வியாழன், 27 பிப்ரவரி, 2020

இந்தியாவில் ஒரு புதிய நிறுவனத்தை பதிவு செய்வது எவ்வாறு


தற்போது இந்தியாவில் புதியதாக தொழில் துவங்கவிருப்பமுடையவர்கள் அப்புதிய நிறுவனத்தை மிகவிரைவாக ஏழேநாட்களில் பதிவுசெய்திடமுடியும் என்ற மிக எளிமையான நடைமுறையை நிறுவனங்களின் விவகாரத்துறை அமைச்சகம்(MCA) செயல்படுத்திடுகின்றது இதற்காக நாம்எந்தவொரு அரசு அலுவலகங்களுக்கும் நேரடியாக செல்லத்தேவையில்லை மேலும் நாம் இந்தியாவில் எந்தவொரு இடத்திலிருந்தும் அனைத்து ஆவணங்களையும் மின்னனு முறையில் பூர்த்திசெய்து பதிவேற்றம் செய்தால் மட்டும் போதுமானதாகும் இவ்வாறு புதிய நிறுவனங்களை பதிவுசெய்வதற்காகவே பல்வேறுநிறுவனங்களும் நிறுவனங்களின் விவகாரத்துறை அமைச்சக குழுக்களும் நமக்கு உதவதயாராக இருக்கின்றன இதற்காக முதலில் 1 தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமம் 2. பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுமம் 3.ஒருநபர் நிறுமம் 4.தனிநபர் உடைமை நிறுமம் 5.பொதுவான கூட்டாண்மை நிறுமம் ஆகிய ஐந்துவகைகளில் பதிவு செய்திட முடியும் இவை ஒவ்வொன்றும் வசதி வாய்ப்புகளில் பல்வேறு வகைகளில் வேறுபட்டவையாக இருப்பதால் இவற்றுள் ஒரு வகையை மட்டும் நாம் பதிவு செய்யவிரும்பும் நிறுவனத்தின் வகையாக முடிவுசெய்து தெரிவுசெய்து கொள்க அதற்கடுத்ததாக இந்தியாவில் ஒரு வியாபார நிறுவனத்தை பதிவு செய்வதற்கான நடைமுறையை எளியதாக ஆக்குவதற்காக நிறுவனங்களின் விவகார்த்துறை அமைச்சகம் (MCA)ஆனது INC-29 எனும் படிவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது அதாவது பதிவுசெய்திட விரும்பும் ஒரு நிறுவனத்திற்கான வணிக பெயர் ஒப்புதல் பெறுதல், இயக்குனரின் அடையாள எண் (DIN),நிறுவனத்தை பதிவுசெய்வதற்கான விண்ணப்பம் ஆகிய மூன்று செயல்களையும் இந்த (INC-29)படிவத்திலேயே செயற்படுத்திடுமாறு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது மூன்றாவதாக நிறுவனங்களின் விவகாரத்துறை அமைச்சகத்திலிருந்து (MCA) பதிவுசெய்யப்படும் நிறுவனத்தின் இயக்குனர்களுடைய DSC எனும் மின் கையொப்ப சான்றிதழ்களை பெறவேண்டும் இதற்காக தேவையான ஆவணங்களை இணையத்தின் வாயிலாக சமர்ப்பித்தால்போதும் அவைகள் சரியாக இருந்தால் இந்தமின்கையொப்ப சான்றிதழை இரண்டு நாட்களுக்குள் பெறமுடியும் தகவல் தொழில்நுட்ப சட்டம்200-இன் விதிகளின்படி, மின்னணு வடிவத்தில் சமர்ப்பிக்கப்படும் அனைத்து ஆவணங்களின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மைக்காக அவைகளுடன் இந்தமின் கையொப்பங்களைப் பயன்படுத்துவதை குறிப்பிடுகின்றன, அவைகளின்படி சமர்ப்பிக்கப்படும மின்னணு ஆவணம் பாதுகாப்பானது என்றும் உண்மையானது என்றும் அனுமதிக்கின்றது. எனவே, MCA21 எனும் மின் ஆளுமை திட்டத்தின் கீழ் நிறுவனங்கள் / வரையறுக்கப்பட்டகூட்டாண்மை நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் அனைத்து கோப்புகளும் கையொப்பமிட அனுமதிக்கப் பெற்ற நபர் தனக்கு அளிக்கபபட்ட மின் கையொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் இந்த INC-29படிவத்தை தயார் செய்யவேண்டும் அதற்காக இயக்குனரின் அடையாள எண் (DIN ),நிறுவனத்தின் பெயர் ஒப்புதல்சான்றிதழ் , MOA மற்றும் AOA ஆகிய அடிப்படை ஆவணங்களின் விவரம் ,பதிவுசெய்யப்பட்ட அலுவலக சரிபார்ப்புவிவரம் ,இயக்குநர்களின் நியமனக்கடிதங்கள் அறிவிப்புகள் ஆகிய விவரங்கள்இந்த INC-29 படிவத்தில் பூர்த்தி செய்யப்படவேண்டும் ஒரு நிறுவனத்தை பதிவு செய்ய இந்த INC-29 படிவத்துடன் சமர்ப்பிக்கத் தேவையான ஆவணங்கள் பின்வருமாறு மார்பளவு உருவப்படம் , நிரந்தரவருமானவரி எண்அட்டை(PAN card), சமீபத்திய வங்கி கணக்குஅறிவிக்கை,தொலைபேசிஅல்லதுசெல்லிடத்து பேசியின் பட்டியல் அல்லது எரிவாயு இணப்பு பட்டியல், ஒட்டுரிமைசான்றட்டை , பதிவு அலுவலகம் வாடகையாக இருந்தால் ஆங்கிலத்தில் வழக்குரைஞரின் சான்றளிக்கப்பட்ட வாடகை ஒப்பந்த பத்திரம் ,வாடகை பதிவு அலுவலகம் வழங்குவதற்கான மறுப்பின்மை சான்று, பதிவுஅலுவலகத்தின் முகவரிஅடையாள சான்று ஆகிய ஆவணங்களின் வருபட்ட நகல்கள் இந்த படிவத்துடன் இணைக்கப் படவேண்டும் அதாவது மேலே கூறிய அனைத்து ஆவணங்களின் வருடப்பட்ட நகல்களும் இந்த INC-29 படிவத்துடன் இணைக்கப் படவேண்டும் அதன்பின்னர் INC-29 படிவத்தில் தேவையானஅனைத்து விவரங்களும் பூர்த்தி செய்யப்பட்டு தயாராக உள்ளதெனில்இந்த INC-29 படிவத்தை இணையத்தின் வாயிலாக நிறுவன விவகாரத்துறை அமைச்சகத்தின் (MCA) இணைய வாயிலில் சமரப்பிக்கவேண்டும் பிறகு இந்த INC-29 படிவம் சரியான விவரங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் குறிப்பிட்ட நிறுமம் பதிவுசெய்யப்பட்டதாக அதற்கான பதிவுஎண்ணுடன் certificate of incorporation எனும் நிறுவன பதிவு சான்றிதழ்கிடைக்கும் அதனை தொடர்ந்து இந்த நிறுவனங்களின் பதிவெண் அடிப்படையில் நம்முடை ய நிறுவனத்திற்கான வருமான வரி அலுவலகத்தின் வாயிலாக நிரந்தர வருமான வரி கணக்குஎண் பெறமுடியும் மேலும் நம்முடைய நிறுவனத்திற்கென தனியாக வர்த்தக வங்கியில் வங்கி கணக்கு ஒன்றினை துவங்கமுடியும் அதற்குப் பிறகு நம்முடைய நிறுவனத்தின் வணிக வகை மற்றும் அளவை பொறுத்து பொதுசரக்குசேவைவரி (GST) பதவிற்காக விண்ணப்பிக்க வேண்டும். பொதுவாக நாம் துவங்கவிருப்பது தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம் எனில் குறைந்தபட்சம் 2 இயக்குநர்களும் அதிகபட்சம் 15 இயக்குநர்களும் அவ்வாறே குறைந்தபட்சம் 2 பங்குதாரர்களுடனும் அதிகபட்சம் 50 பங்குதாரர்களுடனும் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக பதிவுசெய்திடலாம் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுமமாக (LLP) கூட நாம் பதிவுசெய்திடமுடியும் ஆனால் சிறிது கூடுதலான நடைமுறையை நம்முடைய நிறுவனத்தை பதிவுசெய்வதற்கு பின்பற்றிடவேண்டும் ஒரேயொரு பங்குதாரரும் இயக்குநரையும் கொண்ட சிறிய ஒருநபர் நிறுமமாக கூடபதிவுசெய்திடமுடியும் என்ற செய்தியை மனதில் கொள்க

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

தகவல் தொழிலநுட்ப காலகட்டமானஇந்த 21 ஆம் நூற்றான்டிலும் சிறிய அளவில் ஏராளமான வகையில்தொழிலை துவங்கலாம்


1.Online Tutorialsபொதுவாக தற்போது நம்மில் பெரும்பாலோர் இருந்த இடத்திலிருந்தவாறே எந்தவொரு புதிய தொழில்நுட்பத்தையும் கற்க விரும்புகின்றனர் அதனால் அவ்வாறான கற்றலை வழங்குகின்றஇணையகல்வியாக தொழிலநுட்பம் இசை நாட்டியம் ஓவியம் சமையல்ஆகியவற்றிற்கான ஆன்லைன் டுட்டோரியல் கல்வி எனும் தொழிலை குறைந்தசெலவில் நடத்தலாம் 2. Animation தற்போதைய தகவல்தொழில்நுட்ப காலகட்டத்தில் அசைவூட்டு (Animation)படங்கள் மிகமுக்கிய இடத்தை வகிக்கின்றன அதிலும் நிறுவனங்கள் தங்கள் பொருட்களை சந்தைபடுத்திடுவதற்கு இந்த அசைவூட்டுபடங்கள்மிகமுக்கிய பங்களிக்கின்றன அதனால் சிறிய அளவில் அசைவூட்டு படங்களை உருவாக்கி டும் பணியைசெய்யலாம் 3. Advertisement Makingதற்போத எந்தவொரு உற்பத்தி பொருளும் விளம்பரமில்லாமல் சந்தையில் நிலைத்து இருக்கமுடியாத என்றநிலையில் பொருளிற்கான விளம்பரங்களை உருவாக்கிடும் பணியை செய்திடலாம் 4.Advertisement Agencyஇவ்வாறான விளம்பரதயாரிப்பாளர் தனியுலகமாகவும் பொருள்உற்பத்தி தனியுலகமாகவும் இருக்கின்றநிலையில் அவைகளுக்கு இடையேஇணைப்பு பாளமாக விளங்கிடும்விளம்பர முகவர் பணியை செய்யலாம் 5. Photographyஎந்தவொரு செய்தியையும் உரையாக வழங்குவதைவிட அவ்வுரையுடன் விளக்கப்படமும் இணைத்து வழங்கும்போது மக்களின் மனதில் அந்த செய்தி உடன் பதியும் அதற்காகபடப்பிடிப்பு மிகமுக்கிய இடத்தைவகிக்கின்றது இவ்வாறான படபிடிப்பு தொழில் குறைந்த முதலீட்டில் செய்திடமுடியும் 6. Freelance Writerசெய்திகளை உரையாக எழுதி உருவாக்குவது அதிலும் எந்தவொரு செய்தி நிறுவனத்தையும் சாராமல்சுதந்திரமாக எழுதுவது மிகச்சிறந்த தொழில் வாய்ப்பாகும் இவ்வாறான யாரையும் சார்ந்திராத சுதந்திர எழுத்தாளர் பணியை செய்திடுக 7.Translation servicesஅனைத்து தொழில்களும் உலகளாவிய இன்றையை நிலையில் நாடுகளுக்கு இடையேஅந்நாடுகளின் பேசப்படும் மொழிகளுக்கு இடையே பாளமாக விளங்குவது மொழிபெயர்ப்பு பணியாகும் அவ்வாறான மொழிபெயர்ப்பு பணியானது மிகமுக்கியஇடத்தினைவகிக்கின்றது அதனால் இந்த மொழிபெயர்ப்பு பணியைசெய்திடலாம் 8. Domain and Hostingதற்போது இணையமில்லாது எந்தவொரு செயலும் இல்லை அதிலும் வியாபரத்திற்குஇணை பக்க்கள்தான் அடிப்படையாக விளங்குகின்ற இன்றையை நிலையில் வியாபார நிறுவனங்கள் அனைத்தும் தத்தமக்கு என தனியாக இணையபக்கத்தை உருவாக்கிடவிரும்பிடுகின்றன அதனை எளிமையாக செயல்படுத்திபடுவதற்காக Domain and Hosting என்ற சேவைத்தொழிலை மேற்கொள்க 9.Search Engine Optimization (SEO)Consultantஇணையத்தில் கூகுள் யாகூ .பிங்க்போன்றவை தேடுபொறியில் முதன்மை இடத்தை வகிக்கின்றன அவ்வாறான தேடுபொறிகளில் நம்முடைய இணையபக்கத்தைமுதல் பத்து இடங்களில் கொண்டு வருமாறு செய்வதற்காக நம்முடைய இணையபக்கத்தின் உள்ளடக்கங்களை மாற்றியமைத்திடவேண்டியுள்ளது அவ்வாறு தேடுபொறியில் இணையபக்கத்தை முதலிடங்களை கொண்டுவருவதற்கானஆலோசகர் பணிமிகமுக்கிய இடத்தை வகிக்கின்றது அவ்வாறான தேடுபொறி ஆலோசகர் பணியை செய்திடுக

சனி, 22 பிப்ரவரி, 2020

எந்தவொரு பணியுடனும் கூடுதலாக நாம் செய்திடும் பணிஎன்றும் வீணாகாது


இருசக்கரவாகணம் பழுதுபார்ப்பு கடைவைத்திருந்தவரின் கடைக்கு ஒருவர் தன்னுடைய இருசக்கரவாகணத்தை பழுதுநீக்கம் செய்துதரும்படி கொண்டுவந்து விட்டிருந்தார் அந்த இருசக்கரவாகணத்தின் பழுதினை சரிசெய்ததோடு மட்டுமல்லாமல் அந்த இருசக்கர வாகணத்தினை கழுவி சுத்தம் செய்து புதிய இருசக்கரவாகணம் போன்று பளபளவென மின்னும்படி செய்தார் அந்த கடையின் சொந்தக்காரர் இதனை கண்ணுற்ற அருகிலிருந்த மற்ற கடைகாரர்கள் அவரைபார்த்து கோரிய பணியை மட்டும் செய்திடாமல்கோராத பணியையும் சேர்த்து செய்துள்ளாயேஅதனால் உனக்கு என்ன பயன் எனகிண்டல்செய்தனர் சரிபரவாயில்லை என்னுடைய மனதிருப்திக்காக நான்அவ்வாறுசெய்தேன் என பதிலிருத்தார் அந்த கடைகாரர் அதன்பின்னர் அந்தஇருசக்கரவாகணத்தின் சொந்தக்காரர் வந்து தன்னுடைய வண்டியை பார்த்தபோது அதனுடைய பழுதுமட்டும் நீக்கியதுமட்டுமல்லாது அவருடைய இருசக்கரவாகணத்தைய புதியதாக தோன்றிடுமாறு செய்துள்ளதை பார்த்து மிகவும் ஆச்சரியத்துடன் அவருடைய விசுவாசத்தை பராட்டி தன்னுடைய நிறுவனத்திற்கு தேவையான அனைத்து பணிகளையும் அந்த கடைகாரருக்கு வழங்கி கெளரவித்தார் எந்தவொரு பணியுடனும் கூடுதலாக நாம் செய்திடும் பணிஎன்றும் வீணாகாது என்ற கருத்தினை மனதில்கொள்க

வியாழன், 20 பிப்ரவரி, 2020

நம்முடைய வியாபார இணையதளத்தின் உள்ளடக்கங்களை வாடிக்கையாளரை கவரும்வண்ணம் எவ்வாறுமேம்படுத்திடுவது


தற்போதைய இருபத்தொன்றாம் நூற்றாண்டானது இணைய உலகமாக உள்ளது அனைவரும் அறிந்த செய்தியே அதனால் நம்முடைய நிறுவனம் வியாபாரத்தில் வெற்றிநடைபோடவேண்டுமெனில் கண்டிப்பாக நம்முடைய நிறுவனத்தின் இணையதளத்தினை வாடிக்கையாளர் அனைவரையும் கவரும்வண்ணம் மேம்படுத்திடவேண்டும் அதற்கான வழிமுறைகள் பின்வருமாறு 1 பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தேடுபெறிகளின் வாயிலாகவே தாங்கள் விரும்பும் பொருட்களை தேடி அடைகின்றனர் அதனால் நம்முடைய இணையபக்கத்தில் பயன்படுத்திடும் சொற்கள் தேடுபொறிகளின் சொற்களுக்கு பொருத்தமானதாக இருக்குமாறு அமைத்து கொள்க 2 முகப்பு பக்கத்தில் நம்முடைய நிறுவனத்தை பற்றிய அறிமுகம் இரத்தினசுருக்கமாக இருக்கவேண்டும் மேலும் விவரங்களை தனியான இணைப்பு பக்கத்தில் அல்லது தாவியின் பக்கத்தில் வழங்குக 3 நம்முடைய இணையபக்கத்தை அடையவேண்டிய அவசியமான முடிவை முதலிலும் அதற்கடுத்தமுக்கியதகவல்களை அடுத்தும் அதற்கடுத்த தகவல்களை மூன்றாவதாகவும் பிரமிடு வழிமுறையில் நம்முடைய இணையத்தின் முக்கியத்துவத்தை விவரிக்கும் சொற்களை கட்டமைத்திடுக 4 நம்முடைய இணைய பக்கங்களில் அமைந்துள்ள உரையானது எவ்வாறுஎழுதியது என பார்வையாளர்கள் கவலைபடமாட்டார்கள் ஆனால் இவ்வாறான உரையை யார் எழுதியது என அறிந்துகொள்ளும் ஆவலைதூண்டிடுமாறு இந்த உரைஅமைந்திருக்குமாறு வடிவமைத்திடுக 5 நம்முடைய வியாபார நடவடிக்கைகக்கு ஏற்ப இந்த முகப்புபக்கத்தில் உருவப்படங்கள் கானொளிபடங்கள் இசைகள் வினாடிவினாக்கள் போன்றவைகளுள் பொருத்தமானதை கொண்டு வடிவமைத்திடுக 6 நாம் கூறவிழையும் கருத்துகளை சுருக்கமாகவும் தெளிவாகவும் சிறுசிறுபத்திகளாக பிரித்தும் தேவைப்பட்டால் கூடுதல் இணைப்புபக்கத்துடனும் முகப்பு உரையை வடிவமைத்திடுக 7 நம்முடைய முதன்மை குறிக்கோளே பார்வையாளர்களை வாடிக்கையாளர்களாக மாற்றுவதுதான் அதனால் பொருத்தமான தொழில்நுட்பங்களையும் இணைப்புகளையும் திறவுச்சொற்களையும் (Good Keywords) பார்வையாளர்களை கவரும் வண்ணம் கட்டமைத்திடுக

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

பெயர்நீக்கம் செய்யப்பட்ட இயக்குநர்கள் நிறுவனங்களுக்கான என Condonation of Delay Scheme 2018 வாய்ப்பினை பயன்படுத்தி கொள்க


MCA எனும் நிறுமங்களின் விவகாரத்துறை அமைச்சகமானது கடந்த செப்டம்பர் 2017 அன்றைய நிலவரப்படி ஏறத்தாழ 3,09,614 நிறுமங்களின் இயக்குநர்கள் அவர்களுடைய நிறுமங்கள் கடந்த 2013-14 , 2014-15, 2015-16 ஆகிய மூன்றாண்டுகளாக தொடர்ந்து நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 164(2) ,167(1)(a)களின் படி ஆண்டறிக்கைகளை நிறுமங்களின் அமைச்சக இணையதளத்திற்குள் பதிவேற்றம் செய்ய தவறியதால் தகுதிநீக்கம் செய்துள்ளது மேலும் இந்த நிறுவனங்களின் செயல்பாட்டினையும் நிறுமங்களின் சட்டம் 248(5) இன் படி June 30, 2017 வாய்ப்பளித்தும் தவறியதால் நிறுத்தம்செய்துள்ளது அதனை தொடர்ந்து இவர்கள் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு வேறு எந்த நிறுவனத்திலும் இயக்குநர்களாக பதவி வகிக்கமுடியாது என தடைவிதித்துள்ளது அதனால் நிறுமங்களின் அமைச்சகத்திற்கு இந்த ஒருமுறை மட்டும் எங்களை மன்னித்து எங்களுடைய இந்த ஆண்டுகளுக்கான அறிக்கையை பதிவேற்றம் செய்திட அனுமதிக்குமாறு இந்த நிறுவனங்கள் கோரியதை தொடர்ந்து நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 403, 459 and 460களின் படி ஒருமுறை மட்டுமான வாய்ப்பினை வருகின்ற 31.03 2018 இற்குள் தங்களுடைய ஆண்டறிக்கைகளை பதிவேற்றம் செய்துவிட்டால் இந்த நிறுவனங்களின் இயக்குநர்களின் தகுதிநீக்க தடையை விலக்கி கொள்வதாக சுற்றறிக்கை எண் 16/2017, Condonation of Delay Scheme, 2018 (COD Scheme) நாள் 29.12.2017 என்ற திட்டத்தின்படி அறிவித்துள்ளது இந்த திட்டமானது 1.1.2018 முதல் 31.03.2018 வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவித்துள்ளது இந்த திட்டத்தின்படி MCA21 இணைய தளத்தில் இவ்வாறான நிறுவனங்கள் சமர்ப்பிக்காத Form 20B அல்லது Form MGT-7 , Form 21Aஅல்லது Form MGT-7, Form 23AC, 23ACA, 23AC-XBRL, 23ACA-XBRL, AOC-4, AOC-4(CFS), AOC (XBRL) , AOC-4(non-XBRL , Form 66 , Form 238/ADT-1 ஆகிய படிவங்களுடனும் ரூபாய் முப்பதாயிரம் கட்டணத்துடன் 31.03.2018 சமர்ப்பிக்கவேண்டும் . இந்த இயக்குநர்களுக்கு வழங்கப்பட்ட DINஎண்களும் தற்காலிகமாக இந்த மூன்று மாதத்திற்கு மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது ஆகவே கடந்த 2013-14 , 2014-15, 2015-16 ஆகிய மூன்றாண்டுகளில் தங்களுடைய ஆண்டறிக்கைகளை நிறுமங்களின் அமைச்சக த்தின் MCA21 எனும் இணையதளத்திற்குள் பதிவேற்றபடாமல் தவறிய நிறுவனங்கள் இந்த அருமையான வாய்ப்பினை பயன்படுத்தி தங்களுடை நிறுவனத்தின் பெயர் நீக்கத்தையும் தங்களுடைய நிறுவன இயக்குநர்களின் தகுதி இழப்பையும் தவிர்த்து கொள்ளுமாறு கோரப்படுகின்றார்கள் மேலும் விவரங்களுக்கு MCA21 எனும் இணைய தளத்திற்கு சென்ற விவரங்களை அறிந்து கொள்க அல்லது அருகிலுள்ள நிறுமச்செயலர்களை அனுகி தங்களுக்கான தடையை நீக்கிகொள்க என பரிந்துரைக்கபடுகின்றது

சனி, 15 பிப்ரவரி, 2020

வி்யாபார வெற்றிக்கதை


பிரட் ஸ்மித்என்பவர் அமெரிக்காவிலுள்ள யேல் பல்கலைக்கழகத்தில் 1965 ஆம் ஆண்டில் இளங்கலை பட்டம் பெற்றார். அவ்வாறான இளங்கலை பட்டப்படிப்பின்போது ஒரு பகுதியாக, அவர் அமெரிக்கநாட்டில் பொருட்களின் போக்குவரத்து வழிவகைகளை ஆய்வு செய்து பொருளியல் கட்டுரைஒன்றினைசமர்ப்பித்தார். அதில் பெருமளவிளான பொருட்களனைத்தும் தரைவழி போக்குவரத்தில் கொண்டுசெல்வதையும் பயனிகள் வான்வழியில் செல்வதையும் கண்டறிந்தார் அதனை தொடர்ந்து பயனிகள் போக்குவரத்திற்கு பயன்படும் விமானம் மூலம் சிறிய, அத்தியாவசிய பொருட்களையும் கொண்டு செல்வதுஒரு சிறந்தசெயலாக இருக்கும் என அவருடைய மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. அதற்காக கடைசி நிமிட ஆவணமாக அதனை சேர்த்துசமர்ப்பித்தார். இருப்பினும், அத்தகைய நிறுவனத்தை எவ்வாறு உண்மையில் நடத்துவது என்பது குறித்த விவரங்களை அதில்அவர் செல்லவில்லை. அதனால் அவருடைய கட்டுரையானது "சி" என்று வரிசைப்படுத்தப்பட்டது. ஆனால் ஸ்மித் அந்த யோசனையை கைவிட்டுவிடாமல் 1971 ஆம் ஆண்டில் அதனை செயற்படுத்திடுவதற்கான ஃபெடரல் எக்ஸ்பிரஸ்என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். ஆனால்அந் நிறுவனம் நிறுவப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள், நலிவுறும் விளிம்பிற்குள் தள்ளப்பட்டிருந்தது. ஏனெனில் உயரும் எரிபொருள் செலவுகளின் காரணமாக மாதமொன்றிற்கு ஒரு மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து நிறுவனத்தின் கையிருப்பில் $ 5000 மட்டுமே இருந்தது.அதாவது அன்றாடம் தேவைப்படும் விமானஎரிபொருளை கொள்முதல் செய்வதற்குகூட போதுமான நிதியில்லாமல் அல்லாடவேண்டிய சூழ்நிலை உருவானது அதனால் ஸ்மித் தன்னுடைய நிறுவனத்திற்காக உள்ளூரில் பல்வேறு நிதிநிறுவனங்களிடமிருந்து நிதியுதவி கோரினார் ஆனால் அவருடைய . கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பொதுவாக இவ்வாறான நிலையில் பெரும்பாலானவர்கள்தம்முடைய நிறுவனத்தை மூடிவிட்டு இந்ததொழிலே நமக்கு வேண்டாம் என விலகிஓடிவிடுவார்கள், . ஆனால் பிரெட் ஸ்மித் அவ்வாறான முடிவெதும் எடுத்திடாமல்.அருகிலிருந்த லாஸ் வேகாஸ் எனும்நகரத்திற்கு பறந்து சென்று அங்கு அறிமுகமானஒருசில நண்பர்களின் நிதிநிறுவனங்களிடமிருந்து சொந்த தனிப்பட்ட நபரின் உத்திரவாதத்தின் அடிப்படையில் தன்னுடைய நிறுவனத்தின் நடைமுறை மூலதனத்திற்கு தேவையான நிதியினை பெறமுயற்சி செய்து வெற்றி பெற்றார் அதனால் மறுநாள் அவருடைய ஃபெடரல் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் ஆச்சரியமாக 32,000 டாலர்களாக உயர்ந்திருந்தது இது ஒரு சில நாட்களுக்கு விமானங்களின் எரிபொருளை கொள்முதல் செய்து விமான இயக்கம் தடைபெறாமல் இருப்பதற்கு போதிய நடைமுறைமூலதன அளவாகும் அதனை தொடர்ந்து . அவருடைய ஃபெடரல் எக்ஸ்பிரஸ் நிறுவனம் குறிப்பிடத்தக்க அளவு வருமானமும் ஈட்டத்தொடங்கியது நாளுக்கு நாள் மென்மேலும் வளர்ந்துகொண்டேவந்துஇன்று 220 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் செயல்படும் ஒரு உலகளாவிய மாபெரும் நிறுவனமாக ஃபெடரல் எக்ஸ்பிரஸானது 45 பில்லியன் அமெரிக்கடாலர் வருடாந்திர வருவாய் ஈட்டிடும் நிறுவனமாக ஆலமரம்போன்று தழைத்தோங்கி வளர்ந்துள்ளது. எந்தவொரு இக்கட்டான நிலையிலும் மனந்தளர்ந்துவிடாமல் முயன்றால் வெற்றி நிச்சயம்

வியாழன், 13 பிப்ரவரி, 2020

நவம்பர்2018முதல் மின்னனு வழிபட்டியல்(E-WayBill)உருவாக்குவதிலான மாற்றங்கள்


16.11.2018 முதல் சரக்கு சேவை வரியின் கீழ் உருவாக்கபடும் மின்வழிபட்டியல்களை உருவாக்குவதில்பின்வருமாற்றங்கள் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன 1 ஒரேவிலைபட்டியல் எண்ணைகொண்டுபோலியான மின்னனு வழிபட்டியல் உருவாக்குவதை சரிபார்ப்பது பொருளை விற்பணை செய்பவரின் விலைபட்டியலுக்கு தேவையான மின்னனு வழிபட்டியலை பொருள்போக்குவரத்தாளர் அல்லது பொருளை பெறுபவர் ஒருமுறை மட்டும் உருவாக்கியிருந்தால் அதன்பின்னர் அதே பொருள்போக்குவரத்தாளரோ அல்லது பொருளை பெறுபவரோ அல்லது பொருளை விற்பணை செய்பவரோ அதே விலைபட்டியல் எண்ணிற்கு மின்னனு வழிபட்டியலை மீண்டும் உருவாக்க முனைந்தால் உடன் இந்த விலைபட்டியல் எண்ணிற்கான மின்னனு வழிபட்டிய-லொன்று ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்டது என்ற எச்சரிக்கை செய்தியைதிரையில் காண்பிக்கும் இருப்பினும்தொடர்ந்து தேவையென அவர்விருப்பபட்டால் நகல் மின்னனு வழிபட்டியலை16.11.2018 முதல் சரக்கு சேவை வரியின் கீழ் உருவாக்கஅனுமதிக்கின்றது 2. பொருட்களை மாநிலங்களுக்கிடையே ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்திடுவதற்கான போக்குவரத்தில் CKD/SKD/Lots எனும்வசதி மாநிலங்களுக்கிடையே பொருட்களைஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்திடுவதற்காக ஒட்டுமொத்த அளவிற்கு அனுமதிபெற்றிருப்பார்கள் நடைமுறையில் ஒட்டுமொத்த பொருட்களையும் ஒரேசமயத்தில் போக்குவரத்து வாகணத்தின் வாயிலாக கொண்டுசெல்லவோஅல்லது கொண்டுவரவோமுடியாது அதனால்பொருட்களை தனித்தனி தொகுப்பாக பிரித்து அனுப்புவார்கள் அல்லது பெறுவார்கள் அவ்வாறான நிலையில்CKD/SKD/Lots எனும்வசதியானது ஒட்டுமொத்த பொருட்களுக்கு வரி விலை பட்டியல் (Tax Invoice) அல்லது பொருள்நுழைவு பட்டியல் (Bill of Entry) ஒன்றினை மட்டும் தயார்செய்து அதன் நகலை ஒவ்வொரு தொகுப்புபொருட்களுக்கான பொருள் வழங்கும் பட்டியலுடன்( Delivery Challan) சேர்த்து அனுப்புவதற்கும் அல்லது பெறுவதற்கும் கடைசி தொகுப்பின்போது மட்டும் உண்மைவிலைபட்டியலை அல்லது பொருள்நுழைவு பட்டியலை பொருள் வழங்கும் பட்டியலுடன் சேர்த்து அனுப்புவதற்கும் அல்லது பெறுவதற்கும் அனுமதிக்கின்றது மாநிலங்களுக்கிடையே பொருட்களின் ஏற்றுமதியின்போது நாம் ஏற்றுமதி செய்யவிரும்பும் நபரின் முழுமுகவரியையும் Other Country எனும் பகுதியில் அவருடைய மாநிலத்தின் பெயருடன் குறிப்பிடவேண்டும் 2.1.இந்த வசதியின்படி பொருட்களை மாநிலங்களுக்கிடையே ஏற்றுமதிசெய்திடும்போது Bill To என்பதன்வாயிலாக அனுப்புவோரின் SEZ இன்URP அல்லது GSTIN விவரங்களுடன் எந்தவிமானதளம் அல்லது கப்பல் துறைமுகம் அல்லது சோதனை சாவடியின் வழியாக கொண்டு செல்லவிருக்கின்றது என குறிப்பிடவேண்டும் 2.2.இந்த வசதியின்படிமாநிலங்களுக்கிடையே பொருட்களை இறக்குமதி செய்திடும் போது Bill Fromஎன்பதன்வாயிலாக அனுப்புபவரின் SEZ இன்URP அல்லது GSTIN விவரங்களுடன் எந்தவிமானதளம் அல்லது கப்பல் துறைமுகம் அல்லது சோதனைஇடத்தின் வழியாக கொண்டு வரவிருக்கின்றது என குறிப்பிடவேண்டும் மாநிலங்களுக்கிடையே பொருட்களை ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்திடும்போது பின்வரும் நான்குவகைகளில் ஒன்றினை பின்பற்றவேண்டும் 1 Regular இந்த வகையில் பொருளை விற்பவரும் பொருளை வாங்குபவரும் நேருக்கு நேராக பொருளை கொடுத்து பெற்றுகொள்வார்கள் 2. Bill To - Ship To இந்த வகையில் பொருளை கொண்டுசெல்வதற்கான போக்குவரத்தாளர் எனும் மூன்றாவது நபரும் இந்த நடவடிக்கைகளில் பங்குகொள்வார் 3.Bill From - Dispatch From: இந்தவகையில்பொருளை கொண்டுவருவதற்கான போக்குவரத்தாளர் எனும் மூன்றாவது நபரும் இந்த நடவடிக்கைகளில் பங்குகொள்வார் 4.Combination of both இந்த வகையில் இவைகள் கலந்ததான நடவடிக்கையாகும் 3.மாற்றப்பட்ட Bulk Generation Toolஎனும் கருவி பயனாளர் ஒருவர் மின்னனு வழிபட்டியல் தயார்செய்திடும்போது அதில் Transaction Details என்பதன்கீழுள்ள Transaction type , Sub Type ஆகியவற்றை தெரிவுசெய்து கொண்டவுடன் தானாகவே தொடர்புடைய Document Type என கீழிறங்கு பட்டியல் ஒன்று விரியும் அதில் தேவையானதை தெரிவுசெய்து கொண்டால் போதும் அவ்வாறே 'Bill From' & 'Bill To' என்பதில் சரியான அஞ்சலக குறியீட்டு எண்ணை குறிப்பிட்டால் போதும் உடன் தானாகவே தொடர்புடைய மாநிலத்தின் பெயர் பிரதிபலிக்கும் மேலும் தொடர்புடைய பொருளிற்கான HSNகுறியீட்டினையும் வரிவிகித்தை அதற்கான கீழிறங்கு பட்டியலி-லிருந்தும் தெரிவுசெய்து கொண்டால்போதும் உடன்CGST, SGST, IGST & CESS ஆகிய தொகைதானாகவே உருவாகிவிடும் மேலும்CESS Non-Advol Value" & "Other Amount (+/-)" எனும் புலத்தினை சேர்த்து பயனாளர் விரும்பினால் வேறு ஏதேனும் கட்டணங்கள் அல்லது கழிவுத்தொகைகளை இந்த பட்டியலில் குறிப்பிடலாம் அதற்கேற்ப விலைபட்டியலின் மொத்தத்தொகை தானாகவே மாறி யமையும் அதனோடு விலைபட்டியலின் மதிப்பு ரூ.10 கோடிக்குமேல் உயரும்போது இந்த மின்னனு வழிபட்டியல் (EWB) பற்றிய தகவலை தானாகவே குறுஞ்செய்தியாக (SMS) தொடர்புடைய நபருக்கு எச்சரிக்கை செய்தியை அனுப்புகின்றது அதனடிப்படையில் தொடர்புடைய நபர் உடன்இந்த நடவடிக்கைகளில தவறு ஏதேனும் இருந்தால் திருத்திகொள்ளமுடியும் போக்குவரத்தாளரின் சுட்டியை(I D) கண்டிப்பாக Part-A slip உம் Part-B உம் குறிப்பிடவேண்டும்

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

உணவகத்தொழில்துறையில் நெகிழ்வான கட்டுதல் (Flexible Packaging) எனும்வசதி


தற்போது உணவு ,பானங்கள் போன்ற நுகர்வு பொருட்களின் தேவை அதிகரித்து வருவதால், இவைகளின் உற்பத்தியாளர்கள் கட்டுதலில் கூடுதல் மதிப்பை உருவாக்க வேண்டிய தேவைஉருவாகின்றது. இந்நிலையில்நெகிழ்வான கட்டுதலானது உணவுத் தொழில்துறைக்கு மறுக்கமுடியாத ஆபத்துதவியாளராக விளங்குகின்றது, ஏனெனில் இது உணவு பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், நீடித்து நிலைக்கும் தன்மைக்கும் பொருந்தக்கூடிய தன்மையையும் வழங்குகிறது. நெகிழ்வானகட்டுதலை உணவகபொருட்கள் உற்பத்தியில் பயன்படுத்துவதால் பல்வறு நன்மைகள்கிடைக்கின்றன அவை பின்வருமாறு 1.நீடித்த உணவுப்பொருட்களின் பாதுகாப்பு , இந்த நடைமுறையில் உணவுப்பொருட்களை நீண்டகாலத்திற்கு சேமித்து வைத்திருக்கும்போது வழக்கமான நடைமுறையில் சேமித்து வைத்திடும்போது வீணாகி அழிந்து கெட்டுபோவதைபோன்றில்லாமல் நல்லநிலையில் நீண்டநாட்கள் இருக்கஉதவுகின்றது நெகிழ்வான கட்டுதலில் பெரும்பாலும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்கள், ஈரப்பதம் ஆகியவற்றிலிருந்து உணவுப் பொருட்களை மிகப்பாதுகாப்பாகவும், புத்தம்புதியாதாகவும் வைத்திருப்பதற்கான வழியை வழங்குகின்றது. எனவே, நெகிழ்வான கட்டுதல் செய்திடும் நிறுவனங்கள் உணவு பொருட்களை நீண்டநாட்கள் கெடாமல் வைத்திட இதன்வாயிலாக உறுதிப்படுத்துகின்றன. 2 மிகச் செலவுகுறைந்தது இதனை நடைமுறைபடுத்திட அதிக செலவிடத்தேவயில்லை அதாவது பெரிய நிறுவனங்கள் மட்டுமே இதனை நடைமுறைபடுத்தமுடியும் என்றில்லாமல் சிறுதொழில்நிறுவனங்கள் கூட இதனைநடைமுறைபடுத்தி கட்டுதல் செலவினை குறைத்திடலாம் இவ்வாறு கட்டுதலுக்கு குறைந்தஅளவு பொருட்களும் எடைகுறைந்த வாறும் நம்முடைய உணவுப்பொருட்களின் உற்பத்தி தேவைக்கு ஏற்பவும் கட்டுதல் செய்துகொள்ளலாம் 3. பயனாளர் விரும்பியவாறு கட்டுதல்பல்வேறு வகைகளாலான உணப்பொருட்களின் தோற்றம் அளவிற்கு ஏற்ப வாடிக்கையாளர் விரும்பியவண்ணம் வரத்தக தேவைக்கேற்ப கட்டுகளின் அளவை தோற்றத்தை வடிவமைத்து அளவிடுதல் செய்து பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் கட்டுதலை உருவாக்கிகொள்ளமுடியும் 4சுற்றுச்சூழலின் நண்பன் தற்போதைய நடைமுறையில் கட்டும்பொருட்களால் அதிக கழிவுகள் உருவாகி பெரியஅளவ சுற்றுசூழல் பிரச்சினை பெரும் அச்சுறுத்தலாக உயர்ந்துவருகின்றது அதனை தவிர்த்து இந்த புதிய நெகிழ்வு கட்டுதல் முறையானது விரைவான மறுசுழற்சி வழிமுறையினால் சுற்றுசூழலின் இனிய நண்பனாக விளங்குகின்றது போக்குவரத்தின்போது ஏற்படும் சேதத்தினை தவிர்க்கின்ற மறுசுழற்சியாக பயன்படும் இந்த நெகிழ்வான கட்டுதல் (Flexible Packaging) எனும்வசதியை பயன்படுத்தி கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது

சனி, 8 பிப்ரவரி, 2020

தற்போதைய நம் அனைவருடைய எதார்த்த வாழ்க்கையின் உண்மையான நிலை


அமெரிக்க நாட்டின் ஒரு நகரத்தில் வானாளவ உயர்ந்த ஒருவீட்டினுடைய 80 ஆவது மாடியில் 2 சகோதரர்கள் வாழ்ந்த வந்ந்தனர். ஒரு நாள் அவ்விருவரும் வெளியில் தங்களுடைய பணிகளை முடித்தபின்னர் திரும்பி தங்களுடைய வீட்டின் கீழ்தளத்திற்கு வந்ததும், மாடிவீடுகளில் மேல்தளத்திற்கு செல்ல உதவிடும் லிஃப்ட் வேலை செய்யவில்லை என்பதையும், அவர்கள் 80 ஆவது மாடியிலுள்ள தங்களுடைய வீட்டிற்கு படிக்கட்டுகளின் வழியாக மட்டுமே ஏறிசெல்ல வேண்டும் என்பதையும் கண்டு அவர்கள் திகைத்துநின்றுவிட்டனர். அதனை தொடர்ந்து எப்படியாவது தங்களுடைய வீட்டிற்கு சென்று சேரவேண்டுமே என படிகட்டுகளின் வழியாக 20ஆவது மாடிவரை போராடி ஏறியபின், அவர்களுடைய உடல் மிகசோர்வாகவும் மனநிலை மிகபதட்டமாகவும் இருந்தநிலையில் அவ்விருவரும், தங்களுடைய கைகளில் வைத்திருந்த பைகளை எடுத்துகொண்டு படிஏறுவது மிககடிணமானசெயலாகும் என அந்த 20ஆவது மாடியிலேயே தங்களுடைய கைகளில் வைத்திருந்த பைகளை வைத்துவிட்டால் படிஏறவது சுலபமாக இருக்கும் நம்முடைய பைகளை மறுநாள் வந்து எடுத்துகொள்ளலாம் என அவர்கள் வர முடிவு செய்தனர். தொடர்ந்து அவர்கள் தங்களுடைய கைபைகளை அங்கே 20ஆவதுமாடியிலே வைத்துவிட்டு படிஏறினார்கள். அவ்வாறு படிகளின் வாயிலாக அவ்விருவரும்40 ஆவது மாடிவரை போராடிஏறியபோது தம்பியின் கால்களிரண்டும் வலிஅதிகமாகிவிட்டது மேலும் எவ்வாறு படிஏறுவது எனமுணுமுணுக்க ஆரம்பித்தார் அதனைதொடர்ந்து இருவரும் சண்டையிட ஆரம்பித்தனர். இருந்தபோதிலும் எப்படியோ 60ஆ வது மாடிவரை ஒருவருக்குவர் நீயா நானா என செல்லும் வழியெல்லாம் சண்டையிட்டு கொண்டே தொடர்ந்து படிகளின் வாயிலாக ஏறிக்கொண்டிருந்தனர். மிகுதி ஏறுவதற்கு இன்னும் 20மாடிகள் மட்டுமே இருப்பதை உணர்ந்த அவ்விருவரும், படியேறும்போது சண்டையிட்டு கொண்டிருந்தால் உடல் சக்திதான் வீணாகுமே தவிர மாடிபடிஏறுவதற்கான திறன் குறைந்துவிடும் என சமாதானமாக சண்டையை நிறுத்தி, நிம்மதியாக தொடர்ந்து ஏற முடிவு செய்தனர். மிகநீண்ட காலஅவகாசம் எடுத்துகொண்டு அமைதியாக மிகுதி படிகளை ஏறி இதற்குமேல் தங்களுடைய கால்களால் ஒரு அடிகூட எடுத்துவைத்து நடக்கமுடியாது என்ற நிலையில்ஒருவழியாக 80 ஆவது மாடியிலிருந்த தங்களுடைய வீட்டின் வாயிற்கதவிற்கு முன்அவ்விருவரும் வந்தடைந்தார்கள். ஆயினும் அவ்விருவரும் கதவின் முன் அமைதியாக நின்று மற்றவர் கதவைத் திறக்கக் காத்திருந்தனர். ஆனால் அவ்விருவரும் 20 ஆவது மாடியில் வைத்துவிட்டு வந்த தங்களுடைய கைப்பைகளில்தான் தங்களுடைய வீட்டின் சாவி இருப்பதை அப்போதுதான் அவ்விருவருக்கும் தெரியவந்தது அதனால் மீண்டும் 20 ஆவது மாடிக்கு சென்று தங்களுடைய கைப்பையிலிருக்கும் சாவியை எடுத்துகொண்டு வருவதா அல்லது வேறு என்ன செய்து தங்களுடைய 80 ஆவது மாடியிலுள்ள வீட்டிற்குள் செல்லமுடியும் என திகைத்து தலையில் கைவைத்து கொண்டு அவ்விருவரும் உட்கார்ந்து விட்டனர் . அதேபோன்று நம்மில் பலர் நம்முடைய பெற்றோர்கள், ஆசிரியர்கள் ,நண்பர்கள். சுற்றத்தார்கள் ஆகியோர்களின் கனவு எதிர்பார்ப்பு ஆகியவற்றை நிறைவேற்றும் பொருட்டாகவே 20 வயதுவரை வாழ்ந்து வருகின்றோம்.அதனால் நம்முடைய லட்சியங்களையும் விருப்பங்களையும் கனவாக மட்டுமே காண்கிறோம் ஆயினும் நம்முடைய விருப்பம் கனவு போன்றவைகளுக்கு ஏற்ப நாம் வாழஆரம்பிப்பது என்பது ஒருசிலருக்கு மட்டும் மிகஅரிதாகவே இருக்கும், சுற்றியிருப்பவர்களின் ஆசையை நிறைவேற்று வதற்காகவே நாம் வாழவேண்டியநிலையில் மன அழுத்தத்தினாலும் பணிச்சுமையினாலும் சோர்வடைகின்ற நிலைக்கு தள்ளப்பட்டு புதிய வாழ்க்கையை துவக்கவேண்டிய இக்கட்டான நிலையில் நாம் வாழ துவங்குகின்றோம் இருந்த போதிலும் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டும் விடுபடாமலும் நம்முடைய கனவை கைவிட்டுவிட்டு சுற்றியுள்ளவர்களின் ஆசையின் அடிப்படையில் உற்சாகமாக நம்முடைய பணியை செய்யவேண்டிய கட்டாயத்தில் நம்முடைய வாழ்க்கையை நடத்திவருகின்றோம் . இவ்வாறாக நாம் 40 ஆவது வயதை எட்டும் நேரத்தில், நம்முடைய நோக்கங்களையும் கனவுகளையும் இழக்க ஆரம்பிக்கின்றோம். அதனால் நாம் வாழ்கின்ற நம்முடைய வாழ்க்கையும் திருப்தியடையாமல் நம்முடைய இலட்சியவாழ்க்கையையும் அடையமுடியாமல் , புகார் கூறி விமர்சிக்க ஆரம்பிக்கின்றோம். நம்முடைய மனம் ஒருபோதும் திருப்தி அடையாததால் நம்முடைய வாழ்க்கையானது துன்பகரமாக அமைகின்றது இவ்வாறாக நாம் . 60 ஆவது வயதினை எட்டும்போது, இனிமேல் புகார் செய்வதற்கு எதுவும் இல்லை ஏ மாற்றுவதற்கு எதுவுமில்லை வாழ்க்கையானது துன்பமெதுவும் இல்லாமல் அமைதியாக செல்ல ஆரம்பிக்கும்போதுதான் நாம் நம்முடைய 20 ஆவது வயதில் நம்முடைய லட்சியங்களையும் விருப்பங்களையும் செயல்வடிவம் கொடுக்காமல் அடடா நம்முடைய 20 ஆவது வயதில் கைவிட்ட கனவுகளையும் நம்முடைய லட்சியங்களையும் விருப்பங்களையும் கண்டிப்பாக செயல் படுத்தியிருந்தால் இன்று நம்முடைய வாழ்க்கையின் மிகஉயரத்திற்கு வந்திருக்கலாமே மீண்டும் 20 ஆவது வயதிற்கு திரும்பசென்று நம்முடைய லட்சியங்களையும் விருப்பங்களையும் திரும்பவும் செயல்படுத்தமுடியுமா என திகைத்து தலையில் கைவைத்து கொண்டு சோர்வடைந்து நம்முடைய இறுதி வாழ்க்கையை யும் நிம்மதியாக வாழ முடியவில்லை யே என மனஅதிருப்தியுடன் வருத்தத்துடன் நம்முடைய வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கின்றோம்

சனி, 1 பிப்ரவரி, 2020

நூலுடன் இணைப்பில் இல்லாத காற்றாடி


ஒரு முறை ஒரு தந்தையும் மகனும் ஊருக்கு அருகில்நடைபெற்றகாற்றாடி பறக்க விடும் விழாவிற்குச் சென்றனர். அந்த காற்றாடிவிழாநடைபெற்ற இடத்தில் வண்ணமயமான காற்றாடிகளால் வானம்முழுவதும் நிரம்பியிருப்பதைக் கண்டு மகன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அதனை தொடர்ந்து அம்மகன் தனது தந்தையிடம் ஒருகாற்றாடியையும் அதனை வானத்தில் பறக்கவிடுவதற்காக உதவிடும் ஒரு நூல் ஒரு ரோலர் ஆகியவற்றை உடனடியாக தனக்கு வாங்கி தருமாறு தன்னுடைய தந்தையிடம் கோரினான் தங்களுடைய மகன் விரும்பி கோரியதால் அந்த தந்தையும் ஒருகாற்றாடியை வாங்குவதற்காக அந் த திருவிழா நடைபெறும் இடத்திலுள்ள ஒரு கடைக்கு சென்று தங்களுடைய மகனுக்காக ஒரு காற்றாடியையும் நூல்கண்டு ஒன்றினையும் ஒரு ரோலரையும் வாங்கிதங்களுடைய மகனிடம் வழங்கினார் அவரது மகன் நூலை ரோலரில் சுழற்றிவைத்துகொண்டு அந்த காற்றாடியை நூலில் கட்டி உயரே வானத்தில் பறக்கவிட ஆரம்பித்தான். விரைவில், அம்மகனுடைய காற்றாடியானது வானத்தில் உயரத்தில் பறக்க ஆரம்பித்தது. சிறிது நேரம் கழித்து, மகன், “அப்பா, இந்த காற்றாடியை கட்டியுள்ள நூலானது அவ்வாறு பறக்கும் காற்றாடியை அதற்கு மேலே உயரேசென்ற பறக்கவிடாமல் தடுத்து வைத்திருப்பதாகத் தெரிகிறது, அதனால் அந்த கட்டினை அவிழ்த்துவிட்டால் காற்றாடியானது சுதந்திரமாக பறக்கமுடியுமல்லவா , மேலும் அந்த காற்றாடியானதுமிக உயரத்தில் பறந்து செல்லுமல்லவா அதனால் . நான் அந்த காற்றாடியின் கட்டினை அவிழ்த்துவிடட்டுமா அப்பா ! ” என அனுமதி கோரினான் அதனைதொடர்ந்து மகனின் விருப்பப்படி காற்றாடியை ரோலருடன் இணைத்திருந்த நூலை அவிழ்த்துவிட அனுமதித்தார் உடன் அந்த மகனும் ரோலருடன்காற்றாடியை இணைத்திருந்த நூலை வெட்டி இணைப்பினை துண்டித்தான் . அதனை தொடர்ந்து அந்த காற்றாடியானது காற்றின் வேகத்தினால் கொஞ்சம் கொஞ்சமாக மேலே செல்ல ஆரம்பித்தது. அதனை கண்ட அவருடைய மகன் மிகவும் மகிழ்ச்சியுடன் "அப்பா! அப்பா! காற்றாடி மிகவும் சுதந்திரமாக உயரே பறந்து செல்லகின்றது பார்த்தீர்களா!” குதூகளித்தான் ஆனால், சிறிது நேரத்தில் அந்த காற்றாடியானது , மெதுவாக, கீழே வர ஆரம்பித்தது. அதன்பின்னர் , விரைவில் அது அருகிலிருந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில் விழுந்தது. அவ்வாறானதைக் கண்டு மகன் ஆச்சரியப்பட்டான். , “அப்பா, காற்றாடியை இணைத்திருந்த நூலை வெட்டிய பிறகு, காற்றாடியானது சுதந்திரமாக மேலே பறந்து சென்றுக௧ொண்டேஇருக்க வேண்டுமல்லவா!. ஆனால், அது ஏன் கீழே விழுந்தது?“ என வினவினான் தன்னுடைய தந்தையிடம் , “மகனே, . இணைக்கப்பட்ட நூலானது காற்றடியை உயரே செல்வதை தடுத்து பிடிக்கவில்லை, ஆனால் காற்றடிக்கும் போது காற்றாடியானது உயரத்தில் மிகச்சரியாக பறக்க உதவுகிறது, மேலும்காற்றாடி சரியான திசையில் மேலே செல்ல உதவுகின்றது. நூலின் இணைப்பினை வெட்டும்போது, நூல் வழியாக காற்றாடிக்கு வழங்கிய ஆதரவு இல்லாமல் காற்றின் வேகத்தில்காற்றாடி அடித்து செல்லப்பட்டு அந்த காற்றாடியானது பிடிப்பெதுவும்இல்லாததால் கீழே விழுந்தது அவ்வாறே நாம் வாழும் நம்முடைய வாழ்க்கைதில், நாம் சில செயல்களுடன் முக்கியமாக நம்முடைய குடும்பத்துடன் பிணைக்கப்பட்டுள்ளோம் என்று தவறாக எண்ணுகின்றோம், அவ்வாறான பிணைப்புதான் நம்மை மேலும் உயரவிடாமல் தடுக்கின்றன என்றும் தவறாக எண்ணுகின்றோம் ஆயினும் அவ்வாறான பிணைப்புதான் நம்முடைய வாழ்வின் வெற்றிக்கும் வளர்ச்சிகு் மகிழ்ச்சியான நம்முடைய வாழ்விற்கும் அடிப்படையாகும் ”. என தங்களுடைய மகனுக்கு அறிவுரை கூறினார் .மகன் தன்னுடைய தவறை உணர்ந்தான். ஒரு சில சமயங்களில் நாம் நம்முடைய குடும்பத்தினருடன், பிணைக்கப்படாவிட்டால், விரைவாக முன்னேறி, நம்முடைய வாழ்க்கையில் புதிய உயரங்களை எட்ட முடியும் என தவறாக எண்ணுகின்றோம். ஆனால்,நம்முடைய குடும்பம், நம்முடைய அன்புக்குரியவர்கள் நம்முடைய வாழ்க்கையில் கடினமான நேரத்தை அவர்களின் ஆதரவோடு தப்பிப்பிழைக்க உதவுகிறார்கள் என்பதையும், நாம் வாழ்க்கையில் உயர்ந்த சிகரங்களை அடையநம்முடைய குடும்ப உறுப்பினார்கள் நம்மை ஊக்குவிப்பதைல் உணரத் தவறிவிடுகின்றோம். அவர்கள் நம்மை முன்னேறவிடாமல் கட்டிவைத்திருக்கவில்லை, நம்முடைய இக்கட்டில் நம்மை தட்டிகொடுத்து ஆறுதல் அளித்து நம்மை சோர்வுறாமல் வெற்றியை அடைய உதவுகின்றார்கள் அதனால் அவ்வாறான உறவினை ஒருபோதும் வெட்டிவிட்டு தனியாக வாழலாம்எனும் தவறான முடிவெடுக்காதீர்கள் .

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...