சனி, 31 அக்டோபர், 2020

மற்றவர்களுக்கு உதவுதல்

 
முன்பு ஒருகாலத்தில் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த சங்கர் எனும் சிறுவன் ஒரு கிராமத்தில் வாழ்ந்துவந்தான். ஒரு நாள், அவன் அருகிலுள்ள காட்டில் கொஞ்சம் மரங்களை சேகரித்து சுமையாக கட்டி தலையில் சுமந்து கொண்டு காடு வழியாக தன்னுடைய வீட்டிற்கு திரும்பவந்து கொண்டிருந்தான்.அப்போது மிகவும் பசியுடன் இருந்த ஒரு வயதானவரை பார்த்தான். அந்த வயதானவர் பசியாறுவதற்கு அந்த சிறுவன் சிறிது உணவு கொடுக்க விரும்பினான், ஆனால் அவன் கைவசம் கொடுப்பதற்கான உணவு இல்லை. எனவே தனது வழியில் தொடர்ந்து சென்று கொண்டிருந்தான் .அவ்வழியில், மிகவும் தாகமாக இருந்த ஒரு மானைக் கண்டான். அந்த தாகமான மானிற்கு கொஞ்சம் தண்ணீர் கொடுக்க விரும்பினான், ஆனாலும் அந்த மானிற்கு கொடுப்பதற்காக தண்ணீர் அவன் கைவசம்இல்லை. எனவே அந்த சிறுவன் தொடர்ந்து காடுவழியே பயனித்து கொண்டிருந்தான்.
பின்னர் மனிதர்கள் தங்குவதற்கு ஏதுவானசிறு குடில் போன்று கட்டி கொண்டிருந்த ஒருவரைப் பார்த்தான், ஆனால் அந்த குடிலை கட்டி முடிப்பதற்கு போதுமான மரம் அவரிடம் இல்லை. சங்கர் அந்த மனிதனது பிரச்சினையைக் கேட்டு அறிந்து கொண்டு அதற்கு தீர்வாக தன்கைவசம் இருந்த மரங்களின் கட்டினைஅவரிடம் கொடுத்து அதனை கொண்டு அந்த மனிதன் தங்குவதற்கு போதுமானகுடிலை கட்டிடுமாறு கேட்டு கொண்டான் அந்த மனிதன் மிக்கமகிழ்ச்சியுடன் சங்கர் கொடுத்த அந்த மரங்களை கொண்டு தான் தங்குவதற்கான குடிலை கட்டிமுடித்தார். மேலும் பதிலுக்கு, சங்கருக்கு கொஞ்சம் உணவும் தண்ணீரும் கொடுத்தார். இப்போது சங்கர் திரும்பிதான் வந்த வழியே திரும்பசென்று வயதான கிழவனிற்கு தனக்கு கிடைத்த உணவினை கொடுத்தான் . மேலும் அந்த மானின் தாகம் தீர்ப்பதற்கு தேவையானதண்ணீரை யும் கொடுத்தான். அதனால் அந்த பசியுடன்இருந்த வயதான கிழவனும் தாகத்துடன் இருந்த மானும் தங்களுடைய தேவை நிறைவு செய்யபட்டதால் மிகவும் மகிழ்ச்சியாக தங்களுடைய அடுத்தபணிகளை கவணிக்க சென்றனர். அதனை தொடர்ந்து சங்கரும் மகிழ்ச்சியுடன் தனது வழியில் பயனம் செய்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தான்.
அதன்பின்னர், ஒரு நாள் சங்கர் அந்த காட்டின் அருகிலிருந்த மலையில் ஏறமுயன்றபோது அம்மலையிலிருந்து கீழே உருண்டு விழுந்தான். அதனால் சங்கர் அதிக அடிபட்டு மிக்க வலியுடன் துடித்துகொண்டிருந்தான், அதனால் அவனால் நகரகூட முடியவில்லை, அங்கு அவனுக்கு உதவ யாரும் இல்லை. ஆனால், முன்பு சங்கர் உணவுகொடுத்து உதவிய முதியவர், அந்நிகழ்வினை பார்த்துமிக விரைவாக வந்து கீழே விழுந்திருந்த சங்கரை தூக்கி உட்கார வைத்தார். சங்கரின உடலில் ஏராளமானஅளவில் காயங்கள் இருந்தன. முன்னர் தாகத்திற்கு தண்ணீர் கொடுத்த மானானது சங்கருடைய காயங்களைக் கண்டு விரைவாக காட்டிற்குள் சென்று ஒருசில மூலிகைகளைக் கொண்டு வந்தது அந்த வயதான மனதின் அந்த மூலிகைகளை கொண்டு அந்த காயங்கள் அனைத்தையும் சாறுபிழிந்து கட்டுகட்டி மூடி மெதுவாக அவனுடைய வீட்டிற்கு கொண்டுசென்று சேர்த்தார். அதனால் விரைவில் அவனுடைய உடலில் ஏற்பட்ட காயங்கள் அனைத்தும் ஆறிவிட்டன சங்கரும் முன்பு போன்று எழுந்து நடமாடிடுமாறு பழையநிலைக்கு நலமாகிவிட்டான் ஒருவர் மற்றொருவருக்கு உதவயிதால் இவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடனும் வாழ்ந்து வந்தனர்.
நீதி: நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்தால், அவர்களும் உங்களுக்கு உதவுவார்கள்.

சனி, 24 அக்டோபர், 2020

ஒருவர் எவ்வாறான மனிதன் என முடிவுசெய்திடும் முன் நன்கு சிந்தியுங்கள்

 
ஒருசிறுவனின் உயிர்பிழைப்பதற்காக அவசரமாக ஒருஅறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது என அழைக்கப்பட்டதால் மருத்துவர் ஒருவர் மருத்துவமனைக்குள் விரைவாக நுழைந்தார். அறுவை சிகிச்சைக்கு தேவையான தன்னுடைய உடைகளை விரைவாக மாற்றிக்கொண்டு நேரடியாக அறுவை சிகிச்சை பகுதிக்குள் சென்றார். அங்கு வாயிலில் அறுவுசை செய்யவேண்டிய சிறுவனின் தந்தை அந்த மருத்துவக்காகக் காத்திருப்பதைக் கண்டார்.அப்போது அந்த மருத்தவரைப் பார்த்து தந்தை, “நீங்கள் ஏன் இவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டீர்கள்? எனது மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பது உங்களுக்குத் தெரியாதா? உங்களுக்கு ஏதாவது பொறுப்புணர்வு இருக்கின்றதா பணிநேரத்தில் மருத்துவமனையில் இல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என அழைத்தபின்னர் மட்டும் அவசரஅவசரமாக ஓடி வருகின்றீர்களே இது சரியா? ”என வாயில் வந்தவாறு கேள்வி கேட்டு கொண்டிருந்தார்.
மருத்துவர் புன்முறுவலுடன், “மன்னிக்கவும், முக்கியமான பணியொன்று இருந்ததால் நான் மருத்துவமனையில் இல்லை, அறுவைசிகிச்சை செய்யவேண்டும் என்ற அழைப்பைப் பெற்ற பிறகு என்னால் முடிந்தவரை வேகமாக வந்து சேர்ந்தேன், இப்போது, நீங்கள் அமைதியாக இருந்தால் , நான் என் பணியை சரியாக ச் செய்துமுடிக்க முடியும்”. என பதில் கூறினார் .அதனை தொடர்ந்து அந்த அறுவைசிகிச்சை செய்யவேண்டிய சிறுவனின் தந்தையானவர் "என்ன பெரிய அமைதி! உங்களுடைய மகன் இப்போது இந்த நிலையில் இருந்தால்,உங்களால் அமைதியாக இருக்கமுடியுமா? நான் உங்களுக்காக காத்திருப்பதை போன்று உங்களுடைய சொந்த மகன் இவ்வாறு இருந்தால் நீங்கள் இவ்வாறுதான் அமைதியாக இரு என கூறிகொண்டிருப்பீர்களா ?? ” என கோபமாக கேள்விகளை எழுப்பி கொண்டிருந்தார். மருத்துவர் மீண்டும் புன்னகைத்து, “ அனைத்தும் இயற்கையின் செயலே நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்வோம், உங்களுடைய மகன் மீண்டும் பழையநிலைக்கு வந்துவிடமுடியும் என நம்புங்கள்” என்று பதிலளித்தார்.
"யாருக்கும் துன்பம் வந்தால் தான் தெரியும் ஆனாலும் யாராலும் மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குவது மட்டும் மிக எளிது" அந்த சிறுவனின் தந்தை முணுமுணுத்தார்.
அந்த அறுவைசிகிச்சைக்கு ஒருசில மணிநேரம் ஆனது, பின்னர் மருத்துவர் மகிழ்ச்சியுடன் வெளியேவந்து, “ஐயா! வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது உங்களுடைய மகன் காப்பாற்றப்பட்டான்! ”என கூறிவிட்டு அந்த சிறுவனுடைய தந்தையின் பதிலுக்காகக் காத்திருக்காமல், “மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், இந்த செவிலியரிடம் கேளுங்கள்” என்று கூறி விட்டு ஓடிசேர்ந்தார்.
“ இவ்வளவு திமிர்பிடித்த மருத்துவர் ஏன்இவ்வளவு வேகமாக ஓடுகின்றார்? ஒருசில நிமிடங்கள் நின்று என்னுடைய சந்தேகங்களை தீர்வுசெய்திட முடியாதா, எனது மகனின் நிலையைப் பற்றி சிறிதுநேரம் விவரம் கூறிவிட்டு செல்லக்கூடாதா “ என அந்த தந்தை மருத்துவர் வெளியேறிய ஒருசில நிமிடங்களுக்குப் செவிலியரைப் பார்த்து தீட்டிக் கொண்டிருந்தார் . அதனை தொடர்ந்து அந்த செவிலியர் கண்ணீர் மல்க அந்த தந்தையிடம் “அவரது மகன் நேற்று ஒரு சாலை விபத்தில் இறந்தார், உங்கள் மகனின் அறுவை சிகிச்சைக்கு நாங்கள் அவரை அழைத்தபோது அவருடை மகனின் அடக்கம் செய்யும் பணியை துவக்கஇருந்தார். அதனால் அந்த பணியை அப்படியே நிறுத்திவிட்டு இங்கு வந்து உங்களுடைய மகனின் அறுவைசிகிச்சை பணியை வெற்றிகரமாக செய்துமுடித்து உங்களுடைய மகனின் உயிரைக் காப்பாற்றிவிட்டார் அதனால், அவர் தனது மகனின் அடக்கம் செய்திடும் பணியை முடிக்க ஓடுகின்றார். ” எனபதில் கூறினார்
நீதி: யாரைபற்றியும் ஒருபோதும் தவறாகமுடிவுசெய்யாதீர்கள், ஏனென்றால் அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது, அவர்கள் தற்போது என்ன செய்கிறார்கள் என்ற எந்தவிவரமும் மிகச்சரியாக உங்களுக்குத் தெரியாது.

சனி, 17 அக்டோபர், 2020

கப்பலை பழுதுபார்த்திடும் தொழில்நுட்ப அனுபவசாலி

 

ஒரு பெரிய கப்பல் கடலிற்குள் பயனிக்கமுடியாமல் அதனுடைய இயந்திரம் பழுதடைந்து நின்றுவிட்டது.அதனால் அந்த கப்பலின் உரிமையாளர் பல்வேறு பொறியியல் நிபுணர்களையும் அழைத்துவந்து அந்த கப்பலின் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதினை உடனடியாக சரிசெய்திடுமாறு கோரினார்அந் நிபுணர்கள் அனைவரும் எவ்வளவோ முயன்றும் அவர்களில் எவரும் அவ்வியந்திரத்தை எவ்வாறு சரிசெய்து பழையபடி இயங்கசெய்வது என்பதை மட்டும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. பின்னர் அந்த கப்பலின் உரிமையாளர் சிறு வயதிலிருந்தே கப்பல்களின் பழுதுகளை சரிசெய்திடும் பணிமேற்கொண்டிருந்த மிகவும் அனுபவசாலியான வயதானதொழில்நுட்ப பணியார் ஒருவரை அழைத்து வந்து அந்த கப்பலின் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதினை சரிசெய்து பழையபடி இயங்கிட செய்திடும்படி கோரினார். அவ்வாறான கப்பல்களின் இயந்திரத்தின் பழுதுகளை சரிசெய்வதில் மிகநீண்ட அனுபவமிக்க தொழில்நுட்ப பணியாளரான அவர் ஒரு பெரிய பையில் ஏராளமான கருவிகளை தன்னுடன் எடுத்து வந்தார், அவர் வந்ததும் உடனடியாக தன்னுடைய பணியை துவங்கினார் அதாவது . அவர் அந்த கப்பலின் இயந்திரத்தின் அடிமுதல் முடிவரை முழுவதையும் மிகவும் கவனமாக ஆய்வு செய்தார். கப்பலின் உரிமையாளரும், அனுபவசாலியான இந்த தொழில்நுட்ப பணியாளர் என்னதான் செய்கின்றார் என தெரிந்துகொள்வோமேஎன அங்கு அவ்வயதுமுதிர்ந்த தொழில்நுட்ப பணியாளரின் பணியை மேற்பார்வை செய்து கொண்டிருந்தார் , மேலும் அந்த கப்பலின் உரிமையாளர் அந்த கப்பலின் இயந்திரத்தில் என்ன பழுது ஏற்பட்டது என அனுபவசாலியான இந்த தொழில்நுட்பபணியாளரால் கண்டு பிடித்திட முடியும் மேலும் அதனை எவ்வாறு சரி செய்வது என்றும் அவருக்கு தெரியும் என்று நம்பினார். தொழில்நுட்ப அனுபவசாலியான அம்முதியவர் அந்த கப்பலின் இயந்திரத்தினை அடிமுதல் முடிவரை முழுவதும் ஆய்வுசெய்து பார்த்த பிறகு, இறுதியாக பல்வேறு கருவிகளைவைத்து தன்னுடன் எடுத்துகொண்டுவந்திருந்த தன்னுடைய கருவிகளின் பையில் இருந்து ஒரு சிறிய சுத்தியலை மட்டும் வெளியே எடுத்தார். பின்னர் அந்த கப்பலின் இயந்திரத்தின் எதையோ மெதுவாக தட்டி கொட்டி சரி செய்த பின்னர். அந்த கப்பலின் இயந்திரத்தினை இயக்குமாறு கோரினார் என்ன ஆச்சரியம் அவ்வியந்திரத்தின் பழுது எளிதாக சரி செய்யப்பட்டுவிட்டது! இவ்வளவு நேரம் பொறியியல் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் பலரும் பல்வேறு வகையில் பலமணிநேரம் முயன்றும் அவ்வியந்திரத்தின் பழுதினை கண்டுபிடித்திட முடியாத அந்த கப்பலின் இயந்திரமானது தற்போது சரியாக இயங்கதுவங்கி மிகப்பிரமாதமாக ஓடியது .அதனை தொடர்ந்து தொழில்நுட்ப அனுபவசாலியான அம்முதியவர் அந்த சிறு சுத்தியலை பழையபடி கருவிகளின் பையில் வைத்து அந்த பையை எடுத்து கொண்டு தன்னுடைய வீட்டிற்கு திரும்பி சென்றார் . ஒரு வாரம் கழித்து, அந்த கப்பலின் உரிமையாளருக்கு அம்முதிய தொழில்நுட்பபணியாளரிடமிருந்து ரூபாய்.10,000/-இற்கான பட்டியல் வந்தது அதனை கண்டவுடன் . "என்ன? ஒன்றுமே செய்யவில்லை! சிறிய சுத்தியலை மட்டும் மெதுவாக இயந்திரத்தினை தட்டி கொட்டி சரிசெய்ததற்கு ரூபாய்.10,000/- கூலியா" என உரிமையாளர் கூச்சலிட்டார். எனவே அந்த கப்பலின்முதலாளி அம்முதிய தொழில்நுட் ப பணியாளருக்கு "தயவுசெய்து இந்தபட்டியலிற்கான விவரங்களை அனுப்பிடுக" என்று கோரியபோது அனுபவ சாலியானஅம்முதியதொழில்நுட் ப பணியாளர் ஒரு குறிப்பினை அனுப்பியிருந்தார். அதில்:
சிறியசுத்தியலால் இயந்திரத்தினை தட்டுவதற்கானகூலி … .. ரூ.10.00
அந்த இயந்திரத்தில் எங்கு தட்டுவது என்று தெரிந்துகொள்வதற்கானகூலி… .. ரூ 9,990.00
ஆக மொத்தம் . ரூ10,000.00
என அந்த பட்டியலிற்கான விளக்கம் அளித்திருந்தார்
ஆம் முயற்சி முக்கியமானதுதான், ஆனால் அந்த முயற்சியை எங்கு செய்வது எவ்வாறு செய்வது என்று தெரிந்து கொள்வதுஅதைவிடமுக்கியமானதாகும் ! அதனால்தான், மிகச்சரியான இடத்தில் மிகச்சரியாக முடிவெடுக்கபடுகின்ற திறன்களே ஒருவரை மிகச்சிறந்த தொழில்முறைவல்லுனராக ஆக்குகின்றன

சனி, 10 அக்டோபர், 2020

கடின உழைப்பிற்காக பாராட்டுதல்

 
கல்வியில் சிறந்த விளங்கிய ஒரு இளைஞர் ஒரு பெரிய நிறுவனத்தில் நிருவாக பதவியான அலுவலக மேலாளர் பணிக்கு விண்ணப்பித்தார். அவரை நேர்காணலிற்கு அழைப்பதற்காக அவருடைய விண்ணப்பத்தை சரிபார்த்திடும் போது அவ்விளைஞர் மேல்நிலைப் பள்ளி முதல் முதுகலை கல்வி வரை, எந்த வருடத்திலும் மதிப்பெண் குறைவாக பெறாமல் அதிகமதிப் பெண்களுடனே கல்விகற்று முடித்தது தெரியவந்தது மேலும் அவ்விளைஞர் கல்விகற்கும் போது மிகச்சிறந்த சாதனைகள் பல புரிந்திருந்ததும் எல்லா வழிகளிலும் மிகச்சிறப்பாக வெற்றிபெற்று வந்திருந்ததும் தெரியவந்தது. அந்நிறுவனத்தின் பணியாளர் களை தெரிவுசெய்வதில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட நிருவாக இயக்குநர் அவ்விளைஞரை நேர்காணலிற்காக அழைத்திருந்தார் அந்நேர்காணலின்போது நிருவாக இயக்குநர் "நீங்கள் கல்வி நிறுவனத்தில் பயிலும்போது அதற்காக உதவித்தொகை ஏதேனும் பெற்றீர்களா?" என வினவியபோது அவ்விளைஞர் “இல்லை ஐயா! நான் உதவித்தொகை எதுவும் பெறாமல் பயின்று வெற்றி பெற்றேன் ஐயா !” என்று பதிலளித்தனர். அதனை தொடர்ந்து "நீங்கள் கல்வி பயிலுவதற்காக உங்களுடைய பள்ளி கட்டணத்தை உங்களுடைய தந்தை செலுத்தினாரா?" என அந்நிருவாக இயக்குனர் கேட்டார். அதற்கு அவ்விளைஞர் "இல்லை ஐயா ! நான் ஒரு வயதாக இருந்தபோது என் தந்தை காலமானார், அதனால் என்னுடைய பள்ளி கல்லூரி ஆகியவற்றின் கட்டணங்கள் அனைத்தையும் செலுத்தியது என் அம்மா தான்" என பதிலளித்தார்,
தொடர்ந்து அந்நிருவாக இயக்குனர் " உங்களுடைய அம்மா எங்கே பணி செய்துவருகின்றார்?" என வினவியபோது அவ்விளைஞர், “என்னுடைய அம்மா பொதுமக்களின் துணிகளை துவைத்து வழங்கிடும் பணி செய்து வருகின்றார் அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு நான் கல்வி பயிலு வதற்கான கட்டணங்களை செலுத்துவந்தார் ” என பதில் கூறினார்
உடன் நிருவாக இயக்குனர் அந்த இளைஞனின் இரு கைகளையும் காட்டுமாறு க் கேட்டுக்கொண்டார். அவ்விளைஞர் தன்னுடைய மென்மையான இரு கைகளையும் நிருவாக இயக்குநரின் பார்வைக்கு நீட்டி காட்டியபோது நிருவாக இயக்குநர் "நீங்கள் எப்போதாவது உங்களுடைய அம்மா பொதுமக்களின் துணிகளை துவைக்கும் போது அந்த பணியைசெய்வதற்காக உங்களுடைய அம்மாவிற்கு உதவியிருக்கிறீர்களா?" என வினவினார் , அவ்வி ளைஞர், “ஒருபோதும்,அந்த பணியைசெய்ய என்னுடைய அம்மா என்னை விடுவதில்லை ஐயா ! நான் உயர்கல்வி வரை நன்கு கல்வி கற்று வெற்றி பெற வேண்டும் என்று என் அம்மா எப்போதும் விரும்பினார்ஐயா !. மேலும், என்னுடைய அம்மா என்னை விட வேகமாக துணிகளைதுவைத்திடுவார் ”. என பதில் கூறியதைதொடர்ந்து
அந்நிருவாகஇயக்குனர், “அவ்வாறாயின் . இன்று நீங்கள் உங்களுடைய வீட்டிற்கு திரும்பிச் சென்று உங்களுடைய தாயின் இருகைகளையும் சுத்தம் செய்திடுக, பின்னர் நாளை காலை இங்கு வந்து என்னைப் பார்த்திடுக ”. எனவிடை கொடுத்தனுப்பினார்
அந்நிறவனத்தில் தனக்கு பணி கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக அவ்விளைஞர் உணர்ந்தார். அதனால் மிக மகிழ்ச்சியுடன் தங்களுடைய வீட்டிற்கு திரும்பிச் சென்று தன்னுடைய தாயின் கைகளை சுத்தம் செய்யஅனுமதிக்குமாறு தனது தாயிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் அவரது தாயார் தன்னுடைய மகன் இவ்வாறு அனுமதி கேட்பதை மிகவிசித்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்ந்தார், அவ்வாறான கலவையான உணர்வுகளுடன், தன்னுடைய மகனிடம் தனது இரு கைகளையும் நீட்டி காட்டினார். அவ்விளைஞர் தனது தாயின் இருகைகளை தண்ணீரால் மெதுவாக கழுவினார். அவ்வாறு தனது தாயின் கைகளை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்தபோது அவ்விருகைகளும் மிகவும் சுருக்கம் சுருக்கமாகவும் மேலும் காயங்கள் பல ஏற்பட்டு அவை ஆறிய பின்னர் பல்வேறு வடுக்களினால் கரடுமுரடாகவும் இருப்பதை முதல் முறையாக கவனித்தார் அதனால் அவர் மிகவும் வேதனையாக தன்னுடைய கைகளால் தாயின் இருஉள்ளங்கைகளை தண்ணீரால் கழுவிய போது அவரது கண்ணீரும் அவரது தாயாரின் கைகளில் விழுந்தது
தன்னுடைய தாயாரின் இந்த இரு கைகள்தான் தினமும் பொதுமக்களின் துணிகளை துவைத்து வந்தன மேலும் தன்னுடைய பள்ளி கல்லூரி கட்டணங்களை செலுத்த உதவின என அவ்விளைஞர் முதல் முறையாக மிகவருத்தத்துடன் உணர்ந்தார் . தன்னுடைய தாயின் கைகளில் உள்ள காயங்களும் அதனால் ஏற்பட்ட வடுக்களும் தன்னுடைய பட்டப்படிப்பு, கல்விசார்ந்த சிறப்புகள், ஆகியவைகளுடன் தன்னுடைய எதிர்காலத்திற்காக செலுத்த வேண்டிய விலையாகவும் இருப்பதை என எண்ணி அவ்விளைஞரின் மனம் துடிதுடித்தது . தனது தாயின் கைகளை சுத்தம் செய்தபின், அவ்விளைஞர். அன்றைய மீதமுள்ள துணிகளை துவைக்கும் பணியை தன்னுடைய தாய் செய்வதற்கு பதிலாக தானேசெய்து முடித்தார். அன்று இரவு, தாயும் மகனும் மிக நீண்ட நேரம் தங்களுடைய வாழ்க்கையின் நிகழ்வுகள் குறித்து விவாதித்தார்கள். அடுத்த நாள் காலை, இளைஞர் நிருவாகஇயக்குநரின் அலுவலகத்திற்குச் சென்றார்.
நிருவாகஇயக்குநரை கண்டவுடன் அவ்விளைஞரின் கண்களில் தாரையாக கண்ணீர் விடுவதை நிருவாக இயக்குனர் கவனித்தார். "உங்களுடைய வீட்டில் நேற்று என்ன நடந்தது அதன் காரணாக நீங்கள்என்ன, கற்றுக்கொண்டீர்கள் என்று சொல்ல முடியுமா?" என நிருவாகஇயக்குநர் வினவினார் அதற்கு அவ்விளைஞர், “நான் என்னுடைய அம்மாவின் கைகளை சுத்தம் செய்ததோடு மட்டுமல்லாமல், மீதமுள்ள துணிகளை துவைத்திடும் பணியை நானே செய்தேன்”. என பதில் கூறினார் அதனை தொடர்ந்து அந்நிருவாகஇயக்குனர் , "தயவுசெய்து அப்போது எழுந்த உங்களுடைய உணர்வுகளை கூறுங்கள்" என கோரியபோது .
அவ்விளைஞர், “ 1,முதலில் கடின உழைப்பினை பாராட்டுவது என்றால் என்னவென்று நான் தெரிந்து கொண்டேன் அதாவது . என்னுடைய அம்மா இல்லாமல், நான் இன்று இந்த அளவிற்கு வெற்றிகரமாக கல்வி கற்று இருக்க முடியாது என்பதை தெரிந்துகொண்டேன். 2, இரண்டாவது ஒன்றாகஇணைந்து பணி செய்வதன் மூலம்,அதாவது என்னுடைய அம்மாவிற்கு உதவுவதன் மூலம், எந்தவொரு பணையையும் தனியாக செய்வது எவ்வளவு கடினமானது என்பதை இப்போதுதான் உணருகிறேன். 3.மூன்றாவதாக, குடும்ப உறவினரின் முக்கியத்துவத்தையும் மதிப்பையும் பாராட்டவேண்டும் என தெரிந்து கொண்டேன் ”. எனக்கூறினார்
நிருவாக இயக்குனர், “இதைத்தான் நான் எனது மேலாளராக வருபவரிடம் எதிர்பார்க்கிறேன். மற்றவர்கள் செய்திடும் பணியைப் பாராட்டக்கூடிய , பணியாற்றும் போது ஏற்டும் துன்பங்களை அறிந்த , வாழ்க்கையில்பணத்தை மட்டுமே தனது ஒரே இலக்காக கொள்ளாத ஒரு நபரை மேலாளராக நியமிக்க விரும்பு கிறேன். நீங்கள் இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் நாளைமுதல் இந்த பணியில் சேரலாம் " என கூறினார் . அதன்பின்னர் அந்நிறுவனத்தில் அவ்விளைஞர் அந்த பணியில் சேர்ந்து மிகவும் கடினமாக உழைத்தார், பிற்காலத்தில் அந்த இளைஞரின் கீழ் பணிபுரிபவர்களின் மதிப்பையும் மரியாதையைப் பெற்றார். ஒவ்வொரு பணியாளரும் விடாமுயற்சியுடனும் ஒரு குழுவாகவும் ஒருங்கிணைந்து பணியாற்றிடுமாறு செய்து. அந்நிறுவனத்தின் செயல்திறன் மிகவும் மேம்படுவதற்காக பாடுபட்டார்.
நீதி: ஒருவர் தங்களின் அன்புக்குரியவர்கள் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பினை தமக்கு வழங்குவதற்கு எடுக்கும் சிரமத்தை புரிந்துகொண்டு மதிக்க கற்றுகொள்ளவேண்டும் . மிக முக்கியமான செய்தி என்னவென்றால், நாம் வாழ்க்கையில் வெற்றிகரமாக முன்னேற்றம் அடைந்ததற்கு பின்னால் அதற்காக கடின உழைப்பை வழங்கியவரை மதிக்க கற்றுக்கொள்வதுதான்.

சனி, 3 அக்டோபர், 2020

ஒருவர் நேர்மையாக இருப்பதற்கு நிதிநிலை, சமூக நிலைஆகிய இனப்பாகுபாடு எதுவும் இல்லை.

 
ஒரு பணக்கார தம்பதியினர் தங்களுடைய வீட்டில் நடைபெறவிருந்த முக்கியநிகழ்வினை ஒரு பெரிய விருந்துடன் கொண்டாட விரும்பினார்கள். எனவே அவர்கள் சந்தையில் விலைஅதிகமானதும் நிலையான விலையை நிர்ணையம் செய்தும் விற்பணைசெய்திடுகின்ற கடைகளில் அதற்கான பொருட்களை கொள்முதல் செய்திட சென்றனர். அவர்கள் தங்களுடைய தரத்தை மிகவும் உயர்வாக பராமரிக்க விரும்பினர், எனவே அதற்காக எவ்வளவு பணம் செலுத்தவும் தயாராக இருந்தனர். தங்களுடைய வீட்டின் நிகழ்வினை கொண்டாடுவதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் மிக அதிக விலைகொடுத்து வாங்கிய பிறகு, அவை எல்லாவற்றையும் தங்களுடைய வீட்டிற்கு எடுத்து கொண்டுவந்த சேர்த்திட ஒரு சுமைகூலியாளை அழைத்தார்கள். வந்த சுமைகூலி மிகவும் வயதானவர், அவரது உடைகள் கிழிந்திருந்தன, அவரின் அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இருப்பவர் போன்று இருந்தார்.
அந்த தம்பதிகள் தாங்கள் சந்தையில் விலை அதிகமாக கொடுப்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் வாங்கிய பொருட்களை தங்களுடைய வீட்டிற்கு கொண்டுவந்து சேர்ப்பதற்கான கட்டணத்தினை மட்டும் எவ்வளவு தரவேண்டுமென சுமைகூலியிடம் விசாரித்தார்கள். வயதான சுமைகூலி ரூ 200/-கட்டணத்தில் அந்த பொருட்களை அவர்களுடைய வீட்டில் தன்னுடைய பொறுப்பில் கொண்டுவந்த சேர்ப்பதாக கோரினார், ஏனெனில் இந்த தொகையாவது தனக்கு இன்று கிடைத்தால் தங்களுடைய குடும்பம் இன்று ஒருவேளையாவது வயிறாற சாப்பிடமுடியும் என்பதால் அந்த தம்பதியினரின் வீட்டிற்கு பொருட்களை கொண்டு சென்று ஒப்படைப்பதற்கான சந்தை வீதத்திற்குக் கீழாக இருந்தாலும் பரவாயில்லை என கோரினார். ஆனாலும், அந்த தம்பதியினர் கடைகளில் எந்தவொருபொருளும் எவ்வளவு விலை அதிகமாக குறித்திருந்ததாலும் மற்ற கடைகளைவிட விலைஅதிகமாக இருந்தாலும் அதனை குறைத்து கொடுக்குமாறு கோரி விவாதம் ஏதும் செய்திடாமல் கடைகளில் கோரியவிலையை செலுத்தி பொருட்களை வாங்கியவர்கள் சுமைகூலியிடம் மட்டும் வழக்கமான கட்டணத்தினைவிட குறைவாக கோரியபோதும் விலைகுறைப்பு செய்திடுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் சுமைகூலியிடம் அதைவிட கூலியை குறைத்திடுமாறு பேரம் பேசினர், இறுதியாக அந்த சுமைகூலி ரூ 150/- க்கு ஒத்துகொண்டபோது ஏற்றுகொண்டனர். அந்த சுமைகூலி இந்த குறைந்து தொகையை வைத்து இன்றஒரு வேளை உணவைக் கூட முழுவதுமாக குடும்த்துடன் சாப்பிடமுடியாதே என மிகமனவருத்தப்பட்டார், அதனால் தினமும் அவர் சம்பாதிக்கக்கூடிய தொகையானது வாய்க்கும் கைக்கும் ஆக போதுமான தாக இல்லாமல் மிக அதிக சிரமத்துடன் தன்னுடைய வாழ்நாளை ஓட்டிவந்தார்.
அந்த தம்பதியினர் ஏழை சுமைகூலியுடன் பேரம் பேசி கூலியை ரூ. 200/-இலிருந்து ரூ 50/- குறைத்து ரூ 150/- க்கு ஒத்துகொள்ளவைத்துவிட்டோம் என்று எண்ணி மிகவும் மகிழ்ச்சியாக , அந்த சுமைகூலிக்கு ரூ 150/- ஐமுன்பணமாக கொடுத்து, தங்களுடைய வீட்டு முகவரியைஎழுதிக் கொடுத்து விரைவாக பொருட்களை தங்களுடைய விட்டிற்கு கொண்டுவந்து சேர்த்திடுமாறு கோரியபின்னர் தங்களுடைய வீட்டை சென்றடைந்தனர், அந்த தம்பதிகள் வீடுவந்து சேர்ந்துசுமார், இரண்டு மணிநேரம் கடந்துவிட்டது, ஆனாலும் அந்த சுமைகலியானவர் இன்னும் பொருட்களை தங்களுடைய வீட்டிற்கு கொண்டுவந்து ஒப்படைக்கவில்லை.
அதனால் மனைவி தனது கணவர் மீது மிகவும் கோபமாக “இதுபோன்ற ஏழைகளை நம்ப வேண்டாம் என்று நான் எப்போதும் உங்களுக்குச் சொல்கிறேன், ஆனாலும் நீங்கள் ஒருபோதும் என்னுடைய பேச்சைக் கேட்கவே மாட்டீர்கள். நாளொன்றுக்கு ஒருவேளை உணவிற்கு கூட சம்பாதிக்க முடியாத நபரிடம், பெரிய விருந்துக்காக வாங்கிய பொருட்கள் அனைத்தையும் ஒப்படைத்தீர்கள்.அவைகளை நம்முடைய வீட்டிற்கு கொண்டுவந்து சேர்ப்பதற்கு பதிலாக, அவர் எல்லாவற்றையும் தன்னுடைய வீட்டிற்கு கொண்டுசென்றிருக்க வேண்டும்.மேலும் அப்பொருட்கள் அனைத்தும் காணாமல் போய்விட்டன என்றும் கூறுவார் என நான் நம்புகிறேன். அதனால் அதுகுறித்து விசாரிக்க நாம் உடனடியாக சந்தைக்குச் செல்ல வேண்டும், பின்னர் அவர் மீது புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டும் ”. என்றவாறு பேசத்தொடங்கினார்,
அதனை தொடர்ந்து தம்பதிகள் இருவரும் சந்தையை நோக்கி சென்றனர். அவ்விருவரும் சந்தைக்கு செல்லும் வழியில், மற்றொரு சுமைகூலி தங்களுடைய பொருட்களை தனது வண்டியில் எடுத்துச் செல்வதைக் கவனித்தனர்! அதனை கண்ணுற்றதும் மேலும் அதிக கோபமடைந்த மனைவி அந்த சுமை கூலியிடம், “அந்த வயதான திருடன் எங்கே? இவை அனைத்தும் எங்களுடைய பொருட்கள் இவை யனைத்தையும் எங்களுடைய வீட்டில் கொண்டுவந்து சேர்த்திட வேண்டும் என்பதாவது தெரியுமா. நீங்கள் அனைவரும் திருடர்கள் எல்லோரும் சேர்ந்து எங்களுடைய பொருட்களைத் திருடி விற்கப் போகின்றீர்களா ”.என மிககோபமாக திட்டியபோது அதனை தடுத்து அந்த புதிய சுமையானவர், “அம்மா, தயவுசெய்து அமைதியாக பேசுங்கள். அந்த ஏழை முதியவர் கடந்த மாதம் முதல் உடல்நிலை மிகவும் சரியில்லாமல் இருந்தார். அன்றாடம் ஒருவேளை உணவை குடும்பம் முழுவதும்சாப்பிடுவதற்கு போதுமான அளவு கூட அவரால் சம்பாதிக்க முடியவில்லை. அவர் இந்தபொருட்களை உங்களுடைய வீட்டிற்கு கொண்டுவந்து வழங்குவதற்கா இந்த பாதையில் வண்டியில் வைத்து இழுத்து கொண்டுவந்து கொண்டிருந்தார், ஆனால் பசியுடன் இருந்ததாலும், ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருந்ததாலும், நண்பகலின் அதிகவெப்பத்தினாலும் மேலும் செல்ல முடியவில்லை அதனால் அவர் கீழே விழுந்து விட்டார் இருந்தபோதிலும் என்னிடம் இந்த பொருட்களை ரூ 150/- இற்கு சந்தையிலிருந்து ஒரு தம்பதியினரின் வீட்டில் கொண்டுவந்து சேர்ப்பதாக ஏற்றுகொண்டேன் அதனால் தயவுசெய்து இந்த பொருட்களை அதே கூலிக்கு அவர்களுடைய வீட்டிற்கு கொண்டுசென்று ஒப்படைத்துவிடு என கூறி இறந்துவிட்டார் அதனால் அவருடைய கடைசி வாக்குறுதியை நிறைவேற்றிட நான் இந்த பொருட்களை கொண்டுசெல்கின்றேன், ”. “மேலும் அம்மா, அவர் பசியுடன் இருந்தார், அவர் ஏழை, ஆனால் அவர் ஒரு நேர்மையான மனிதர். நான் அந்த வயதான மனிதரின் கடைசிவாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக உங்களுடைய வீட்டில் இந்த பொருட்களை ஒப்படைப்பதற்காக என்னுடைய வண்டியில் வைத்து இழுத்து கொஂஂண்டுவருகின்றேன் ”, என பதில் கூறினார். இதைக் கேட்டதும், அவ்விருவரில் கணவரின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது, அவருடைய மனைவி இவ்வாறு தவறாக பேசிவிட்டோமே என மிகவும் வெட்கப்பட்டார்,
நீதி: நேர்மைக்கு நிதிநிலை, சமூக நிலைஆகிய இனப்பாகுபாடு எதுவும் இல்லை. அதனால் நிதிநிலை, சமூக நிலைஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் நேர்மையானவர்களுக்கு மதிப்பளித்திடுக.

வியாழன், 1 அக்டோபர், 2020

நூல் இல்லாத காற்றாடி

 ஒரு தந்தையும் மகனும் தங்களுடைய ஊரில் நடைபெற்ற காற்றாடி பறக்கவிடும் திருவிழாவிற்குச் சென்றனர். அவ்வாறான காற்றாடி திரு விழா நடைபெறும் இடத்தின் வானம் வண்ணமயமான பல்வேறு காற்றாடிகளால் நிரம்பியிருப்பதைக் கண்டு அவருடைய மகன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அதனை தொடர்ந்து அம்மகன் தன்னுடைய தந்தையிடம் அந்த காற்றாடி திருவிழாவில் தானும் ஒரு காற்றாடியை பறக்கவிட விரும்புவதால் தனக்கும் ஒரு காற்றாடியை வாங்கி கொடுக்கும்படி கோரினார், அதனால் தந்தையும் தன்னுடைய மகன் கோரியவாறு காற்றாடி பறக்கவிடுவதற்கான பொருட்களை வாங்கி கொடுப்பதற்காக அந்த காற்றாடி திருவிழா நடைபெறும் பூங்காவில் உள்ள கடைக்கு சென்று தனது மகனுக்காக ஒரு காற்றாடி , அந்த காற்றாடியை இணைப்பதற்கான நூல்கண்டு , நூலை சுருட்டி வைத்து பட்டத்தை பறக்க விடுவதற்கான உருளை ஆகியமூன்றையும் வாங்கி தன்னுடைய மகனிடம் வழங்கினார்.
அதன்பின்னர் அவருடைய மகன் அந்த காற்றாடியை உருளையில் சுருட்டிவைத்த நூலுடன் இணைத்து பறக்கவிட ஆரம்பித்தார். விரைவில், அவருடைய மகனுடைய காற்றாடியானது வானத்தில் உயர்ந்து சென்று பறக்க ஆரம்பித்தது. சிறிது நேரம் கழித்து, அம்மகன், “அப்பா உயரத்தில் பறக்கும் காற்றாடியை அதைவிட உயரத்தில் பறக்கவிடாமல் அதனோடு இணைத்துள்ள நூலானது தடுப்பதாகத் தெரிகிறது, அதனால் நூலுடனான காற்றாடியின் இணைப்பை அறுத்துவிட்டால் காற்றாடியானது தடுப்பு எதுவும் இல்லால் சுந்திரமாக, மேலும் உயரமாக பறக்கமுடியமல்லவா அதனால் நூலுடனான காற்றாடியின் இணைப்பினை அறுத்துவிடலாமா? ” என கோரியபோது அவருடைய, தந்தையும் தன்னுடைய மகனின் விருப்பத்தின் படி நூலை சுருட்டிவைத்து பட்டத்தை பறக்க விடுவதற்கான உருளையிலிருந்து அந்த காற்றாடியுடனான நூலின் இணைப்பை வெட்டினார். தற்போது காற்றாடியை உயரத்தில் சென்று பறப்பதற்கான தடையெதுவும் இல்லாததால் அந்த காற்றாடியானது கொஞ்சம் கொஞ்சமாக மேலே சென்று பறக்க ஆரம்பித்தது. அதனால் அவருடைய மகன் மேலும் மகிழ்ந்தான.
ஆனால், அவ்வாறு உயரத்தில் பறந்த அந்த காற்றாடியானது பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக கீழே வர ஆரம்பித்தது. மேலும், விரைவில் அது தூரத்தில் இருந்த ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடியில் விழுந்தது. இதைக் கண்டு அவருடைய மகன் மிகவும் ஆச்சரியப்பட்டான். காற்றாடி உயரே பறப்பதற்கு தடையாக இருந்த நூலின் இணைப்பை வெட்டிவிட்டோம், அதனால் அந்த காற்றாடி சுதந்திரமாக மேலே எவ்வளவு உயரத்தில் வேண்டுமானாலும் பறக்க முடியும், ஆனால் அதற்கு பதிலாக அது கீழே விழுந்து விட்டதே ஏன் என. சந்தேகம் எழுந்தது அம்மகன் தனது சந்தேகத்தை தீர்வுசெய்வதற்காக தனது தந்தையிடம் , “அப்பா, காற்றாடியை இழுத்து பிடித்து வைத்திருந்த நூலை வெட்டிய பிறகு, அந்த காற்றாடியானது சுதந்திரமாக மேலே பறக்க முடியும் என்று நினைத்தேன். ஆனால் அது ஏன் கீழே விழுந்தது? ” என வினவினார் .அவருடைய தந்தை , “மகனே, இணைக்கப்பட்டிருந்த நூலானது காற்றாடியை உயரத்தில் சுதந்திரமாக பறக்கவிடாமல் இறுக்கி பிடித்துவைத்திடவில்லை, ஆனால் காற்று மெதுவாகச் செல்லும்போது அது உயரத்தில் பறந்து கொண்டிருக்க உதவுகிறது, காற்று வேகமாக வீசும்போது, காற்றாடி சரியான திசையில் மேலே சென்று பறக்க உதவியது. நாம் காற்றாடியுடன் இணைக்கப்பட்ட நூலை வெட்டியபின்னர், நூல் வழியாக காற்றாடி உயரே சரியாகபறப்பதற்கு வழங்கிய ஆதரவு இல்லாமல் காற்றின் வேகத்தால் கீழே விழுந்துவிட்டது .அதேபோன்று நாம் வாழும் வாழ்க்கையின் உச்சத்தில், ஒருசில செயல்களுடன் நாம் பிணைக்கப்பட்டுள்ளோம் என்று நினைக்கிறோம், மேலும் அவை நம்மை மேலும் நம்முடைய வாழ்வில் நாம்மேலும் உயரவிடாமல் தடுக்கின்றன. என்றும் தவறாக எண்ணுகின்றோம்”. என விளக்கமளித்தார் அதனை தொடர்ந்து அவருடைய மகன் தன் தவறை உணர்ந்தார்.
நீதி: ஒருசில சமயங்களில் நாம் நம் குடும்பத்தினருடன், நம்முடைய வீட்டோடு பிணைக்கப்படாவிட்டால், விரைவாக முன்னேறி, நம் வாழ்க்கையில் புதிய உயரங்களை அடைய முடியும் என்று தவறாக நினைக்கிறோம். ஆனால், நம்முடைய அன்புக்குரியகுடும்ப உறுப்பினர்கள் நம்முடைய வாழ்க்கையின் கடினமான நேரத்தில் தப்பிப்பிழைக்க நமக்கு உதவுகிறார்கள் என்பதையும், நம் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய ஊக்குவிப்பதையும் நாம் உணரத் தவறிவிட்டோம். அவர்கள் வாழ்க்கையின் உயரத்திற்கு செல்லாமல் நம்மை தடுத்திடவில்லை, ஆனால் நாம் உயரே செல்வதற்கு நமக்கு ஆதரவளிக்கிறார்கள்.


பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...