ஞாயிறு, 17 ஜனவரி, 2010

சர்க்கரை ஆலைகளில் கரும்பிற்கான விலைக்கொள்கை

சர்க்கரை ஆலைகளில் கரும்பிற்கான விலைக்கொள்கை




சர்க்கரை உற்பத்தி விவசாயம் சார்ந்த தொழிலாகவும் அதிகபட்ச வேலை வாய்ப்புகளை அளிக்கக்கூடிய கிராமப்புற பொருளாதார மேம்பாடு அடைய உதவும் தொழிலாகவும் இருந்து வருகிறது. ஒரு விவசாயி நட்டமென்று தெரிந்தும் தன்னுடைய வாழ்வாதாராத்திற்காக வேறு வழியில்லாமல் விவசாயத்தை தொடர்ந்து செய்வதை போன்று சர்க்கரை ஆலைகளும் தெரிந்தே நட்டத்திற்காக இயங்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளன.



விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை என்று ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பொருளின் தரம் அந்த பொருளின் அளிப்பிற்கு ஏற்றவாறு வணிகர்களால் விலை நிர்ணயிக்கப்பட்டு விளை பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.



அவ்வாறே கரும்பிற்கும் குறைந்தபட்ச விலை என்றும் மாநில அரசு பரிந்துறை விலை என்றும் ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயம் செய்யப்படுகிறது. பொருளின் தரம் எவ்வாறு இருந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு ஆண்டு முழுவதும் ஒரே கொள்முதல் விலையை மட்டும் வழங்கப்பட வேண்டும்.



உதாரணமாக அக்டோபர் முதல் டிசம்பர் வரை சர்க்கரை கட்டுமானம் சதவிதம் மிகவும் குறைவாக இருக்கும். ஆனால் கரும்பின் விளைச்சலும் எடையும் மிக அதிகமாக இருக்கும்.



ஜனவரியிலிருந்து மார்சு வரை சர்க்கரை கட்டுமானம் மிக அதிகமாக இருக்கும். ஆனால் கரும்பின் விளைச்சலும் எடையும் மிகக்குறைவாக இருக்கும். இதனால் முதல் மூன்று மாதம் கரும்பினை அனுப்பும் விவசாயிகளுக்கு லாபமாகவும் சர்க்கரை ஆலைக்கு நட்டமாகவும் அடுத்த மூன்று மாதங்களில் சர்க்கரை ஆலைகளுக்கு லாபமாகவும் விவசாயிகளுக்கு நட்டமாகவும் இருக்கின்றது. இவ்வாறு ஒரு சமயத்தில் ஒரு சாராருக்கு நட்டமாகவும் மற்றொரு சாராருக்கு இலாபமாகவும் ஏற்படுவதை சமநிலைப்படுத்த அந்தந்த மாதத்தின் சர்க்கரை கட்டுமானத்தின் அடிப்படையில் கரும்பிற்கான விலைநிர்ணயம் செய்வதே இருத்தரப்பினருக்கும் ஏற்புடைய வழியாகும்.



இரண்டாவதாக மரத்தை நடுபவர் ஒருவரும் அதன் பயனை அனுபவிப்பர் வேறொருவராகவும் இருப்பது பொதுவான நடைமுறையாகும். ஏனெனில் மரம் வளர்ப்பு ஒரு நீண்ட கால செயல்திட்டமாகும்.



அதே போன்று கடந்த அரவைப்பருவத்தின் சர்க்கரை கட்டுமானத்தின் அடிப்படையில் வரும் அரவைப்பருவத்திற்கு கரும்பிற்கான விலையாக நிர்ணயம் செய்யப்படுகிறது. இது ஒரு சாராருக்கு பாதகமாகவும் மற்றொரு சாராருக்கு சாதகமாகவும் ஆன செயலாகும்.



உதாரணமாக 2003-04 ஆம் ஆண்டு அரவை பருவத்தில் மழை இல்லாததால் குறைந்த அளவு கரும்பு மகசூலினால் அதிக சர்க்கரை கட்டுமானம் கிடைத்ததன் அடிப்படையில். அதற்கடுத்த ஆண்டு நல்ல மழையால் கூடுதலான கரும்பு மகசூலுக்கு அதிக விலைபெற்றனர். வறட்சியில் பயிரிட்டவர்களின் குறைந்த மகசூலிற்கு குறைந்த கரும்பு விலையும் நல்ல நிலையில் பயிரிட்டு அதிக மகசூலின்போது அதிக கரும்பு விலையும் பெற்றனர். அந்தந்த ஆண்டு சர்க்கரை கட்டுமானத்திற்கு ஏற்ப அந்தந்த ஆண்டிற்கான கரும்பின் கொள்முதல் விலையாக நிர்ணயம் செய்வதே சாலச்சிறந்தது.



மூன்றாவதாக சில நேரங்களில் மத்திய அரசின் குறைந்தபட்ச விலைமட்டும் கரும்பிற்கு வழங்குவார்கள் அப்போது கரும்பு கட்டுப்பாடு சட்டம் பிரிவு 5எ-வின்படி குறிப்பிட்ட ஆண்டு ஈட்டக்கூடிய இலாபத்தில் 50%-ஐ கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு கூடுதல் விலையாக வழங்கப்படுகிறது.



அந்ததந்த ஆண்டில் உற்பத்தியாகும் சர்க்கரை ஏறத்தாழ பன்னிரண்டு மாதம் அதாவது அடுத்த ஆண்டுவரை இருப்பில் இருக்கும் அதனால் சரக்கிருப்பின் மதிப்பை அந்த வருட முடிவில் உள்ள விலைக்கு ஏற்ப மதிப்பிடப்பட்டு இலாபம் கணக்கிடப்படுகிறது.



அவ்வாறு இருப்பில் உள்ள சர்க்கரை அதற்கடுத்த ஆண்டில் சரக்கிருப்பின் மதிப்பைவிட குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ விற்கப்படுவதால் கிடைக்கக்கூடிய இலாபம்/நட்டம் ஆனது அவ்வாறு விற்பனை செய்யப்படும் ஆண்டுகளின் இலாபம் நட்டம் கணக்கிடுவதற்காக கணக்கில் கொண்டு கரும்பிற்கான கூடுதல் 5எ விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதுவும் யாரோ பணி செய்ய யாரோ அனுபவிக்கும் சமச்சீரற்ற தன்மையாகும். ஆண்டு முழுவதும் விற்ற சராசரி விற்பனை விலையில் குறிப்பிட்ட ஆண்டடின் இறுதி இருப்பில் இருக்கும் சரக்குகள் மதிப்பாக கணக்கில் கொண்டு அந்த ஆண்டின் இலாபம் நட்டம் கணக்கிட்டு கரும்பிற்கான 5எ விலை நிர்ணயம் செய்வதுதான் சரியான நடைமுறையாகும். இவ்வாறு இந்த மூன்று கொள்கையும் கடைப்பிடித்தால் யாருக்கும் பாதகம் ஆகாமல் சாதகமாகவும் இல்லாமல் சமமான நிலை ஏற்படும் என்பது திண்ணம்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...