ஞாயிறு, 24 டிசம்பர், 2017

உண்மைக்கும் பொய்க்கும் இடையே உள்ளவித்தியாசம் என்ன?


ஒரு நாள் பேரரசர் அக்பருக்கு உண்மைக்கும் பொய்க்கும் இடையே உள்ளவித்தியாசம் என்ன என்ற பெரிய சந்தேகம் ஒன்று எழுந்தது, அதனால் தன்னுடைய அரசசபையில் இருந்த பிரபுக்கள் அனைவரிடமும் இவ்விரண்டிற்கும் இடையேயான வித்தியாசத்தை மூன்று அல்லது அதற்கு குறைவான சொற்களுக்குள் கூறமுடியமா எனக் கேட்டார். அவையிலிருந்த அனைவரும் பேரசர் அக்பரின் கேள்விக்கான பதிலை சுருக்கமாக கூறமுடியாமல் திகைத்து ஒருவரையொருவர் பார்த்துகொண்டிருந்தனர், . இறுதியாக பேரரசர் அக்பர் அருகில் அமர்ந்திருந்த மதியூக மந்திரி பீர்பாலிடம் திரும்பி இதற்கான பதிலை நீங்களாவாது கூறமுடியுமா என வினவினார். உடன் 'நான்கு விரல்கள்' என்று பேரரசர் அக்பரின் கேள்விக்கு பதிலாக பீர்பால் கூறினார். அந்த பதிலை கேட்டவுடன் பேரரசர் அக்பர் மிகவும் குழப்பமடைந்தார், அதனால் பீர்பால் பின்வருமாறு விரிவாக விளக்கினார். ' மாட்சிமை தாங்கிய பேரரசர் அவர்களே . கண்களால் நீங்கள் பார்க்கும் அனைத்தும் உண்மை. ஆனால் காதுகளால் நீங்கள் கேட்பவைகளில் பெரும்பாலும் பொய்யாக இருக்கும், அதாவது அவைகள் தவறாக கூட இருக்கலாம். அதனால் கண்ணால் காண்பது மட்டுமே உண்மையாகும் ' அதனை தொடர்ந்து இவைகளுக்கு இடையேயான வித்தியாசம் நான்கு விரல்கள் என எவ்வாறு கூறமுடியும் என பேரரசர் அக்பர் வினவினார் அதற்கு பீர்பால் - 'உண்மையை கூறும் நம்முடைய கண்களுக்கும் பெரும்பாலும் பொய்யானவையை கேட்கும் நம்முடைய காதுகளுக்கும் இடையே உள்ள தூரம் நான்கு விரல்களின் அகலமாகும்.' என விளக்கமளித்தார் நம்முடைய கண்களால் காணும் காட்சி மட்டுமே உண்மையாகும் மற்றவையெல்லாம் பொய்யாகும் .என்ற செய்தியை மனதில் கொள்க

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

உலகின் மிகப் பெரிய பணக்காரர் யார்?


தற்போது அமோசான் நிறுவனத்தின் தலைவர் உலகின் பெரிய பணக்காரர் என்ற நிலையில் உள்ளார் இதற்கு முன்பு உலகில் மிகப்பெரிய பணக்காரராக மைக்ரோ சாஃப்டின் தலைவர் பில்கேட்ஸ் இருந்தார் அதனால் அவரிடம் ஒருவர் , ஐயா உங்களை விட வேறுயாரெனும் பெரிய பணக்காரர் இருக்கிறாரா? எனக் கேட்டார் உடன் அதற்கு பில்கேட்ஸானவர், ஆம், என்னைவிட பணக்காரரர் ஒருவர் உள்ளார் என பதில் கூறினார் அதுஎவ்வாறு சாத்தியம் விளக்கமாக கூறுங்கள் என பில்கேட்ஸை அவர் மடக்கினார் உடன் பில்கேட்ஸானவர் ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு, நான் நியூயார்க் விமான நிலையத்திற்கு வெளியேசென்று கொண்டிருந்தேன். அப்போது கடைகளில் பத்திரிகைகளின் தலைப்பு செய்திகளை படித்தபோது . நான் அவற்றில் ஒன்றை வாங்க விரும்பினேன், . அதனை தொடர்ந்து என்னுடைய சட்டை பை கால்சட்டைபை ஆகியவைகளில் தேடிபார்த்தபோது என்னிடம் அதற்கான ஒரு டாலர் நாணயம் மட்டுமில்லை அதனால் .உலகின் பெரிய பணக்காரன் ஆகிய நான் அந்த பத்திரிகையை மட்டும் என்னால் ஒருடாலருக்கு வாங்கமுடியவில்லையே என அதனை வாங்க முடியாமல் திகைத்து நின்றுவிட்டேன் இந்நிலையில் என்னுடைய செய்கையை பார்த்து கொண்டிருந்த அந்த பத்திரிகைகளை விற்பணைசெய்திடும் கருப்பு சிறுவன் என்னை அழைத்து, "இந்தாருங்கள் ஐயா நீங்கள் விரும்பும் பத்திரிகை " என்று கூறி எனக்கு உதவிசெய்தான் மேலும், " ஐயா நான் இந்த பத்திரிகையை உங்களுக்கு இலவசமாக கொடுக்கிறேன் இதற்காக ஒருடாலர் தரவேண்டாம்". என கூறினான் ஒருசில மாதங்களுக்கு பிறகு, அதே இடத்திற்கு பில்கேட்ஸ் வந்துசேர்ந்தபோது முன்பு நடந்த அதே நிகழ்வு மீண்டும் நடந்தேறியது அதாவது கடைகளில் பத்திரிகைகளின் தலைப்பு செய்திகளை படித்தபோது . நான் அவற்றில் ஒன்றை வாங்க விரும்பினேன், . அதனை தொடர்ந்து என்னுடைய சட்டைபை கால்சட்டைபை ஆகியவைகளில் தேடிபார்த்தபோது என்னிடம் மீண்டும் அதற்கான ஒரு டாலர் நாணயம் மட்டுமில்லை அதனால் .உலகின் பெரிய பணக்காரன் நான் ஆனால் அந்த பத்திரிகையை வாங்க ஒருடாலர் மட்டும் என்னிடமில்லையே என அதனை வாங்க முடியாமல் மீண்டும் திகைத்து நின்றுவிட்டேன் இந்நிலையில் என்னுடைய செய்கையைபார்த்து கொண்டிருந்த அந்த பத்திரிகைகளை விற்பணைசெய்திடும் கருப்பு சிறுவன் என்னை அழைத்து, "இந்தாருங்கள் ஐயா நீங்கள் விரும்பும் பத்திரிகை " என்று கூறி எனக்கு மீண்டும் உதவிசெய்தான் மேலும், " ஐயா நான் இந்த பத்திரிகையை உங்களுக்கு இலவச கொடுக்கிறேன்". என கூறினான் அது சரியான செயல்அன்று தம்பி நான்மிகப்பெரிய பணக்காரன் உன்னிடம் இலவசமாக இதனை வாங்கி கொள்ள கூடாது என்னுடையஇருப்பிடத்திற்கு நான் சென்றவுடன் முன்பு வாங்கிய பத்திரிகைக்கும் இந்த பத்திரிகைக்கும் சேர்ந்து தொகையை நான் கொடுத்தனுப்புகின்றேன் எனக்கூறியபோது அவ்வாறெல்லாம் வேண்டாம் ஐயா நான் என்னுடைய இலாபத்திலிருந்து உங்களுக்குக தருகிறேன்" என்று கூறினான் அதனால் அந்த பத்திரிகை விற்பணை செய்திடும் கருப்புசிறுவனே என்னைவிட பணக்காரனாகும் என தன்னுடைய விளக்கத்தை பில்கேட்ஸ் கூறினார்.

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...