கு குறையாமல் அந்நிறுமங்களின் சொத்துக்களைப் பொறுப்பேற்பதற்காக பதிவாளரிடம் அந்த சொத்துகளின்மீது பொறுப்பொன்றினை உருவாக்கி (create a charge)பதிவு செய்திட வேண்டும். இது நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 180 மேலும் ஈர்ப்பதால் இது குறித்து தனியாக கீழே விவாதிக்கப்படுகின்றது. இயக்குநர் ஒரு பங்குதாரர் ஆவார் எனும்சூழ்நிலையில் , இயக்குநர்களிடமிருந்து பெறப்பட்ட தொகைகள் இட்டு வைப்புகளாக கருதப்படுகின்றன, ஆயினும், அவை நிறுமங்கள் தம்முடைய உறுப்பினர்களிட- மிருந்து பெறப்பட்ட இட்டு வைப்பு தொகைகளாக கருதப்படுகின்றன, மேலும் இந்நடவடிக்கைகளானவை நிறுமங்களின் (இட்டுவைப்புகளை ஏற்றுக்கொள்ளுதல்) விதிமுறைகளுடன் படிக்கப்படும் நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 73 (2) வின் விதிகளை ஈர்க்கின்றன. மேலும் இந்த நடவடிக்கையும் நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 180 மேலும் ஈர்ப்பதால் இதுகுறித்தும் தனியாக கீழே விவாதிக்கப்படுகின்றது. நிறுமங்களின் சட்டம் 2013பிரிவு 180, இதன்படி ஒரு நிறுமத்திற்கு தம்முடைய இயக்குநர்களிட- மிருந்து இவ்வாறு கடன்பெறுவதற்காக ஒப்புதல் அளிப்பதற்குமுன் அதற்காக அந்நிறுமத்தின் பங்குதாரர்களின் பொதுப்பேரவை கூட்டத்தில் ஒரு சிறப்புத் தீர்மானத்தை நிறைவேற்றிஇருக்கவேண்டும் (அவ்வாறான சிறப்பு தீர்மானமானது படிவம் MGT-14 இன் கீழ் நிறுமங்களின் பதிவாளருக்கு சமர்ப்பித்திருக்க வேண்டும்.), வழக்கமான வணிக நடவடிக்கைக்காக ஏற்கனவே வங்கியாளர்களிடமிருந்து பெறப்பட்ட தற்காலிக கடன்கள் மட்டுமல்லாமல், நிறுமத்தின் பெறப்பட்ட பங்கு மூலதனம்(paid-up share capital), சுதந்திர ஒதுக்கீடுகள் (free reserves) மற்றும் பத்திரங்களின் பிரீமியம்( securities premium) ஆகியவற்றின் மொத்த மதிப்பைவிட கூடுதலாக கடன்பெறுவதற்காக இந்த சிறப்புதீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கவேண்டும் இருப்பினும் 05.06.2015 தேதியிட்ட நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 180 இற்கான அறிவிப்பு, தனியார் நிறுமங்களுக்கு பொருந்தாது. எனவே, தனியார் நிறுவமங்கள், பிரிவு 180 ன் கீழ் ஒரு சிறப்புத் தீர்மானத்தை மட்டும் நிறைவேற்றுவதோடு மட்டுமல்லாமல், தகுதியுள்ள இடங்களில், வைப்புத் தொகையை வாங்கவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ முடியும். இருப்பினும், அனைத்து பொது நிறுமங்களும் நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 180 உடன் இணங்க சிறப்புத்தீர்மானத்தின்வாயிலாக மட்டுமே இயக்குநர்களிடமிருந்த கடன்தொகையைபெறமுடியும்.

வியாழன், 26 மார்ச், 2020

கூட்டாண்மை நிறுவனத்தை தனியார் நிறுமமாக மாற்றியமைப்பதற்கான வழிமுறைகள்


ஒரு கூட்டாண்மை நிறுவனத்தை தனியார் நிறுமமாக மாற்றியமைப்பதால் பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமங்களின் பல்வேறு வசதி வாய்ப்புகள் கிடைப்பதற்கு ஏதுவாகின்றன அவ்வாறு மாற்றி யமைப்பதற்கான வழிமுறைகள் பின்வருமாறு இது தொடர்பாக நிறுமங்கள் சட்டம் 2013 பிரிவு 366 முதல் 374 வரையிலும் மேலும் நிறுவனங்கள் (பதிவுசெய்யப்பட்ட அங்கீகாரம் பெற்ற) விதிகள், 2014. ஆகியவை நமக்கு வழிகாட்டுகின்றன இதற்காக முதலில் கூட்டாண்மை நிறுவனத்தின் அனைத்து சொத்துக்களும் பொறுப்புகளும் சேர்ந்த வியாபாரத்தை தனியார் நிறுமமாக மாற்றிமைப்பதற்கான செயல்படுத்திடும் ஒப்பந்தத்தை தயாரித்திடவேணடும். குறிப்பு : இவ்வாறு மாற்றியமைப்பதற்கான விதிகள் கூட்டாண்மை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா வென உறுதிபடுத்திகொள்க. இவ்வாறு மாற்றிமைப்பதற்கான அடிப்படைதேவைகள்: அவ்வாறு விரும்பும் கூட்டாண்மை நிறுவனமானது நிறுமங்களின் பதிவாளரிடம்(Registrar of Ministry of Corporate Affairs ) பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும், மேலும் அந்நிறுவனத்தில் குறைந்தபட்சம் 2 கூட்டாளிகளாகவாது தற்போது இருக்கவேண்டும் , அதனோடு தேவைப்பட்டால் இவ்வாறு மாற்றியமைப்பதற்காக கூட்டாண்மை ஒப்பந்தத்தில்போதுமான திருத்தம்செய்து மாற்றியமைப்பதற்கான விதிமுறைகளை சேர்த்து கொள்ளவேண்டும், அதுமட்டுமல்லாது கூட்டாண்மை நிறுவனத்தின் அனைத்து கூட்டாளிகளும் புதிய தனியார் நிறமத்தில் பங்குதாரர்களாக மாறும் நாளில் இவர்கள் ஏற்கனவே வைத்துள்ள நிறுவனத்தின் புத்தகங்களில் இருக்கும்மூலதன கணக்குகளின் அதே விகிதத்தில் பங்குகளாக மாற்றப்படும். அதைவிடமுக்கியமாக இவ்வாறு மாற்றம் செய்வதற்காக கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகளின் பொதுக்குழு கூட்டத்தை அழைத்து அக்கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்களின் அனுமதி பெற்றிருக்கவேண்டும். இவ்வாறு மாற்றிமயைப்பதற்கான படிமுறைகள் பின்வருமாறு படிமுறை 1.இவ்வாறு மாற்றம் செய்வதற்காக கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகளின் பொதுக்குழு கூட்டத்தை அழைத்து அக்கூட்டத்தில் பின்வரும் செயல்களுக்கான தீர்மானத்தை நிறைவேற்றிடவேண்டும் செயல்.1.இவ்வாறு கூட்டாண்மை நிறுவனத்தை தனியார் நிறுமமாகமாற்றம்செய்து பதிவு செய்வதற்கு தேவையான அனைத்து ஒப்பந்தங்கள், ஆவணங்கள் ஆகியவற்றை கையாளுவதற்கான அதிகாரத்தை ஒன்று அல்லது ஒன்றிற்குமேற்பட்ட கூட்டாளிகளுக்கு வழங்கப்படுதல் செயல்.2. இந்த கூட்டாண்மைநிறுவனமாது பதிவில்லாததாக இருந்தால் முதலில் நிறுமங்களின் பதிவாளரிடம் கூட்டாண்மை நிறுவனமாக பதிவுசெய்தல் செயல்.3.கூட்டாண்மை நிறுவனத்திலுள்ளஅனைத்துகூட்டாளிகளின் மொத்த மூலதனத்தை சிறுசிறுபங்குகளாக பிரித்தல் செயல்.4 இவ்வாறு தனியார் நிறுமமாக உருமாற்றுவதற்கான தனியாக தீர்மானம்ஒன்று நிறைவேற்றப்பட்டு அதன்படி ஒவ்வொரு கூட்டாளியும் இதனை ஏற்றுகொள்வதான ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுதல் செயல்.5இதனை கூட்டான்மை நிறுவனத்தை தனியார் நிறுமமாக மாற்றியமைப்பதை ஏற்றுகொள்வதற்கான ஒப்பந்த பத்திரம் தயார்செய்தல் படிஂமுறை 2. இவ்வாறு தனியார் நிறுமமாக மாற்றியமைப்பதை குறித்த அறிவிப்பினை நாளிதழ்களில் விளம்பரமாக கொடுப்பதற்கான விளம்பரப்படிவம் URC 2 ஐ ஒப்புதல் வழங்கவேண்டும் படிமுறை3. இவ்வாறு தனியார் நிறுமமாக மாற்றியமைப்பதற்கு முந்தைய மூன்றுஆண்டுகளில்அந்த கூட்டான்மைநிறுவனத்தின் சொத்துகளின் மதிப்பை மாற்றியமைத்திடவில்லை என உறுதி படுத்தி கொள்ளவேண்டும் படிமுறை4. இவ்வாறு தனியார் நிறுமமாக மாற்றியமைப்பதை பதிவுசெய்வதற்காக அங்கீகாரம் பெற்றவருக்குDSC எனசு ருக்கமாக அழைக்கப்படு இருமகையொப்ப சான்றிதழை (Digital Signature Certificate) பெற்றிடவேண்டும் படிமுறை5. புதிய தனியார் நிறுமத்தின் இயக்குநர்களின் குழுவில் இடம்பெறப்போகும் இயக்குநர்கள் ஒவ்வொருவருக்கும் PAN, AADHAAR , மார்பளவு உருவப்படம் ஆகியவிவரங்களுடன் பதிவுசெய்து அவர்களுக்கான DIN என சுருக்கமாக அழைக்கப்படும் இயக்குநர்களின் சுட்டிஎண்ணை பெறுவதற்காக படிவம் DIR – 3 இல் ஒவ்வொருவருக்கும் பெறப்படவேண்டும் படிமுறை6. புதிய தனியார் நிறுமத்திற்கு RUN என சுருக்கமாக அழைக்கப்படும் ஒருங்குபெயர்ஒதுக்கீட்டின் (Reserve Unique Name) அடிப்படையில் பெயரை பெறுவதற்காக விண்ணப்பிக்கவேண்டும் படிமுறை7. படிவம் URC -2 இல் ஒரு ஆங்கிலமொழி ,ஒரு வட்டார மொழி வெளியிடப்பெறும் இரு நாளிதழ்களில் இந்தகூட்டான்மை நிறுவனத்தை தனியார் நிறுமமாக மாற்றியமைப்பதால் பாதிப்பு எவருக்கேனும் இருந்தால் அதனை 21 நாளில் அறிவிக்கவேண்டும் என்ற விளம்பரப்படுத்திடவேண்டும் படிமுறை8. நிறுமங்கள் சட்டம் 4 இன்படி பதிவுசெய்வதற்கான பெயர் தயாராக இருக்கின்றது எனில் படிவம் URC-1 உடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் தகவல்களையும் நிறுமங்களின் பதிவாளருக்கு சமர்ப்பிக்கவேண்டும் படிமுறை 9.மின் –படிவம் INC – 7 இல் புதிய தனியார் நிறுமத்தின் நியமிக்கப்பட்டுள்ள இயக்குநர்கள் பங்குதாரர்கள் ஆகியோர்பற்றிய விவரங்களை சமர்ப்பிக்கவேண்டும் படிமுறை 10. அதனை தொடர்ந்துபடிமுறை 9.இல்குறிப்பிடப்பட்டுள்ள மின் - படிவம் INC – 7 இன் பின்னினைப்பாகமுக்கியமேலாண்மை பணியாளர்களை பற்றிய விவரங்களுக்கான மின் -படிவம் INC -8 ஐ சமர்ப்பிக்கவேண்டும் படிமுறை 11.அவ்வாறே படிமுறை 9.இல்குறிப்பிடப்பட்டுள்ள மின்– படிவம் INC – 7 இன் மற்றொரு பின்னினைப்பாக பங்குதாரர்களின் உறுதிமொழிக்கான மின் -படிவம் INC -9ஐ சமர்ப்பிக்கவேண்டும் படிமுறை12. தொடர்ந்து மின் -படிவம் DIR -12 இல் புதிய தனியார் நிறுமத்தில் யார்யார் இயக்குநர்களாக நியமிக்கப்படவுள்ளனர் எனபுதிய தனியார் நிறுமத்தின் இயக்குநர்களின் நியமனங்களை பற்றிய விவரங்களை சமர்ப்பிக்கவேண்டும் படிமுறை 13.அதனை தொடர்ந்து இறுதியாக படிவம் INC – 22 இன் படி நிறுமம் உருவாக்கப்பட்ட 30 நாட்களுக்குள் அந்நிறுமத்திற்கான பதிவுஅலுவலகத்தை சரிபார்த்திடுவதற்கான அந்த புதிய தனியார் நிறுமத்தின் பதிவு அலுவலக முகவரியை குறிப்பிட்டு சமர்ப்பிக்கவேண்டும் மேலும் இவ்வாறான படிமுறைகளுடன் படிவம் SPICE-32, e-MOA ,e-AOA ஆகியவற்றையும் சேர்த்து சமர்ப்பிக்கவேண்டும் இவ்வாறு மேலேகூறியவாறான 13.படிமுறைகளை மிகச்சரியாக பின்பற்றினால் அந் தகூட்டான்மை நிறுவனமானது புதிய தனியார் நிறுமமாக மாற்றம்செய்து பதிவு செய்யப்பட்டு அதற்கான பதிவுசான்றிதழ் (Certificate of Incorporation (COI))நிறுமங்களின் பதிவாளரால் வழங்கப்படும்

சனி, 21 மார்ச், 2020

புதிய தொழிலக கட்டமைப்பு


ஒரு புதிய தொழிலை துவங்கிடும்போது அந்த தொழிலிற்கான நிறுவன கட்டமைப்பை வடிவமைப்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இந்த நிறுவனத்தின் முதலீடு , உற்பத்தி அளவு, மேற்கொள்ளபோகும் தொழில் , குறிக்கோள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த கட்டமைப்பானது தீர்மானிக்கப்பட வேண்டும். தகவல்தொடர்பினையும் இதற்காக கூடுதலாக கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறான நிறுவனகட்டமைப்பின் பல மட்டங்களில் உள்ள மேலாளர்கள் அதிக அளவில் தங்களுடைய மேலதிகாரஅமைப்பின் ஒப்புதலுக்காக காத்தி ருக்கவேண்டும். அதனால் மிகச்சரியான நேரத்தில் மிகச்சரியான முடிவை எடுத்து செயல்படுத்த முடியாமல் நிறுவனம் தள்ளாடும் நிலைக்குதள்ளப்படுகின்றது அதற்கு பதிலாக நன்கு வடிவமைக்கப்பட்ட நிறுவன கட்டமைப்புகளுடன் இருந்தால் சரியான தகவல் தொடர்புடன் விரைவான, சரியான முடிவுகளை செயல்படுத்தி நிறுவனம் நன்கு வெற்றிகரமாக செயலபடுமாறு அமைந்திருக்கும். நிறுவனத்தின் கட்டமைப்புகள் பொதுவான வடிவங்கள்பின்வருமாறு. செயல்பாட்டு கட்டமைப்பு தற்போது நடைமுறையில் பெரும்பாலான வியாபார நிறுவனங்களில் இந்த கட்டமைப்பே பின்பற்றபடுகின்றது. இந்த கட்டமைப்பின் மேல்மட்டத்தில் நிர்வாக இயக்குனரும் அவருக்கும் கீழ் இடைநிலையில் - மனித வளநிருவாகத்துறை, சந்தைப்படுத்தும்துறை, கணக்கியல்துறை பொறியியல் துறை உற்பத்தி துறை போன்ற வாறு குறிப்பிட்ட செயலிற்கேற்ப நிறுவனங்களின் கட்டமைப்பு பிரிக்கப்பட்டு அந்ததுறையும் ஒவ்வொரு தலைதுறைத்தலைவர்களால் நிருவகிக்குமாறும் இவையனத்திற்கும் சேர்ந்து நிர்வாக இயக்குநரும் இருக்குமாறு கட்டமைக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட துறைத்தலைவர்கள் இல்லையெனில் அந்த குறிப்பிட்ட துறைசரியாக இயங்காது என்பதுதான் இந்த கட்டமைப்பின் மிகப்பெரியகுறைபாடாகும் தயாரிப்பு கட்டமைப்பு இதன் மேல்மட்டத்தில் நிருவாக இயக்குநரும் அவரின்கீழ் பல்வேறு தயாரிப்புகள் தனித்தனியாக பிரிக்கப்படுகின்றன ஒவ்வொரு உற்பத்திக்கும் ஒவ்வொரு தலைவர் இருந்துகொண்டு அதாவது , உணவு தயாரிப்பு நிறுவனம், குளிர்பானங்கள், சிற்றுண்டி, பால் பொருட்கள் என்றவாரு ஒரேநிறுவனமானது உற்பத்தி கேற்ப தனித்தனியாக பிரிக்கப்பட்டு நிறுவனம் செயல்படும் இவை ஒன்றுக்கு மற்றொன்று நேரடியாக சார்ந்து இருக்காது என்பதால் குறிப்பிட்ட உற்பத்தி தலைவர் இல்லையெனில் மிகுதி உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று நிறுவனத்தின் இயக்கம் தடைபெறாமல் இருக்கும் வாடிக்கையாளர் கட்டமைப்பு உடல்நல பராமரிப்பு போன்ற சேவைகளை ஒரு நிறுவனம் வழங்குகிறது என்றால்,இதில் உள்ள பல்வேறு பிரிவுகளில் ஒவ்வொரு குறிப்பிட்ட பிரிவிலும் ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவைசெய்வதற்காக தனித்தனி குழுவாக பிரிக்கப்படுகின்றன - உதாரணமாக, உள்நோயாளிகள், வெளிநோயாளிகள், இலவச மருத்துவ நோயாளிகள் எனபிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியாக ஒரு மேலாளர் எனறவாறு இவர்களனைவரும் நேரடியாக அந்த மருத்துவமனையின் தலைமைநிருவாகிக்கு கடமைப்பட்டவராகும் கட்டமைக்கப்பட்டிருக்கும் இதில் குறிப்பிட்ட பிரிவு தலைவர் இல்லையென்றாலும்மற்றபகுதி தொடர்ந்து இயங்கும் வட்டாரகட்டமைப்பு மிகப்பெரியநிறுவனம் நாடுமுழுவதும் விரிந்து பரந்து உள்ளது எனில் அந்தந்த பகுதியும் ஒவவொரு மேலாளரின் பொறுப்பின்கீழ் செயல்படுமாறும இவையனைத்திற்கும் பொதுவானநிருவாகி தலைமையிடத்திலும் இருந்தவாறு நிறுவனத்தினை கட்டுபடுத்துவார் இவ்வாறான பல்வேறு கட்டமைப்புகளில் நம்முடைய நிறுவனத்திற்கு பொருத்தமானகட்டமைவுஎதுவெ ன முடிவுசெய்து கட்டமைவுசெய்து கொள்க

வியாழன், 19 மார்ச், 2020

நிறுமங்களில் பங்காதாய தொகை வழங்குவதை அறிவித்தல்


நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 2(35) இல்எந்தவொரு நிறுமமும் தன்னுடைய பங்குதாரர்களுக்கு அந்நிறுமத்தால் ஈட்டப்பட்ட இலாபத்தை பகிர்ந்து அளிப்பதையே பங்காதாயம் என வரையறுக்கின்றது அதே சட்டத்தின் பிரிவு123 இன்படி எந்தவொரு நிறுவனமும் அந்நிறுவனத்தின் பங்குதாரரர்களின் பொதுப்பேரவைகூட்டத்தில் அந்நிறுவனத்தின் ஆண்டிறுதி கணக்குகளை ஏற்றபின்னர் இயக்குநர்களின் குழுக்கூட்டத்தில் ஏற்றுக்கொண்ட அளவிற்குமிகாமல அவ்வாண்டிற்கான பங்காதாயத்தொகை வழங்குவதற்கான அறிவிப்பை சாதாரண தீர்மானத்தின் வாயிலாக ஆமோதிக்கலாம். குறிப்பாக அந்நிறுமத்தில் நடப்பு நிதியாண்டில் இலாபம் ஈட்டவில்லையென்றாலும் முந்தைய நிதியாண்டுகளின் பகிர்ந்தளிக்கப்படாத இலாபத்தை கொண்டும் அறிவிக்கலாம் இவ்வாறு அறிவிப்பு செய்யப்படும் பங்காதாயமானது முந்தைய மூன்றாண்டுகளின் சராசரியைவிட அதிகமாக கூடாது மேலும் நிறுவனம் ஈட்டிய இலாபத்தினை Reserve Fund ,Free Reserve ஆகியவற்றிற்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்திடவேண்டும் முந்தைய ஆண்டுகளின் கொண்டு-வரப்பட்ட நட்டம் ஏதேனும் இருப்பின் அவையனைத்தும் சரிசெய்து கொண்டிருக்க-வேண்டும் அதுமட்டுமல்லாது தேய்மான கணக்கினையும் நேர்செய்துகொண்டருக்க-வேண்டும் இந்த நா ன்கு நிபந்தனைகளையும் பூரத்தி செய்தபின்பே அந்நிறுமம் குறிப்பிட்ட நிதிஆண்டில் இலாபங்கினை இயக்குநர்களின் குழுக்கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்ட சதவிகிதத்திற்கு மிகாமல் பொதுப்பேரவை கூட்டத்தில் சாதாரண தீர்மானமாத்தின்வாயிலாக ஏற்கலாம் என நிறுமங்களின் பங்காதாய அறிவிப்பு விதிகள்2014 கூறுகின்றன மேலும் இவ்வாறான பங்காதாயஅறிவிப்பிற்கான தொகையானது பங்குமூலதனமும் Free Reserve உம் சேர்ந்த தொகைக்கு பத்து சதிவிகித்திற்கு மேல் இருக்ககூடாது என மற்றொரு கட்டுப்பாடினை இதே பங்காதாய அறிவிப்பு விதிகள்2014 கட்டுபடுத்துகின்றன இவ்வாறாகஅறிவிப்பு செய்யப்படும் பங்காதாயத்தொகையானது பங்குதாரர்களுக்கு ரொக்கமாக ,காசேலையாக ,டிவின்டென்ட்வாரன்ட்டாக ,மின்னனு பணபரிவர்த்தனையின் வாயிலாக அறிவிப்பு செய்த முப்பது நாட்களுக்குள் வழங்கவேண்டும் அவ்வாறு முப்பது நாட்களுக்குள் பங்காதாயத்தொகை கோரப்படாமல் இருந்தால் ஏழுநாட்களுக்குள் தனியாக இதற்கென வங்கியில் கணக்கு ஒன்றினை துவக்கி அதில் இந்த கோரப்படாத தொகைகை இட்டுவைத்திடவேண்டும் தவறினால் அவ்வாறாக வழங்கப்படாத பங்காதாய தொகைக்கு அந்நிறுவனமானது 12 சதவிகிதம் வட்டி செலுத்தவேண்டியிருக்கும் அந்நிறுவனத்தின் பங்குகளானது பங்குசந்தையில் பட்டியிலிடபட்டிருந்தால் பொதுப்பேரவை கூட்டம் நடைபெறுவதற்கு முன் பங்குதாரர்களின் பதிவேட்டை ஏழுநாட்களுக்கு பங்கு பரிவர்த்தனையை நிறுத்தம்செய்து பராமரத்திடவேண்டும் பங்குசந்தையில் பட்டியலிடபடாத நிறுவனங்கள் பொதுப்பேரவை கூட்டுவதற்கான அறிவிப்பை 21 நாட்களுக்குமுன் அனைத்து பங்குதாரர்களுக்கும் அனுப்பவேண்டும் மேலும் அந்த 21 நாட்களுக்கு பங்குதாரர்களின் பதிவேட்டை பங்கு பரிவர்த்தனையை நிறுத்தம்செய்து பராமரத்திடவேண்டும் தொடர்ந்து ஏழாண்டுகள் குறிப்பிட்ட பங்குதாரர் அறிவிக்கப்பட்ட பங்காதாயத்தொகையை கோரிப்பெறாமல் இருந்துவந்தால் ஏழாவது ஆண்டு முடிந்த 30 நாட்களுக்குள் அவ்வாறு கோரப்படாத பங்காதாய தொகையை முதலீட்டாளர்களின் கல்வி பாதுகாப்பு நிதிக்கு மாற்றிடவேண்டும்

ஞாயிறு, 1 மார்ச், 2020

கெண்டகி ஃபிரைடு சிக்கன் (KFC)எனும் உணவினை உற்பத்தி செய்திடும்நிறுவனம்


கலோனல் சான்டர்ஸ் என்பவர் தன்னுடைய 65 ஆவது வயதில் தனது சமூக பாதுகாப்பிற்கான காசோலை 99 டாலர் ஓய்வூதியம் பெற்றுவந்தார் அப்போது அவரிடம் வாழ்வதற்காக மிகச்சிறிய வீடுஒன்றும் எங்காவது செல்வதற்காக பழைய மகிழுந்து ஒன்றும் மட்டுமே அவருடைய சொத்துகளாக உடைமையாக இருந்தன ஆனால் அவர் மிகசிறப்பாக அனைவரும் விரும்புமாறான கோழிவருவல் உணவை தயாரித்திடுவார் அதனால் அவருடைய நண்பர்கள் அனைவரும் இந்த கோழிவருவலுக்காகவே அவரை சுற்றிசுற்றி வந்து கொண்டிருப்பார்கள் அந்நிலையில்இதனை ஏன்ஒரு நல்ல தொழிலாக மாற்றியமைத்து செயற்படுத்தக்-கூடாது என அவர் சிந்தித்தார் அதனை தொடர்ந்த அதனை நடைமுறை படுத்திடுவதற்காக முனைந்தார் அதனால் நாடுமுழுவதும் சுற்றுலாவை செயற்படுத்திடும் முகவர்கள் நடத்திடும் உணவகங்களில் இந்த கோழிவருவல் உணவை இலவசமாக வழங்க தான் தயாராக இருப்பதாகவும் அதனை அனுமதிக்குமாறும் அவ்வுணவகங்களில் 1000 முறை கோரினார் ஆயிரமுறையும் அவ்வாறான சுற்றலா முகவர்களின் உணவகங்களில் கட்டணமில்லாமல் அவருடைய கோழிவருவல் உணவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குமாறான அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டன இருந்தபோதிலும் அவரும் இவ்வாறான நிராகரிப்பினால் சோர்வுற்றிடாமல் கடைசியாக இன்னும் ஒருமுறை முயன்றுதான் பார்ப்போமே என 1001 ஆவதுமுறை முயற்சிசெய்தார் அதாவது சுற்றுலா உணவகத்தில் இவருடைய கோழிவருவல் உணவை இலவசமாக வாடிக்கை-யாளர்களுக்கு வழங்குவது எனும் கோரிக்கை ஏற்கப்பட்டு செயற்படுத்தப்பட்டது அதனை தொடர்ந்து இவருடைய கோழிவருவல் உணவு வாடிக்கையாளர் அனைவரும் விரும்பும் உணவாக வாடிக்கையாளர்களின் உணவுப்பழக்கமே மாறிப்போனது அவ்வாறு வாடிக்கையாளர்களின் உணவு பழக்கம் மாறியதை தொடர்ந்த அவருடைய கோழிவருவல் உணவினை உற்பத்தி செய்திடும் ஆண்டொன்றிற்க 45 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் ஈட்டிடும் அவருடைய கெண்டகி ஃபிரைடு சிக்கன் (KFC)எனும் மிகவும் பிரபலமான உணவு நிறுவனமாகவும். 220 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் செயல்படும் ஒரு உலகளாவிய மாபெரும் நிறுவனமாகவும் பரந்து வளர்ந்து விட்டது. விடாமல்முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் என்ற பழமொழியை மனதில் கொள்க

வியாழன், 20 பிப்ரவரி, 2020

நம்முடைய வியாபார இணையதளத்தின் உள்ளடக்கங்களை வாடிக்கையாளரை கவரும்வண்ணம் எவ்வாறுமேம்படுத்திடுவது


தற்போதைய இருபத்தொன்றாம் நூற்றாண்டானது இணைய உலகமாக உள்ளது அனைவரும் அறிந்த செய்தியே அதனால் நம்முடைய நிறுவனம் வியாபாரத்தில் வெற்றிநடைபோடவேண்டுமெனில் கண்டிப்பாக நம்முடைய நிறுவனத்தின் இணையதளத்தினை வாடிக்கையாளர் அனைவரையும் கவரும்வண்ணம் மேம்படுத்திடவேண்டும் அதற்கான வழிமுறைகள் பின்வருமாறு 1 பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தேடுபெறிகளின் வாயிலாகவே தாங்கள் விரும்பும் பொருட்களை தேடி அடைகின்றனர் அதனால் நம்முடைய இணையபக்கத்தில் பயன்படுத்திடும் சொற்கள் தேடுபொறிகளின் சொற்களுக்கு பொருத்தமானதாக இருக்குமாறு அமைத்து கொள்க 2 முகப்பு பக்கத்தில் நம்முடைய நிறுவனத்தை பற்றிய அறிமுகம் இரத்தினசுருக்கமாக இருக்கவேண்டும் மேலும் விவரங்களை தனியான இணைப்பு பக்கத்தில் அல்லது தாவியின் பக்கத்தில் வழங்குக 3 நம்முடைய இணையபக்கத்தை அடையவேண்டிய அவசியமான முடிவை முதலிலும் அதற்கடுத்தமுக்கியதகவல்களை அடுத்தும் அதற்கடுத்த தகவல்களை மூன்றாவதாகவும் பிரமிடு வழிமுறையில் நம்முடைய இணையத்தின் முக்கியத்துவத்தை விவரிக்கும் சொற்களை கட்டமைத்திடுக 4 நம்முடைய இணைய பக்கங்களில் அமைந்துள்ள உரையானது எவ்வாறுஎழுதியது என பார்வையாளர்கள் கவலைபடமாட்டார்கள் ஆனால் இவ்வாறான உரையை யார் எழுதியது என அறிந்துகொள்ளும் ஆவலைதூண்டிடுமாறு இந்த உரைஅமைந்திருக்குமாறு வடிவமைத்திடுக 5 நம்முடைய வியாபார நடவடிக்கைகக்கு ஏற்ப இந்த முகப்புபக்கத்தில் உருவப்படங்கள் கானொளிபடங்கள் இசைகள் வினாடிவினாக்கள் போன்றவைகளுள் பொருத்தமானதை கொண்டு வடிவமைத்திடுக 6 நாம் கூறவிழையும் கருத்துகளை சுருக்கமாகவும் தெளிவாகவும் சிறுசிறுபத்திகளாக பிரித்தும் தேவைப்பட்டால் கூடுதல் இணைப்புபக்கத்துடனும் முகப்பு உரையை வடிவமைத்திடுக 7 நம்முடைய முதன்மை குறிக்கோளே பார்வையாளர்களை வாடிக்கையாளர்களாக மாற்றுவதுதான் அதனால் பொருத்தமான தொழில்நுட்பங்களையும் இணைப்புகளையும் திறவுச்சொற்களையும் (Good Keywords) பார்வையாளர்களை கவரும் வண்ணம் கட்டமைத்திடுக

சனி, 15 பிப்ரவரி, 2020

வி்யாபார வெற்றிக்கதை


பிரட் ஸ்மித்என்பவர் அமெரிக்காவிலுள்ள யேல் பல்கலைக்கழகத்தில் 1965 ஆம் ஆண்டில் இளங்கலை பட்டம் பெற்றார். அவ்வாறான இளங்கலை பட்டப்படிப்பின்போது ஒரு பகுதியாக, அவர் அமெரிக்கநாட்டில் பொருட்களின் போக்குவரத்து வழிவகைகளை ஆய்வு செய்து பொருளியல் கட்டுரைஒன்றினைசமர்ப்பித்தார். அதில் பெருமளவிளான பொருட்களனைத்தும் தரைவழி போக்குவரத்தில் கொண்டுசெல்வதையும் பயனிகள் வான்வழியில் செல்வதையும் கண்டறிந்தார் அதனை தொடர்ந்து பயனிகள் போக்குவரத்திற்கு பயன்படும் விமானம் மூலம் சிறிய, அத்தியாவசிய பொருட்களையும் கொண்டு செல்வதுஒரு சிறந்தசெயலாக இருக்கும் என அவருடைய மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. அதற்காக கடைசி நிமிட ஆவணமாக அதனை சேர்த்துசமர்ப்பித்தார். இருப்பினும், அத்தகைய நிறுவனத்தை எவ்வாறு உண்மையில் நடத்துவது என்பது குறித்த விவரங்களை அதில்அவர் செல்லவில்லை. அதனால் அவருடைய கட்டுரையானது "சி" என்று வரிசைப்படுத்தப்பட்டது. ஆனால் ஸ்மித் அந்த யோசனையை கைவிட்டுவிடாமல் 1971 ஆம் ஆண்டில் அதனை செயற்படுத்திடுவதற்கான ஃபெடரல் எக்ஸ்பிரஸ்என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். ஆனால்அந் நிறுவனம் நிறுவப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள், நலிவுறும் விளிம்பிற்குள் தள்ளப்பட்டிருந்தது. ஏனெனில் உயரும் எரிபொருள் செலவுகளின் காரணமாக மாதமொன்றிற்கு ஒரு மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து நிறுவனத்தின் கையிருப்பில் $ 5000 மட்டுமே இருந்தது.அதாவது அன்றாடம் தேவைப்படும் விமானஎரிபொருளை கொள்முதல் செய்வதற்குகூட போதுமான நிதியில்லாமல் அல்லாடவேண்டிய சூழ்நிலை உருவானது அதனால் ஸ்மித் தன்னுடைய நிறுவனத்திற்காக உள்ளூரில் பல்வேறு நிதிநிறுவனங்களிடமிருந்து நிதியுதவி கோரினார் ஆனால் அவருடைய . கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பொதுவாக இவ்வாறான நிலையில் பெரும்பாலானவர்கள்தம்முடைய நிறுவனத்தை மூடிவிட்டு இந்ததொழிலே நமக்கு வேண்டாம் என விலகிஓடிவிடுவார்கள், . ஆனால் பிரெட் ஸ்மித் அவ்வாறான முடிவெதும் எடுத்திடாமல்.அருகிலிருந்த லாஸ் வேகாஸ் எனும்நகரத்திற்கு பறந்து சென்று அங்கு அறிமுகமானஒருசில நண்பர்களின் நிதிநிறுவனங்களிடமிருந்து சொந்த தனிப்பட்ட நபரின் உத்திரவாதத்தின் அடிப்படையில் தன்னுடைய நிறுவனத்தின் நடைமுறை மூலதனத்திற்கு தேவையான நிதியினை பெறமுயற்சி செய்து வெற்றி பெற்றார் அதனால் மறுநாள் அவருடைய ஃபெடரல் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் ஆச்சரியமாக 32,000 டாலர்களாக உயர்ந்திருந்தது இது ஒரு சில நாட்களுக்கு விமானங்களின் எரிபொருளை கொள்முதல் செய்து விமான இயக்கம் தடைபெறாமல் இருப்பதற்கு போதிய நடைமுறைமூலதன அளவாகும் அதனை தொடர்ந்து . அவருடைய ஃபெடரல் எக்ஸ்பிரஸ் நிறுவனம் குறிப்பிடத்தக்க அளவு வருமானமும் ஈட்டத்தொடங்கியது நாளுக்கு நாள் மென்மேலும் வளர்ந்துகொண்டேவந்துஇன்று 220 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் செயல்படும் ஒரு உலகளாவிய மாபெரும் நிறுவனமாக ஃபெடரல் எக்ஸ்பிரஸானது 45 பில்லியன் அமெரிக்கடாலர் வருடாந்திர வருவாய் ஈட்டிடும் நிறுவனமாக ஆலமரம்போன்று தழைத்தோங்கி வளர்ந்துள்ளது. எந்தவொரு இக்கட்டான நிலையிலும் மனந்தளர்ந்துவிடாமல் முயன்றால் வெற்றி நிச்சயம்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...