ஞாயிறு, 19 நவம்பர், 2023

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்டில் இவர் செய்கின்ற ஒவ்வொரு சிறு சிறு செயலிற்கும் சரியாக செய்யவேண்டுமென அவரது பெற்றோர்கள் அந்த இளைஞரிடம் நச்சரி்ததுகொண்டேயிருப்பதால் அதிக விரக்தியடைந்துவந்தார்.
  இந்த நேர்காணலுக்காகஅவர் காத்திருந்தபோது, அவ்விளைஞர் , “இன்றைய நேர்காணலில் நான் வெற்றி பெற்றால்  நான் என் பெற்றோறுடன் சேர்ந்து வாழும் வீட்டிற்கு விடைபெற்று கொண்டு வந்து இந்நகரத்தில் குடியேறி விடுவேன். அவ்வாறு செய்துவிட்டால், நான் இனிஎப்போதும் என் பெற்றோர்கள் அடிக்கடி சிறு செயலுக்கும் நச்சரித்துகொண்டிருப்பதை நான்  கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை. " என சிந்தித்தார்
தொடர்ந்து தன்னுடைய பெற்றோர்கள் தன்னிடம் கடிந்துகொள்ளும் தன்னுடைய சிறுசிறுசெயல்களைப் பற்றியும் அவர் சிந்தித்தார்.
அவர் குளியலறையிலிருந்து வெளியேவரும்போது அவரது தாயார் அந்த குளியலறைகதவை கதவை சரியாகமூடச் சொல்வார், மேலும் தண்ணீர் குழாய் சரியாக மூடப்பட்டிருக்கின்றதாவென குளியலறையிலிருந்துவெளியேறுவதற்கு  முன் சரிபார்த்துவிட்டு வரச்சொல்வார்க.
மேலும் அவரது தந்தை ஒவ்வொருஅறையிலிருந்து வெளியேறுமுன்  மின்விசிறி சுழன்றுகொண்டிருப்பதையும் அல்லது மின்விளக்குகள் எரி்ந்து கொண்டிருப்பதையும் கண்டிப்பாக அனைத்து அவைகளின் இயக்கத்தை நிறுத்திவிட்டு வெளியேறுமாறு கூறுவார்.
வீட்டிலுள்ள பொருட்களை அந்தந்த பொருட்களை அதனதன் இடத்தில் சரியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவனுடைய தாய் எப்பொழுதும் அவனைத் திட்டிக்கொண்டே இருப்பாள்.
இதையெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே, "இதையெல்லாம் நான் ஏன் கேட்க வேண்டும், எனக்கு இந்த பணி கிடைத்தால், நான் நிச்சயமாக அவர்களுடன் சேர்ந்து வாழ்கின்ற  வீட்டை விட்டு வெளியேறிவிடுவேன்" என்று முடிவுசெய்துகொண்டிருந்தார்.
சுற்றும் முற்றும் பார்த்தபோது, அலுவலக வராண்டாவில் அவனைபோன்ற ஏராளமான  இளைஞர்கள் அந்த பணிக்கான நேர்முகத்தேர்வில் கலந்து கொள்வதற்காக அமர்ந்து காத்துகொண்டிருந்ததை  கண்டார் .
அப்போது அவ்வலுவலகத்தில் வராண்டா விளக்கு  காலை பத்து மணியாகியும் அனைத்து நிறுத்தாமல் தொடர்ந்து எரிந்துகொண்டிருப்பதை கண்டார். தன்னுடைய பெற்றோர்களின் அறிவுரையை நினைவுக்கு கூர்ந்தவுடன் எழுந்து விளக்கை அனைத்து நிறுத்தினார்.
அப்போது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த குளிர்நீர் கருவியில் இருந்து தண்ணீர் சொட்டுவதை கண்டார். உடன் அவர் எழுந்துசென்று சரியாக குழாயை மூடி தண்ணீர் தொடர்ந்த கொட்டிக்கொண்டேயிருப்பதை நிறுத்தினார்.
இரண்டாவது தளத்தில் நேர்காணல் நடைபெறும் என்று அறிவிப்பு செய்யப்பட்டந்தது.
எனவே அவ்விளைஞன் எழுந்து இரண்டாவது மாடிக்குச் செல்லும் போது, செல்லும் வழியில்  நாற்காலிகள் சிதறி  இருப்பதைக் கண்டு, அவைகளை வழியிலிருந்து  ஓரமாக நகர்த்தி வைத்துவிட்டு இரண்டாவது மாடிக்குச் சென்றார்.
இப்போது,இரண்டாவது மாடியில் வெளியே காத்திருந்த இளைஞன், ஏற்கனவே  தன்னைபோன்ற அங்கு நேர்முகத்துவந்திருந்தவர்கள் நேர்முகத்தேர்விற்கான அறைக்குள்செல்வதையும் உடனடியாக வெளியே வந்துவிடவதையும் கண்டார்.
இதுகுறித்து விசாரித்தபோது, நேர்காணல் செய்பவர்கள் அவர்களிடம் கேள்வி எதுவும் கேட்கவில்லை என்பது தெரியவந்தது.
  அதாவது அவர்களிடமிருந்து தேவைையான ஆவணங்களைம்ட்டும் பெற்ற பிறகு,  உடன் அவர்களைத் திரும்பிச் செல்லும்படி கூறுகின்றனர்.
இளைஞனின்  எண் வந்தது. அவர் உள்ளே சென்று நேர்காணல் செய்பவரிடம் தனது ஆவணங்களை நீட்டினார். அவரது ஆவணங்களை சரிபார்த்த பிறகு, நேர்காணல் செய்பவர், கேள்வி எதுவும் கேட்காமல் "நீங்கள் எப்போது பணியில் சேருகிறீர்கள்?" என க்கூறியபோது
அவ்விளைஞன் மிகவும் ஆச்சரியத்துடன் அவர்களை திகைத்து பார்த்தபோது.
நேர்காணல் செய்பவர், “இன்று, நேர்காணல் செய்வதற்கு முன்பு , சிசிடிவியில் அனைவரின் நடத்தையையும் கவனித்தபோது யாரும் சரியாக செயல் படவில்லை என்பது தெரியவருகின்றது. எல்லோரும் வந்தார்கள் சென்றார்கள், ஆனால் யாரும்உங்களை போன்று எரிகின்ற  விளக்கை அனைத்து நிறுத்தவில்லை. குழாயில் தண்ணீர் சொட்டிகொண்டேயிருப்பதை நிறுத்தம்செய்யவில்லை சிதறிகிடந்த நாற்காலிகளை ஓரமாக நகர்த்தி வைக்கவில்லை உங்களிடம் அவைகளை சரிசெய்யவேண்டும் எனும்நல்ல  பழக்கவழக்கங்கள் உள்ளன.
சுய ஒழுக்கம் இல்லாத ஒருவர், எவ்வளவு, புத்திசாலியாக இருந்தாலும், நிர்வாகத்திலும் வாழ்க்கையிலும் வெற்றி பெற முடியாது.எனக்கூறி வெற்றிகரமாக வழிகூட்டிஅனுப்பினர்
நேர்காணல் முடிந்ததும். அந்த இளைஞன் தங்களுடைய மிகவிரைவாக தங்களுடைய வீட்டிற்கு சென்றடைந்தார் .
 உடன் தான் அவர்களிடம்  அவ்வப்போது கோபத்துடன் எரிச்சலடைந்து பேசுவதற்கு மன்னிப்புக் கேட்டுகொண்டு இன்று தான் அவர்களுடைய அறிவுரையை பின்பற்றியதால்தான் தனக்கு ஒரு நல்ல பணி கிடைத்தது எனவும் தொடர்ந்து
அவர், “என் வாழ்க்கையில், சிறிய செயல்களில் நீங்கள் நச்சரித்ததால் நான் உங்களிடம் கற்றுக்கொண்ட பாடங்களைவிட எனது பட்டப்படிப்புக்கு எந்த மதிப்பும் இல்லை.
நான் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமானால், கல்வி மட்டுமல்ல, நல்ல பழக்கவழக்கங்களும்  விழுமியங்களும்  முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை  இதுவரையில் நீங்கள் என்னை திருத்தி செயல்படச்செய்யவைத்ததன்மூலம் இன்றுநான் அறிந்து கொண்டேன்."என நன்றி கூறினார்

சனி, 11 நவம்பர், 2023

அரசகுருவும் ஆடு மேய்ப்பவனும் - பேராசை கதை

 
ஒருமுறை போஜ் எனும் அரசனின் அரசவையில்  - பலிபீடத்தை போன்று ஒரு மனிதனால் வெளியே வர முடியாத கினறு எது?  என்ற ஒரு கேள்வி எழுந்தது. உடன் அரசன் அதற்கான மிகச்சரியானபதிலை அந்த அரசவையிருந்த உறுப்பினர்களில் யாராவதொருவர் கூறுமாறு கேட்டுக்கொண்டார் அதனை தொடர்ந்து அரசவையிலிருந்த உறுப்பினர்கள் பலரும் பல்வேறுவிதமான பதில்களை அளித்தனர் ஆனால் யாராலும் அந்தக்கேள்விக்கான மிகச்சரியான பதிலால் அரசனின் ஆர்வத்தை திருப்திப்படுத்த முடியவில்லை. இறுதியில், அவ்வரசன் அரசவை குருவிடம்  ஏழு நாட்களுக்குள் இந்த கேள்விக்கான மிகச்சரியான பதில் சொல்ல வேண்டும், இல்லையெனில் அவரிடமிருந்து அரசவை குரு என்ற பதவியும் நீக்கம் செய்யப்படும் அதனோடு அவர் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறினார். அதனால்  அரசகுரு அந்த கேள்விக்கான சரியான பதிலைக் கண்டுபிடிக்க மிககடுமையாகமுயன்றார், ஆனால் ஆறு நாட்கள் கடந்தும், அவரால் பதிலெதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அரசன் கெடுவிதித்த ஏழாவது நாளன்றுஅந்த நாட்டின் அரசகுருவானவர் நம்மால் அரசன்கோரியவாறு அந்த கேள்விக்கான மிகச்சரியான பதிலை கண்டுபிடிக்கமுடியவில்லையே அடுத்து நாம் என்னசெய்வது எனமிகுந்த  மனவருத்தத்துடனும் அவநம்பிக்கையடனும் மனஆறுலிற்காக அருகிலிருந்த காட்டிற்குள் சென்றார், அவர்அந்தக் காட்டில் ஆடுமேய்ப்பவன் ஒருவனை கடந்து சென்று கொண்டிருந்தார். அந்த ஆடு மேய்ப்பவன் இவர் நம்முடைய நாட்டின் அரசகுருவாயிற்றே ஏன் மிகமனவருத்தத்துடன் காட்டிற்குள் சென்று கொண்டிருக்கின்றார் எனஅவரை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டு, "ஐயா நீங்கள் இந்த நாட்டின் அரசகுருவல்லவா ,நீங்கள்  இந்தகாட்டிற்குள்  என்ன செய்யப்போகின்றீர்கள்? நீங்கள் ஏன் மிகமனவருத்தத்துடனும் இவ்வளவு சோகமாகவும் இருக்கின்றீர்கள் ?"  என வினவினான் அந்த ஆடு மேய்ப்பவனிடம் பேசிப் பயனில்லை என எண்ணிக் கொண்டு, அரசகுருவானவர் பதில் ஏதும் பேசாமல் தொடர்ந்து நடந்து சென்று கொண்டிருந்தார். ஆடுமேய்ப்பவன்  மீண்டும், “ஐயா , உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்று கூறுங்கள். உங்களுடைய பிரச்சனைக்கான தீர்வு என்னிடம்கூட இருக்கலாம்.“  எனக் கோரினான் .அவ்வாறு அந்த காட்டிலிருந்த ஆடுமேய்ப்பவன் அவரிடம் கேட்டபோது அரசகுருவானவர் தன்னுடைய  பிரச்சனையைஅந்த ஆடுமேய்ப்பவனிடம் பகிர்ந்து கொள்வதில் எந்தத் தீங்கும் ஏற்படவழியில்லை அதனால் ஆடுமேய்ப்பவனிடம் தன்னுடய பிரச்சினயை கூறலாம் என முடிவுசெய்து ஏழுநாட்களுக்குமுன் அரசவையில் எழுந்த  கேள்வியும் அதற்கான பதிலை ஏழுநாட்களுக்குள் பதில் சொல்ல முடியாவிட்டால் தன்னுடைய அரசபதவி இழப்பதோடுமட்டமல்லாமல் தன்னை இந்த நாட்டைவிட்டு வெளியேறுமாறு அரசன் கட்டளையிட்டதையும் தன்னுடைய தற்போதைய கையறுநிலையை  பற்றியும் விவரமாக கூறினார் . இதைக் கேட்ட ஆடுமேய்ப்பவன்அரசகுருவிடம், "பரவாயில்லை ஐயா. நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் ஐயா. என்னிடம்  மந்திர கல் ஒன்று உள்ளது, அதைப் பயன்படுத்தினால் நீங்கள் எந்த வொரு பிரிச்சினைக்கும் தீர்வுகாண முடியும் விரும்பினால் எவ்வளவு தங்கத்தை வேண்டுமானாலும்கூட கொண்டுவருமாறு செய்ய முடியும்" என்றார். ஆடுமேய்ப்பவனின் இந்த பதிலை கேட்டு அரசகுருமிகுந்த ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தார். தொடர்ந்து ஆடுமேய்ப்பவன், "ஐயா இந்தக் கல்லால் நீங்கள் இனி பணத்திற்காக கவலைப்பட வேண்டியதில்லை, அதனை உங்களிடமிருந்து பெறுவதற்காக பலரும் உங்களைப் பின்தொடர்வார்கள், அதனை நான் உங்களுக்கு வழங்க முடியும், ஆனால் ஒரு நிபந்தனை உள்ளது." என கூறியதும் அரசகுருவானவர், "நிபந்தனை என்ன?" எனக்கேட்டார் உடன் ஆடு மேய்ப்பவன் , "ஐயா நீங்கள்முதலில் என் சீடனாக  மாறிசெயல்படவேண்டும்." எனக்கூறியபோது அரசகுருவானவர் முதலில், "பணத்திற்காக நான் ஏன் ஆடு மேய்ப்பவனின் சீடனாக ஆக வேண்டும்" என்று நினைத்தார். ஆனால் பின்னர் மந்திரக் கல்லின் திறனை பற்றி சிந்தித்து, அரசுகுரு ஒப்புக்கொண்டார். இப்போது, ஆடு மேய்ப்பவன், "என் சீடனாவதற்கு, முதலில் நீங்கள் என்னுடைய இந்த ஆடுகளில் இருந்த கரக்கின்றஆட்டுப்பாலை குடிக்க வேண்டும்" என்றார். அரச குரு, "ஆனால் ஒரு பிராமணர் ஆட்டுப்பாலை குடித்தால், அவனது புத்திசாலித்தனம் இல்லாமல் ஆகிவிடும், அதனால் நான் ஏன் ஆட்டுப்பாலை குடிக்கவேண்டும் எனவே நான் அந்த பாலை குடிக்க மாட்டேன்" என்றார். ஆடு மேய்ப்பவன், "அப்படியானால் சரிஐயா நீங்கள் போகலாம், நான் அந்த  மந்திரக் கல்லை உங்களுக்கு கொடுக்க மாட்டேன்" என்றான். அதன்பிறகு ஒரு நிமிடம் சிந்தித்த அரச குரு, "சரி, நான் நீ கூறியவாறு ஆட்டுப்பாலை குடிக்கின்றேன்" என்றார். ஆடு மேய்ப்பவன், ° சரி ஐயா. ஆனால் , முதலில் நான் ஆட்டுப் பாலை குடிப்பேன், பிறகு மிகுதியாக நான்வைத்திடுகின்ற ஆட்டுப் பாலைத்தான் நீங்கள் குடிக்க வேண்டும்." என்றான் அதனால் அரச குரு மிகுந்த கோபத்துடன் ,  ° ஆடு மேய்ப்பவனே நான் ஒரு பிரமான குலத்தினை சேர்ந்தவன் அவ்வாறு இருந்தும் இப்போது, நீ உன்னுடைய வரம்பை மீறுகிறாய். ஆடுமேய்ப்பவன் குடித்தது போகு மிகுதி இருக்கும் ஆட்டுப்பாலை ஒரு பிராமணர்  ஏன் குடிக்க வேண்டும்? அவ்வாறெல்லாம் செய்யமுடியாது நான் போகின்றேன்"  என பதிலளித்தார்
ஆடு மேய்ப்பவன் மீண்டும், "சரிஐயா அவ்வாறாயின் நீங்கள் போகலாம் ஐயா நான் அந்த  மந்திரக் கல்லை உங்களுக்கு கொடுக்க மாட்டேன்" என்றான்  . திரும்பவம் அந்த மந்திரக் கல்லைப் பற்றி சிந்தித்த அரச குரு ஆடுமேய்ப்பவன் கூறியவாறு செய்வதையும் ஒப்புக்கொண்டார். இப்போது ஆடு மேய்ப்பவன்  என் வீட்டின் முன் ஒரு இறந்த மனிதனின் மண்டை ஓடு திருவோடு போன்று இருக்கிறது. இப்போது நான் அந்த மண்டையோட்டிலான திருவோட்டில் ஆட்டின் பாலைகரந்து ஊற்றுகிவேன், பிறகு நான் அதை குடித்துவிட்டு, அதன் பிறகு அந்த மண்டை ஓட்டில் நான் குடித்தது போக மிகுதி உள்ள பாலையே நீங்கள் குடிக்க வேண்டும். அப்போதுதான் அந்த மந்திரக் கல்லை நான் உங்களுக்குத் தருவேன், இல்லையெனில் நீங்கள் உங்கள் வழியில் செல்லலாம்." எனமீண்டும் மற்றொரு நிபந்தனைவிதித்தான் .இதைக் கேட்ட அரச குரு நிறைய சிந்தித்து, °நான் ஒரு பிராமணர் அவ்வாறு செய்யக் கூடாதுதான் எனக்கு மிக சங்கடமாக இருக்கின்றது. இருந்தாலும் நான் நீகூறிய அனைத்து நிபந்தனைகளுக்கும் உட்படுகின்றேன் நான் இப்போது நீகூறியவாறு செய்யத்தயாராக இருக்கிறேன்." என்று ஏற்றுக்கொண்டு கூறினார் உடன் ஆடுமேய்ப்பவன் காட்டிற்கு அருகிலுள்ள தன்னுடைய வீட்டிற்கு ஆடுகளை ஓட்டிச்சென்று மண்டையோட்டிலான திருவோட்டில் ஆட்டுப்பாலைகரந்து தன்னுடைய வாய்வைத்து கொஞ்சம் பாலைகுடித்துவிட்டு மிகுதியை அரசகுருவிடம் கொடுத்தான் அரசகுருவும் தான் ஏற்றுக்கொண்ட நிபந்தனையின்படி ஆடுமேய்ப்பவன் வாய்வைத்து குடித்தது போக திருவோட்டில் மிகுதி இருந்த ஆட்டின் பாலை குடித்தார் அதனை தொடர்ந்து  ஆடு மேய்ப்பவன் , " உங்களிடம் பதில் கண்டுபிடித்துகூறுமாறு கோரிய  கேள்விக்கான பதில். பேராசை. ஆகும் அந்த பேராசையில்  ஒரு மனிதன் விழுந்தால், அவன் வெளியே வரவே முடியாது. அவ்வாறே அரசகுருவான நீங்களும் அந்த மந்திரக் கல்லைப் பெறவேண்டும் என்ற பேராசை எனும் கிணற்றில் விழுந்துவிட்டீர்கள் இதிலிருந்து உங்களால் தப்பித்து வெளியேறவே முடியாது."  என நீண்ட விளக்கமளித்தான்.

சனி, 4 நவம்பர், 2023

மகனின் வீட்டுப்பாடத்தை படித்தலால்- தந்தையின் சிந்தனையில் மாற்றம்

 ஒரு மனிதன் வீட்டுச் செலவுகள் அனைத்தையும் அவரே ஏற்க வேண்டியதாலும், முழுக் குடும்பத்தின் பொறுப்பும் தன் மீது இருப்பதாலும், உறவினர்களின் அல்லது நண்பர்களின் வீடுகளுக்கு மிமுக்கிய நிகழ்வுகளுக்குச் சென்று வருவதாலும் எப்போதும் எரிச்சலுடனும் பதட்டத்துடனும் அதிக கவலைப்பட்டுக் கொண்டு மிருப்பார். அதனோடு இவற்றையெல்லாம் நினைத்துக் கொண்டு, அடிக்கடி மனம் வருந்துவதும், தங்களுடைய பிள்ளைகளைக் கடிந்து கொள்வதும், ஏதாவதொரு செயலுத்துக்காக மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்வதும் அவருடைய வழக்கமான செயலாகிவிட்டது. ஒரு நாள் அவர்களுடைய மகன் அவரிடம் வந்து, “அப்பா, தயவு செய்து என் வீட்டுப்பாடம் செய்வதற்கு எனக்குஉதவுங்கள்” என்றான். அதனை  கேட்டவுடன் அதிக  எரிச்சலுடனும் கோபத்துடனும் தங்களுடைய  மகனைத் திட்டி விரட்டினார். ஆனால் சிறிது நேரம்கழித்து  அவரது கோபம் தணிந்தபின்னர் அவர் மகனின் அறைக்குச் சென்று பார்த்தபோது, வீட்டுப்பாடத்தினை  தன்னுடைய கையில் வைத்துகொண்டே  மகன் தூங்கிக் கொண்டிருந்தான். அவர்  மகனின் கைகளில் இருந்து எடுத்துப் பார்த்துவிட்டு, திரும்ப அதைத் திரும்பகீழே வைத்திடும் போது.. மகனுடய வீட்டுப்பாடத்தின் தலைப்பைப் படித்தார். அந்த தலைப்பானது- முதலில் நமக்குப் பிடிக்காத செயல்கள், ஆனால் அவை நல்லவை என்று பின்னர் உணருங்கள் என்றிருந்தது. தங்களுடைய மகன் இவ்வாறான  தலைப்பில் ஒரு பத்தி எழுதி இருப்பதை கண்டு அவர்மிகவும் ஆர்வத்தால்  மகன்  எழுதியதைப் படிக்க ஆரம்பித்தார்: "எனது இறுதித் தேர்வுகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், ஏனெனில் அவை பள்ளிக்கூடம் செல்லத் துவங்கும்போது இல்லை, ஆனால் இந்த தேர்வுகளுக்கு  பிறகு மிக நீண்ட விடுமுறைகள் உள்ளன அதனால் நான் மிகமகிழ்ச்சியடைகின்றேன். அதேபோன்றுமோசமான  மருந்துகளுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், ஏனென்றால் அவை முதலில் கசப்பாக இருந்தாலும் அவை என் நோயைக் குணப்படுத்துகின்றன. மேலும் அதேபோன்று என்னை எரிச்சலூட்டும் ஆனால் தினமும் என்னை  காலையில் எழுப்பி நான் தினமும் அன்றன்றையை வீட்டுப்பாடங்களை எழுதவும் படிக்கவும் உதவுகின்ற கடிகாரத்தின்அலாரத்திற்கு நான்  கூறுகிறேன். அவ்வாறே அத்தகைய நல்ல தந்தையை எனக்கு வழங்கியமைக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், ஏனென்றால் அவர் திட்டுவது முதலில் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கின்றது, ஆனால் அவர் எனக்கு பொம்மைகளைவாங்கி  கொண்டு வருகிறார், எனக்கு இனிப்புகளையும் தின்பண்டங்களையும்வாங்கி  கொண்டு வருகிறார், தினமும் என்னை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்கிறார்." என்றவாறு இருந்த மகனின் வீட்டுப் பாடத்தைப் படித்துவிட்டு, மகன் எழுதிய சொற்கள் அவர் மனதில் மீண்டும் மீண்டும் சுழன்று கொண்டிருந்தன. அதன்முடிவில் அம்மனிதன் ஒரு சிறந்த கருத்தினை உணர்ந்துகொண்டார். சிறிது நேரம் அமர்ந்து தன்னுடைய மனவருத்தத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தார். வீட்டின் அனைத்து செலவுகளையும் நான் ஏற்க வேண்டும், அதாவது எனக்கு ஒரு வீடு இருக்கிறது,  வீடு கூட இல்லாதவர்களை விட நான் சிறந்த நிலையில் இருக்கிறேன். முழு குடும்பத்தின் பொறுப்பையும் நான் ஏற்க வேண்டும் என்றால் எனக்கு ஒரு குடும்பம், மனைவி, குழந்தைகள் உள்ளனர் , குடும்பம் இல்லாமல் இந்த உலகில் தனியாக இருப்பவர்களை விட நான் மிகவும் நற்பேறு அடைந்தவன்..
என் நண்பர்களும் உறவினர்களும் தொடர்ந்து என்னுடைய வீட்டிற்கு வருகிறார்கள் நானும் அவ்வாறேஅவர்களுடைய வீட்டிற்கு சென்று வருகின்றேன், அதாவது எனக்கு ஒரு சிறந்த சமூக நிலைஉள்ளது, அதனால் என் மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் எனக்கு ஆதரவாக நண்பர்களும் உறவினர்களும்இருக்கிறார்கள். . இதனைஎண்ணி நான் மிகவும் வருந்துவது தவறு,  என இதையெல்லாம் நினைத்துப் பார்க்கையில், அவருடைய துன்பங்கள், கவலைகள் எல்லாம் மறைந்தோடிச்சென்றன. அவரது சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டது. மகனின் நெற்றியில் முத்தமிட்டு மகனுக்கு நன்றி சொல்ல ஆரம்பித்தார்
கற்றல்: நமக்கு முன்னால் எந்த பிரச்சனைகள் இருந்தாலும், எதிர்மறையான கண்ணோட்டத்தில் அவற்றைப் பார்க்கும் வரை, நாம் கவலையுடனும் எரிச்சலுடனும் இருப்போம். ஆனால் அதே சூழ்நிலையை ஒரு நேர்மறையான கண்ணோட்டத்தில் பார்த்தவுடன், நமது கண்ணோட்டம், நமது சிந்தனை நம் வாழ்க்கையை முழுமையாக மாற்றிவிடும்.



ஞாயிறு, 29 அக்டோபர், 2023

கடல் போன்று பரந்தமனப்பாண்மையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்திடுக

 
 கடற்கரையில் ஒரு வலுவான அலை வந்து அங்கு விளையாடிக்கொண்டிருந்த ஒரு குழந்தையின் காலில்அணியும் செருப்பை அடித்து சென்றது இதைகண்டஅந்த குழந்தை, அந்த கடற்கரையின் மணல் மீது விரலால்  - கடல் ஒரு திருடன் என எழுதியது. அதேகடற்கரையின் சிறிதுதூரத்தில்  வாழும்  மீனவர் ஒருவருக்கு அன்று கடலுக்குள் மீன்பிடிக்க சென்றபோது ஏராளமான மீன்கள் கிடைத்தது. அம்மீனவர் அதே கடற்கரையின் மணலில்  - கடல் என்னை சீராட்டி வளர்க்கின்றது என எழுதினார். சிறிது நேரத்தில்அருகிலுள்ள ஊரில் வாழ்ந்துவந்த , ஒரு வாலிபர் அந்த கடலில் மூழ்கி இறந்தார். மகனின் இழப்பால் வருந்திய அவ்வாலிபனின் தாய் கடற்கரையின் மணலில் - கடல் ஒரு கொலையாளி என எழுதினார் . அதே கடற்கரையின் வேறொரு பகுதியில், ஏழ்மைநிலையிலுள்ள முதியவர் ஒருவர் அந்த கடற்கரையின் மணலில் ணன ஆறுதலுக்காக நடந்து கொண்டிருந்தபோது, ஒரு பெரிய சிப்பியில் விலைமதிப்பற்ற முத்து ஒன்றைக் கண்டெடுத்தார். அவர் அதே கடற்கரையின் மணலில் - கடல் மிகவும் தாராளமான கொடையாளிஎன எழுதினார் .
அப்போது திடீரென ஒரு பெரிய அலை வந்து அந்த கடற்கரையின் மனதில் அவ்வாறு எழுதிய எழுத்தையெல்லாம் அழித்து விட்டுச் சென்றது.
 இதன் பொருள் என்ன?
 அதாவது கடலானது பொதுமக்களின் கருத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை, எப்போதும் அதன் அலைகளால் அவற்றைஅழித்து விட்டு மகிழ்ச்சியாக  இருக்கின்றது. நாமும் அவ்வாறு ஒரு கடல் போன்ற பரந்தமனப்பாண்மைக்கு மாற விரும்பினால், பயனற்ற பேச்சுகளுக்கு ஒருபோதும் கவனம் செலுத்த வேண்டாம். நம்முடைய வாழ்க்கையின் ஏற்படும் அனைத்து செயல்களுக்கும் அமைதியாக  தைரியமாக  உற்சாகமாக அவைகளை ஏற்று சொந்த வாழ்க்கைக்கு ஏற்ப அதற்கேற்ப பொருத்தமான   முடிவு செய்திடுக. உன்னைபற்றி மற்றவர்கள் என்ன எண்ணுகின்றார்கள் என கவலைப்படவேண்டாம் ஏனெனில், அவ்வப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களின் கருத்துகளும் மாறிக்கொண்டே இருக்கிறது.  அருந்த விழையும் ஒரு கோப்பை தேநீரில் ஒரு ஈ விழுந்திருந்தால், அந்த ஒரு கோப்பை தேநீரை ஈயுடன் கீழே கொட்டிவிடப்படும், ஆனால் அதுவே சுத்தமான நெய்யில்  ஈ விழுந்திருந்தால், ஈயைமட்டும் தூக்கி எறியப்படும். என்பதை மனதில் கொண்டு, எப்போதும் ஆரோக்கியமாகவும், மகிழ்சியாகவும், வாழ கற்றுகொள்க

ஞாயிறு, 22 அக்டோபர், 2023

முயலும் அதன் நண்பர்களும்!

  ஒரு வேளான் பண்ணைக்கு அருகிலிருந்த ஒரு காட்டில் முயல்ஒன்று வசித்து வந்தது அது தன்னுடைய இனமல்லாத மற்றபல்வேறு இன விலங்குளை நண்பர்கள்ஆக  கொண்டிருந்தது, அதனால் அது எப்போதும் தனது நண்பர்களுடன் வேடிக்கையாக  பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் ,  இருந்துவந்தது, அவ்வாறாக அந்த முயலின் வாழ் நாட்கள் மகிழ்ச்சியாகக் கழிந்து கொண்டிருந்தன, அதனால்  பல்வேறு நண்பர்களைநாம் பெற்றிருப்பது எவ்வளவு அதிர்ஷ்டசாலி என எப்போதும் நினைத்து மகிழ்ச்சியுடன் இருந்துவந்தது. ஒரு நாள், அதுவாழும் வேளான் பண்ணைக்கு அருகிலிருந்த ஆற்றங்கரையில் நண்பர்களுடன் விளையாடியபின் தன்னுடைய உணவிற்காக சிறிது தூரம் சென்று கொண்டிருந்தபோது, சிறிது நேரத்தில், ஒரு சிங்கம் தன்னை நோக்கி மெதுவாக தன்னை பிடித்து உண்ணவருவதைக் கண்டு பயந்துவிட்டது, அதனால் நமக்குதான் ஏராளமான நண்பர்கள் இருக்கின்றனரே  இவ்வாறான இக்கட்டான நேரத்தில் அவர்களிடம் நம்மை காப்பாற்றுமாறு உதவிகேட்போம்   அவர்கள் கண்டிப்பாக நமக்கு உதவுவார்கள்என நினைத்து அருகில் மேய்ந்து கொண்டிருந்த தன் நண்பன் குதிரையை நோக்கி ஓடி வந்து அதனிடம் தன்னுடைய உயிரை காப்பதற்காக உதவி கேட்டு அழுதது உடன் குதிரையான, "நண்பரே, நான் உங்களுக்கு உதவி செய்வதற்காகத்தான் விரும்புகிறேன், ஆனால் நான் இப்போது ஒருமுக்கியமான  வேலைக்கு செல்லவேண்டியுள்ளது " எனக்கூறியவாறு  குதிரை ஓடிவிட்டது. அப்போது முயல் மரத்தடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தன் நண்பன் காளையைப் பார்த்து, “நண்பா, என்னை கொள்ள ஒரு சிங்கம் வருகிறது. தயவு செய்து உனது கூர்மையான கொம்புகளால் அந்த சிங்க்ததினைப் பயமுறுத்தி துரத்தி என்உயிரை காப்பாற்று." எனகோரியது .உடன் அதனுடைய மற்றொரு நண்பனான படுத்துகொண்டிருந்த காளையான எழுந்து நின்று, "நண்பா, நான் என்கூரியகொம்பால்குத்தி அந்த சிக்கத்தை ஓட வைக்க முடியும், ஆனால் இந்த வேளாளர்  தன்னுடைய  வயலில் உழுவுபணி செய்திட என்னை அழைத்துள்ளார்." எனக்கூறிவிட்டு காளை நழுவியது. இப்போது, முயல் மற்றுமொரு நண்பனான ஆட்டைப் பார்த்து, அதனிடம் சிங்கம் ஒன்று தன்னை கொல்லவருவதாகவும், தயவு செய்து. தன்னை அதன் முதுகில் ஏற்றிகொண்டு  இங்கிருந்து வெகுதூரத்திற்கு ஓடி   காப்பாற்றிடமாறு கோரியது. என்னுடைய உயிரைக் காப்பாற்றவே நான் சிரமபட்டு தனியாக ஓட வேண்டும். அவ்வாறான நிலையில் நாம் நம்முடைய முதுகில் முயலை கூடுதலாக சுமந்து கொண்டு  பாரத்தை அதிகரிக்க வேண்டும் என்று ஆடு நினைத்தது. உடன் அந்த  ஆடு மட்டும் அங்கிருந்து ஓடியது. சிங்கம் தன்னை நெருங்குவதை முயல் பார்த்தது. வேறு வழியின்றி அது முடிந்தவரை வேகமாக ஓடி வெகுதூரம் சென்று தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அங்கு நிலத்தில் இருந்த ஒரு குழிக்குள் ஒளிந்து கொண்டது. அன்றைக்குதான்  முயல் தனக்கு ஏராளமான அளவில் பலவேறு நண்பர்கள் உள்ளனர்  ஆனால் இவ்வாறான ஆபத்தான நிலையில் உதவக்கூடிய உண்மையான நண்பர்களாக அவர்கள் இல்லை, அவர்கள் அனைவரும் சுயநலவாதிகளாக இருப்பதைப் புரிந்துகொண்டது,
 தன்னை காத்திட தான் நம்பக்கூடிய ஒருவன் தான் மட்டுமே என்று புரிந்துகொண்டது. கற்றல்: மற்றவர்களை நம்புவதற்கு பதிலாக உங்களைமட்டுமே நம்புங்கள்

ஞாயிறு, 15 அக்டோபர், 2023

ஏழை மனிதனின் இழப்பும் அவனது நேர்மறையான அணுகுமுறையும்!

  ஒரு ஏழை கடந்த இருபது வருடங்களாக மிகசிக்கனமாக செலவுசெய்தபின் மிகுதி செலவிடப்படாமல் உள்ள தொகையை ஒவ்வொரு பைசாவாக சேமித்து கொண்டுவந்து கனிசமான தொகைசேர்ந்ததும்  அந்த பணத்தை தனது குடும்பத்துடன் சேர்ந்து சொந்த வீட்டில் வாழ்வதற்காக தன்னுடைய குடும்பத்திற்காகவென தனியாக ஒரு வீடு கட்ட பயன்படுத்தினார். இறுதியாக, அவரது வீடு கட்டி முடிக்கப்பட்டது. அதன் பிறகு,  அவரது குடும்பத்துடன் புதுவீட்டில் குடிபுகுவதற்காக ஒரு நல்ல நாளும் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் அந்த புதுவீட்டில் குடிபுகுவதற்காக  தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல நாளிற்கு  இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது அதனால் அவரது வீடு முற்றிலும் அழிக்கப்பட்டது. ஏழைக்கு அந்த செய்தி கிடைத்ததும், நிலநடுக்கத்தால் இடிந்த போன தன்னுடைய புதிய வீடு இருக்கும் இடத்திற்குச் செல்வதற்கு முன் கடைத்தெருவிற்குச் சென்று  இனிப்பு வாங்கிகொண்டுவந்தார்  இடிந்துபோன  புதியதாக  கட்டப்பட்டிருந்த அவரதுவீ்ட்டிற்கு முன்பாக வேடிக்கை பார்ப்பதற்காக. பலர் கூடியிருந்த இடத்தை அவர் அடைந்தபோது, பலரும்  அந்த புதுவீட்டில் அவரது குடும்பம் குடிபுகும் முன்பே தனது வீட்டை இழந்ததால், அவரிடம் வருத்தம் தெரிவித்தனர். சிலர் அவருக்கு ஆறுதல் கூற முயன்றனர். ஆனால் அந்த ஏழை வேடிக்கை பார்ப்பதற்காக கூடியிருந்த அவர்கள் அனைவருக்கும்  இனிப்புகளை எடுத்து  விநியோகிக்க ஆரம்பித்தார். இதைகண்டு அங்கிருந்த அனைவரும்  அதிர்ச்சி அடைந்தனர். அவர்களுள் அந்த ஏழையை நன்கு அறிந்த  அவனது நண்பன் ஒருவன்  "நண்பரே நீங்கள் வாழ்நாளெல்லாம் மிகவும் அதிக சிக்கனத்துடன் வாழ்ந்து சேமித்த பணத்தை கொண்டு புதிதாகக் கட்டிய வீடு இடிந்து விழுந்து விட்டது, நீங்கள் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்ததை இந்த நிலநடுக்கம் வீணடித்து விட்டது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் இனிப்புகளை வழங்குகிறீர்கள்!!" என கேட்டார். உடன் ஏழை சிரித்துக்கொண்டே," நண்பரே இந்த செயலின் எதிர்மறையான பக்கத்தை மட்டுமே நீங்கள் பார்க்கிறீர்கள், எனவே, உங்களால் நேர்மறையான பக்கத்தைப் காண முடியாது. இன்று நிலநடுக்கத்தால்  வீடு இடிந்து விழுந்தது நல்லது. ஒருவேளை  இரண்டு நாட்களுக்குப் பிறகு நான் இந்த புது வீட்டிற்கு குடிபுகுந்து இதில் என் குடும்பத்துடன் வசிக்கத் தொடங்கியபின்னர் இடிந்து விழுந்திருந்தால் என்ன செய்வது. அப்போது இடிந்து விழுந்திருந்தால், நான், என் மனைவி, குழந்தைகள் அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லவா! அப்போது எவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கும்? எனவே எது நடந்தாலும் அது நன்மைக்காக மட்டுமே நடந்தது. எனக்கொள்க அதனால்தான் நான் அனைவருக்கும் இனிப்பு வழங்குகின்றேன்

ஞாயிறு, 8 அக்டோபர், 2023

இரண்டு பயணிகளின் உரையாடலிலுள்ள- ஆழ்ந்த பொருள்

 தற்போதை.ய போக்குவரத்து வசதி வாய்ப்புகள் போன்றில்லாத முற்காலத்தில் ஒருமுறை, இரண்டு வெவ்வேறு மனிதர்கள் தத்தம் கால்களால் நடந்தே செல்கின்றவாறான ஒரு மிகநீண்டதூர பயணம் செய்வதற்காக  புறப்பட்டனர். இருவரும் ஒரே பாதையில் செல்லவேண்டியிருந்தது, எனவே இருவரும் அந்த பயணத்தில் ஒன்றாக சேர்ந்தே பயனம்செய்ய முடிவு செய்து அவ்வாறே பயனித்தனர். ஏழு நாட்களுக்குப் பிறகு, அவர்கள் இருவரும்பிரிந்து தனித்தனியாக செல்ல வேண்டிய நேரம் வந்தது. முதல் பயணி , “அண்ணே, நாம் இருவருவரும் கடந்த  வாரம் முழுவதும் ஒன்றாக பயனித்தோம். நாம் இவ்வாறு நம்முடைய பயனத்தை துவங்குவதற்குமுன் நான் ஒரு பிரபலமான பணக்காரன் என்று உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன், ஆனால் நீங்கள் என்னை விட பெரிய பணக்காரர் என்று தெரியவருகிறது.” எனக்கூறினார் .உடன் இரண்டாவது பயணி , "எப்படி" எனக்கேட்டார் முதல்பயனி, "கடந்த ஏழு நாட்களாக, நீங்கள் ஏதேனும் உங்களடைய சொந்த பணியை செய்வதற்காக என்னைத் தனியாக விட்டுவிட்டு செல்லும்போது, உங்களுடைய பையிலிருந்து ஏதாவவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நான் தொடர்ந்து தேடினேன், ஆனால் என்னால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வளவு நாள் நாமிருவரும் சேர்ந்து மிக, நீண்டதூரம் பயனம் செய்து கொண்டு இருக்கின்றோம். அவ்வாறான நீண்டதூரபயனத்திற்கு மிக அதிக செலவாகும் அல்லவா அதற்காக நீங்கள் அதிக பணம் எடுத்து கொண்டு வந்திருப்பீர்கள் அல்லவா .ஆனால் உங்களிடம் எதுவும் இல்லையே இது எப்படி சாத்தியம்? நீங்கள் பணம் எதுவும் கொண்டு வரவில்லையா?" என சந்தேக கேள்வி எழுப்பினார் .அதனை தொடர்ந்து இரண்டாமவர் , “நிச்சயமாக நான்நீண்டதூர பயனத்திற்கு தேவைான பணம் கொண்டுவந்தேன். அதனுடன் என்னிடம் விலையுயர்ந்த வைரமும் சில வெள்ளி நாணயங்களும் உள்ளன." என பதிலளித்தா.ர் அந்த பதிலை கேட்டு முதல் பயனி மிகவும் ஆச்சரியப்பட்டு, "உங்களுடைய பையில் அதுபோன்ற பொருட்கள் இருந்தால்,நான்  எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால்  எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லையே ஏன்?" என்று கேட்டார். அதற்கு இரண்டாவது பயனி , "ஏனென்றால் நான் உங்களை தனியாக விட்டிட்டு வெளியே ஏதேனும் என்னுடைய சொந்த பணியை செய்வதற்காக  செல்லும்போதெல்லாம் வைரங்களையும், வெள்ளி நாணயங்களையும் பணத்தையும் உங்கள் பையில் வைத்து செல்வேன், நீங்கள் கடந்த ஏழு நாட்களாக  ஏதாவது கிடைக்குமா வென என்னுடைய பையை மட்டுமே அலசிக்கொண்டே ஆராய்ந்து இருந்தீர்களே தவிர. உங்களுடைய சொந்த பையில் ஏதேனும் உள்ளதாவென நீங்கள் நினைக்கவில்லை, பிறகு நீங்கள் எப்படி எதையும் என்னுடைய பையில் கண்டுபிடிப்பீர்கள்?"என பதிலளித்தார் .
ஆம் நாம் வாழ்கின்ற நம்முடைய வாழ்க்கையும் அவ்வாறுதான். இயற்கையானது நம்முடைய மகிழ்ச்சியை நமக்குள் வைத்திருக்கின்றது, ஆனால் இன்னும் நாம் மற்றவர்களிடம் இருப்பதை கண்டு பொறாமை பட்டுக்கொண்டே இருக்கிறோம், அவர்களிடம் இருப்பதைப் பெற விரும்புகிறோம். ஒருவர் பிறர் மகிழ்ச்சியாக வாழ்கின்றாற் எனக் காண்பதை நிறுத்திவிட்டு, நம்மிடம் உள்ள மகிழ்ச்சியைக் காண முயன்றால், அந்த நிமிடத்திலிருந்து ஒருவர் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம்.

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...