ஞாயிறு, 26 டிசம்பர், 2021

பொறாமை கொண்ட கிராமத்தின் ஒரு தையல் கடைக்காரர்


ஒரு கிராமத்தில் ஒரேயொரு தையல்கடைகாரர் இருந்தார், அந்த கிராமத்தில்அவர் ஒருவர்மட்டுமே தையல் பணிசெய்ததால் அந்த கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரும் தங்களுடைய துனிகளை அவர் ஒருவரிடம் மட்டுமே தைத்து கொண்டனர் அதனால் . தங்களுடைய துனிகளை தைப்பதற்காக ந்த தையல்கடைகாரர்எவ்வளவு பணம் கேட்டாலும் வேறுவழியின்றி அந்த தொகையை கொடுத்து தங்களுடைய துனிகளை தைத்திடும் பணியை செய்து முடித்து கொண்டனர் அதனால் அந்த தையல்கடைகாரர் ஏராளமாக சம்பாதித்தார் கிராம மக்கள்அனைவரும் தன்னிடம் மட்டுமே தங்களுடைய துனிகளை தைக்க வருவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை அறிந்து கொண்டார், அதனால் துணி தைப்பது தொடர்பாக யாராவது அவரிடம் புகார் கூறினால், அவர் அதிக திமிருடன் நடந்து கொள்வார், அவர்களிடம் அதிக வாக்குவாதத்தில் ஈடுபடுவார். அதனால் அந்த கிரமாத்தில் வாழும் பொது மக்கள் அனைவரும் அவர் மீது அதிக கோபமடைந்தனர், ஆனாலும் வேறு வழியில்லாததால் அனவரும் தங்களுடைய துனிகளை தைப்பதற்காக அவரிடம செல்ல வேண்டியிருந்தது. இந்த சூழலில் ஒரு நாள் ஏழைப் பெண் ஒருவர்தன் குழந்தையுடன் அந்த கிராமத்திற்கு வந்து வாழத் தொடங்கினார். ந்தபெண்ணிற்கு தையல் பணி தெரியும். அதனால், ந்த தையல்கடைகாரரின் கடையில் தனக்கு துனி தைத்திடுவதற்கான பணியை கொடுத்து உதவிடுமாறு அந்த பெண் கோரியபோது அந்த தையல்கடைகாரர் இங்கு தையல் வேலை எதுவும் இல்லை என மறுத்து அந்த பெண்ணை விரட்டினார் . வேறு வழியில்லாததால், அந்த பெண் தன்னிடம் கையிருப்பில் இருந்த சிறிதளவு பணத்தில் தையல் இயந்திரம் ஒன்றினை வாங்கி அந்தகிராமத்தின் ஓரமாக இருந்த ஒருவீட்டின் ஒரு சிறிய அறையை வாடகைக்கு ஏற்பாடு செய்து அந்த கிராமத்தில் தன்னுடைய தையல் பணியை செய்ய ஆரம்பித்தார். ந்தபெண் மனியின் தையல் நன்றாக இருந்தது, மேலும் அந்த பெண் அனைவர மென்மையாகவும் மிக மரியாதையுடனும் பேசுவதுடன் நட்பாகவும் இருந்து வந்தததால். அந்த கிராமத்துமக்கள் ஒவ்வொருவராக அந்த பெண்மனியிடம் தங்கள் துணிகளை தைத்துக்கொள்வதற்காக வர ஆரம்பித்தனர். அந்த பெண்மனியினுடைய தையல் பணி மிகவேகமாக வளர ஆரம்பித்தது, மிகக்குறுகிய காலத்தில், அந்த கிராமத்தில் உள்ள அனைவரும் அந்தப் பெண்ணிடம் தங்களுடைய துனிகளை தைத்திடும் பணிக்காகசெல்லத் தொடங்கினர் ஏற்கனவே இருந்த தையல் கடைக்கு யாரும் செல்வதில்லை வாடிக்கையாளர்கள் யாரும் வராததால், அந்த கிராமத்தில் ஏற்கனவே ருந்த தையல் கடையின் வருமானம் நின்று போனது. அதனால் அந்த கிராமத்திற்கு தையல்பணிககாக வந்த அந்தப் பெண்ணை காணும் போதெல்லாம் பொறாமையும் அதிககோபமும் அந்த தையல்கடைகாரருக்கு வந்துவிடும். ஒரு நாள் ஏற்கனவை தையல்கடைவைத்திருந்த தையல்கடைகாரரின் மனைவி புதியதாக தையல்கடை வைத்திருந்த பெண்ணிடம் சென்று, "நீ வந்த பிறகு என் கணவரின் கடைக்கு துணி தைக்க யாரும் வருவதில்லை. இந்த சிறிய கிராமத்தில் இரண்டு தையல்காரர்கள் இருந்தால் நன்றாக சம்பாதிக்க முடியாது. நீங்கள் சம்மதித்தால் நான் . உங்கள் கடையை நீங்கள் கூறும் விலைக்கு வாங்கிகொள்கிறேன்." எனக்கூறினார் புதிய தையல்கடைகார பெண்ணும் தன்னுடைய கடையை விற்க ஒப்புக்கொண்டார். அந்த புதிய தையல் கடைக்கு ஐம்பதாயிரத்திற்கு விற்பதற்கு இருவரும் ஏற்றுகொண்டு கையோடு எடுத்துக்கொண்டு சென்ற பணத்தினை உடன் அந்தபுதிய தையல்கடை வைத்திருந்த பெண்ணிடம் கொடுத்ததால் ன்று மாலையே அந்த பெண் தன்னுடைய குழந்தையுடன் அந்த கிராமத்தை விட்டு வெளியேறினார்.

யினும் பொறாமையும் கோபமும் கொண்ட தையல் கடைகாரர், அன்று இரவே அந்த பெண்ணின் தையல் கடையை தீ வைத்து எரித்தார். தையல்கடை எரிய ஆரம்பித்து, அனைத்தும் சாம்பலாயின. இதையறிந்த தையல்கடைகாரரின் மனைவி , " அந்த புதிய தையல்கடையை என்ன செய்தீர்கள்! ந்த புதிய தையல்கடை பெண்மனியை சந்தித்து இந்த கிராமத்தை விட்டே செல்லுமாறு ஒப்பந்தம் ஒன்றினை செய்தேன். அதற்கு நட்டஈடாக ரூபாய் ஐம்பதாயிரத்தினை அந்த தையல்கடைகார பெண்ணிற்கு கொடுத்துவிட்டேன் அந்த பெண்ணும் அந்த தையல் கடையை நமக்கு கொடுத்துவிட்டு இன்று மாலை இந்த ஊரை விட்டு வெளியேறச் சொன்னேன். அவளும் ஒப்புக்கொண்டு இந்த கிராமத்தினை விட்டு வெளியே சென்று விட்டாரே உங்கள் சொந்த கடைக்கு நீங்களே தீ வைத்து எரித்து விட்டீர்கள." எனக்கூறினாள் அதைக் கேட்ட தையல் கடைகாரர் தன் தவறை உணர்ந்தார் ஆனால் இப்போது அவரால் ஒன்றும் செய்ய முடியாத நிலையாகிவிட்டது

நீதி.ந்தவொரு செயலையும் செய்வதற்குமுன் தன்னுடைய உறவினர்களுடன் கலந்து உரையாடிய பின் முடிவுசெய்து அந்த செயலை செயற்படுத்திடுக



சனி, 18 டிசம்பர், 2021

நிறுவனத்தின் முகப்பு அறிவிப்புபலகையின் இருந்த செய்தி

 ஒரு நாள் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலக ஊழியர்களும் தங்களுடைய அலுவலகத்திற்குள் சென்றுகொண்டிருந்தபோது, அலுவலக வாயிலின் முகப்பில் " நேற்று உங்களுடன் பணிபுரியும் ஊழியர் ஒருவர் இறந்துவிட்டார், அவர் இந்நிறுவனத்தில் உங்களுடைய முன்னேற்றத்தையும் இந்த நிறுவனத்தின் வளர்ச்சியையும் தடுப்பதில் முதன்மையானவர். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் அலுவலகத்திலுள்ள கருத்தரங்கு மண்டபத்தில் இன்று காலை சரியாக 11 மணிக்கு அன்னாருக்கு இறுதி நினைவு அஞ்சலி கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்னாரின் இறுதி அஞ்சலி கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்வீர்கள் என எதிர்பார்க்கப் படுகிறது” என்று எழுதப்பட்ட செய்தியுடன் அறிவிப்பு ஒன்று ஒட்டப்பட்டிருந்ததை கண்டனர். .முதலில் அனைவரும் தங்களுடன் பணிபுரியும் சக ஊழியர் ஒருவரின் மரணச் செய்தியை கண்டு மிகவும் வருத்தப்பட்டனர், ஆனால் சிறிது நேரம் கழித்து அவர்கள் அனைவருக்கும் 'நம்மோடு பணிபுரியும் ஊழியர் ஆனால் நம்மனைவரின் முன்னேற்றத்தையும் தடுத்திட முனைகின்ற அந்த நபர் யார்? எல்லாவற்றிற்கும் மேலாக, நம்முடை இந்த நிறுவனத்தின் முன்னேற்றத்தையும் தடுக்கின்ற அந்த ஊழியர் யார்?’ என அறிந்துகொள்வதில் மிகவும் அதிக ஆர்வம் எழத் தொடங்கியது . அன்று காலை சரியாக, 11 மணிக்கு ஊழியர்கள் அனைவரும் தங்களுடைய நிறுவனத்தின் கருத்தரங்கு மண்டபத்திற்கு ஒவ்வொருவராக வரத்து துவங்கினர், ஊழியர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால், கருத்தரங்கு மண்டபத்தில் மக்கள் நடமாட்டமும் அதிகரித்தது ." நிறுவனத்தில் எனது முன்னேற்றத்தையும் இந்த நிறுவனத்தின் முன்னேற்றத்தினையும் தடுப்பதில் முனைப்பாக இருந்த அந்த நபர் இறந்து விட்டது ஒருவகையில் நல்லதுதான் " என்ற ஒரே செய்திதான் அவ்வூழியர்களின் அனைவருடைய மனதிலும் ஓடிக் கொண்டிருந்தது இறுதி நினைவு அஞ்சலி கூட்டத்திற்கு ஒவ்வொருவராக வரஆரம்பித்தவுடன் ஆர்வமுள்ள ஊழியர்கள் ஒவ்வொருவராக இறந்த அந்த ஊழியர் யார் என காண்பதற்காக அவ்வூழியரை வைத்திருந்த சவப்பெட்டியை நெருங்கத் தொடங்கினர்,ஆனால் அதனை ஒவ்வொருவராக மட்டுமே பார்க்கமுடியும் என்பதால் அலுவலக ஊழியர்கள் வரிசையாக ஒவ்வொருவராக சென்று பாரக்கதுவங்கினர் ஆயினும் அந்த நிறுவனத்தின் அலுவலக ஊழியர் ஒவ்வொருவரும் அந்த சவப்பெட்டியின் உள்ளே பார்த்தவுடன் , அதிர்ச்சியில் ஒவ்வொருவரும் திகைத்து அசையாது நின்றுவிட்டனர். அதாவது அந்த சவப்பெட்டியில் உள்பகுதியில் முகம்பார்த்திடும் கண்ணாடி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதனால் யாரொருவரும் அதனுள் பார்த்தாலும் அவரது முகமே அந்த கண்ணாடியில் தெரியும் அதனால் சவப்பெட்டியில் இறந்த நபர் யார் என பார்த்த ஊழியர் ஒவ்வொருவரும் அதில் தன்னுடைய முகத்தை கண்டதும் அதிர்ச்சியில் திகைத்து நின்றுவிட்டனர்


மேலும் "உங்கள் முன்னேற்றத்திற்கும் இந்த நிறுவனத்தின் வளரச்சிக்கும் தடையாக இருப்பவர் , நீங்கள் ஒருவர்தான். உங்களுடைைய வாழ்க்கையை வெற்றிகரமாக உருவாக்கக்கூடியவர் நீங்கள் ஒருவர்மட்டுமே. உங்கள் மகிழ்ச்சி, உங்கள் வெற்றி ஆகியவற்றினை பாதிக்கக்கூடிய நபர் நீங்கள் ஒருவர் மட்டுமே. உங்களுடைய வாழ்க்கையின் வெற்றிக்காக உதவக்கூடிய ஒரே நபர் நீங்கள் மட்டும்தான். நீங்கள் வேறுநிறுவன்த்திற்கு மாறிசென்றாலும்அல்லது உங்கள் நிறுவனத்தின் முதலாளி மாறினாலும், உங்கள் நண்பர்கள் மாறினாலும் வெற்றிகரமான உங்கள் வாழ்க்கை மட்டும் மாறாது,, ஆனால் நீங்கள் "உங்களை" மாற்றிகொண்டு வெற்றிகரமாக உழைப்பதற்காக முயற்சி செய்திடும்போது உங்கள் வாழ்க்கை மாறுகிறது. உங்கள் சொந்த நம்பிக்கைகளின் வரம்புகளை நீங்கள் கடக்கும்போது, உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு என்பதை நீங்கள் புரிந்துகொண்டால், உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக மாறுகிறது." என்ற குறிப்பு அங்குள்ள கண்ணாடியில் எழுதி ஒட்டப்பட்டிருந்தது. அந்த கண்ணாடியில் தங்களுடைய முகத்தினையும் இந்த செய்திகுறிப்பினையும் கண்டு அனைவரின் உள்ளத்தையும் அந்த செய்தியானது உலுக்கியதால் ஊழியர்கள் அனைவரும் திகைத்து நின்றுவிட்டனர் ஆம் நம்முடைய வாழ்க்கையின் வெற்றிக்கும் தோல்விக்கும் நாம் மட்டுமே பொறுப்பு 

வெள்ளி, 10 டிசம்பர், 2021

குறிப்பிட்டபணிக்கு தகுதியான மனிதன் ஒருவனைத் தேடுதல்

 


முன்னொருகாலத்தில் ஒரு கிராமத்தில் பணக்காரர் ஒருர் வாழ்ந்துவந்தார். அவர் அந்தகிராமத்தின் மையத்தில் புதியதாக ஒரு பெரிய கோவிலைக் கட்டினார், அதனால், அந்த கிராமத்தை சுற்றிலுமிருந்து ஏராளமான பொதுமக்கள் அந்த கோயிலுக்கு வந்து வழிபடத் தொடங்கினர். கோயிலின் பிரமாண்டத்தைப் பார்த்து பொதுமக்கள் அனைவரும்" அந்த கயில் மிகவும்அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கின்றது "என போற்றி புகழ்பாடத் துவங்கினார்கள் அதனைதொடர்ந்து காலப்போக்கில் அந்த கோவிலானது மிகவும் பிரபலமடைந்தது. அதனால் தொலைதூரத்தில் இருந்த மக்கள்கூட அந்த கோயிலுக்கு வந்து வழிபடத் தொடங்கினர், அதன் அழகை ரசித்து பரவசமடைந்தர். அந்த கோவிலை காண்பதற்காக வருகின்ற ுமக்களின் எண்ணிக்கையானது நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருவதைக் கண்டு, அந்த கோயிலை உருவாக்கிய செல்வந்தர்அந்த கோவிுக்கு வருகின்ற பொதுமக்கள் அனைவருக்கும் தேவையான உணவுவழங்கிடுமாறும் வெகுதூரத்தில் இருந்து பொதுமக்கள் அந்த கோவிலுக்கு வருவதால் அவர்கள் தங்குவதற்கு நல்ல வசதியான விடுதியினையும் ஏற்பாட செய்தார். வ்வாறான சூழலில் அந்த செல்வநதருக்கு கோவிலில் இவ்வாறான அனைத்து பணிகளையும் ஒருங்கிணைது கவனித்துகொள்ளவும் இந்த பணிகளில் பிரச்சினைஎதுவுமில்லாமலும் தொய்வில்லாமலும் தொடர்ந்து நடைபெறுவதை கண்கானித்து நிருவகிப்பதற்கு பொருத்தமான நபர் ஒருவர் இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணினார், அதனால் அவர் கோவிலுக்கு வெளியே 'இந்த கோவிலை நிருவகிப்பதற்கு ஒரு நிர்வாகி தேவை’. என்ற அறிவிப்பு ஒன்றினை எழுதி வைத்தார் - உடன் இந்த அறிவிப்பினை பார்த்ததும் இந்த கோவிலின் நிர்வாகி எனும் பணி கிடைத்தால் சம்பளமும் கூடுதலாக இருக்கும் பணியும் எளிதானதாக இருக்கும் என்பதால் அந்த செல்வந்தரிடம் ஏராளமானவர்கள் அந்த பணியை தாம் செய்ய தயாராக இருப்பதாக கூற ஆரம்பித்தனர். . ஆனால் அந்த செல்வந்தர் ஒவ்வொருரையும் நேர்காணல் செய்த பிறகு "இந்த பணிக்கு எனக்கு ஒரு தகுதியான நபர் தேவை, அவரால்தான் இந்த கோவிலை ஒழுங்காக நிர்வகிக்க முடியும். வர் அவ்வாறான நபர் அன்று" என மனதிற்குள் ஒப்படுசெய்து அவர்கள் அனைவரையும் அந்த பணிக்கு பொருத்தமானவர்களாக இல்லையெனதிருப்பி அனுப்பி கொண்டேயிருந்தார், அதனால் நேர்காணலுக்கு சென்று திரும்பிய அனைவரும்ந்த செல்ந்தரை முட்டாள் என்றும் அல்லது பைத்தியம் என்றும் அழைத்தனர், ஆனால் அவர் யாருடைய தூற்றுதலையும் கண்டுகொள்ளவில்லை,தொடர்ந்து அந்த கோவிலை நிர்வகிக்க பொருத்தமான நபரை தேடிக்கொண்டேயிருந்தார். அதன்பிறகு அந்த செல்வந்தர் தினமும் காலையில் தனது வீட்டின் மேல்மாடியில் அமர்ந்துகொண்டு கோவிலுக்கு வருபவர்களை கவனமாகப் பார்த்துக் கொண்டேயிருப்பார். ஒரு நாள் மிகவும் கிழிந்த அழுக்கான ஆடையை அணிந்திருந்த மிகவும் ஏழை ஒருவன் கோவிலுக்குள் நுழைவதைக் கண்டார். பின்னர் அந்த ஏழை மனிதன் கோவிலை விட்டு வெளியே திரும்பிசெல்வதையும் பார்த்து கொண்டேயிருந்த அந்த செல்வந்தர்ந்த ஏழையை அழைத்து, ‘இந்தக் கோயிலை நிருவகிப்பதற்கான பணியை உன்னால் செய்யமுடியுமா?என வினவினார். உடன் அந்த ஏழை, அவ்வாறு செல்வந்தேர் தன்னிடம் வினவியதைக் கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு, கைகூப்பி, “ஐயா நான் மிகவும் ஏழை, மேலும்நான் நன்றாக எழுதப்படிக்கக்கூட தெரியாதவன். என்னால் இவ்வளவு பெரிய கோவிலை எவ்வாறுிருவகிக்க முடியும்.." என பதில் கூறியதை தொடர்ந்து செல்வந்தர் சிரித்துக்கொண்டே, “எந்தவொரு கல்விகற்ற மனிதனும் இந்தக் கோயிலை நிர்வகிப்பதற்கு தகுதியானவனாக எனக்கு தெரியவில்லை. இந்த கோவிலின் நிர்வாகத்தை உன்னைபோன்ற தகுதியான ஒருவரிடம ஒப்படைக்க விரும்புகிறேன்” என்றார். பணக்காரனின் இவ்வாறான சொற்களைக் கேட்டு அந்த ஏழை மனிதன் மிகவும் குழப்பமடைந்து, “ஆனால், எல்லோரையும்விட என்னை ஏன் தகுதியானவனாகக் கருதுகின்றீர்கள்?” என்ற மீண்டும் வினவினார். அதற்கு செல்வந்தர், “ந்த பணிக்கு . நீங்கள்தான் தகுதியான நபர் என்பதை சற்றுமுன்னரதான் உங்களுடைய செயலை கண்டு நான் அறிந்துகொண்டேன். அதாவது இந்த கோயிலுக்குள் செல்லும் நடைபாதையில் ஒரு கருங்கல்லைப் புதைத்து வைத்து பொதுமக்கள் அனைவரும் எவ்வாறு செல்கின்றனர் என பல நாட்களாக கவனித்துவந்தேன். இந்த கோவிலுக்குள் நுழையும் பலரும் அந்த கருங்கல்லில் கால் தடுக்கி தடுமாறி விழுந்ததையும், அல்லது அதனை தாண்டி செல்வதையும் பல நாட்களாக நான் பார்த்து வருகிறேன் ஆனால் மற்றவர்கள் யாரும் அந்த கருங்கல்ில் தடுக்கிவிழாமல் தடுத்திடுவதற்காக அதனை அங்கிருந்து அகற்றிடவேண்டுமென எவரும் நினைக்கவில்லை. ஆனால் நீங்கள் மட்டும் அந்த கருங்கல்லால் தடுக்கி தடுமாறவும் இல்லை அதனை தாண்டி செல்லவும் இல்லை அதற்கு பதிலாக நீங்கள் மேலும் வேறுயாரும் அந்கருங்கல்லினால் பாதிக்ககூடாது என அதை அங்கிருந்து அகற்ற நினைத்தீர்கள். அதற்காக நீங்கள் அருகிலிருந்த வீட்டில் மண்வெட்டிஒன்றினை வாங்கி அந்த மண்வெட்டியின் மூலம் அந்த கல்லினை சுற்றி பள்ளம் தோண்டி அந்த கல்லை அகற்றியதோடு மட்டுமல்லாமல் அவ்வாறு தோண்டிய பள்ளத்தை சமன் செய்ததைக் கண்டேன். அதனால் நீங்கள்தான் பொருத்தமானவர் " என பதில் கூறியதைதைக் கேட்ட ஏழை, "நான் பெரிய பணி எதுவும் செய்யத்தெரியாதவன், பிறரைப் பற்றி சிந்திப்பதும், மற்றவர்கள் செல்லும் வழியில் குறுக்கிடுகின்ற இடையூறுகளை அகற்றுவதும் ஒவ்வொரு மனிதனின் கடமை. அதன்படி நான் என் கடமையை மட்டுமே செய்தேன்" என்றார். தொடர்ந்துபணக்காரன் சிரித்துக் கொண்டே, "ங்களுடைய கடமையை அறிந்து அதைச் செய்பவர்கள மட்டுமே இந்த கோவிலை நிருவகிக்கும் பணிக்கு தகுதியானவர்களாவர்.அதனால் நீங்கள் இந்த பணியை இன்றே ஏற்றுககொள்ளுங்கள்" என்றார். இவ்வாறு கூறி அந்த ஏழையிடம் அந்த பெரிய கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார் பணக்காரர்.

நீதி: யாரும் நம்மைப்பார்த்தாலும் பார்க்காவிட்டாலும், ம் நம்முடை கடமையை செய்வதை நாம் மறந்துவிடக் கூடாது.

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...