சனி, 19 ஆகஸ்ட், 2023

இரண்டு கைதிகளை , பாம்பு கடிக்க செய்வதன்மூலம் தூக்குதுதண்டனை நிறைவேற்றுதலை ஆய்வு செய்தல்

 .சில அறிவியல் ஆய்வாளர்கள்  தங்களுடையை  ஒரு பரிசோதனைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு கைதிகளை தேர்ந்தெடுத்தனர், அவர்களுக்கு .
மரணதண்டனைவழங்குவதற்குத் தயாராக இருந்தபோது, அவர்களிடம்  நீங்கள் தூக்கிலிடப்பட மாட்டீர்கள், அதற்கு பதிலாக  விஷப்பாம்பு கடிக்கச்செய்து கொல்லப்படுவீர்கள் என கூறப்பட்டது.
அதன் பிறகு, முதல் கைதியை மரணதண்டனை நிறைவேற்றுவதற்காக ஒரு அறைக்குள் கொண்டு செல்லப்பட்டார், பின்னர் அவர் கண்களை எதை.யும் காணமுடியாதவாறு கருப்புத்துனியாமல் இருகக்கட்டப்பட்டு ஒரு நாற்காலியில் உட்காரவைத்து கைகளையோகால்களையோ அசைக்க முடியாதவாறு கட்டப் பட்டார், பின்னர் அவ்வறையில் விஷப்பாம்பு ஒன்று விடுவிக்கப்பட்டது. சிறிது நேரத்தில், அந்த விஷப்பாம்பு அந்த கைதியை கடித்து, அதன்மூலம் அந்த முதல் கைதி இறந்தார்.
இந்த நிகழ்வினை இரண்டாவது கைதி காணும் படி செய்யப்பட்டது அவ்வரண்டாவது கைதி தனக்கு முன்னால் இதையெல்லாம் பார்த்து மிகவும் பயத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, இரண்டாவது கைதியை அதேஅறையில் அடைத்து நாற்காலியில் உட்காரவைத்து கைகளை.யோ கால்களையோ அசைக்க முடியாதவாறு முதல் கைதியை செய்ததை போன்றே கட்டப்பட்டார் , பின்னர் அந்த கைதியின் கண்களை எதையும் பார்க்கமுடியாதவாறு கருப்புத்துனியால் இருகக்கட்டினர். இந்த முறை, அந்த அறைக்குள் விஷப்பாம்பு விடப்படவில்லை, அதற்கு பதிலாக ஒரு கூர்மையான  ஊசியால் இரண்டுமுறை அந்த கைதியின் கால்களில் குத்தப்பட்டது.
இந்த முறையும் முதல்கைதியை போன்றே இரண்டாவது கைதியும் சில நொடிகளில் இறந்தார். அதைக் கண்டு அறிவியல் ஆய்வாளர்கள் ஆச்சரியப்பட்டனர். இரண்டாவது கைதியின் உடலைப் பரிசோதனை செய்தனர் முதல் கைதியின் உடலில் இருந்ததைப் போன்றே இரண்டாவது கைதியின் உடலிலும் பாம்பு விஷத்திற்கு நிகரான விஷம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
   இரண்டாவது கைதியின் உயிரை பறித்த இந்த விஷம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து  ஆய்வு நடத்தப்பட்டது. முதல் கைதியை பாம்பு கடிக்கச்செய்து இறந்ததை தன்னுடைய கணகளால் கண்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் கூர்மையான  ஊசியால் மட்டும் இரண்டுமுறை குத்தப்பட்ட போதும் ஆனால் அதனை அவரது கண்களால் காணமுடியாதவாறு செய்யப்பட்டதால் தன்னை முதல் கைதியை போன்றே விஷப்பாம்புதான் கடித்தது என்ற எதிர்மறை எண்ணத்தால் அவரது உடலே விஷத்தினை உற்பத்தி செய்துள்ளது என்ற உண்மை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பரிசோதனையில் இருந்து.நாம்  நமது ஒவ்வொரு செயலிலும்  நேர்மறையாக இருக்க வேண்டும்என  நாம் அறிந்து கொள்ளலாம்.
ஏனென்றால், மனதில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகினால், அது நம் உடலில் விஷம் போன்ற ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது  மேலும் நம்முடைய உடலில் 75% நோய்க்கான மூலக் காரணங்கூட எதிர்மறை சிந்தனையால் மட்டுமே உருவாகின்றது.
இன்றைய உலகில் மனிதன் தன் எதிர்மறை எண்ணங்களால் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறான். எனவே,நம்முடைய சிந்தனையை எப்போதும் நேர்மறையாக வைத்திருக்க பழகிடுக.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...