ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

நமக்கு ஒரு பணியை அளித்தால் அதனோடு தொடர்புடைய பணியையும் சேர்த்து முடித்தால் அதற்கான பரிசு கண்டிப்பாக நமக்கு கிடைக்கும்


கடலில் இயங்கிடும் படகிற்கு வண்ணம் பூசுமாறு ஒரு வண்ணம் பூசுபவரிடம் படகின் சொந்தகாரர் கோரிவிட்டுசென்றார் அந்த படகிற்கு வண்ணம் பூசி கொண்டிருந்தபோது அந்த படகின் அடிப்பகுதியில் சிறு ஓட்டை ஒன்று இருந்ததை கண்டு அதனையும் அடைத்து வண்ணம் பூசும் பணியை முடித்தார் படகின் சொந்தகாரர் வந்து வண்ணப்பூச்சினை பார்த்து திருப்தியுற்று வண்ணம் பூசுவதற்கான தொகையை அவருக்கு வழங்கிவிட்டு தன்னுடைய படகினை எடுத்து சென்றார்

மறுநாள் அதே படகின் சொந்தகாரர் பெரிய அளவு தொகையுடன் மீண்டும் அந்த வண்ணம் பூசுபவரிடம் கொண்டுவந்து கொடுத்தார் வண்ணம் பூசுபவர் உங்களுடைய படகில் வண்ணம் பூசுவதற்கான தொகையைதான நேற்றே நீங்கள் கொடுத்துவிட்டீர்களே நானும் பெற்றுகொண்டேனே இந்த பெருந்தொகை எனக்கு வேண்டாம் என மறுத்தளித்தார்

உடன் படகின் சொந்தகாரர் இந்த தொகை படகில் வண்ணம் பூசியதற்காக அன்று நான் நேற்று படகினை உங்களிடம் ஒப்படைக்கும்போது அதில் ஒரு சிறு ஓட்டை இருந்தது அதனை நான் கூறாமலேயே நீங்களாகவே அடைத்துசரிசெய்துள்ளீர்கள் அதன்பின்னரே என்னுடைய படகிற்கு வண்ணம் பூசியுள்ளீர் அந்த படகினை நான் எடுத்து சென்று அதில்உள்ளஓட்டையை பின்னர் அடைத்து சரிசெய்தபின்னர் எடுத்துசெல்லலாம் என இருந்தபோது அவசர வேலை ஒன்று குறுக்கிட்டது சரிஇந்த அவசர வேலையை முடித்தபின்னர் படகின் ஓட்டையை அடைத்து சரிசெய்திடலாம் என வெளியேசென்றுவிட்டேன் அந்த நேரத்தில் எங்களுடைய மகன் இந்த படகினை எடுத்து சென்றுவிட்டான் ஓட்டைபடகினை எங்களுடைய மகன் எடுத்து சென்றுவிட்டானேஎன்ன நடக்கபோகின்றதோ என நான் பதைபதைப்புடன் தவித்துகொண்டிருக்கும் போது எங்களுடைய மகன் மிகபத்திரமாக திரும்பிவிட்டான் நான் ஓடிசென்று என்னுடைய படகினைை பார்த்தபோது அந்த ஓட்டையை நீங்கள் அடைத்து சரிசெய்துவண்ணம் பூசியுள்ளீர்கள் எங்களுடைய மகனின் உயிரை காத்துள்ளீர்கள் அதற்கான பரிசு இந்த தொகைஎனவிளக்கம் அளித்தார்

நமக்கு ஒரு பணியை அளித்தால் அதனோடு தொடர்புடைய பணியையும் சேர்த்து முடித்தால் அதற்கான பரிசு கண்டிப்பாக நமக்கு கிடைக்கும் என்பது திண்ணம்

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

உயிர் பயம் மனிதனை எதையும் ஏற்கசெய்துவிடும்


ஒரு தொழிலகத்தில் பணிபுரியும்தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ஒன்றை நடைமுறைபடுத்தினர் அதற்காக தங்களுடைய விருப்பத்தை அதற்கான ஒப்பந்த படிவத்தை இளவரசன் என்ற தொழிலாளி தவிர மற்ற அனைவரும் கையெழுத்திட்டு நிருவாகத்திடம் சமர்ப்பித்தனர் அவனுடைய சகதொழிலாளிகள் அவனுடைய மேற்பார்வையாளர் ஆகிய அனைவரும் அந்த ஓய்வூதிய ஒப்பந்தத்தில் இளவரசனை கையெழுத்திட்டு நிருவாகத்திடம் சமர்ப்பிக்குமாறு கோரியும் இளவரசன் மட்டும் கையெழுத்திட மறுத்துவந்தார் இந்நிலையில் அந்நிறுவனத்தின் முதலாளி அவருடைய அலுவலகத்திற்கு அழைத்து தம்பி இளவரசன் நீ கையெழுத்திடுவதற்கான ஓய்வூதிய ஒப்பந்த பத்திரம் மேஜைமேல் உள்ளது பேனாவும் அருகில் உள்ளது உனக்கு இரு வாய்ப்புகள் தரப்படுகின்றன அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது அல்லது நீ நாளையிலிருந்து வேலைக்கு வரமுடியாமல்உன்னை பணிநிறுத்தம் செய்வது ஆகிய இரண்டில் ஒன்றை தெரிவுசெய்து கொள்க என கூறியதும் உடனடியாக அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுவிட்டான் இளவரசன் ஏன்தம்பி உன்னுடைய சக தொழிலாளர்களும் உன்னுடைய மேற்பார்வையாளரும் கோரியபோது ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவந்தாய் ஆனால் தற்போதுமட்டும் மறுபேச்சில்லாமல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டாயே என வினவியபோது மற்றவர்கள் யாரும் இந்த திட்டத்தின் முழுவிவரங்களை கூறவில்லை அதனால் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இருந்துவந்தேன் இப்போதுதான் இதன்முழுநன்மையை நீங்கள் கூறினீர்கள் அதனால் அதனை ஏற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டேன் என பதிலிறுத்தான் இளவரசன்

வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

புறங்கூறுதலை பொருட்டாக எடுத்து செயல்படவேண்டாம்


சீனநாட்டின் ஒரு கிராமத்தில் வயதான மனிதனும் அவனுடைய மகனும் வாழ்ந்துவந்தனர் அவர்களுக்கு சிறிதளவுநிலமும் அந்த நிலத்தின் விவசாய பணிக்காக ஒரு குதிரையும் தங்குவதற்கு ஒரு குடிசையும் மட்டுமேஅவர்களின் சொத்தாக இருந்துவந்தனஇந்நிலையில் அவர்களிடம் இருந்த அந்த ஒருகுதிரையும் ஓடிவிட்டது அதனால்காடுகழனிகளில்விவசாய பணிசெய்வதற்கு குதிரை இல்லாமல் என்னசெய்வது எனஅவ்விருவரும்தங்களின் வறுமையினால் வேறு குதிரையும்வாங்கமுடியவில்லையேஎன்ன செய்வதுஎன தவித்துகொண்டிருந்தனர் இதையறிந்த அவ்வூரில் வாழ்ந்துவந்த மற்றஅனைத்து கிராமமக்களும் அவருடையவீட்டிற்கு வந்து கைவசம் இருந்த ஒரு குதிரையும் ஓடிவிட்டதாமேஅடடா என்ன செய்வீர்கள்பாவம் எனதுக்கம் விசாரித்தனர் இருந்தபோதிலும் அந்த குடியானவன் தங்களுடைய துக்கத்தை அவர்கள்அனைரும் விசாரி்க்க வந்ததால் அனைவருக்கும் நன்றி கூறி அனுப்பிவைத்தார் சிலநாட்கள் கழித்தபின்னர் அந்த விவசாயியின் ஓடிபோன குதிரையானது துனைக்கு குதிரைக்குட்டியுடன்கூடிய பெண்குதிரை ஒன்றுடன் திரும்பவந்து சேர்ந்தது அதனால் அவருக்கு காடுகழனிகளின் பணியைமுடிப்பதற்கான இரண்டு குதிரைகளாகவும்மூன்றாவதாக புதிய குதிரையும் அவருக்குபரிசாக கிடைத்தது இதை கேள்வி்பட்ட அந்த கிராமத்தவரகள்அனைவரும் அவரிடம் வந்து அதிர்ஷ்டம் ஐயா உங்களுக்கு குட்டியுடன் கூடிய புதிய பெண்குதிரையுடன் உங்களுடைய குதிரை திரும்பி வந்துவிட்டதாமேஇனி உங்களைபிடிக்கவேமுடியாதுஎனஅனைவரும் அவரிடம் வந்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர் அப்போதும் அவ்வனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார் அவர் இந்நிலையில் அந்த விவசாயியின் மகன் அவர்களிடம் இருந்த இருகுதிரைகளையும் கொண்டுதங்களுடைய நிலத்தில் விவசாய பணியைசெய்யலாம் என துவங்கிடும்போது புதியதாக வந்த குதிரை அவ்விவசாயியின் மகனை காலால் எட்டி உதைத்து அவருடைய மகனின் கால் நடக்கமுடியாதவாறு உடைந்துவிட்டது அதனால் அந்த விவசாயியானவர் இவ்வாறான மகனுக்கு எவ்வாறு மருத்தும் செய்வது எவ்வாறு வயிறாற சாப்பிடுவது எவ்வாறு வாழ்வது என மிகமனவருத்ததுடன் இருந்தார் அதனை தொடர்ந்து அந்த கிராமத்து மக்கள் அனைவரும் அவரிடம் வந்து அடடா உங்களுடைய வயதான காலத்தில்உறுதுனையாக இருக்கின்ற உங்களுடைய மகனின் காலை புதியதாக வந்த குதிரை உடைத்துவிட்டதாமே பாவம் என்ன செய்யபோகின்றீர் என துக்கம் விசாரித்து சென்றனர் இருந்தபோதிலும் அவர் மனமுடையாமல் அனைவருக்கும் நன்றி கூறிஅனுப்பிவைத்தார் இந்நிலையில் அருகிலிருந்த ஜப்பான் நாடு இவர்களின் சீன நாட்டுடன் கடுமையான போர் ஒன்றை தொடுத்தது அதனால் சீன நாட்டு அரசர் நாட்டில் உள்ளஅனைத்து குடும்பங்களிலும் உள்ள இளைஞர்களை போரிடுவதற்காக கண்டிப்பாக கலந்துகொள்ளவேண்டும் என உத்திரவிட்டதை தொடர்ந்து அந்த கிராமத்தில் அந்தவயதானவிவசாயின் மகனுடைய கால்நடக்கமுடியாதவாறு உடைந்து விட்டதால்அவருடைய மகனைதவிர மற்ற அனைத்து இளைஞர்களும் போர்படையில் சேர்க்கபட்டு ஜப்பான்நாட்டிற்கு எதிரான போரில்கலந்து கொண்டனர் ஆனால் ஒருவரும் திரும்பிவரவேஇல்லை சிறிது நாட்களில் போரும் முடிவுக்கு வந்தது அந்த விவசாயியின் மகனுடைய கால் சரியாகிவிட்டது தற்போது அந்த விவசாயியின் மகன் தங்களுடையநிலத்தில் அந்த குதிரைகளை கொண்டு விவசாய பணியை நன்கு செய்தான் போதுமான வருமானத்துடன் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...