வெள்ளி, 30 ஏப்ரல், 2021

நம்முடைய பலவீனத்தையே நம்முடைய பலமாக மாற்றிகொள்க

 
10 வயது சிறுவன் ஒருவன் மிகப்பெரிய கார் விபத்தில் தன்னுடைய இடது கையை இழந்த போதிலும், ஜூடோ எனும் கலையை கற்றுகொள்ள முடிவு செய்தான். அச்சிறுவன் ஒரு வயதானஅனுபவமிக்க ஜப்பானிய ஜூடோ ஆசிரியரிடம் ஜூடோ எனும் தற்காப்பு கலையை கற்றுக்கொள்ளதுவங்கினான். அச்சிறுவன் நன்றாக அந்த கலையை கற்றுகொண்டுவந்தான், அவ்வாறான மூன்று மாத பயிற்சியில் ஜூடோ ஆசிரியர் அவனுக்கு ஒரே ஒரு அசைவைமட்டுமே கற்றுக் கொடுத்தார். அதனால் அச்சிறுவன் தன்னுடைய ஆசிரியரை “சென்ஸி,” (ஜப்பானிய மொழியில் ஆசிரியரை விளிப்பது),என அழைத்து “நான் அதிக நகர்வுகளைக் கற்றுக் கொள்ள வேண்டாமா?” என தன்னுடைய சந்தேகத்தினை கேட்டான். "இது உனக்குத் தெரியவேண்டிய ஒரே அசைவு, ஆனால் நீ தெரிந்து கொள்ள வேண்டிய ஒரே அசைவும் இதுதான்" என்று சென்ஸி பதிலளித்தார். மிகச்சிறந்த ஜூடோ எனும் கலையில் ஒரேயொரு அசைவு மட்டுமா இருக்கும் ஆனால் ஒன்றுமட்டும் போதுமென்று ஆசிரியர் கூறுகின்றாரே என அவனுடைய மனம் மிகவும் புரியாமல் குழப்பமாக இருந்தது, ஆனாலும் தனது ஆசிரியரை நம்பி, அச்சிறுவன் தன்னுடைய பயிற்சியைத் தொடர்ந்தான். பல மாதப்பயிற்சிக்குப் பிறகு, சென்ஸி யானவர் அச்சிறுவனை முதன்முதலான ஒரு போட்டிக்கு அழைத்துச் சென்றார். அச்சிறுவன் ஜூடோவின் முதல் இரண்டு போட்டிகளில் எளிதாக வென்றான். மூன்றாவது போட்டி மிகவும் கடினம் என்று நிரூபிக்கப்பட்டது, ஆனால் சிறிது நேரம் கழித்து, அவனது எதிர்ப்பாளர் பொறுமையிழந்து அச்சிறுவன்மீது குற்றம் சாட்டினார்; அச்சிறுவன் தனது ஒரு நகர்வை மிகநேர்த்தியாகப் பயன்படுத்தி போட்டியில் வென்றான். தனது வெற்றியைக் கண்டு வியப்படைந்தான். அச்சிறுவன் தற்போது இறுதிசுற்றுக்கு தயாராக இருந்தான். இந்நிலையில், அவனது எதிர்போட்டியாளர் இவனைவிட வயதுமுதிரந்த பெரியவர், மிகவும் வலிமையானவர், மேலும் அனுபவம் வாய்ந்தவர். அதனால், அச்சிறுவன் தன்னுடன் போட்டியில் கலந்துகொள்வதற்கு பொருந்தாதவனாக அவருக்குத் தோன்றினான். அதனால் சிறுவனுக்கு காயம்ஏதேனும் ஏற்படக்கூடும் என்ற கவலையில், நடுவர் போட்டியை அதோடு முடிந்ததாக அறிவித்தார். ஆனால் அந்த சிறுவனின் சென்ஸி தலையிட்டு. "தேவையில்லை போட்டி தொடரட்டும்," என வலியுறுத்தினார், அந்த போட்டி மீண்டும் தொடர்ந்தபோது , அவனது எதிர்ப்பாளர் ஒரு முக்கியமான தவறைச் செய்தார்: அதாவது அவர் தனது பாதுகாப்பைக் கைவிட்டார். உடனடியாக, சிறுவன் தனது நகர்வைப் பயன்படுத்தி அப்போட்டியாளரை வீழ்த்தினான். போட்டியில் வென்றான். அவன் சாம்பியனாக அறிவிக்கப்பட்டான. அந்த போட்டி முடிந்து வீட்டிற்கு திரும்பிச்செல்லும் வழியில், சிறுவனும் சென்ஸியும் சற்றுமுன் நடைபெற்ற போட்டியின் ஒவ்வொரு அசைவையும் மதிப்பாய்வு செய்தனர். பின்னர் சிறுவன் தன் மனதில் எழுந்த சந்தேகத்தை தீர்வுசெய்வதற்காக. "சென்ஸி, ஒரே ஒரு நகர்வுடன் நான் எப்படி போட்டியை வென்றேன்?" எனவினவியபோது "நீ இரண்டு காரணங்களால் வென்றாய்ள்" எனசென்ஸி பதிலளித்தார். “முதலில், எல்லா ஜூடோவிலும் மிகவும் கடினமான அசைவுகளுள் ஒன்றை கிட்டத்தட்ட தேர்ச்சி பெற்றுவிட்டாய். இரண்டாவதாக, அந்த நடவடிக்கைக்கு அறியப்பட்ட ஒரே பாதுகாப்பு உன்னுடைய எதிரி உன்னுடைய இடது கையைப் பிடித்திருக்க வேண்டும். ஆனால் அதில் அப்போட்டியாளர் அதனை தவற விட்டார்” சிறுவனின் மிகப்பெரிய பலவீனம் அவனது மிகப்பெரிய பலமாக மாறியது.
ஒருசில நேரங்களில் நமக்கு ஒருசில பலவீனங்கள் இருப்பதாக உணர்கிறோம், அதற்காக சூழ்நிலைகளை அல்லது சுற்றியிருப்பவர்கள் குறை கூறுகிறோம், ஆனால் நம்முடைய பலவீனங்கள் ஒரு நாள் நம்முடைய பலமாக மாறக்கூடும் என்பதை நாம் ஒருபோதும் அறியாமல் வாழ்ந்துவருகின்றோம். , எனவே நமக்கு எந்தவொரு பலவீனமும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதீர்கள், அவ்வாறு இருந்தால் அந்த பலவீனத்தையே நம்முடைய பலமாக மாற்றிகொள்க

சனி, 17 ஏப்ரல், 2021

வேர்களை வலுவாக்குங்கள்

தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வம் கொண்ட காப்பீட்டு முகவர் , ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆகிய இருவரும் அருகருகே வசித்து வந்தனர். அவர்கள் இருவரும் தங்களுடை வீட்டின் பின்புறத்திலுள்ள் தோட்டத்தில் ஒரேமாதிரியான செடிகளை நட்டு வளர்த்துவந்தனர். ஓய்வுபெற்ற ஆசிரியர் தனது தோட்டத்திலுள்ள செடிகளுக்கு போதுமான அளவு தண்ணீரை மட்டும் பாய்ச்சிவளர்த்து வந்தார். அதே நேரத்தில் தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள மற்றொருவர் தனது தோட்டத்திலுள்ள செடிகளுக்கு நிறைய தண்ணீரை பாய்ச்சியும் ஏரளான அளவிற்கு எரு ,உரம் போன்றவைகளை இட்டு அதிகபாதுகாப்புடன் கண்ணும் கருத்துமாக அவற்றை நன்றாக கவனித்து வந்தார். ஓய்வு பெற்ற ஆசிரியரின் செடிகள் எளிமையாக அழகாக இருந்தன. காப்பீட்டு முகவரின் செடிகள் மிகவும் வளமாகவும் அதிக பசுமையாகவும் இருந்தன. ஒரு நாள், இரவு புயல் ஒன்று உருவாகி பலத்த காற்றுடனும் மழையும் சேர்ந்து அவர்களுடைய பகுதி முழுமையாக சேதம் ஏற்படுத்திசென்றது. அடுத்த நாள் காலை, அவ்விருவரும் தங்களுடைய வீட்டின் பின்புறத்திலுள்ள தோட்டத்தில் தாங்கள் வளர்த்துவந்த செடிகள் எவ்வாறு உள்ளன என காணசென்றனர். காப்பீட்டு முகவரின் வீட்டுதோட்டத்தில் செடிகள் முழுவதும் வேரோடு பிடுங்கப்பட்டு தரையில் சாய்ந்து முற்றிலும் அழிக்கப்பட்டிருப்பதைக் கண்டார். ஆனால், ஓய்வுபெற்ற ஆசிரியரின் செடிகள் அவ்வாறு சேதமெதுவும் இல்லாமல், உறுதியாக நின்றுகொண்டிருந்தன. அதனால் காப்பீட்டு முகவர் பக்கத்து வீட்டுதோட்டத்தின் செடிகள் புயல்காற்றிற்கு சாயாமல் நிலையாக நின்றுகொண்டிருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டார், அவர் ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் , “நாமிருவரும் ஒரேமாதிரியான செடிகளை ஒரேமாதிரியாகவே பயிரிட்டு வளர்த்துவந்தோம், உங்களை விட என்னுடைய தோட்டத்தின் செடிகளை நான் நன்றாக கவனித்து எருவிட்டு அதிக தண்ணீர் பாய்ச்சி பாதுகாப்பாக வளர்த்து வந்தேன். ஆனாலும், என்னுடையவீட்டு தோட்டத்தில் அனைத்து செடிகளும் வேரோடு பிடுங்கப்பட்டு தரையில் சாய்ந்துவிட்டன, அதே நேரத்தில் உங்களுடைய தோட்டத்தில் அவ்வாறு இல்லாமல் செடிகள் அனைத்தும் நன்றாக உள்ளனவே. அது எப்படி சாத்தியம்?" என வினவியபோது ஓய்வுபெற்ற ஆசிரியர் புன்னகைத்து, “நீங்கள் உங்கள் செடிகளுக்கு அதிக தண்ணீரையும் பாதுகாப்பினையும் கவனத்தையும் வழங்கினீர்கள், அதனால் அவை தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் எளிதாக கிடைத்ததால்அவைகளை பெறுவதற்காாக அதிகம் உழைக்கத் தேவையில்லை. என சோம்பேறியாக தங்களுடைய வேர்களை தரையில் ஆழமாக வளராமல் நிறுத்தி கொண்டன அதனால் அவை நேற்றைய புயல்காற்றில் வேரோடு சாய்ந்துவிட்டன . ஆனால் நான் என்னுடைய தோட்டத்தில் செடிகளுக்கு போதுமான அளவிற்குமட்டும் தண்ணீரை வழங்கினேன் அதற்குமேலும் தேவையெனில் அவை தங்களுடைய வேர்களைை தரையில் மிகஆழத்திற்கு வளரச்செய்து வலுவாக நின்றுகொண்டிருந்தன. அதனால்தான் என்னுடையதோட்டத்து செடிகள் நேற்றையை புயல்காற்றில் தப்பி பிழைத்தன ”.என பதில் கூறினார்
நீதி: இங்குகூறியவாறு காப்பீட்டு முகவரின் தோட்டத்தில் வளர்க்கப்பட்ட செடிகளை போன்றே நாமும் நம்முடைய பிள்ளைகளுக்கு தேவையான.அனைத்தும் வழங்கினால்,அவற்றை சம்பாதிப்பதற்கான கடின உழைப்பை பற்றி அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் தமக்கு தேவையானவைகளை பெறுவதற்காக தாங்களே உழைக்கவேண்டும் என்ற அடிப்படை உண்மைய தெரிந்து கொள்ள மாட்டார்கள். அவ்வாறு அவர்களுக்கு தேவையானஅனைத்தையும் வழங்குவதற்குப் பதிலாக அவற்றினை எவ்வாறு சம்பாதித்து பெறுவது எனஅவர்களுக்கு வழிகாட்டுவது நல்லது.


செவ்வாய், 13 ஏப்ரல், 2021

எளியவர்களுக்கு உதவியாக இருந்திடுக

 

திரு. கண்ணன் என்பவர் அன்றைய அலுவலகபணியை முடித்து விட்டு தங்களுடைய வீட்டிற்குசெல்வதற்குத் தயாராகி கொண்டிருந்தார், மேலும் அன்று பணிமுடிந்து வீடுதிரும்பும்போது ஒரு கிலோ வாழைப்பழங்களை கண்டிப்பாக வாங்கிகொண்டு வருமாறு இன்றுகாலையில் அவரது மனைவி கோரியதை அவர் நினைவில் கொண்டார். . திரு. கண்ணன் வழக்கமாக அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு திரும்பிடும்போது தங்களுடைய அலுவலகத்திலிருந்து சிறிது தொலைவில் உள்ள ஒரு பெரிய பழக் கடையில் இருந்து பழங்கள் வாங்கிசெல்வதுவழக்கமாக கொண்டிருந்தார் , ஆனால் இன்று அவர் அவசரமாக வீட்டிற்குச் செல்லவேண்டி இருந்ததால், அவர் வீட்டிற்கு திரும்பி செல்லும்வழியில், சாலையோரத்தில் ஒரு வயதான பெண்மணி வாழைப்பழங்களை விற்பனை செய்து கொண்டிருந்தை கண்டார் இன்று மட்டும் அந்த சாலையோர கடையிலேயே வாழைப்பழங்களை வாங்கி செல்வோமே என ஆலோசித்தார். அதனால்அவர் அந்த வயதான பெண்மணியிடம் சென்று வாழைபழத்திற்கான விலை எவ்வளவு என வினவியபோது. அந்த வயதான பெண்மனி "ஐயா ஒரு கிலோ வாழைப்பழம் $ 70/- ",என கூறினார். உடன் திரு.கண்ணன் என்பவர், "ஆனால் அம்மா நான் வழக்கமாக வாங்கும் பழக்கடையில் எனக்கு ஒரு கிலோ வாழைப்பழங்களை $ 50/- க்கு கொடுத்தனரே, அதனால் அதே விலையில் நீங்கள் எனக்கு கொடுக்கலாமே?" எனவினவினார். அதனை தொடர்ந்து அந்த வயதான பெண்மனி, “இல்லை ஐயா, அந்த விலைக்கு என்னால் கொடுக்க முடியாது. வேண்டுமானால் உங்களுக்காக ஒருகிலோ வாழைப்பழங்களை $ 60 /- க்கு நான் வழங்க முடியும். உங்களுக்காக நான் கொடுக்கக்கூடியது இதுதான். ”என பதில் கூறினார் திரு. கண்ணன் அந்த வயதான பெண்மனியிடம், “பரவாயில்லைஅம்மா” என்று கூறி . அவர் தான் வழக்கமாக பழங்களை வாங்கிடும் கடையை நோக்கி புறப்பட்டார். அவர் அந்த கடையின் உள்ளே சென்று நல்ல வாழைங்களாக எடுத்துகொண்டு அதற்கான பணம் செலுத்த காசாளரிடம் சென்றார், அந்த கடையின் காசாளர் ஒரு கிலோ வாழைப்பழங்களின் விலை $ 100/- என்று கூறி அந்த தொகையை வழங்கிடுமாறு கூறியபோது திரு. கண்ணன் ஆச்சரியப்பட்டார். அதனால் திரு. கண்ணன் காசாளரிடம், "நான் ஒரு சில ஆண்டுகளாக இங்கிருந்து மட்டுமே பழங்களை வாங்கிவருகின்றேன், விலை அதிகமாக இருக்கின்றது ஒரு வழக்கமான வாடிக்கையாளராக இருப்பதற்காக எனக்கு விலைகுறைத்து வழங்க முடியாதா?" எனக்கோரினார் அந்த கடையின் மேலாளர் இதனை கண்ணுற்று அங்கு வந்தார். தொடர்ந்து அவர் திரு. கண்ணனிடம், "மன்னிக்கவும் ஐயா, ஆனால் எங்கள் கடையில் பொருட்களின் விலைகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளன, எங்களால் பேரம் பேசி அதைவிட குறைக்கமுடியாது." எனக்கூறினார் திரு. கண்ணன் அந்த அணுகுமுறையால் அதிர்ச்சியடைந்தார். அவர் ஒரு நொடி யோசித்து அந்த வாழைப்பழங்களை மீண்டும் அதனுடைய இடத்தில் வைத்துவிட்டு அந்த பழக்கடையை விட்டு வெளியேறி மீண்டும் வயதான பெண்மணியின் சாலையோர கடைக்கு சென்றார். திரு கண்ணனை உடனடியாக அடையாளம் கண்டு கொண்டு அந்த வயதானபெண்மனி, “ஐயா!, என்னால் நீங்கள் கோரிய அந்த விலைக்கு வழங்க முடியாது, என்னால் நட்டத்திற்கு வியாபாரம் செய்ய முடியாது” என்று சொன்னார். திரு.கண்ணன் அந்த வயதான பெண்மனியிடம், “அம்மா! இப்போது நான் விலையைப் பற்றி கவலைப்படவில்லை, தற்போது நான் உங்களுடைய கடையிலுள்ள வாழைப்பழங்களை கிலோஒன்றிற்கு $ 100/- வாங்கிகொள்வதற்கு தயாராக இருக்கின்றேன்! எனக்கு 2கிலோ வாழைப்பழங்களை கொடுங்கள். ” எனக்கூறினார் உடனடியாக 2 கிலோ வாழைப்பழங்கள் விற்பணையாகின்றதே என அந்த வயதான பெண்மனி மிகவும் மகிழ்ச்சியடைந்தார், அதனால் அவர் 2 கிலோ வாழைப்பழங்களை பையில் வைத்து, “ஐயா! நான் ஒருகிலோ வாழைப்பழங்களை $ 100/- என்ற அதிக விலைக்கு வழங்க விரும்பவில்லை , ஆனால் உங்களுக்காக நான் ஒரு கிலோஒன்றிற்கு $ 70/- இற்கு வழங்குகின்றேன். . ”எனக்கூறினார் மேலும் திருகண்ணனிடம், “என் கணவர் ஒரு சிறிய பழக் கடை வைத்திருந்தார், ஆனால் அவருக்கு உடல்நிலை சரியில்லை.அவரால் எழுந்து நடமாடக்கூட முடியவில்லை. அதனால் அந்த பழக்கடையை அவரால் தொடர்ந்து நடத்தமுடியவில்லை எங்களை ஆதரிப்பதற்கு பிள்ளைகளோ அல்லது உறவினர்களோ யாரும் இல்லை. அவரது மருத்துவ கட்டணங்களை ஈடுகட்டவும் நாங்கள் இருவரும் உயிர்வாழவும் போதுமான வருமானம் கிடைப்பதற்காக நான் இந்த பழக்கடையை தொடர்ந்து நடத்த வேண்டியுள்ளது, அதனால் எங்களுடைய எஞ்சிய வாழ்நாளை இருப்பதற்கு போதுமான வருமானம் மட்டும் கிடைத்தால் போதுமானதாகும்” அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது." திரு. கண்ணன் அந்த வயதான பெண்மனியிடம், "கவலைப்படாதே, அம்மா , நாளை முதல், நான் உங்களிடமிருந்து மட்டுமே பழங்களை வாங்குவேன்" என்று கூறினார். அவர் தனது பணப்பையை வெளியே எடுத்து அதிலிருந்து $ 1000/-தாளொன்றினை எடுத்து அந்த வயதான பெண்மனியிடம் கொடுத்து, “இதை எடுத்துக் கொள்ளுங்கள், நாளை விற்க இன்னும் பலவிதமான பழங்களைக் கொண்டு வாருங்கள், நான் உங்களிடமிருந்து வாங்கும் பழங்களுக்கான முன்பணமாக இதை எண்ணிக்கொள்ளுங்கள். பழங்களை வாங்கி விற்க உங்களுக்கு அதிக வாய்ப்புகள் இருந்தால் நீங்கள் அதிகம் சம்பாதிக்கலாம் அல்லவா. ” எனக்கூறியவாறு தொகையை வழங்கினார் வயதான பெண்மனி அவருக்கு நன்றி தெரிவித்தார். பின்னர், அவர் தனது சக பணியாளர்கள் பலரை அந்த வயதான பெண்மணியிடமிருந்து பழங்களை வாங்க பரிந்துரைத்தார். திரு. கண்ணன் மற்றும் சக பணியாளர்களின் ஆதரவுடன், அந்த வயதான பெண்மனியானவர் ஒரு சிறந்த வாழ்க்கையை மேற்கொண்டார்.
பெரும்பாலும் நாம் பெரிய கடைகளிலேயே பொருட்களைவாங்குவதை தேர்வு செய்கிறோம். அக்கடைகளில் எப்போதும் பேரம் எதுவும் பேசாமல் அவர்கள் குறித்த விலையை செலுத்துகிறோம். பெரிய கடைகளில் பொருட்களை கொள்முதல் செய்யும் போது பேரம் பேச நமக்கு தைரியம் இருப்பதில்லை, அவர்கள் குறிப்பிட்ட விலையை கொடுக்கு தயாராக இருக்கின்றோம் ஆனால் தெருவோரம் விற்பணைசெய்கின்ற சிறிய விற்பனையாளர்களுடன் மட்டும் பேரம் பேச முயற்சிக்கிறோம்? அது ஏன் என சிந்தித்திடுக.
இவ்வாறான எளியவர்கள் அன்றாட உயிர்வாழ்வதற்கு போதுமான அளவு வருமானம் வந்தால் போதுமென வாழ்பவர்களுக்கு எப்போதும் உதவியாகவும் ஆதரவாகவும் இருக்க முயற்சித்திடுக


சனி, 3 ஏப்ரல், 2021

நாம் என்ன செய்கின்றோமோ அதன்விளைவே நமக்கு கிடைக்கும்


மிகவும் வெற்றிகரமான தொழிலதிபர் ஒருவர், ஒருநாள் தனது அலுவலகத்திற்கு செல்ல தயாராகி கொண்டிருந்தார். அவர் தனது மகிழ்வுந்தில் ஏறுவதற்காக அதன் கதவைத் திறக்கமுயன்றபோது, அவரது மகிழ்வுந்திற்கு அடியில் தூங்கிக்கொண்டிருந்த நாய் ஒன்று திடீரென வெளியே வந்து என்ன இவன் நம்முடைய தூக்கத்தை கெடுக்கின்றானே என அந்த தொழிலதிபரின் காலை கடிக்கவந்தது! அத்தொழிலதிபர் மிகவும் கோபமடைந்து விரைவாக ஒரு சில கற்களை எடுத்து நாய் மீது வீசினார், ஆனால் அத்தொழிலதிபர் வீசிய கற்கள்எதுவும் நாய்மீது படவில்லை. அந்த நாயும் அடிஎதுவும் படாமல் தப்பித்தால் போதுமென வேகமாக பாய்ந்தோடிவிட்டது.
அவர் தனது அலுவலகத்தை அடைந்ததும், அத்தொழிலதிபர் தனக்கு கீழ்பணிபுரியும் அனைத்து துறைத்தலைவர்களையும் அன்று நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைத்தார், அந்த துறைதலைவர்களின் கூட்டத்தின் போது அவர் நாயின் மீது இருந்த கோபத்தை அவர்கள் அனைவரின் மீது காண்பித்து யாரும் தங்களுடைய கடமையை சரியாக செய்வதில்லை என திட்டி அனுப்பிவைத்தர்.
கூட்டம் முடிந்ததும் துறைத்தலைவர்கள் அனைவரும் தங்களுடைய முதலாளி தங்களிடம் காண்பித்த கோபத்தால் வருத்தப்பட்டு கொண்டே சென்று தங்களுடைய இருக்கையில் அமர்ந்து கொண்டு அன்றைய பணியை கவணிக்க ஆரம்பித்தனர்
இருந்தபோதிலும் தங்களுக்கு கீழ்பணிபுரியும் மேற்பார்வையாளர்களிடம், தங்களுடைய கோபத்தை காண்பித்தனர். இந்த எதிர்வினையின் சங்கிலி ஊழியர்களின் கீழ் மட்டம் வரை சென்று கொண்டே இருந்தது, இறுதியாக, அந்த கோபம் அலுவலக த்தில்பணிபுரிந்த அலுவலக உதவியாளரை சென்றடைந்தது. இப்போது, அவ்வலுவலக உதவியாளரின் கீழ் வேறு யாரும் பணிபுரிய வில்லை! எனவே, அவரிடமே தங்கிஇருந்தது
அன்று சாயுங்காலம் அலுவலகபணி நேரம் முடிந்ததும், அவ்வலுவலக உதவியாளர் தனது வீட்டை சென்றடைந்தார்,அவரது மனைவி வீட்டின் கதவைத் திறந்தார். அப்போது அவருடைய மனைவி அவரிடம், “ ஏன் இன்று காலதாமதமாக வருகின்றீர்கள்?” என்று கேட்டவுடன். தன்னிடம் அடக்கி வைத்துகொண்டிருந்த கோபத்தால் , தன்னுடைய மனைவிக்கு ஒரு அறை கொடுத்தார்! மேலும், “நான் ஒன்றும் கால்பந்து விளையாடுவதற்காக அலுவலகத்திற்குச் செல்லவில்லை, நான் அலுவலக பணிக்குச் சென்றுவருகின்றேன், உன் முட்டாள்தனமான கேள்விகளால் என்னை எரிச்சலடையச் செய்யாதே!” என கோபத்தில் பொரிந்து தள்ளினார் .எப்போதும் இவ்வாறு கோபப்படாத அவ்வுதவி யாளரால் , இப்போது ஒரு திட்டும் அறையும் தனக்கு கிடைத்ததே என்று அவ்வுதவியாளரின் மனைவி மிகவும் வருத்தப்பட்டார். அதனால் வீட்டில் தொலைகாட்சிபெட்டியில் அன்றைய நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த தங்களுடைய மகன் மீது காண்பித்தார் அதாவது தங்களுடைய மகனின் கன்னத்தில் ஒரு அறைகொடுத்து, “எப்போதும் தொலைகாட்சி பெட்டியே கதியென்றி நீ இருப்பாய், படிப்பதில் உனக்கு ஒன்றும் ஆர்வம் இல்லை! இப்போது தொலைகாட்சியை நிறுத்து! ” என கோபமாக திட்டினார் . அவர்களுடைய மகன் என்ன இது நம்முடைய அம்மா இன்றுமட்டும் நம்மை இவ்வாறு அடித்து திட்டுகின்றாரே என மிக வருத்தப்பட்டான்! தொடர்ந்து அவர்களுடைய மகன் அந்த வருத்தத்தில் தங்களுடைய வீட்டினை விட்டு வெளியேவந்தான் ஒரு நாய் அவனைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான் அதனால் கோபத்திலும் விரக்தியிலும் ஒருகல்லை எடுத்து அந் நாயை நோக்கிவீசி எறிந்தான். அந்த நாய்,ஆனது அந்தகல்லால் அடிபட்டு, வலியால் குரைத்து கொண்டே ஓடியது. காலையில் தொழிலதிபரைக் கடிக்கமுயன்ற அதே நாய் தான்தான்இது.
நீதி: ஒருவர் விதைத்ததைப் போலவே அறுவடை செய்வார். நம்முடைய வாழ்க்கையும் இப்படித்தான் செயல்படுகிறது. நம்முடைய செயல்களின் அடிப்படையில் நம்மனைவருக்குமான மகிழ்ச்யும் துக்கமும் உருவாகின்றது,அதனால் நாம் எவ்வாறு நடந்துகொள்கிறோம் என்பதில் அதிக கவனம் செலுத்தினால் போதும். நல்லது செய்தால், நல்லது வந்து சேரும், தவறு செய்தால், தண்டனை வந்துசேரும்.

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...