சனி, 30 ஜூலை, 2022

சில நிறுவனங்கள் ஏன் தோல்வியடைகின்றன?

 நிறுவனங்கள் தோல்வியடைவதற்கு பல காரணங்கள் உள்ளன. மிகமுக்கிய காரணம், நிறுவனங்கள் பணியாளர்கள் தங்கள் கடமைகளை வழங்குவதை நம்புவதில்லை அல்லது எந்த சிந்தனை செயல்முறையும் இல்லாமல் பணியாளர்களை பணிக்கு அமர்த்துவது போன்று செயல்படுகின்றன. அத்தகைய நிறுவனங்கள் குறுகிய காலத்தில் நன்றாகச் செயல்படுவதாக தோன்றிடும் ஆனால் விரைவில் அவை தோல்வியடைக்கூடும்.  ஒருவரின் விருப்பமான சிந்தனை அல்லது மனநிலை ஊசலாடுவது போன்றதை விட வலுவான அடிப்படைகளில் நிறுவனத்தின் கட்டமைப்பானது கட்டமைக்கப் பட வேண்டும். சில நேரங்களில் நிறுவனங்கள் தங்கள் மனிதவளத்தை ஒரு சொத்தினைக் காட்டிலும் ஒரு பொறுப்பாகக் கருதுகின்றன. ஊழியர்களுக்குச் செலவழிக்கும் பணத்தைப் பற்றி அதிகம் கவலைப்படும் அவர்கள், தங்கள் ஊழியர்களிடம் இதைச் சொல்லி, பெரும்பாலான நேரங்களில் அவர்களைத் திட்டித் தாழ்த்திக் கொண்டே இருக்கின்றன. அத்தகைய நிறுவனங்களில் பணியாளர்கள் தேவையற்றவர்களாக உணர்கின்றன,அதனால் துவக்கத்தில் பெரியஅளவு   வருவாய் ஈட்டக்கூடிய பணியாளர்கள் பணியில் சேர்ந்து இருப்பார்கள் ஆனால் நாளடைவில் பணியாளர்கள் விலகிகொண்டே இருப்பார்கள்  இறுதியில், நம்பக்கூடிய அல்லது பொறுப்பான பணியாளர்கள் யாரும் எஞ்சியிருக்க மாட்டார்கள். ஒரு வணிகமுத்திரையை உருவாக்குவதற்கான புதிய ஆலோசனைகளை எண்ணங்களைப் பற்றி ஒருவர் நெகிழ்வாக இருக்க வேண்டும்.  நிறுவனம் வெற்றிபெற நமக்கு "ஆமாம் சாமிகளே" தேவையில்லை.

 நான் சில மாதங்கள் மட்டுமே பணியாற்றிய ஒரு நிறுவனத்தைப் பற்றிய ஒரு சிறிய கதையைச் சொல்கிறேன். "நான் ஒரு லாலா நிறுவனத்தில் பணிபுரிந்தேன், அங்கு லாலாஜி ஒவ்வொரு நாளும்  ஒவ்வொரு புதியதான விதியை உருவாக்குவார். மேலும் லாலாஜியின் மனநிலை மகிழ்ச்சியாக இருந்தால், அவருடைய நிறுவனத்திலுள்ள எல்லோரும்  நிம்மதியாக இருப்பார்கள், அதற்கு நேர்மாறாக இருக்க வேண்டும். நிதிப்பிரிவுதலைவரை, ஒரு நாள் நான் கேட்டுக் கொண்டேன். எங்கள் குழுவில் பணிச்சுமை அதிகரித்து வருவதால், எனக்கு புதிய கணக்காளர் ஒருவர்தேவை என்று லாலாஜி கூறினார்.அடுத்த நாள் எனக்கு துனைக்கு ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் நியமிக்கப்பட்டார், அவருக்குக் கற்பிக்க எனது குழுவில் இருந்து ஒருவரை நியமிக்கச் சொன்னார்கள்ஆனால் எங்களுக்கு. கணக்குபதிவுதெரிந்த  ஒரு நபர் தேவை, ஆனால் அவர்  "அவளுடைய வாழ்க்கை துக்கங்கள் நிறைந்தது, நாங்கள் அவளுக்கு உதவ வேண்டும்". அடடா அந்த பெண்ணுக்கு தனி அறை கொடுக்கப்பட்டது, என் குழுவில் உள்ள அனைவரும் அவளைப் பார்த்து பொறாமைப்பட ஆரம்பித்தனர், அது மேலும் குழப்பத்தை உருவாக்கியது. ஒரு நாள் லாலாஜி முடிவு செய்தார். அவருடைய நிறுவனம் பங்கு்ச்சந்தையில் பட்டியலிடப்பட வேண்டும், அதற்கான பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. பட்டியலிடத் தொடங்குவதற்கான ஆவணங்களை ஏற்பாடு செய்ய எனது குழுவுடன் 15 நாட்கள் அயராது உழைத்தேன். திடீரென்று லாலாஜி இந்த நிறுவனத்தை LLP ஆக மாற்றுவோம் என்று கூறினார். கடவுளே! என அயர்ந்து துக்கத்துடன் ஏன்? என வினவியபோது அவர் அது நன்றாக இருக்கும் என்று அவர் கூறினார்.லாலாஜிக்கு ஒருஆமாம் சாமி ஒருவன் இருந்தால் போதும் லாலாஜி சொல்வதை எல்லாம்  ஆமம் என ஒத்துக்கொள்ளும் ஒரு மனிதர் இருந்தார். இளங்கலை(BA)., படித்த இவர், நிறுவனத்தின் பொது மேலாளராக பதவி உயர்வு பெற்றார். லாலாஜி அவரிடமிருந்து என்ன வேண்டுமானாலும் செய்ய வேண்டும் என்பதே அவரது கடமை. அது அவரது வீட்டிற்கு மளிகைப் பொருட்களை ஏற்பாடு செய்வதாக இருந்தாலும் சரி அல்லது விருந்துகள் ஏற்பாடு செய்வதாக இருந்தாலும் சரி. அப்போது லாலாஜியின் தம்பி ஒருவர் இருந்தார், அவரை லாலாஜி நம்பமாட்டார். அங்கும் இங்கும் அலைவதைத் தவிர அவர் ஏன் நிறுவனத்தில் இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. லாலாஜி தன்னுடைய நிறுவனத்தல் யாரையும் பணியில் சேர்ப்பதற்கோ பணிநீக்கம் செய்வதற்கோ லாலாஜிக்கு எந்தவொரு ஆலோசனையும் தெரிவிக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை, ஏனெனில் லாலாஜி இந்த உலகில் தன்னை தவிர அனைதையும் அறிந்தவர்யாரும் இல்லை என்றுஇருப்பவர். லாலாஜி வருமான வரி அல்லது சசேவ(GST) சட்டங்களை தானே நிர்வகிப்பார். வருமான வரி அல்லது சசேவ(GST) விதிகளுக்கு எதிரானது என்று நான் அவரிடம் கூறினால், "இது என்னுடைய நிறுவனம். நான் என்ன செய்தாலும் அதனுடைய விளைவுகளை நான்மட்டுமே அனுபவிப்பேன்" என்பதுதான் அவரது பதில். ஆனால் ஏதாவது அறிவிப்பு வந்தால் லாலாஜியிடம் இருந்து அவரது ஊழியர்களுக்கு பொறுப்பு மாற்றப்பட்டு, அவர்கள் திட்டுவாங்குவார்கள். லாலாஜியின் விருப்பப்படி சம்பளத்தைக் குறைத்து, ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கும் ஒரு மனிதவள மேலாளரும் அவரிடம் இருந்தார்." கடைசியில், எனது ஒரு மாதச் சம்பளத்தைக் கூட ஒப்படைத்துவிட்டு, "அமைப்புகள் எப்படி இயங்கக் கூடாது" என்ற பாடத்துடன் சர்க்கஸ் கூடாரம் போன்ற அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறினேன்.

ஞாயிறு, 24 ஜூலை, 2022

சிறந்த தரமான சோளத்தை விளைவிப்பது - விவசாயத்தின் இரகசியம்!

 
ஒரு விவசாயி தன் வயல்களில் நல்ல தரமான சோளத்தை பயிரிட்டு வந்தார். அவர் தேசிய பயிர் கண்காட்சியில் பங்கேற்று ஒவ்வொரு ஆண்டும் வெற்றி பெற்று பரிசினை பெற்றுசெல்வார். அந்த ஆண்டு தேசிய கண்காட்சியில் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டபோது, இந்த ஆண்டும் அந்த விவசாயி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.ஒவ்வொரு வருடமும் அந்த விவசாயிமட்டும் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதை அறியும் ஆர்வத்தில் ஒரு நிருபர் அவரைப் பேட்டி காண  வந்தார், .. இதற்கிடையில், நிருபர் அவரைப் பற்றி அவரது பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் அவருக்கு அருகிலுள்ள விவசாயிகளிடமும் அந்த விவசாயியை பற்றி நன்கு விவரங்களை கேட்டு அவரைப் பற்றிய நல்ல செய்திகளை அறிந்ததும், அவரைப் பேட்டி காணஅந்த நிருபர் அதிக ஆர்வம் காட்டினார்.வெற்றி பெற்றவர்களை பற்றி அறிவிப்பு முடிந்த பின்னர், நிருபர் அவரிடம் சென்று, “உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள். நீங்களே ஒவ்வொரு வருடமும் வெற்றி பெறுகிறீர்கள், அதற்கான இரகசியம் என்ன என கூறமுடியுமா?" என வினவினார் .அதற்கு விவசாயி, “உங்கள் வாழ்த்துக்கு மிக்கநன்றி.  எங்கள் கிரமாத்திலுள்ள அனைவரின் முயற்சியாலும் கடின உழைப்பாலும் நான்வெற்றி பெற முடிந்தது. " என பதில் கூறினார்.தொடர்ந்து நிருபர், “உங்களைப் பற்றி உங்களுடைய கிராமத்தில் விசாரித்ததில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த தரமான விதைகளை உங்கள் அருகிலுள்ள வீட்டுக் காரர்களுடனும் மற்ற விவசாயி களுடனும் இலவசமாகப் பகிர்ந்து கொள்கிறீர்கள் என்பதை அறிந்தேன். ஏன் அவ்வாறு செய்கின்றீர்கள்?" என மற்றொரு கேள்வியை எழுப்பியபோது அவ்விவசாயி, “காற்று வீசுவதால்,  சோளத்தின் மகரந்தத் துகள்கள், சுற்றியுள்ள வயல்களில் பரவுகிறது. என்னுடைய அருகிலுள்ளவர்கள் தரமற்ற சோளத்தை விதைத்தால், அவருடைய வயல்களில் உள்ள மகரந்தத் துகள்களும் என் வயல் களில் பரவி விடும். அவ்வாறான தரமற்ற மகரந்தச் சேர்க்கை காரணமாக பல ஆண்டு களுக்குப் பிறகு, எனது பயிர்களின் தரமும் மோசமடையும். அதனால் நான் நல்ல சோளத்தை பயிரிட விரும்பினால், என் பக்தது வயல்களிலும் நல்லதரமான சோளத்தை பயிரிடுவது நல்லது அதற்காக நான் பக்கத்து வயல் விவசாயி களுக்கும் நல்ல தரமான விதைகளை இலவசமாக கொடுத்து உதவுவது நல்லது." என மிகநீண்ட  பதில் அளித்தார் கற்றல்நம் வாழ்க்கையின் யதார்த்தமும் இப்படித்தான். நாம் ஒரு நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்பினால், நம்முடன் தொடர்புடைய வர்களையும் அவ்வாறு இருக்குமாறு செய்ய ஊக்குவிக்கவேண்டும்.

சனி, 16 ஜூலை, 2022

புலிக்கும் கழுதைக்கும் (முட்டாளுக்கும்) இடையிலான வாக்குவாதம்

 
ஒருமுறை ஒரு கழுதைக்கும் புலிக்கும் புற்களின் நிறம் பற்றி வாக்குவாதம் ஏற்பட்டது. புறஅகளின் நிறம் நீலம் என்று கழுதை சொன்னது, புற்களின் நிறம் பச்சை என்று புலி சொன்னது.
அதனைதொடர்ந்து விரைவில், இரண்டும் கட்டி புரளும் அளவிற்கு வாக்குவாதம் சூடுபிடித்தது அதனால் இருவரும் தங்களுடைய பிரச்சினையை நடுவர் மன்றத்தில் சமர்ப்பிக்க முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் விலங்குகளின் அரசனான சிங்கத்தினை அணுகினர்.
அவர்கள் சிங்கத்தை நெருங்கியதும், கழுதையானது, "அரசே நீங்கள்தான் எங்களைவிட மிக உயர்ந்தவர், புற்களானவை நீலநிறத்தில் இருப்பது உண்மையல்லவா" என பணிவாக கூறியது.
அதற்கு சிங்கம், "நீ நம்பினால், அதுதான் சரி" என்று பதிலளித்தது.
கழுதை தொடர்ந்தது, “ஆனால் புலி மட்டும் என்னுடன் உடன்படவில்லை. அவர் புற்களானவை பச்சையாக இருக்கின்றன, எனத்தவறாக கூறுகின்றது அதனாால் அரசே தயவுசெய்து அவரை தண்டித்திடுக " என தன்னுடைய குற்றச்சாட்டினையும் தன்னுடைய வாதத்தினையும்  கூறியது.
உடன் சிங்கம் புலிக்கு மூன்று நாட்கள் மவுன தண்டனை வழங்கப்படும் என்று அறிவித்தது.
இதைக் கேட்டு, கழுதை மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து,"புற்கள் நீலமானவை... புற்கள் நீலமானவை.." என திருப்தியுடன் கத்திகொண்ட திரும்பிச் சென்றது.

அங்கு உடன் நின்றுகொண்டிருந்த புலியானது இதைப் பார்த்தவுடன், சிங்கத்திடம், “எனக்கு ஏன் மூன்று நாட்கள் மவுன தண்டனை விதித்தீர்கள்? புற்களின் நிறம் நீலம் அன்று பச்சை என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா" என தன்னுடைய வாதத்தினை விலங்குகளின் அரசனிடம் வைத்தது
அதற்கு விலங்குகளின் அரசனான சிங்கம், "ஆம், உண்மையில் புற்களின் நிறம் பச்சைதான்" என்று பதிலளித்தது.
உடன் புலியானது, “அப்படியானால் ஏன் எனக்கு மவுன தண்டனை வழங்கினீர்கள்? ” என்றுப தில் கேள்வியை விலங்குகளின் அரசனான சிங்கத்திடம் கேட்டது
அதற்கு சிங்கம், “உனக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கும் புற்களின் நிறம் நீலமா பச்சையா என்ற கேள்விக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. கழுதையுடன் வாதிட்டு நேரத்தை வீணடிப்பது உன்னைப் போன்ற துணிச்சலான, புத்திசாலித்தனமான நபருக்கு இழிவுபடுத்தும் செயல் என்பதால் உனக்குஅந்த கழுதையுடன் பேசவேண்டாம் என மவுனத் தண்டனை வழங்கப்பட்டது. ” எனக்கூறியது
கற்றல்:எல்லா ஆதாரங்களையும் முன்வைத்தாலும் உண்மையைப் புரிந்து கொள்ளும் திறன் இல்லாதவர்கள்,  ஈகோ, வெறுப்பு  ஆகியவற்றால் மாற்று பதில்களை கண்மூடித்தனமாக எதிர்ப்பதில் குறியாக இருப்பார்கள்.
உண்மை அல்லது யதார்த்தத்தைப் பற்றி கவலைப்படாமல், தனது நம்பிக்கைகள் அல்லது மாயைகளின் வெற்றியில் மட்டுமே ஆர்வமுள்ள ஒரு முட்டாளுடன் வாதிடுவது நேரத்தை வீணடிப்பதாகும்.
 அதாவது அறியாமை கத்தும்போது, புத்திசாலித்தனம் அவ்விடத்தினை விட்டு நகர்ந்துவிடுகிறது.

சனி, 9 ஜூலை, 2022

ஆசிரியருக்கு மாணவர் பதில்!


ஒருமுறை வகுப்பில் ஆசிரியர் ஒரு மாணவனிடம், ‘நமக்கு எவ்வளவு சிறுநீரகங்கள் உள்ளன?” என கேள்வி கேட்டார்.
உடன் அம்மாணவன்"நான்கு" என பதிலளித்தான்.
"என்ன? நான்கா?”, என அந்த ஆசிரியர் ஆச்சரியபட்டார்
ஆசிரியர் தன்னிடம் பயிலும் மாணவனிடம் இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. அதனால் அவர்மீண்டும் , "இந்த பதிலில் நீ உறுதியாக இருக்கின்றாயா?" என உறுதிபடுத்திடு்மாறு மீண்டும் வினவியோது
அம்மாணவர் "ஆம்  உறுதியாக", என மீண்டும் பதிலளித்தான்
 அம்மாணவன்  கேள்வியை சரியாக புரிந்து  கொள்ளவில்லை அதனால் சரயான பதில் வரவில்லை. என எண்ணி அந்த ஆசிரியர் அந்த மாணவனிடம் சரியான பதிலை வரவழைக்க மீண்டும் முயற்சிக்க வேண்டும் என்று நினைத்தார்,  அதனால் அவ்வாசிரியர் இம்முறை , "உனக்கு எத்தனை சிறுநீரகங்கள் உள்ளன?" என மீண்டும் வினவியபோது
இம்முறை அம்மாணவர், “இரண்டு” என மிகச்சரியாக பதிலளித்தான்.
அம்மாணவனிடமிருந்து  எத்தனை சிறுநீரகங்கள் உள்ளன எனும் சரியான பதில் கிடைத்ததில் ஆசிரியர் மிகமகிழ்ச்சி அடைந்தார். அதனால் அம்மாணவனிடம், ‘உனக்குதான் சரியான பதில் தெரிந்துள்ளதே இதற்கு முன் ஏன் நான்கு சிறுநீரகங்கள் உள்ளன எனபதில் கூறினாய்? ” என வினவியபோது அம்மாணவர் அப்பாவியாகப், “அப்போது, நம்மிடம் எத்தனை சிறுநீரகங்கள் உள்ளன என்று நீங்கள் என்னிடம் கேட்டீர்கள் - உங்களுக்கு இரண்டு எனக்கு இரண்டு. நம்மிருவருக்கும் சேர்ந்து  நமக்கு நான்கு தானே சரியாகும் நீங்கள் நமக்கு எத்தனை சிறுநீரகங்கள் என்றுதான் பன்மையாக கேள்விகேட்டீர்கள் அதனால் அதற்கு பதிலாக பன்மையாக நான்கு எனக்கூறினேன் தற்போது உனக்கு என மட்டும் கேள்விகேட்டதால் எனக்கு இரண்டு எனக்கூறினேன்." என மிக நீண்ட பதில் அளித்தான்  
என்ன வாசகரே அந்த மாணவரின் பதில் சரிதானே




சனி, 2 ஜூலை, 2022

ஒருவரின் தவறை துடைக்க முயற்சி! -

 இடைநிலைப் பள்ளியில் ஆசிரியர் கேட்ட கேள்விக்கான பதிலை தன்னுடைய பேனாவைப் பயன்படுத்தி எழுதத் தொடங்கிய ஒரு மாணவன், எழுதும் போது தவறு நேர்ந்துவிட்டதால் ஆசிரியரிடம் சமர்ப்பிக்கும் முன் அதை அழிக்க முயன்றான் அதற்காக அந்த மாணவன் அழிப்பதற்கான மையை பயன்படுத்தி அழி்க்க முயற்சிசெய்தான், ஆனால் சிறிது நேரம் கழித்து, தனது தவறு  தெரியும் என எண்ணியதால், தனது தவறை அழித்து நீக்கம் தன்னுடைய உமிழ்நீரை பயன்படுத்தி அழித்தான் அது வேலை செய்தது ஆனால் அம்மாணவனது காகிதம் பொத்தலாகிவிட்டது.
 அம்மாணவன் தான் எழுதிய கேள்விக்கான பதிலை ஆசிரியரிட ம் அப்படியே சமர்ப்பித்தான். இவை அனைத்தின் காரணமாக, அம்மாணவனது குறிப்புத்தாள் அழுக்காகிவிட்டது, மேலும் இவ்வாறு மோசமான பணியின் காரணமாக  தனது ஆசிரியரின் திட்டுதலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
வேறொரு நாள், மற்றொரு ஆசிரியரின் கேள்விக்கும் அம்மாணவன் குறிப்பேட்டில் பதில் எழுதிடும்போதும் இதேபோன்று செய்த குறிப்பேட்டினை அவ்வாசிரியர் பார்த்தார்.
தொடர்ந்து அந்த ஆசிரியர் அம்மாணவனிடம், ‘உன்னுடைய குறிப்புத்தாளில் பொத்தல்  உண்டாக்கும் அளவுக்கு உன் தவறை ஏன் அழிக்க முயன்றாய்?" என வினவியபோது அம்மாணவன் , "ஏனென்றால் மற்றவர்கள் என் தவறுகளைப் பார்க்க நான் விரும்பவில்லை", என பதிலளித்தான்.
இதைக் கேட்ட ஆசிரியர் சிரித்துக்கொண்டே, “எப்போது தவறு செய்தாலும் அதைக் கடந்து செல்க . அதற்கு பதிலாக  தவறுகளை அழிக்க முயற்சிப்பது உன்னுடைய குறிப்புத்தாளில் மட்டுமே சேதப்படுத்தும். என எ்ண்ணி தவறைத் துடைக்க முயற்சிப்பது உன்னுடைய குழப்பத்தைப் பற்றி பலருக்குத் தெரிய வைக்கும். அதனால்,அதைக் கடந்து செல்க. உன்னுடைய தவறை மறைக்க முயற்சிப்பதன் விளைவாக உன்னுடைய குழப்பத்தை வெளிப்படுத்திடவேண்டாம்."  என மிகநீண்ட அறிவுரை கூறினார்

என்ன வாசகரே நீங்களும் உங்களிடம் உருவான தவறை அழித்த ஒழிப்பதற்காக முயற்சி செய்து அதுகுறித்து தெளிவில்லாத உங்களுடைய குழப்பத்தை வெளிப்படத்திட போகின்றீர்களா

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...