ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

ஒரு திறமையற்ற பணியாளர் தன்னுடைய கருவிகள் சரியில்லை என எப்போதும் குறைகூறுவார்.


நம்முடைய வெற்றி நாம் பயன்படுத்திடும் நம்முடைய கருவிகளை சார்ந்தது அன்று, அதற்கு பதிலாக நாம் அவற்றை எவ்வாறு திறமையாக பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தது ஆகும் என்பதே இந்த பழமொழியின் அர்த்தமாகும். எந்தவொரு நபரும் உலகம் முழுவதிலும் உள்ள உபகரணங்கள் அனைத்தையும் தன்கைகளில் வைத்திருக்கலாம், ஆனால் அவற்றை எவ்வாறு மிகச்சிறப்பாக பயன்படுத்துவது என்று அவருக்கு தெரியாவிட்டால் தன்னுடைய பணியில் வெற்றியை ஒருபோதும் அடையவே முடியாது. அதைவிட, தனக்கு கிடைக்கும் எந்தவொரு கருவியையும் கொண்டு திறமையுடைய நபர்ஒருவர் எந்தவொரு பணியையும் மிகவெற்றிகரமாக முடித்திடுவார். அதையே நம்முடைய நடைமுறை வாழ்க்கை சூழலி கூட காணமுடியும். நமது திறமைகளையும் முயற்சிகளையும் அதிகபட்ச நன்மைக்காக வளர்த்து மேம்படுத்திகொள்ள வேண்டுமேயொழிய. அதைவிடுத்து ஏதாவது தவறு நடந்தால் மற்றவர்கள்மீது இதற்காக குற்றம்சாட்டகூடாது .

குமார் ரவி ஆகியஇருவரும் அண்டை வீடுகளில் வாழும் இரு விவசாயிகள் ஆவார்கள். அவ்விருவரும்தங்களுக்கென ஒரு ஜோடி காளை மாடுகளை வைத்திருந்தனர். குமார் தன்னுடைய நிலத்தில் நாள் முழுவதும் கடினமாக உழைத்துவந்தார் அதனோடு, தனது விவசாய பணிகளுக்கு உழவு மாடுகள் மிக அவசியமானது என்று அறிந்திருந்ததால், தன்னுடைய உழவு மாடுகளை நன்றாக கவனித்து பராமரித்துவந்தார்.

அதற்குபதிலாக ரவி என்பவர் தன்னுடைய உழவு மாடுகளை கொண்டு அதிகபட்ச பணியை முடித்திடுவார் ஆனால் அம்மாடுகளுக்கு தேவையான தீவணங்களை இட்டு நன்றாக பராமரிக்காத முழுச்சோம்பேறியாக இருந்துவந்தார்,

அதனால் ஒரு உண்மையான நண்பனாக குமார் என்பவர் இரவி என்பவரிடம் நம்முடைய விவசாயத்திற்கு உதவிடும் விலங்குகளுக்கு தீங்கு விளைவிப்பதையும் கொடுமைப்படுத்தாமலும் அவைகளை பராமரிக்கும்படி அறிவுறுத்தியதோடுமட்டுமல்லாமல் அவைதான் விவசாயத்திற்கு அடிப்படையாகும் என தன்னுடைய நண்பருக்கு சுட்டிகாட்டினார் ஆயினும் இரவி இந்த அறிவுரைகளை ஏற்று பின்பற்றாமல் மாடுகளை சரியாக பராமரிக்காததால் அவைகளினால் விவசாயபிகளை முடிக்கமுடியவில்லை அதனால் அவைகளை அருகிலிருந்த காட்டிற்கு விரட்டிவிட்டார் அதனை தொடர்ந்து இரவி என்பவர் தன்னுடைய நிலத்தில் ஒருபகுதியை விற்று உழவுபணிகளுக்காக புதியதாக டிராக்டர் ஒன்றினை வாங்கினார்.

பருவமழை விரைவில் வந்து பயிரிடவேண்டியநிலையில் . குமார் என்பவர் தன்னுடைய உழவுமாடுகளை கொண்டு நிலத்தை நன்றாக உழுது சாகுபடிக்கு தயாராகவும் இருந்ததால் பயிரிட்டு அந்த பருவத்தில் நல்ல மகசூலை அடையமுடிந்தது. ஆனால் ரவிஎன்பவர் தனது சோம்பேறிதனத்தால் உழவிற்காக வாங்கியிருந்த தனது புதிய டிராக்டரை கூட நன்கு பராமரிக்காமல் விட்டதால் அதனை இயக்கி நிலத்தை உழுது சாகுபடிக்கு தயார்படுத்ததால் குறிப்பிட்ட பருவத்தில் பயிரிடமால் போதுமான மகசூல் விவசாயத்திலிருந்து கிடைக்கவில்லை. அவருடைய பரிதாபகரமான நிலைக்கு அவரே பொறுப்பாளியாவர் என்பதை உணரவில்லை மேலும் விவசாய வருமானத்தை இழந்ததுமட்டுமல்லால் அவர் தன்னுடைய மோசமான பராமரிப்பு காரணமாக புதியாக வாங்கிய டிராக்டரை சரிசெய்வதற்காக அதிக பணம் செலவழித்தார். வருமானத்திற்காக நிலத்தை விற்கவேண்டிய இக்கட்டாண நிலைக்கு தள்ளப்பட்டார்

சிறந்த கருவிகளைப் பெற்றிருந்த போதிலும் ரவிஎன்பவரால் விவசாயத்தில் வெற்றி பெற முடியவில்லை, அதேசமயம் குமார் ஒரு நல்ல திறமைாளராக இருந்ததால், குறைந்த வசதிகொண்ட கருவிகளைகொண்டிருந்தபோதிலும் அவரால் விவசாயத்தில்வெற்றி பெற முடிந்தது.

வியாழன், 14 செப்டம்பர், 2017

ஆளின் தோற்றத்தை வைத்து தவறாக முடிவுசெய்திடக்கூடாது


ஓட்டுநர் நான் மனிதவளத்துறை முதுநிலைபட்டபடிப்பு முடித்தபின்னர்எனக்கு வெகுதூரத்தில் இருந்தஒரு நிறுவனத்தின் மனிதவளததுறை தலைவர்பணிக்கான பயிற்சியாளராக சேருமாறு உத்திரவு கடிதம் கிடைக்கபெற்றவுடன் அங்கு சென்று சேருவதற்கு தொடர்வண்டியில் இரவு பயனம் துவங்கி விடியற்காலை அந்த தொடர்வண்டிநிலையத்திற்கு சென்றுசேர்ந்தேன் எனக்கு வந்த கடிதத்தில் நான் அந்த ஊரின் தொடர்வண்டி நிலையத்திற்கு வந்து சேரும்போது மகிழ்வுந்து ஒன்று வந்துஅழைத்து சென்று அந்நிறுவனத்தின் விருந்தினர்மாளிகைக்கு கொண்டு சேர்த்திடும் எனக்குறிப்பிட்டு இருந்ததால் அவ்வாறான வண்டி எதுவும் வந்துள்ளதாவென தேடியபோது மகிழ்வுந்த ஓட்டுநரின் சீருடையில் நபர்ஒருவர் அங்கு காத்திருந்ததை கண்ணுற்று அவரை அழைத்து என்னுடைய பெட்டியை எடுத்து அந்தவண்டியல் வைத்திடுமாறு குறிப்பிட்ட நிறுவனத்தின் விருந்தினர்மாளிகைக்கு என்னை அழைத்து செல்லுமாறும் கூறியதை தொடர்ந்துஅந்த மனிதன் அவ்வாறே என்னுடைய பெட்டியை எடுத்து சென்று மகிழ்வந்தில் வைத்தார் நானும் அந்த வண்டியில் ஏறிஅமர்ந்த வுடன் வண்டியை இயக்கி ஓட்ட்ஆரம்பித்தார் வழிநெடுக என்னைபற்றிய விவரங்களை கேட்டு கொண்டே வந்தபோது நான் சாதாரண ஓட்டுநரிடம் பேசுவதை போன்றே பதில்கூறிவந்தேன் விருந்தினர் மாளிகை வந்தவுடன் அங்கு பணிபுரியும் பணியாளர் ஓடிவந்த வண்டியின் கதவினை திறந்து பணிவாக வணக்கம் செலுத்தினர் என்னுடைய பெட்டிய வண்டியிலிருந்து எடுத்து சென்றனர் பின்னர் காலைக்கடன் களை முடித்து சிற்றுன்டி சாப்பிட்டபின்னர் அந்நிறுவனத்தின் நிருவாக அலுவலகத்திற்கு என்னுடைய பணியை ஏற்க சென்றபோது அங்கு காலையில் என்னைை தொடர்வண்டி நிலையத்தில் இருந்து அழைத்து சென்ற ஓட்டுநர் இருப்பதை பார்த்து புன்னகைத்து இங்கு என்ன பணியில் இருக்கின்றீர் கள் என வினவியபோது உடன்அருகிலிருந்த பணியாளர் அவர்தான் இந்த நிறுவனத்தின் தலைவரும் சொந்தகாரரும் ஆவார் எனக்கூறியதும் எனக்கு மயக்கமே வந்துவிடும் அளவிற்கு அதிர்ச்சியாகி நின்றுவிட்டேன் அவர் ஒன்றும் பயப்படாதீர் நான் ஒருநன்பரைசந்திப்பதற்காக தொடர்வண்டி நிலையத்திற்கு வந்தேன் அப்படியே புதியதாக பணியில் சேரவந்த உங்களையும் அழைத்துவந்தேன் அவ்வளவுதான் உங்களுடைய பணியை நீங்கள் துவங்கலாம் என தைரியம்அளித்தார் நாம் ஆளின் தோற்றத்தை வைத்து தவறாக முடிவுசெய்திடக்கூடாது என முடிவுசெய்து கொண்டேன்

சனி, 2 செப்டம்பர், 2017

கொடிக்கம்பத்தின் உயரம் எவ்வளவு எனஅளந்திடுமாறு கோரினால் கொடிக்கம்பத்தின் நீளம் எவ்வளவு என அளந்து கூறுகின்றாரே இது சரியா?


ஒரு நிருவாகிகளின் பயிற்சி நடைபெறும் இடத்தில் நடைபெற்ற பயிற்சியில் கலந்துகொண்ட மூத்த மேலாளர்களின் குழுவிற்கு அருகிலிருந்த கொடிமரத்தின் உயரம் எவ்வளவு என கூறுமாறு பணிக்கப்பட்டனர் உடன் அந்தபயிற்சியில் கலந்து கொண்ட மூத்தமேலாளர்களின் குழுவானது இதற்காக உயரமான ஏணி அளப்பதற்கான நாடா ஆகியவற்றை கொண்டு குழுவாக முயற்சிசெய்தனர் அதாவது அந்த குழுஉறுப்பினர்களில் இருவர் ஏணியைஎடுத்துவந்து அந்த கொடிக்கம்பத்தின்மீது சாய்த்து தரையில் நிற்க வைத்து பிடித்துகொண்டனர் மூன்றாமவர் அளவுநாடாவின் ஒருமுனையை பிடித்து கொண்டு அந்த ஏணியில் கொடிமரத்தின் உச்சிக்கு ஏறமுயன்றுகொண்டிருந்தார் நான்காவது நபர் அளவுநாடவின் மற்றொரு முனையை தரையில் உட்கார்ந்து கொடிக்கம்பத்தின் அடியில்பிடித்து கொண்டிருந்தார் ஐந்தாவது நபர் இதனை மேற்பார்வை செய்துகொண்டிருந்தார் ஏணியின் வாயிலாக கொடிக்கம்பத்திற்கு ஏறமுயற்சித்தவர் ஒரு குறிப்பிட்ட நிலைக்குமேல் ஏறமுடியாமல் கீழேவிழுவதை போன்று தடுமாறினார் அதனால் அதற்குமேல் கொடிமரத்தின் உச்சிக்கு தன்னால் சென்றுஅதன் உயரத்தை அளக்கமுடியாது என கீழேஇறங்கிவந்தார் அந்த குழுவின் மிகுதி உறுப்பினர்களும் கொடிமரத்தின் உச்சிக்கு செல்வதற்கு பயந்ததால் தங்களால் அந்த பணியை செய்யஇயலாது எனஒத்துகொண்டனர் இந்நிலையில் பார்வையாளராக இருந்தஒருவர் தான் அந்த பணியை செய்வதாக ஏற்றுகொண்டு அந்த கொடிமரத்தினை சுற்றி பள்ளம் தோண்டி அந்த கொடிக்கம்பத்தை வெளியிலெடுத்து தரையில் படுக்கவைத்து அளவுநாடவின் வாயிலாக அதன் ஒருமுனையிலிருந்து மற்றொரு முனைவரைஅளந்து எவ்வளவு என தாளில் குறித்து கொண்டு அந்த கொடிமரத்தைமீண்டும் செங்குத்தாக அதேஇடத்தில் நட்டு தோண்டிய பள்ளத்தை மண்ணால் மூடிவிட்டு எவ்வளவு நீளம் அந்த கொடிக்கம்பம் என விடையை கூறிவிட்டு நடையை கட்டினார் அதனை தொடர்ந்து பயிற்சியில் கலந்துகொண்ட மூத்த மேலாளர்களின் குழுவானது கொடிக்கம்பத்தின் உயரம் எவ்வளவு எனஅளந்திடுமாறு கோரினால் இந்த நண்பர் கொடிக்கம்பத்தின் நீளம் எவ்வளவு என அளந்து கூறுகின்றாரே இது எங்களுக்கு தெரியாதா என கேலி செய்து சிரித்தனர்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...