ஞாயிறு, 19 நவம்பர், 2023

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்டில் இவர் செய்கின்ற ஒவ்வொரு சிறு சிறு செயலிற்கும் சரியாக செய்யவேண்டுமென அவரது பெற்றோர்கள் அந்த இளைஞரிடம் நச்சரி்ததுகொண்டேயிருப்பதால் அதிக விரக்தியடைந்துவந்தார்.
  இந்த நேர்காணலுக்காகஅவர் காத்திருந்தபோது, அவ்விளைஞர் , “இன்றைய நேர்காணலில் நான் வெற்றி பெற்றால்  நான் என் பெற்றோறுடன் சேர்ந்து வாழும் வீட்டிற்கு விடைபெற்று கொண்டு வந்து இந்நகரத்தில் குடியேறி விடுவேன். அவ்வாறு செய்துவிட்டால், நான் இனிஎப்போதும் என் பெற்றோர்கள் அடிக்கடி சிறு செயலுக்கும் நச்சரித்துகொண்டிருப்பதை நான்  கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை. " என சிந்தித்தார்
தொடர்ந்து தன்னுடைய பெற்றோர்கள் தன்னிடம் கடிந்துகொள்ளும் தன்னுடைய சிறுசிறுசெயல்களைப் பற்றியும் அவர் சிந்தித்தார்.
அவர் குளியலறையிலிருந்து வெளியேவரும்போது அவரது தாயார் அந்த குளியலறைகதவை கதவை சரியாகமூடச் சொல்வார், மேலும் தண்ணீர் குழாய் சரியாக மூடப்பட்டிருக்கின்றதாவென குளியலறையிலிருந்துவெளியேறுவதற்கு  முன் சரிபார்த்துவிட்டு வரச்சொல்வார்க.
மேலும் அவரது தந்தை ஒவ்வொருஅறையிலிருந்து வெளியேறுமுன்  மின்விசிறி சுழன்றுகொண்டிருப்பதையும் அல்லது மின்விளக்குகள் எரி்ந்து கொண்டிருப்பதையும் கண்டிப்பாக அனைத்து அவைகளின் இயக்கத்தை நிறுத்திவிட்டு வெளியேறுமாறு கூறுவார்.
வீட்டிலுள்ள பொருட்களை அந்தந்த பொருட்களை அதனதன் இடத்தில் சரியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவனுடைய தாய் எப்பொழுதும் அவனைத் திட்டிக்கொண்டே இருப்பாள்.
இதையெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே, "இதையெல்லாம் நான் ஏன் கேட்க வேண்டும், எனக்கு இந்த பணி கிடைத்தால், நான் நிச்சயமாக அவர்களுடன் சேர்ந்து வாழ்கின்ற  வீட்டை விட்டு வெளியேறிவிடுவேன்" என்று முடிவுசெய்துகொண்டிருந்தார்.
சுற்றும் முற்றும் பார்த்தபோது, அலுவலக வராண்டாவில் அவனைபோன்ற ஏராளமான  இளைஞர்கள் அந்த பணிக்கான நேர்முகத்தேர்வில் கலந்து கொள்வதற்காக அமர்ந்து காத்துகொண்டிருந்ததை  கண்டார் .
அப்போது அவ்வலுவலகத்தில் வராண்டா விளக்கு  காலை பத்து மணியாகியும் அனைத்து நிறுத்தாமல் தொடர்ந்து எரிந்துகொண்டிருப்பதை கண்டார். தன்னுடைய பெற்றோர்களின் அறிவுரையை நினைவுக்கு கூர்ந்தவுடன் எழுந்து விளக்கை அனைத்து நிறுத்தினார்.
அப்போது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த குளிர்நீர் கருவியில் இருந்து தண்ணீர் சொட்டுவதை கண்டார். உடன் அவர் எழுந்துசென்று சரியாக குழாயை மூடி தண்ணீர் தொடர்ந்த கொட்டிக்கொண்டேயிருப்பதை நிறுத்தினார்.
இரண்டாவது தளத்தில் நேர்காணல் நடைபெறும் என்று அறிவிப்பு செய்யப்பட்டந்தது.
எனவே அவ்விளைஞன் எழுந்து இரண்டாவது மாடிக்குச் செல்லும் போது, செல்லும் வழியில்  நாற்காலிகள் சிதறி  இருப்பதைக் கண்டு, அவைகளை வழியிலிருந்து  ஓரமாக நகர்த்தி வைத்துவிட்டு இரண்டாவது மாடிக்குச் சென்றார்.
இப்போது,இரண்டாவது மாடியில் வெளியே காத்திருந்த இளைஞன், ஏற்கனவே  தன்னைபோன்ற அங்கு நேர்முகத்துவந்திருந்தவர்கள் நேர்முகத்தேர்விற்கான அறைக்குள்செல்வதையும் உடனடியாக வெளியே வந்துவிடவதையும் கண்டார்.
இதுகுறித்து விசாரித்தபோது, நேர்காணல் செய்பவர்கள் அவர்களிடம் கேள்வி எதுவும் கேட்கவில்லை என்பது தெரியவந்தது.
  அதாவது அவர்களிடமிருந்து தேவைையான ஆவணங்களைம்ட்டும் பெற்ற பிறகு,  உடன் அவர்களைத் திரும்பிச் செல்லும்படி கூறுகின்றனர்.
இளைஞனின்  எண் வந்தது. அவர் உள்ளே சென்று நேர்காணல் செய்பவரிடம் தனது ஆவணங்களை நீட்டினார். அவரது ஆவணங்களை சரிபார்த்த பிறகு, நேர்காணல் செய்பவர், கேள்வி எதுவும் கேட்காமல் "நீங்கள் எப்போது பணியில் சேருகிறீர்கள்?" என க்கூறியபோது
அவ்விளைஞன் மிகவும் ஆச்சரியத்துடன் அவர்களை திகைத்து பார்த்தபோது.
நேர்காணல் செய்பவர், “இன்று, நேர்காணல் செய்வதற்கு முன்பு , சிசிடிவியில் அனைவரின் நடத்தையையும் கவனித்தபோது யாரும் சரியாக செயல் படவில்லை என்பது தெரியவருகின்றது. எல்லோரும் வந்தார்கள் சென்றார்கள், ஆனால் யாரும்உங்களை போன்று எரிகின்ற  விளக்கை அனைத்து நிறுத்தவில்லை. குழாயில் தண்ணீர் சொட்டிகொண்டேயிருப்பதை நிறுத்தம்செய்யவில்லை சிதறிகிடந்த நாற்காலிகளை ஓரமாக நகர்த்தி வைக்கவில்லை உங்களிடம் அவைகளை சரிசெய்யவேண்டும் எனும்நல்ல  பழக்கவழக்கங்கள் உள்ளன.
சுய ஒழுக்கம் இல்லாத ஒருவர், எவ்வளவு, புத்திசாலியாக இருந்தாலும், நிர்வாகத்திலும் வாழ்க்கையிலும் வெற்றி பெற முடியாது.எனக்கூறி வெற்றிகரமாக வழிகூட்டிஅனுப்பினர்
நேர்காணல் முடிந்ததும். அந்த இளைஞன் தங்களுடைய மிகவிரைவாக தங்களுடைய வீட்டிற்கு சென்றடைந்தார் .
 உடன் தான் அவர்களிடம்  அவ்வப்போது கோபத்துடன் எரிச்சலடைந்து பேசுவதற்கு மன்னிப்புக் கேட்டுகொண்டு இன்று தான் அவர்களுடைய அறிவுரையை பின்பற்றியதால்தான் தனக்கு ஒரு நல்ல பணி கிடைத்தது எனவும் தொடர்ந்து
அவர், “என் வாழ்க்கையில், சிறிய செயல்களில் நீங்கள் நச்சரித்ததால் நான் உங்களிடம் கற்றுக்கொண்ட பாடங்களைவிட எனது பட்டப்படிப்புக்கு எந்த மதிப்பும் இல்லை.
நான் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமானால், கல்வி மட்டுமல்ல, நல்ல பழக்கவழக்கங்களும்  விழுமியங்களும்  முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை  இதுவரையில் நீங்கள் என்னை திருத்தி செயல்படச்செய்யவைத்ததன்மூலம் இன்றுநான் அறிந்து கொண்டேன்."என நன்றி கூறினார்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...