ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

தோல்வி என்பது வெற்றிபெறுவதற்கான மருந்தாகும்

 நாம் அனைவரும் பத்தாம் வகுப்பு வரை கண்டிப்பாக கணிதம் படித்திருப்போம். அந்த கணித பாடத்தில் முக்கோணவியலின் சிக்கலையும் அல்லது ஒரு கோளத்திற்கான கணஅளவையும். நம்முடைய முதல் முயற்சியிலேயே  தீர்வு செய்து விட்டோமா? அந்த நேரத்தில் அது மிகவும் கடினமாக இருந்தது, ஆனால் ஒரு நிரலாளர் போன்று அனைத்து கேள்வி களுக்கான விடையை கண்டுபிடுத்திட முதல் முயற்சியில் தோல்வியடைந்த பிறகு பலமுறை முயன்று இறுதியில் வெற்றியடைந்தோம் அல்லவா.

 சிறுவயதில் Mario அல்லது அதுபோன்ற வேறு விளையாட்டை விளையாடியிருப்போம்.அதில்  முதல் முறை வெல்ல முடிய வில்லை அல்லவா? இதேபோன்று. ஆயிரக்கணக்கான  கேள்விகளுக்கு பலமுறை முயன்று தீர்வு காண்கிறோம், ஆனாலும் நம்மால் இன்னும் நிறுவனங்களின் இருப்புநிலைக் குறிப்பைப் பொருத்தமாக சரிசெய்ய முடிய வில்லையே. கேள்விக்கான விடைகாணும் போது, விளையாட்டுகளை விளையாடும் போது,ஓட்டப் பந்தயத்தில் ஓடும்போது, படத்திற்கான கோடு வரையும்போது நாம் தோல்வியை அடைகின்றோம். தோல்வியின் கசப்பை நாமனைவரும் அனுபவித்திருக்கின்றோம்.
"தோல்வி" என்றால் என்ன?  
 இந்த தோல்வி எனும் சொல்லிற்கு பல விளக்கங்கள் உள்ளன.நம்முடைய பார்வை, பணி, இலக்கு, குறிக்கோள்கள் ஆகிய எதுவாகவும் இருந்தாலும் நம்முடைய  இலக்குகளையும் தொலை நோக்குப் பார்வையையும் அடைவ தற்கான மனப்பக்குவத்தை நாம் பெற்றிருந்தால்,தயங்கிடாமல் நம்முடைய இலக்கினை அடைவதற்கேற்ப செயல்படுவதே இந்த தோல்வி என்பதற்கான மிகசுருக்கமான விளக்கமாகும் . வெற்றியும் தோல்வியும் நம் வாழ்வின் இரண்டு முக்கிய பகுதிகள். தோல்விகளை புறக்கணித்து வெற்றி பெறுவதற்கான வழியை நாம் எப்போதும் தேடிக்கொண்டே யிருக்கின்றோம். நம்முடைய விருப்பங்களும் நாம் தேடுவதும் வெவ்வேறாக இருக்கும்போது மிகவும் வலிக்கிறது.  இருளின் சிறிய வட்டத்தில் உள்ள கரும்புள்ளியே நம்முடைய முடிவாகத் தோன்றுகிறது.

  ஒரு பூ வாடுவது போன்று நம்முடைய புன்னகை தொலைந்து போகிறது.  தவறான எண்ணங்களின் சூறாவளி நம் மனதில் சுழல்கிறது. நம்மைத் தவிர அனைத்தும் நகர்வது போன்று தெரிகிறது, ஆனால் அதைத்தானே நாம் தேடுகிறோம்? நமது பயணம் எது வரை நீடிக்கும்? இருண்ட பகுதியில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்க வேண்டும் என விரும்புவது அவ்வளவுதானா? இதற்கான பதில் "இல்லை."என்பதாகும்.  முந்தைய முயற்சிகளில் தோல்வியுற்ற பிறகு,  மரியா விளையாட்டில் வெற்றிடைந்தபோது பந்தயத்தில் ஓடிவெற்றிக் கோட்டை தொடும்போது அல்லது ஓவியம் வரைந்துமுடித்தபோது கேள்விக்கான விடையை எவ்வாறு தீர்வு செய்தோம்  ஏற்கனவே நாம் அடைந்த தோல்வியே அடுத்தமுயற்சி நம்மைவெற்றியடைய வைக்கிறது. தோல்வி என்பது நாம் தேடும் புள்ளியை அடையாமல் இருப்பதைக் குறிக்கிறது, ஆனால் நாம் மிக நெருக்கமாகவோ அல்லது புள்ளியிலிருந்து வெகு தொலைவிலோ இருக்கலாம் . ஆக, தோல்வி என்பது நாம் இருக்கும் இடத்திற்கும் நாம் தேடும் இடத்திற்கும் உள்ள தூரமாகும்.  மிகவும் சரியான பாடங்களை இந்த தோல்விகளில் இருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டும், . நமது தவறுகள்,  உத்திகள்   ஆகியவை இலக்கை நோக்கிச் செயல்படச்செய்கின்றன, வெற்றிகோட்டினை அடைவதற்கான தூரத்தை உருவாக்கு கின்றன. எவ்வாறாயினும், தோல்வியானது அந்த  உத்திகளை  தவறுகளை மாற்ற அனுமதிக்கிறது,  நம்முடைய இலக்காக இருக்குகின்ற அந்த புள்ளியை நோக்கி நகரச்செய்கின்றது.
தோல்வி ஒரு மருந்தாக செயல்படுகிறது. எவ்வாறு?

   ஏமாற்றத்தினால், திருப்தி யடையாமல் இருக்கின்ற சோம்பல். எனும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு,  தோல்வி என்பது ஒரு மருத்துவ சிகிச்சையாக செயல்படுகிறது, ஏனெனில் உடலில் மருந்து நச்சுயிர்களை அழிக்கிறது,  நம் உடலில் உள்ள திசுக்கள் வேலை செய்யும் முறையை மாற்றுகிறது. அதனோடு உடலில் பற்றாக்குறை பொருட்களை மாற்றி முழுமையாக ஆக்குகிறது அதேபோன்றுதோல்வியானது நம்முடைய செயலற்ற தன்மையை அழித்து, நம்முடைய உத்திகளையும் கவனத்தையும் மாற்றி, வெற்றியைப் பெறுவதற்கான பயணத்தின் உத்தியை மாற்றுகிறது. இவை அனைத்திலும் மனதின் பார்வைகள் நேர்மறையாக இருப்பதற்காக.  நேர்மறையாக சிந்திந்திடுக. எதிர்மறையான அம்சங்களைக் காட்டிலும் தோல்வியின் நேர் மறையான அம்சங்களை மட்டும் காண்க. சில சமயங்களில் நமது உத்திகள் உச்சத்தில் இருக்கும்,இலக்கை அடைய கடுமையாக உழைத்து அந்த வெற்றி யைப் பெறத் தவறிவிடுகின்றன. இது கிட்டத்தட்ட நம் அனைவருக்கும் நடக் கின்றது. பெரிய செயல்களுக்கு அதிகநேரம் எடுக்கும் என்பதை நினைவில் கொள்க, எனவே நாம் சரியான நேரத்திற்கு காத்திருக்க வேண்டும், அதற்கேற்ப நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும், மேலும் நம்பிக்கை, பொறுமை விடாமுயற்சி ஆகியவற்றை கொண்டிருந்தால். காலம் கணிந்தவுடன் உடனடியாக வெற்றி நம்மைத்தேடி வந்துசேரும்.

சனி, 17 செப்டம்பர், 2022

சகோதரர்களிடையே சொத்து தகராறு

 தங்களுடைய தந்தையின் சொத்தையும் நிலத்தையும் பிரிப்பதில்  இரு மகன்களுக்கு இடையே தகராறு ஆகிவிட்டது, மிகமுக்கியமாக தாங்கள் வாழும் ஒரு வீட்டைப் பற்றிய தகராறு மிகப்பெரியதாக இருந்தது.
இந்த சொத்துகளை பிரி்ப்பதில் எழுந்த தகராறின் தொடரச்சியாக ஒரு நாள் அண்ணன் தம்பி ஆகிய இருவரும் எந்த நேரத்திலும் ஒருவரை ஒருவர் கொன்றுவிடத் தயார் என சண்டை போட்டுக் கொண்டார்கள். இந்நிலையில் அவர்களுடைய தந்தை தம்முடைய மகன்களைப் பார்த்து சத்தமிட்டு சிரித்தார்.
 தங்களுடைய தந்தை இவ்வாறு சிரிப்பதைக் கண்டு அண்ணன் தம்பிகள் இருவரும் சண்டையை நிறுத்திவிட்டு அவரிடம் அவ்வாறு  சிரித்ததற்குக் காரணத்தை வினவினர்.
உடன் அவர்களுடைய தந்தை, “ஒரு சிறிய வீ்ட்டிற்காகவும் நிலத்திறகாகவும் நீங்கள் இருவரும் இவ்வளவு சண்டை போடுகின்றீர்கள். முதலில் இருவரும் இந்த சண்டையை நிறுத்திவிட்டு என்னுடன் வாருங்கள், நான் உங்களுக்கு ஒரு விலைமதிப்பற்ற புதையலைக் காட்டுகிறேன்.
ஆனால் ஒரு நிபந்தனை , நீங்கள் தொடர்ந்து சண்டையிட்டால், நான் உங்கள் இருவரையும் புதையல் இருக்குமிடத்திறகு அழைத்துச் செல்ல மாட்டேன்,” எனக்கூறினார்
  “நாங்கள் நிபந்தனை மீறினால் உடன் திரும்பி விடுவோம்.என்ன நடந்தாலும் நாங்கள் இருவரும் சண்டை போட மாட்டோம், உங்களுடனேயே பயணம் செய்வோம்,” என்றுகூறி மகன்கள் இருவரும் புதையலை கண்டடைவதற்காக ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
அதன்பிறகு வீட்டை விட்டு வெளியேறி புதையல் இருக்குமிடத்திற்கு செல்வதற்காக, மகன்கள் இருவரும் தந்தையுடன் ஒரு பேருந்தில் ஏறி பயனம் செய்தனர். சுமார் பத்து மணி நேரம் பயணம் செய்து ஒரு கிராமத்தை அடைந்தனர்.
 அக்கிராமத்தில் எல்லாப் பக்கங்களிலிருந்தும் வெறிச்சோடியிருந்த மிகப் பெரிய மாளிகைக்கு தந்தை தன்னுடைய மகன்கள் இருவரையும் அழைத்துச் சென்றார். அவர்கள் மிகப்பழையதான மாளிகைக்குள் நுழைந்தபோது, அந்த மாளிகையில் பல இடங்களில் புறாக்கள் கூடு கட்டியிருப்பதைக் கண்ட தந்தை, அழஆரம்பித்தார்.
 உடன், "அப்பா! என்ன நடந்தது? ஏன் நீங்கள் அழுகின்றீர்கள்?" என மகன்கள் இருவரும் தந்தையிடம் காரணம் கோரினர்
தந்தை அழுதுகொண்டே, “பி்ள்ளைகளே இந்த மாளிகையை கவனமாகப் பாருங்கள், நீங்கள் இருவரும் இங்கு கழித்த குழந்தைப் பருவத்தை நினைவில் கொள்ளுங்கள்.
உங்களுக்கு ஞாபகம் இருக்காது ஆனால் நீங்கள் சிறுவயதில் இருந்த போது நான் இந்த மாளிகைக்காக என் அண்ணனுடன் நிறைய சண்டையிட்டேன்  சண்டையில் நான்வென்றேன், இந்த மாளிகையை பெற்றேன் ஆனால் என் சகோதரனை என்றென்றும் இழந்தேன், ஏனென்றால் அவர் என்னுடன் உறவை துண்டித்து கொண்டு பிழைப்பை தேடி. தொலைதூர நாட்டிற்கு சென்றுவிட்டார்.
பின்னர் காலம் மாறியது, ஒரு நாள் நாமும் இந்த மாளிகையை விட்டு வெளியேற வேண்டியிருந்தது " நடந்ததை கூறினார்.
மகன்கள் இருவரும் மிககவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது தந்தை கேட்டார், “பிள்ளைகளே, நாம் இங்கு வருவதற்காக பயனம் செய்த பேருந்தில் எந்த இருக்கையில் அமர்ந்திருந்தோம் என்று சொல்லுங்கள்? அந்த இருக்கை என்றைக்கும் நமதாக இருக்குமா?" என வினவினார்
உடன் மகன்கள் இருவரும் சேர்ந்து, “எப்படி எப்போதும் அந்த பேருந்து இருக்கை நமக்கு சொந்தமாக இருக்க முடியும்? பேருந்தின் பயணம் தொடர்கிறது, நாம் கீழிறங்கியவுடன் வேறு சிலர் அந்த இருக்கையில் உட்காருவார்கள், நாம் பயனம் செய்த சிறிது நேரம் மட்டுமே நாம் உட்கார்ந்து பயனித்த இருக்கை நமக்கு எவ்வாறு சொந்தமாக முடியும் "என மிகநன்றாக விவரித்தனர்
  தொடர்ந்து தந்தை சிரித்துவிட்டு , “இதைத்தான் நான் உங்களுக்கு விளக்க முயன்றேன். சிறிது காலம் மட்டுமே உங்களுக்கு சொந்தமாக இருக்கபோகும். அந்த சொத்துகளுக்காக நீங்கள் தகராறு செய்தீர்களே. அவை உங்களுக்கு முன் அதன் உரிமையாளர் வேறொருவராக இருந்தார், சிறிது காலம் நீங்கள் இருக்கிறீர்கள், அதன் பிறகு வேறொருவர் அதன் உரிமையாளராக இருப்பார். என் அருமை பிள்ளைகளே, இந்த குறுகிய கால உரிமையாளர்களாக ஆவதற்காக ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டிருக் கின்றீர்களே நீங்கள் இருவரும்ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்!
விலைமதிப்பற்ற உறவுகளை தியாகம் செய்யாதீர்கள். வாழ்க்கையில் பண ஆசைகள் வந்தால், அந்த நேரத்தில் புறாக்கள் கூடு கட்டிய இந்த மாளிகையின் நிலையை நினைவில் கொள்ளுங்கள்,
ஒவ்வொரு நாளும் பயணிக்கும் பேருந்தின் இருக்கையை நினைவில் கொள்ளுங்கள். சிறிது நேரம் பயனம் செய்வதற்கான அந்த இருக்கைக்காக உங்கள் உறவை பலி கொடுக்காதீர்கள்..” என மிக நீண்ட விளக்கமளித்தார்
இரண்டு மகன்களும் தந்தையின் சொற்களின் அர்த்தத்தை புரிந்துகொண்டு  இனி தாங்கள் சொத்துகளுக்காகவும் நிலத்திற்காகவும் தகராறு எதுவும் செய்யமாட்டோம் ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து வாழ்வதாக கூறி   தந்தையிடம் அழுது கொண்டே மன்னிப்பு கோரினர்.

கற்றல் : நம்மிடம் எந்தச் செல்வம் இருந்தாலும், அது சிறிது காலத்திற்கு மட்டுமே நமக்கானது... சிறிது காலத்திற்குப் பிறகு உரிமையாளர் மாறுகிறார்.. அதனால் செல்வங்களின் உரிமையாளர் விவகாரத்தில் விலைமதிப்பற்ற உறவை இழக்காதீர்கள்.

சனி, 10 செப்டம்பர், 2022

கோபக்காரணின் செயலும் புத்தரின் போதனையும்

 பயணத்தின் போது புத்தர் ஒரு கிராமத்தை அடைந்தார். அங்கு அவரது சொற்பொழிவைக் கேட்க ஏராளமான அளவிலான மக்கள்  கூடினர். புத்தர் தன்னுடைய சொற்பொழிவில்,  "கோபம் என்பது நெருப்பு, அது மற்றவர்களை எரிப்பது மட்டுமல்லாமல், தன்னையும் எரித்து சாம்பலாக்கும். எனவே கோபத்தைத் துறந்து மன்னித்திடுக" என சகிப்புத்தன்மை  மன்னிப்பு ஆகியன பற்றி பொதுமக்களுக்கு அறிவுரை கூறிகொண்டிருந்தார்.
புத்தரின் சொற்பொழிவை கேட்க கூடியிருந்து பொதுமக்களில் அதிக கோபக்கார நபர் ஒருவரும் அமர்ந்து அந்த சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தார். புத்தரின் இந்த சொற்களைக் கேட்டவுடன் கோபமாக அந்த  நபர் எழுந்து கரகரப்பான குரலில், “இப்படிப்பட்ட கபட பிச்சைக்காரனை நான் இதுவரையில் பார்த்ததே இல்லை. உன்னுடைய சுயநலத்திற்காக இந்த கிராமத்தில் தவறான செய்திகளை பரப்புகின்றாய். உனக்கு வெட்கமாக இல்லையா” என வினவினார்
புத்தர் இவ்வாறான சொற்களை கேட்டு ஒன்றும் பதிலளிக்காமல் முன்பு போலவே அமைதியாக இருந்தார். இதைப் பார்த்த அந்த கோபக்கார நபருக்கு கோபம் மிகவும் அதிகமாகி, புத்தரின் முகத்தில் “தூ”  எனஎச்சில் துப்பிவிட்டுச் சென்றுவிட்டார்,  புத்தர் அமைதியாக தனது சொற்பொழிவை முடித்து கொண்டு தன்னுடைய சீடர்களுடன் மற்றொரு கிராமத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார்.
தன்னுடைய வீட்டிற்கு வந்த பிறகு, கோபமடைந்த அந்த நபர் புத்தரைப் பற்றி நீண்ட நேரம் நினைத்துக் கொண்டிருந்தார். கோபம் தணியத் தொடங்கியதும், புத்தரிடம் சொன்னதையும் செய்ததையும் நினைத்து வருந்தத் தொடங்கினார்
அதனால் உடனடியாக புத்தரை நேரில் சந்தித்திடஅவர் சொற்பொழிவு செய்து கொண்டிருந்த பகுதிக்கு விரைவாக சென்றார். ஆனால் அங்கு சென்றபோது புத்தர் அடுத்த கிராமத்திற்கு சென்றுவிட்ட செய்தி கிடைத்தது. அதனால் புத்தரை நேரில் சந்திக்க இயலாமல் தன்னுடைய வீட்டிற்கே திரும்புவந்து இரவு முழுவதும்  தன்னைத்தானே திட்டிக் கொண்டே இருந்தார். அடுத்த நாள், காலை புத்தரைத் தேடி பக்கத்து கிராமத்திற்குச் சென்றார்
அங்கு புத்தர் அந்த கிராம மக்களுக்கு சொற்பொழிவு செய்து கொண்டிருப்பதைக் கண்டார்., புத்தரிடம் சென்று, அழுதுகொண்டே அவரது கால்களைப் பிடித்து, அவரிடம் மன்னிப்பு கேட்கத் தொடங்கினார்
புத்தர் வியப்புடன் அந்த நபரைப் பார்த்து, ‘ ஐயா முதலில் நீங்கள் எழுந்திருங்கள் ,‘யார் நீங்கள்? ஏன் என்னிடம் மன்னிப்பு கோருகின்றீர்கள்? ." என வினவினார்
அதற்கு அந்த மனிதன், “உங்களுக்கு என்னை அடையாளம் தெரியவில்லையா? | நான் நேற்று உங்களிடம் மிககோபமாக பேசி நடந்து கொண்டவன். நான் செய்தது தவறு. | உங்களிடம் மன்னிப்பு கோர வந்தேன்". எனக்கூறினார்
புத்தர் நிதானமாக, “அண்ணா, நேற்று நீங்கள் பேசிக்கொண்டிருந்தது கடந்தகாலம்  | நேற்றைய அனைத்து சம்பவங்களும் செயல்களும் நம்மை விட்டு சென்றுவிட்டன. இப்போது நாம் இருப்பது நிகழ்காலம் .
நீங்கள் ஏன் நேற்றைய நிகழ்விலேயே நின்று கொண்டிருக்கின்றீர்கள்?  இப்போது அந்த செய்திகளையும் செயல்களையும் அங்கேயே விட்டுவிட்டு நிகழ்காலத்தில் வந்து நல்ல செயல்களைச் செய்து உங்கள் நிகழ்காலத்தை மேம்படுத்துங்கள். கடந்த காலத்தை நினைவுகூருவதன் மூலம் உங்கள் நிகழ்காலத்தை ஏன் அழிக்க வேண்டும்." என அறிவுரைக்கூறினார்
புத்தரின் அந்த சொற்களைக் கேட்டதும் அந்த மனிதனின் கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது. அந்தநபர் புத்தரை வணங்கி, “இனிமேல் நான் கோபத்தைத் துறந்து அன்பையும் கருணையையும் என் வாழ்க்கையில் இணைத்துக்கொள்வேன்,என்னுடைய வாழ்க்கையை சிறப்பாக ஆக்குவேன், ” என உறுதி கூறினார்.
 கற்றல் : நாம்  வாழ்க்கையில் செய்த தவறுகளை நம்முடைய மனதில் வைத்துக்கொண்டு, அந்த குற்றச் சுமையை வாழ்க்கை முழுவதும் சுமந்துகொண்டு, வருத்தத்தின் நெருப்பில் எரிந்துகொண்டே இருக்கிறோம். ஏற்கனவே ஏற்பட்ட பிழையை சரிசெய்ய முடியாது.
எனவே, அதை மீண்டும் மீண்டும் செய்யக்கூடாது என்ற உறுதியுடன் நாம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். கடந்து போனவற்றின் மீது நமக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. நிகழ்காலம் நமது கட்டுப்பாட்டில் உள்ளது.
நல்ல செயல்களைச் செய்வதன் மூலம்  நிகழ்காலத்தை ஏன் சிறப்பாக மாற்றக்கூடாது.

திங்கள், 5 செப்டம்பர், 2022

காய்கறி விற்பனையாளருக்கு உதவுதல்

ஒரு சிறுவன் தன்னுடைய தாய் தினமும் வழக்கமாக தங்களுடைய வீட்டின் வாயிலிற்கு  வருகின்ற காய்கறி விற்பணை செய்திடும் பெண்ணிடம் காய்கறிகள் வாங்குவதைப் பார்த்துக் கொண்டிருப்பான் ,
 ஒரு குறிப்பிட்ட நாள், அந்த காய்கறி விற்கும் பெண் கீரை கட்டுகளை கூடையில் கொண்டு வந்து அவர்களுடைய வீட்டின் வாயிலில் இறக்கி வைத்தார், அந்த கீரைக்கட்டுகளின் விலை என்ன வென்று அந்த சிறவனின் தாய் வினவியபோது கீரை கட்டு ஒன்றின் விலை 6 ரூபாய் எனக்கூறினார். உடன் சிறுவனின்  தாய் அ்நத விலையில் பாதிவிலைதான் தரமுடியும் என பேரம்பேசுவதை அந்த சிறுவன் கண்டான். மேலும் சிறுவனின் தாய் தான் கோரிய விலையில் கீரைகட்டுகளை கொடுப்பதாக இருந்தால் 4 கட்டுகளை வாங்கி கொள்வதாக கூறினார்.
சிறிது நேரம் இருவரும் கீரைகட்டின் விலையைப் பற்றி விவாதித்தனர்.கடைசியாக காய்கறி விற்பனையாளர் அந்த சிறுவனின் தாய் கோரும் விலையில் விற்க முடியாது என்று பணிவுடன் மறுத்துவிட்டார், ஏனெனில் அதை வாங்குவதற்கான செலவைக் கூட  ஈடுசெய்ய முடியாது எனக்கூறி. கீரைக் கூடையை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்.
அந்த காய்கறி விற்பணை செய்யும் பெண் சிலஅடிகள் நடந்த பிறகு,  திரும்பி வந்து அந்த சிறுவனின் தாயிடம், “கீரைகட்டு ஒன்று 4.50 ரூபாய் என்ற விலையில் தருகிறேன்” என்றாள்.
சிறுவனின் தாய் அந்த விலையை ஏற்க மறுப்பதாக தன் தலையை ஆட்டினார். இதை பார்த்த காய்கறி விற்பணைசெய்திடும் பெண்  திரும்பிநடந்து சென்றார்.
சிறிது நேரம் கழித்து, அந்த காய்கறி விற்கும் பெண் மீண்டும் திரும்பி வந்தார், கடைசியாக அந்த சிறுவனின் தாய் கூறிய விலைக்கே 4 கட்டுகீரைகளை  தருவதாக ஒப்புக்கொண்டு கீரைக்கூடையை தரையில் இறக்கி வைத்தார்.  சிறுவனின் தாய்  கூடையிலிருந்த கீரைகட்டுகளில்  ஒவ்வொரு கட்டாக எடுத்து சரிபார்த்து,  4 கீரைகட்டுகளைத் திருப்தியாக தேர்ந்தெடுத்தார்.
காய்கறி விற்பவருக்கு தேவையான  பணமும்  கொடுத்தார். காய்கறி விற்பனையாளர் சிறுவனின் தாய் கொடுத்த பணத்தை எண்ணிக்கூட பார்க்காமல் தன்னுடைய சுருக்குபையில் வைத்துக்கொண்டு கிளம்புவதற்காக எழுந்தார். உடன் சிறுவனின் தாய் அந்த காய்கறி விற்பவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு, காலையில் உணவு சாப்பிட்டாயா என்று கேட்டார், அதனை தொடர்ந்து காய்கறி விற்பவர், "இன்றைய சம்பாத்தியத்தில், வீட்டிற்குச் செல்லும் வழியில் கொஞ்சம் அரிசி வாங்கி கொண்டு சென்ற கஞ்சி காய்ச்சிதான் சாப்பிடவேண்டும்" என்று பதிலளித்தார். இதைக் கேட்ட சிறுவனின் தாய் அந்த காய்கறி விற்பணை செய்திடும் பெண்ணை உட்காரச் சொல்லிவிட்டு, அவசரமாக உள்ளே சென்று தேவையான உணவும் தண்ணீரும்  கொண்டுவந்து கொடுத்து அந்த உணவினை உண்டு செல்லுமாறு கோரினார்.
காய்கறி விற்பனையாளர் நன்றியுடன்  சிறுவனின் தாய் கொண்டுவந்து கொடுத்த உணவினை உண்டு தண்ணீர் குடித்தார். மேலும் சிறுவனின் தாய் அந்த காய்கறி விற்பணை செய்திடும் பெண்ணிற்கு  தேநீர்  தயார் செய்து  கொடுத்தார் காய்கறி விற்பணை செய்திடும் பெண் அந்த தேநீரைக் குடித்துவிட்டு, சிறுவனின் தாயாருக்கு நன்றி  கூறினார் பின்னர்  எழுந்து, தலையில் கீரைகட்டுகளின் கூடையை தூக்கி வைத்து கொண்டு,  நடக்கஆரம்பித்தார், சிறுவன் இதையெல்லாம் பார்த்துக் குழப்பமடைந்தான். அவன் தன்னுடைய தாயிடம் சென்று , " அம்மா முன்பு இரக்கமில்லாமல் ஒரு ரூபாய்க்கு கூட கூடுதலாக தரமுடியாது என  விலையை குறைத்து கீரைகட்டுகளை வாங்கினாய் , ஆனால் இப்போது அந்த கீரை விற்பணை செய்திடும் பெண்ணிற்கு  உணவை வழங்கினாயே.. ஏன் ?" என வினவினான்
அதற்கு அந்த சிறுவனின் தாய் சிரித்துக்கொண்டே , “என் அன்பான குழந்தையே, நான் கீரைகட்டுகளை வாங்கும் போது, வாங்குபவருக்கும் விற்பவருக்கும் இடையே ஒரு வர்த்தகம் இருந்தது அதனால் கீரைகட்டின் விலையை குறைத்து வாங்கினேன், ஆனால் அந்த காய்கறி விற்ற பெண் உடல்நிலை சரியில்லாததால்  நான் உணவும் தேநீரும் வழங்கினேன்.
ஏனெனில் வர்த்தகத்தில் இரக்கம் இல்லை, இரக்கத்தில் ஒருபோதும் வர்த்தகம் இருக்காது”. என நீண்ட விளக்கமளித்தார்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...