வெள்ளி, 7 மே, 2010

மூச்சுக்காற்றில் ஆல்கஹால் உள்ளதாவென ஒரு ஆய்வு



மூச்சுக்காற்றில் ஆல்கஹால் உள்ளதாவென ஒரு ஆய்வு
  மொடாக்குடிகாரர்கள் குடித்து முடித்தவுடன் பல்வேறுவகையான வாசனைப்பொருட்களை வாயிலிட்டு மென்று தாங்கள் ஆல்சஹாலை குடிக்கவேயில்லை என்று தங்களின் வாயிலிருந்து காற்றினை ஊதிசாதிப்பார்கள் அல்லது சத்தியம் செய்வார்கள் இவர்கள் குடித்தார்களா எவ்வளவு குடித்துள்ளளார்கள் என்பதுபோன்ற விவரங்களை அறிந்துகொள்வதுஇவ்வாறான நிலையில் சிறிது சிரமம் இருக்கும் இதனை போக்குவதற்காக பின்வரும் கருவிகள் பயன்படுகின்றன,இந்த கருவிகள் எவ்வாறு செயல்படுகின்றது என்றும் இதன் அடிப்படைகருத்தமைவை பற்றியும் இப்போது காண்போம்,
இவை குடிகாரர்களின் உடலில் ஓடும் இரத்தித்தில் எவ்வளவு ஆல்கஹால் உள்ளது என LCD திரையில் அலகுகளாக காண்பிக்கும், இதில் 0.20என காண்பித்தால் 100 மிலி இரத்தத்தில் 20மிலி ஆல்கஹால் உள்ளது என பொருள்படும் இது வழக்கமாக நாம் அனுமதிக்கும் அளவைவிட மிககூடுதலாகும் இவ்வாறு அறிந்தவுடன்  அளவிற்கதிகமாக குடித்துட்டு வண்டியை ஓட்டிடும்  ஓட்டுநரை தொடர்ந்து வண்டியை ஓட்டவேண்டாம் என தடுத்து நிறுத்தவேண்டும்,
  நாம் அருந்தும் காபி ,டீ, பால் உண்ணும் காய்கனி போன்ற உனவுப்பொருட்கள் உணவுக்குழாய் வழியாக உடலுக்குள் செல்லும்போதுஇவைகள் செரிமாணம் ஆகி சத்துப்பொருட்கள் மட்டும் இரத்தத்துடன் கலந்துவிடுகின்றுது பின்னர் இந்த சத்துக்கள் உடலின் இயக்கத்திற்குத்தேவையான சக்தியையும் உடல்வளர்ச்சிக்குத்தேவையான ஊட்டத்தையும் வழங்குகின்றது, ஆனால் ஆல்கஹால் ஆனது மற்ற சத்துப்பொருட்களை போன்று செரிமானம் ஆகாமல்  இரத்தத்தில் மட்டும் நேரடியாக கலந்து விடுகின்றது, வழக்கமாக உடலில் இரத்தமானது நுரையீரல் பகுதிக்கு வந்துசுத்தமான ஆக்ஜிஜனை மட்டும் எடுத்துக்கொண்டு  கழிவுகளைகாற்றுடன் கலந்துவிட்டு செல்கின்றது இந்நிலையில் இரத்தத்துடன் உள்ள ஆல்கஹால் எளிதில் ஆவியாகும் தன்மையுடனிருப்பதால் இதுவும் காற்றுடன் கலந்து வெளியேறுகின்றது,இவ்வாறு வெளியேறும் காற்றை இந்த கருவி ஆய்வுசெய்து 1மிலி இரத்தத்தில் எத்தனை மிலி ஆல்கஹால் உள்ளது எனக்காட்டி கொடுத்துவிடுகின்றது,
இந்த ஆய்விற்காக 1,வெட்கெமிஸ்ட்ரி,2போட்டோ ஸ்பெக்ரோஸ்கோபி 3,இன்ப்ராரெட் ஸ்பெக்ட்ரோஸ்கிராபி போன்ற பல தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டாலும் பின்வரும் இரன்டு தொழில்நுட்பத்தை மட்டும் இப்போது காண்போம்,
பியூல் செல் ஆய்வு  இது பயன்படுத்த எளிதானது குறைந்த விலையே உடையது,எந்த நிலையிலும் செயல்படக்கூடியது கையடக்கமானது ஆகியகாரணங்களினால் இதனை அனைவரும் ஆதரிக்கின்றனர்,
  இதில் மூச்சுக்காற்று குறிப்பிட்ட அழுத்தத்தில் உள்செலுத்துவதற்காக  தரமான பிளாஸ்டிக் குழாய் பயன்படுகின்றது,இதன்வழியே பயனிக்கும் மூச்சுக்£ற்று பின்னர் பியூல் செல்லுக்கு சென்றடைகின்றது  இது இரண்டு பிளாட்டின எலெக்ராடு களுக்கிடையில் போரஸ்லேயரால் கலவையாக உருவாக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது, மூச்சுக்காற்று இந்த கலவையின்¢வழியே செலுத்தப்படும்போதுஅங்குவைத்துள்ள போரஸ்லேயருடன் கலந்து ஆல்கஹால்மட்டும் உட்கவரப்பட்டு அஸிட்டடிக் அமிலமாக உருவாகின்றது பின்னர் இந்த அஸிட்டிக் அமிலம் பிளாட்டின எலெக்ட்ராடால் உட்கவரப்பட்டு புரோட்டான் மற்றும் எலெக்ட்ரான் என பிரிக்கப்படுகின்றது எலெக்ட்ரான் மட்டும்இந்த எலெக்ட்ராடின் தொடர்ச்சியான கம்பிச்சுருள்வழியே பயனித்து இறுதியாக மைக்ரோ சிப்பால்ஆன  செயலகத்திற்கு சென்றடைகின்றது அங்கு செயலகமானது இந்த எலெக்ட்ரான்களை மின்தூண்டலாக உருமாற்றுகின்றது அதன்பிறகு இந்த மின்தூண்டல் ஆனது  LCD பிரிதிபலிப்பு பகுதியில் அலுகுகளாக பிரிதிபலிக்கச் செய்யப்படுகின்றது
மற்ற அங்ககபொருட்கள் காற்றில்உள்ள ஆக்ஜிஜனுடன் சேர்ந்து தண்ணீராக உருமாற்றப்பட்டு நீராவியாக வெளியேற்றப்படுகின்றது,அளவிற்குஅதிகமான ஆல்கஹால் குடித்திருந்தால் அதிகமான அளவிற்கு அசிட்டிக்ஆக்ஸிட் உற்பத்தியாகி அதிகஅளவு பரோட்டான்களும் எலெக்ட்ரான்களும் உருவாகின்றன தொடர்ச்சியாக அதிகஅளவிற்கு மின்தூண்டுதலும் ஏற்படுகின்றது,
 இன்டக்சினேஷன்  ஆய்வு: இதில் அகச்சிவப்புக்கதிர் பயன்படுத்தப்படுகின்றது, இந்த அகல்கற்றை அகச்சிவப்பு கதிர் அதற்கான பிரத்யோக விளக்கின் மூலம் உற்பத்தி செய்யப்பபட்டு மூச்சுக்காற்று செல்லும் குழாய்வழியே பாய்ந்தோடும்படி செலுத்தப்படுகின்றது, இங்கு மூச்சுக்காற்றில் உள்ள ஒவ்வொரு மூலக்கூறும் ஒவ்வொருமாதிரி அசைந்தாடுவதால் இவைகளின் அலைநீளம் மாறுபடுகின்றது, இந்த அகச்சிவப்புக்கதிர் காற்றின் மூலக்கூற்றின் அசைவுதன்மையை சுட்டிக்காட்டுகின்றது இவற்றில் எத்தனாலின் அலைநீளம்மட்டும் சிறிது மாறுபட்டு இருக்கும இந்த அலைநீளங்கள் அளந்தறியப்பட்டு பதிவு செய்யப்படுகின்றதுஇவைகளில் அசைந்தாடும்  ஆல்கஹாலின்  மூலக்கூற்றின் அலைநீளம் மட்டும் தனியே அடையாளம் காட்டுகின்றது பின்னர் குழாயின் முடிவில் உள்ள வடிகட்டியானது குறிப்பிட்ட அலைநீளமுள்ள ஆல்கஹால் மூலக்கூறுகளை மட்டும் பிரித்து அனுப்புகின்றது இந்தஎத்தனால் மூலக்கூறு மட்டும் மின்னூட்டமாக உருமாற்றமடைகின்றது பின்னர் இந்த மின்னூட்டம்இறுதியக LCD திரையில் அலகுகளாக பிரிதிபலிக்க செய்யப் படுகின்றது,

ஞாயிறு, 14 மார்ச், 2010

தேவைக்கேற்ப சரியான நேரத்தில் கொள்முதல் செய்வது

தேவைக்கேற்ப சரியான நேரத்தில் கொள்முதல் செய்வது


ஒருநிறுவனத்தின்தேவைக்கேற்ப சரியான நேரத்தில் கொள்முதல்செய்வதை just in time என்பதை சுருக்கமாக JITஎன அழைப்பர்,இது ஒரு தொழில்நுட்பமன்று வழிமுறைமட்டுமே

இது ஒரு நிறுவனத்தில் ஏற்படும் மூலப்பொருட்களின் விரயம்,காலவிரயம் ,மணிதஉழைப்பு விரயம்,மேற்செலவுகள் விரயம் போன்ற பல்வேறு வகையான இழப்புகளை தவிர்க்கப் பயன்படுகின்றது,

ஒரு நிறுவனத்தின் அனைத்து இழப்புகளுக்கும் அடிப்டை மூலகாரணமாக இருப்பது மூலப்பொருட்கள் மற்றும் முடிவுப்பொருட்கள் சேர்ந்த சரக்கிருப்பு மட்டுமே யாகும்,

உதாரணமாக 1,ஒருநிறுவனம் மூலப்பொருட்களை அதிகஅளவு கொள்முதல்செய்து சரக்கிருப்பாக வைத்திருப்பதாக கொள்வோம் இதற்காக நடைமுறைமூலதனம் பெருமளவில் செலவிடப்பட்டு முடக்கப்படுவதால் மற்ற நடவடி க்கைகளுக்குதேவையான நடைமுறை மூலதனம் இல்லாமல் சிரமப்படவேண்டிய நிலைக்கு இந்நிறுவனம் தள்ளப்படுகின்றது,

2, உற்பத்திக்கு எடுத்து பயன்படுத்தவதற்கு முன் இவ்வாறு அதிகப்படியான மூலப்பொருட்களை ஒருங்கே சேகரித்து பாதுகாத்து வைத்திடபெரியஅளவில் புதிய கிடங்குகளை கட்டி அல்லது வாடகைக்கு அமர்த்தி பராமரிக்கவேண்டியுள்ளது,

3,இந்த கிடங்குகளை நிர்வகித்திட கிடங்குகாப்பாளர் பாதுகாப்பிற்காக பாதுகாவலர்கள் மற்றும் இரவு காவலர்கள் என நியமனம் செய்யவேண்டியுள்ளது,

4,மேலும் உற்பத்தியகத்திற்கு இந்த மூலப்பொருட்களை கொண்டுவந்து சேர்த்திடுவதற்காக கையாளும் இயந்திரத்தை நிறுவி பராமரிக்கவேண்டியுள்ளது

5,இவைகளை ஒருங்கிணைத்து நிருவகித்திட மேலாளர்ஒருவரை நியமணம் செய்யவேண்டியுள்ளளது,

6,இந்தசெயல்களுக்காக கூடுதலான சம்பளம் ,கூலி ,மின்சாரகட்டணம் வாடகை போன்று பல்வேறுவகைகளில் மூலப்பொருளின் மதிப்பை கூட்டாத ஆனால் மறைமுகமாக உற்பத்தி செலவை மட்டும் அதிகப்படுத்தும் செலவுகளை செலவிடவேண்டியுள்ளது,இதனால் ஒருநிறுவனத்திற்கு கிடைக்க வேண்டிய இலாபம் கணிசமாக குறைகின்றது,

இவ்வாறான நிலையை தவிர்க்கவே இந்த JIT எனப்படும் வழிமுறை செயல்படுத்தப் படுகின்றது, இந்த வழிமுறையில் பூஜ்ய சரக்கிருப்பு என்பதுதான் இதன் அடிப்படை குறிக்கோளாகும், அதற்காக சரக்கிருப்பே இல்லாது பராமரிப்பது அன்று என்பதை மனதில் கொள்ளுங்கள் ,

மூலப்பொருட்கள் கையிருப்பில் சுத்தமாக இல்லாதிருந்தால் வாடிக்கையளருக்கு ஒப்புக்கொண்ட நாளில் முடிவுப்பொருளை வழங்கமுடியாது போவதுடன் நிறுவனத்தின் மீதுவாடிக்கையாளருக்கு அவநம்பிக்கை ஏற்படவும் வழிவகுக்கின்றது மேலும் நிறுவனத்திற்கு வருமான இழப்பும் நட்டமும் பெருமளவில் ஏற்படுகின்றது,

பொதுவாக ஒருநிறுவனத்தின் கையிருப்பில் சரக்கிருப்பு அதிகமாவதற்கு காரணம் பின்வருமாறு

1,தவறான விற்பனை முன்கணிப்பினால் விற்பனைகுறைந்து போவது

2,தேவையற்ற குழு(Batch) உற்பத்தி செய்வது

3,நம்பகம் இல்லாத வாடிக்கையாளரிடமிருந்து பெறப்படும் தரம் குறைந்த மூலப்பொருட்கள்

4, தேவையற்ற ஆனால் நேரத்தை விழுங்கிடும் கொள்முதல் விதிமுறைகளை பின்பற்றி கொள்முதல் செய்வது

5,காலதாமதமான ஏற்றுமதி

6,தவறான சரக்குபோக்குவரத்து ஏற்பாடு

7,மறுகொள்முதல் செய்யும் காலஇடைவெளிக்கு தேவையான பொருளை அதிகஅளவில் கொள்முதல் செய்வது,

8,உற்பத்திபிரிவுக்கும் விற்பனைபிரிவுக்கும் ஒருங்கிணைப்பும் புரிந்துனர்வும் இல்லாமை

என்பன போன்ற பல்வேறு காரணங்களினால் கையிருப்பில் அதிகஅளவிற்கு சரக்கிருப்பு குவிந்துவிடுகின்றது, இதனால் உற்பத்தி சாராத மறைமுகசெலவுகள்மட்டும் கூடுதலாக உயர்ந்துவிடுகின்றது,

ஒருநிறுவனத்தில் உற்பத்திசெய்யப்படும் பொருளைநேரடியாக நுகர்வோரை சென்றடைய செய்வதால் சரக்கிருப்பை கையாளும் செலவு குறைய வாய்ப்புள்ளது,

உதாரணமாக நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் கிடங்குகளில் அடுக்கிவைக்கப்பட்டு பின்னர் பொருளை வாகணங்களில் ஏற்றி செல்லப்படுகின்றது,பின்னர் தொடர்சரக்குவண்டிகளில் ஏற்றுவதற்கு முன் அங்குள்ள கிடங்குகளில் இறக்கிவைத்து மீண்டும் ஏற்றப்பட்டு சென்றடைய வேண்டிய இடங்களில் இறக்கிவைத்து மீண்டும் வாகணங்களில் ஏற்றி அனுப்பப்பட்டு இறுதியாக நுகர்வோரை சென்றடைகின்றது,இவ்வாறு உற்பத்தியகத்திலிருந்து பல்வேறுநிலையைகடந்து வரும்போது பொருளை கொண்டுசெல்லுதல் ,பாதுகாத்தல் மற்றும் கையாளுதல் ஆகியவற்றிற்காக மறைமுகமாக அதிகஅளவிற்கு செலவாகின்றது,

இதனை தவிர்க்க உற்பத்தி செய்த இடத்திலேயே நேரடியாக தாங்கிகளில் (Container)ஏற்றி தேவையான இடத்திற்கு அனுப்பி வைப்பது அல்லது JIT வழிமுறையை பின்பற்றுவது ஆகியவற்றால் கிடங்குவாடகை ,போக்குவரத்து மற்றும் இதரசெலவுகள் மிச்சமாகின்றது,,

போட்டிமிகுந்த இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருநிறுவனமும் தங்களின் உற்பத்தி செலவை எவ்வாறாவது குறைத்திடவும் தங்களின் இலாபத்தை அதிகபடுத்திடவுமே விரும்புகின்றன,இந்நிலையில் இந்த JIT வழிமுறையை மூலப்பொருட்கள் கொள்முதல் செய்வதற்கு செயல்படுத்தி தேவையற்ற மறைமுகமான உற்பத்திக்குதொடர்பில்லாத செலவை கண்டிப்பாக குறைக்கமுடியும்,

உற்பத்தியாளருக்கும்,விற்பனையாளருக்கும் வாடிக்கையாளரே எஜமானர் ஆவார் என்ற இன்றைய நிலையில் வாடிக்கையாளரின் விருப்பத்தை அவாவை பூர்த்திசெய்வதேஒவ்வொரு உற்பத்தி நிறுவனத்தின் அடிப்படை குறிக்கோளாகும்இந்நிலையில் JITஆனது உற்பத்திசெலவை குறைத்து விற்பனை விலையை வாடிக்கையாளரின் வாங்கும் திறனிற்கு ஏற்ற கட்டுபடியாகும் நிலைக்கு பராமரக்கின்றது, மேலும் தரமான பொருள் குறைந்த செலவில்வாடிக்கையாளருக்கு கிடைப்பதை உறுதிசெய்து அவர்களின் விருப்பத்தை பூர்த்திசெய்கின்றது,

சரக்கிருப்பை மட்டுமல்லாது உற்பத்தி ,விற்பனை, சந்தைபடுத்துதல், பகிர்ந்தளித்தல் வாடிக்கையாளரின் அவாவைபூர்த்திசெய்தல் ஆகிய அனைத்து நிலைகளிலும் இந்த JITஐ செயல்படுத்தலாம்,

தலைமைப்பண்பு,புத்தாக்கம் செய்தல்,பூஜ்யஅளவிற்கு குறைபாடுள்ள முடிவுப்பொருட்களை பராமரித்தல்,தரக்கட்டுப்பாட்டை முழுமையாக பராமரித்தல்,புதுமைப்படுத்துதல்,செயல்களை தானியங்கச் செய்தல், நிர்வாக தகவலறிக்கையை உடனுக்குடன் உருவாக்குதல், இயக்க முறைமை மற்றும் சுழற்சிகாலஅளவை சீராகவைத்திருத்தல் போன்ற பல்வேறுவழிகளில் இந்த JIT பயன்படுகின்றது,

நிதிநிறுவணங்களில் கூட இந்த JIT கருத்தமைவை செயல்படுத்தலாம்

முன்பெல்லாம் சரக்கிருப்பு என்பதுஉடனடியாக விற்பனை செய்து ரொக்கமாக மாற்றிவிடலாம் என்றநிலைஇருந்ததால் இதனை ஒருசொத்தாககருதி அதிகஅளவிற்கு தேக்கிவைத்து பராமரித்தனர் ஆனால் இன்று இந்த JIT என்ற கருத்தமைவால் சரக்கிருப்பு என்பது ஒரு நட்டமேற்படுத்தும் அல்லது விரையமேற்படுத்தும் பொருளாக கருதப்படுகின்றது, இதனை அதிக அளவிற்கு வைத்திருப்பதற்காக நடைமுறைமூலதனத்தை முடக்கம் செய்யப்படுகின்றது,அதனால் வட்டி இழப்புமட்டுமல்லாது சரக்கிருப்பை பராமரிப்பது கையாளுவது பாதுகாப்பதுபோன்றதேவையற்றகூடுதலான செலவு ஏற்படுகின்றது,

இந்த JITஆனது

1,உற்பத்திக்கு பயன்படும் இயந்திரங்களில் முடக்க பராமரிப்பிற்கு பதிலாக முன்கூட்டிய பராமரிப்பு செய்து உற்பத்தி இழப்பை தவிர்க்கின்றது,

2, நிறுவப்பட்ட இயந்திரத்தின் முழுத்திறனையும் அடைய உதவுகின்றது,

3,சரியான திட்டமிடுதலின்மூலம் பொருட்களை பகிர்ந்தளிக்க செய்கின்றது,

4,வாடிக்கையாளருடன் தொடர்ந்து உறவை வளர்க்கின்றது,

5,பொருட்களின் தரக்கட்டுப்பாட்டை உறுதிசெய்கின்றது,

6 மிகைஇருப்பு,பாதுகாப்பு இருப்பு முடக்கிருப்பு போன்ற தேவையற்ற மாற்று ஏற்பாடுகளை சரக்கிருப்பில் தவிர்க்கின்றது,

7,ஒரு உற்பத்தியாளர் தமக்குதேவையான உதிரிபாகங்களை ஒப்பந்ததாரரர் அல்லது சிறுஉற்பத்தியாளர்களிடமிருந்து தேவைப்படும் போது மட்டும் கொள்முதல் செய்துகொள்ளலாம் இதனால் தரம் விலை போன்றவற்றை சீராக பராமரிக்க உதவுகின்றது,

8,முடிவுப்பொருட்கள் அதிகஅளவு முடங்கிவிடாமல் பராமரிப்பதால் வாடிக்கையாளரிடம் அவ்வப்போது தேவைப்படும் அளவிற்கு மடடும் குறைந்த அளவிற்கு மூலப்பொருட்களை அல்லது உதிரிபாகங்களை எந்தவித அவசரமும் அல்லாமல் தரமான பொருட்களை பெறமுடிகின்றது,

9,இதனால் அதிகமான அளவிற்கு WIP எனப்படும் பகுதி முடிவுப்பொருளின் இருப்பு குறைவாக அல்லது இல்லாமல் பராமரிக்கமுடிகின்றது,

10,அவ்வாறே முடிவுப்பொருட்களையும்ஏராளமானஅளவில் உற்பத்திசெய்து கிடங்குகளில் அடுக்கிவைத்திடாமல் வாடிக்கையாளர் விருப்பத்திற்கு ஏற்றவாறு அவ்வப்போதுஉற்பத்தி செய்து வழங்கப் படுவதால் உற்பத்தி செலவு பெருமளவில் குறைந்போகின்றது

11,இதன் தொடர்ச்சியாக விற்பனை விலை குறைகின்றது இதனால் விற்பனையின்அளவு உயர்ந்து நிறுவனத்தின் வருமானம் உயருகின்றது,

12,சரியான நேரத்தில் தரமானபொருட்கள் குறைந்தவிலையில் வாடிக்கையாளருக்கு எளிதில் கிடைப்பதால் வாடிக்கையாளரும் திருப்தியுடன் மேலும் அதிக விலைகொடுக்க தயராக இருக்கும் மனநிலைக்கு கொண்டுசெல்கின்றது,

மேலேகண்டவிவரங்களினடிப்படையில்சிறிய ,நடுத்தர ஏன் பெரிய நிறுவனங்கள் கூட இந்த Just In Time என்ற கருத்தமைவை செயற்படுத்தி வாடிக்கையாளரின் மனநிறைவையும் திருப்தியையும் பெற்று அதிக வருமானத்தை அடையாளம் என்பதுதிண்ணம்,

நிறுவனங்களுக்கான குழுக்காப்பீடு

நிறுவனங்களுக்கான குழுக்காப்பீடு


இன்றைய காலகட்டத்தில் குழுக்காப்பீடு என்பதே மிக முக்கியமான தொழிலாளர் நல திட்டமாக பெரியநிறுவனங்களின் முன்வைக்கப்படுகிறது, 100 பேருக்கு குறைவான ஊழியர்களை பணியமர்த்தியிருக்கும் நிறுவனங்கள் கூட இந்த திட்டத்தை நடைமுறைபடுத்தி பெரிதும் பயனடைமுடியும்,

தனிப்பட்டவர்களாக ஆயுள்காப்பீடுசெய்வதைவிட குழுக் காப்பீடாக ஒருநிறுவனத்தின் மூலம் செய்வது குறைந்தசெலவில் அதிக நன்மைகிடைக்கும் ஒருசெயலாகும்,இந்த குழுக் காப்பீடு நம்முடைய தேவைக்கேற்ப பல்வேறு வகைகளில் கிடைக்கின்றன அவற்றில் ஒன்றை நம்விருப்பப்படிதெரிவுசெய்து நடைமுறைபடுத்தலாம், இதன் வகை பின்வருமாறு

1.மருத்துவசெலவிற்கான குழுக்காப்பீடு ,

2. தனிநபர்விபத்து குழுக்காப்பீடு ,

3. பணிக்கொடை குழுக்காப்பீடு ,

4.ஆயுள் குழுக்காப்பீடு ,

5.ஓய்வூதிய குழுக்காப்பீடு,

6.தொழிலாளர் வருங்கால வைப்புநிதி சட்டத்திற்குட்பட்ட ஈடிஎல்ஐ நன்மைகளுக்கான மாற்று குழுக்காப்பீடு,

இந்த குழுக்காப்பீட்டில் பின்வரும் முக்கிய நன்மைகள் கிடைக்கின்றன

1,முப்பது வயதிற்குட்பட்ட ஒருவர் ஆயுள்காப்பீட்டிற்கான பாலிசியை தனிப்பட்ட முறையில் எடுக்கும்போது ரூபாய் ஒருஇலட்சம் காப்பீட்டிற்காக மூவாயிரத்திற்கு குறையாமல் வருடாந்திர பிரீமியதொகை செலுத்திடவேண்டும்அதையே குழுவாக நிறுவனத்தின் மூலம் எடுத்திடும்போது ரூபாய் நூறுமட்டும் வருடாந்திர பிரீமியதொகை செலுத்திட்டால்போதும்

2,வயது வரம்பு மற்றும் காத்திருக்கும் காலம் போன்ற கட்டுப்பாடுகள் எதுவும் குழுக்காப்பீட்டில் இல்லை,

3.நிறுவனத்தில் ஒருமுறை குழுக்காப்பீட்டு பாலிசி எடுத்துபுதுப்பித்து கொண்டுவந்திட்டால் புதிய பணியாளராக சேரும் ஒருவரின் பெயர் தானாகவே இந்த குழுக்காப்பீட்டில் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் உறுப்பினராக சேர்த்துகொள்ளப்படுவார்,

4, நிறுவனத்தின் மூலம் இந்த குழுக்காப்பீடடிற்கான அனைத்துசேவைகளும் உடனுக்குடன் கிடைக்கின்றன,

5,ஊழியர் ஒருவர் இந்த திட்டத்தில் உறுப்பினராக சேர்ந்தவுடன் ஒவ்வொரு மாதமும் அவருடைய மாதசம்பளத்தில் இதற்கான பிரீமியத்தொகை பிடித்தம்செய்யப்பட்டு காப்பீட்டு நிறுவனத்திற்கு நிருவாகம் செலுத்திவிடுகின்றது,

6, ஊழியர் ஒருவர் தனிப்பட்ட முறையில் ஆயுள்காப்பீடு செய்திருந்தாலும் இந்த திட்டத்தில் உறுப்பினராக சேர்த்தகொள்ளப்படுவார்

பொதுவாக குழுக்காப்பீடு என்பதைமட்டுமே அனைவரும் தெரிந்திருப்பார்கள் ஆனால் குறைந்த செலவில் என்னென்ன நன்மைகள் இதில் கிடைக்கின்றன என அறிந்திருக்கமாட்டார்கள் அதனைபற்றி இப்போது காண்போம்

மருத்துவசெலவிற்கான குழுக்காப்பீடு.

ஊழியர் மற்றும் அவரை சார்ந்திருக்கும் குடும்ப உறுப்பினர் களுக்கும் எதிர்பாராமல் ஏற்படும் மருத்துவ செலவினை ஈடுசெய்ய இந்த திட்டம் பயன்படுகின்றது,இதன்பயன்கள் பின்வருமாறு

1,இந்த திட்டத்தில் ஊழியர் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் நோய்வாய்பட்டால் தங்களுடைய உடல்நிலையை சீர்செய்வதற்காக காப்பீட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைக்கு சென்று இதற்கான அடையாள அட்டையை மட்டும் காண்பித்து சொந்தமுறையில் பணச்செலவில்லாமல் தங்களுடைய பிணியை தீர்த்து பயன்பெறலாம்

2,ஊழியர் ஒவ்வொருவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இதன்மூலம் காப்பீடு செய்யப்பட்டு இவர்கள் அனைவருக்கும் ஏற்படும் மருத்துவ செலவினை இதன்மூலம் ஈடுசெய்யப்படுகின்றது,

3,இந்த திட்டத்தில் சேருவதற்கு முன்பு ஏதேனும் நோய்வாய் பட்டிருந்தாலும் அவற்றிலிருந்து விடுபடுவதற்காக இந்த திட்டத்தின் மூலம் மருத்துவசெலவிற்கான தொகை ஈடு செய்யப்படுகின்றது,

விபத்து குழுக்காப்பீடு

நிறுவனங்களில் ஏதேனும் விபத்து ஏற்பட்டு அதனால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடுகளை ஈடுசெய்வதற்காக இந்த திட்டம் உதவுகின்றது,விபத்தினால் ஊழியர்களின் உடல் உறுப்புகள் பாதிப்பு ஏற்பட்டாலும்

அதற்கான பகுதி இழப்பீட்டுதொகையை இந்த திட்டம் வழங்குகின்றது,இந்த திட்டத்தில் குழுவாக பிரீமியத்தொகை செலுத்ததுவதால் குறைந்த அளவிற்கே நிறுவனத்திற்கு செலவாகின்றது, ஆயினும் அதிக அளவிற்கு நட்டஈட்டின்மூலம் நன்மைகள் கிடைக்கின்றன,

பணிக்கொடை குழுக்காப்பீடு ,

ஊழியர் ஒருவர் நிறுவனத்தை விட்டு வெளியேறும்போது அவருக்கு பணிக்கொடை வழங்கவேண்டியது சட்டப்படி கட்டாயமாக செயல்படுத்தவேண்டிய செயலாகும்,பொதுவாக ஒரு நிறுவனத்தின் ஆரம்பத்தில் நிறுவனத்தை விட்டு குறைந்த அளவு ஊழியர்களே ஓய்வுபெறுவர் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு ஓட்டுமொத்தமாக ஊழியர்கள் அனைவரும் ஓய்வு பெரும்நிலையில் அதிகப்படியாக பணிக் கொடை வழங்க வேண்டிய கட்டாய சூழ்நிலை அந்நிறுவனத்திற்கு ஏற்படும் அதனை தவிர்த்து ஆரம்பித்திலிருந்தே சிறிதுசிறிதாக பணிக் கொடைக்கு என்று குறிப்பிட்டத் தொகையை ஒதுக்கீடு செய்து வந்தால் பின்னர் அதிகசெலவாகும் நிலையில் சரிசெய்வதற்கு சிரமம் இல்லாமல் இருக்கும், இதற்காக உதவ வருவதுதான் பணிக்கொடை குழுக்காப்பீட்டு திட்டமாகும், இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்டஅளவிற்கு தொகை செலுத்தி வந்தால் போதும் எத்தனை ஊழியர்கள் பணியிலிருந்து வெளியேறும் நிலையிலும் அவர்களுக்கான பணிக்கொடைத் தொகை மிகசுலபமாக இந்தபணிக்கொடைகுழுக்காப்பீட்டுத் திட்டத்திலிருந்து வழங்கப்படும் மிக முக்கியமாக ஊழியர்களுக்கு பணியிடையில் ஏற்படும் இன்னல்களின்போது அவருடைய முழுபணிக்காலத்திற்குமான பணிக்கொடைத்தொகை இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படுகின்றது,

ஆயுள் குழுக்காப்பீடு

இந்த திட்டத்தில் தனிநபர் விபத்து காப்பீடு போன்று மருத்தவ பரிசோதனை எதுவும் செய்யத்தேவையில்லை,

குழுவாக பிரீமியத்தொகை செலுத்துவதால் வயதுவரம்பிற்கு ஏற்றவாறு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ செலுத்தத் தேவையில்லை அதற்கு பதிலாக ஒரேமாதிரியான சமமான பிரீமியத்தொகை ஒவ்வொருவருடைய சம்பளத்தில் இருந்தும் பிடித்தம்செய்ப்பட்டு செலுத்தப்படுகின்றது

இதே அளவு பிரீமியத்திற்கு தனிநபர் விபத்து காப்பீட்டைவிட காப்பீட்டுதொகை பலமடங்கு அதிகமாக ரூபாய் ஐந்து லட்சம் வரை கிடைக்கின்றது,

ஓய்வூதிய குழுக்காப்பீடு பாலிசி

ஊழியர்கள் ஒய்வுபெறும்போது வருங்கால வைப்பு நிதியிலிருந்து அவருடைய கணக்கில் உள்ளத்தொகை மற்றும் பணிக்கொடை போன்றவை ஒட்டுமொத்தமாக வழங்கபடுகின்றது ஏதோ குடும்ப சூழல் போன்ற காரணங்களினால் இந்த ஒட்டு மொத்த தொகை உடனடியாக அவரால் செலவிடப்படுகின்றது எனக்கொள்வோம் இதனால் அதன்பின்னர் அவருடைய வாழ்நாள் முழுவதும் வருமானம் ஏதுவுமில்லாமல் அடுத்தவரை எதிர்பார்த்தே வாழவேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்படுகின்றது,

இதனை தவிர்க்கும்பொருட்டு ஓய்வூதிய குழுக்காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகின்றது இதன்மூலம் குறிப்பிட்ட சதவிகித தொகை ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டு செலுத்தப்படுகின்றது, பின்னர் இதன் உறுப்பினர் பணிஓய்வுபெறும்போது அதற்கடுத்தமாதத்தில் இருந்தே அவர் பணியில்இருக்கும்போது மாதாமாதம் சம்பளம் பெறுவதை போன்று குறிப்பிட்டதொகை ஒய்வூதியமாக வழங்ககப்படுகின்றது இந்த திட்டத்தினால் நிருவாகத்திற்கு கூடுதலாக செலவேதும் இல்லை ஆனால் ஊழியர்களின் மனநிறைவுமட்டும் கிடைக்கப்பெறுகின்றது,

வருங்கால வைப்புநிதி சட்டத்திற்குட்பட்ட ஈடிஎல்ஐ பதிலான மாற்று குழுக்காப்பீடு ,

இந்த திட்டத்தினால் நிருவாகத்திற்கு கூடுதலாக செலவேதும் இல்லை, வருங்கால வைப்புநிதியில் ஈடிஎல்ஐ செலுத்துவதற்கு பதிலாக அதே தொகையை வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் அனுமதிபெற்று ஆயுள்காப்பீட்டு நிறுவனத்தில் செலுத்தப் படுகின்றது, இந்த தொகை ஒவ்வொரு ஊழியரின் சம்பளத்தில் 0,5% அதிகபட்சம் வருடத்திற்கு ரூபாய் 390.00 ஆகும், இதன்மூலம் காப்பீட்டு பயனாக ரூபாய் அறுபதாயிரம் வரை ஊழியர்களுக்கு வருங்கால வைப்புநிதிதிட்டத்தில் கிடைக்கின்றது ஆனால் இதேபிரீமியத்தொகைக்கு ரூபாய் 2 இலட்சம் முதல் 5 இலட்சம் வரை காப்பீட்டுத்தொகை ஆயுள்காப்பீட்டு நிறுவனத்திலிருந்து நிருவாகத்திற்கு கூடுதலான செலவேதுமில்லாமல் இந்த திட்டத்தின்மூலம் கிடைக்கின்றது,

இவ்வாறு பல்வேறுவகையானகுழுக்காப்பீட்டுதிட்டத்தில் ஊழியர்களை உறுப்பினர்களாக சேர்த்து குறைந்த பிரீமியத்தில் நிருவாகத்திற்கு கூடுதலான செலவேதுமில்லாமலும் அதிகஅளவிற்கு பலன் (நன்மைகள்) பெறும்படிசெய்து அதன்மூலம் ஊழியர்களின் மனநிறைவையும் மகிழ்ச்சியைம் பெற்று ஒருநிறுவனத்தின் உற்பத்தியை உயர்த்தவதற்கான சூழலை உண்டாக்க வழிகோலுவோம்.

திங்கள், 18 ஜனவரி, 2010

நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விளக்கம்

நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விளக்கம்


நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் பயன்படுத்தும் முக்கியமான சொற்கள்:

1.Consideration = பொருள் அல்லது சேவைக்காக வழங்கப்படும் விலை

2.Defect = பொருளில் உள்ள குறைபாடு

3.Deficiency = சேவையில் ஏற்படும் குறைபாடு

4.Service = சேவை

5.Restriction trade practice = கட்டுப்படுத்தப்பட்ட வியாபார செயல்

6.Unfair trade practice = நேர்மையற்ற வியாபார செயல்



1. நுகர்வோர் என்பவர் யார்? அவருடைய உரிமை என்ன?

தன்னுடைய பயன்பாட்டிற்காக குறிப்பிட்ட விலை கொடுத்து பொருட்களை கொள்முதல் செய்யும் அல்லது சேவையை பெறும் எந்த ஒரு தனி நபரும் நுகர்வோர் என அழைக்கப்படுவார். ஆனால் இதனை வியாபாரத்திற்காக பயன்படுத்துபவர் அல்லது மறுவிற்பனை செய்பவர் நுகர்வோராக கருதப்படமாட்டார்.

நுகர்வோரின் உரிமைகள் பின்வருமாறு:

1.குறைபாடான பொருள் அல்லது சேவையினால் பாதிக்காமல் காத்துக்கொள்ளும் உரிமை

2.கொள்முதல் செய்யப்படும் பொருள்/சேவை பற்றிய முழு விவரங்களை பெறுவதற்கான உரிமை.

3.தமக்கு தேவையான பொருட்களை/சேவையை தெரிவு செய்வதற்கான உரிமை.

4.குறைபாடான பொருட்கள்/சேவையை பெற்றிருந்தால் அது பற்றி கேட்பதற்கான உரிமை.

5.இந்த குறையை தீர்ப்பதற்காக நீதிமன்றத்தில் முறையீடு செய்யும் உரிமை.

6.தம்முடைய நுகர்வோர் உரிமையை சுதந்திரமாக செயல்படுத்துவதற்காக நுகர்வோர் கல்வி பெறுதவதற்கான உரிமை.

2. பொருட்களை கொள்முதல் செய்யும்போது கவனிக்க வேண்டியவை யாவை?

கொள்முதல் செய்யும் பொருள் மூலப்படிவமான பொருள்தானா (original) என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பின்னர் குறை ஏதும் தெரிந்தால் நிவர்த்தி செய்யும் உத்திரவாதத்தை செயல்படுத்த இது தேவைப்படும். மேலோட்டமாக பார்த்த உடனேயே தெரிகின்ற குறையேதும் இல்லை என்பதை தெளிவுப்படுத்தி கொள்க. பொருளுடன் வரும் விவரங்களை படித்து அந்த பொருளை பற்றிய முழுவதும் தெரிந்து கொள்க. ISI, Agmark போன்று பொருளுக்கு தரச்சான்று ஏதேனும் அளிக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்த்து கொள்முதல் செய்க.

3. நுகர்வோர் தாம் பாதிக்கப்பட்டுள்ளதை தெரிந்து உடனேயே நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டுமா?

இல்லை. முதலில் சம்பந்தப்பட்ட விற்பனையாளரிடம் சென்று தாம் கொள்முதல் செய்த பொருளின் குறைபாட்டை எடுத்துக்கூறி சரி செய்து கொடுக்கும்படி கூற வேண்டும். பெரும்பாலான உற்பத்தியாளர்கள் இவ்வாறு புகார் வந்தவுடன் சரியான பொருட்களை உடன் மாற்றி கொடுத்துவிடுவர். அல்லது நுகர்வோரிடம் பெற்ற விலைக்கான தொகையை திருப்பி வழங்கிவிடுவார்.

4. நுகர்வோர் எப்போது நீதிமன்றத்தை அனுக வேண்டும்?

விற்பனையாளரிடம்/உற்பத்தியாளரிடம் நேரடியாக சென்று கேட்டும் குறையை நிவர்த்தி செய்யாமல் மறுத்தளித்தல் செய்யும்போது அல்லது தம்முடைய குறைகளை கேட்காமல் மறுப்பது தெரியவரும்போது மேற்படி பொருள் கொள்முதல் செய்ததற்கான பட்டியல், உத்திரவாதம் ஏதும் அளித்திருந்தால் அதற்கான ஆவணங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து நீதிமன்றத்தை அனுகி தாம் பாதிக்கப்பட்டதை முறையீடு செய்யலாம்.

5. கட்டணம் ஏதுமின்றி சேவை புரிபவரிடம் பெரும் குறைபாடான சேவைக்கு நீதிமன்றத்திற்கு அனுக முடியுமா?

எந்த ஒரு நுகர்வோரும் தாம் பெற்ற பொருள்/சேவைக்கு ஈடாக விலையை இதனை அளிப்பவருக்கு கொடுத்திருக்க வேண்டும் என்பதே நுகர்வோர் வழக்கின் அடிப்படையாகும். இலவசமாக மருத்துவ சேவை புரியும் அரசு மருத்துவமனையின் மீது பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் நிவாரணம் கோரி வழக்கு தொடுக்க முடியாது. ஒரு ரூபாயாவது கட்டணமாக செலுத்தி ரசீது பெற்று சேவை பெற்றிருந்தால் வழக்கு தொடுக்க முடியும்.

6. இவ்வாறு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதால் என்னென்ன நிவாரணம் கிடைக்கும்?

இந்த வழக்கு சரியானதுதான், நுகர்வோர் குறைபாடுடைய பொருள்/சேவையால் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளார் என நுகர்வோர் நீதிமன்றம் கருதுமாயின் உடன் கீழ்காணும் நிவாரணங்களை செய்யும்படி எதிர்தரப்பினருக்கு உத்திரவிடுகிறது.

1 குறைபாடு உடைய பொருள் அல்லது சேவையை உடனடியாக அகற்றும்படி கோருதல்

2.குறைபாடு உடைய பொருள் அல்லது சேவையால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்டும்படி கோருதல்

3.இந்த வழக்கிற்கான செலவு தொகையை வழங்கும்படி கோருதல்

4.குறைபாடுடைய பொருளுக்கு பதிலாக அதே மாதிரியான வேறு நல்ல பொருளை வழங்கும்படி கோருதல்

5.பெற்ற குறைபாடுடைய பொருள்/சேவையின் விலையை உடனடியாக திரும்ப வழங்கும்படி கோருதல்

6.உடனடியாக இவ்வாறான நேர்மையற்ற வியாபார செயலை மேலும் தொடராமல் நிறுத்தம் செய்யும்படி உத்திரவிடுதல்

7.அபாயம் விளைவிக்கும் பொருள் ஏதும் சந்தையிடப்பட்டிருந்தால் உடனடியாக அப்பொருட்கள் சந்தையிலிருந்து மீண்டும் பெற்றுக்கொள்ளும்படி உத்திரவிடுதல்

7. ஈட்டுத்தொகை பெறுவதற்கு ஏதேனும் உச்ச வரம்பு உள்ளதா?

இல்லை. அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதும் நடைமுறைக்கு பொருந்த கூடிய அளவிற்கு ஈட்டுத்தொகை இருக்க வேண்டும்.

8. ஒரு பொருள் அல்லது சேவை பெறும்போது ஏற்படும் குறைபாட்டில் ஒரு பகுதி குறையை மட்டும் தீர்க்கும்படி நீதிமன்றத்தில் முறையீடு செய்ய முடியுமா?

ஆம். ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் குறைபாடு உடையதாயின் மற்றவை சரியாக உள்ளது என தெரியும்போது அந்த குறிப்பிட்ட பகுதியை மட்டும் சரிசெய்து தரும்படி நுகர்வோர் நீதி மன்றத்தை அனுக முடியும்.

9. இந்த வழக்கினை வழக்கறிஞர் மூலமாக மட்டும்தான் அனுக வேண்டுமா?

தேவையில்லை. பாதிக்கப்பட்ட நுகர்வோர் நேரடியாக நீதிமன்றத்தை அனுகலாம், மிகவும் சிக்கலான நிலையில் மட்டும் வழக்கறிஞரை அனுகுவது நல்லது.

10 நுகர்வோர் வழக்கு தொடுக்கும்போது என்னென்ன காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும்?

1.குறைபாடுடைய பொருள் அல்லது சேவையின் பெயர்

2.வழக்கு தொடுப்பவரின் பெயர் மற்றும் முழு விவரங்கள் அவ்வாறே எதிர்தரப்பாளரின் முழு விவரங்கள்

3.இந்த நிகழ்வுகள், எப்போது. எங்கே எவ்வாறு நிகழ்ந்தது

4.எதிர்தரப்பாளர் ஏன் இதற்கு பதிலீடு செய்ய வேண்டும்? அல்லது பொறுப்பு வகிக்க வேண்டும்? அதற்கான உத்திரவாதம் உள்ளதா? பட்டியல் உள்ளதா? விலை கொடுக்கப்பட்டுள்ளதா?

5.குற்றச்சாட்டிற்கான ஆதாரங்கள், பட்டியல், பணம் கொடுத்ததற்கான ரசீதுகள், உத்திரவாதம் பெற்றதற்கான ஆதாரங்கள், நேரில் அனுகி கேட்டபோது மறுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் அல்லது எழுத்து மூலம் நிவர்த்தி செய்யும்படி கோரி மறுத்ததற்கான ஆதாரங்கள்

6.பொருள்/சேவை கொள்முதல் செய்து பாதிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு வருடங்களுக்குள் வழக்கு தொடுக்கப்பட வேண்டும்.

11. வழக்கை எங்கு பதிவு செய்ய வேண்டும்?

பாதிப்பு எங்கு ஏற்பட்டதோ அந்த இடத்தினுடைய மாவட்டத்தில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். மதிப்பீடு தொகை 25 இலட்சம் வரையிருந்தால் மாவட்ட நுகர்வோர் மன்றத்திலும் 25 இலட்சம் முதல் 1 கோடி வரை மாநில நுகர்வோர் மன்றத்திலும் 1 கோடிக்கும் மேல் எனில் தேசிய நுகர்வோர் மன்றத்திலும் வழக்கு தொடுக்கலாம்.

12. நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கை தொடுப்பதற்கான வழிமுறைகள் என்ன?

ஒரு வெள்ளைத்தாளில் (நான்கு நகல்கள்) முழு விவரங்களையும் பதிவு செய்து இதற்கான அனைத்து ஆவன நகல்களை இணைத்து பொருள் மதிப்பிற்கு தகுத்நவாறு நுகர்வோர் நீதிமன்றத்தில் நேரடியாகவோ, பதிவு தபால் மூலமாகவோ. தொலைநகல் மூலமாகவோ, விரைவு தபால் மூலமாகவோ வழக்குகளை பதிவு செய்து இந்த வழக்கின் நகலை எதிர் தரப்பாருக்கும் அனுப்பி வைக்க வேண்டும். இதற்கு முத்திரைத்தாள் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.

13. நுகர்வோர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை மறுத்து மேல் முறையீடு எவ்வாறு செய்வது?

நுகர்வோர் நீதி மன்றத்தில் தீர்ப்பு பெறப்பட்ட 30 தினங்களுக்குள் மாவட்ட நீதிமன்ற தீர்ப்பாயின் மாநில மன்றத்திலும் மாநில மன்ற தீர்ப்பாயின் தேசிய மன்றத்திலும், தேசிய மன்ற தீர்ப்பு எனில் உச்ச நீதி மன்றத்திலும் வழக்கு தொடுக்கலாம். அப்போது அனைத்து நடைமுறைகளுடன் நீதிமன்ற தீர்ப்பு நகலையும் இணைத்து மேல் முறையீட்டிற்கு மனு செய்ய வேண்டும்.

இந்த முப்பது நாட்கள் என்ற வரம்பை நீதி மன்றம் விரும்பினால் சரியான காரணத்திற்காகவே இந்த கால தாமதம் ஆகிவிட்டது எனக்கருதி வழக்கினை ஏற்றுக்கொள்ளும்.

14. மேல் முறையீட்டின்போது நீதிமன்ற கட்டணம் ஏதும் செலுத்த வேண்டுமா?

நீதிமன்ற கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. ஆனால் ஈடுகட்டும் தொகையின் மதிப்பில் 50% அல்லது ரூ.2500 எது குறைவோ அதனை மாநில மன்றத்திற்கு ரூ.35000 தேசிய மன்றத்திற்கு ரூ.5000 உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்ய தொகையை செலுத்த வேண்டும்.

15. நுகர்வோர் நீதிமன்ற உத்தரவை எதிர்தரப்பாளர் நடைமுறைபடுத்தவில்லை எனில் என்ன செய்ய வேண்டும்?

எதிர்தரப்பாளர் உத்தரவை ஏற்று செயல்படுத்தவில்லை என்றால் அது ஒரு குற்றச்செயலாகும். குறைந்தது ஒரு மாதம் அதிக பட்சம் மூன்று மாதம் சிறை தண்டனையும், தண்டத் தொகையாக ரூ.2000 அதிக பட்சம் ரூ.10000 மட்டும் அல்லது இரண்டுமே சேர்த்து விதிக்கப்படும். இடைக்கால உத்தரவு ஏதும் நுகர்வோர் நீதிமன்றம் செயல்படுத்தாது.

இந்நிலையில் நுகர்வோர் என்ன செய்ய வேண்டும்?

இந்த உத்தரவை செயற்படுத்த நுகர்வோர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தால் அந்த தொகைக்கான சான்றுகளை நீதிமன்றம் மாவட்ட ஆட்சியருக்கு நிலவரி வசூலிப்பது போன்று வசூலிக்கும்படி அனுப்பி வைக்கும்.

16. நுகர்வோர் நீதிமன்றத்தின் செயல்பாடு வரன்முறை யாவை?

குற்றவியல் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி போன்று வழக்குகளை நடத்துவதற்கான அனைத்து உரிமைகளும் நுகர்வோர் மன்ற நீதிபதிக்கு உள்ளது.

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

சர்க்கரை ஆலைகளில் கரும்பிற்கான விலைக்கொள்கை

சர்க்கரை ஆலைகளில் கரும்பிற்கான விலைக்கொள்கை




சர்க்கரை உற்பத்தி விவசாயம் சார்ந்த தொழிலாகவும் அதிகபட்ச வேலை வாய்ப்புகளை அளிக்கக்கூடிய கிராமப்புற பொருளாதார மேம்பாடு அடைய உதவும் தொழிலாகவும் இருந்து வருகிறது. ஒரு விவசாயி நட்டமென்று தெரிந்தும் தன்னுடைய வாழ்வாதாராத்திற்காக வேறு வழியில்லாமல் விவசாயத்தை தொடர்ந்து செய்வதை போன்று சர்க்கரை ஆலைகளும் தெரிந்தே நட்டத்திற்காக இயங்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளன.



விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை என்று ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பொருளின் தரம் அந்த பொருளின் அளிப்பிற்கு ஏற்றவாறு வணிகர்களால் விலை நிர்ணயிக்கப்பட்டு விளை பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.



அவ்வாறே கரும்பிற்கும் குறைந்தபட்ச விலை என்றும் மாநில அரசு பரிந்துறை விலை என்றும் ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயம் செய்யப்படுகிறது. பொருளின் தரம் எவ்வாறு இருந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு ஆண்டு முழுவதும் ஒரே கொள்முதல் விலையை மட்டும் வழங்கப்பட வேண்டும்.



உதாரணமாக அக்டோபர் முதல் டிசம்பர் வரை சர்க்கரை கட்டுமானம் சதவிதம் மிகவும் குறைவாக இருக்கும். ஆனால் கரும்பின் விளைச்சலும் எடையும் மிக அதிகமாக இருக்கும்.



ஜனவரியிலிருந்து மார்சு வரை சர்க்கரை கட்டுமானம் மிக அதிகமாக இருக்கும். ஆனால் கரும்பின் விளைச்சலும் எடையும் மிகக்குறைவாக இருக்கும். இதனால் முதல் மூன்று மாதம் கரும்பினை அனுப்பும் விவசாயிகளுக்கு லாபமாகவும் சர்க்கரை ஆலைக்கு நட்டமாகவும் அடுத்த மூன்று மாதங்களில் சர்க்கரை ஆலைகளுக்கு லாபமாகவும் விவசாயிகளுக்கு நட்டமாகவும் இருக்கின்றது. இவ்வாறு ஒரு சமயத்தில் ஒரு சாராருக்கு நட்டமாகவும் மற்றொரு சாராருக்கு இலாபமாகவும் ஏற்படுவதை சமநிலைப்படுத்த அந்தந்த மாதத்தின் சர்க்கரை கட்டுமானத்தின் அடிப்படையில் கரும்பிற்கான விலைநிர்ணயம் செய்வதே இருத்தரப்பினருக்கும் ஏற்புடைய வழியாகும்.



இரண்டாவதாக மரத்தை நடுபவர் ஒருவரும் அதன் பயனை அனுபவிப்பர் வேறொருவராகவும் இருப்பது பொதுவான நடைமுறையாகும். ஏனெனில் மரம் வளர்ப்பு ஒரு நீண்ட கால செயல்திட்டமாகும்.



அதே போன்று கடந்த அரவைப்பருவத்தின் சர்க்கரை கட்டுமானத்தின் அடிப்படையில் வரும் அரவைப்பருவத்திற்கு கரும்பிற்கான விலையாக நிர்ணயம் செய்யப்படுகிறது. இது ஒரு சாராருக்கு பாதகமாகவும் மற்றொரு சாராருக்கு சாதகமாகவும் ஆன செயலாகும்.



உதாரணமாக 2003-04 ஆம் ஆண்டு அரவை பருவத்தில் மழை இல்லாததால் குறைந்த அளவு கரும்பு மகசூலினால் அதிக சர்க்கரை கட்டுமானம் கிடைத்ததன் அடிப்படையில். அதற்கடுத்த ஆண்டு நல்ல மழையால் கூடுதலான கரும்பு மகசூலுக்கு அதிக விலைபெற்றனர். வறட்சியில் பயிரிட்டவர்களின் குறைந்த மகசூலிற்கு குறைந்த கரும்பு விலையும் நல்ல நிலையில் பயிரிட்டு அதிக மகசூலின்போது அதிக கரும்பு விலையும் பெற்றனர். அந்தந்த ஆண்டு சர்க்கரை கட்டுமானத்திற்கு ஏற்ப அந்தந்த ஆண்டிற்கான கரும்பின் கொள்முதல் விலையாக நிர்ணயம் செய்வதே சாலச்சிறந்தது.



மூன்றாவதாக சில நேரங்களில் மத்திய அரசின் குறைந்தபட்ச விலைமட்டும் கரும்பிற்கு வழங்குவார்கள் அப்போது கரும்பு கட்டுப்பாடு சட்டம் பிரிவு 5எ-வின்படி குறிப்பிட்ட ஆண்டு ஈட்டக்கூடிய இலாபத்தில் 50%-ஐ கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு கூடுதல் விலையாக வழங்கப்படுகிறது.



அந்ததந்த ஆண்டில் உற்பத்தியாகும் சர்க்கரை ஏறத்தாழ பன்னிரண்டு மாதம் அதாவது அடுத்த ஆண்டுவரை இருப்பில் இருக்கும் அதனால் சரக்கிருப்பின் மதிப்பை அந்த வருட முடிவில் உள்ள விலைக்கு ஏற்ப மதிப்பிடப்பட்டு இலாபம் கணக்கிடப்படுகிறது.



அவ்வாறு இருப்பில் உள்ள சர்க்கரை அதற்கடுத்த ஆண்டில் சரக்கிருப்பின் மதிப்பைவிட குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ விற்கப்படுவதால் கிடைக்கக்கூடிய இலாபம்/நட்டம் ஆனது அவ்வாறு விற்பனை செய்யப்படும் ஆண்டுகளின் இலாபம் நட்டம் கணக்கிடுவதற்காக கணக்கில் கொண்டு கரும்பிற்கான கூடுதல் 5எ விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதுவும் யாரோ பணி செய்ய யாரோ அனுபவிக்கும் சமச்சீரற்ற தன்மையாகும். ஆண்டு முழுவதும் விற்ற சராசரி விற்பனை விலையில் குறிப்பிட்ட ஆண்டடின் இறுதி இருப்பில் இருக்கும் சரக்குகள் மதிப்பாக கணக்கில் கொண்டு அந்த ஆண்டின் இலாபம் நட்டம் கணக்கிட்டு கரும்பிற்கான 5எ விலை நிர்ணயம் செய்வதுதான் சரியான நடைமுறையாகும். இவ்வாறு இந்த மூன்று கொள்கையும் கடைப்பிடித்தால் யாருக்கும் பாதகம் ஆகாமல் சாதகமாகவும் இல்லாமல் சமமான நிலை ஏற்படும் என்பது திண்ணம்.

சர்க்கரை உற்பத்தி சுழற்சி

சர்க்கரை உற்பத்தி சுழற்சி




இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி மிக முக்கியமான விவசாயம் சார்ந்த தொழிலாக இருந்து வருகிறது. இது நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிக அளவு வேலை வாய்ப்பை வழங்க கூடிய தொழிலாகவும் இருந்து வருகிறது. உலகின் சர்க்கரை உற்பத்தியில் இந்திய இரண்டாம் இடத்திலிருந்து இப்போது முதலிடத்தை வகிக்கிறது.



வியாபாரத்தில் இருக்கும் பொதுவான ஏற்ற இறக்கங்களின் சுழற்சி சர்க்கரை தொழிலிலும் 4 முதல் ஏழாண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது. 2002-2003 ஆம் ஆண்டுகளில் கரும்பு மகசூல் அதிகமாகி சர்க்கரை உற்பத்தி உயர்ந்தது. அதனால் விற்பனை விலை வீழ்ச்சியடைந்தது. மேலும் கரும்பின் விலை அதிகமாக இருந்ததால் கரும்பிற்கான கிரைய பட்டுவாடா தாமதமானது. இதனால் விவசாயிகள் கரும்பைத்தவிர்த்து மற்ற பயிர்களுக்கு மாறினார்கள். இதன் தொடர்ச்சியாக 2003-2004 ஆண்டுகளில் கரும்பு உற்பத்தி குறைந்தது. சர்க்கரை உற்பத்தியும் குறைந்தது. இதனால் உள்நாட்டில் சர்க்கரை விலை அதிகரித்தது. இதே சமயத்தில் உலக அளவிலும் சர்க்கரை விலை உயர்ந்தது. கரும்பிற்கான தேவை அதிகமானதால் கரும்பின் விலை மீண்டும் உயர்ந்தது. 2004-2005ல் இதே நிலை நீடித்ததாலும் நல்ல மழை பொழிவு இருந்ததாலும் விவசாயிகள் கூடுதலான கரும்பு பயிரிட ஆரம்பித்தனர். அதனால் 2006-2007ல் சர்க்கரை உற்பத்தி அதிகமானது அதனுடைய பாதிப்பால் சர்க்கரை விலை மிகவும் குறைந்து விவசாயிகளுக்கு கரும்பு கிரையத் தொகை பட்டுவாடவிலும் காலதாமதமாகும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறான வியாபார சுழற்சி 4 முதல் 7 ஆண்டு காலத்திற்கு பதிலாக ஏன் குறுகிய கால அவகாசத்தில் ஏற்படுகிறது. சர்க்கரை அத்தியாவசிய பொருளின் கீழ்வருகறது அதனால் உள் நாட்டில் சர்க்கரை விலை அதிகமானதால் ஜீன் 2006ல் சர்க்கரை ஏற்றுமதியை தடை செய்து விநியோக அளவும் விடுவிப்பு ஆலையும் இந்த நேரத்தில் உயர்த்தப்பட்டது உலக சந்தையில் சர்க்கரைக்கு நல்ல உயர்ந்த விலைக்கு கிடைத்து கொண்டிருந்தது. உலக சந்தைகளில் இந்தியாவின் சர்க்கரை விற்பனையாளரின் பங்கு இல்லாததால் பிரேசில் போன்ற நாடுகள் தம்முடைய சர்க்கரையை நல்ல விலைக்கு விற்று லாபம் கண்டனர்.



2005-06ல் நல்ல மழை பொழிவு இருந்தாலும், கரும்பிற்கு நல்ல விலை கிடைத்தாலும் அதிக அளவு கரும்பினை விவசாயிகள் பயிரிட்டனர். அதனால் 2006-07 அரவைப்பருவத்தில் அபரிதமான சர்க்கரை உற்பத்தி ஆகும் என எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் உள்நாட்டு விநியோகத்திற்காக கடந்த ஆண்டைவிட தற்போது அதிக அளவு சர்க்கரையை விடுவிப்பு செய்வதாலும் சர்க்கரை விலை மிகவும் குறைந்த போனது.



இந்த சமயத்தில் சர்க்கரை உற்பத்தியாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில் சர்க்கரை ஏற்றுமதிக்கான தடையை நீக்கப்பட்டது.



இந்த அரவைப்பருவத்தில் உலக அளவில் சர்க்கரை உற்பத்தி அபரிதமான சமயத்தில் அனுமதிக்கப்பட்ட இந்த ஏற்றுமதியினால் சர்க்கரை விலை ரூ.2100-லிருந்து 1500 ஆக வீழ்ச்சியடைந்து உள்ள நிலையில் உள்நாட்டு சர்க்கரை விலை உயர்வதற்கு பதிலாக குவிண்டால் 1800-யிலிருந்து 1400 ஆக குறைந்துவிட்டது.



கரும்பிற்கான மத்திய அரசின் குறைந்த விலை 1980-81 ஆம் அளவில் டன்னுக்கு 130 ஆக இருந்தது 2006-07ல் 802.50 ஆக ஆறு மடங்கு உயர்ந்துள்ளது. சர்க்கரை ஆலைகள் உற்பத்தி செலவு என்னவாக இருந்தாலும் பொது விநியோகத்திற்கு கட்டாயம் கொடுக்க வேண்டிய விலை கிலோ ஒன்றுக்கு 3.65 ஆனது. 2006-07ல் 13.50 ஆக நான்கு மடங்குகூட உயரவில்லை. இந்த பொது விநியோக விலை கடந்த நான்கு ஆண்டுகளாக அப்படியே மாற்றப்படாமலும் உள்ளது.



இந்த பொது விநியோகத்தில் ஏற்படும் இழப்பை சர்க்கரை உற்பத்தியாளரின் வெளிசந்தையின் விற்பனையில் இருந்துதான் சரி செய்து கொள்ள வேண்டும். ஆனால் அதிலும் விடுவிப்பு ஆனைகள் மூலம் சர்க்கரை விநியோகத்தை கட்டுக்குள் வைத்துக்கொண்டு விலை உயர்வை கட்டுப்படுத்த அதிக விடுவிப்பு செய்வது ஏற்றுமதிக்கு தடை செய்து போன்ற நடவடிக்கைகயினால் சர்க்கரையின் விலை உயராமல் கட்டுப்படுத்தப்படுகிறது. அதனால் சர்க்கரை உற்பத்தியாளர்கள் மாற்றுவழிகளில் தங்களை காத்துக்கொள்ள அவாவுற்று இணை மின் நிலையம் அமைத்தலும், எத்தனால் உற்பத்தி போன்ற வகைகளில் தங்களின் தொழிலை விரிவுபடுத்துகின்றனர். அந்நிய செலாவனியை எப்போதும் மிச்சப்படுத்த கூடிய பெட்ரோலுடன் 5% எத்தனால் கலந்து பயன்படுத்தும் திட்டம் நாடு முழுவதும் முழுமையாக நடைமுறைப்படுத்தபடவில்லை. இதே பெட்ரோலுடன் எத்தனால் கலக்கும் திட்டம் 50% என பிரேசில் போன்ற நாடுகளில் நடைமுறைபடுத்துகின்றனர். இவ்வாறான உப தொழிலை நடைமுறைக்கு கொண்டு வந்தால் மட்டுமே சர்க்கரை தொழிலை காக்க முடியும்.

நகரத்தை நோக்கி

நகரத்தை நோக்கி


தற்போது போட்டி மிகுந்த நவீன யுகத்தில் மக்கள் வாழ்வதற்காக மிகவும் போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு மனிதனும் உயிர் வாழ்வதற்கு அடிப்படையான உணவு, உடை, உறையுள் ஆகிய தேவைகளை பெறுவதற்காக மிகவும் கடினமாக போராட வேண்டிய நிலையில் உள்ளனர்.

இந்த அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மக்களிடம் வாங்கும் திறன் (Purchasing power) போதுமான அளவிற்கு இருக்க வேண்டும்.

மக்கள் அனைவருக்கும் போதுமான அளவிற்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி அதன் மூலம் பொருள் ஈட்டும் சூழ்நிலைக்கு உருவாக்கப்பட்டால்தான் இந்த வாங்கும் திறன் தானாகவே மக்களிடம் உயரும்.

அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் திட்டத்தால் ஒரு நாடு ஒரளவு மக்களின் மன நிறைவுடன் வாழ வழி வகுக்கும் சிறந்த திட்டமாகும்.

மக்கள் தாம் உயிர் வாழ்வதற்கு அடிப்படை தேவைகளை பெறுவதற்காக வேலைவாய்ப்பு அளிக்க கூடிய இடம் நகர்புறங்களே என முடிவு செய்து அனைவரும் நகரத்தைநோக்கி நகரத்தொடங்கு கின்றனர்.

இதனால் ஏற்கனவே அதிக மக்கள் தொகையினால் திண்டாடும் நகரங்கள் மேலும் சிரமப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

உதாரணமாக அன்றைய தென்னாற்காடு மாவட்டத்தை எடுத்து கொண்டோமானால் ஒவ்வொருநாள் இரவும் திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து பெங்களூர் செல்லும் பேருந்துகள் அனைத்தும் நிரம்பி வழிகின்ற அளவிற்கு மக்கள் கூட்டம் அலை மோதுவது போன்று இருந்தது .

ஏன் நகரத்ததை நோக்கி இவர்கள் செல்கின்றனர்?.கிராாமத்தில் வருடம் முழுவதும் இவர்களுக்கு பணி செய்வதற்கான வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் நகரங்களுக்கு சென்றால் போதுமான வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அனைவரும் தம்முடைய பெண்டு,பிள்ளைகளை அழைத்துகொண்டு மூட்டை முடிச்சுகளுடன் கிராமத்தை விட்டே செல்லத் தயாராகின்றனர்.

இந்தியா ஓரு விவசாய நாடு என்பதும் 75% மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர் என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. அதிலும் தமிழ்நாட்டின் விவசாயம் பருவகாற்றின் சூதாட்டத்தை நம்பியே உள்ளது என்பதும் தெரிந்ததே .

கடந்த நான்கைந்து ஆண்டுகளாக போதுமான மழையில்லாத காரணத்தால் விவசாயம் செய்ய வழியில்லாத நிலையில் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டது.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் காணி நிலம், கரவை மாடு ஒன்று, காளை மாடு இரண்டு, முருங்கை மரம் ஒன்று ஆகியன இருந்தால் அந்த சிறிய குடும்பம் வாழ்வதற்கு போதுமான வருமானத்தை ஈட்டுகின்ற நிலைமை இருக்கும் என்பது சான்றோரின் அறிவுரையாகும். பருவ மழையின் பகைமையினால் நிலமுள்ளவர்களே அல்லாடுகின்ற சூழ்நிலையில் நிலமற்ற விவசாயிகளின் நிலை சொல்லவே வேண்டியதில்லை.

அதனால் நகரங்கள் தங்களுக்கு போதுமான வேலைவாய்ப்பு அளிக்கும் என எண்ணி கூட்டம் கூட்டமாக நகரங்களுக்கு குடி பெயர்கின்றனர்.

கிராமத்தில் வாழும் நிலமற்ற கூலிகள் கூட ஒவ்வொரு குடும்பத்தில் ஒரு ஜதை உழவு மாடும், ஒரு கரவை மாடும், ஒண்டுவதற்கு ஒரு குடிசையும், அதில் ஓரமாக ஒரு முருங்கை மரமும் வைத்து வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் நிலத்தை வளமாக்குகின்றோம் என்று நிலவள வங்கிகளும், வணிக வங்கிகளும் டிராக்டர்களை கடனில் வழங்கி ஒரு பக்கம் சில குறு விவசாயிகளை கடனாளியாக்கியது மட்டுமல்லாது நிலமற்ற விவசாயிகளின் உழவு மாடுகளுக்கு வேலையில்லாத நிலையை ஏற்படுத்தி அவைகளை விற்க வேண்டிய சூழ்நிலையில் தள்ளின.

சரி உழவு மாடுகளுக்கு பதிலாக டிராக்டர் வந்து கிராமப்புற உழவரிகளின் பிழைப்பை தடுத்தது என்றால் மறுபக்கம் இந்த மாடுகளுக்கு தேவையான மேய்ச்சல் நிலங்களாக பயன்பட்ட கிராமத்துக்கு அருகிலிருக்கும் சிறு சிறு முட்புதர்காடுகளில் அரசானது காடுகளை வளர்க்கிறோம் என்று மண்ணின் அனைத்து நீரினையும் அறவே உறிஞ்சி நீர்வளமற்ற வறண்டபாலையாக்கிடும் யூகலிப்டஸ் என்னும் நீலகிரித்தைல மரங்களை மேய்ச்சல் நிலங்களில் வளர்ந்திருந்த முட்புதர்களை அழித்து பயிரிட்டனர். இதனால் கிராம மக்களின் கால்நடைகளான ஆடு மாடுகள் மேய்ச்சலுக்காக அருகிலிருக்கும் காட்டினை நோக்கி செல்ல முடியாமல் தடுக்கபட்டுள்ளன. இது மட்டுமா, அரை குறை வேலைவாய்ப்பில் கிடைத்த உணவு தானியத்தை சமைப்பதற்காக எரிப்பதற்கு தேவையான விறகு இந்த காடுகளிலிருந்து கிடைத்ததையும் தடுத்து விட்டனர்.

மாடுகளுக்கும் வேலையில்லை மாடுகள் வளர்ப்பதற்கு மேய்ச்சல் நிலங்களும் இல்லை. மழையில்லாததால் மாடுகள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை என்ற நிச்சயமற்ற நிலையில் தங்களின் ஆடு மாடுகளை அடிமாட்டிற்கு அனுப்பிவிட்டனர்.

அரைகுறையாக வேலைவாய்ப்பை வழங்ககூடிய விவசாய வேலைகளும் மழையில்லாததால் கிடைக்கவில்லை அதில் கிடைத்த உணவு தானியங்களை சமைப்பதற்கு தேவையான எரிபொருள் (விறகு, சுள்ளி) கிடைக்காத நிலையில் மக்கள் உணவுக்கே வழியின்றி நகரங்களுக்கு சென்றால் வயிராற உண்பதற்கு உணவாவது கிடைக்காதா என்ற நம்பிக்கையில் நகரங்களை நோக்கி நகர்கின்ற நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

உணவுத்தேவை மட்டுமல்லாது நகரத்திற்கு சென்றால் தங்களின் பிள்ளைகள் நல்ல தரமான கல்வி பெற்று பெரிய பெரிய பணிக்கு சென்று தங்களையும் தங்கள் குடும்பத்தையும் கரை சேர்ப்பதற்கு ஆவண செய்வார்கள் என்ற அற்ப நம்பிக்கையுடன் தங்களின் பிள்ளைகளுக்கு தரமான கல்வி பெற வேண்டும் என்பதற்காக நடுத்தர மக்கள் நகரத்தை நோக்கி நகருகின்றனர்.

கிராமங்களில் வாழும்போது அவசரஅவசியத்திற்கு போதுமான அடிப்படை மருத்துவ வசதிகூட கிடைக்ககூடிய நிலைமையில் உயிரை காப்பாற்றுகின்ற மருத்துவ வசதி கிடைப்பதற்காக நகரங்களை நோக்கி நகர்கின்றனர்.

ஆக ஒவ்வொரு கிராமத்திற்கு அடிப்படை தேவைகளான மருத்துவ வசதி, தரமான கல்விக் கூடங்கள், அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளிக்க கூடிய திட்டங்கள் என்பனபோன்ற அக்கிராமத்திற்கு அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யக்கூடிய சூழ்நிலை உருவாக்கபட்டால் மட்டுமே கிராம மக்கள் நகரத்தை நோக்கி நகருகின்ற நிலை ஏற்படாது .

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...