ஞாயிறு, 19 நவம்பர், 2023

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்டில் இவர் செய்கின்ற ஒவ்வொரு சிறு சிறு செயலிற்கும் சரியாக செய்யவேண்டுமென அவரது பெற்றோர்கள் அந்த இளைஞரிடம் நச்சரி்ததுகொண்டேயிருப்பதால் அதிக விரக்தியடைந்துவந்தார்.
  இந்த நேர்காணலுக்காகஅவர் காத்திருந்தபோது, அவ்விளைஞர் , “இன்றைய நேர்காணலில் நான் வெற்றி பெற்றால்  நான் என் பெற்றோறுடன் சேர்ந்து வாழும் வீட்டிற்கு விடைபெற்று கொண்டு வந்து இந்நகரத்தில் குடியேறி விடுவேன். அவ்வாறு செய்துவிட்டால், நான் இனிஎப்போதும் என் பெற்றோர்கள் அடிக்கடி சிறு செயலுக்கும் நச்சரித்துகொண்டிருப்பதை நான்  கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை. " என சிந்தித்தார்
தொடர்ந்து தன்னுடைய பெற்றோர்கள் தன்னிடம் கடிந்துகொள்ளும் தன்னுடைய சிறுசிறுசெயல்களைப் பற்றியும் அவர் சிந்தித்தார்.
அவர் குளியலறையிலிருந்து வெளியேவரும்போது அவரது தாயார் அந்த குளியலறைகதவை கதவை சரியாகமூடச் சொல்வார், மேலும் தண்ணீர் குழாய் சரியாக மூடப்பட்டிருக்கின்றதாவென குளியலறையிலிருந்துவெளியேறுவதற்கு  முன் சரிபார்த்துவிட்டு வரச்சொல்வார்க.
மேலும் அவரது தந்தை ஒவ்வொருஅறையிலிருந்து வெளியேறுமுன்  மின்விசிறி சுழன்றுகொண்டிருப்பதையும் அல்லது மின்விளக்குகள் எரி்ந்து கொண்டிருப்பதையும் கண்டிப்பாக அனைத்து அவைகளின் இயக்கத்தை நிறுத்திவிட்டு வெளியேறுமாறு கூறுவார்.
வீட்டிலுள்ள பொருட்களை அந்தந்த பொருட்களை அதனதன் இடத்தில் சரியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவனுடைய தாய் எப்பொழுதும் அவனைத் திட்டிக்கொண்டே இருப்பாள்.
இதையெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே, "இதையெல்லாம் நான் ஏன் கேட்க வேண்டும், எனக்கு இந்த பணி கிடைத்தால், நான் நிச்சயமாக அவர்களுடன் சேர்ந்து வாழ்கின்ற  வீட்டை விட்டு வெளியேறிவிடுவேன்" என்று முடிவுசெய்துகொண்டிருந்தார்.
சுற்றும் முற்றும் பார்த்தபோது, அலுவலக வராண்டாவில் அவனைபோன்ற ஏராளமான  இளைஞர்கள் அந்த பணிக்கான நேர்முகத்தேர்வில் கலந்து கொள்வதற்காக அமர்ந்து காத்துகொண்டிருந்ததை  கண்டார் .
அப்போது அவ்வலுவலகத்தில் வராண்டா விளக்கு  காலை பத்து மணியாகியும் அனைத்து நிறுத்தாமல் தொடர்ந்து எரிந்துகொண்டிருப்பதை கண்டார். தன்னுடைய பெற்றோர்களின் அறிவுரையை நினைவுக்கு கூர்ந்தவுடன் எழுந்து விளக்கை அனைத்து நிறுத்தினார்.
அப்போது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த குளிர்நீர் கருவியில் இருந்து தண்ணீர் சொட்டுவதை கண்டார். உடன் அவர் எழுந்துசென்று சரியாக குழாயை மூடி தண்ணீர் தொடர்ந்த கொட்டிக்கொண்டேயிருப்பதை நிறுத்தினார்.
இரண்டாவது தளத்தில் நேர்காணல் நடைபெறும் என்று அறிவிப்பு செய்யப்பட்டந்தது.
எனவே அவ்விளைஞன் எழுந்து இரண்டாவது மாடிக்குச் செல்லும் போது, செல்லும் வழியில்  நாற்காலிகள் சிதறி  இருப்பதைக் கண்டு, அவைகளை வழியிலிருந்து  ஓரமாக நகர்த்தி வைத்துவிட்டு இரண்டாவது மாடிக்குச் சென்றார்.
இப்போது,இரண்டாவது மாடியில் வெளியே காத்திருந்த இளைஞன், ஏற்கனவே  தன்னைபோன்ற அங்கு நேர்முகத்துவந்திருந்தவர்கள் நேர்முகத்தேர்விற்கான அறைக்குள்செல்வதையும் உடனடியாக வெளியே வந்துவிடவதையும் கண்டார்.
இதுகுறித்து விசாரித்தபோது, நேர்காணல் செய்பவர்கள் அவர்களிடம் கேள்வி எதுவும் கேட்கவில்லை என்பது தெரியவந்தது.
  அதாவது அவர்களிடமிருந்து தேவைையான ஆவணங்களைம்ட்டும் பெற்ற பிறகு,  உடன் அவர்களைத் திரும்பிச் செல்லும்படி கூறுகின்றனர்.
இளைஞனின்  எண் வந்தது. அவர் உள்ளே சென்று நேர்காணல் செய்பவரிடம் தனது ஆவணங்களை நீட்டினார். அவரது ஆவணங்களை சரிபார்த்த பிறகு, நேர்காணல் செய்பவர், கேள்வி எதுவும் கேட்காமல் "நீங்கள் எப்போது பணியில் சேருகிறீர்கள்?" என க்கூறியபோது
அவ்விளைஞன் மிகவும் ஆச்சரியத்துடன் அவர்களை திகைத்து பார்த்தபோது.
நேர்காணல் செய்பவர், “இன்று, நேர்காணல் செய்வதற்கு முன்பு , சிசிடிவியில் அனைவரின் நடத்தையையும் கவனித்தபோது யாரும் சரியாக செயல் படவில்லை என்பது தெரியவருகின்றது. எல்லோரும் வந்தார்கள் சென்றார்கள், ஆனால் யாரும்உங்களை போன்று எரிகின்ற  விளக்கை அனைத்து நிறுத்தவில்லை. குழாயில் தண்ணீர் சொட்டிகொண்டேயிருப்பதை நிறுத்தம்செய்யவில்லை சிதறிகிடந்த நாற்காலிகளை ஓரமாக நகர்த்தி வைக்கவில்லை உங்களிடம் அவைகளை சரிசெய்யவேண்டும் எனும்நல்ல  பழக்கவழக்கங்கள் உள்ளன.
சுய ஒழுக்கம் இல்லாத ஒருவர், எவ்வளவு, புத்திசாலியாக இருந்தாலும், நிர்வாகத்திலும் வாழ்க்கையிலும் வெற்றி பெற முடியாது.எனக்கூறி வெற்றிகரமாக வழிகூட்டிஅனுப்பினர்
நேர்காணல் முடிந்ததும். அந்த இளைஞன் தங்களுடைய மிகவிரைவாக தங்களுடைய வீட்டிற்கு சென்றடைந்தார் .
 உடன் தான் அவர்களிடம்  அவ்வப்போது கோபத்துடன் எரிச்சலடைந்து பேசுவதற்கு மன்னிப்புக் கேட்டுகொண்டு இன்று தான் அவர்களுடைய அறிவுரையை பின்பற்றியதால்தான் தனக்கு ஒரு நல்ல பணி கிடைத்தது எனவும் தொடர்ந்து
அவர், “என் வாழ்க்கையில், சிறிய செயல்களில் நீங்கள் நச்சரித்ததால் நான் உங்களிடம் கற்றுக்கொண்ட பாடங்களைவிட எனது பட்டப்படிப்புக்கு எந்த மதிப்பும் இல்லை.
நான் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமானால், கல்வி மட்டுமல்ல, நல்ல பழக்கவழக்கங்களும்  விழுமியங்களும்  முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை  இதுவரையில் நீங்கள் என்னை திருத்தி செயல்படச்செய்யவைத்ததன்மூலம் இன்றுநான் அறிந்து கொண்டேன்."என நன்றி கூறினார்

சனி, 11 நவம்பர், 2023

அரசகுருவும் ஆடு மேய்ப்பவனும் - பேராசை கதை

 
ஒருமுறை போஜ் எனும் அரசனின் அரசவையில்  - பலிபீடத்தை போன்று ஒரு மனிதனால் வெளியே வர முடியாத கினறு எது?  என்ற ஒரு கேள்வி எழுந்தது. உடன் அரசன் அதற்கான மிகச்சரியானபதிலை அந்த அரசவையிருந்த உறுப்பினர்களில் யாராவதொருவர் கூறுமாறு கேட்டுக்கொண்டார் அதனை தொடர்ந்து அரசவையிலிருந்த உறுப்பினர்கள் பலரும் பல்வேறுவிதமான பதில்களை அளித்தனர் ஆனால் யாராலும் அந்தக்கேள்விக்கான மிகச்சரியான பதிலால் அரசனின் ஆர்வத்தை திருப்திப்படுத்த முடியவில்லை. இறுதியில், அவ்வரசன் அரசவை குருவிடம்  ஏழு நாட்களுக்குள் இந்த கேள்விக்கான மிகச்சரியான பதில் சொல்ல வேண்டும், இல்லையெனில் அவரிடமிருந்து அரசவை குரு என்ற பதவியும் நீக்கம் செய்யப்படும் அதனோடு அவர் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறினார். அதனால்  அரசகுரு அந்த கேள்விக்கான சரியான பதிலைக் கண்டுபிடிக்க மிககடுமையாகமுயன்றார், ஆனால் ஆறு நாட்கள் கடந்தும், அவரால் பதிலெதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அரசன் கெடுவிதித்த ஏழாவது நாளன்றுஅந்த நாட்டின் அரசகுருவானவர் நம்மால் அரசன்கோரியவாறு அந்த கேள்விக்கான மிகச்சரியான பதிலை கண்டுபிடிக்கமுடியவில்லையே அடுத்து நாம் என்னசெய்வது எனமிகுந்த  மனவருத்தத்துடனும் அவநம்பிக்கையடனும் மனஆறுலிற்காக அருகிலிருந்த காட்டிற்குள் சென்றார், அவர்அந்தக் காட்டில் ஆடுமேய்ப்பவன் ஒருவனை கடந்து சென்று கொண்டிருந்தார். அந்த ஆடு மேய்ப்பவன் இவர் நம்முடைய நாட்டின் அரசகுருவாயிற்றே ஏன் மிகமனவருத்தத்துடன் காட்டிற்குள் சென்று கொண்டிருக்கின்றார் எனஅவரை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டு, "ஐயா நீங்கள் இந்த நாட்டின் அரசகுருவல்லவா ,நீங்கள்  இந்தகாட்டிற்குள்  என்ன செய்யப்போகின்றீர்கள்? நீங்கள் ஏன் மிகமனவருத்தத்துடனும் இவ்வளவு சோகமாகவும் இருக்கின்றீர்கள் ?"  என வினவினான் அந்த ஆடு மேய்ப்பவனிடம் பேசிப் பயனில்லை என எண்ணிக் கொண்டு, அரசகுருவானவர் பதில் ஏதும் பேசாமல் தொடர்ந்து நடந்து சென்று கொண்டிருந்தார். ஆடுமேய்ப்பவன்  மீண்டும், “ஐயா , உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்று கூறுங்கள். உங்களுடைய பிரச்சனைக்கான தீர்வு என்னிடம்கூட இருக்கலாம்.“  எனக் கோரினான் .அவ்வாறு அந்த காட்டிலிருந்த ஆடுமேய்ப்பவன் அவரிடம் கேட்டபோது அரசகுருவானவர் தன்னுடைய  பிரச்சனையைஅந்த ஆடுமேய்ப்பவனிடம் பகிர்ந்து கொள்வதில் எந்தத் தீங்கும் ஏற்படவழியில்லை அதனால் ஆடுமேய்ப்பவனிடம் தன்னுடய பிரச்சினயை கூறலாம் என முடிவுசெய்து ஏழுநாட்களுக்குமுன் அரசவையில் எழுந்த  கேள்வியும் அதற்கான பதிலை ஏழுநாட்களுக்குள் பதில் சொல்ல முடியாவிட்டால் தன்னுடைய அரசபதவி இழப்பதோடுமட்டமல்லாமல் தன்னை இந்த நாட்டைவிட்டு வெளியேறுமாறு அரசன் கட்டளையிட்டதையும் தன்னுடைய தற்போதைய கையறுநிலையை  பற்றியும் விவரமாக கூறினார் . இதைக் கேட்ட ஆடுமேய்ப்பவன்அரசகுருவிடம், "பரவாயில்லை ஐயா. நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் ஐயா. என்னிடம்  மந்திர கல் ஒன்று உள்ளது, அதைப் பயன்படுத்தினால் நீங்கள் எந்த வொரு பிரிச்சினைக்கும் தீர்வுகாண முடியும் விரும்பினால் எவ்வளவு தங்கத்தை வேண்டுமானாலும்கூட கொண்டுவருமாறு செய்ய முடியும்" என்றார். ஆடுமேய்ப்பவனின் இந்த பதிலை கேட்டு அரசகுருமிகுந்த ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தார். தொடர்ந்து ஆடுமேய்ப்பவன், "ஐயா இந்தக் கல்லால் நீங்கள் இனி பணத்திற்காக கவலைப்பட வேண்டியதில்லை, அதனை உங்களிடமிருந்து பெறுவதற்காக பலரும் உங்களைப் பின்தொடர்வார்கள், அதனை நான் உங்களுக்கு வழங்க முடியும், ஆனால் ஒரு நிபந்தனை உள்ளது." என கூறியதும் அரசகுருவானவர், "நிபந்தனை என்ன?" எனக்கேட்டார் உடன் ஆடு மேய்ப்பவன் , "ஐயா நீங்கள்முதலில் என் சீடனாக  மாறிசெயல்படவேண்டும்." எனக்கூறியபோது அரசகுருவானவர் முதலில், "பணத்திற்காக நான் ஏன் ஆடு மேய்ப்பவனின் சீடனாக ஆக வேண்டும்" என்று நினைத்தார். ஆனால் பின்னர் மந்திரக் கல்லின் திறனை பற்றி சிந்தித்து, அரசுகுரு ஒப்புக்கொண்டார். இப்போது, ஆடு மேய்ப்பவன், "என் சீடனாவதற்கு, முதலில் நீங்கள் என்னுடைய இந்த ஆடுகளில் இருந்த கரக்கின்றஆட்டுப்பாலை குடிக்க வேண்டும்" என்றார். அரச குரு, "ஆனால் ஒரு பிராமணர் ஆட்டுப்பாலை குடித்தால், அவனது புத்திசாலித்தனம் இல்லாமல் ஆகிவிடும், அதனால் நான் ஏன் ஆட்டுப்பாலை குடிக்கவேண்டும் எனவே நான் அந்த பாலை குடிக்க மாட்டேன்" என்றார். ஆடு மேய்ப்பவன், "அப்படியானால் சரிஐயா நீங்கள் போகலாம், நான் அந்த  மந்திரக் கல்லை உங்களுக்கு கொடுக்க மாட்டேன்" என்றான். அதன்பிறகு ஒரு நிமிடம் சிந்தித்த அரச குரு, "சரி, நான் நீ கூறியவாறு ஆட்டுப்பாலை குடிக்கின்றேன்" என்றார். ஆடு மேய்ப்பவன், ° சரி ஐயா. ஆனால் , முதலில் நான் ஆட்டுப் பாலை குடிப்பேன், பிறகு மிகுதியாக நான்வைத்திடுகின்ற ஆட்டுப் பாலைத்தான் நீங்கள் குடிக்க வேண்டும்." என்றான் அதனால் அரச குரு மிகுந்த கோபத்துடன் ,  ° ஆடு மேய்ப்பவனே நான் ஒரு பிரமான குலத்தினை சேர்ந்தவன் அவ்வாறு இருந்தும் இப்போது, நீ உன்னுடைய வரம்பை மீறுகிறாய். ஆடுமேய்ப்பவன் குடித்தது போகு மிகுதி இருக்கும் ஆட்டுப்பாலை ஒரு பிராமணர்  ஏன் குடிக்க வேண்டும்? அவ்வாறெல்லாம் செய்யமுடியாது நான் போகின்றேன்"  என பதிலளித்தார்
ஆடு மேய்ப்பவன் மீண்டும், "சரிஐயா அவ்வாறாயின் நீங்கள் போகலாம் ஐயா நான் அந்த  மந்திரக் கல்லை உங்களுக்கு கொடுக்க மாட்டேன்" என்றான்  . திரும்பவம் அந்த மந்திரக் கல்லைப் பற்றி சிந்தித்த அரச குரு ஆடுமேய்ப்பவன் கூறியவாறு செய்வதையும் ஒப்புக்கொண்டார். இப்போது ஆடு மேய்ப்பவன்  என் வீட்டின் முன் ஒரு இறந்த மனிதனின் மண்டை ஓடு திருவோடு போன்று இருக்கிறது. இப்போது நான் அந்த மண்டையோட்டிலான திருவோட்டில் ஆட்டின் பாலைகரந்து ஊற்றுகிவேன், பிறகு நான் அதை குடித்துவிட்டு, அதன் பிறகு அந்த மண்டை ஓட்டில் நான் குடித்தது போக மிகுதி உள்ள பாலையே நீங்கள் குடிக்க வேண்டும். அப்போதுதான் அந்த மந்திரக் கல்லை நான் உங்களுக்குத் தருவேன், இல்லையெனில் நீங்கள் உங்கள் வழியில் செல்லலாம்." எனமீண்டும் மற்றொரு நிபந்தனைவிதித்தான் .இதைக் கேட்ட அரச குரு நிறைய சிந்தித்து, °நான் ஒரு பிராமணர் அவ்வாறு செய்யக் கூடாதுதான் எனக்கு மிக சங்கடமாக இருக்கின்றது. இருந்தாலும் நான் நீகூறிய அனைத்து நிபந்தனைகளுக்கும் உட்படுகின்றேன் நான் இப்போது நீகூறியவாறு செய்யத்தயாராக இருக்கிறேன்." என்று ஏற்றுக்கொண்டு கூறினார் உடன் ஆடுமேய்ப்பவன் காட்டிற்கு அருகிலுள்ள தன்னுடைய வீட்டிற்கு ஆடுகளை ஓட்டிச்சென்று மண்டையோட்டிலான திருவோட்டில் ஆட்டுப்பாலைகரந்து தன்னுடைய வாய்வைத்து கொஞ்சம் பாலைகுடித்துவிட்டு மிகுதியை அரசகுருவிடம் கொடுத்தான் அரசகுருவும் தான் ஏற்றுக்கொண்ட நிபந்தனையின்படி ஆடுமேய்ப்பவன் வாய்வைத்து குடித்தது போக திருவோட்டில் மிகுதி இருந்த ஆட்டின் பாலை குடித்தார் அதனை தொடர்ந்து  ஆடு மேய்ப்பவன் , " உங்களிடம் பதில் கண்டுபிடித்துகூறுமாறு கோரிய  கேள்விக்கான பதில். பேராசை. ஆகும் அந்த பேராசையில்  ஒரு மனிதன் விழுந்தால், அவன் வெளியே வரவே முடியாது. அவ்வாறே அரசகுருவான நீங்களும் அந்த மந்திரக் கல்லைப் பெறவேண்டும் என்ற பேராசை எனும் கிணற்றில் விழுந்துவிட்டீர்கள் இதிலிருந்து உங்களால் தப்பித்து வெளியேறவே முடியாது."  என நீண்ட விளக்கமளித்தான்.

சனி, 4 நவம்பர், 2023

மகனின் வீட்டுப்பாடத்தை படித்தலால்- தந்தையின் சிந்தனையில் மாற்றம்

 ஒரு மனிதன் வீட்டுச் செலவுகள் அனைத்தையும் அவரே ஏற்க வேண்டியதாலும், முழுக் குடும்பத்தின் பொறுப்பும் தன் மீது இருப்பதாலும், உறவினர்களின் அல்லது நண்பர்களின் வீடுகளுக்கு மிமுக்கிய நிகழ்வுகளுக்குச் சென்று வருவதாலும் எப்போதும் எரிச்சலுடனும் பதட்டத்துடனும் அதிக கவலைப்பட்டுக் கொண்டு மிருப்பார். அதனோடு இவற்றையெல்லாம் நினைத்துக் கொண்டு, அடிக்கடி மனம் வருந்துவதும், தங்களுடைய பிள்ளைகளைக் கடிந்து கொள்வதும், ஏதாவதொரு செயலுத்துக்காக மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்வதும் அவருடைய வழக்கமான செயலாகிவிட்டது. ஒரு நாள் அவர்களுடைய மகன் அவரிடம் வந்து, “அப்பா, தயவு செய்து என் வீட்டுப்பாடம் செய்வதற்கு எனக்குஉதவுங்கள்” என்றான். அதனை  கேட்டவுடன் அதிக  எரிச்சலுடனும் கோபத்துடனும் தங்களுடைய  மகனைத் திட்டி விரட்டினார். ஆனால் சிறிது நேரம்கழித்து  அவரது கோபம் தணிந்தபின்னர் அவர் மகனின் அறைக்குச் சென்று பார்த்தபோது, வீட்டுப்பாடத்தினை  தன்னுடைய கையில் வைத்துகொண்டே  மகன் தூங்கிக் கொண்டிருந்தான். அவர்  மகனின் கைகளில் இருந்து எடுத்துப் பார்த்துவிட்டு, திரும்ப அதைத் திரும்பகீழே வைத்திடும் போது.. மகனுடய வீட்டுப்பாடத்தின் தலைப்பைப் படித்தார். அந்த தலைப்பானது- முதலில் நமக்குப் பிடிக்காத செயல்கள், ஆனால் அவை நல்லவை என்று பின்னர் உணருங்கள் என்றிருந்தது. தங்களுடைய மகன் இவ்வாறான  தலைப்பில் ஒரு பத்தி எழுதி இருப்பதை கண்டு அவர்மிகவும் ஆர்வத்தால்  மகன்  எழுதியதைப் படிக்க ஆரம்பித்தார்: "எனது இறுதித் தேர்வுகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், ஏனெனில் அவை பள்ளிக்கூடம் செல்லத் துவங்கும்போது இல்லை, ஆனால் இந்த தேர்வுகளுக்கு  பிறகு மிக நீண்ட விடுமுறைகள் உள்ளன அதனால் நான் மிகமகிழ்ச்சியடைகின்றேன். அதேபோன்றுமோசமான  மருந்துகளுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், ஏனென்றால் அவை முதலில் கசப்பாக இருந்தாலும் அவை என் நோயைக் குணப்படுத்துகின்றன. மேலும் அதேபோன்று என்னை எரிச்சலூட்டும் ஆனால் தினமும் என்னை  காலையில் எழுப்பி நான் தினமும் அன்றன்றையை வீட்டுப்பாடங்களை எழுதவும் படிக்கவும் உதவுகின்ற கடிகாரத்தின்அலாரத்திற்கு நான்  கூறுகிறேன். அவ்வாறே அத்தகைய நல்ல தந்தையை எனக்கு வழங்கியமைக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், ஏனென்றால் அவர் திட்டுவது முதலில் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கின்றது, ஆனால் அவர் எனக்கு பொம்மைகளைவாங்கி  கொண்டு வருகிறார், எனக்கு இனிப்புகளையும் தின்பண்டங்களையும்வாங்கி  கொண்டு வருகிறார், தினமும் என்னை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்கிறார்." என்றவாறு இருந்த மகனின் வீட்டுப் பாடத்தைப் படித்துவிட்டு, மகன் எழுதிய சொற்கள் அவர் மனதில் மீண்டும் மீண்டும் சுழன்று கொண்டிருந்தன. அதன்முடிவில் அம்மனிதன் ஒரு சிறந்த கருத்தினை உணர்ந்துகொண்டார். சிறிது நேரம் அமர்ந்து தன்னுடைய மனவருத்தத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தார். வீட்டின் அனைத்து செலவுகளையும் நான் ஏற்க வேண்டும், அதாவது எனக்கு ஒரு வீடு இருக்கிறது,  வீடு கூட இல்லாதவர்களை விட நான் சிறந்த நிலையில் இருக்கிறேன். முழு குடும்பத்தின் பொறுப்பையும் நான் ஏற்க வேண்டும் என்றால் எனக்கு ஒரு குடும்பம், மனைவி, குழந்தைகள் உள்ளனர் , குடும்பம் இல்லாமல் இந்த உலகில் தனியாக இருப்பவர்களை விட நான் மிகவும் நற்பேறு அடைந்தவன்..
என் நண்பர்களும் உறவினர்களும் தொடர்ந்து என்னுடைய வீட்டிற்கு வருகிறார்கள் நானும் அவ்வாறேஅவர்களுடைய வீட்டிற்கு சென்று வருகின்றேன், அதாவது எனக்கு ஒரு சிறந்த சமூக நிலைஉள்ளது, அதனால் என் மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் எனக்கு ஆதரவாக நண்பர்களும் உறவினர்களும்இருக்கிறார்கள். . இதனைஎண்ணி நான் மிகவும் வருந்துவது தவறு,  என இதையெல்லாம் நினைத்துப் பார்க்கையில், அவருடைய துன்பங்கள், கவலைகள் எல்லாம் மறைந்தோடிச்சென்றன. அவரது சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டது. மகனின் நெற்றியில் முத்தமிட்டு மகனுக்கு நன்றி சொல்ல ஆரம்பித்தார்
கற்றல்: நமக்கு முன்னால் எந்த பிரச்சனைகள் இருந்தாலும், எதிர்மறையான கண்ணோட்டத்தில் அவற்றைப் பார்க்கும் வரை, நாம் கவலையுடனும் எரிச்சலுடனும் இருப்போம். ஆனால் அதே சூழ்நிலையை ஒரு நேர்மறையான கண்ணோட்டத்தில் பார்த்தவுடன், நமது கண்ணோட்டம், நமது சிந்தனை நம் வாழ்க்கையை முழுமையாக மாற்றிவிடும்.



ஞாயிறு, 29 அக்டோபர், 2023

கடல் போன்று பரந்தமனப்பாண்மையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்திடுக

 
 கடற்கரையில் ஒரு வலுவான அலை வந்து அங்கு விளையாடிக்கொண்டிருந்த ஒரு குழந்தையின் காலில்அணியும் செருப்பை அடித்து சென்றது இதைகண்டஅந்த குழந்தை, அந்த கடற்கரையின் மணல் மீது விரலால்  - கடல் ஒரு திருடன் என எழுதியது. அதேகடற்கரையின் சிறிதுதூரத்தில்  வாழும்  மீனவர் ஒருவருக்கு அன்று கடலுக்குள் மீன்பிடிக்க சென்றபோது ஏராளமான மீன்கள் கிடைத்தது. அம்மீனவர் அதே கடற்கரையின் மணலில்  - கடல் என்னை சீராட்டி வளர்க்கின்றது என எழுதினார். சிறிது நேரத்தில்அருகிலுள்ள ஊரில் வாழ்ந்துவந்த , ஒரு வாலிபர் அந்த கடலில் மூழ்கி இறந்தார். மகனின் இழப்பால் வருந்திய அவ்வாலிபனின் தாய் கடற்கரையின் மணலில் - கடல் ஒரு கொலையாளி என எழுதினார் . அதே கடற்கரையின் வேறொரு பகுதியில், ஏழ்மைநிலையிலுள்ள முதியவர் ஒருவர் அந்த கடற்கரையின் மணலில் ணன ஆறுதலுக்காக நடந்து கொண்டிருந்தபோது, ஒரு பெரிய சிப்பியில் விலைமதிப்பற்ற முத்து ஒன்றைக் கண்டெடுத்தார். அவர் அதே கடற்கரையின் மணலில் - கடல் மிகவும் தாராளமான கொடையாளிஎன எழுதினார் .
அப்போது திடீரென ஒரு பெரிய அலை வந்து அந்த கடற்கரையின் மனதில் அவ்வாறு எழுதிய எழுத்தையெல்லாம் அழித்து விட்டுச் சென்றது.
 இதன் பொருள் என்ன?
 அதாவது கடலானது பொதுமக்களின் கருத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை, எப்போதும் அதன் அலைகளால் அவற்றைஅழித்து விட்டு மகிழ்ச்சியாக  இருக்கின்றது. நாமும் அவ்வாறு ஒரு கடல் போன்ற பரந்தமனப்பாண்மைக்கு மாற விரும்பினால், பயனற்ற பேச்சுகளுக்கு ஒருபோதும் கவனம் செலுத்த வேண்டாம். நம்முடைய வாழ்க்கையின் ஏற்படும் அனைத்து செயல்களுக்கும் அமைதியாக  தைரியமாக  உற்சாகமாக அவைகளை ஏற்று சொந்த வாழ்க்கைக்கு ஏற்ப அதற்கேற்ப பொருத்தமான   முடிவு செய்திடுக. உன்னைபற்றி மற்றவர்கள் என்ன எண்ணுகின்றார்கள் என கவலைப்படவேண்டாம் ஏனெனில், அவ்வப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களின் கருத்துகளும் மாறிக்கொண்டே இருக்கிறது.  அருந்த விழையும் ஒரு கோப்பை தேநீரில் ஒரு ஈ விழுந்திருந்தால், அந்த ஒரு கோப்பை தேநீரை ஈயுடன் கீழே கொட்டிவிடப்படும், ஆனால் அதுவே சுத்தமான நெய்யில்  ஈ விழுந்திருந்தால், ஈயைமட்டும் தூக்கி எறியப்படும். என்பதை மனதில் கொண்டு, எப்போதும் ஆரோக்கியமாகவும், மகிழ்சியாகவும், வாழ கற்றுகொள்க

ஞாயிறு, 22 அக்டோபர், 2023

முயலும் அதன் நண்பர்களும்!

  ஒரு வேளான் பண்ணைக்கு அருகிலிருந்த ஒரு காட்டில் முயல்ஒன்று வசித்து வந்தது அது தன்னுடைய இனமல்லாத மற்றபல்வேறு இன விலங்குளை நண்பர்கள்ஆக  கொண்டிருந்தது, அதனால் அது எப்போதும் தனது நண்பர்களுடன் வேடிக்கையாக  பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் ,  இருந்துவந்தது, அவ்வாறாக அந்த முயலின் வாழ் நாட்கள் மகிழ்ச்சியாகக் கழிந்து கொண்டிருந்தன, அதனால்  பல்வேறு நண்பர்களைநாம் பெற்றிருப்பது எவ்வளவு அதிர்ஷ்டசாலி என எப்போதும் நினைத்து மகிழ்ச்சியுடன் இருந்துவந்தது. ஒரு நாள், அதுவாழும் வேளான் பண்ணைக்கு அருகிலிருந்த ஆற்றங்கரையில் நண்பர்களுடன் விளையாடியபின் தன்னுடைய உணவிற்காக சிறிது தூரம் சென்று கொண்டிருந்தபோது, சிறிது நேரத்தில், ஒரு சிங்கம் தன்னை நோக்கி மெதுவாக தன்னை பிடித்து உண்ணவருவதைக் கண்டு பயந்துவிட்டது, அதனால் நமக்குதான் ஏராளமான நண்பர்கள் இருக்கின்றனரே  இவ்வாறான இக்கட்டான நேரத்தில் அவர்களிடம் நம்மை காப்பாற்றுமாறு உதவிகேட்போம்   அவர்கள் கண்டிப்பாக நமக்கு உதவுவார்கள்என நினைத்து அருகில் மேய்ந்து கொண்டிருந்த தன் நண்பன் குதிரையை நோக்கி ஓடி வந்து அதனிடம் தன்னுடைய உயிரை காப்பதற்காக உதவி கேட்டு அழுதது உடன் குதிரையான, "நண்பரே, நான் உங்களுக்கு உதவி செய்வதற்காகத்தான் விரும்புகிறேன், ஆனால் நான் இப்போது ஒருமுக்கியமான  வேலைக்கு செல்லவேண்டியுள்ளது " எனக்கூறியவாறு  குதிரை ஓடிவிட்டது. அப்போது முயல் மரத்தடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தன் நண்பன் காளையைப் பார்த்து, “நண்பா, என்னை கொள்ள ஒரு சிங்கம் வருகிறது. தயவு செய்து உனது கூர்மையான கொம்புகளால் அந்த சிங்க்ததினைப் பயமுறுத்தி துரத்தி என்உயிரை காப்பாற்று." எனகோரியது .உடன் அதனுடைய மற்றொரு நண்பனான படுத்துகொண்டிருந்த காளையான எழுந்து நின்று, "நண்பா, நான் என்கூரியகொம்பால்குத்தி அந்த சிக்கத்தை ஓட வைக்க முடியும், ஆனால் இந்த வேளாளர்  தன்னுடைய  வயலில் உழுவுபணி செய்திட என்னை அழைத்துள்ளார்." எனக்கூறிவிட்டு காளை நழுவியது. இப்போது, முயல் மற்றுமொரு நண்பனான ஆட்டைப் பார்த்து, அதனிடம் சிங்கம் ஒன்று தன்னை கொல்லவருவதாகவும், தயவு செய்து. தன்னை அதன் முதுகில் ஏற்றிகொண்டு  இங்கிருந்து வெகுதூரத்திற்கு ஓடி   காப்பாற்றிடமாறு கோரியது. என்னுடைய உயிரைக் காப்பாற்றவே நான் சிரமபட்டு தனியாக ஓட வேண்டும். அவ்வாறான நிலையில் நாம் நம்முடைய முதுகில் முயலை கூடுதலாக சுமந்து கொண்டு  பாரத்தை அதிகரிக்க வேண்டும் என்று ஆடு நினைத்தது. உடன் அந்த  ஆடு மட்டும் அங்கிருந்து ஓடியது. சிங்கம் தன்னை நெருங்குவதை முயல் பார்த்தது. வேறு வழியின்றி அது முடிந்தவரை வேகமாக ஓடி வெகுதூரம் சென்று தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அங்கு நிலத்தில் இருந்த ஒரு குழிக்குள் ஒளிந்து கொண்டது. அன்றைக்குதான்  முயல் தனக்கு ஏராளமான அளவில் பலவேறு நண்பர்கள் உள்ளனர்  ஆனால் இவ்வாறான ஆபத்தான நிலையில் உதவக்கூடிய உண்மையான நண்பர்களாக அவர்கள் இல்லை, அவர்கள் அனைவரும் சுயநலவாதிகளாக இருப்பதைப் புரிந்துகொண்டது,
 தன்னை காத்திட தான் நம்பக்கூடிய ஒருவன் தான் மட்டுமே என்று புரிந்துகொண்டது. கற்றல்: மற்றவர்களை நம்புவதற்கு பதிலாக உங்களைமட்டுமே நம்புங்கள்

ஞாயிறு, 15 அக்டோபர், 2023

ஏழை மனிதனின் இழப்பும் அவனது நேர்மறையான அணுகுமுறையும்!

  ஒரு ஏழை கடந்த இருபது வருடங்களாக மிகசிக்கனமாக செலவுசெய்தபின் மிகுதி செலவிடப்படாமல் உள்ள தொகையை ஒவ்வொரு பைசாவாக சேமித்து கொண்டுவந்து கனிசமான தொகைசேர்ந்ததும்  அந்த பணத்தை தனது குடும்பத்துடன் சேர்ந்து சொந்த வீட்டில் வாழ்வதற்காக தன்னுடைய குடும்பத்திற்காகவென தனியாக ஒரு வீடு கட்ட பயன்படுத்தினார். இறுதியாக, அவரது வீடு கட்டி முடிக்கப்பட்டது. அதன் பிறகு,  அவரது குடும்பத்துடன் புதுவீட்டில் குடிபுகுவதற்காக ஒரு நல்ல நாளும் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் அந்த புதுவீட்டில் குடிபுகுவதற்காக  தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல நாளிற்கு  இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது அதனால் அவரது வீடு முற்றிலும் அழிக்கப்பட்டது. ஏழைக்கு அந்த செய்தி கிடைத்ததும், நிலநடுக்கத்தால் இடிந்த போன தன்னுடைய புதிய வீடு இருக்கும் இடத்திற்குச் செல்வதற்கு முன் கடைத்தெருவிற்குச் சென்று  இனிப்பு வாங்கிகொண்டுவந்தார்  இடிந்துபோன  புதியதாக  கட்டப்பட்டிருந்த அவரதுவீ்ட்டிற்கு முன்பாக வேடிக்கை பார்ப்பதற்காக. பலர் கூடியிருந்த இடத்தை அவர் அடைந்தபோது, பலரும்  அந்த புதுவீட்டில் அவரது குடும்பம் குடிபுகும் முன்பே தனது வீட்டை இழந்ததால், அவரிடம் வருத்தம் தெரிவித்தனர். சிலர் அவருக்கு ஆறுதல் கூற முயன்றனர். ஆனால் அந்த ஏழை வேடிக்கை பார்ப்பதற்காக கூடியிருந்த அவர்கள் அனைவருக்கும்  இனிப்புகளை எடுத்து  விநியோகிக்க ஆரம்பித்தார். இதைகண்டு அங்கிருந்த அனைவரும்  அதிர்ச்சி அடைந்தனர். அவர்களுள் அந்த ஏழையை நன்கு அறிந்த  அவனது நண்பன் ஒருவன்  "நண்பரே நீங்கள் வாழ்நாளெல்லாம் மிகவும் அதிக சிக்கனத்துடன் வாழ்ந்து சேமித்த பணத்தை கொண்டு புதிதாகக் கட்டிய வீடு இடிந்து விழுந்து விட்டது, நீங்கள் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்ததை இந்த நிலநடுக்கம் வீணடித்து விட்டது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் இனிப்புகளை வழங்குகிறீர்கள்!!" என கேட்டார். உடன் ஏழை சிரித்துக்கொண்டே," நண்பரே இந்த செயலின் எதிர்மறையான பக்கத்தை மட்டுமே நீங்கள் பார்க்கிறீர்கள், எனவே, உங்களால் நேர்மறையான பக்கத்தைப் காண முடியாது. இன்று நிலநடுக்கத்தால்  வீடு இடிந்து விழுந்தது நல்லது. ஒருவேளை  இரண்டு நாட்களுக்குப் பிறகு நான் இந்த புது வீட்டிற்கு குடிபுகுந்து இதில் என் குடும்பத்துடன் வசிக்கத் தொடங்கியபின்னர் இடிந்து விழுந்திருந்தால் என்ன செய்வது. அப்போது இடிந்து விழுந்திருந்தால், நான், என் மனைவி, குழந்தைகள் அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லவா! அப்போது எவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கும்? எனவே எது நடந்தாலும் அது நன்மைக்காக மட்டுமே நடந்தது. எனக்கொள்க அதனால்தான் நான் அனைவருக்கும் இனிப்பு வழங்குகின்றேன்

ஞாயிறு, 8 அக்டோபர், 2023

இரண்டு பயணிகளின் உரையாடலிலுள்ள- ஆழ்ந்த பொருள்

 தற்போதை.ய போக்குவரத்து வசதி வாய்ப்புகள் போன்றில்லாத முற்காலத்தில் ஒருமுறை, இரண்டு வெவ்வேறு மனிதர்கள் தத்தம் கால்களால் நடந்தே செல்கின்றவாறான ஒரு மிகநீண்டதூர பயணம் செய்வதற்காக  புறப்பட்டனர். இருவரும் ஒரே பாதையில் செல்லவேண்டியிருந்தது, எனவே இருவரும் அந்த பயணத்தில் ஒன்றாக சேர்ந்தே பயனம்செய்ய முடிவு செய்து அவ்வாறே பயனித்தனர். ஏழு நாட்களுக்குப் பிறகு, அவர்கள் இருவரும்பிரிந்து தனித்தனியாக செல்ல வேண்டிய நேரம் வந்தது. முதல் பயணி , “அண்ணே, நாம் இருவருவரும் கடந்த  வாரம் முழுவதும் ஒன்றாக பயனித்தோம். நாம் இவ்வாறு நம்முடைய பயனத்தை துவங்குவதற்குமுன் நான் ஒரு பிரபலமான பணக்காரன் என்று உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன், ஆனால் நீங்கள் என்னை விட பெரிய பணக்காரர் என்று தெரியவருகிறது.” எனக்கூறினார் .உடன் இரண்டாவது பயணி , "எப்படி" எனக்கேட்டார் முதல்பயனி, "கடந்த ஏழு நாட்களாக, நீங்கள் ஏதேனும் உங்களடைய சொந்த பணியை செய்வதற்காக என்னைத் தனியாக விட்டுவிட்டு செல்லும்போது, உங்களுடைய பையிலிருந்து ஏதாவவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நான் தொடர்ந்து தேடினேன், ஆனால் என்னால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வளவு நாள் நாமிருவரும் சேர்ந்து மிக, நீண்டதூரம் பயனம் செய்து கொண்டு இருக்கின்றோம். அவ்வாறான நீண்டதூரபயனத்திற்கு மிக அதிக செலவாகும் அல்லவா அதற்காக நீங்கள் அதிக பணம் எடுத்து கொண்டு வந்திருப்பீர்கள் அல்லவா .ஆனால் உங்களிடம் எதுவும் இல்லையே இது எப்படி சாத்தியம்? நீங்கள் பணம் எதுவும் கொண்டு வரவில்லையா?" என சந்தேக கேள்வி எழுப்பினார் .அதனை தொடர்ந்து இரண்டாமவர் , “நிச்சயமாக நான்நீண்டதூர பயனத்திற்கு தேவைான பணம் கொண்டுவந்தேன். அதனுடன் என்னிடம் விலையுயர்ந்த வைரமும் சில வெள்ளி நாணயங்களும் உள்ளன." என பதிலளித்தா.ர் அந்த பதிலை கேட்டு முதல் பயனி மிகவும் ஆச்சரியப்பட்டு, "உங்களுடைய பையில் அதுபோன்ற பொருட்கள் இருந்தால்,நான்  எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால்  எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லையே ஏன்?" என்று கேட்டார். அதற்கு இரண்டாவது பயனி , "ஏனென்றால் நான் உங்களை தனியாக விட்டிட்டு வெளியே ஏதேனும் என்னுடைய சொந்த பணியை செய்வதற்காக  செல்லும்போதெல்லாம் வைரங்களையும், வெள்ளி நாணயங்களையும் பணத்தையும் உங்கள் பையில் வைத்து செல்வேன், நீங்கள் கடந்த ஏழு நாட்களாக  ஏதாவது கிடைக்குமா வென என்னுடைய பையை மட்டுமே அலசிக்கொண்டே ஆராய்ந்து இருந்தீர்களே தவிர. உங்களுடைய சொந்த பையில் ஏதேனும் உள்ளதாவென நீங்கள் நினைக்கவில்லை, பிறகு நீங்கள் எப்படி எதையும் என்னுடைய பையில் கண்டுபிடிப்பீர்கள்?"என பதிலளித்தார் .
ஆம் நாம் வாழ்கின்ற நம்முடைய வாழ்க்கையும் அவ்வாறுதான். இயற்கையானது நம்முடைய மகிழ்ச்சியை நமக்குள் வைத்திருக்கின்றது, ஆனால் இன்னும் நாம் மற்றவர்களிடம் இருப்பதை கண்டு பொறாமை பட்டுக்கொண்டே இருக்கிறோம், அவர்களிடம் இருப்பதைப் பெற விரும்புகிறோம். ஒருவர் பிறர் மகிழ்ச்சியாக வாழ்கின்றாற் எனக் காண்பதை நிறுத்திவிட்டு, நம்மிடம் உள்ள மகிழ்ச்சியைக் காண முயன்றால், அந்த நிமிடத்திலிருந்து ஒருவர் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம்.

சனி, 30 செப்டம்பர், 2023

வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி பெறுவது ?தாத்தா பேரனுக்கு அறிவுரை

 ஒருமுறை ஒரு சிறுவன் கோடை விடுமுறையில் தன்னுடைய தாத்தாவைப் பார்க்க கிராமத்திற்கு வந்தான். அவன் எப்பொழுதும் தன்னுடைய தாத்தாவோடு விளையாடுவது வழக்கமாகும். ஒரு நாள் அவன் தன்னுடைய தாத்தாவிடம், "தாத்தா நான் வளர்ந்தவுடன், நான் வெற்றிகரமான மனிதனாக மாற விரும்புகிறேன், அவ்வாறு வெற்றிகரமான மனிதனாக மாறுவதற்கான  வழிமுறைகளை கூற முடியுமா?" எனக்கோரினான். 

உடன் அவனுடைய தாத்தா சரி அதற்கான வழிமுறைகளை கூறுகின்றேன் வா ஆம் என க்கூறி,அந்த சிறுவனை தன்னுடன் அருகில் உள்ள தோட்டங்களுக்கான நாற்றங்காளிற்கு  அழைத்துச் சென்றார்.அந்நாற்றங்காலில் இருந்து இரண்டு சிறிய செடிகளை வாங்கிக்கொண்டு தாத்தா தன்னுடைய பேரனுடன் வீட்டிற்கு திரும்பிவந்தார். வீட்டிற்கு வந்தபின்னர் ஒரு தொட்டியில் ஒரு செடியை நட்டு வீட்டிற்குள் வைத்தார் மற்றொன்றை வீட்டிற்கு வெளியே நட்டார்.தொடர்ந்து " இந்த இரண்டு செடிகளில் எது எதிர்காலத்தில் நன்றாக வளரும் " என்று தாத்தா தன்னுடைய பேரனிடம் கேட்டார். சிறுவன் சிறிது நேரம் ஆலோசனைசெய்து, "வீட்டினுள் பாதுகாப்பாக வைத்த செடிதான் நன்றாக வளரும், ஏனென்றால் அது எல்லா ஆபத்துகளிலிருந்தும் பாதுகாப்பாக இருக்கும், அதே நேரத்தில் வெளியில் உள்ள செடி அதிகசூரிய ஒளி, பலமான புயல், விலங்குகள் போன்ற பலவற்றால் தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்தில் உள்ளது." என்றார் .தாத்தா சிரித்துக் கொண்டே, "சரி  என்ன நடக்கும் என காண்போம்.* என்றார் .அதன் பிறகு சிறுவன் தன்னுடைய பெற்றோருடன் நகரத்திற்கு சென்றுவிட்டான். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சிறுவன் மீண்டும் தன் தாத்தாவைகாண கிராமத்திற்கு வந்தான். சிறுவன் தன்னுடைய தாத்தாவைப் பார்த்ததும், "தாத்தா, கடந்த முறை நான் வாழ்க்கையில் வெற்றிபெற சில வழிமுறைகளைக் கேட்டேன், ஆனால் நீங்கள் என்னிடம் எதுவும் கூறவில்லை. அதனால் இந்த முறை நீங்கள் கண்டிப்பாக எனக்கு கூறவேண்டும்." என்றான் .இப்போதும் தாத்தா சிரித்துக் கொண்டே , ‘கண்டிப்பாக ஆனால் முதலில் நாம் சில வருடங்களுக்கு முன்பு நட்டுவைத்த செடிகளை எந்த நிலையில் உள்ளது எனக்காண்போம்". எனக் கூறியவாறு, தாத்தா அந்த சிறுவனை வீட்டிற்குள் செடியை நட்டு வைத்திருந்த  இடத்திற்கு அழைத்துச் சென்றார். அந்த செடி.யானது காற்றில் தள்ளாடும் மெல்லிய மரமாக மாறியதைக் கண்டனர். பின்னர்  வீட்டிற்கு வெளியே நட்டுவைத்திருந்த செடியை காண அந்த சிறுவனை அழைத்துச் சென்றார். அங்கே ஒரு பெரிய மரம் நிற்பதையும் அதன் கிளைகள் வெகுதூரம் பரவி, வழிப்போக்கர்களுக்கு நிழல் தருகின்றவாறு இருப்பதையும் கண்டனர். இப்போது, தாத்தா அந்த சிறுவனைப் பார்த்து, ", எந்தச் செடி நன்றாகவும் வெற்றிகரமாகவும் வளர்துள்ளது?" கேட்டார். அதற்கு அந்த சிறுவன், "நாம் வெளியில் நட்டதுதான். ஆனால் தாத்தா, இது எப்படி சாத்தியம்? அந்த செடி இவ்வளவு பெரியதாக வளர்ந்துள்ளது ஆனால்அது பல ஆபத்துகளைச் சந்தித்திருக்க வேண்டுமே!" என சந்தேகமாக வினவினானஅ .உடன்தாத்தா சிரித்துக்கொண்டே , "ஆம், வெளியில் உள்ள செடி பல ஆபத்துகளைச் சந்திக்க வேண்டியிருந்தது, அதனால் அவ்வாறான பிரச்சனைகளைச் சமாளிப்பதும் அதன் பலனாக. வெளியில் உள்ள செடிக்கு தன் வேரையும் கிளைகளையும எவ்வளவு வேண்டுமானாலும் பரப்பும் சுதந்திரம் இருந்தது. புயல் போன்ற பிரச்சனை, வேர்களை வலுவாக்கியது. இன்று ஒரு சிறிய புயல் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாத அளவுக்கு வலுவாக உள்ளது. , நான் உனக்குச் சொல்லப் போவது, அதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்க, அப்போதுதான் வாழ்க்கையில் நீ எதைச் செய்தாலும் வெற்றி பெறுவாய். நீ எப்போதும் வசதியான தேர்வுகளைச் செய்தால், எல்லா ஆபத்துகளையும் மீறி இந்த உலகத்தில் வெற்றியாளனாக வளரமுடியாது அவ்வாறான ஆபத்துகளை எதிர்கொள்ள நீ தயாராக இருந்தால் அவற்றை சமாளித்து வெற்றியாளனாக உன்னால் வளரமுடியும் .வாழ்க்கையி்ல் ஏற்படும் அவ்வாறான பிரச்சனைகளை தடைகள் என நினைக்காதே அவைகளை வெற்றிக்கான படிகள் என்று எண்ணி செயல்படுக." என நீண்ட விளக்கமளித்தார் சிறுவன் நீண்ட பெருமூச்சு எடுத்து கொண்டு  வெளியில் வளர்ந்திருந்த மரத்தை உற்றுப் பார்த்தான், அவனது தாத்தாவின் சொற்கள் அவனுக்குப் புரிந்தது - வாழ்க்கையில் நாம் எதிர்படும் கருதும் தடைகள் நம்மை தோல்வியுறச்செய்வதாக கருதாமல், அதே தடைகள் நம்மை வலிமையடையச் செய்கின்றன, மேலும் வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றன. என முடிவுசெய்துசெயலபடுக.

சனி, 23 செப்டம்பர், 2023

.துறவிக்கு துனி துவைப்பவரின் அமைதியான பதில் -

 ஒரு சமயம் துறவி ஒருவர் ஆற்றின் கரையில் இருந்த ஒரு பெரிய பாறையில் அமர்ந்து தியானம் செய்யத்துவங்கினார்.அவ்வாற்றின் கரையின் அவ்விடத்தில் ஒரேயொரு  பாறை மட்டுமே  இருந்ததால், தினமும் ஒரு துனிதுவைப்பாவரும் அந்த ஆற்றில் ஓடும் தண்ணீரை பயன்படுத்தி அந்த பாறையில் துணி துவைக்க வருவார் . அவ்வாறே இன்று, துனிதுவைப்பதற்காக அந்த பாறைக்கு வந்த அந்த துனிதுவைப்பவர் அந்த பாறையில் துறவி தியானம் செய்து கொண்டிருப்பதை கண்டார். சிறிது நேரத்தில் துறவி தியானம்முடிந்து எழுந்து சென்றுவிடுவார் நாமும் நம்முடைய பணியை செய்திடலாம் என, அவர் காத்திக்க முடிவு செய்தார், ஆனால் இரண்டு மணி நேரம் கழித்துகூட அந்த துறவி எழுந்து செல்லவில்லை. எனவே, அந்த துணி துவைப்பவர்  கைகளைகூப்பி வணங்கிய வாறு துறவியிடம் பணிவுடன்  - ஐயா எனக்கு துணி துவைக்க இந்த பாறை தேவை, நீங்கள் வேறு எங்காவது சென்று உட்கார்ந்து தியானம் செய்தால், நான் என்னுடையபணியைமுடிக்க முடியும்.  என கேட்டுக் கொண்டார் அந்த துறவி எழுந்திருப்பதாக தெரியவில்லை அதனால், துணிதுவைப்பவர் தான் கொண்டு வந்த துணிகளை அந்த பாறையில்  துவைக்கத் தொடங்கினார், அவ்வாறான அவரின் துணி துவைக்கும் பணியில்  அழுக்கடைந்த நீர்  துறவியின் மீது தெறித்தது. இதனால் துணிதுவைப்பரின் மீது அதிக கோபம் கொண்டு துறவி அவரை மோசமாக திட்டினார். இதைகண்ட அந்த துணிதுவைப்பவர்  - நான் ஏதாவது குற்றம் செய்திருக்க வேண்டும் அதனால்தான் என்னை இவ்வாறு இந்த துறவியானவர் கோபமாக திட்டு கின்றார். என எண்ணினார் எனவே, அவர் தனது கைகளை மடக்கி துறவியிடம் மன்னிப்பு கேட்க ஆரம்பித்தார். துறவி கோபமாக அவரை நோக்கி கத்தினார் - உன்னிடம் எந்த ஒழுங்கும் கட்டுப்பாடும் இல்லை, நீ துணிகளை துவைப்பதால் என் மீது அழுக்குத் தண்ணீர் த்தெறித்துவிழுவதை ப் பார்க்கவில்லையா. , அவ்வாறான அழுக்கு நீர் தெறிப்பதால் இப்போது என் உடைகள் அனைத்தும் அழுக்காகிவிட்டன.என திரும்பவும் கோபமாக திட்டினார் உடன் துணிதுவைப்பவர்  - தயவுசெய்து அமைதியாக இருங்கள், நான் தவறு செய்துவிட்டேன்.  அழுக்குத் துணிகளைத் துவைக்கும்போது அழுக்கு தண்ணீர் உங்களின்மீது தெறித்து விழாமல் இருப்பதற்காக நான் கவனம் செலுத்த வில்லை. தயவு செய்து என்னை மன்னித்திடுங்கள் ஐயா. என்று கூறிவிட்டு,தொடர்ந்து தான்கொண்டுவந்த துணிகளை  துவைத்து எடுத்துக்கொண்டு, மீண்டும் துறவியிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டுச் சென்றார். இப்போது யோசித்துப் பாருங்கள், உண்மையான துறவி யார்? கோபமும் சகிப்புத்தன்மையும் உண்மையான புரிதலின் எதிரிகள்.

சனி, 16 செப்டம்பர், 2023

குயவன் அல்லது நகைக்கடைக்காரன் - யார் பெரிய முட்டாள்

 மண்பானை செய்திடும் ஒரு குயவன் தான் கொண்டுசென்ற பானைகளை யெல்லாம் விற்றுவிட்டு சந்தையிலிருந்து திரும்பிவந்து கொண்டிருக்கும் போது, வழியில் கண்ணாடி போன்று பளபளப்பான கல்ஒன்றினைக் கண்டார்.   தனது குழந்தைகளுக்கு இந்த பளபளப்பான கல்லை  விளையாடி மகிழ்வதற்காக கொடுக்கலாம் என்று நினைத்து அதை தன்னுடைய கையலெடுத்தார். முற்காலத்தில் பொருட்களை அருகிலுள்ள நகரங்களுக்கு கொண்டு செல்வதற்காக கழுதைதான் பயன்பட்டது  இந்த கல்லை எவ்வளவுதூரம் கைகளிலேயே எடுத்துக் கொண்டு வருவது அதற்கு பதிலாக தன்னுடைய கழுதையின் கழுத்தில் கட்டி கொண்டு வருவது நல்லது என்று நினைத்தார். மேலும் அது கழுதைக்கு ஒருஅணிகலண் போன்று  இருக்கும் என எண்ணி அந்த கல்லை தன்னுடைய கழுதையின் கழுத்தில் கட்டிடுவதற்கான ஒரு கயிற்றை தேடி கண்டுபிடித்தார் தொடர்ந்துஅந்த பளபளப்பான கல்லை கழுதையின் கழுத்தில் கட்டியபின் அந்த கழுதையுடன் தன்னுடைய வீட்டிற்கு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார். நகைக்கடைக்காரன் ஒருவன் அதே வழியில் ஒரு குதிரையின்மீது அமர்ந்து பயனம் சென்று கொண்டிருந்தார். அவரது கண்கள் கழுதையின் கழுத்தில் விழுந்தது, கழுதையின் கழுத்தில் இவ்வளவு அழகான வைரம் தொங்கவிடப் பட்டிருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார். அதனால் உடன் அந்த நகைக்கடைக்காரன் தன் குதிரையை நிறுத்தி, "உன் கழுதையின் கழுத்தில் தொங்கும் கல்லின் விலை என்ன?" என்று கேட்டார். குயவன் அதிகநேரம் செலவிட்டு, "எட்டு அணாவுக்கு (பழைய இந்திய நாணயம்) விற்கலாம்" என்று பதிலளித்தார். அதனால் கோடிக்கணக்கான மதிப்புள்ள அந்த வைரக்கல்லை அந்த குயவன் எட்டு அணாவுக்கு விற்கத் தயாராக இருந்ததால்!அந்தக் கல் விலைமதிப்பற்ற வைரம் என்பது குயவனுக்குத் தெரியாது என்பதை நகைக்கடைக்காரன் முழுமையாகப் புரிந்துகொண்டார்.  ஆனால் அந்த நகைக் கடைக்காரன் பேராசை கொண்டார். அதனால்  குயவனிடம், °இது வெறு கல்தான் இந்தக் கல்லை எட்டு அணாவுக்கு விற்பதற்கு வெட்கமாக இல்லையா?  நான்கு அணா மட்டுமே என்னால் கொடுக்க முடியும் இந்த கல்லை எனக்கு தருகின்றாயா?" என வினவினார். நான்கு அணாவுக்கு இந்தக் கல்லை கழுதையின் கழுத்தில் இருந்து யார் அகற்றி கொடுப்பார்கள் என்று நினைத்த குயவன், "அப்படியானால் அந்த கல் கழுதையின கழுத்தில் அப்படியே இருக்கட்டும். நான் அதை விற்க விரும்பவில்லை" என்று பதிலளித்தார். அதனால் நகைக்கடைக்காரன் தன்னுடைய பயனத்தினை தொடர்ந்தார் சிறிது நேரம் கழித்து குயவன் இன்னும் இரண்டு அணா சேர்த ஆறு அணா அல்லது நான்கு அணாவுக்கு கூட விற்றுவிடலாம் என்று முடிவுசெய்து கொண்டிருந்தார் . சிறிது நேரபயனத்திற்கு பின்னர் அந்த நகைக்கடைக்காரன் மீண்டும் திரும்பி வந்து அந்த கல்லினை  குயவன் என்னவிலை சொல்கின்றாரோ அந்த விலைக்கு தான் வாங்கி கொள்வதாகவும் தனக்கு அந்த கல்லை விற்பனைசெய்திடுமாறும் கோரினார். அதற்கு குயவன், "நீங்கள் போன பிறகு இன்னொருவர் வந்து அந்தக் கல்லுக்கு ஒரு ரூபாய் கொடுத்தார். அதனால் அவருக்கு நான் விற்றுவிட்டேன்" என்றார். இதைக் கேட்ட நகைக் கடைக்காரன், "முட்டாளே! பைத்தியக்கார குயவனே! என்ன செய்தாய் தெரியுமா? கோடிக்கணக்கான மதிப்புள்ள வைரத்தை ஒரு ரூபாய்க்கு விற்றுவிட்டாயே" என்று கோபத்துடன் கத்தினார். இதைக் கேட்ட குயவன் சிரிக்க ஆரம்பித்தான். அவர், "நான் ஒரு குயவன். அது கோடிக்கணக்கான மதிப்புள்ள வைரம் என்று எனக்குத் தெரியாது, எனக்கு ஒரு ரூபாய் கிடைத்தது, அதுவே அந்த கல்லுக்கு போதுமானது என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் ஒரு நகைக்கடைக்காரர்,  அதை எட்டு அணாவுக்கு அல்லது ஆறாணவிற்கு கூட  வாங்க தயாராகஇல்லை!அதனால் நீங்கள் கோடிகணக்கான வருமானத்தினை இழந்தீர்கள், நான் அன்று, ஏனென்றால் அது இவ்வளவு மதிப்பு வாய்ந்தது என்று எனக்குத் தெரியாது". எ்ன்றார். குயவன் ஒரு முட்டாள்தான், ஆனால் அது அறியாமையால் ஏற்பட்டது, ஆனால் நகைக்கடைக்காரனும் ஒரு பெரிய முட்டாளாக மாறிவிட்டான், ஆனால் அவனுடைய பேராசையால் வருமானத்தினை இழந்தான்.  என்ன வாசகரே இதில் யார் பெரிய முட்டாள் என்று நீங்களே முடிவுசெய்திடுக

ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

தபால்காரரும்வயதான பெண்மணியும்

 தனது வீட்டின் வெளியே தனியே அமர்ந்திருந்த ஒரு வயதான பெண்மணியிடம் "அம்மா, உங்கள் மகன் பண  அனுப்பியுள்ளார்" என்று ஒரு தபால்காரர் கூறினார்.
தபால்காரரைப் பார்த்ததும் அந்த அம்மாவின் கண்கள் மின்னியது.
அந்த அம்மா “மகனே முதலில் நான் என் மகனிடம் பேசவேண்டும்” என்றாள்.
அந்த அம்மா நம்பிக்கையுடன் தபால்காரரைப் பார்த்துக் கொண்டிருந்தார், ஆனால் தபால்காரர் , "அம்மா எனக்கு அவ்வளவு நேரம் இல்லை, ஒவ்வொரு முறையும் உங்கள் மகனை நான் அழைக்க முடியவில்லை",எனக்கூறி அதைத் தவிர்க்க முயன்று அங்கிருந்து செல்ல விரும்பினார், ஆனால் அந்தஅம்மா , “மகனே! அதற்கு சிறிது காலம் பிடித்தாலும் பரவாயில்லை எனக்காக உதவிசெய்திடு.”
என தபால்காரரை நச்சரிக்க ஆரம்பித்தார். "அம்மா, நீங்கள் ஒவ்வொரு முறையும் உங்கள் மகனுடன் பேசுவதற்காக அழைத்திடுமாறு வலியுறுத்துகின்றீர்கள். ஆனால் என்னுடைய பணிச்சூழல் என்னால் முடியவில்லை "  என தபால்காரர் பதிலளித்தார்.
இவ்வாறு கூறிவிட்டு தபால்காரர் அம்மாவிடம் பணம் கொடுப்பதற்கு முன் கைபேசியில் ஒரு எண்ணை தொடர்புகொள்ளமுயன்றார்.
"இந்தாருங்கள் அம்மா ஆனால் அதிகம் நேரம் பேசாதீர்கள் நான் அடுத்த பணியை தொடரவேண்டும்" என்று தபால்காரரர் தன்னுடைய கைபேசியை அந்த வயதான அம்மாவிடம் கொடுத்தார்.
அந்த வயதான அம்மா தபால்காரரின்  கையிலிருந்து கைபேசியை வாங்கி. ஒரு நிமிடம் தன் மகனுடன்  பேசி மிகவும் மகிழ்ந்தார்  சுருக்கம் நிறைந்த அந்த அம்ம்வின் முகத்தில் புன்னகை பரவியது.
“இந்தாருங்கள் அம்மா ! உங்களுடைய மகன் அனுப்பிய புணம் ஆயிரம் ரூபாய்“ ,எனக்கூறியவாறு, தபால்காரர் பத்து நூறு ரூபாய் தாட்களை அந்த அம்மாவிடம் கொடுத்தார்.
பணத்தை எண்ணி முடித்த பின்அந்த அம்மா ஒருநூறு ரூபாய் தாளை எடுத்து தபால்காரரிடம் கொடுத்து, “மகனே இதனை நீ வைத்துக்கொள்” என்றார்.
உடன் தபால்காரர் "ஏன் அம்மா? உங்களுடைய மகன் அனுப்பிய பணத்தில்நான் நூறுரூபாய் வாங்கி கொள்ளவேண்டும்"  என சந்தேகம் கேட்டார்.
உடன் அந்த வயதானஅம்மா சிரித்துக்கொண்டே, "இந்த பணத்தினை எனக்கு தேடிவந்த  தருவதைத் தவிர, என்னையும் என் மகனிடம் உன்னுடைய கைபேசி வாயிலாக பேச அனுமதிக்கின்றாய் அல்லவா. அதற்குப் பணம் செலவாகும். இல்லையா? அதனால் வைத்துக் கொள்." என பதிலளி்த்தார்
தபால்காரர் மறுத்துக்கொண்டே இருந்தார், ஆனால் அம்மா வலுக்கட்டாயமாக ஒரு நூறு ரூபாய் தாளை அவரிடம் கொடுத்துவிட்டு,நீயும் உன்குடும்பத்தாரும் நன்றாக இருக்கவேண்டும் எனக்கூறியவாறு தன்னுடைய வீட்டிற்குள் சென்றார்.
பின்னர்தபால் காரர் அங்கிருந்து சிறிதுதூரம் நடந்தவுடன், திடீரென்று யாரோ அவருடைய தோளை தொட்டனர்.
தபால்காரர் திரும்பிப் பார்த்தபோது, எதிரே கைபேசி்விற்றிடும் கடை நடத்தி வருபவர் நிற்பதைக் கண்டார்.
"தம்பி, எப்படி இருக்கீங்க?", என்று தபால்காரர் கேட்டார்.
அவர் "நான் இங்கு ஒருவரைச் சந்திக்க வந்தேன், ஆனால் நான் உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும். அண்ணா, நீங்கள் ஏன் ஒவ்வொரு மாதமும் இவ்வாறுச் செய்கிறீர்கள்?" என்றார் தபால்காரரிடம்.
"நான் என்ன செய்தேன்?", பதற்றத்துடன் தபால்காரர் கேட்டார்.
அவர், "மாதாமாதம் அந்த வயதான அம்மாவிற்கு உன்னுடைய பணத்தினை கொடுக்கின்றீர்கள். அதுமட்டுமில்லாம அந்த அம்மாவுடை மகனுடன் கைபேசியில்பேசவும் பணம் தருகின்றீர்கள்!! ஏன்?" என வினவினார்
அவர் அவ்வாறான கேள்வியை ஏழுப்பியதும் தபால்காரர் சற்றுத் தயங்கினார், ஆனால் பிறகு, "நான் அந்தஅம்மாவிற்கு பணம் கொடுக்கவில்லை, அந்த பணத்தை என்னுடைய அம்மாவிடம் தான்கொடுக்கிறேன்."
அதைக் கேட்டு அவருக்கு மிகஆச்சரியமாக இருந்தது.
தபால்காரர் தொடர்ந்தார், "அவரது மகன் பணம் சம்பாதிக்க தொலைதூரத்திற்குச் சென்றார், ஒவ்வொரு மாதமும் தனது தாயாருக்கு ஆயிரம் ரூபாய்  அனுப்புவார், ஆனால் ஒரு நாள், பணத்திற்கு பதிலாக, அவரது மகனின் நண்பரின் கடிதம் அம்மாவின் பெயரில் வந்தது. ." எனக்கூறினாற்
அவர்மிக ஆர்வமாகி, "என்ன கடிதம்? அந்தக் கடிதத்தில் என்ன எழுதியிருந்தது?" என வினவினாபர்
"அவரது மகன் நோய்த்தொற்று காரணமாக உயிர் இழந்தார். தன்னுடைய வாழ்க்கை செலவுக்காக தன்னுடைய மகன் அனுப்புகின்ற பணற்காகக் காத்திருந்த அந்தஅம்மாவிடம் அதைச் சொல்லத் துணியவில்லை, . அதனால், நான் மாதந்தோறும் அந்த அம்மாவிற்கு பணம் வருவதை போன்று கொடுத்துவருகின்றேன்." எனததபால்காரர் கூறினார்
"ஆனால் அவர் உன்னுடைய அம்மா இல்லையே..", என்றார் அவர்.
தபால்காரர், "இதேபோன்று நானும் ஒவ்வொரு மாதமும் என் அம்மாவுக்கு ஆயிரம் ரூபாய் அனுப்புவேன், ஆனால் என்னுடைய அம்மா உயிருடன் இல்லை" என,க்கூறிய தபால்காரரின் கண்களில் கண்ணீர் நிறைந்தது.
மாதந்தோறும் தபால்காரர் ஆயிரம் ரூபாய் தன்னுடைய தாய்க்கு அனுப்புவதை போன்று வழங்குவதையும் அந்த வயதான அம்மா தபால்காரரிடம் பணம் வாங்கிக்கொண்டு தபால் காரரை தன்னுடைய  மகனை போன்று பேசி பழகியதையும் கண்டு அவர் வாயடைத்துப் போனார்.

சனி, 2 செப்டம்பர், 2023

ஒரு கூடையளவு மண்

 தந்திரசாலியான ஒருவன் ஒரு கிராமத்தில் பணஉதவி தேவைப்படுபவர்கள் தன்னிடம் வந்தபோது தந்திரமாக சிறிய தொகையை மட்டும் கடனாக கொடுப்பது அவனது வழக்கமான செயலாகும். அந்த கிராமத்தில் வாழ்ந்தவர்கள் நன்றாகப் படிக்காதவர்கள் விவரம் தெரியாதவர்கள் அதனைப் பயன்படுத்திக் கொண்டு, ஒவ்வொருவரும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கடனை திருப்ப முடியாததால் வட்டியை அசல் தொகையுடன் அந்த வட்டிக்கும் வட்டியாக கூட்டுவட்டி கணக்கிட்டு  சேர்த்துக் கொண்டே இருந்தான். கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான தொகை மிகவும் அதிகமாகி, அந்த கிராமத்தில் வாழும்மக்கள் திருப்பிச் செலுத்த முடியாமல், தங்கள் நிலத்தை தந்திரசாலியிடம் ஒப்படைக்கும் நிலை ஏற்படுமாறு செய்துஅந்த கிராமத்திலுள்ள அனைத்து நிலங்களையும் அபகரித்து கொள்வது வழக்கமான செயலாகும்.
இப்போது  அவனது வீட்டிற்கு அருகில் வாழ்கின்ற ஒரு மூதாட்டிக்கு சொந்தமான நிலத்தில் அவனது பார்வை விழுந்தது அந்த மூதாட்டிக்கு சொந்தமான நிலமும் நமக்கு கிடைத்துவிட்டால் இந்த ஊரிலுள்ள நிலமுழுவதும் நம்ஒருவனுக்கு மட்டுமே யாகி விடுமே என சிந்தித்தான். ஆனால் அம்மூதாட்டிமட்டும், வேறுயாருடனும் சேராமல் தானே பயிர் செய்து தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது வழக்கமாகும்.மேலும் இந்த தந்திரக்காரணிடம் மட்டும் எந்த தேவைக்கும் கடன்வாங்காமல் தனியாக பயிரிட்டு அதில் வருகின்ற வருமானத்தை கொண்டு வாழ்ந்துவந்தார்   அம்மூதாட்டியை எவ்வாறு கவர்ந்து அம்மூதாட்டியின் நிலத்தை அபகரிப்பது என்று எந்தவொரு வழிமுறையும்இந்த தந்திரசாலியால் கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தபோதிலும் பின்னர் கிராமத்தில் உள்ள ஒரு அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்து அந்த அரசு அதிகாரியின் மூலம் போலியான ஆவணங்களை தயாரித்து, அம்மூதாட்டியின் பெயரிலுள்ள நிலத்தினை தனது பெயருக்கு மாற்றிக்கொண்டான் அதனைதொடர்ந்து. அவன்  அரசாங்க அதிகாரியுடன் சேர்ந்து தனக்கு சொந்தமான நிலத்தினை மூதாட்டி அனுபவித்து வருவதாகவும் அது தனக்கு சொந்தமானதால் உடன் அந்த நிலத்தினை தன்னிடம் ஒப்படைக்குமாறு அறிவிப்புக்கடிதம் ஒன்றினை  கொடுத்தான்.
இதையறிந்த மூதாட்டி அதிர்ச்சியடைந்து, தன் வாழ்நாள் முழுவதும் இங்கு தான் வாழ்ந்து வருகிறேன் என்றும், இந்த நிலம் தன் முன்னோர்களுக்கு சொந்தமானது என்றும், தன் அன்புக்குரியமுன்னோர்கள் அனைவரும் இந்த நிலத்தினை ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வாழ்ந்துவந்தவர்கள் என்றும், தனக்கு வாரிசுரிமையின்படி தனக்குதான் சொந்தமானது என்றும், இதை இப்போது  வேறுஒருவரால் எவ்வாறு உரிமை கொண்டாட முடியும்? என அந்த கிராமத்திற்கான நீதிமன்றத்தை அணுகினார், ஆனால் அந்த தந்திரசாலி அனைவருக்கும் லஞ்சம் கொடுத்தான் போலியாக தயார்செய்த உரிமை ஆவணங்களை சமர்ப்பித்தான். இதனால், தந்திரசாலிக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மனச்சோர்வடைந்த மூதாட்டி நிலத்தை காலி செய்யத் தயாரானார், அப்போது அந்த தந்திரசாலியும் அவனது அடியாட்களும் அம்மூதாட்டி காலிசெய்தவுடன் அந்த நிலத்தினை தன்னுடைய உரிமையுள்ள நிலமாக சேர்த்து கொள்வதற்காக தயாராக அங்கே காத்திருந்தனர். அந்த நிலத்தினை விட்டு வெளியேறும் போது, இரண்டு கண்களிலும் கண்ணீர் சிந்திகொண்டு அந்த மூதாட்டி அந்த தந்திரசாலியை அணுகி, "ஐயா, நீங்கள் இன்று என்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டீர்கள், என் முழு வாழ்க்கையும் இங்கே கழிந்தது, ஆனால் இப்போது நான் இந்த நிலத்தினை உங்களிடம் விட்டு செல்கிறேன். இங்கு நான் , குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்து வளர்ந்தவந்த நிலம், இந்த மண் எனக்கு மிகவும் விருப்பமான மண்“. என்றார்.  மேலும் அம்மூதாட்டி, “நாம் அனைவரும் இந்த மண்ணால் ஆனவர்கள், அதனால் நாம் அனைவரும் இந்த மண்ணின்மீது அன்பு வைத்திருப்பது வழக்கமான செயலாகும். அவ்வாறு நான் அன்பு செலுத்தும் இந்த மண்ணை என்னுடன் வைத்திருக்க விரும்புகின்றேன் அதனால்இந்த நிலத்தின்மண்ணில் ஒரு கூடையளவு மட்டும் என்னுடன்  எடுத்துச் செல்ல என்னை அனுமதியுங்கள்,  நான் அமைதியாக இறக்கும் வரை இந்த மண்ணின் மனம் எப்போதும் என்னுடன் இருக்கும்.“ எனக்கோரினார்
அந்த தந்திரசாலிஅந்த மூதாட்டிக்கு சொந்தமான நிலம் முழுவதையும்  பணம் கொடுக்காமல் தனக்கு உரிமையாக்கி விட்டதால், அம்மூதாட்டிக்கு  ஒரு கூடையளவு மண்ணைக் கொடுத்து விடலாம், அதனால் அவள் அமைதியாகப் போய்விடுவார் என்று நினைத்து சிரித்தான். தொடர்ந்து, “நன்று. நீங்கள் உங்கள் கூடையில் மண்ணை  நிரப்பி எடுத்து செல்லாம்." எனக்கூறினான்
மூதாட்டி தான் வைத்திருந்த கூடையில் தன்னுடைய நிலத்தின் மண்ணை நிரப்ப துவங்கினார். அவ்வாறு நிரப்பியதும் அந்த கூடையை தன்னுடைய தலையில் தூக்கி வைத்துக்கொள்ளமுயற்சித்தார் வயதானதால் அம்மூதாட்டியால் தன்னுடைய நிலத்தின் மண்நிரம்பிய அந்த கூடையை தலையில்  தூக்கிவைக்க முடியாமல் தவித்தார். அதனால் அந்ததந்திராலியிடம், “ஐயா, இந்த கூடையை என் தலையில் தூக்கிவைப்பதற்கு கை கொடுப்பீர்களா?” என்றாள். உடன் அந்த தந்திரசாலி அம்மூதாட்டிக்கு உதவ முன் வந்து, “ஓ, பாட்டி, மண்ணால் நிரப்பப்பட்ட இந்தக் கூடையைத் தூக்கிச் செல்ல  சிரமப்படுவோம் என இந்த கூடையை மண்ணால் நிரப்புவதற்கு முன்பு நீங்கள் சிந்திக்கவில்லையா? , பிறகு  எவ்வாறு இந்த கூடைநிறைய மண்ணைஉங்களுடன் தூக்கி எடுத்துச் செல்வீர்கள்?" என்றான்
கண்ணீருடன், அம்மூதாட்டி, "ஐயா, இந்த முழு நிலமும் எனக்குச் சொந்தமானது, என் வாழ்நாள் முழுவதையும் இங்கே கழித்தேன், ஆனால் நான் இன்னும் உயிர்வாழும் வரையிலாவது என்னுடன் இருக்குவேண்டுமென இங்கிருந்து ஒரு கூடை மண்ணை எடுத்துச் செல்ல சிரமப்படுகிறேன். அவ்வாறு மிகஅதிக சிரமத்துடன் எடுத்துசென்றாலும் நான் இறக்கும்போது கூடையில் எடுத்து செல்லும் என்னுடைய நிலத்தின் மண்ணை என்னுடன் கொண்டுச் செல்ல முடியாது. அவ்வாறான நிலையில் ஐயா,இந்த ஊரில் மற்றவர்களை ஏமாற்றி அபகரித்து உங்கள் பெயரில் சேர்த்து கொண்டு மற்றவர்களின் நிலம் மிகவும் அதிகம். அதையெல்லாம்   நீங்கள் மட்டும் எவ்வாறு உங்களுடன் எடுத்துச் செல்வீர்கள்?" எனக்கூறினார்.
மூதாட்டி இவ்வாறு கூறியதைக் கேட்ட அந்த தந்திரசாலி திகைத்து நின்றார். தன் தவறை உணர்ந்து அந்த மூதாட்டியிடம் மன்னிப்பு கேட்டான். மேலும் அம்மூதாட்டி இறக்கும் வரை இந்த நிலத்துடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று கேட்டு, அம்மூதாட்டியிடமே அந்த நிலத்தைத் திருப்பிக் கொடுத்தான்.
    மற்றவர்களை ஏமாற்றாதீர்கள், பேராசை கொள்ளாதீர்கள். தேவைக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களிடம் உள்ளதைக் கொண்டு திருப்தியாக இருங்கள்,  அதுவே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு போதுமானது.


சனி, 26 ஆகஸ்ட், 2023

நாய்க்கு பூனை சலுகை - சார்புநிலை பற்றிய கதை

ஒரு நாள், ஒரு பூனை இரையை தேடி சென்று கொண்டிருந்தது, திடீரென்று  அதன்  எதிரில் பெரிய , பயங்கரமான நாய் ஒன்று வந்தது. உடன் பூனை ஆனது நாயைப் பார்த்து பயந்து அதனால் வரவிருக்கின்ற ஆபத்தை உணர்ந்து விரைவாக ஓட ஆரம்பித்தது ஆனால் பூனை நாயை விட விரைவாக ஓடமுடியவில்லை அதனால் சிறிது நேரத்தில் நாய்ஆனது பூனையை  பிடித்து விட்டது தொடர்ந்து பூனையை கொல்வதற்குதயாரானது  . மரணம் பூனையின் முன்னால் இருந்தது. வேறு வழியில்லாமல் நாயிடம் தன்னை கொல்லாமல் விட்டு விடும்படி கெஞ்சதுவங்கியது. ஆனால் பூனையின் கெஞ்சல்களுக்கும் அனைத்து வேண்டுகோள்களும் நாய் செவிசாய்க்காமல் தன்னுடைய அடுத்த செயலிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தது.
இந்நிலையில்  தன்னுடைய உயிரை காத்துக்கொள்வதற்கான கருத்து ஒன்று பூனையின் மனதில் தோன்றியது அதனை செயல்படுத்திடுவதற்காக பூனையானது நாயிடம், “நீ என்னை கொல்லாமல் விட்டிட்டால், நாளையிலிருந்து நீ உணவைத் தேடி எங்கும் செல்ல வேண்டியதில்லை, அந்த பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன், நானே தினமும் உனக்கான உணவினை தேடி கொண்டுவருவேன் அதனை நீ உண்ணலாம் அதன் பிறகு ஏதாவது மிச்சமிருந்தால்,  , எனக்கு கொடு. அதைக் கொண்டு என்னுடைய வயிற்றை நிரப்புவேன்” எனும் செயல்திட்டத்தை கூறியது.
உணவிற்காக எங்கும் தேடி அலையாமலும் கடினமாக உழைக்காமலும் நமக்கு தினமும் தேவையான உணவினை இந்த பூனையானது தேடிக்கொண்டுவருவேன் என்பது சரியான செயல்திட்டமாக நாய் உணர்ந்தது  அதைமகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டது  அந்த செயல்திட்டத்தின் படி நாயானது பூனையைக் கொல்வதை நிறுத்தியது  .ஆனால் அதே நேரத்தில் ஏதாவது ஒருநாள் அவ்வாறு தனக்கான உணவினை பூனையானது தேடிக்கொண்டுவரவில்லையெனில் அன்று பூனையை கொன்று தன்னுடைய உணவாக ஆக்கி கொள்வேன் என பூனையை எச்சரித்தது.
என்ன விலை கொடுத்தாலும் தன் வாக்குறுதியைக் காப்பாற்றுவேன் என்று பூனை சபதம் செய்தது.
அந்த நாளிலிருந்து நாய்க்கு நம்பிக்கை வந்தது, நாயானது பூனை தினமும் தேடிக்கொண்டு வந்துகொடுக்கின்ற உணவை சாப்பிட்டு வாழ ஆரம்பித்தது. உணவு தேடி எங்கும் செல்ல வேண்டிய அவசியம் அந்த நாய்க்கு இல்லை.  நாள் முழுவதும் தனது இடத்தில் படுத்துக் கொண்டு பூனைக்காகக் காத்திருப்பது மட்டுமே நாயின்அன்றாட பணியாக இருந்தது.
பூனையும் அந்த நாய்க்கு தான்ஏற்றுக்கொண்டவாறு தினமும் சரியான நேரத்தில் உணவைதேடிக் கொண்டுவந்து கொடுத்துந்ததது. இப்படியே பலநாட்கள் கழிந்தன. கடந்த பலநாட்களாகஅந்த நாயானது வேறு எங்கும் சென்று வராமல்  ஒரே இடத்தில் படுத்துக்  கிடப்பதால் அதிக கொழுப்பு உடலில் சேர்ந்து நாயானது மிகவும் பருமனாக ஆகிவிட்டது அதனால் எழுந்து நடக்கக்கூட முடியாத நிலையாகிவிட்டது.
  ஒரு நாள், நாய்க்குமிகவும் பசியாக இருந்தது, தினமும் தன்னுடைய உணவினை கொண்டுவருகின்ற பூனைக்காக காத்திருந்தது. நீண்ட நேரம் காத்திருந்தும் பூனை வராததால் பொறுமை இழந்த நாய் பூனையை கண்டுபிடிக்க வெளியே தன்னுடைய பருத்தஉடலின் விரைவாகஓடமுடியாததால் மிகமெதுவாக நடந்து சென்றது.
நாயின் கண்களால்  பூனையினை காண்கின்ற தூரத்தில் பூனையானது ஒரு எலியை கொன்று சாப்பிட்டுக் கொண்டிருந்தது, இதைப் பார்த்து நாய் கோபமடைந்து பூனையிடம் , "பூனையாரே, நீங்கள் உங்கள் வாக்குறுதியை மீறிவிட்டீர்கள். ஒப்பந்ததில் கூறியவாறு இப்போது நான் உன்னைக் கொன்று சாப்பிடபோகின்றேன்” என கோபமாக கூறியது
மேலும் இதைச் சொல்லிவாறு பூனையை நோக்கி விரைந்து செல்ல துவங்கியது ஆனால் பூனை ஏற்கனவே விழிப்புடன் இருந்தது. உடனே அது தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து விரைவாக ஓடியது.
நாயும் அதன் பின்னால் ஓடமுடியாமல் மெதுவாக நடந்தது. ஆனால் இந்த முறை பூனை நாயை விட விரைவாக ஓடியது. நாய் மிகவும்அதிக கொழுப்பு சேர்ந்து உடல்பருமனாக இருந்ததால் பூனையை நீண்ட நேரம் துரத்த முடியாமல் சோர்வாகி உட்கார்ர்ந்துவிட்டது. விரைவாக ஓடிய பூனை காணாமல் போய்விட்டது. தொடர்ந்து நாயானது தனக்கான உணவினை வேட்டையாடி உண்ணமுடியாமல் பட்டியாக இறந்துவிட்டது
  மற்றவர்களைச் சார்ந்திருப்பது நீண்ட காலம் நீடிக்காது. அது நம்மை சோம்பேறியாகவும் பலவீனமாகவும் ஆக்குகிறது. வாழ்க்கையில் வெற்றிபெற விரும்பினால்,நமக்குத்தேவையான நம்மால் செய்யக்கூடிய அனைத்து பணிகளையும் நாமேசெய்துகொள்வோம் என உறுதி கொள்க

சனி, 19 ஆகஸ்ட், 2023

இரண்டு கைதிகளை , பாம்பு கடிக்க செய்வதன்மூலம் தூக்குதுதண்டனை நிறைவேற்றுதலை ஆய்வு செய்தல்

 .சில அறிவியல் ஆய்வாளர்கள்  தங்களுடையை  ஒரு பரிசோதனைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு கைதிகளை தேர்ந்தெடுத்தனர், அவர்களுக்கு .
மரணதண்டனைவழங்குவதற்குத் தயாராக இருந்தபோது, அவர்களிடம்  நீங்கள் தூக்கிலிடப்பட மாட்டீர்கள், அதற்கு பதிலாக  விஷப்பாம்பு கடிக்கச்செய்து கொல்லப்படுவீர்கள் என கூறப்பட்டது.
அதன் பிறகு, முதல் கைதியை மரணதண்டனை நிறைவேற்றுவதற்காக ஒரு அறைக்குள் கொண்டு செல்லப்பட்டார், பின்னர் அவர் கண்களை எதை.யும் காணமுடியாதவாறு கருப்புத்துனியாமல் இருகக்கட்டப்பட்டு ஒரு நாற்காலியில் உட்காரவைத்து கைகளையோகால்களையோ அசைக்க முடியாதவாறு கட்டப் பட்டார், பின்னர் அவ்வறையில் விஷப்பாம்பு ஒன்று விடுவிக்கப்பட்டது. சிறிது நேரத்தில், அந்த விஷப்பாம்பு அந்த கைதியை கடித்து, அதன்மூலம் அந்த முதல் கைதி இறந்தார்.
இந்த நிகழ்வினை இரண்டாவது கைதி காணும் படி செய்யப்பட்டது அவ்வரண்டாவது கைதி தனக்கு முன்னால் இதையெல்லாம் பார்த்து மிகவும் பயத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, இரண்டாவது கைதியை அதேஅறையில் அடைத்து நாற்காலியில் உட்காரவைத்து கைகளை.யோ கால்களையோ அசைக்க முடியாதவாறு முதல் கைதியை செய்ததை போன்றே கட்டப்பட்டார் , பின்னர் அந்த கைதியின் கண்களை எதையும் பார்க்கமுடியாதவாறு கருப்புத்துனியால் இருகக்கட்டினர். இந்த முறை, அந்த அறைக்குள் விஷப்பாம்பு விடப்படவில்லை, அதற்கு பதிலாக ஒரு கூர்மையான  ஊசியால் இரண்டுமுறை அந்த கைதியின் கால்களில் குத்தப்பட்டது.
இந்த முறையும் முதல்கைதியை போன்றே இரண்டாவது கைதியும் சில நொடிகளில் இறந்தார். அதைக் கண்டு அறிவியல் ஆய்வாளர்கள் ஆச்சரியப்பட்டனர். இரண்டாவது கைதியின் உடலைப் பரிசோதனை செய்தனர் முதல் கைதியின் உடலில் இருந்ததைப் போன்றே இரண்டாவது கைதியின் உடலிலும் பாம்பு விஷத்திற்கு நிகரான விஷம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
   இரண்டாவது கைதியின் உயிரை பறித்த இந்த விஷம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து  ஆய்வு நடத்தப்பட்டது. முதல் கைதியை பாம்பு கடிக்கச்செய்து இறந்ததை தன்னுடைய கணகளால் கண்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் கூர்மையான  ஊசியால் மட்டும் இரண்டுமுறை குத்தப்பட்ட போதும் ஆனால் அதனை அவரது கண்களால் காணமுடியாதவாறு செய்யப்பட்டதால் தன்னை முதல் கைதியை போன்றே விஷப்பாம்புதான் கடித்தது என்ற எதிர்மறை எண்ணத்தால் அவரது உடலே விஷத்தினை உற்பத்தி செய்துள்ளது என்ற உண்மை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பரிசோதனையில் இருந்து.நாம்  நமது ஒவ்வொரு செயலிலும்  நேர்மறையாக இருக்க வேண்டும்என  நாம் அறிந்து கொள்ளலாம்.
ஏனென்றால், மனதில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகினால், அது நம் உடலில் விஷம் போன்ற ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது  மேலும் நம்முடைய உடலில் 75% நோய்க்கான மூலக் காரணங்கூட எதிர்மறை சிந்தனையால் மட்டுமே உருவாகின்றது.
இன்றைய உலகில் மனிதன் தன் எதிர்மறை எண்ணங்களால் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறான். எனவே,நம்முடைய சிந்தனையை எப்போதும் நேர்மறையாக வைத்திருக்க பழகிடுக.

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

துறவிபயனம்செய்கி்ன்ற ஒட்டகங்கள் - வாழ்க்கையின் சிக்கல்கள்.

  ஒருமுறை ஒரு நகரத்தில்,  ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொண்டவாறே தனது வாழ்க்கையில் மகிழ்ச்சியேஅடையாத ஒரு மனிதன் வாழ்ந்தான். அம்மனிதன் எப்பொழுதும் ஏதாவது ஒரு பிரச்சனையை எதிர்கொண்டு வருத்தத்துடன் இருப்பதே வழக்கமாகும். அவ்வாறான நிலையில் ஒரு நாள்,  துறவி ஒருவர் தற்போது போன்று வசதிஇல்லாத பழங்காலமானதால் பயனம் செய்வதற்கான ஒட்டகங்களின் கூட்டத்துடன் அந்நகரத்திற்கு அருகில் வந்து தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது உடன்  அந்த நகரமக்கள் அனைவரும் அவரைப் பற்றியசெய்தியை அறி்ந்தவுடன் தங்கள் பிரச்சினைகளை அவரிடம் கூறி தீர்வு செய்து மகிழ்ச்சிடன் இருப்பதற்காக அந்த துறவியை காண  சென்று கொண்டிருந்தனர், இந்தமனிதனும் அவ்வாறே தன்னுடைய பிரச்சினைகள் இவர்மூலமாகவாவது தீர்வுசெய்திடமுடியுமா என அந்த துறவியை காண முடிவு செய்து மறுநாள் விடியற்காலையிலேயே அங்கு சென்றபோது  மாலை வரை அந்த துறவியைச் சந்திக்கும் வாய்ப்பு அந்த மனிதனுக்குக் கிடைக்கவில்லை. கடைசியாக துறவியை சந்திக்க அனுமதிகிடைத்து  துறவியை சந்தித்தபோது அவரிடம், “ஐயா, நான் என் வாழ்க்கையில் எப்போதும் ஏதாவது பிரச்சினைகளால் சூழ்ந்து என்னால் மற்றவர்களை போன்று மகிழ்ச்சியாகவே வாழமுடியவில்லை., சில நேரங்களில் வேலை செய்யும் இடத்தில், சில நேரங்களில் யாருடனாவது மோதல்கள், சில நேரங்களில் என் உடல்நிலை குறித்து கவலைப்படுவது என்றவாறு எல்லா நேரங்களிலும் ஏராளமானபிரச்சனைகள் என்னைச் சூழ்ந்து கொள்கின்றன என்னால் இவைகளை எதிர்கொள்ளமுடியாமல் தத்தளி்க்கின்றேன் அதனால் மிகவும் வருத்தத்துடனேயே வாழ்ந்துவருகின்றேன். தயவு செய்து என் வாழ்வில் எதிர்படுகின்ற எல்லா பிரச்சனைகளும் முடிந்து நான்மனமகிழ்ச்சியுடன் வாழக்கூடிய ஒரு தீர்வை கூறுங்கள்” என்றான் உடன் அந்த துறவி புன்னகைத்து, “மகனே, இன்று மிகவும் தாமதமாகிவிட்டது, நாளை உன் கேள்விக்கு பதில் சொல்கிறேன். எனக்காக ஒரு சின்ன வேலை செய்வாயா?” எனக்கோரினார் உடன்துறவிகூறுகின்ற  பணியை செய்ய தான் தயாராக இருப்பதாக அந்த மனிதன் ஒப்புக்கொண்டான். துறவி, “மகனே நான் பயனம் செய்வதற்கு பயன்படுத்தி கொள்வதற்காக  நூறு ஒட்டகங்கள் உள்ளன, அவற்றை இன்றிரவு நீ கவனித்துக் கொள்ள வேண்டும். நூறு ஒட்டகங்களும் ஓய்வெடுப்பதற்காக தரையில் படுத்ததும், நீ உறங்க செல்லலாம்." எனக்கோரியபின், துறவி ஓய்வெடுக்க தனது கூடாரத்திற்குள் சென்றார். மறுநாள் காலை துறவி அந்த மனிதனைச் சந்தித்தபோது, "மகனே, நேற்றிரவு நீ நன்றாகத் உறங்கினாயா?" என்று கேட்டார். உடன்அம்மனிதன், "ஐயா நேற்றிரவு முழுவதும்  ஒரு ஒட்டகத்தை ஓய்வெடுக்க செய்யமுயற்சித்தால் உடன், மற்றொன்று எழுந்து நிற்கும் இவ்வாறு மாற்றி மாற்றி ஒன்று ஒய்வெடுக்கச்செய்ய முயற்சித்திடும்போது மற்றொன்று எழுந்து கொண்டே யிருந்தன  நூறு ஒட்டகங்களையும் ஓய்வெடுப்பதற்காக பலவகையிலும் முயற்சிசெய்தேன், ஆனால் என்னால் அனைத்து ஒட்டகங்களையும் ஒரேநேரத்தில் ஓய்வெடுக்க செய்யமுடியவில்லை அதனால் நேற்றிரவு முழுவதும் என்னால் ஒரு கணம் கூட தூங்க முடியவில்லை.." என  மிகச்சோர்வாகவும், சோகமாகவும் பதில் கூறினான் உடன்துறவி, "மகனே நீ எவ்வளவு முயற்சி செய்தாலும், அனைத்து ஒட்டகங்களும் ஒன்றாக ஓய்வெடுக்க செய்ய முடியாது என்பதை  புரிந்து கொண்டாய் அல்லவா. அதாவது சிலவற்றை ஓய்வெடுக்க செய்யமுயற்சித்தால் உடன் வேறு சில ஒட்டகங்கள் எழுந்து நிற்கும். அதே போன்று நம்முடைய வாழ்க்கையிலும் ஒரு பிரச்சனையை தீர்வு செய்தவுடன்,  மற்றொரு பிரச்சனை நம்முன்எழும் இதுதான் உலகநியதி. நம் உயிர் இருக்கும் வரை பிரச்சனைகளும் இருந்துகொண்டேயிருக்கும், சில நேரங்களில் குறைவாகவும்,வேறுசிலநேரங்களில் மிக அதிகமாகவும் இருக்கும் என்பதை புரிந்து கொள்க. " எனக்கூறினார் உடன் அம்மனிதன்"அவ்வாறாயின் மகிழ்ச்சியாக இருப்பதற்காக நான் என்ன செய்ய வேண்டும்?" என வினவினான். துறவி சிரித்துக்கொண்டே, "நேற்று இரவு என்ன நடந்தது? 1. பல ஒட்டகங்கள் நீ முயற்சி செய்யாமலேயே இரவு நேரத்தில் தானாகவே ஓய்வெடுக்க செய்யும், 2. உன்னுடைய முயற்சியால் பலவற்றை ஓய்வெடுக்க வைத்தாய், 3. பல ஒட்டகங்கள் உன்னுடைய கடுமையான முயற்சிக்குப் பிறகும் ஓய்வெடுக்க செய்யமுடியவில்லை, பின்னர் அவற்றில் சில தனியே ஓய்வெடுக்கசெல்வதை  நீ  கண்டாய் அதுபோன்று நம்முடைய வாழ்க்கையிலும் பிரச்சனைகள்.. 1. சில தானாகவே தீர்வாகிவிடும், 2. சிலவற்றை உன்னுடைய சொந்த முயற்சியால் தீர்வுசெய்கி்ன்றாய், 3. நிறைய முயற்சி செய்தும் வேறுசில தீர்வாகவில்லை...? அதனை அப்படியே விட்டுவிடு இதுபோன்ற பிரச்சனைகள் சரியான நேரத்தில் தானாகவே தீர்வாகிவிடும். எனவே,  பிரச்சனைகள் இருந்தாலும் வாழ்க்கையை அனுபவிக்க கற்றுக்கொள்க.."  என நீண்ட விளக்கமளித்தார்

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

கையில் விளக்கு எடுத்துசென்ற குருடனை - மற்றவர்கள் கேலி செய்தல்

.
முன்பெல்லாம் தற்போதைய நவீன வாழ்க்கை முறைபோன்று தெருவில் இரவில் மின்விளக்குகள் இல்லாததால்  இருள்சூழ்ந்த இரவில் சரியாக நடந்து செல்வதற்கு ஏதுவாக சிலர் தம்முடைய கைகளில் விளக்கு ஒன்றினை எடுத்து செல்வார்கள் அவ்வாறானசூழலில்  ஒரு கிராமத்தில் வாழ்ந்த கண்பார்வையற்ற  குருடன் ஒருவர். இரவில் வெளியில் செல்லும் போதெல்லாம், எப்பொழுதும் மற்றவர்களை போன்றே தன்னுடைய கைகளில் ஒரு விளக்கினை  எடுத்துசெல்வார்
அவ்வாறு ஒரு நாள் இரவு  தன்னுடைய  நண்பரின் வீட்டில் இருந்து தன்னுடைய வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.  அது இருள்சூழ்ந்த இரவானதால் அவர் வழக்கம் போல  ஒரு விளக்கை தன்னுடைய  கையில் பிடித்தபடி தன்னுடைய வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
அப்போது அந்த கிராமத்திலிருந்த சில குறும்புக்கார இளைஞர்கள் அந்தக் குருடனைப் பார்த்து கேலிசெய்து சிரிக்க ஆரம்பித்தார்கள். அவர்களில் ஒருவன் சத்தமாக, “டேய், பாருடா, கண்ணில்லாத குருடன் கையில் விளக்கை ஏந்தி சென்று கொண்டிருக்கிறார். பார்வையற்றவருக்கு கைவிளக்கால் என்ன பயன்?” என சத்தமாக, கிண்டல் செய்தான் மற்றஇளைஞர்களும் அதனை ஆமோதித்து சிரிக்க துவங்கினார்
அவ்வாறு கிண்டலாக  கூறிய சொற்களைக் கேட்ட பார்வையற்றவர் தான் மேலும் நடந்து செல்வதை நிறுத்திவிட்டு, “மிகச்சரியாகச் சொன்னீர்கள் சகோதரர்களே. நான் குருடன்தான். என்னால் பார்க்க முடியாது. அதனால் விளக்கை கையில் வைத்திருப்பதால் எனக்கு என்ன பயன்?”
  உண்மையில் எனக்கு இருட்டில் மட்டுமே வாழ்வது வழக்கமாகும்
ஆனால் உங்களைப் போன்ற கண்பார்வை உள்ளவர்கள் இருட்டில் வாழப் பழகவில்லை. இருள்சூழ்ந்த இரவில் எதிரில் இருப்பதை அல்லது வருவதை பொதுமக்களாகிய உங்களுக்கு பார்ப்பதில் சிக்கல் இருக்கலாம். எனவே நான் எதிரில் வருவதை கவனிக்காமல் நடந்து வரலாம் அதனால் தவறுதலாக இருளில் என்னைப் கவனிக்காமல் பார்க்காமல் எதிரில் வருபவர் என்னை கீழே இடித்துத் தள்ளிவிட வாய்ப்புண்டு அல்லவா, அதன் பிறகு எனக்கு என்ன நடக்கும்? நான்தான் கீழே விழவேண்டிவரக்கூடும்
அதனால்தான் எதிரில் வருகின்ற உங்களைப் போன்றவர்கள் கவனக்குறைவாக என்னை இடித்து கீழேவிழச்சசெய்யாமல் இருப்பதற்காக இந்த விளக்கினை கையில் ஏந்தி செல்கிறேன். அதனால் பார்வையுடையவர்கள் இருட்டில் ஒரு குருடனைப் பார்க்க முடியும் அல்லவா. ' என மிக நீண்ட விளக்கமளித்தார்
பார்வையற்றவரின் பேச்சைக் கேட்டு வெட்கமடைந்த அவ்விளைஞர்கள், அவரிடம் மன்னிப்பு கேட்கத் தொடங்கினர், எதிர்காலத்தில் யாரிடமும் எதையும் சிந்திக்காமல் எதுவும் சொல்ல மாட்டேன் என்று சபதம் செய்தனர்.
கற்றல்.
உலகில் பல்வேறு வகையான மக்கள் உள்ளனர். சிலர் தங்கள் சொந்த பலவீனங்களை புறக்கணிக்கிறார்கள், ஆனால் மற்றவர்களின் பலவீனங்களை கேலி செய்ய எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.
உண்மையான களநிலவரத்தை மதிப்பிடாமல், மற்றவர்களின் பலவீனங்களைப் பார்த்துகைகொட்டி கிண்டல்செய்து சிரிக்கிறார்கள், அவர்களின் கூர்மையான சொற்களின் அம்புகளால் அவர்களை காயப்படுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையான செயலால் அறையப்படும்போது, குற்ற உணர்வைத் தவிர வேறு எதுவும் அவர்களிடம் இல்லாதது அவர்களு்குக தெரியவருகின்றது.
எனவே, யாரையும் அவமானப்படுத்த முயற்சிக்கக் கூடாது, எதையும் பேசும் முன் கவனமாக சிந்தித்திடுக

சனி, 29 ஜூலை, 2023

திருமணத்திற்கான மணமகளின் தந்தையின் நிபந்தனை

ஒருமுறை  இளைஞன் ஒருவன் ஒரு இளம் பெண்ணைக் காதலித்தான். அதனை தொடர்ந்து அவ்விருவரும்திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். அவ்வாறான அவ்விருவரும் திருமணம் செய்துகொள்கின்ற முடிவினை அவ்விளம் பெண்ணின் தந்தை மிகுந்த தயக்கத்துடன் ஒப்புக்கொண்டார்.
 ஆனால் அதற்காக ஒரு நிபந்தனையுடன் மட்டுமே தாம் ஏற்றுகொள்வதாக கூறினார். அத்திருமணத்திற்கு அவ்விளைஞனின் கிராமத்திலிருந்தோ அல்லது குடும்பத்திலிருந்தோ  மிகவும் வயதுமுதிர்ந்த பெரியவர்கள் யாரும் அம்மண ப்பெண்ணின்  கி்ராமத்திற்கு வரக்கூடாது என்று அவர் கூறினார்.
அவரின் அந்நிபநதனையைப் பின்பற்றுவது மிகவும் கடினமான செயலாக இருந்தது,இருந்தபோதிலும் மணமகனி குடும்பத்தினர் அதனை ஒப்புக்கொண்டது.
திருமண நாளும் வந்தது. அத்திருமணத்திற்காக மணமகனின் கிராமத்து வயதுமுதிர்ந்த பெரியவர்கள் அனைவரையும் கிராமத்திலேய விட்டுவிட்டு இளையோர்கள் மட்டும் மணமகளின் கிராமத்திற்கு செல்ல அனைவரும்தயாராக இருந்தனர், ஆனால் அவர்களுள் மணமகனின் தாய்வழி தாத்தா மட்டும் அதனால் என்ன ஆனாலும் பரவாயில்லை தானும் அந்த திருமணத்திற்கு வருவேன் என பிடிவாதமாக இருந்தார். .
எனவே மணகனின் குடும்பத்தினர் அவரை மிக இரகசியமாக அழைத்துச் செல்ல முடிவு செய்தனர், மேலும் தாத்தாவை மறைந்திருக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
மணமகனின் உறவினர்களும்  மணமகளின் கிராமத்தை அடைந்ததும். மணப்பெண்ணின் தந்தை அவ்வனைவரையும் வரவேற்று அவர்களுள் மிகவும் வயதுமுதிர்ந்த பெரியவர் யாராவது வந்திருக்கிறார்களா என்று சரிபார்த்தார் ஆனாலும் அவரால் வயது முதிர்ந்த மணமகனி் தாத்தா மிக இரகசியமாக வந்திருப்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை அவர்கள் ஒரு பெரிய கூடத்தில் நன்கு வசதியுடன் தங்கி ஓய்வெடுக்குமாறு கூறிச்சென்றார்.
மணமகளின் தந்தை திரும்பி சென்றபின்னர்இப்போது, மணப்பெண்ணின் தந்தை மணமகனுக்கு  - எங்கள் கிராமத்திற்கு அருகே உள்ள குளத்தை முழுவதும் பாலால் நிரப்ப வேண்டும், அப்போதுதான் இந்த திருமணம் நடக்கும், இல்லையெனில் திரும்பி செல்லுங்கள் என்ற நிபந்தனை செய்தி அனுப்பினார்.
அத்திருமணத்திற்கு வந்திருந்த மணமகனின் கிரமத்தார்களும் உறவினர்களும் எவ்வளவு  யோசித்தாலும், மணமகளின் தந்தை கூறிய நிபந்த.னையை எவ்வாறு நிறைவேற்றுவது என்ற வழியை கண்டுபிடிக்கமுடியவில்லை, அதனால் இறுதியில் திருமண முடிவை திரும்பப் பெறப்படும் என்று முடிவு செய்யப்பட்டு அனைவரும் தங்களது கிராமத்திற்கு மணமகனுக்கு திருமணத்தை செயற்படுத்தாமலேயே திரும்ப செல்வது என தயாராகிவிட்டனர்.
இதனை  கண்டமணமகனி்ன் தாத்தா வெளியே வந்து - என்ன நடந்தது? என கேட்டார்
உடன் அவரிடம் மணமகளின் தந்தையின் நிபந்தைகுறித்து  கூறப்பட்டது. அதைக் கேட்ட தாத்தா சிரித்துக்கொண்டே, போய் மணமகளின் தந்தையிடம் - குளத்தில் பால் நிரப்ப ஏற்பாடுகள் செய்துள்ளோம், ஆனால் குளத்திலுள்ள தண்ணீரை வெளியேற்றினால்தான் அது நடக்கும். என மணமகனி்ன் என்றார்
மணப்பெண்ணின் தந்தைக்கு இந்தச் செய்தி கிடைத்ததும், மணமகன் தரப்பிலிருந்து  வயதில்முதியவர் திருமணத்திற்கு வந்திருப்பதை புரிந்துகொண்டு மணமகன்குடும்பத்தார்களின் பதிலை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார் உடன் மிகுதியாக இருந்த மணமகனின் கிராமத்திலிருந்த வயதுமுதிர்ந்த அனைவரையும் திருமணத்திற்காக தனது கிராமத்திற்கு வரச்செய்து மிகுந்த மரியாதையுடன் வரவேற்று அந்த திருமணத்தினை செய்து முடிக்கசெய்தார்.
இந்த எளிய கதை நம் பெரியவர்களையும் அவர்களின் அனுபவத்தையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நமக்குக் கற்பிக்கிறது.



திங்கள், 24 ஜூலை, 2023

குயவனுக்கு மகிழ்ச்சியாக வாழ்வதற்கான அரசனின் சலுகை -

ஒரு காலத்தில் எல்லா வசதிவாய்ப்புகளுடனும் ஒரு நாட்டில் அரசன் ஒருவர் அரசாட்சி செய்து கொண்டிருந்தார். அவருக்கு அன்பான மனைவி, நல்ல பிள்ளைகள் நல்ல மக்கள்என்றவாறு இருந்தாலும் அவ்வரசன் மிக்அதிக மன வருத்த்ததுடனே இருந்தார்.
  ஒருமுறை அவ்வரசர் தன்னுடைய நாட்டில் உலாவந்துகொண்டிருந்தபோது ஒரு சிறிய கிராமத்தை வந்துஅடைந்தார், அங்கு ஒரு குயவர் (நல்ல களிமண்ணால் பானைகள், பாத்திரங்கள் போன்றவற்றைச் செய்பவர்) அந்த கிராமத்திலிருந்த கோவிலுக்கு வெளியே களிமண்ணாலான பாத்திரங்களை விற்றுக் கொண்டிருந்தார், அவருடைய அங்காடியில் சிலமண் பானைகளில் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது  அவரும் அதனஅருகில் அமர்ந்து கொண்டு மகிழ்ச்சியாக கிராமத்து பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார். .
மன்னன் அந்த கோயிலுக்குள் சென்று திரும்பி வெளியே வரும்போது மகிழ்ச்சியாக கிராமத்து பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த குயவனைக் கண்டு அவன் அருகில் அமர்ந்தார்.உடன் தன்அங்காடியில் வந்தமர்ந்த அந்நாட்டு அரசனை கண்டதும் விருந்தினர்கள் எவரேனும் நம்முடையவீடு தேடி வந்தததும் செய்கின்ற நம்முடைய வழக்கமான செயலைபோன்று அந்த குயவன் அரசனுக்கு மரியாதையுடன் பாணையிலிருந்து தண்ணீரை முகர்ந்து அரசர் குடிக்குமாறு கொடுத்தார்.
  அம்மன்னனும் குயவனின் இவ்வாறான செயலால் அதிகம் ஈர்க்கப்பட்டார்.அரசன் அந்த குயவனின் வருமானத்தைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினார்.. மிகவும் குறைந்த அளவே அந்த குயவனுக்க வருமானம் வருவதை யூகித்தபின்னர்
அரசர் அவனிடம், “தம்பி, என்னுடன் நகரத்திற்கு வருவீர்களா?” என்றார். உடன் குயவன் , “இந்த கிராமத்தை விட்டிட்டு உங்களுடன் நகரத்திற்கு நான் வந்தால் என்னுடைய வருமானத்திற்கு நான்  என்ன செய்வேன்?” என்று சந்தேக கேள்வி எழுப்பினார்.
அரசன், " நீங்கள் இங்கு செய்வதை விட ஏராளமானஅளவில் மண்பானைகளை அங்கே செய்யலாம்." என்றார் .தொடர்ந்தப குயவன், "அவ்வாறு அதிகஅளவில் மண்பாணைகளை அங்கு செய்தால் அதனை நான் செய்வது?"
அதற்கு அரசர், “அவற்றை விற்று மிக அதிகஅளவில்  பணம் சம்பாதிக்கலாம்” என்றார். உடன் குயவன், “அவ்வாறு அதிக அளவில் சம்பாதித்த அந்தப் பணத்தை கொண்டு  நான் என்ன செய்வது?” என்று கேட்டார்.
அவனது கேள்வியால் ஆச்சரியப்பட்ட அரசன், “பணத்தை என்ன செய்வீர்கள்? பணம்தான் எல்லாமே.நம்முடைய வாழ்வே பணத்தின் மீதுதானே நடக்கின்றது” என்றார்
திரும்பவும குயவன், "இப்போது, அந்த அதிகஅளவிலான பணத்தை நான் என்ன செய்வது என்று சொல்லுங்கள்" என்ற வினவினார்
அரசன், "நீங்கள்அந்தபணத்தினை கொண்டு மிகவும் வசதியான வாழ்க்கையை வாழலாம், ." என்றார் இதைக் கேட்ட குயவன் மன்னனிடம், “மன்னிக்கவும், ஐயா இப்போது நான் என்ன செய்கிறேன் என்று சொல்லுங்கள்"   என வினவினான்.
இந்தக் கேள்வி அரசனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது அதனால் மேலும் எதுவும் பேசாமல் மௌனமானார்.
சிறிது நேரம் கழித்து, மன்னர்  " நீங்கள் இங்கு முழுமையான மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்." என கூறினார்,
உடன் குயவன் சிரித்துக்கொண்டே, "ஆம் ,ஐயா அதைத்தான் நான் சொல்கிறேன், மகிழ்ச்சியை பணத்தால் வாங்க முடியாது" என்றார்.
அதனால் அரசன் அதிக ஆர்வத்துடன் , நதயவுசெய்து அத்தகைய மகிழ்ச்சியை எப்படி அடைவது என்று சொல்லுங்கள்." என வினவினார் உடன் குயவன், "கவனமாகக் கேளுங்கள், உங்கள் கைகளை கொடுப்பதற்கு மட்டும் பயன்படுத்துங்கள்."  பதிலளித்தார்
அரசன், "அது எப்படி?"
அதற்கு குயவன், “அரசே! யாரிடமும் கைநீட்டி கேட்காதீர்கள், கொடுக்கக் கற்றுக்கொள்க.. கொடுக்கக் கற்றுக் கொண்டால், மகிழ்ச்சியின் பாதையில் அடியெடுத்து வைத்துவிட்டீரகள் என்பதை புரிந்துகொள்க.
சுயநலத்தை கைவிட்டு பொதுநலனை தேர்ந்தெடு்த்திடுக..
பெரும்பாலானோரின் துக்கத்திற்கு மிகப் பெரிய காரணம், தங்களிடம் எது இருந்தாலும், அதில் அவர்கள் மகிழ்ச்சியடையாமல் , இல்லாததைப் பெறுவதில் முயன்று அதனை அடையமுடியாமல் அதற்காகள் வருத்தப்படுவதும்தான்.
இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்க, மனவருத்தங்கள் தாமாகவே போய்விடும்” என்று நீண்ட விளக்கமளித்தார்

ஞாயிறு, 16 ஜூலை, 2023

அறிவு அல்லது நடத்தை எது பெரியது

 முன்னொரு காலத்தில் ஒரு அரசன் தன் நாட்டின் அரச குருவை மிகவும் மதிக்கும் பழக்கம் கொண்டிருந்தான். அரசகுரு அரசவைக்கு வரும் போதெல்லாம், அரசன் தன் அரியணையிலிருந்து மரியாதைக்காகஎழுந்து நின்று வணக்கம் கூறி தன்னுடைய இருக்கையில் உட்காருவது வழக்கமான செயலாகும்.
ஒரு நாள் அரசர் அரசகுருவிடம், "ஒருவரின் நடத்தை சிறந்ததா அல்லது அவரது அறிவு சிறந்ததா என்பதை கூறுக" என்று கேட்டார்.
அரசகுரு, "எனக்கு சில நாட்கள் அவகாசம் கொடுங்கள், உங்கள் கேள்விக்கு நான் பதிலளிக்கிறேன்" என்றார்.
அடுத்த நாள், அரச குருவானவர் மன்னரின் கருவூலத்திற்குச் சென்று, அங்கிருந்து சில பொற்காசுகளை எடுத்து, தனது பையில் வைத்து எடுத்துக் கொண்டு சென்றார். கருவூலத்தலைவர் இதைப் பார்த்தார், ஆனால் அவர்அரச குருஎன்பதால் அவருடைய பதவியைக் கருத்தில் கொண்டு அமைதியாக இருந்தார்.
அரச குருவானவர் சில நாட்கள் இதேசெயலையே தொடர்ந்து செய்து வந்தார். அதாவது அரசகுரு தினமும் அரசின் கருவூலத்திற்கு வந்து அங்கு சில தங்க நாணயங்களை எடுத்து தனது பையில் வைத்துஎடுத்துக்கொண்டு  வெளியே செல்வது வழக்கமாகும். இதை அரசுகருவூலத்தலைவர் பார்த்தும் ஒன்றும் செய்யஇயலாமல் அமைதியாக இருந்துவந்தார்.
இந்த செயல் பல நாட்களாக நடந்து வந்ததால், அரசுகருவூலத்தலைவர் அரசனிடம் சென்று இவ்வாறு நடைபெறுகின்ற முழுவிவரத்தையும் கூறினார்.
இதன்பிறகு  அரசகுரு ஒரு நாள் மன்னரின் அரசவைக்கு சென்றார், ஆனால் இப்போது அரசரோ மரியாதையாக எழுந்து நின்று அரசகுருவை  வரவேற்க வில்லை அல்லது மரியாதை நிமித்தமாக அரியணையில் எழுந்து சென்று வரவேற்கவுமில்லை.
பொற்காசுகளை எடுத்துச் செல்லும் செய்தி அரசனுக்கு வந்துசேர்ந்துவிட்டது என்பதை அரசகுரு புரிந்து கொண்டார்.
மன்னன் தன் குரலை உயர்த்தி அரசகுருவிடம், "அரசுகருவூலத்திலிருந்து பொற்காசுகளை எடுத்துசென்றவிட்டாயா?" என்று மரியாதை இல்லாமல் கேட்டார். உடன் அரசகுவும் , "ஆம்.  உண்மைதான்" என்றார்.
உடன் அரசன் மிகவும் அதிககோபமடைந்து, "ஏன் இப்படி செய்தாய்?" என திட்டினார்
அதனை தொடர்ந்து அரசகுருவானவர் புன்னகைத்து, "நான் வேண்டு மென்றேதான் அரசாங்க கருவூலத்திலிருந்து தங்கக் காசுகளை எடுத்துசென்றேன்.அரசே ஒருவரின் நடத்தை பெரியதா அல்லது அறிவாற்றல் பெரியதா என்ற கேள்வியை  நீங்கள் கேட்டீர்கள் அல்லவா அந்த கேள்விக்கான சரியான பதில் எதுவென உங்களுக்குக் காட்ட விரும்பினேன்.அதற்காக  அரசரின் அனுமதியின்றி நான் அரசாங்க கருவூலத்திலிருந்து தங்கக் காசுகளை எடுத்துசென்றேன் இந்த செயலை அறிந்ததும்,  வழக்கமாக செய்யும் மரியாதைக்காக எழுந்துநின்று வணக்கம் கூறி வரவேற்பதற்கு பதிலாக நான் இந்த அரவைக்கு வரும்போது  அரியணையில் இருந்து எழுந்துநின்று வரவேற்கவில்லை. மாறாக நீங்கள் உங்கள் குரலை உயர்த்தி என் மீது கோபத்துடன் திட்டினீர்கள்.
தங்க நாணயங்களை எடுத்துச்செல்வதற்கு முன்பும் என்னுடைய அறிவு என்னுடன் இருந்தது, தங்கக் காசுகளை அரசனிடம் கேட்காமல் எடுத்துச்சென்ற பிறகும் அது என்னிடம் உள்ளது. ஆனால், நான்  நடத்தையில் தவறியவன் என என்னைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தவுடனே, என் மேல் கொண்டுள்ள மரியாதையை இழந்துவிட்டீர்கள்.
என் நடத்தையின் காரணமாகவே நீங்கள் என்னை மதிக்கிறீர்கள், ஆனால் எனது நடத்தை மாறியவுடன், என்னைப் பற்றிய எண்ணங்களும் மாறிவிட்டன, அதனால் உங்களால் என்னை மதிக்க முடியவில்லை." என நீண்ட விளக்கமளித்தார்.அரசன் அதனை புரிந்துகொண்டு அரசகுவைப் பாராட்டினார்.நமது நடத்தை நன்றாக இல்லை என்றால், நாம் எவ்வளவுதான் கல்வி, பதவி , செல்வம் கூட நம்மிடம் இருந்தாலும் நம்மை யாரும் மதிக்கமாட்டார்கள்.

சனி, 1 ஜூலை, 2023

அரசனுக்கு பிச்சைக்காரன் பிச்சையிடுதல்

 ஒரு பிச்சைக்காரன் பிச்சை எடுக்கச் செல்ல அதிகாலையில் எழுந்தான். வெளியே செல்லும் முன், பிச்சை எடுக்கச் செல்லும் போது பிச்சைக்காரன் தன் பைகளை காலியாக வைக்கக் கூடாது என்ற மூடநம்பிக்கையின் காரணமாக ஒரு கை நிறைய ஏதாவது உணவுதானியத்தை எடுத்துபையில் வைத்தபின் வெளியில்செல்வது அவனுடைய வழக்கமான செயலாகும்.
 இன்று மாலைக்குள் தன் பையை நிரப்பிவிடலாம் எனநினைத்துக் கொண்டு பிச்சைக்காரன் தன் குடிசையை விட்டு வெளியே வந்தான்.
அப்போது, அந்நாட்டு அரசனின் தேர் தான் செல்லும் வழியில் எதிரே வருவதைக் கண்டான். அதைக் கண்ட பிச்சைக்காரன் மிகவும் மகிழ்ச்சி யடைந்தான், இன்று தனது வறுமை அனைத்தும் நீங்கிட, அரசனிடம் பிச்சை பெற்றால் போதும் தன் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று எண்ணினான்.
அரசனின் தேர் நெருங்க நெருங்க, பிச்சைக்காரனின் கற்பனையும் உற்சாகமும் பெருகியது
அரசனின் தேர் பிச்சைக்காரன் அருகே வந்தவுடன்  நின்றது. அரசன் கீழே இறங்கி பிச்சைக்காரனை அணுகினான்.
பிச்சைக்காரன் தனக்கு எதையாவது கொடுப்பதற்குப் பதிலாக, தனது விலையுயர்ந்த துணியை அவன் முன் விரித்து, அவனிடம் அரசனேபிச்சை கேட்கத் தொடங்கினான். அவ்வாறு அரசனே தன்னிடம் பிச்சை கேட்கும் போது தான் என்ன செய்வதென்றே அந்த பிச்சைக்காரனுக்கு புரியவில்லை. பிச்சைக்காரன் மேலும்எதையும் யோசிப்பதற்குள், அரசன் மீண்டும் பிச்சைக்காரனிடம் பிச்சையிடுமாறு கெஞ்சினான்.
பிச்சைக்காரன் தன் பைக்குள் கையை வைத்தான் ஆனால் எப்போதும் அப்பிச்சைக்காரண் மற்றவர்களிடம் இருந்து பிச்சை எடுப்பது மட்டுமே வழக்கமாகும் அதன்காரணமாக அவன் மனம் தன்னுடைய பையிலுள்ள உணவுதானியத்தை கொடுக்க சம்மதிக்கவில்லை.
இருந்தபோதிலும் எப்படியோ பையிலிருந்த கையளவு வைத்திருந்த தானியத்தில் இரண்டுதானியங்களை மட்டும்எடுத்து அரசன் தன்னிடம் பிச்சை கேட்டு கையேந்தி இருந்த துணியில் போட்டான்.  அரசனும் அந்த இரண்டு உணைவுதானியங்களை மட்டும் பிச்சையாக அந்த பிச்சைக்காரணிடம் வாங்கிகொண்டு தன்னுடைய தேரில் பயனத்தை தொடர்ந்தான்
அன்றுநாள் முழுவதும், பிச்சைக்காரனுக்கு வழக்கத்தை விட அதிகமான பிச்சை கிடைத்தாலும், அப்பிச்சைக்காரன் தனது பையில் இருந்து இரண்டு  தானியங்களை மட்டும் அரசனுக்கு  பிச்சையாக கொடுத்ததை குறித்து அதாவது தன்னிடமிருந்து இரண்டு தானியங்கள் அரசனுக்கு பிச்சையாக போய்விட்டதே என அந்த நாள் முழுவதும் அவ்வாறு பிச்சை கொடுத்ததற்காக வருந்தி கொண்டேயிருந்தான்.
அன்று மாலை தன்னுடை குடிசைக்கு திரும்பியபின் தன்னுடைய பையைச் சரிபார்த்தபோது அவனுடைய ஆச்சரியத்திற்கு அளவேயில்லாமல் போய்விட்டது
அவனுடைய பையில் தங்கத்தால் செய்யப்பட்ட இரண்டு  உணவு தானியங்கள் இருந்தன. தான் அரசனுக்கு பிச்சையிட்டதனால் தான் இது நடந்தது என்று புரிந்து கொண்டான். அடடா தான் கைநிறையை அள்ளி போட்டிருந்த தானிங்கள் முழுவதையும் அரசனிற்கு பிச்சையாக கொடுத்திருந்தால் நமக்கு ஏராளமாக தங்கத்திலான உணவுதானியங்கள் கிடைத்திருக்குமே என அந்த நேரத்தில்தான் நினைத்து வருந்தினன் அரசன் தன்னிடம் பிச்சை கோட்டபோது அவ்வாறு கைநிறைய உணவு தானியங்களை அள்ளி கொடுத்திருக்கலாம்  ஆனால் அப்பிச்சைக்காரனுக்கு பிச்சையாக அள்ளி கொடுத்து பழக்கமில்லை  மற்றவர்களிடம் பிச்சையாக வாங்கிதான்  பழக்கம் பிச்சையிடும் பழக்கம் அப்பிச்சைகாரனுக்கு இல்லாததால் அவ்வாறு செய்யமுடியவில்லை.
கற்றல்:
     1. கொடுப்பதால் எதுவும் குறையாது.
     2. எடுப்பதை விட கொடுப்பது பெரியது.

ஞாயிறு, 25 ஜூன், 2023

குரங்கும் & மணியோசையும் - வதந்தி

 காட்டின் ஓரத்தில் ஒரு கிராமம் அமைந்திருந்தது, அது செழிப்பான கிராமமானதால் கிராம மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.
அதனால் அக்கிராமமக்கள் அக்கிராமத்தின் நடுவில் ஒரு கோயிலைக் கட்டி, அங்கு தினமும் வழிபாடு செய்து வந்தனர். கோவில் வாயிலில் ஒரு பெரிய மணி தொங்கவிட்டிருந்தனர்.
ஒரு நாள் இரவு திருடன்ஒருவன் அந்தகோவிலின் வாயிலிலிருந்த மணியைத் திருடிகொண்டு காட்டை நோக்கி ஓடினான்.
அவன்காட்டில் வெகுதூரம் எங்கும் நிற்காமல் ஓடிக்கொண்டேயிருந்ததால் அந்த கோவிலின் மணியும் ஆடிக்கொண்டேஇருந்தது அதன் தொடர்ச்சியாக மணியோசையும் வெகுதூரம் பரவிக்கொண்டிருந்தது. அருகில் சுற்றித் திரிந்த சிங்கம் ஒன்று அந்த மணியின் ஓசைலியை கேட்டு  ஏதோ நம்முடைய காட்டில் புதியதாக ஓசை கேட்கின்றதே என மிகஆர்வத்துடன் மணியோசையைப் பின்தொடரத் தொடங்கியது.
கிராமத்திலிருந்து காட்டிற்கு ஓடும்போது திருடன் ஏற்கனவே மிகவும் சோர்வாக இருந்தான். எனவே, ஓய்வெடுக்க ஒரு மரத்தடியில் அமர்ந்தான். சிறிது நேரத்தில் அம்மரத்தின் அருகில் வந்த சிங்க ஆஹா நமக்கு அருமையான இரைகிடைத்தது என அந்த திருடனை அடித்துக் கொன்றது. அந்த திருடன் வைத்திருந்த மணியும் அவனருகில் தரையில்விழுந்தது.
 மறுநாள் குரங்கு கூட்டம் அந்த இடத்தை கடந்து சென்றது. அவை அந்த மணியைப் பார்த்தது, அவற்றுள் ஒரு குரங்கு மட்டும் அதை எடுத்து அசைத்தது அதனால் குரங்குகள் அந்த மணியின் மெல்லிய ஓசையை மிகவும் ஆர்வத்துடன்அந்த மனியை ஒன்றுகொன்று வீசிஎறிந்துகொண்டு அம்மணியுடன் விளையாட ஆரம்பித்தன.
பெரும்பாலும், குரங்குகள் நாள்முழுவதும் இரைதேடிசெல்வது இரவில் ஓய்வெடுக்க அந்த மரத்தில் கூடி, அந்த மணியை வீசிஎறிந்துகொண்டு அம்மணியுடன் விளையாடுவது வழக்கமான செயலாகிவிட்டது. இரவில்மட்டும் அந்த காட்டில் இருந்து வரும் மணியின் சத்தத்தின் பின்னணியில் உள்ள காரணத்தை அறியாத கிராம மக்கள் அதை மிகவும் விசித்திரமாக இருப்பதாக தங்களுக்குள் விவாதித்து கொண்டனர்.
இருந்த போதிலும் ஒரு நாள் அந்த கிராமமகள்ள அனைவரும் ஒன்றுகூடி தினமும் இரவில் மட்டும் அந்த காட்டில் மணி யோசைவருகின்ற இரகசியம் தெரிய வேண்டும் என்று அனைவரும் முடிவு செய்தனர். எனவே, கிராமத்து இளைஞன்ஒருவனை தெரிவு செய்து அந்த காட்டிற்கு அந்த இளைஞனை அனுப்பி தினமும் இரவில் மட்டும் காட்டிலிருந்து மணியோசை வருவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளமுடிவுசெய்தனர். அதனடிப்படையில் அந்த இளைஞன் பகலில் காட்டிற்குள் சென்ற தேடிபார்த்தபோது,ஒருமரத்தினடியில் திருடனின் எலும்புக் கூட்டை மட்டும் கண்டான்.
அதனால் உடன் அந்த இளைஞன் அதிகமாக பயந்து கிராமத்திற்குத் திரும்பி ஓடி வந்து, காட்டில் ஏதோ பேய் உலவுவதாகவும், அது மக்களைக் கொன்றுவிட்டு இரவில் மட்டும் மணியை அடிப்பதாகவும் எல்லோரிடமும் கூறினான்.
அக்கிராம மக்கள் அதற்குமேல் ஆய்வுஎதுவும் செய்திடாமல் தீர விசாரித்திடாமல் அந்த இளைஞனுடைய சொற்களை உண்மையென நம்பினார்கள். இந்த செய்தி உடனடியாக காட்டுத் தீ போல் கிராமம் முழுவதும் பரவியது. காட்டிற்கு அருகில் தங்களுடைய கிராமம் இருப்பதால் நம்மையும் அந்த பேய் அவ்வாறு கொன்றுவிருமோ என பயந்து நடுங்குகின்ற அச்சமான சூழல் நிலவியது. அதனால் மெல்ல அந்த கிராம மக்கள் வேறு கிராமங்களுக்கு இடம்பெயரத் தொடங்கினர்.
தன்னுடைய நாட்டில் உள்ள ஒரு கிராமத்து மக்கள் அங்கிருந்து புலம் பெயர்வதை அறிந்த அந்நாட்டு அரசன் அந்த கிராமத்திற்கு அருகிலிருந்த00, காட்டில் சுற்றித் திரியும் பேயை விரட்டுபவர்களுக்கு உரிய விருது வழங்கப்படும் என அந்நாடு முழுவதும் செய்தியை அறிவித்தான். .
அரசனனி இந்த அறிவிப்பை அதே கிராமத்தில் வசிக்கும் ஒரு மூதாட்டியும் அறிந்துகொண்டார். இரவில் பேய் உலாவுகின்றது என்ற செய்தி வெறும் வதந்தி என அம்மூதாட்டி நம்பினாள். அதனால் எதற்கும் பயப்படாமல் ஒரு நாள் இரவு அம்மூதாட்டி மட்டும் தனியாக காட்டிற்குள் சென்றாள். அங்கே மரத்தில் மணிவீசியெறிந்து  விளையாடிக் கொண்டிருந்த குரங்குகளைக் கண்டாள்.
இரவில் மணி அடிக்கும் சத்தத்தின் இரகசியத்தை அககிழவி புரிந்து கொண்டு தன்னுடைய  கிராமத்திற்கு திரும்பி வந்துசேர்ந்தாள்.
அடுத்த நாள், அந்நாட்டு அரசனிடம் சென்று, "காட்டில் அலையும் பேயை என்னால் விரட்ட முடியும், ஆனால் அந்த தீய ஆவியைக் கட்டுக்குள் கொண்டுவர ஒரு சடங்கு ஏற்பாடு செய்ய வேண்டும், அதற்கு எனக்கு கொஞ்சம் பணம் தேவை" என்று அம்மூதாட்டி கோரினாள்.
 அம்மூதாட்டி கோரியவாறு  அரசன் உடனடியாக பணம் ஏற்பாடு செய்து கொடுத்தான். அந்தப் பணத்தில் காய்கணிகள் பருப்பு, பழங்கள் போன்ற தின்பண்டங்களை வாங்கிக் கொண்டு கோவில் வளாகத்தில் ஒரு வட்டம் போட்டு உணவுப் பொருட்களை எல்லாம் வட்டத்திற்குள் வைத்துக்கொண்டு கடவுளிடும்  வேண்டுதல் செய்வது போன்று நடிக்க ஆரம்பித்தாள்.. அந்த கிராமமக்களும் நமக்காக இந்த மூதாட்டி கடவுளிடம் வேண்டி கொள்வதை வேடிக்கை பார்கக ஆரம்பித்தனர். இவ்வாறு தினமும் அம்மூதாட்டி செய்து கொண்டிருப்பதால் அக்கிராம மக்களும் பயம் எதுவும் இல்லாமல் தங்களுடைய வழக்கமான பணிகளை செய்திட சென்றுவிட்டனர்   
அதனை தொடர்ந்து ஒரு நாள் மாலைநேரத்தில் அம்மூதாட்டி, எல்லா உணவுப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு காட்டிற்குள் சென்றாள். காட்டிற்குள் உள்ள அந்த மரத்தை அடைந்து, தான்கொண்டுவந்த அனைத்து உணவுப்பொருட்களையும் அம்மரத்தடியில் வைத்துவிட்டு, குரங்குகள் வரும் வரை அருகில் வேறொரு மரத்தின் பின்னால் ஒளிந்து காத்திருந்தாள்.
சிறிது நேரம் கழித்து அங்கு வந்த குரங்குகள் கூட்டம் நிறைய உணவுப் பொருட்களைக் கண்டதும் மணியை ஒருபுறம் தூக்கி எறிந்துவிட்டு அவ்வுணவு பொருட்களை தின்ன ஓடியது. குரங்குகள் காய்கறி  பழங்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் தின்று க்கொண்டிருந்தன.சரியான, வாய்ப்பு கிடைத்ததால், அம்மூதாட்டி கோவிலின் மணியை எடுத்துக்கொண்டு கிராத்திற்கு திரும்பிவந்தார் மறுநாள் மன்னரின் அரண்மனைக்கு சென்று சேர்ந்தாள்.
அம்மணியை அரசனிடம் ஒப்படைத்துவிட்டு, "அந்தத் தீய ஆவி இந்த மணியை விட்டுவிட்டு காட்டை விட்டு ஓடி விட்டது. கிராம மக்கள் இப்போது பயப்படத்தேவையில்லை" என்றாள்.
அந்த மூதாட்டியின் துணிச்சலைக் கண்டு மிகவும் மகிழ்ந்த அரசன் அவளுக்கு தான்கூறியவாறு பரிசினை வழங்கினான்.
  அன்றிலிருந்து  தினமும் இரவில் அந்த காட்டிலிருந்து கிராம மக்களுக்கு மணியின் சத்தம் கேட்கவில்லை, அவர்கள் மீண்டும் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினர்.
கற்றல்.
1. சிந்திக்காமல் எந்த முடிவையும் எடுக்கக்கூடாது.
2. புத்திசாலித்தனத்தால் ஒவ்வொரு பிரச்சனையையும் தீர்க்க முடியும்.

ஞாயிறு, 18 ஜூன், 2023

பணக்காரனுக்கும் பிச்சைக்காரனுக்கும் இடையிலானஇலாபப் பகிர்வு

 ஒருமுறை ஒரு பணக்காரர் சாலையோரத்தில் ஒரு இளம் பிச்சைக்காரனைப் பார்த்தார், அப்பணக்காரர் அப்பிச்சைக்காரனிடம் சென்று, "நீங்கள் பணிசெய்வதற்கு ஏற்ற உடல்ஆரோக்கித்துடன் இருக்கும்போது ஏன் பிச்சை எடுக்கிறீர்கள்?" என வினவினார்
அதற்கு பிச்சைக்காரன், “நான் பட்டதாரி, பலநிறுவனங்களிலும்   முயற்சித்தேன் ஆனால் எனக்குட்டும் பணிசெய்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை,  ஆயினும் . எனக்கு வேலை கிடைத்தால் உடன் பிச்சை எடுப்பதை நிறுத்திவிடுவேன்." என க்கூறினார்
பணக்காரர்  "சரி, என்னால் உனக்கு பணிவாய்ப்பு கொடுக்க முடியாது, ஆனால் அதற்கு பதிலாக வேறு ஏதோ நன்றாக செய்யலாம் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது, நீ ஏன் என்னுடைய ஒரு தொழிலக்ததின் கூட்டாளியாக ஆகக்கூடாது"
உடன் அப்பிச்சைக்காரன் பணக்காரர் சொன்னதை நம்ப முடியாமல், “என்ன சொல்கிறீர்கள், உங்களுடன் தொழில் கூட்டாளிவது சாத்தியமா?” என்று சந்தேகம் கேட்டான்.
பணக்காரன், “ஆம், இந்த நகரத்தில் எனக்கு ஒரு கடை உள்ளது, அதை நீங்கள் என்னுடைய கூட்டாளியாக சேர்ந்த நடத்திடலாம். ஒவ்வொரு மாத இறுதியிலும் அந்த கடையி்ல் கிடைக்கின்ற இலாபத்தை நாமிருவரும்  பகிர்ந்து கொள்வோம்” எனக்கூறினார்
இதைக்கேட்டதும்பிச்சைக்காரனின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வந்தது, "நீங்கள் ஒரு ஆபத்துதவியாளராக  வந்திருக்கின்றீர்கள். நான் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை" என தழுதழுத்த குறளில் கூறினான்.
 தொடர்ந்து அப்பிச்சைக்காரன் அத்தொழிலதிபரிடம், "நாமிருவரும் அந்த கடையில் கிடைக்கின்ற இலாபத்தை எந்த அடிப்படையில் பகிர்ந்து கொள்வோம்?" என வினவியபோது பணக்காரர் " நான் 20% , நீங்கள் 80% அல்லது நான் 10% நீங்கள் 90% என்றவாறு அந்த கடையில் கிடைக்கின்ற இலாபத்தினை நாமிருவரும் பகிர்ந்து கொள்வோம் நீங்கள் இவ்விரண்டில் எதனை தெரிவு செய்தாலும், அதற்கு நான் தயாராக இருக்கிறேன்"" என கூறினார்
பணக்காரர் சிரித்துக்கொண்டே, "எனக்கு 10% இலாபம் , நீங்கள் 90% இலாபம் எடுத்துக்கொள்ளலாம், அதனால் நீங்கள் வாழ்வில் நன்றாக முன்னேறலாம்" என்றார்.
இதைக் கேட்ட அப்பிச்சைக்காரன் அப்பணக்காரணின் காலில் விழுந்து அழ ஆரம்பித்தான்.
அடுத்த நாள் முதல், பிச்சைக்காரன் பணக்காரனின் கடையை கூட்டாளியாக சேர்ந்து நடத்த ஆரம்பித்தான். அந்த க்கடையின் விற்பனை அதிகரிப்பதற்காக காலநேரம் பார்க்காமல்  அவர் கடுமையாக உழைத்தார். பின்னர் அந்த மாதம் முடிந்த  இலாபத்தை பகிர்ந்து கொள்ளவேண்டிய நாள் வந்தது கூறியவாறு  அப்பணக்காரருக்கு  இலாபத்தில் 10% வேண்டியிருந்தது.
அப்போது திடீரென்று பிச்சைக்காரன், "நான் இரவும் பகலும் கடினமாக உழைத்தேன், அந்த பணக்காரர் எனக்கு வாய்ப்பு கொடுத்ததைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை, பிறகு நான் ஏன் இந்த 10% இலாபத்தினை பணக்காரனக்கு கொடுக்க வேண்டும்?" என சிந்திக்க ஆரம்பித்தான்
குறிப்பிட்ட நாளில் பணக்காரர் அந்த கடையின் தனது 10% இலாப  பங்கை சேகரிக்க ல் வந்து சேர்ந்தார்
அப்பணக்காரன்  அந்த கடையின் தன்னுடைய இலாபப் பங்கைக் கேட்டபோது, பிச்சைக்காரன் "இன்னும் போனமாத கணக்கீடு முடிக்கவில்லை.கடைக்கு வரவேண்டிய தொகை கொஞ்சம்  நிலுவையில் உள்ளது.." என்று வேறு சாக்குபோக்கு சொல்ல ஆரம்பித்தான்.
பிச்சைக்காரன் தனக்குப் பங்களிப்பதைத் தவிர்க்கிறான் என்பதைப் புரிந்துகொண்ட அப்பணக்காரன், "நீ இந்த கடையில் எவ்வளவு இலாபம் ஈட்டியிருக்கிறாய் என்று எனக்குத் தெரியும், நம்முடைய ஒப்பந்தத்தின்படி ஏன் என்னுடைய பங்கைக் கொடுக்காமல் தவிக்கிறாய்?" என வினவிபோது
உடன் பிச்சைக்காரன் , "உனக்கு இந்த கடையின் இலாபத்தில் எந்தப் பங்கும் கிடையாது, ஏனென்றால் இந்த கடையில் அல்லும் பகலும் நான்மட்டுமே கடுமையாகஉழைத்தேன் நீங்கள் என்னை போன்று உழைக்கவே இல்லை இலாபத்தை மட்டும் நான் எப்படி உங்களுக்கு பகிர்ந்து தரமுடியும்ப்பையும் ." என மிகக்கராராக கூறினான்
இப்போது யோசியுங்கள்... நாம் அந்த பணக்காரராக இருந்து, பிச்சைக்காரனிடம் இப்படி ஒரு பதிலை கேட்டிருந்தால் நாம் என்ன செய்திருப்போம்?
அதேபோன்று இந்த உலகில் நாம் வாழ்வதற்கான அனைத்து வசதி வாய்ப்புகளையும் இயற்கை நமக்கு வழங்கிகொண்டிருக்கின்றது நாம் நம்முடைய உடலுழைப்பை மட்டும் கொண்டு நான் தான் அனைத்தும் செய்தேன் என இந்த இயற்கையை நமக்கு பின்னர்வருகின்ற சந்ததிகள் பயன்படுத்த முடியாமல் செய்து கொண்டிருப்பது சரியா  என அனைவரும் தங்களுடைய மனதில் கேளுங்கள்
 

ஞாயிறு, 11 ஜூன், 2023

மேலுலகத்திற்கான நாணயம் எது?

    ஒரு மனிதன் தனது வாழ்நாள் முழுவதும் கடினமாக உழைத்து, 50 வயதை எட்டியபோது, அவர் பல தொழில்நிறுவனங்களைத் துவங்கியதால் அந்நகரின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக உயர்ந்தார்.
அத்தொழில்அதிபர் ஒரு நாள், தனது மகிழ்வுந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது, அவ்வண்டியின் ஓட்டுனர் சத்சங்க கேட்பொலியை இயக்கினார். அதில், துறவி ஒருவர் - நீங்கள் உங்கள் கைகளையும் கால்களையும் கொண்டு எவ்வளவு அதிக கடினமாக உழைத்தாலும், நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தாலும், நீங்கள் இவ்வுலகிற்கு வந்ததைப் போன்றே வெறும் கைகால்களுடன் மட்டுமேஇவ்வுலகைவிட்டு விடைபெறுவீர்கள். எனக்கூறினார் மேலும் இதுகுறித்து- உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் எதைச் சம்பாதித்தீர்களோ அல்லது உங்கள் வாழ்நாள் முழுவதையும் எதற்காக செலவழித்தீர்களோ, அது வீடு, பணம், புகழ் அல்லது வேறு எதுவாக இருந்தாலும், அதை உங்களால் ஒருபோதும் நீங்கள் இறக்கும்போது உங்களோடு கூடவே கொண்டசெல்ல முடியாது. எனமிக நீண்ட விளக்கமளித்தார்
இதைக் கேட்ட தொழிலதிபர், தான் இவ்வளவு சம்பாதித்து,பெயரும் புகழும் அடைந்தும்  தான் இறந்த பிறகு தன்னுடன் எதுவும் கொண்டுபோக போவதில்லையா என்று நினைக்க ஆரம்பித்தார். அதனால், இவ்வளவுநாள் சம்பாதித்ததை தான் இறக்கும் போது தன்னோடு கூடவே எடுத்துச் செல்வதற்கான வழியை தேட ஆரம்பத்தார்.
அன்றிலிருந்து அந்த தொழிலதிபர் இரவும் பகலும் அது குறித்துமட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தார். ஆனாலும் தான்மட்டும் எவ்வளவுதான் சிந்தித்தாலும் தனக்கு அதற்கான வழி கிடைக்காது என புரிந்து கொண்ட பிறகு, தன்னால்  அதற்குமேல் அதுகுறித்து சிந்திக்க முடியாது என்று முடிவு செய்தார்
எனவே, ஒரு நாள் அவர் தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் தனது பணியாளர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கூட்டி, தான் இறந்த பிறகு தான் சம்பாதித்த தன்னுடைய பணத்தை எவ்வாறு தன்னுடன் எடுத்துச் செல்வது என்று தனக்கு சிறந்த ஆலோசனை கூறினால், அந்த நபருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசளிப்பதாக அறிவித்தார்.
அதன்பின்னர் அவருடைய நிறுவனத்தில் பணிபரியும் பணியாளர்கள் அனைவரும் அதைப் பற்றியே விவாதிக்கத் தொடங்கினர், ஒரு வாரம் கழித்து, யாராலும் அதுகுறித்த சிறந்த ஆலோசனையை  அவருக்கு கூற முடியவில்லை.
எனவே, அவர் மீண்டும் தனது பணியாளர்கள் அனைவரையும் கூட்டி, இந்த முறை தனக்கு ஆலோசனை கூறக்கூடிய நபருக்கு  ஐந்து கோடி ரூபாய் தருவதாக உறுதியளித்தார், ஆனால் இந்த முறை இந்த பரிசானது ஊழியர்களுக்கு மட்டுமல்லாது பொதுமக்களுக்கும் பொருந்தும் எனக் கூறியிருந்தார் மேலும் அந்நகரம் முழுவதும்  இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது அதனால், அந்த நகரம் முழுவதும் இவ்வாறான ஆலோசனை கூறுவது குறித்தும் அதற்கான பரிசுத்தொகை குறித்தும்  மிகபரபரப்பாக பொதுமக்கள் அனைவராலும் விவாதிக்கப்பட்டது.
அடுத்த நாள் அந்த நகரில் வாழும் ஒருவர் அத்தொழிலதிபரின் வீட்டை அடைந்து, 'உங்களுக்கு வேண்டிய ஆலோனையை நான் வழங்கத் தயாராக இருக்கின்றேன் ஆனால் அதற்கு முன் என்னுடைய கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்' என்றார்.
அதற்கு தொழிலதிபரும் ஒப்புக்கொண்டார்.
அம்மனிதன் தொழிலதிபரிடம், 'நீங்கள் எப்போதாவது அமெரிக்கா சென்றிருக்கிறீர்களா?' என்று  வினவிபோது உடன் தொழிலதிபர் , 'ஆம். பல முறை. சென்றிருக்கின்றேன். ' என பதிலளித்தார்
அம்மனிதன், 'அப்பயனங்களின்போது எந்த பணத்தை அந்த நாட்டில் உபயோகிக்க அங்கு கொண்டு செல்கின்றீர்கள்?' என வினவியபோது
தொழிலதிபர், "நான் விமான நிலையத்திற்கு சென்றடைந்த, பின்னர் நம்முடைய நாடடு பணத்தை அமெரிக்காவில் பயன்படுத்தக்கூடிய டாலர்களாக மாற்றிக்கொள்கிறேன்." என  பதிலளித்தார்
இப்போது அம்மனிதன் தொழிலதிபரிடம் வெவ்வேறு நாடுகளின் பெயர்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சொல்லி அதே போன்ற கேள்விகளைக் கேட்டபோது, ஒவ்வொரு முறையும் தான் பயனம் செய்ய விழையும் குறிப்பிட்ட அந்த நாட்டின் பணமாக விமான நிலையத்தில் மாற்றிக் கொண்டு எடுத்துச்செல்வேன் அவ்வாறாக மாற்றிய அந்தந்த நாட்டின் பணத்தை அந்தந்த நாட்டில் பயன்படுத்திக்கொள்வேன் என்று பதிலளித்தார்.
இவ்வாறு அந்த மனிதன் ஒவ்வொரு நாடாக தான் பயனம் செய்வது குறித்து கேள்வி கேட்பதை கண்டு அத்தொழிலதிபர் மிகஅதிகஎரிச்சலடைந்தார். தொழிலதிபர்  அந்த மனிதனிடம் “ஏன் திரும்பத் திரும்ப ஒரே கேள்வியைக் கேட்கிறாய்? என்னுடைய மரணத்திற்குப் பிறகு எனது பணத்தை நான் எவ்வாறு என்னுடன் எடுத்துச் செல்ல முடியும் என்பதற்கான தீர்வை மட்டும் எனக்கு நேரடியாக கூறிடுங்களேன்* எனமிக எரிச்சலுடன் கேட்டார்
உடன் அம்மனிதன் சிரித்துக்கொண்டே, “இதைத்தான் நான் உங்களுக்கு புரியவைக்க முயற்சிக்கிறேன்.. நீங்கள்குறிப்பிட்ட நாட்டிற்கு பயணம் செய்யும் துவங்கிடும்போது  நம்முடைய நாட்டின் பணத்தை  அந்தந்த நாட்டின் பணமாக மாற்றுவது போன்று.
 நீங்கள் இறப்பதற்கு முன் உங்களுடைய எல்லாப் பணத்தையும் மேலுலகத்திற்கான நாணயமாக மாற்றிக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் குறிப்பிட்ட நாட்டிற்கு பயனம் செய்திடும்போது அந்த நாட்டின் பணத்தை உடன் எடுத்து செல்வதை போன்ற அதனை மிக எளிதாக எடுத்தச் செல்லமுடியும் என மிக நீண்ட விளக்கமளித்தார்
இவ்வாறான அந்த மனிதரின் விளக்கத்தை கேட்டு அத்தொழிலதிபர் மிக அதிக குழப்பமடைந்து, "நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? மேலுவலகத்திற்கான நாணயம் எது?" என வினவினார்
உடன் அம்மனிதன்  “மேலுலகத்தின் நாணயம் அறம் செய்தல். உங்களுக்கு நல்லொழுக்கத்தைத் தரும் இதுபோன்ற அறப்பணிகளில் உங்கள் பணத்தைப் பயன்படுத்துங்கள். நீங்கள் இறந்த பிறகும் நீங்கள் சம்பாதித்த பணத்தை உங்களுடன் எடுத்துச் செல்ல ஒரே வழி அதுதான். எனக்கூறினார்.
தொழிலதிபர் அந்த மனிதனின் கருத்தை புரிந்து கொண்டார். அவர்  பரிசுபணத்தினை உறுதியளித்தவாறுஅம்மனிதனுக்கு வழங்கினார்  அவரது வாழ்நாள் முழுவதும் பொதுமக்களுக்கும் தொண்டும் ஏழைஎளியவர்களுக்கு சேவை செய்தும் தன்னுடைய அறப்பணிகளை செய்யத்துவங்கினார்.

செவ்வாய், 6 ஜூன், 2023

பொய் சொன்ன வேலைக்காரனுக்கு அக்பர் அளித்த தண்டனை

ஒரு நாள், வேலைக்காரன் ஒருவன் பேரரசர் அக்பரின் படுக்கையறையை சுத்தம் செய்துகொண்டிருக்கும் போது, அவ்வேலைக்காரன் கையிலிருந்து ஒரு குவளை விழுந்து உடைந்துவிட்டது. அது அக்பருக்கு மிகவும் பிடித்தமான குவளையாகும் என்பதால் வேலைக்காரன் பயந்து போனான். அவ்வேலைக்காரன்  உடைந்த குவளையின் எல்லா துண்டுகளையும் சேகரித்து இரகசியமாக வெளியில் கொண்டுசென்று எறிந்துவிட்டுவந்தான். அப்போது அக்பர் தன்னுடைய படுக்கையறைக்கு வந்துசேர்ந்தார் அப்போது, அவ்வறையில் தனக்குப் பிடித்தமான குவளை காணவில்லை என தெரிந்துகொண்டார் . உடன் அக்பர் அவ்வேலைக்காரனை அழைத்து அதைப் பற்றி கேட்டார் .அதனைதொடர்ந்து பயத்தால் வேலைக்காரன் , "நான் அந்த குவளையை சரியாக சுத்தம் செய்வதற்காக என் வீட்டிற்கு எடுத்துச் சென்றேன்" என பொய் சொல்லிவிட்டான். அதனால் அக்பர் அந்த அவ்வேலைக்காரணிடம் அவனுடைய வீட்டிற்கு சென்று அந்த குவளையை உடனடியாக தனது படுக்கைஅறைக்கு எடுத்துக்கொண்டு வரும்படி கட்டளையிட்டார். அவ்வாறு அக்பர் உத்தரவு இட்டதும், தன்னால் உண்மையை மறைக்க முடியாது என தெரிந்து கொண்ட, அவ்வேலைக் காரன் நடந்த அனைத்தையும் அக்பரிடம் கூறி, கைகூப்பி மன்னிப்பு கேட்க ஆரம்பித்தான். தன்னிடம் அவ்வாறு பொய் சொன்ன வேலைக்காரன் மீது அக்பர் அதிக கோபமடைந்தார். அதனால் உடனே அவ்வேலைக்காரனுக்கு மரண தண்டனை விதித்தார். அதனால் மேலும் பயந்து போன அவ்வேலைக் காரன் கைகளிரண்டையை கட்டிக்கொண்டு அக்பரிடம் தன்னை மன்னித்து விடும்படி மன்றாடி கேட்டுக்கொண்டே இருந்தான் ஆனால் அக்பர் அவனுடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. அடுத்த நாள், அக்பர் தனது அரசவையில் இந்த செய்தியை ஒரு விவாதப் பொருளாக ஆக்கி, "உங்களில் யாராவது பொய் சொன்னீர்களா?" என பொதுவவாக வினவினார் அரசவையிலிருந்த அனைத்து  உறுப்பினர்களும் ஒரே குரலில் தாங்கள் வாழ்நாளில் யாரும் பொய்கூறியதே இல்லையென மறுத்துவிட்டனர். அதனால் அக்பர் முதலில் நேரடியாக பீர்பாலிடம் அதைய கேட்டபோது, பீர்பால்  "அரசே, எல்லோரும் சில நேரங்களில் ஏதாவது ஒரு பொய் கண்டிப்பாக கூறிடுவார்கள். அதன்படி நானும் பொய்கூறியிருக்கிறேன். ஆயினும் அந்த பொய்யானது யாருக்கும் தீங்கு செய்யாதது எனில்  பொய் சொல்வதில் எந்தத் தீங்கும் இல்லை என்று நினைக்கிறேன்." என பதிலளித்தார், இதைக் கேட்டு மிகவும் கோபமடைந்த அக்பர் பீர்பாலை அரசவையிலிருந்து உடனடியாக வெளியேறிடுமாறு உத்திரவிட்டார். அக்பரின் உத்திரவின் படி பீர்பாலும் அரசவையிலிருந்து வெளியேறினார், ஆனால் வேலைக்காரனின் மரண தண்டனை குறித்து அவர் கவலைப் பட்டார். எனவே, வேலைக்காரணைக் காப்பாற்றுவதற்கான வழியை யோசிக்க ஆரம்பித்தார். அவவாறு ஆலோசித்தப் பிறகு, அவர் ஒரு பொற்கொல்லர் கடைக்குச் சென்று, தங்கத்தால் நெல் (அரிசியாக அரைக்கப்படாத நெல்) செய்யச் சொன்னார். மறுநாள் காலை பொற்கொல்லரும் பீர்பாலுக்கு அவர்கோரியவாறு தங்கத்தால் செய்யப்பட்ட நெல்லைக் கொடுத்தார். அந்த தங்க நெல்லை எடுத்துக்கொண்டு பீர்பால் அக்பரின் அரசவைக்குச் சென்றார். அரசவையிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகும் கூட பீர்பால் அரசவைக்குள் வருவதற்கான துணிச்சலைக் கண்டு அக்பர் அதிக கோபமடைந்தார். இருந்தபோதிலிரும் பீர்பால் அக்பரிடம் தங்க நெல்லைக் காட்டி, , "அரசே, நான் உங்களிடம் ஒரு முக்கியமான செய்தியொன்றை சொல்ல விரும்புகின்றேன், அதனால்தான் நான் இன்று அரசவைக்குள் உங்களுடைய உத்திரவை மீறி இங்கு வந்தேன். நேற்று மாலை, வீட்டிற்குச் செல்லும் போது, நான் ஒரு துறவியைச் சந்தித்தேன். அவர் இந்த தங்க நெல்லை என்னிடம் கொடுத்து, இதை ஏதாவது விளை நிலத்தில் விதைக்குமாறும் . இதை விதைத்தால் அந்த வயலில் பொன்நெல்லாக விளையும். என்றும் அறிவுரைவழங்கினார் நான் ஒரு வளமான நிலத்தைக் கண்டுபிடித்திருக்கின்றேன். அந்த வயலில்  இதனை விதைக்க எல்லா அரசவை உறுபபினர்களும் நீங்களும் வரவேண்டும் என நான் வேண்டி கேட்டுகொள்கிறேன் இந்த தங்க நெல்லை அவ்வயலில் விதைத்தால் தங்கநெல்லாக விளையும் எனஅத்துறவி சொன்னது உண்மையா இல்லையா என்பதை சரி பார்க்கலாம். ” என மிகநீண்ட விளக்கமளித்தார் அக்பரும்ஒப்புக்கொண்டார்,  அடுத்த நாள் காலைபத்துமணிக்கு அனைத்து அரசவைஉறுப்பினர்களையும் அந்த விளைநிலத்திற்குவந்துசேருமாறு கட்டளையிட்டார். அடுத்த நாள், அனைவரும் வயலிற்கு வந்துசேர்ந்ததும், அக்பர் பீர்பாலிடம் அந்த தங்க நெல்லை வயலில் விதைக்கச் சொன்னார். ஆனால் பீர்பால் மறுத்து, "அரசே இந்ததங்கநெல்லை என்னிடம் கொடுக்கும்போது, பொய் சொல்லாத ஒருவர் விதைத்தால்தான் தங்கநெல்லாக விளையும்  என்று துறவி எனக்கு அறிவுறுத்தினார். அதனால் என்னால் இதை விதைக்க முடியாது. தயவுசெய்து  இதை விதைப்பதற்கு அரசவையில் பொய்சொல்லாத ஒருவருக்கு உத்தரவிடுங்கள்.." எனக்கோரினார்  உடன் தன்னுடைய அரசவை உறுப்பினர்களில் பொய்சொல்லாத ஒருவர் வயலில் அந்த தங்கநெல்லை விதைக்குமாறு கோரினார், யாரும் முன்வரவில்லை. எல்லோரும் ஏதாவது ஒரு முறை பொய் சொல்லியிருப்பார்கள் என்பதை அக்பர் புரிந்து கொண்டார். யாரும் முன்வராத போது, பீர்பால் அந்த தங்கநெல்லை அக்பரின் கைகளில் கொடுத்து, "இங்கு யாரும் பொய்சொல்லாதவர்கள் யாருமேயே இல்லை . அதனால் நீங்கள்தான் இதை விதைக்க வேண்டும்.." என்றார். ஆனால் அக்பர் கூட அந்த தங்கநெல்லை  வயலில் விதைப்பதற்கு  தயங்கி, "நானும் சின்ன வயசுல பொய் சொல்லிஇருக்கின்றேன். அதனால் என்னாலும் இதை விதைக்கமுடியாது" என்றார். இதைக் கேட்ட பீர்பால் சிரித்துக்கொண்டே, "பொற்கொல்லனிடம் இருந்துதான்  இந்த தங்க நெல் எனக்கு கிடைத்தது. உலகில் உள்ளவர்கள் சிலநேரங்களில் பொய் சொல்கிறார்கள் என்பதை உங்களுக்குப் புரிய வைப்பதே எனது நோக்கம். யாருக்கும் தீங்கு செய்யாத பொய் பொய்யன்று" என்றார்.

ஞாயிறு, 28 மே, 2023

வெற்று காகிதம் - முதிய துறவியும் புகழ்பெற்றஅறிஞரும்

 ஒருமுறை, நான்கு வேதங்களிலும் நன்கு தேர்ச்சி பெற்ற ஒரு புகழ்பெற்ற அறிஞர் ஒரு வயதான துறவியிடம் சென்று, "நான் வாழ்க்கையின் உண்மைதன்மையை அறிய விரும்புகிறேன், தயவுசெய்து எனக்கு வழிகாட்டுங்கள்" என்று கோரினார்.
உடன் அந்த வயதான துறவி , "நீங்கள் யார்?" என கேட்டபோது
அறிஞர், "என்னை உங்களுக்குத் தெரியாதா? நான் புனித நூல்கள் போன்ற பலவற்றையும் நன்கு கற்றறிந்தவன் அதனால்  இந்த நகரத்தில் எனக்குப் பெரும் புகழ் உண்டு  நான் பல வேதங்களை கற்றிருந்தாலும் இன்னும் வாழ்க்கையின் உண்மைதன்மையை என்னால்  கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த உண்மைதன்மையைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையில் நான் உங்களிடம் வந்தேன்." என அவர் கூறினார்
முதிய துறவி , "அப்படியா மிக்கநல்லது நீங்கள் உங்களுக்குத் தெரிந்ததை எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொண்டு வருகிறீர்களா, ஏனென்றால் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தவற்றினை திரும்பவும் நான் கற்றுக் கொடுக்கத் தேவையில்லை. உங்களுக்குத் தெரியாத செய்திகளை மட்டுமே நாம் விவாதித்தால் நான் கற்றுக்கொடுத்தால்  மட்டுமே அது உங்களுக்கு நல்லது." என அறிவுரைக்கூறினார்
அதனை தொடர்ந்து அவ்வறிஞர் உடன் தன்னுடைய இருப்பிடத்திறகு திரும்பி வந்து தனக்கு தெரிந்தவற்றை தான் கற்றுக்கொண்டவற்றை எழுதத் தொடங்கினார். அவற்றை முழுமையாக எழுதும்போது மூன்று வருடங்கள் கழிந்தன அவ்வளவு அறிவு அவருக்கு இருந்தது.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவ்வறிஞர் ஆயிரக்கணக்கான பக்கங்கள் நிரப்பப்பட்ட பெரியபையுடன் அம்முதிய துறவியை காண திரும்பவும்சென்றார்.
அவ்வளவு அதிக பக்கங்களின் குவியலைகண்டஅம்முதிய துறவி, "இந்த வயதில் என்னால் இவ்வளவையும் படிக்க முடியாது. இதை இன்னும் சுருக்கிஎழுதிகொண்டுவாருங்கள்" என்றார்.
அவ்வறிஞர் திரும்பி சென்று முன்னர் எழுதியவைகளை சுருக்கமாக எழுதத் தொடங்கினார். அதற்கு மூன்று மாதங்கள் பிடித்தன.
மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவ்வறிஞர் மீண்டும் அம்முதியதுறவியிடம் சென்றார். இம்முறை அவ்வறிஞரிடம் மிகக் குறைவான பக்கங்களே இருந்தன, ஆனால் அவையும் நூறு பக்கங்களின்அளவு இருந்தன.
அவ்வயதான துறவி, "இதுவும் அதிகமாகும். என்னுடைய உடல் பலவீனமாகிவிட்டது. கண்கள் பலவீனமாகிவிட்டன, இவ்வளவு படிக்கக்கூட முடியாது. இவைகளின் சுருக்கமான சாராம்சத்தை மட்டும் என்னிடம் கொண்டு வாருங்கள்." எனக்கூறினார்
அவ்வறிஞர் திரும்பிச் சென்று ஏழு நாட்களுக்குப் பிறகு சில பக்கங்களாகத் தனது அறிவின் சாராம்சத்தை  எழுதி கொண்டுவந்தார்.
அவ்வயதான துறவி அதைக் கண்டு, "உங்களுக்குத் தெரியும் எனக்குமிக வயதாகிவிட்டது, அதிகம் படிக்கமுடியாது.  அதை இன்னும் சுருக்கமாகச் சொல்லுங்கள்" என்றார்.
அதைக் கேட்ட அவ்வறிஞருக்கு, அம்முதியதுறவி என்ன சொல்ல முயல்கின்றார் என்பது புரிந்தது, எனவே அவ்வறிஞர் உடனடியாக வேறொரு அறைக்குச் சென்று ஒரு வெற்றுக் காகிதத்தைக் கொண்டு வந்தார்.
அதைப் பார்த்து முதிய துறவி சிரித்துகொண்டே, "இந்த வெற்றுக் காகிதம் என்றால் நான் வெறுமையாக இருக்கிறேன், முற்றிலும் காலியாக இருக்கிறேன் என்று அர்த்தமாகும்.. இப்போது நீங்கள் புதிய செய்திகளை கருத்துகளை தெரிந்துகொள்ளவும், கற்றுக்கொள்ளவும் தகுதி பெற்றுள்ளீர்கள், ஏனென்றால் இப்போது உங்களுக்கு எதுவும் தெரியாது என்ற அடிப்படையை நீங்கள் புரிந்து கொண்டீர்கள்." என அறிவுரை கூறி தன்னுடைய  கருத்துகளை கூறத்துவங்கினார்


சனி, 20 மே, 2023

அரசனின் ஆணையும் அமைச்சரின் ஆலோசனையும் -

 முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் ஒருமுறை, குறிப்பிட்ட ஒரு நபரின் முகத்தை காலையில் முதன்முதலாக பார்ப்பதால் ஏற்படுகின்ற ஆபத்து ,மோசமானஅன்றைய நிலை ஆகியவற்றினால் மிகப் பிரபலமானார் .அதனால் அவ்வூர் பொதுமக்கள் அனைவரும் காலையில் அக்குறிப்பிட்ட நபரை முதன்முதலில் காண்பதற்கே அஞ்சினர்  அதனை தொடர்ந்த அவ்வூர்  மக்கள் அனைவரும் சேர்ந்து அவரைப் பற்றி அந்நாட்டு அரசரிடம் புகார் செய்தனர்.
ஆயினும் இந்த செய்தியை அந்நாட்டு அரசன்  நம்பவில்லை, எனவே அரசன் அதை தானே சரிபார்க்க முடிவு செய்தார். அதனால் ஒரு நாள், அரசன் அந்த நபரை தனது அரண்மனைக்கு அழைத்து, அவருக்கு தன்னுடைய அரண்மலையில் ஒருநாள் இரவு தங்க இடம் கொடுத்தார்.
அடுத்த நாள் காலையில் எழுந்தவுடன் தான் செய்யவேண்டியபணியை துவங்குவதற்கு முன் அரசன் அந்த நபரைச் சந்திக்க முடிவு செய்து  அரசன் அக்குறிப்பிட்ட நபரின் முகத்தினை முதன்முதலில்ப் பார்த்தார். தொடர்ந்து அவ்வரசன் தன்னுடைய வழக்கமான பணிகளை செய்யத்துவங்கினார்
தற்செயலாக, அன்று கால அட்டவணையின் படி அரசன் தன்னுடைய பல்வேறு பணிகளை உடனடியாக முடிக்கவேண்டியிருந்ததால் அதிகவேலைபளு காரணமாக, அரசனால் அந்த நாள் முழுவதும் சாப்பிட நேரம் கிடைக்கவில்லை. எனவே, அந்த மனிதனின் முகம் உண்மையில் மோசமானது என்ற முடிவுக்கு மன்னர் வந்தார்.
எனவே, அரசன் அன்றை யநாள்முடிவில் அந்த மனிதனுக்கு மரண தண்டனை விதித்தார்.
மறுநாள் அந்நாட்டி்ன் அமைச்சர் ஒருவர் அரசனின் இந்த உத்தரவைப் பற்றி கேள்விப்பட்டு உடனடியாக மன்னரிடம் சென்று, "இந்த நிரபராதிக்கு ஏன் மரண தண்டனை விதிக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
அதற்கு மன்னன், "அமைச்சரே, நான் நேற்று . காலையில் என்னுடைய வழக்கமான அனைத்து பணிகளையும் துவங்குவதற்கு முன்இவரின் முகத்தைப் பார்த்ததனால், ஒரு நாள் முழுவதும் உணவு உண்ணக்கூட முடியவில்லை" என்றார்.
அதற்கு அமைச்சர், "அரசே! அந்த மனிதனின் முகத்தைநீங்கள் முதன் முதலாகப் பார்த்தீர்கள், அதனால் ஒரு நாள் முழுவதும் உங்களாால் உணவு உண்ணமுடியவில்லை, ஆனால் அந்த மனிதனைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். நேற்று காலையில் அந்த நபர் முதன் முதலில் பார்த்தது உங்கள் முகத்தைத்தான், அதனால் அவர் இன்று மரண தண்டனையைப் பெற்றார். இப்போது யாருடைய முகத்தை காண்பது மோசமானது ஆபத்தானது என நீங்களே முடிவு செய்யுங்கள். ." என க்கூறினார்
அமைச்சரின் இந்த விளக்கத்தைக் கேட்ட அரசன், இவ்வாறு சிந்தித்துப் பார்க்காததால் திடுக்கிட்டார்.
தொடர்ந்து அமைச்சர், "அரசே! எந்த ஒரு நபரின் முகத்தினையும் முதன்முதலாக பார்ப்பதும் மேசமானதும் ஆபத்தானதும்  இல்லை, நாம் பார்க்கும் அல்லது நினைக்கும் விதம்தான் அவ்வாறாக இருக்கின்றது. அதனால் தயவு செய்து அவரை விடுவித்து விடுங்கள்" என்ற கோரிக்கைய வைத்தார்.
அரசன்  அமைச்சர்ரி கூறிய செய்தியை புரிந்துகொண்டு உடன் அந்த நபருக்கு விதித்த மரணதண்டனையிலிருந்து அவரைவிடுவித்தார்

ஞாயிறு, 14 மே, 2023

அரசனுக்கு துறவி சலுகை - சிந்தனையில் மாற்றம்

முன்னொரு காலத்தில்ஒரு அரசன் ஒரு நாட்டினை ஆட்சி செய்தான், அவனுடைய அரசாட்சியின்போது நாட்டில் பணத்திற்கும் உணவுப் பொருட்களுக்கும் பஞ்சமில்லை. அவருடைய ஆட்சியின் கீழ் அவரது நாட்டு குடிமக்கள் மிகமகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
அவ்வாறான சூழலில் குறிப்பிட்ட ஒரு வருடத்தில், அவருடைய நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. பயிர்கள் கருகியகாய்ந்து போனதால், போதுமான மகசூல் கிடைக்கததால் விவசாயிகள் வரி செலுத்த முடியவில்லை. இதனால், வருவாய் குறைந்து, கருவூலம் காலியாகத் துவங்கியது.
இதைப் பார்த்த மன்னன் கவலையடைந்தான், மேலும் தன் குடிமக்களுக்கு பஞ்ச அல்லது வறட்சி நிவாரனம் எவ்வாறு வழங்குவது, அரசாங்கச் செலவுகளை எவ்வாறு கையாளுவது என அவ்வரசன் எப்போதும் யோசித்துக் கொண்டிருந்தார்.
வறட்சிமுடிந்த அந்நாட்டின் நிலைமை வழக்கமான சாதாரண நிலைக்கு மாறிவிட்டது, ஆனால் அவ்வரசன்  கவலைப்படுவதை நிறுத்தவில்லை. மீண்டும் இதேபோன்ற பஞ்சம் ஏற்பட்டால், தனது நாட்டினை எவவாறு  நிருவகிப்பது எனவர் எப்போதும் கவலைப்பட்டு கொண்டே இருந்தார். அண்டை நாடுகளுடனான போருக்கான பயம், மந்திரிகளின் சதி என பல கவலைகள் அவரது பசி, தாகம், மறந்த உறக்கமற்ற இரவுகளாகப் அவருக்கு ஆகிவிட்டது. அவர் தனது தற்போது நிலையைக் கண்டு மிக வருத்தமடைந்தார்.
ஒரு நாள்  துறவி ஒருவர்அவரது அரசவைக்கு வந்தார், அரசன் தனது தற்போதைய  பிரச்சினையை அத்துறவியிடம் கூறி, அந்த பிரச்சினையை தீர்வுசெய்வதற்கான தகுந்த  ஆலோசனை கேட்டார்.
துறவி , "அரசனே இந்த அரசாட்சியே உன்னுடைய அனைத்து கவலைகளக்கும் அடிப்படைகாரணமாகும் அதனால் . இந்த அரசாட்சியை உன்னுடைய மகனுக்குக் கொடுப்பதன் மூலம் நீ கவலைதுமின்றி மிக மகிழ்ச்சியுடனஅ வாழமுடியும். .."எனக்கூறினார்
உடன் அவ்வரசன், "ஆனால் ஐயா என் மகனுக்கு ஐந்து வயதுதான் ஆகிறது அவனால் எவ்வாறு அரசாளமுடியும்.." என்றார்.
துறவியானவார், "சரிஅரசனே அவ்வாறாயின்,உன்னுடைய நாட்டின் அரிசாட்சியை என்னிடம் ஒப்படைக்கலாம், உன்னுடைய மன வருத்தத் தையும் கவலைகளையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்." எனக்கூறினார்
அம்மன்னன் உடனே சம்மதித்து தன்னுடைய நாட்டின  அரசாட்சியை அத்துறவியிடம் ஒப்படைத்தார்
. இப்போது, துறவி அவ்வரசனிடம், " மிகவும் நன்று  இப்போது  நீ உயிர்வாழ்வதற்கான வருமானத்திற்கு என்ன செய்வீர்கள்? எவ்வாறு சம்பாதிப்பீர்கள்?"என வினவினார்.
அரசன், "அதனால் என்ன ஐயா நான் இப்போது ஏதாவது வியாபாரம் செய்து பிழைத்து கொள்ளலாம் என திட்டமிடுகின்றேன் ஐயா." என பதில் கூறினார்
உடன் அத்துறவி  "மிகவும் நன்று ஆனால் அந்த வியாபாரத்திற்கு போதுமான பணத்தினை  உன்னால் எவ்வாறு  ஏற்பாடு செய்யமுடியும்? ஏனெனில் இப்போது அரசாட்சி என்னுடையது என்பதால் கருவூலப் பணத்தின் மீது எனக்கு உரிமை உள்ளது. அதை உன்னுடைய வியாபரத்திற்கு கண்டிப்பாக பயன்படுத்த முடியாது", என்றார் துறவி.
அதனை தொடர்ந்து அரசன் "அவ்வாறாயின்  எனக்கு ஏதேனும் ஒரு வேலை கிடைக்குமா என தேடவேண்டும.",என பதிலளித்தார்.
உடன் அத்துறவி "மிகவும்நல்லது. ஆனால் நீ வேலையைச் செய்ய வேண்டும் என்றால், வேறு எங்கும் தேடிசெல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த அரசவையிலேயே நீ வேலை செய்யலாம்", எனபதிலளித்தார் .
அவ்வரசன் மிகவும் ஆர்வமாக, "நான் இந்த அரசவையில் என்ன வேலை செயயவேணடும்?" என்று கேட்டார்.
அதற்கு அத்துறவி சிரித்துக்கொண்டே, "நான் ஒரு துறவி, நான் என் குடிசையில் மட்டுமே தங்குவேன், அரண்மனையில் தங்கி, என் சார்பாக இந்த அரசாட்சியை நீயே நடத்து" என்றார்.
அவ்வரசன் ஏற்றுக்கொண்டு அத்துறவியிடம் வேலை செய்ய ஒப்புக்கொண்டார். அரசன தனது வேலையின் ஒரு பகுதியாக அரசு நிர்வாகத்தை கையாளத் தொடங்கினார். துறவி தன் குடிசைக்குச் சென்றுவிட்டார்
சில நாட்களுக்குப் பிறகு, துறவி மீண்டும் அரசவைக்கு வந்து அரசரைச் சந்தித்து, "இப்போது உங்களுக்கு பசிக்கிறதா , உங்கள் தூக்கம் எவ்வாறு இருக்கிறது?" என்று கேட்டார்.
உடன் அவ்வரசன் "ஐயா நான் இப்போது நிறைய சாப்பிட்டு நன்றாக தூங்குகிறேன்.ஆயினும் முன்பும் நான் இதே வேலையைத்தான் செய்தேன், ஆனால் அப்போது என்னால் சரியாக சாப்பிடவோ தூங்கவோ முடியவில்லை, ஆனால் இப்போது என்னால் அனைத்து செய்ய முடிகின்றது. இந்த மாற்றம் எவ்வாறு ஏற்பட்டது? இது என் புரிதலுக்கு அப்பாற்பட்டது. ", என தூவியியம் சந்தேகம் எழுப்பினார்.
உடன் துறவி சிரித்துக் கொண்டே, “முன்பெல்லாம் நீங்கள் இந்த அரசாட்சி பணியை எனும் உங்கள் மனதில் எப்போதும்  பெரியசுமையாக கருதி சுமந்து கொண்டிருந்தீர்கள்
. ஆனால் அரசாட்சியை என்னிடம் ஒப்படைத்த பிறகு, அதை உங்கள் கடமையாகக் கருதி எல்லா வேலைகளையும் செய்கிறீர்கள்.
கற்றல்:வாழ்க்கையில் எந்த வேலையைச் செய்தாலும், அதை கடமையாகக் கருதி, அதைச் சுமையாகக் கருதாமல் செய்தால் நம்முடைய கவலையிலிருந்து விலகி இருக்க முடியும்.

ஞாயிறு, 7 மே, 2023

சிறிய ஒரே கல்லிற்கு வெவ்வேறு இடங்களின் வெவ்வேறுமதிப்பு

 ஒரு நாள் மகன்ஒருவன்  தன் தந்தையிடம் சென்று, "அப்பா, உயிரின் மதிப்பு என்ன?"
அப்பா சிரித்துக்கொண்டே சொன்னார், "உண்மையில் உன் உயிரின் மதிப்பைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், நான் சொல்வதைச் செய்ய வேண்டும். மகன் ஒப்புக்கொண்டான்
தந்தை ஒரு கல்லை வாங்கி மகனிடம் கொடுத்து, “மகனே, இதை எடு
சாலையோரத்தில் மார்க்கெட்டுக்கு கல், பிறகு சில இடத்தில் உட்கார வேண்டும். யாராவது அதன் விலையைக் கேட்டால், போடுங்கள்
உங்கள் இரண்டு விரல்களை மேலே. நீங்கள் அதை வீட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்."
அந்தக் கல்லைப் பார்த்த மகன் ஏன் இவ்வளவு எளிமையான கல்லை வாங்குவார்கள் என்று நினைத்தான். அப்போதும் அவன் தந்தை சொன்னபடி சந்தைப்பேட்டைக்குச் சென்று அங்கேயே சிறிது நேரம் அமர்ந்திருந்தபோது, ஒரு வயதான பெண் அவனிடம் வந்து, "இந்தக் கல்லின் விலை என்ன?"
பையன் எதுவும் பேசவில்லை, அப்பா சொன்னது போல் இரண்டு விரல்களை உயர்த்தினான். அதைப் பார்த்த அந்த பெண், "சரி.. இந்த கல்லை 200 ரூபாய்க்கு வாங்க ரெடி" என்றாள்.
சிறுவன் தன் தந்தையின் அறிவுறுத்தலின்படி அந்தக் கல்லை விற்கவில்லை, திரும்பி வந்தான். 200 ரூபாய்க்கு வாங்க அந்த பெண் தயாராக இருப்பதாக அவர் மகிழ்ச்சியுடன் தந்தையிடம் கூறினார்.
இப்போது அவனுடைய தந்தை, "இந்த முறை நீங்கள் அருங்காட்சியகத்திற்குச் செல்லுங்கள். அங்கேயும் இந்தக் கல்லின் விலையை யாராவது உங்களிடம் கேட்டால், முன்பு போல் இரண்டு விரலை உயர்த்துங்கள்" என்றார்.
சிறுவன் கல்லுடன் அருங்காட்சியகத்திற்குச் சென்றான். அங்கே ஒருவன் அந்தக் கல்லைப் பார்த்து, “என்ன விலை?” என்று கேட்டான்.
பையன் மறுபடி எதுவும் பேசாமல் "சரி. 20 ஆயிரம். வாங்குறேன்" என்று இரண்டு விரலை மட்டும் போட்டான். , மனிதன் பதிலளித்தான்.
கல்லுக்கு இவ்வளவு மதிப்பு இருக்கும் என்பதை அறிந்த சிறுவன் ஆச்சரியமடைந்தான். மீண்டும் அந்த கல்லை விற்க மறுத்துவிட்டு வீட்டுக்கு வந்தார். தந்தையிடம் எல்லாவற்றையும் சொன்னான்.
இப்போது, இந்த அப்பா சொன்னார், "இப்போது நீங்கள் இந்தக் கல்லை ஒரு விலையுயர்ந்த கல் கடைக்கு எடுத்துச் செல்லுங்கள், அங்கேயும் யாராவது உங்களிடம் அதன் விலையைக் கேட்டால் இரண்டு விரல்களை உயர்த்துங்கள்."
சிறுவன் கல் கடைக்குச் சென்று, கல் கடைக்காரரைப் பார்த்ததும், "இந்தக் கல் உங்களிடம் எப்படி இருக்கிறது. இது மிகவும் அரிதானது, நான் இந்தக் கல்லை வாங்க விரும்புகிறேன். சொல்லுங்கள், நீங்கள் என்ன விலைக்கு விற்கிறீர்கள்?" பையன் எதுவும் பேசாமல் இரண்டு விரல்களை உயர்த்தினான்.
நாயகன் மகிழ்ச்சியுடன், "நிச்சயமாக. 2 லட்சத்திற்கு வாங்குகிறேன்" என்று பதிலளித்தார்.
பையன் மீண்டும் ஆச்சரியப்பட்டான். அவர் மீண்டும் கல்லை விற்காமல் வீட்டிற்கு வந்தார்.
வீட்டை அடைந்ததும் தன் தந்தையிடம், "அப்பா, இந்தக் கல்லுக்கு ஒருவர் 2 லட்சம் கொடுக்கத் தயாராக இருக்கிறார், சிலர் 200 ரூபாய்க்கு மட்டும், மற்றவர் 20 ஆயிரம் கொடுக்கத் தயாராக இருக்கிறார். எப்படி இவ்வளவு வித்தியாசம்?"
தந்தை விளக்கினார், "மகனே, உன் உயிரின் மதிப்பை உனக்குச் சொல்லச் சொன்னாய். இதுவே உன் பதில்.
இந்த கல்லின் இடத்தில் உங்கள் வாழ்க்கையை வைத்து, உங்கள் வாழ்க்கையின் மதிப்பை மதிப்பிடுங்கள். இந்த கல்லின் விலை வெவ்வேறு இடங்களில் வித்தியாசமாக இருந்தது. வாழ்க்கையிலும் அப்படித்தான்.
உங்கள் வாழ்க்கையின் மதிப்பு நீங்கள் உங்களை எங்கு வைக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது."

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...